• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
திருச்சி மகி வீடு:

நேரமும் கடந்து சென்றதே தவிர மானசா கதவைத் திறந்து வெளியே வரவே இல்லை.பெருமூச்சு விட்டு எழுந்த மகி, சுவரில் இருக்கும் கடிகாரத்தை பார்க்க மதியம் 12 என்று காட்டியது.

பின்னர் மனைவியிருக்கும் ரூம் கதவின் முன்பு நின்று மானசா மானசா என்று தட்ட,சிறிது நொடிகள் சென்று கதவை திறந்தவர் என்ன என்றார்.

பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்கவும்,எதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு போனவர் சமைத்ததை மீண்டும் சூடு பண்ணி எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் வைக்க,மகியும் கையை கழுவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

இன்னைக்கு நைட்டு எட்டு மணிக்கு நமக்கு பிளைட்.ஞாபகம் இருக்கு தானே என்க,தெரியுமென்று தலையை மட்டும் மானசா அசைக்க,சரி அதுக்கு தேவையானது எல்லாம் பேக் பண்ணிக்க.

நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரேனென்று சாப்பிட்டு எழுந்தவர் அங்கிருந்து சென்றார்..

வீட்டை பூட்டிவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்த மானசாவிற்கு எஸ்தரின் நினைவாக தான் இருந்தது

எஸ்தரிடம் எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணினதாக தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்க,
இன்று எஸ்தருக்கு இந்த விஷயம் தெரியாது என்பது புரிய,அப்போ அன்று நான் போன் பண்ணும் போது எடுத்தது எஸ்தர் தானானு அதிர்ச்சியாக இருந்தது.

மனம் கடந்த காலத்தை நினைக்கவும் அவரையும் மீறி அழுகை வர கண்ணீர் வழிந்து ஓடியது.தன்னை தாயாக்கிய முதல் ஜீவன் தன்னை அம்மா என்று அழைத்த முதல் உயிர் அல்லவா,பெற்ற தாயால் அந்த ஜீவனை எப்படி மறக்க முடியும்?

"அம்மா துர்கா தேவி"

நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னை தானே வணங்கிட்டு இருக்கேன்.ஏன் எனக்கு இப்படி ஒரு வேதனையை கொடுத்தீங்க?

ஆசையா பெத்து எடுத்து வளர்த்த மகளை இப்படி தீக்கு இரையாக எடுத்துக்க உங்களுக்கு எப்படி தாயே மனசு வந்துச்சு?என்று அழும் போது அவர் மனசாட்சியோ அன்று பலியானது உன் மகள் மட்டும் இல்லையே,எத்தனையோ உயிர் என்பதை ஏன் மறந்துவிட்டாய் மானசா என்றது..

ஆமாம்..என் மகள் மட்டும் இல்லையே அங்கிருந்த எல்லாரும் தானே தீக்கு இறையானார்கள் என்ற நிதர்சனம் புரிந்தாலும் மகளை நினைத்து அழாமல் இருக்க முடியவில்லை.

கண்ணீரோடே தேவையானது எல்லாம் பேக்கிங் பண்ணி முடித்தவர் அப்படியே அந்த பெட்டில் படுத்து கண்களை மூட அவரையும் மீறி தூங்கிவிட்டார்..

நேரமும் கடந்து சென்றது.ஒரு வழியாக தூக்கம் கலைந்து எழுந்த மானசாவிற்கு ரூம் இருட்டாக இருக்கவும் மணி என்ன ஆச்சுனு தெரியலையே என்று பதறி அடித்து பெட்டில் இருந்து எழுந்தவர், சுவிட்சை தேடி லைட்டை ஆன் பண்ணி விட்டு ஹாலுக்கு வந்து லைட்டை போட்டு மணியை பார்க்க மாலை ஆறு என்று காட்டியது.

முகத்தை கழுவிட்டு வேக வேகமாக கார பணியாரத்தை செய்து முடிக்க மகியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.ஈவினிங் லைட்டாக சாப்பிட்டுக் கொண்டு அங்கு போய் இரவு டின்னரை பார்த்துக்கலாம் என்று முன்பே முடிவு செய்திருந்தனர்.
பின்னர் இருவரும் சாப்பிட்டு தயாராகி அவர்கள் காரை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு சென்றனர்.

எல்லா ஃபார்மாலிட்டீசும் முடித்து காத்திருக்க அரை மணி நேரத்தில் அவர்கள் செல்வதற்கான இண்டிகோ விமானத்தின் அறிவிப்பு வந்ததும் இருவரும் ஃபிளைட்டை நோக்கி சென்றனர்..

உள்ளே வந்தவர்கள் அவர்களுக்கான இருக்கையில் உட்கார சிறிது நிமிடங்கள் கடந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்த இண்டிகோ விமானம் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை நோக்கி வானில் பறந்து சென்றது.

அருகருகே கணவன் மனைவி இருவரும் உட்கார்ந்திருந்தாலும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசிக்கவில்லை.ஒரு மணி நேரம் வானில் பறந்து வந்த விமானமோ டெல்லி ஏர்போர்ட்டில் வந்து இறங்கியது.

பின்னர் இருவரும் தங்களது லக்கேஜோடு வெளியே வர மகி புக் பண்ணிய காரும் அவர்களுக்காக அங்கே காத்திருக்க,டிரைவருக்கு போன் பண்ணியவர் இருக்கும் இடத்தை சொல்ல சிறிது நிமிடத்தில் அவர்கள் முன்பு காரும் வந்து நின்றது.

இவர்கள் ஏறிய காரோ டெல்லி டிராபிக்குள் புகுந்து சாந்தினி சௌக் என்ற இடத்திற்கு வந்து சேர முக்கால் மணி நேரமானது.

டிரைவரிடம் பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்த ஹோட்டல் உள்ளே போனவர் ரிசப்ஷனில் இருந்த ஆளிடம் ரூம் புக் பண்ணிய விஷயத்தை பற்றி ஹிந்தியில் சொல்ல,அவனும் கம்ப்யூட்டரில் செக் பண்ணியவன் ரூம் நம்பர் 207 என்று சொல்லி கீயை கொடுத்தவன்,அங்கிருந்த வேலை செய்யும் பையனை அழைத்து இவர்கள் லக்கேஜை எடுத்துட்டு போக சொல்ல,டீகே பாய் என்றவன் இவர்களோடு லிப்டில் ஏறி இரண்டாவது ப்ளோருக்கு வந்தான்.

பின்னர் கதவை திறந்து உள்ளே போக லக்கேஜை உள்ளே வைத்தவன் ஆர்டர் பண்ணிய உணவை எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க,மகியும் எடுத்துட்டு வர சொன்னார்.

பத்து நிமிடத்தில் அவர்களுக்கான டிபனையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவன் சென்று விட, இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு அங்கிருந்த பெட்டில் படுத்தவர்களுக்கு கடந்த கால வாழ்க்கை சுவடுகள் நினைவிற்கு வந்தது...

30 வருடங்களுக்கு முன்பு,சோழனூர்:

மேரி மேரி என்கும் குரலை கேட்டு வரோனென்றவாறு கையில் கரண்டியோடு ஹாலுக்கு வந்தார் ஆப்ரகாமின் மனைவியான சாராள் மேரி.

மனைவியை பார்த்தவர் ஒரு சந்தோஷமான விஷயம் டி என்க, கணவரை முறைத்த மேரியோ உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் இப்படி வாசலில் இருந்து கத்தாதீங்க கத்தாதிங்கன்னு...

ஏன் அங்க சமையல் கட்டுக்கு வந்து சொன்னால் தேய்ந்து போயிடுவீங்களா என்று முறைக்க,மனைவியைப் பார்த்து அசடு வழிய சிரித்தவர் சந்தோஷத்தில் அப்படி கத்திட்டேன் டி என்றார்..

ஓஓஓஓ...

அப்படி என்ன விஷயம் அய்யா இவ்வளவு குதூகலமாக இருக்கீங்களென்று மேரி கேட்க,மகி இன்டர்வியூரில் பாஸ் பண்ணிட்டான் டி. போஸ்டிங் டெல்லியில் கிடைச்சிருக்கு என்கவும்,என்னங்க சொல்றீங்க என்று மேரியும் சந்தோஷத்தில் கண்கள் விரிய கேட்டார்.

"ஆமா"

கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் ஸ்கூலுக்கு டிரங்க் கால் வந்தது.அதான் உன்னிடம் சொல்ல ஓடி வந்தேனென்றார் ஆபிரகாம்.

"ஏசப்பா" என்றவர் நல்லவேளைங்க,புள்ள ராப்பகலா சோறு தண்ணி பாக்காமல் படித்ததற்கு ஆண்டவர் நல்ல பலனை கொடுத்திருக்கிறார்.ஆமாம் தாஸ் எப்போங்க வரானென்க,இன்றைக்கு நைட் டிரைன் டி.

"எப்படியும் ரெண்டு நாள் ஆகுமென்றார்".

வனிச்சூர்:

இளா என்று ஷமீரா பல்லை கடிப்பது செழியனுக்கு கேட்க செல்லம் நீ என்னதான் பல்லை கடிச்சாலும் நடப்பது நடந்து தாண்டி ஆகும்.

நாளைக்கு சண்டே கம்பெனி லீவு தான். சோ உன் மாமாக்கு நாளைக்கு ஃபுல் டைம் உனக்கு நீச்சல் கத்துக் கொடுக்கிறதுதான் வேலை.பயிற்சி இந்த குளத்தில் வேணாம்.அங்கு அருவிக்கு போகலாம் என்கவும் எதே அருவியாஆஆ என்று அலறினாள்...

அதே அதே என்று மனைவியின் அலறலை ரசித்தவன் மிசஸ்.செழியன் இப்படி எல்லாத்துக்கும் பயந்துட்டே இருந்தீங்கன்னா என்ன அர்த்தம் சொல்லுங்க?நீங்க தான் தைரியமான ஆளாச்சே என்க,என்னய்யா விளையாடுறியா என்றாள்.

ஆமா என் பொண்டாட்டி கூட விளையாடாம வேற எவன் பொண்டாட்டி கூட விளையாட சொல்றடி என்று செழியன் கேட்க,அதான் உங்களை சைட் அடிக்கிறாளுங்களே அவங்களுக்கு போய் கத்துக்கொடு.உன்னுடைய டிரைனிங் எனக்கு ஒன்னும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த செகண்ட் போன் வர கணவன் தான் என்பது தெரிந்தும் எடுக்காமல் இருந்தாள்.முதல் அழைப்பு கட்டாக மீண்டும் கால் வரவும் அட்டென்ட் பண்ணினாள்.

ஏய் என்னடி திமிரா?

உன்கிட்ட பலவாட்டி சொல்லிருக்கேன்.இப்படி பேசிட்டு இருக்கும்போது போனை வைக்காதன்னு.இன்னும் நீ திருந்தவே இல்லை...

"எதா இருந்தாலும் பேசணும்"இல்லை அமைதியாக இருக்கணும் அதை விட்டு மூஞ்சில அடிச்ச போல கட் பண்ணினால் என்ன டி அர்த்தம்.இதைப்போல உன் செயலால் தான் ஒரு வருஷம் உன்னிடம் பேசாமல் இருந்தேன்...அதன் பிறகும் உன் குணம் மாறவேயில்லை ச்சை என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

ஷமீராவிற்கு ஒன்னுமே சொல்ல முடியவில்லை.தான் செய்தது தவறு என்பதும் இதே போல செய்வது கணவனுக்கு பிடிக்காது என்பதும் திரும்பவும் இப்படி செய்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியாக இருக்க, உடனே தனது ஃபோனில் இருந்து கணவனுக்கு கால் பண்ண,ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர செழியன் அட்டென் பண்ணவில்லை.

ஷமீராவும் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருக்க,அங்கே குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த இருவரும் ஷமீ,ஷமி என்று கூப்பிட,நிமிர்ந்து பார்த்தவளோ என்னவென்றாள்.

வா என்கவும் போனில் பேசுவதாக சைகையில் சொல்ல உன் புருசனுக்கு கம்பனியில் வேலை இல்லையாடி என்று கண்மணி சிரிக்க,மலரோ அவளை அடித்துவிட்டு நீ பேசு செல்லமென்றாள்.

பின்னர் மீண்டும் கால் பண்ண,கால் வந்து கொண்டே இருப்பதை பார்த்த செழியனும் கண்ணை மூடி திறந்தவன் அட்டன் பண்ணி என்ன டி உனக்கு பிரச்சனை?

எதுக்கு கால் பண்ணி உயிரை வாங்கிட்டு இருக்க என்கவும் சாரிங்க என்றாள்.ஏய் உன் வேலை மயிரை பாருடி.சும்மா மனுஷனை கடுப்பேத்திட்டு இருக்காதயென்று கட் பண்ணியவனோ கோவத்தில் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

ஷமீராவும் மீண்டும் கால் பண்ணி பார்க்க ஸ்விட்ச் ஆப் என்று வந்ததும் கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் தரையில் விழுந்தது.

பின்னர் கண்களை துடைத்தவள் இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு குளக்கரைக்கு போக,அங்கே மலரும் கண்மணியும் போட்டி போட்டுக் கொண்டு அக்கறையை தொடுவதற்காக நீச்சல் அடித்து சென்று கொண்டிருந்தாளுங்கள்.

ஷமீராவின் பார்வை குளத்தில் இருக்கும் தோழிகள் மேல் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் கணவனிடம் தான் இருந்தது.

எப்படி இந்த மனுஷனை சமாதானப் படுத்த போறேன்னு தெரியலையே? அவருக்கு இப்படி பண்றது சுத்தமா பிடிக்காது.இருந்தாலும் நம்ம ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் தானாக பேசிக் கொண்டிருப்பதை கரையில் ஏறி வந்த மலரும் கண்மணியும் வித்தியாசமாக பார்த்தனர்.

ஓய் ஷமீ என்னடி பைத்தியம் பிடித்து விட்டதா என்று கண்மணி கேட்க,உன் மாமனை கட்டியிருக்கேன் அப்போ பைத்தியம் பிடிக்காமல் என்னடி பண்ணும் என்று ஷமீராவும் சொல்ல, அது உன் தலையெழுத்து டி.அந்த மனுஷன் தான் வேணும்னு நின்னல்ல அனுபவித்து தாண்டி ஆகணுமென்று சிரித்தாள்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
ஒரு வழியாக கண்மணியும் மலரும் குளத்தில் இருந்து கரையேறி வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் ஈரத் துணியும் வெயிலில் நன்கு காய்ந்து விட்டது.

சரிடி மலரு நாங்க வீட்டுக்கு போறோம் என்று சொல்லிக்கொண்டு ஷமீராவோடு அங்கிருந்து கிளம்ப சாப்பிட்டு போலாம் டி என்றாள்.
அதெல்லாம் ஒன்னும் வேணாம் டி நீ சாப்பிடு அதான் அல்லிக்காய் சாப்பிட்டோமே அது போதும் என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

கண்மணியோடு வீட்டிற்கு வந்தாலும் சிந்தனைகள் முழுவதும் கணவன் மீது தான் இருந்தது.எப்படி சமாதானப்படுத்த போறோம் என்று தெரியவில்லையே. ரொம்ப கோவமா இருக்கிறார் போனை வேறு சுவிட்ச் ஆப் பண்ணிட்டாரு என்று உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.

கண்மணியோடு ஷமீரா வருவதை பார்த்த புவனா வாடா.தனியா வந்தியா என்க பின்னர் கண்மணியே விஷயத்தை சொல்லவும் அப்படியா என்றவர் வாங்க சாப்பிடலாமென்க கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறோம்மா என்று சொல்லிவிட்டனர்.

ஷமீ இரு டி நான் போய் துணி மாத்திட்டு வரேன் என்று கண்மணியும் மேலிருக்கும் ரூமிற்கு போக, அப்பொழுது அவள் போனுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது.

யார் என்ற யோசனையோடு அட்டென்ட் பண்ணாமல் இருந்தாள்.மீண்டும் கால் வர யாரா இருக்கும் என்றவாறு அட்டென்ட் பண்ணி காதில் வைக்க, ஏண்டி ஒரு மனுஷன் ஊருக்கு போனானே நல்லபடியா போய் சேர்ந்துட்டானா என்னன்னு விசாரிக்கிற அறிவுலாம் உனக்கு கிடையாதா என்று அந்த பக்கமிருந்து பாபு திட்டினான்.

தன்னவனின் குரலை கேட்டவள் நீங்களா என்று அதிர்ச்சியாக சொல்ல, நான் பண்ணாமல் வேற எவன் டி பண்ணுவானென்றான்.

எப்ப போனீங்க?

நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா என்று கண்மணி கேட்க,வாயில அசிங்கமா வந்துற போது நானா போன் பண்ணினால் தான் நீ பேசுவியாடி?

ஏன் நீயா பேசினா உன் வாய் தேய்ஞ்சு போயிடுமா என்று சத்தம் போட எனக்கு உங்க போன் நம்பர் தெரியாது என்று பொறுமையாக சொல்லவும்,எனக்கு மட்டும் நீ போன் நம்பர் குடுத்தியாடி?

நான் கண்டுபிடிச்சு உனக்கு போன் பண்ணலையா?.

ஒருத்தன் ஊருக்கு போனானே அப்படியே ஒழிஞ்சி போய்ட்டானு நினைச்சிட்ட போலயென்றான்.

என்ன இப்படியெல்லாம் பேசுறீங்கனு வருத்தமாக கண்மணி சொல்ல வேற எப்படி பேச சொல்ற,சொல்லு டி?

நானும் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆயிடுச்சு இதுவரைக்கும் ஒரு போன் பண்ணியாடி அவன் பேசியதெல்லாம் கேட்டவள்,யோவ் நிறுத்துயா...

உனக்கு இப்போது தான் என் ஞாபகம் வந்திருக்கா?பெருசா பேச வந்துட்டான் என்று அழைப்பை துண்டித்தாள்.

செழியன் வீடு:

ஷமீராவை வீட்டில் விட்டுவிட்டு சிறிது நேரம் அத்தை வீட்டில் இருந்த கவிதா நாளைக்கு எக்ஸாம் இருப்பதாக சொல்லி விட்டு அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

விளக்கேத்திட்டு வந்தவள் என்ன சமைக்கிறதுங்கத்தை என்க, எம்மாடி உன் மாமனாருக்கு கோதுமை மாவுல செய்கிற பொருளா இருந்தால் மட்டும் அவருக்கும் சேர்த்து சமையல் பண்ணு.

மிச்சபடி இட்லி தோசைனாக்க உனக்கு உன் புருஷனுக்கு செய்மா.அதுல எனக்கு இரண்டு குடு அவருக்காக இதெல்லாம் செய்ய வேண்டாம் என்கவும்,சரிங்கத்தை இன்னிக்கு சப்பாத்தியே செய்கிறேனென்று சொல்லி விட்டு கிச்சனிற்குள் சென்றவள் அதற்கான வேலையில் இறங்கினாள்.

வானதியோ கவனையில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து போய் தொழுவத்தில் கட்டிவிட்டு இரவு அவர்களுக்கு சாப்பிடுவதற்கான புல்லுக்கட்டையும் எடுத்து போட்டு குண்டானில் தண்ணியையும் வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தவர்,அம்மாடி காயெல்லாம் கொடு உக்காந்துகிட்டு அரிஞ்சி தருகிறேன் என்க அதெல்லாம் ஒன்று வேண்டாங்கத்தை என்றாள்.

அனைத்தும் ரெடி பண்ணி செய்து முடித்து வெளியே வந்து மணியை பார்க்க இரவு ஏழு என்று காட்டியது.

இவர் எத்தனை மணிக்கு வருவாருன்னு தெரியலையே என்று யோசனையோடு இருந்தவள்,ஏங்கத்தை அவர்லாம் எத்தனை மணிக்கு சாப்பிடுவாங்க என்க,உன் மாமனார் அந்த எதிர்நீச்சல் போடுவானே அந்த நேரத்துக்கு சாப்பிடுவார்.இளா வீட்டுக்கு வந்து குளித்ததும் சாப்பிடுவான் மா.

எதிர்நீச்சலாயென்று அவள் முழிக்க அதான் சன் டிவில 9 மணிக்கு நாடகம் போடுறாங்களே அது தான் என்று சிரித்தார்.

அப்போ எட்டு மணிக்கு மேல சூடாவே சப்பாத்தி செஞ்சு ஹாட் பாக்ஸில் வைத்துவிடுகிறேன் என்கவும் சரி மா என்றார்.அதுக்குள்ள நான் போய் துணி எல்லாம் மடிச்சு வச்சுட்டு வந்துடுறேனென்று சொல்லிக் கொண்டு மேலே இருக்கும் ரூமிற்கு போனவள்,துவைத்து காயவைத்து எடுத்து வந்திருந்த துணிகளை எல்லாம் மடித்து கபோர்டில் வைத்துவிட்டு ரூம் சுத்தமாக இருக்கானு பார்த்தவள் ஒருமுறை கண்ணாடி முன் நின்று தன்னை பார்க்க,எல்லாம் சரியாக இருக்கவும் கீழே இறங்கி வர,வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

வீட்டுக்கு வந்த செழியனோ அங்கே மாடிப்படி ஓரமாக நிற்கும் மனைவியை தான் முதலில் பார்த்தான்.பின்னர் கண்டுக்காத போல படியில் ஏறி மேலே சென்று விட,ஷமீராவோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கணவன் போன திசையைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரூமிற்குள் வந்தவன் டவலை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போனவன்"டேய் செழியா உன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருக்குறா".

கொஞ்சம் சூடு சொரணையோடு இரு மயங்காத மயங்காதே...மல்லிப்பூ வச்சுக்கிட்டு பயங்கரமா இருக்கிறாளே என்று முணவிக்கொண்டு குளித்து முடித்தவன் டி ஷர்ட்டையும் கைலியும் போட்டுக் கொண்டு கீழே வந்தான்.

வானதியோ சோபாவில் உட்கார்ந்து டிவியில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்க,தாயின் அருகில் போய் உட்கார்ந்தவன் என்னம்மா அப்பா இன்னும் வரலையா என்க...வந்துட்டு இருப்பார்.

மூட்டம் போடுறாங்களாம் அதான் நம்ப கடலை சங்காயத்தை பக்கத்துல இருந்து எரிய வைத்துவிட்டு வரேன்னு சொன்னார் பா என்க,சரிமா என்றான்.

டீ குடிக்கிறியா என்று மகனிடம் கேட்க,வேணாம் மா சாப்பிடுற நேரம் தானே என்கவும்,ஏன்யா உன் பொண்டாட்டி வீட்டுல இருக்காளே எதாவது வாங்கிட்டு வர்றதில்லையா என்று வானதி கேட்க,இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம் மா.வரவே லேட்டாயிடுச்சு இல்ல அதான் அப்படியே வந்துட்டேனென்றான்.

ஆயிரம் வேலை இருந்தாலும் வீட்ல நமக்காக ஒருத்தி காத்துகிட்டு இருக்காங்க என்பதை மட்டும் மறந்துடாத அது நல்லதுக்கு இல்லை புரியுதா..

இன்னைக்கும் உங்கப்பா டவுனுக்கு போனாக்க ஏதாவது வாங்கிட்டு வராமல் இருக்காரா சொல்லு என கோபமாக மகனிடம் கேட்க,மறந்துட்டேன் மா. இனிமே இப்படி இருக்க மாட்டேன் என்றவன் என்ன சொல்றா உங்க மருமக

ஆளையே காணோமேயென்று மனைவியை தேட உள்ள சமைச்சுக்கிட்டு இருக்கு பா என்றார்...

ஓஓஓ இனிமே உனக்கு ரெஸ்ட் தானா என்று சிரித்தான்.

சப்பாத்திகளை சுட்டு ஹாட் பாக்ஸில் வைத்து விட்டு வெளியே வந்தவள், நெற்றியில் வழிந்துக் கொண்டிருக்கும் வியர்வையை இடது கையால் துடைத்தபடி வர,தற்செயலாக கிச்சன் பக்கம் திரும்பிய செழியனோ புடவையின் இடைவெளி ஊடே தெரியும் வளைவு நெளிவுகளை பார்த்து எச்சில் விழுங்கினான்.

கணவனின் பார்வை தன்னை தான் ரசிக்கிறது என்பதை புரியாத ஷமீராவோ இடுப்பில் சொருகியிருந்த முந்தானை எடுத்தது வியர்வை பூத்திருக்கும் முகத்தை துடைத்துக் கொண்டே சோபாவில் உட்கார்ந்திருந்த வானதியிடம் வந்தாள்.

சோழனூர்:

ஏன் யா பேப்பரில் விளம்பரம் குடுக்குவோமா என்று சாரதா பாட்டி கேட்க,நானும் அதை பற்றி தான் சித்தி யோசிக்கிறேன்.ஆனால் தெரிந்த யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்.அதை பற்றி நாம யோசிக்க வேண்டாமா சித்தி?

அவன் என்ன சொல்லி வச்சிருக்கான் தெரியுமா? உன் பெரியக்கா பொண்ணுக்கு உடம்பு முடியலைனு எஸ்தர் காரைக்காலுக்கு போயிருக்காம்.அந்த படுபாவி பயலை நல்லா உதைக்கணும் போல இருக்கு சித்தி.அவனை அடிக்கிறதால என் தங்கச்சி வாழ்க்கை சரியாகிடுமா?இல்லை அது இருக்கும் இடம் பற்றி தெரியுமா?

நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் தானே உன் அக்கா கண்ணை மூடிச்சு.இன்றைக்கு என் தங்கச்சியை என்னால பாதுகாக்க முடியலையே சித்தியென்று கதறி அழுதார்.

மகன் அழுவதை பார்த்து வேதனைப்பட்ட சாரதா பாட்டி சற்று தொலைவில் வருத்தமான முகத்தோடு இருக்கும் மருமகளை பார்த்தவர் ராணி என்க,சொல்லுங்கத்தை என்றார்

இங்கு வா என்கவும்,பயந்து கொண்டே சின்ன மாமியாரின் அருகில் வந்து நிற்க,நடந்தது என்ன?இப்பயாவது உண்மையை சொல்லு.சுட்டு போட்டாலும் கண்டிப்பா உன் அண்ணன் வாயிலிருந்து உண்மை வராது.அப்படியே உன் ஆத்தா புத்தி.

இதுவரை நீயும் அவன் கூட சேர்ந்து நடித்த வரை போதும்.இப்போயாவது உண்மையை சொல்லு அது போதுமென்றார்.

அது வந்துங்கத்தை என்றவாறு கணவரை பார்க்க என் மகன் ஏதும் சொல்ல மாட்டான்.இனிமே உன்னை குறை சொல்லி என்ன பண்ண போறான்.விஷயத்தை சொல்லு என்று கொஞ்சம் கடுப்பாகவே சாரதா பாட்டி கேட்டார்.

அது வந்துங்கத்தை அண்ணன் டெல்லியில் வேலை பார்க்கும் போது மானசா அண்ணி கூட பழக்கம் ஆயிருச்சு.அவங்க ஐயர் பொண்ணு.

நாம கிறிஸ்டியன் என்பதால் சேர்வது ரொம்ப கஷ்டம்.வீட்ல அம்மா ஒத்துக்க மாட்டாங்கனு சட்டப்படி ரிஜிஸ்டர்மேரேஜ் பண்ணிட்டு அங்கேயே தான் குடும்பம் பண்ணிருக்காங்க.

முதல் குழந்தை பிறந்து 3 வயசுக்கு அப்புறம் தான் இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிந்தது.அம்மா இதை ஒத்துக்கவே இல்லை.அவங்களுக்கு என்ன எண்ணமென்றால் எஸ்தரை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.

அண்ணன் கிட்ட ராணியோட வாழ்க்கை நல்லா இருக்கணும் என்றால் எஸ்தரை நீ கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்ல,எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குமான்னு அண்ணன் சொல்லுச்சி.

அதுலாம் எனக்கு தெரியாது நான் சாகப் போறேன்.என் குடும்பம் கோத்திரம் என்ன அதுக்கு ஏற்ற மருமகள் எஸ்தர் தான்.உனக்கும் அவளை பிடிக்கும் தானே.பலமுறை அவள் உனக்குனு சொல்லிருக்கேன் நான் வாழ்வதா இல்லை சாவதானு மிரட்டி தான் எஸ்தரை கல்யாணம் பண்ண சம்மதிக்க வச்சாங்க.

எனக்காக அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டே தவிர அது ஒன்னும் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கலை என்கவும், கேட்ட இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உன்னுடைய சுயநலத்துக்காக என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்ட அவ்வளவுதானே என்கவும் அப்படிலாம் இல்லைங்கத்தை. எனக்கு மாமாவை ரொம்ப பிடிக்கும் மாமாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு வேற வழி தெரியலை.

அந்த நேரத்துல என்னோட வாழ்க்கை தான் எனக்கு பெருசா இருந்துச்சி. நானும் அண்ணன் கிட்ட அழுதுகிட்டே சொன்னேன்,மாமாவை தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

எவ்வளவு சுயநலம் டி..உனக்கு,உன் அம்மாவுக்கு, அண்ணனுக்கு என்ற அந்தோணி ச்சை என்று அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top