Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்
ராஜி நீ சொல்றதை நாங்க நம்புறோம் மா.அந்த ஊரு எங்கே இருக்கிறது?
அது தெரியலங்கப்பா.ஆனா ஒரு வருஷமா அந்த அண்ணா கிட்ட பேசலைனு சொன்னாளே என்கவும் அப்படியா என்று அதிர்ச்சியாக மகி கேட்க ஆமாம்பா நீங்க சம்மதிக்காமல் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியாக இருந்தாள்.
எந்த சூழ்நிலையிலும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டே இருந்தாப்பா....
எனக்குத் தெரிந்து காரணம் இல்லாமல் இப்படி பண்ணி இருக்க மாட்டாளென்று ராஜி சொல்ல,எஸ்தரோ தன் கையில் எடுத்து வந்து கடிதத்தை நீட்டி உன் ஃபிரண்டோட லட்சணத்தை பாருயென்க,அதை வாங்கி படித்த ராஜியோ ஏன் ஷமீரா இந்த முடிவுக்கு வந்தாளென்று யோசனை பண்ணினாள்.
நாங்க கிளம்புகிறோமென்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்து காரில் ஏறி விட்டு,மாமா இப்ப என்ன பண்ணுரதென்று அந்தோணியிடம் கேட்கவும்,அந்த ஊர் எங்க இருக்குன்னு முதல்ல தெரியனுமே மகி?
ம்ம் என்றவாறு தனது போனை ஆன் பண்ணியவர் கூகுளில் போய் வனிச்சூரை டைப் பண்ணி சர்ச் பண்ண அது அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து 12 மணி நேரம் தூரத்தில் இருப்பதாக காட்டியது.
மாமா நம்ம ஊர்ல இருந்து மதுரை. மதுரையிலிருந்து எட்டு மணி நேரம் காட்டுது என்கவும் அப்படியா சரி கிளம்புனு வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
அந்தோணியும் ராணியும் ஷமீராவை தங்களது மகன் பாபுக்கு கட்டலாமென்று பிள்ளைகளின் சிறு வயதிலிருந்து ஆசையாயிருக்க ஷமீராவோ இப்படி பண்ணிட்டு போனது வருத்தமாக தான் இருந்தது.
நேரமும் கடந்து செல்ல காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் பெயருக்கு ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டு கிளம்பும் போது இரவு 10 என்று காட்டியது.
அவ்வப்போது அவர் போனுக்கு ஏதோ புது நம்பரிலிருந்து கால் வந்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது.டவர் இல்லாத இடத்தில் இருப்பதால் அவருக்கு ரீச் ஆகவில்லை.இருக்கும் மனநிலையில் அந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் அவருக்கு தோணவில்லை
மாமா இந்த நேரத்தில நம்ம போய் என்ன பண்ணுவோம்?இங்கே ஸ்டே பண்ணிட்டு விடிய காலையில் கிளம்பலாமானு மகி கேட்க அதுவும் சரியென்று பட்டது.
போட்டுக்க துணி எல்லாம் எடுக்காம நாம பாட்டுக்கும் கிளம்பி வந்துட்டோமே??போற வழியில எதாவது ஜவுளிகடை இருக்கா பாரு மாத்துறதுக்கு ஒரு ஜோடி துணி மட்டும் வாங்கிக் கொள்ளலாம்னு அந்தோணி சொல்ல,அதேபோல் போகும் வழியிலிருந்த ஜவுளிக்கடை முன்பு காரை நிறுத்தியவர் நீங்க மூணு பேரும் உள்ள போங்க நான் பார்க்கிங் பண்ணிட்டு வரேனென்றார்.
பின்னர் நால்வரும் அவர்களுக்கு தேவையான டிரெஸ்ஸை எடுத்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் இரண்டு ரூம் போட்டு இருவரும் அவர்கள் துணைவியாரோடு பக்கத்து பக்கத்து ரூமில் தங்கிக் கொள்ள,மெத்தையில் படுத்திருந்த நால்வருக்கும் தூக்கம் மட்டும் எட்டாக் கனியானது. ..
வனிச்சூர்
தோட்டத்தில் மாட்டுக்கு கஞ்சி தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த செல்லதுரையோ மனைவியின் குரலைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே தனது மகனும் இன்னொரு பெண்ணும் இருப்பதை பார்த்தவர், என்னடா பண்ணி வச்சிருக்க என்றவாறு வேகமாக வந்தவர் பளார் பளாரென்று நான்கு அறையை விட்டு,இப்படி என் மானத்தையே வாங்கிட்டியேடா என்று சத்தம் போட,அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்து கூடி விட்டனர்.
பக்கத்து தெருவில் தான் வானதியின் அப்பா வீடு என்பதால் விஷயம் கேள்வி பட்டதும் அவருடைய அண்ணனுங்களோ வேகமாக தங்கை வீட்டுக்கு வந்தவர்கள் அங்கே தனது மருமகன் யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பதை பார்த்து அவர்களுக்கும் சிறு அதிர்வு தான்.
செல்லதுரை மகனை திட்டிக் கொண்டிருக்க,வானதியோ ஒரு பக்கம் உட்கார்ந்து ஒப்பாரி வைத்தார்...
உன்னை பாராட்டி சீராட்டி வளர்த்தோமே...
பக்கத்து தெருவிலிருக்கும் என் அப்பா வீட்டுக்கு போறதுக்கு கூட என்கிட்ட சொல்லிட்டு தான போவ..இன்னிக்கு இவ்வளவு பெரிய காரியத்தை பண்ண நீயே முடிவு எடுத்திருக்கிறியேடா?
அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லு போல உசுரோட தான இருக்கோம்,செத்து போயிட்டோம்னு நினைச்சியா?
பெத்த எங்களுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா?ஏண்டா இப்படி யாருமே இல்லாத அனாதை போல் பண்ணிட்டு வந்திருக்கிற?
எந்த ஊர் காரியோ தெரியலையே...
ஒன்னும் தெரியாது என் பையனை மயக்கிட்டாளேனு வாய்க்கு வந்த வார்த்தைகளை சொல்லி ஒப்பாரி வைத்து அழுதார்.
அய்யா செல்லதுரை நடந்தது நடந்து போயிடுச்சு மகனையும் மருமகளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம என்ன இப்படி வாசலிலே நிக்க வச்சு பேச்சு என்று அவரின் மாமனாரின் குரல் கேட்க,தனது தந்தையின் குரலை கேட்ட வானதியோ என் பொறந்தவனுங்க மவளை என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர இத்தனை வருஷமா கனவு கண்டுக்கொண்டு இருக்கிறேன்.நீ என்னப்பா இப்படி சொல்லுற?.
மகள் சொன்னதை கேட்டவர் யாருக்கு எங்கு அமைப்போ அங்கு தான் அமையும்.நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போகாது...
போ கழுதை...கண்ணை துடைச்சிட்டு ஆலத்தை எடுத்துட்டு வா என்று தனது மகளை அதட்டினார் தம்புசாமி.
என்னங்க மாமா இப்படி சொல்லுறீங்களென்று செல்லதுரை கேட்க என் மகளுக்கு சொன்னது தான் உங்களுக்கும் மாப்பிள்ளை.ஊர் சிரிச்சா மட்டும் நடந்தது இல்லன்னு மாறி போய்டுமா?
எலே கண்ணா வாடா இங்கென்று அதட்ட,கூட்டத்தின் நடுவில் நின்றவனோ தனது தாத்தாவின் அருகில் வந்தவன் எனக்கு ஏதும் தெரியாது தாத்தா என்கவும்,உன்னை நான் கேட்கவே இல்லையே..நீயே தெரியாதுனு ஆஜர் ஆனா என்னடா அர்த்தம்?
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாடா?
ரெண்டு பயலும் ஒன்னா தான் சுத்திட்டு கிடப்பீங்க.அது எப்படி இவன் காதோலூ செஞ்சது உனக்கு மட்டும் தெரியாது? இதை நான் நம்பனுமா என்க..
கண்ணன் தனது தாத்தாவிடம் மாட்டிக்கிட்டு படும்பாட்டை கண்டு செழியனும் மௌனமாய் சிரித்துக் கொண்டான்.
அங்கு நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த தெரு மக்களோ நல்ல பொண்ணா தான் புடிச்சிட்டு வந்துருங்கான்.புடிச்சாலும் புடிச்சான் நல்லா புளியம் கொம்புங்குற போல சோடிப் பொருத்தம் நல்லா தான் இருக்கு...
ஆனா பொண்ணோட வாட்டத்தையும் முக ராசியை பார்த்தா அது நம்ப சாதிசனம் போலவே தெரியலையே என்று முணுமுணுத்துக் கொண்டனர்.
வீட்டிற்குள் சென்ற வானதியும் வேறு வழியின்றி ஆலம் கரைத்து எடுத்துட்டு வந்து நிற்க...என்ன வானதி உனக்கு ஒன்னும் ஒன்னும் வெத்தலை பாக்கு வச்சு பழக்கத்தை சொல்லிக் கொடுக்கனுமா?
கையில் ஆலத்தோடு வேடிக்கை பார்த்துட்டு இருக்க...போய் எடு என்று தம்புசாமி தனது மகளை அதட்டவும் இந்த வயதிலும் தனது தந்தையின் கோவமான வார்த்தைக்கு பயந்த வானதியும் வாசலில் நிற்கும் மகன் மருமகளின் முன்பு வந்து நின்றவர் 3 சுத்து சுற்றி இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்து விட்டு, முந்தானையால் தனது மூக்கை சிந்திக் கொண்டு தட்டிலிருந்த ஆலத்தோடு அந்த கூட்டத்தை விலக்கி போய் ரோட்டில் ஊற்றி விட்டு வீட்டிற்குள் போனார்.
ஐயா வாயா...அம்மாடி வா மா என்று கூப்பிட மனைவியின் கையை இறுக்கமாக பிடித்த செழியனோ வலது கால் எடுத்து வை டி என்று ஷமீராவின் காதில் விழுமாறு சொல்ல அதே போல இருவரும் உள்ளே போனார்கள்.
அங்கிருந்த உறவினர்களோ அடுத்தது என்ன நடக்குமென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சிலர் வீட்டிற்குள் வந்து அங்கங்கே உட்கார்ந்தனர்.
செல்லதுரையின் குடும்பத்தின் மூத்தவரான வீரையனோ விஷயத்தை கேள்வி பட்டு தனது அண்ணன் வீட்டிற்குள் வந்தவர் பேரனை ஒரு முறை முறைத்து விட்டு,துரை நடந்தது நடந்து போயிற்று..முகரையை தூக்கி ஏழு முழத்துக்கு வைத்து இருந்தால் ஒன்னும் புண்ணியம் கிடையாது புரியுதா என்க...
அதற்கு செல்லதுரையோ நீயும் என்னப்பா இப்படி சொல்ற என்றார்..
அப்போ வேற என்னதான் பண்ணனும்னு நினைக்கிற சொல்லு?
நம்ம புள்ள கட்டின தாலி அந்த பொண்ணு கழுத்துல இருக்கு தானே?அது இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?என்று சற்று கோபமாக அண்ணன் மகனிடம் கேட்க, தனது சித்தப்பாவிற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
அம்மாடி உன் பேரு என்ன என்று தனது பேரனின் பக்கத்தில் நிற்கும் பேரன் பொண்டாட்டியை பார்த்து தம்புசாமி விசாரிக்க,அவரின் அன்பான அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவள் ஷமீரா தாஸூங்க தாத்தா என்றாள்.
அவள் நிதானமாக தாத்தா என்று அழைத்ததே அவருக்கு மனம் குளிர்ந்து போனது.தனது மீசையை தடவி விட்டவர் நீ எந்த ஊரு ஆத்தா???என்கவும் அவளோ சோழனூரென்றாள்.
சோழனூரா?
எங்க பக்கத்துல இந்த ஊரை நாங்க கேள்விபட்ட போலயே இல்லையேத்தா என்கவும்,அது சிதம்பரம் கிட்ட இருக்கு தாத்தானு செழியன் சொல்ல,எதேஏஏஏ சிதம்பரமாஆஆ..அவ்வளவு தூரம் நமக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லையேடா?
பிறகு எப்படி என்வும்,மூன்று வருடமாக அவளை காதலிச்சேன்.அவங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க அதனால தான் கையோடு கல்யாணம் பண்ணிக்கிர சூழ்நிலை என்றான்.
காதலிச்ச சரி...அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணுமா? இல்லையா??
நீயே ஒரு முடிவு எடுத்துக்கறதுக்கு நாங்கலாம் எதுக்கு இருக்கிறோமென்று தனது மகள் வயிற்று பேரனை சத்தம் போட்டார்.
ஏற்கனவே ரெண்டு தடிமாடுங்கள் அதுங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு மதுரையில் சுத்திட்டு கிடக்குங்க.
அதே போல இன்னைக்கு நீ கிளம்பிருக்கனு மகன் வழி பேரனுங்கள் மாறன் தீரனையும் அந்த நேரத்திலும் திட்ட மறக்கவில்லை...
சரித்தா உங்க அப்பா நம்பர் குடுத்தா பேசி பார்க்கும்.நாளைக்கு போலிஸ் அது இதுனா நல்லா இருக்காதென்க ஷமீராவிற்கும் தாத்தா சொல்வது சரியென்று படவும் தந்தையின் நம்பரை சொன்னாள்.
தொரை உன் மருமவள் சொல்லுற நம்பருக்கு போன போட்டு பேசுய்யா என்க,மாமா என்று அவர் தயங்க,போன போட்டு குடு நான் பேசுறேனென்று வீரையன் சொல்லவும் சரி சித்தப்பா என்றவர் தனது ஃபோனிலிருந்து ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண அதுவோ நாட் ரீச்சபிளென்று வந்தது.
சித்தப்பா ஃபோன் போகவில்லை என்க...நிஜமாக நீ போன் போட்டியா? என்று அவர் சந்தேகமாக கேட்க,ஏன்பா இப்படி என்றார்.
நீ பண்ணினாலும் பண்ணுவியே அதனால தான் சந்தேகம் என்கவும், மற்றவர்களோ அதைக் கேட்டு சிரித்து விட்டனர்.
சித்தப்பா என்று துரை பல்லை கடிக்க திரும்ப போன் போட்டு பாரு என்றார்.துரையோ மீண்டும் ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண இப்பொழுதும் அதே தான் சொல்லியது...
ராஜி நீ சொல்றதை நாங்க நம்புறோம் மா.அந்த ஊரு எங்கே இருக்கிறது?
அது தெரியலங்கப்பா.ஆனா ஒரு வருஷமா அந்த அண்ணா கிட்ட பேசலைனு சொன்னாளே என்கவும் அப்படியா என்று அதிர்ச்சியாக மகி கேட்க ஆமாம்பா நீங்க சம்மதிக்காமல் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியாக இருந்தாள்.
எந்த சூழ்நிலையிலும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டே இருந்தாப்பா....
எனக்குத் தெரிந்து காரணம் இல்லாமல் இப்படி பண்ணி இருக்க மாட்டாளென்று ராஜி சொல்ல,எஸ்தரோ தன் கையில் எடுத்து வந்து கடிதத்தை நீட்டி உன் ஃபிரண்டோட லட்சணத்தை பாருயென்க,அதை வாங்கி படித்த ராஜியோ ஏன் ஷமீரா இந்த முடிவுக்கு வந்தாளென்று யோசனை பண்ணினாள்.
நாங்க கிளம்புகிறோமென்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்து காரில் ஏறி விட்டு,மாமா இப்ப என்ன பண்ணுரதென்று அந்தோணியிடம் கேட்கவும்,அந்த ஊர் எங்க இருக்குன்னு முதல்ல தெரியனுமே மகி?
ம்ம் என்றவாறு தனது போனை ஆன் பண்ணியவர் கூகுளில் போய் வனிச்சூரை டைப் பண்ணி சர்ச் பண்ண அது அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து 12 மணி நேரம் தூரத்தில் இருப்பதாக காட்டியது.
மாமா நம்ம ஊர்ல இருந்து மதுரை. மதுரையிலிருந்து எட்டு மணி நேரம் காட்டுது என்கவும் அப்படியா சரி கிளம்புனு வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
அந்தோணியும் ராணியும் ஷமீராவை தங்களது மகன் பாபுக்கு கட்டலாமென்று பிள்ளைகளின் சிறு வயதிலிருந்து ஆசையாயிருக்க ஷமீராவோ இப்படி பண்ணிட்டு போனது வருத்தமாக தான் இருந்தது.
நேரமும் கடந்து செல்ல காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் பெயருக்கு ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டு கிளம்பும் போது இரவு 10 என்று காட்டியது.
அவ்வப்போது அவர் போனுக்கு ஏதோ புது நம்பரிலிருந்து கால் வந்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது.டவர் இல்லாத இடத்தில் இருப்பதால் அவருக்கு ரீச் ஆகவில்லை.இருக்கும் மனநிலையில் அந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் அவருக்கு தோணவில்லை
மாமா இந்த நேரத்தில நம்ம போய் என்ன பண்ணுவோம்?இங்கே ஸ்டே பண்ணிட்டு விடிய காலையில் கிளம்பலாமானு மகி கேட்க அதுவும் சரியென்று பட்டது.
போட்டுக்க துணி எல்லாம் எடுக்காம நாம பாட்டுக்கும் கிளம்பி வந்துட்டோமே??போற வழியில எதாவது ஜவுளிகடை இருக்கா பாரு மாத்துறதுக்கு ஒரு ஜோடி துணி மட்டும் வாங்கிக் கொள்ளலாம்னு அந்தோணி சொல்ல,அதேபோல் போகும் வழியிலிருந்த ஜவுளிக்கடை முன்பு காரை நிறுத்தியவர் நீங்க மூணு பேரும் உள்ள போங்க நான் பார்க்கிங் பண்ணிட்டு வரேனென்றார்.
பின்னர் நால்வரும் அவர்களுக்கு தேவையான டிரெஸ்ஸை எடுத்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் இரண்டு ரூம் போட்டு இருவரும் அவர்கள் துணைவியாரோடு பக்கத்து பக்கத்து ரூமில் தங்கிக் கொள்ள,மெத்தையில் படுத்திருந்த நால்வருக்கும் தூக்கம் மட்டும் எட்டாக் கனியானது. ..
வனிச்சூர்
தோட்டத்தில் மாட்டுக்கு கஞ்சி தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த செல்லதுரையோ மனைவியின் குரலைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே தனது மகனும் இன்னொரு பெண்ணும் இருப்பதை பார்த்தவர், என்னடா பண்ணி வச்சிருக்க என்றவாறு வேகமாக வந்தவர் பளார் பளாரென்று நான்கு அறையை விட்டு,இப்படி என் மானத்தையே வாங்கிட்டியேடா என்று சத்தம் போட,அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்து கூடி விட்டனர்.
பக்கத்து தெருவில் தான் வானதியின் அப்பா வீடு என்பதால் விஷயம் கேள்வி பட்டதும் அவருடைய அண்ணனுங்களோ வேகமாக தங்கை வீட்டுக்கு வந்தவர்கள் அங்கே தனது மருமகன் யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பதை பார்த்து அவர்களுக்கும் சிறு அதிர்வு தான்.
செல்லதுரை மகனை திட்டிக் கொண்டிருக்க,வானதியோ ஒரு பக்கம் உட்கார்ந்து ஒப்பாரி வைத்தார்...
உன்னை பாராட்டி சீராட்டி வளர்த்தோமே...
பக்கத்து தெருவிலிருக்கும் என் அப்பா வீட்டுக்கு போறதுக்கு கூட என்கிட்ட சொல்லிட்டு தான போவ..இன்னிக்கு இவ்வளவு பெரிய காரியத்தை பண்ண நீயே முடிவு எடுத்திருக்கிறியேடா?
அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லு போல உசுரோட தான இருக்கோம்,செத்து போயிட்டோம்னு நினைச்சியா?
பெத்த எங்களுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா?ஏண்டா இப்படி யாருமே இல்லாத அனாதை போல் பண்ணிட்டு வந்திருக்கிற?
எந்த ஊர் காரியோ தெரியலையே...
ஒன்னும் தெரியாது என் பையனை மயக்கிட்டாளேனு வாய்க்கு வந்த வார்த்தைகளை சொல்லி ஒப்பாரி வைத்து அழுதார்.
அய்யா செல்லதுரை நடந்தது நடந்து போயிடுச்சு மகனையும் மருமகளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம என்ன இப்படி வாசலிலே நிக்க வச்சு பேச்சு என்று அவரின் மாமனாரின் குரல் கேட்க,தனது தந்தையின் குரலை கேட்ட வானதியோ என் பொறந்தவனுங்க மவளை என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர இத்தனை வருஷமா கனவு கண்டுக்கொண்டு இருக்கிறேன்.நீ என்னப்பா இப்படி சொல்லுற?.
மகள் சொன்னதை கேட்டவர் யாருக்கு எங்கு அமைப்போ அங்கு தான் அமையும்.நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போகாது...
போ கழுதை...கண்ணை துடைச்சிட்டு ஆலத்தை எடுத்துட்டு வா என்று தனது மகளை அதட்டினார் தம்புசாமி.
என்னங்க மாமா இப்படி சொல்லுறீங்களென்று செல்லதுரை கேட்க என் மகளுக்கு சொன்னது தான் உங்களுக்கும் மாப்பிள்ளை.ஊர் சிரிச்சா மட்டும் நடந்தது இல்லன்னு மாறி போய்டுமா?
எலே கண்ணா வாடா இங்கென்று அதட்ட,கூட்டத்தின் நடுவில் நின்றவனோ தனது தாத்தாவின் அருகில் வந்தவன் எனக்கு ஏதும் தெரியாது தாத்தா என்கவும்,உன்னை நான் கேட்கவே இல்லையே..நீயே தெரியாதுனு ஆஜர் ஆனா என்னடா அர்த்தம்?
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாடா?
ரெண்டு பயலும் ஒன்னா தான் சுத்திட்டு கிடப்பீங்க.அது எப்படி இவன் காதோலூ செஞ்சது உனக்கு மட்டும் தெரியாது? இதை நான் நம்பனுமா என்க..
கண்ணன் தனது தாத்தாவிடம் மாட்டிக்கிட்டு படும்பாட்டை கண்டு செழியனும் மௌனமாய் சிரித்துக் கொண்டான்.
அங்கு நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த தெரு மக்களோ நல்ல பொண்ணா தான் புடிச்சிட்டு வந்துருங்கான்.புடிச்சாலும் புடிச்சான் நல்லா புளியம் கொம்புங்குற போல சோடிப் பொருத்தம் நல்லா தான் இருக்கு...
ஆனா பொண்ணோட வாட்டத்தையும் முக ராசியை பார்த்தா அது நம்ப சாதிசனம் போலவே தெரியலையே என்று முணுமுணுத்துக் கொண்டனர்.
வீட்டிற்குள் சென்ற வானதியும் வேறு வழியின்றி ஆலம் கரைத்து எடுத்துட்டு வந்து நிற்க...என்ன வானதி உனக்கு ஒன்னும் ஒன்னும் வெத்தலை பாக்கு வச்சு பழக்கத்தை சொல்லிக் கொடுக்கனுமா?
கையில் ஆலத்தோடு வேடிக்கை பார்த்துட்டு இருக்க...போய் எடு என்று தம்புசாமி தனது மகளை அதட்டவும் இந்த வயதிலும் தனது தந்தையின் கோவமான வார்த்தைக்கு பயந்த வானதியும் வாசலில் நிற்கும் மகன் மருமகளின் முன்பு வந்து நின்றவர் 3 சுத்து சுற்றி இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்து விட்டு, முந்தானையால் தனது மூக்கை சிந்திக் கொண்டு தட்டிலிருந்த ஆலத்தோடு அந்த கூட்டத்தை விலக்கி போய் ரோட்டில் ஊற்றி விட்டு வீட்டிற்குள் போனார்.
ஐயா வாயா...அம்மாடி வா மா என்று கூப்பிட மனைவியின் கையை இறுக்கமாக பிடித்த செழியனோ வலது கால் எடுத்து வை டி என்று ஷமீராவின் காதில் விழுமாறு சொல்ல அதே போல இருவரும் உள்ளே போனார்கள்.
அங்கிருந்த உறவினர்களோ அடுத்தது என்ன நடக்குமென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சிலர் வீட்டிற்குள் வந்து அங்கங்கே உட்கார்ந்தனர்.
செல்லதுரையின் குடும்பத்தின் மூத்தவரான வீரையனோ விஷயத்தை கேள்வி பட்டு தனது அண்ணன் வீட்டிற்குள் வந்தவர் பேரனை ஒரு முறை முறைத்து விட்டு,துரை நடந்தது நடந்து போயிற்று..முகரையை தூக்கி ஏழு முழத்துக்கு வைத்து இருந்தால் ஒன்னும் புண்ணியம் கிடையாது புரியுதா என்க...
அதற்கு செல்லதுரையோ நீயும் என்னப்பா இப்படி சொல்ற என்றார்..
அப்போ வேற என்னதான் பண்ணனும்னு நினைக்கிற சொல்லு?
நம்ம புள்ள கட்டின தாலி அந்த பொண்ணு கழுத்துல இருக்கு தானே?அது இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?என்று சற்று கோபமாக அண்ணன் மகனிடம் கேட்க, தனது சித்தப்பாவிற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
அம்மாடி உன் பேரு என்ன என்று தனது பேரனின் பக்கத்தில் நிற்கும் பேரன் பொண்டாட்டியை பார்த்து தம்புசாமி விசாரிக்க,அவரின் அன்பான அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவள் ஷமீரா தாஸூங்க தாத்தா என்றாள்.
அவள் நிதானமாக தாத்தா என்று அழைத்ததே அவருக்கு மனம் குளிர்ந்து போனது.தனது மீசையை தடவி விட்டவர் நீ எந்த ஊரு ஆத்தா???என்கவும் அவளோ சோழனூரென்றாள்.
சோழனூரா?
எங்க பக்கத்துல இந்த ஊரை நாங்க கேள்விபட்ட போலயே இல்லையேத்தா என்கவும்,அது சிதம்பரம் கிட்ட இருக்கு தாத்தானு செழியன் சொல்ல,எதேஏஏஏ சிதம்பரமாஆஆ..அவ்வளவு தூரம் நமக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லையேடா?
பிறகு எப்படி என்வும்,மூன்று வருடமாக அவளை காதலிச்சேன்.அவங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க அதனால தான் கையோடு கல்யாணம் பண்ணிக்கிர சூழ்நிலை என்றான்.
காதலிச்ச சரி...அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணுமா? இல்லையா??
நீயே ஒரு முடிவு எடுத்துக்கறதுக்கு நாங்கலாம் எதுக்கு இருக்கிறோமென்று தனது மகள் வயிற்று பேரனை சத்தம் போட்டார்.
ஏற்கனவே ரெண்டு தடிமாடுங்கள் அதுங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு மதுரையில் சுத்திட்டு கிடக்குங்க.
அதே போல இன்னைக்கு நீ கிளம்பிருக்கனு மகன் வழி பேரனுங்கள் மாறன் தீரனையும் அந்த நேரத்திலும் திட்ட மறக்கவில்லை...
சரித்தா உங்க அப்பா நம்பர் குடுத்தா பேசி பார்க்கும்.நாளைக்கு போலிஸ் அது இதுனா நல்லா இருக்காதென்க ஷமீராவிற்கும் தாத்தா சொல்வது சரியென்று படவும் தந்தையின் நம்பரை சொன்னாள்.
தொரை உன் மருமவள் சொல்லுற நம்பருக்கு போன போட்டு பேசுய்யா என்க,மாமா என்று அவர் தயங்க,போன போட்டு குடு நான் பேசுறேனென்று வீரையன் சொல்லவும் சரி சித்தப்பா என்றவர் தனது ஃபோனிலிருந்து ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண அதுவோ நாட் ரீச்சபிளென்று வந்தது.
சித்தப்பா ஃபோன் போகவில்லை என்க...நிஜமாக நீ போன் போட்டியா? என்று அவர் சந்தேகமாக கேட்க,ஏன்பா இப்படி என்றார்.
நீ பண்ணினாலும் பண்ணுவியே அதனால தான் சந்தேகம் என்கவும், மற்றவர்களோ அதைக் கேட்டு சிரித்து விட்டனர்.
சித்தப்பா என்று துரை பல்லை கடிக்க திரும்ப போன் போட்டு பாரு என்றார்.துரையோ மீண்டும் ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண இப்பொழுதும் அதே தான் சொல்லியது...