• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சி:

என்னடா இது?

இவர் என்னென்னமோ சொல்றாரேயென்று தனது மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,ரொம்ப நன்றிங்க.நாங்க அங்க போய் பார்க்கிறோமென்று சொல்லிவிட்டு காரில் ஏறியவர்,ஏன் ராணி உன் அண்ணன் வேற வீட்டில் இருக்கானாமே சொல்லவே இல்லையே?.

ஏங்க நானும் உங்க கூட தானே இருக்கேன்,எனக்கு எப்படி தெரியும்னு ராணி கேட்க,அட ஆமாம்.தங்கச்சி கிட்டையும் போன் இல்லை.இருந்தாக்க இதைப்பற்றி சொல்லிருக்குமென்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து பாலக்கரை நோக்கி சென்றார்.

கால் மணி நேரத்தில் பாலக்கரை மார்க்கெட்டிற்கு வந்தவர்,இதற்கு பின்னாடி தானே வீடு இருக்குனு சொன்னாரே என்கும் யோசனையோடு காரை ஓட்டியவர்,சரி இங்கு யார்கிட்டையாவது இன்கம்டாக்ஸ் ஆபீஸில் வேலை செய்கிறவர் வீடு எங்கே இருக்குன்னு கேட்டால் சொல்லாமலா போய்விடப் போகிறார்களென்று யாராவது ரோட்டில் வருகிறார்களா என பார்த்துக் கொண்டே வந்தார்...

வரிசையாக இருக்கும் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் அது யார் வீடு என்கும் பெயர் இருப்பது தெரிந்தது.ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே வரும்போது மூன்றாவது வீட்டில் மகிமைதாஸ் என்ற போர்ட்டு இருப்பதை பார்த்து அந்த வீட்டின் கேட்டோரமாய் போய் காரை நிறுத்தியவர் இதுதான் மச்சானோட வீடு.

அங்க பாரு உன் அண்ணன் பேரு இருக்கென்று சொல்லவும்,ராணியோ உள்ளுக்குள்ள ஓடும் பய மெஷின்களில் என்ன சொல்வதென்று தெரியாமல், இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டவர் அப்படியானு கீழே இறங்கினார்.

அந்தோணியும் காரை நிறுத்திட்டு வந்து கேட்டை திறந்து உள்ளே போக அங்கே மகியின் காரும்,புல்லட்டும் செட்டில் நிற்பது தெரிந்தது.நல்லவேளை உன் அண்ணன் இன்னும் வேலைக்கு போகல ராணி என்றபடி சுவற்றிலிருக்கும் காலிங் பெல்லை அழுத்தினார்

சிறிது நொடியில் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்த பெண்மணியோ அங்கிருந்த ராணியையும் அந்தோணியையும் பார்த்தவர் வாங்க வாங்க...

எப்படி இருக்க ராணி?

"தம்பி கல்யாணம் அப்போ பார்த்தது".

அதற்கு பிறகு இன்னைக்கு தான் உனக்கு அண்ணன் வீட்டுக்கு வரணும்னு தெரிந்ததா என்க, மகிக்கு தெரிந்தவர் போல அதனால்தான் தனது மனைவிடம் இவ்வளவு சகஜமாக பேசுகிறாரென்று அந்தோணியும் நினைத்துக் கொண்டார்.

ராணியோ உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சிரித்தவர் நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?.

"நல்லாருக்கேன் ராணி"

வாசல்லையே நின்னுட்டு இருக்கீங்களே உள்ள வாங்களென்று கூப்பிட்டு போனவர் உட்காருங்கள் டீ எடுத்துட்டு வரேன் என்கும் போது அம்மு அம்மு.எத்தனை முறை உன் கிட்ட சொல்றது அடுப்புல இப்படி ஃபுல்லா தீய வச்சிட்டு உன் இஷ்டத்துக்கு வெளியில் போகாதுன்னு?

இங்க வந்து பாரு எல்லாம் பொங்கி ஊத்திடுச்சு என்கும் மகியின் குரலை கேட்ட அந்தோணியோ வேலைக்கார பொண்ணு கிட்ட என்ன இவ்வளவு சகஜமாக பேசுறானென்று நினைத்துக் கொண்டவர்,எங்க எஸ்தரை காணோமென்று மகியின் குரல் வந்த பக்கம் திரும்பியவர் அங்கே சுவற்றில் இருந்த போட்டோவை பார்த்து அதிர்ந்து எழுந்தார்..

ஏய் உனக்கு காதுல விழுதா இல்லையா டி.எவ்வளவு நேரம் மனுஷன் கத்திட்டு இருக்கேன் எங்க தான் போய் தொலைஞ்ச என்றவாறு ஹாலுக்கு வந்தவரோ அங்கிருந்த தனது தங்கையையும் மைத்துனரையும் பார்த்து அதிர்ந்து போனார் புகழ் என்ற மகிமை தாஸ்...

சுவற்றிலிருக்கும் போட்டோவில் இருந்து பார்வையை விலக்கிய அந்தோணியோ எப்படி டா இவ்ளோ பெரிய துரோகத்தை என் தங்கச்சிக்கு உன்னால பண்ண முடிஞ்சது என்கும் போது அவர் கண்கள் கலங்கியது.

ம்கும் என தொண்டையை கணைத்து தன்னை சரி படுத்திக் கொண்டவர் என் தங்கச்சி எங்கே நான் பார்க்கணும் என்க,அவர் குரலிலிருக்கும் அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்து கொண்ட மகியோ மாமா நீங்க உட்காருங்க நான் எல்லா விஷயத்தையும் சொல்கிறேனென்றார்.

ஒழுங்கு மரியாதையா கேட்கிறேன் என்னோட தங்கச்சி எங்கனு கொஞ்சம் குரலை உயர்த்த,மாமா கொஞ்சம் அமைதியா உட்காருங்கள்.

அக்கம் பக்கத்துல காதில் விழுந்தால் என்ன நினைப்பாங்க என்கவும்,ஏய் என்னோட தங்கச்சி எங்கன்னு சொல்ல போறியா இல்லையாடா என்று வேகமாக போய் மகியின் சட்டையை பிடிக்க,என்னங்க என்ன பண்றீங்க? அண்ணா என்ன பண்றீங்க என்று அங்கிருந்த ராணி,மானசா இருவரின் குரலும் பதற்றமாய் ஒலித்தது.

திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்த்த அந்தோணி திருச்சி என்றாலே பதறுவியே,அது எதனால் என்பது இப்பதான் புரிஞ்சிது.புருஷனுக்கு ரொம்ப உண்மையா நடந்திருக்க போல என்கவும்,கணவரின் வார்த்தையோ ஆயிரம் ஊசியால் தைத்தது போன்ற வலியை ராணியால் உணர முடிந்தது.

உனக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கிறதால தான் என் தங்கச்சியை அவ்ளோ கொடுமை படுத்துனியாடா? ஒரு நாளைக்காவது அதுக்கு நல்ல புருஷனா நடந்துக்கிட்டியா?

இல்லை என் மருமகளுக்கு நல்ல அப்பனா நடந்துகிட்டியாடா? எப்ப பாத்தாலும் சர்வாதிகாரி போலே பண்ணிக்கிட்டு இருந்தியே இங்க ஒரு குடும்பம் இருக்கிற சந்தோஷத்தில் தானா..

நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு சாப்பாட்டுக்கு என்ன குறை மாமா,என்னை கவனிக்கிறதுக்கு என்ன குறைனு சொல்லிட்டு இருப்பியேடா அதுக்கான அர்த்தம் இன்னைக்கு தான் டா புரிஞ்சது....

கண்ணை மூடி திறந்தவர் என் தங்கச்சி எங்க?அதை சொல்லு..மிச்சபடி உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்லை என்கவும்,தன்னை பிடித்திருந்த மாமாவின் கையை விலக்கி விட்டவர் எஸ்தர் காணாமல் போய்ட்டாள் மாமா.

அவள் வீட்டை விட்டு போய் ஐந்து நாள் ஆகுது என்கவும்,என்னடா சொல்ற என்று ஓங்கி மைத்துனரின் கன்னத்தில் இரண்டு அறையை விட்டார்.ஒவ்வொரு அடியும் இடி போல் மகியின் கன்னத்தில் இறங்கியது.

பெண்கள் இருவரும் அய்யோ என்ன பண்றீங்க என்று பதறி கொண்டு வர அவர்களை பார்த்த மகியோ உங்க வேலையை பாருங்க.இது எனக்கும் என் மாமாவுக்கும் உள்ள பிரச்சினை நாங்க பார்த்துக்கிறோம் என்றவர் உள்ளே போய் பெட்டியிலிருந்த லெட்டரை எடுத்துட்டு வந்து அந்தோணியிடம் நீட்டியவர் இதை படிச்சு பாருங்க மாமா என்க,மானசாவிற்கும் தனது கணவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக தான் இருந்தது.

கைகள் நடுங்க மகியிடமிருந்து வாங்கிய லெட்டரை படித்துப் பார்த்த அந்தோணியோ,அய்யோ எஸ்தர்!
எங்கம்மா போனனு அழுது கொண்டே நெஞ்சை பிடித்தவர் அப்படியே சரிந்தார்.

என்னங்கனு ராணி ஓடி வர,அதற்குள் சுதாரித்த மகியோ தனது மாமாவை தாங்கிப் பிடித்தவர் மானசா சீக்கிரம் போய் பக்கத்துனிலிருக்கும் டாக்டரை கூப்பிட்டு வா குயிக் என்கவும்,அதிர்விலிருந்த மானசாவோ கணவரின் குரல் கேட்டு நிகழ்விற்கு வந்தவர்,இதோ என்று வெளியே ஓடிப் போனவர் பக்கத்து வீட்டிலிருக்கும் டாக்டரை கூப்பிட்டுக் கொண்டு வந்தார்.

அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டரும் சென்றார்.

சிறிது நிமிடங்கள் சென்று கண்ணை திறந்த அந்தோணியோ பதறி எழுந்தவர் அங்கிருந்த மகியை பார்த்தவர் இன்னும் ஒரு நிமிஷம் இங்கு நானிருந்தாலும் உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்...

இனிமே செத்தா கூட நீ என் முகத்தில் முழிக்கவே கூடாது என்றவாறு திரும்பி மனைவியைப் பார்த்தவர்,இத்தனை வருஷமா பொய்யான ஒரு வாழ்க்கையை என் கூட வாழ்ந்திருக்கியே,உன்னை என் மனைவின்னு சொல்றதுக்கே வெட்க்கமா இருக்கு.

ஊர் உலகத்துக்கு மட்டும் தான் இனிமே நீ எனக்கு மனைவி.மிச்சபடி இந்த நிமிஷத்திலிருந்து என்ன பொறுத்த வரைக்கும் நீ செத்துப் போய்ட்ட..

இவ்வளவு வருஷமா என் தங்கச்சிக்கு துரோகம் பண்ணிட்டு ரெண்டு பேரும் எதுவுமே தெரியாது போல நாடகமாடி இருக்கீங்களேனு தனது தலையில் அடித்துக் கொண்டவர் எங்கே போய் தேடுவேன்?

அய்யோ எஸ்தர் இன்னைக்கு உனக்கு இந்த நிலமை வருவதற்கு நானும் காரணமாகிட்டேனே....படித்து படித்து எங்க அம்மா சொன்னாங்களே உன் அத்தை குடும்பம் வேண்டாம்னு....

கேட்காமல் விட்டதுக்கு இவ்வளவு பெரிய துரோகம் என் தங்கச்சிக்கு நடந்திருக்கிறதேனு கதறியவர்,முதலில் தனது தங்கையை தேட வேண்டுமென்று வேகமாக எழுந்து வெளியே இருக்கும் காருக்குள் போக ராணியோ கணவர் சொன்ன வார்த்தையிலு பாதி செத்துவிட்டார்.

நடை பிணமாக அங்கிருந்து வெளியே போனவர் காரில் ஏறி உட்கார அந்தோணியும் புயல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றார்.

மகியோ ஓய்ந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார,மானசாவோ அடக்கப்பட்ட கோபத்தில் கணவனை பார்த்துக் கொண்டிருந்தார்.மனைவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மகி கண்களை மூடி திறந்தவர் உனக்கு என்ன தெரியனும் கேளுமா என்றார்.

என்ன நடந்ததோ அதை,குறிப்பாக உண்மையை மட்டும் சொல்லுங்கள் அது போதுமென்று மானசா சொல்ல, ஷமீராவுக்கு பாபு கூட கல்யாணம் நடக்கலை.

அவ ஆசைப்பட்ட பையனையே சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாள்.தேடி போன எங்களிடம் அப்பா அம்மா வேண்டானு சொல்லிடாடாள்.

வீட்டுக்கு வந்த நானும் கோவத்துல எஸ்தரை கண்டபடி திட்டி
சண்டை போட்டுட்டு நைட் சாப்பிட்டு படுத்துட்டேன்.காலையில தான் எஸ்தர் வீட்டை விட்டு போன விஷயமே எனக்கு தெரிஞ்சதென திருச்சிக்கு வந்ததையும் டிடெக்டிவ் கிட்ட சொல்லியிருப்பதையும் சொன்னார்.

காதலிக்கிறது என்ன அவ்வளவு குற்றமா?

ஏன் ஜாதி மதம் எல்லாம் பார்த்துதான் என்னை கல்யாணம் பண்ணுனீங்களா என்று ஆங்காரமாக மானசா கேட்க, மகியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

நீங்களும் என்னை காதலிச்சு தானே கட்டிக்கிட்டீங்க.அப்ப நான் இந்து பொண்ணு,அதும் நார்த் இந்தியன் பிராமின் பொண்ணு என்கும் விஷயம் உங்களுக்கு தெரியாதா?

ஏன் உங்க அம்மாவுக்கு தான் தெரியாதா சொல்லுங்க?

இன்னைக்கு பொண்ணு காதலிச்சா மட்டும் அது உங்களுக்கு தெய்வ குத்தமா தெரியுதா?.அன்னைக்கு நீங்க பண்ணும் போது உங்களுக்கு தெரியல என்கவும்...ஏய் மானசா அதுவும் இதுவும் எப்படி டி ஒன்றாகும் சொல்லு?

ஏன் ஒன்னாகாது?

நீங்களும் நானும் என்ன ஒரே ஜாதியா ஒரே மதமா?சொல்லுங்க...நமக்குள் எதுக்காவது ஒத்து வந்துச்சா? அன்னைக்கு நானும் இது சொல்லி விலகி போனேனே அப்போ உங்களால பிரிந்து போக முடிச்சுதா என்று கேள்விகளை அடுக்க,மனைவி கேட்கும் கேள்விகளோ செருப்பால் அடித்தது போலிருக்க மகியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

செல்லம் எப்படி இருக்குடினு செழியன் கேட்க கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருந்தவளோ சொல்ல வார்த்தை இல்லை என்றவாறு இரண்டு கைகளையும் நீட்ட,மழைத் தண்ணீர் அவள் கைகளில் பட்டு தெரித்தது....

ம்ம் என்றவாறு கீழே இருந்த புல் தரையில் தன்னவளை படுக்க வைக்க,இவ்வளவு நேரம் கண்களை மூடி மழையை ரசித்தவள் என்ன பண்றார் இந்த மனுஷனென்று கண்களை திறந்து பார்க்க,செழியனோ கைகளை கட்டிக்கொண்டு தரையில் படுத்திருக்கும் பாவையை அங்கமங்கமாக ரசித்துக் கொண்டிருந்தான்...

கணவனின் பார்வையில் இருக்கும் வேட்கையும் குறுகுறுப்பும் பெண்ணவளை ஞாணச் செய்ய வெட்கத்தோடு ஒரு பக்கமாக திரும்பி படுக்க,புடவையின் இடைவெளியில் இருக்கும் வெறுமையான இடுப்பில் மழைத்துளிகள் பட்டு சிதறியதை பார்த்தவனுக்கு வேட்கை அதிகமாகி மனைவியின் மேலே வேகமாய் சரிந்தவன் அவளிதழோடு தனது முரட்டிதழை பதித்தான்....

வான் மழையோ அடித்து பொழிய, இருவரும் அவர்கள் உலகத்தில் மூழ்கிங்கியிருந்தனர்.அந்த நேரம் பார்த்து பெரிய இடி சத்தம் ஒன்று மின்னல் வெட்டிக்கொண்டு கேட்கவும் அதில் சுதாரித்தவன் தரையில் கிடக்கும் தாமரை பூ போன்றவளை கைகளை அள்ளிக்கொண்டு உள்ளே போனவன் எதுவும் சொல்லாமல் தன்னவளை பார்க்க....

இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?கீழே இறக்கி விடுங்க துணி எல்லாம் நனைந்து விட்டதென்று வேறு பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

ம்ம் என்றவாறு தன்னோடு உரசியபடியே மனைவியை கீழே இறக்கிவிட அவள் நெற்றியில் இருந்த மழைத்துளிகளோ மூக்கு வழியாக உதடுகளைத் தாண்டி கழுத்தில் ஓடுவதை பார்த்தவன் மனைவியின் தலையை சாய்த்து அந்த நீர்துளியை பருகியவனுக்கு காதல் பித்தேற,லேசாக மடிந்திருக்கும் அவளின் கால்களில் தட்டி விடவும் அப்படியே தரையில் சாய்ந்தாள்.

கணவன் இப்படி செய்வானென்று எதிர்பார்க்காதவளோ அய்யோ என்று கத்த தனது பானியில் மனைவியின் வாயை அடைக்க காதலோடு சேர்ந்து கூடலும் அங்கே இன்பமாய் அரங்கேறியது....

நேரமும் கடந்து சென்றதே தவிர மழையும் நிற்கவில்லை உள்ளே இருக்கும் செழியனும் தனது மனைவியை விலக விடவில்லை....

ரொம்ப படுத்தி விட்டோம் என்பது புரிந்தவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு தலையில் தடவி கொடுக்க உடலில் இருக்கும் வலியோ ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் கணவனின் ஸ்பரிசமோ உறக்கத்தை கொடுக்க சிறிது நிமிடத்தில் தூங்கிவிட்டாள்.

அவளை தூக்கி மர பெட்டில் படுக்க வைத்த செழியனோ அங்கிருந்த மர அலமாரியில் இருக்கும் போர்வை எடுத்து மனைவிக்கு போர்த்தி விட்டவன் பின்னர் இருவரின் ஆடைகளோடு தோட்டத்திற்கு போய் தொட்டியில் நிறைந்திருக்கும் மழை தண்ணீரில் அலசி பிழிந்தவன் உள்ளே இருக்கும் கொடியில் காய வைத்து விட்டு கபோர்ட்டில் இருக்கும் அவனுடைய கைலியை எடுத்துக் கட்டிக் கொண்டு வந்து மனைவியை அணைத்தபடி படுத்தவனுக்கும் சிறுது நிமிடத்திலேயே உறக்கம் வந்தது..

இரவும் கடந்து செல்ல அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண்விழித்தனர்.

செல்லம் மணி அஞ்சு ஆயிடுச்சு டி வீட்டுக்கு கிளம்பலாமா டி... தூங்கிட்டால் என்ன பண்றது என்பதால் தான் அலாரம் வைத்துட்டு படுத்தேன் என்று சொல்லவும் ம்ம் என்றவள் தன் மேல் இருக்கும் போர்வையை பார்த்து இது எங்கிருந்து வந்தது?

ஏய் நான் தான் சொன்னேனடி இதுபோல இங்க வந்து தங்குவோம்னு. அதனால் எல்லாருக்கும் ஒரு செட் டிரஸ் அந்த மர அலமாரியில் இருக்கும்.

தேவைப்படும் நேரத்தில் இங்கையே சமைச்சு சாப்பிட வேண்டியதாக இருக்கும்.இதை போல மழை வந்துட்டால் வீட்டுக்கு போக முடியாது இல்லையா,அப்போலாம் இந்த குடிலில் தான் வந்து தங்கிப்போம் என்கவும் அப்படியா என்றவள்,போர்வையால் உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு புடவையை தேட,அங்கு காய வச்சிருக்கேன் போய் பாரு என்றான்.

நீங்களா காய வச்சீங்களென்க,ஆமா டி வீட்டுக்கு போகும்போது வேற புடவை கட்டிட்டு போனால் என்ன நினைப்பாங்க என்று விஷமமாக சிரிக்க சீ போங்கள் என்று வெட்கப் பட்டுக் கொண்டே அங்கிருந்த பின்பக்க கதவை திறந்து பார்க்க புடவையில் ஈரமும் உலர்ந்திருந்தது.

அதை எடுத்து வேக வேகமாக கட்டிக் கொண்டவள் மழை இன்னும் பெய்கிறதா என்று வெளியே பார்க்க தற்போது விட்டிருப்பது தெரிந்தது.

பின்னர் தோட்டத்து கதவை இழுத்து சாத்திவிட்டு உள்ளே வர,அங்கு டிரஸ் மாற்றிக் கொண்டிருந்த கணவனை பார்த்தவள் வேறு பக்கம் திரும்பி கொண்டு மழை விட்டுருக்கு சீக்கிரம் வீட்டுக்க போயிடலாமென்றாள்.

ம்ம் என்றவன் போர்வையையும் கைலியையும் உதறி மடித்து அங்கிருந்த கபோர்டின் உள்ளே வைத்து தாழ்ப்பாள் போட்டவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு லாந்தரை அணைத்து விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தவன் எப்படியும் நம்ம வீடு போறதுக்குள்ள திரும்ப மழை வந்தாலும் வரும் டி...

சீக்கிரம் வா டி...அடுத்த மழையும் வந்தால் இன்னும் ரெண்டு நாள் இங்க தான் இருக்கணும்..எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சிரித்துக் கொண்டே கதவை பூட்டி சாவியை எரவாணத்தில் வைத்தவன் வண்டியில் ஏறி ஸ்டார்ட் பண்ண,கையிலிருந்த பேகால் கணவன் முதுகில் இரண்டு அடியை வைத்து விட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

நிறைவான தாம்பத்தியம் என்றுமே மனதிற்கு இனிமை தான் கொடுக்கும் என்பதை இருவரும் நினைத்தபடி அந்த அதிகாலை பயணத்தை ரசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

மழை நேரம் என்பதால் வழக்கம் போல் வாசல் தெளித்து கோலம் போடுவதற்காக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்மணிகளோ வெளியே வரவில்லை..

வண்டியை அங்கிருந்த ஷெட்டில் நிறுத்திவிட்டு தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் கதவை திறக்க இருவரும் உள்ளே வந்தனர்.

செழியனோ கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்லம் சூடா டீ வச்சு எடுத்துட்டு வரியா குளிருதடி என்க...சரிங்க என்றவள்,பின்னர் சுதாரித்து இதோ கொஞ்ச நேரம் கழிச்சு போட்டு தரேனென்று சொல்லிக் கொண்டே கணவனை எதிர்பார்க்காமல் படியில் ஏறி வேகமாய் போனாள்.

மனைவியின் ஓட்டம் எதனால் என்பதை புரிந்து கொண்ட செழியனும் சிரித்துக்கொண்டே படியில் ஏறினான். ரூமிற்குள் வந்த ஷமீராவோ கையில் இருந்த பேகை பெட்டில் மேல் வைத்துவிட்டு டவலோடு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

வேக வேகமாக குளித்து கதவை திறந்து எட்டிப் பார்க்க செழியனோ பெட்டின் மேல் குப்புர படுத்திருப்பது தெரிந்தது. நல்ல வேளை படுத்துருக்கிறார் என்று பூனை போல் நடந்து வந்தவள் கபோர்டில் இருந்த துணிகளை எடுத்துக்கொண்டு ஸ்க்ரீன் மறைவிற்கு போய் மாற்றிக்கொள்ள இப்ப எனக்கு மூடு இல்லை டி...

மாமா ரொம்ப டயர்டா இருக்கிறேன் என்கவும்,வெட்கமாக இல்லையா? வாயை கொஞ்சம் மூடுங்க என்றவளுக்கும் வெட்கமும் சிரிப்பும் போட்டி போட்டு வந்தது.

மாமா நைட் எல்லாம் ஹெவி டூட்டி பார்த்தேனா,ரொம்ப உடம்பெல்லாம் வலிக்குது..

ஷமீராவோ ஸ்கிரீனை விலக்கி கையில் இருந்த ஈரத்துண்டை புருஷன் மேல் தூக்கி எறிந்தாள்.அதில் ஹா ஹா என்று சத்தமிட்டு சிரித்தவன் முதல்ல உன் கையில் இருக்கும் நகத்தை வெட்டுடி எவ்வளவு காயம் தெரியுமா?

எப்படியும் அரை லிட்டர் ரத்தம் போனாலும் போயிருக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்ல,ஐயோ இளா கொஞ்சம் வாய மூடுங்களேனென்று சிணுங்கினாள்.

இன்னைக்கு கோட்டா இதோட போதும் மீதி நைட்ல பார்த்துக் கொள்ளலாம் என்றவன் திரும்பி மனைவியை பார்க்க,அன்றலர்ந்த மலர் போல் நீண்ட கூந்தலை விரித்து விட்டு, இயற்கை கொஞ்சம் அழகில் பேரழகு பெட்டகமாய் நிற்பவளை ரசித்து பார்த்தவன் லவ் யூ டி பொண்டாட்டி என்கவும் லவ் யூ டூ புருஷா என்றவள் நெற்றி வகுடில் குங்குமத்தை வைத்துக்கொண்டு கதவை திறந்து கீழே போனாள்...

வந்த அன்றே வீராயி பாட்டி சொல்லியது போல வீட்டை கூட்டி துடைத்தவள்,பூஜை ரூமிற்கு போய் அங்கிருக்கும் காய்ந்து போன பூக்களை எல்லாம் எடுத்துவிட்டு, பிரிட்ஜில் இருந்த பூக்களை சாமிக்கு வைத்தவள் பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கு ஏற்றினால் நல்லது என்று சொல்லியிருந்ததால்,அது முடியறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருப்பதை பார்த்து தீபத்தை ஏற்றி கண்களை மூடி வணங்கினாள்.

பின்னர் தட்டிலிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்து பூசிக்கொண்டு கிச்சனுக்குள் போய் அடுப்பை பற்ற வைக்க,வழக்கமாக எழுந்து ஹாலுக்கு வந்த வானதி மருமகள் கிச்சனில் இருப்பதை பார்த்து எப்பமா வந்தீர்கள் என்க...முன்னாடியே வந்துட்டோங்கத்தை என்றாள்.

சரிமா என்றவர் குளித்து,வீட்டைக் கூட்டி பூஜை அறையில் விளக்கேற்றிருப்பதை பார்க்க,கிறிஸ்டியன் பொண்ணாச்சே எங்கே இதெல்லாம் செய்வாளோ என்று உள்ளுக்குள் ஒரு பக்கம் கவலையாக இருந்தவருக்கு இதை பார்த்ததும் மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

சிறிது நிமிடத்தில் இந்தாங்கத்தை டீ என்று டம்ளரை நீட்ட,உங்க மாமாவுக்கும் கொடுத்தா,முழிச்சிட்டு தான் இருக்காரென்று வானதி சொல்ல, சரிங்கத்தை என்று உள்ளே போனவள் இரண்டு டம்ளர் எடுத்து வந்து ஒன்று மாமியாரிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை கணவனுக்கு எடுத்துக் கொண்டு ரூமிற்கு வந்தாள்.

அங்கே படுத்திருந்தவனிடம் டீ என்று எழுப்ப நோ நோ வழக்கமா சினிமாவுல பொண்டாட்டியெல்லாம் எப்படி எழுப்புவாங்க அப்படி எழுப்புடி என்றான்

அப்படியா....இப்போ பாருங்களென்று சூடான டம்ளரை கணவனின் காலின் மேல் வைக்க சூட்டில் பதறி அடித்து எழுந்தவன் அடிப்பாவி என்னடி பண்ற?
இப்படியாடி புருஷனை எழுப்புவாங்க கொலைகாரி என்று முறைத்தவாறு டீக்காக கையை நீட்ட,இந்த கொய்யாவுக்கு சினிமாவுல போல வேண்டுமோ?

இப்ப நம்ம படத்துல தான் நடிச்சிட்டு இருக்கோம் என்றவாறு கணவனை முறைக்க...சேச்சே அது வேற இது வேறடி அது கூட தெரியாமையா இருப்பேன்.

இங்க பாரு உடம்புல எவ்ளோ காயமே இதிலிருந்து தெரியலையா இது ரியல் என்று சொல்லவும்,ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டவள், இப்படி எல்லாம் பேசுறீங்களே என்று கணவனை முறைக்க முயன்றவளுக்கு வெட்கம் வந்து வேறு பக்கம் திரும்பி நின்று சிரித்தாள்..

ஓய் இங்க பாத்து சிரி டி..அங்க ஏன் சுவரை பார்த்து சிரிச்சிட்டு இருக்க,உன் புருஷன் இங்க தான் டி இருக்கேனென்றவன் செல்லம் நான் வேலைக்கு போகணும் டி..

இனி உன் புருஷன் கொஞ்சம் பிஸி ஆயிடுவான்.அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றவாறு எட்டி மனைவியின் கையை பிடித்து இழுத்து தனது மடியில் உட்கார வைத்தவன்,செல்லம் உங்க அம்மா கிட்ட பேசு சரியா,அவங்க பேசலைன்னா என்ன??நீ பேசுடி.ஒன்னும் தப்பு இல்லை. கோவமா தான் இருப்பாங்க என்க,ஷமீராவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top