• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சி:

என்ன ஊருக்கு போனவங்க இன்னும் வரலையா?மச்சானுக்கு தெரிந்திருந்தால் இவ்வளவு நேரம் போன் பண்ணி விசாரித்து இருப்பாரே..

ஒருவேளை இன்னும் வரவில்லையோ என்று யோசனையோடு பெட்டில் மகி படுத்திருக்க,சிறிது நொடிகள் சென்று அவரது போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று எடுத்துப் பார்க்கவும் மாமாயென வந்தது. .

அந்தோணியின் நம்பரை பார்த்த உடனே மகிக்கு திக்கென்று வந்தது.இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவர் அட்டென்ட் பண்ணி சாதாரணமாக பேசுவது போல் சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க ராணி எப்படி இருக்கு அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?

இங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மகி.நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?நாங்க காலை தான் ஊருக்கு வந்தோம்.

எதிர் வீட்ல காஞ்சனா அக்கா சொன்னாங்க எஸ்தர் உன்கூட தான் திருச்சிக்கு வந்துருக்குன்னு என்க...ஆமாம் மாமா நீங்களும் ஊருக்கு போய்ட்டீங்களா சரி அங்கிருந்தா இவள் பொண்ண நினைச்சு கவலைப்படுவாளே.

நல்ல காரியம் தான் பண்ணுன..சரி தங்கச்சி கிட்ட போனை கொடு என்க,ஒரு நிமிடம் பதறியவர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவர் மார்க்கெட் வரைக்கும் போயிருக்கா மாமா...

வீட்டுல காய் இல்லைன்னு சொன்னேன் நானே வாங்கிட்டு வரேன்னு இப்போது தான் போனாளென்க,அப்படியா என்றவர் தங்கச்சிக்கு கால் பண்ணுனேன் ஸ்விட்ச் ஆஃப் சுவிட்ச் ஆப்னு வருது மகி.

ஆமா மாமா...எஸ்தர் போன் தண்ணீரில் விழுந்துடுச்சு..புது போன் தான் வாங்கணுமென்ற மகியோ சரளமாக பொய்களை சொல்லி சமாளித்தார்.

அப்படியா என்று அந்தோணி கேட்க, ஆமாம் என்றவர்,அப்புறம் மாமா உங்க மருமகளோட பங்க்ஷன் எல்லாம் எப்படி முடிஞ்சது?.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது மகி.

அப்படியே கையோடு இன்னொரு நல்ல காரியமும் நடந்திருக்கென்க,என்ன விஷயம் மாமா சொல்லுங்கள்.

அது வந்து மகி நம்ப பாபுக்கு அவங்க வீட்டு பொண்ணை பேசி முடிச்சிருக்கென்கவும்,என்ன மாமா சொல்றீங்க? யாரை கேட்டு இந்த முடிவு எடுத்திருக்கீங்க?.

தாய் மாமா நான் ஒருத்தன் குத்துக்கல்லு போலிருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை இது பற்றி பேசணும்னு உங்களுக்கு தோணவே இல்லையாயென்று மகி கத்தவும் கொஞ்சம் அமைதியா இரு மகி...

அவனுக்கு பிடிச்சிருக்கு ஆசைப்பட்டுட்டான் வேற என்ன பண்ண முடியும் சொல்லு?.

ஏன் மாமா ஏற்கனவே உங்கள் தங்கச்சி மவள் அங்க ஓடிப் போய் என் குடும்ப மானத்தை வாங்கிட்டாள்.இப்ப அந்த குடும்பத்து பொண்ணையே என் தங்கச்சிக்கு மருமகளா கொண்டு வரப்போறேன்னு சொல்றீங்களே இதெல்லாம் நல்லாவா இருக்கு?

ஏற்கனவே நம்ம சொந்த பந்தம் எல்லாம் அந்த ஓடுகாளி நாயால் துப்புறாங்க, இப்ப இன்னும் துப்புவதற்கு நீங்க வழி பண்ணிட்டு வந்திருக்கீங்களே உங்ககிட்ட கொஞ்சம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லைனா கத்திவிட்டு போனை வைத்தார்.

சோழனூர்

ஏண்டி உன்ணன் என்னடி நினைச்சிட்டு இருக்கான்?என்னமோ வாய்க்கு வந்த போல இப்படி கத்துறான்?

கட்டிக்கிட்டு வாழ போறது அவன். அவனுக்கு இல்லாத பிரச்சனை இவனுக்கு என்ன வந்தது? தாய்மாமன் முறைக்கு கலந்துக்குற போல இருந்தா வர சொல்லு.அத விட்டுட்டு இங்க வந்து ஜாதி மதம் மயிறுனு பேசிட்டு இருந்தான் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.

என் தங்கச்சி கிட்ட பேசணும்னாலும் ஃபோனையும் கொடுக்க மாட்டேங்குறான்.நான் கேட்டதுக்கு வெளியில் போயிருக்குனு கதை சொல்லிக்கிட்டிருக்கான்.

என்னமோ எனக்கு மனசு சரியில்லை.நாளைக்கு காலைல திருச்சிக்கு போயிட்டு வரலாம்.நேர்ல போய் எஸ்தரை பார்த்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.

ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்துருக்கேன் அதனால் பிரச்சினை இல்லை என்க...அந்தோணி திருச்சி என்றதுமே ராணிக்கு பக்கென்றது.

என்னங்க இப்ப எதுக்கு அவசரப்பட்டு திருச்சிக்கு போகணும்..என்னடி எப்போ பார்த்தாலும் திருச்சி பேரை கேட்டாலே அலறுர?.அதும் ஊர் தான்...அங்கு என்ன பேய் பிசாசா இருக்கென்று அந்தோணி முறைக்க,அப்படி ஒன்னும் இல்லைங்க. அண்ணன் வேலைக்கு போயிடுமே,நம்ம அங்க போய் என்ன பண்றது அதான்.

உன் அண்ணன் தானே வேலைக்கு போறான்.எஸ்தர் அங்க தானே இருக்கு அவனை பாக்க ஒன்னும் நான் ஒத்த கால்ல நிக்கலை.என் தங்கச்சிய பாக்கணும்.

ஏதோ சரியில்லாத போலிருக்கு. நான் வெளில போயிட்டு வரேன் நாளைக்கு நாம திருச்சிக்கு போகலாம்.பாபு எப்படியும் அங்க பரத் கூட கல்யாணம் வேலை பார்த்துட்டு இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வருவான்.

அதற்குள் நாம போய்ட்டு வந்துடலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்..

ராணியோ அந்தோணி சொல்லிய விஷயத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது கால் வரும் ரிங் டோன் சத்தம் கேட்க டேபிள் மேலிருந்த போனை எடுத்து பார்க்கவும் அண்ணன்னு வந்தது.

அட்டென்ட் பண்ணவும் என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீயும் மாமாவும்?ஏற்கனவே ஒரு சனியன் தான் மானத்தை வாங்கிட்டாள்.

இப்போது அந்த குடும்பத்தில் சம்பந்தம் பண்ணிட்டு வந்துருக்கீங்களே என்னை விட உனக்கு அவங்க முக்கியமாக போயிடுச்சா என்று மகி கத்த, அண்ணா அது வந்து என்க..

என்ன மானங்கெட்ட குடும்பமோ தெரியலை.முதல்ல பையன்காரன் நம்ம பொண்ணை வளைச்சு போட்டான்.இப்ப அந்த குடும்பத்தில் ஒருத்தி நம்ப புள்ளைய வளைச்சி போட்டுக்கிட்டா...

அந்த பரம்பரைக்கு இதே பொழப்பா இருக்கும் போல என்கவும் அண்ணா என்று வேகமாக கத்த,என்ன ராணி ரொம்ப குரலை உசத்துற அண்ணன் என்கிற மரியாதை இல்லையா?

வந்தேன் அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் என்கவும்,இங்க பாருணா,நம்ம பையனுக்கு பொண்ணு கொடுக்கிறோமென்று அவர்கள் இன்னும் ஒத்த காலில் நிக்கல.
நம்ப பாபுக்கு தான் அந்த பொண்ணை புடிச்சிருக்கு என்கவும்,எதேஏஏஏஏ பாபுக்கு புடிச்சிருக்கா?என்ன உளறிட்டு இருக்க மா?

பாபு தான் வெளிநாட்டில் இருக்கிறானே,அவனுக்கு எப்படி அந்த வீட்ல இருக்கும் பொண்ணு தெரியும்?அப்போ உன் மகனும் இவ ஓடிப்போனதுக்கு கூட்டா என்கவும் நிறுத்துணா என்று கத்திய ராணியோ,முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு பேசு.
எப்ப பாத்தாலும் உன் இஷ்டத்துக்கு பேசாதே என்று முதல் முறையாக தனது அண்ணனை எதிர்த்து பேசினார்.

தங்கையின் குரல் ஓங்கி ஒலிப்பதை கேட்ட மகியோ அமைதியானவர் சரி சொல்லு என்க....நாங்க அங்கு பங்ஷனுக்கு போகும் போது பாபு வனிச்சூரில் தான் இருந்தான் ணா.

என்ன மா சொல்றனு மகி அதிர, ஆம் ணா என்றவர்,பின்னர் நடந்ததை எல்லாம் சொல்ல,ஓஓஓ அப்படியா...

ம்ம் நம்ம எல்லாம் வேண்டாமென்று சொல்லிட்டு உன் மருமகள் ரொம்ப சந்தோஷமா இருப்பாளே,என்னமோ காணாத கடந்த வாழ்க்கை கிடைச்ச போல தலையில தூக்கி வச்சிட்டு நிக்கிறாள்.

கண்ணை கசக்கிட்டு இங்க வரட்டும் எந்த செருப்பால் அடிப்பேன்னு எனக்கே தெரியாதென வாய்க்கு வந்தபடியெல்லாம் மகி பேசிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் ராணியால் தனது அண்ணனின் வார்த்தையை கேட்க முடியாமல் கோபப்பட்டு போனை கட் பண்ணி,சுவிட்ச் ஆப் பண்ணினார்.

இது நாக்கா இல்லை தேள் கொடுக்கா என்று தெரியவில்லை.வயசு இத்தனை ஆகியும் இன்னும் அதோட குணம் போகவில்லை...என்றைக்கு தான் திருந்துமோ ஆண்டவரேனு தனது அண்ணனை மனதிற்குள் திட்டிய ராணியோ,நான்கு நாட்களாக வீடு பூட்டு போட்டிருந்ததால் முதல்ல வீட்டை சுத்தப்படுத்துவோமென்று அந்த வேலையில் இறங்கினார்..

ராணி மதிய சாப்பாடு ஹோட்டலில் வாங்கிட்டு வந்துட்டேன்.அவ்வளவு தூரம் வண்டியில் வந்தது உனக்கும் அசதியா இருக்கும் சாப்பிட்டு படு நைட்டுக்கு பாத்துக்கலாமென்று சொல்லிவிட்டு கையிலிருந்த கவரை அங்கிருந்த டைனிங் டேபிளின் மேல் வைத்துவிட்டு ரூமிற்குள் சென்றார்.

வீட்டை சுத்தம் பண்ணியது கசகசனு இருக்கவும் சரி முதல்ல குளிச்சிட்டு வந்துரலாமென்ற ராணியோ ஊருக்கு எடுத்துட்டு போன துணியெல்லாம் சர்பில் ஊற வைத்துவிட்டு கிச்சனில் இருந்த பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை கழுவி வைக்க துணியும் ஊறிவிட்டது.

அதை எல்லாம் துவைத்து விட்டு குளித்து முடித்து வெளியே வந்து வேற ட்ரெஸ்ஸை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவர் அங்கே டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் சாப்பிடலாமா என்க,ம்ம் எடுத்து வையென்றார்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு படுத்து விட்டனர்..
நேரமும் யாருக்கும் காத்திடாமல் கடந்து ஓடியது...

விடியலோ பலவித திருப்பங்களை உள்ளடக்கிக்கொண்டு ஆரம்பமானது.

காலையிலையே எழுந்து குளித்து தயாராகிய அந்தோணி,இன்னும் என்னதான் பண்ற டி என்று மனைவிக்கு குரல் கொடுக்க,ஒரு வித பதட்டத்தோடு தயாராகிக் கொண்டிருந்த ராணியால் திருச்சிக்குப் போகும் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை...

ஆண்டவரே அங்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே.நீ தான் கூட இருந்து பாத்துக்கணுமென்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவர் மீண்டும் ஒருமுறை வீட்டில் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வெளியே வர அந்தோணியும் காரை ஸ்டார்ட் பண்ணிட்டு ரெடியாக இருந்தார். ..

பின்னர் இருவரும் திருச்சியை நோக்கி சென்றனர்.

பைபாஸ் போட்டது எவ்வளவு வசதியா இருக்கு பாத்தியா என்க,ஆமாங்க என்றார்.

உன்ணனுக்கு நாம வரோம்னு ஏதாச்சும் சொன்னியானு அந்தோணி கேட்க,அய்யய்யோ நான் எதுவுமே சொல்லலைங்க என்று ராணி பதட்டமாக சொல்லவும்,எதுக்கு தான் இப்படி அலறுர?.

உன் அண்ணன் என்ன கத்தி எடுத்து வெட்டிடவா போறான்.அதான் நான் இருக்கிறேனே டி என்க..அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேனு சமாளித்தார்.

இரண்டு மணி நேர பயணத்தில் அந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தனர். காரை நிறுத்திவிட்டு மகி தங்கியிருக்கும் பிளாட்டின் பெல்லை அழுத்த சிறிது நிமிடங்கள் வரை கதவு திறக்கவில்லை.

மணி இன்னும் ஒன்பது கூட ஆகலையே வேலைக்கு போயிருக்க வாய்ப்பில்லை என்று மனைவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது பக்கத்து பிளாட்டில் இருப்பவனோ இவர்களை பார்த்து விட்டு மகி சார் இங்கு இல்லைங்களே என்றார்.

அப்படியா என்க...ஆமாங்க அந்த வீட்டில் இருப்பாங்க என்றார்.அந்த வீட்டிலா என்று அந்தோணி யோசிக்க,நீங்க மகி சாரோட மச்சான் தானே உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லை போல...

சார் நம்ம பாலக்கரை மார்கெட்டுக்கு பின்னாடி இருக்குற வீட்ல தான் குடியிருக்கிறார்.இங்கு அவருக்கு தெரிந்த ஒரு லேடியும் அவங்க பொண்ணும் வந்து தங்குவாங்க.அப்போது அவர்களை பார்க்க வருவார்.மத்த நேரத்துல சார் இங்க வர மாட்டாரென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

வண்டியை எடுத்துக்கொண்டு நேராக பஸ் ஸ்டாண்ட் அருகிலிருக்கும் தனது நண்பன் கடைக்கு வந்த செழியனோ பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர வாடா புது மாப்பிள்ளை எப்படி இருக்கிற?

தங்கச்சி நல்லாருக்கா?

என்ன இந்த பக்கம் காத்தடிக்குதுனு நண்பன் கேட்க,நீதான் என்னை பாக்காம ஏங்கி போய் கிடக்கிறன்னு செய்தி வந்துச்சுடா.அதான் என் தரிசனம் உனக்கு கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டே செழியன் சொல்ல,எதேஏஏ...எந்த நாதாரி பயல் டா உனக்கு இப்படி எல்லாம் அள்ளிப் போட்டது ....

கருமம் புடிச்ச மொகறையை பார்க்காமல் நான் பட்டினி வேற கிடக்கிறேனா த்தூஊஊ என்றவன்
மச்சி டீ சொல்லட்டுமா என்று வசந்த் கேட்கவும் வேணாம் டா
உன் தங்கச்சியை கடைக்கு கூட்டிட்டு வந்தேன்.நம்ம சாமி கடையில் இருக்கிறாள் என்கவும் சரிடா சரிடா...

அதுக்கப்புறம் ஒன்னும் அவங்க அப்பா வீட்டிலிருந்து பிரச்சனை பண்ணலையே என்க...கோவமாக தாண்டா போயிருக்காங்க கொஞ்ச நாள் போனா சரியாகிடும் டா என்றான்.

அப்புறம் மச்சி வாழ்க்கை எப்படி போகுது?என் தங்கச்சி உன்ன வெளக்கமாத்தால அடிச்சி,கண்கலங்காம பாத்துக்குதா என்க,அட கெரகம் புடிச்ச பண்ணாடை...

எவ்வளவு பெரிய ஆசை பாரேனென்று முறைத்தவன்,ஏன்டா நான் கல்யாணம் பண்ணி பத்து வருஷமா டா ஆச்சி?இதோ பத்து நாள் தான் டா ஆகுது. அதுக்குள்ள இப்படி கேட்டா என்னடா அர்த்தமென்று செழியன் திட்ட,டேய் இது ஊர் உலகத்தில் வழக்கமாக கேட்கிற கேள்விதான் டா..நீ உடனே பொங்காதனு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க நேரமும் கடந்தது.

சரி டி நான் போயிட்டு இன்னொரு நாளைக்கு வருகிறேனென்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கடையை நோக்கி சென்றான்.

ஷமீராவோ அங்கிருந்த சேல்ஸ் கேர்ளிடம் பிளவுஸ் மெட்டீரியல் வேண்டும் என்க,பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கென்று சொல்லவும் தேங்க்யூ என்றவாறு படியில் ஏறி மேல வந்தவள் எந்த பக்கம் மெட்டீரியல்ஸ் இருக்கென்று பார்த்துவிட்டு அங்கு போனாள்...

அங்கிருந்த பெண்ணும் வாங்க மேடம் என்ன வேண்டும் என்று கேட்க தனது பேகிலிருந்த புடவைகளை எடுத்து வெளியில் வைத்தவள் இதற்கெல்லாம் மேட்சிங் பிளவுஸ் மெட்டீரியல் வேண்டும் என்றாள்.

சரிங்க மேடம் என்றவர் டிசைனர் பிளவுஸ் வேண்டுமா இல்லை புல்வாயில் வேண்டுமா என்று அங்கிருந்தவைகளை காட்டி கேட்க, புடவைகளுக்கு ஏற்ற போல மெட்டீரியல் கொடுங்கள் என்று ஷமீராவும் சொல்ல சரியென அளவை கேட்டு கட் பண்ணிட்டு வேற எதாவது பாக்குறீங்களா என்க...ஷமீராவும் ஆமாம் என்றாள்.

என்ன வேண்டுமென்று அந்த பெண்ணிடம் சொல்ல அதையும் எடுத்து கொடுத்தாள்...

எல்லாத்தையும் பில்லுக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு போனை எடுத்து கணவனுக்கு கால் பண்ண போக,செழியனே அந்த நேரம் அவளுக்கு போன் பண்ணினான்.

அட்டென்ட் பண்ணியவள் ம்ம் என்க, என்னடி முடிஞ்சிட்டா என்கவும் பில்லுக்கு அனுப்பிவிட்டேன் நீங்கள் எங்கே இருக்கீங்க?,கடை வாசலில் தான் நிற்கிறேன் டி என்றான்.

சரி வரேன் என்று கட் பண்ணியவள் கிரவுண்ட் ப்ளோருக்கு வர,உள்ளே வந்தவனும் பில் போட்டு அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு பேகை வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர்.
வேற ஏதாவது வாங்கணுமாடி என்க இல்ல வீட்டுக்கு கிளம்பலாமென்றாள்.

சூடா ஏதாவது சாப்பிடறியா என்று செழியன் கேட்க,வேண்டாமென்று சொல்பவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் அப்படியா சரி நீ சாப்பிடாதே அங்கு ஒரு கடையில் இனிப்பு போண்டா பஜ்ஜி எல்லாம் நல்லா இருக்கும் நா மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அதேபோல் அந்த கடையின் ஓரமாக வண்டியை நிறுத்தியவன் இதோ வரேனென்று சொல்லிவிட்டு உள்ளே போய் அவனுக்கு மட்டும் ஒரு டீ வாங்கி குடித்தான்.

பின்னர் சூடாக இருந்த போண்டா பஜ்ஜிகளை பார்சல் பண்ண சொல்லி வாங்கிட்டு வந்தவன் கவரை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணவும் ஷமீராவும் ஏறி உட்காந்தாள்.

பேசிக் கொண்டே இருவரும் ஊரை நோக்கி சென்றனர் சூரியன் மறையும் நேரமானதால் அங்கங்கே தெரு விளக்கு எரிய,யாரும் இல்லாத மலைப்பாதையில் கணவனோடு பயணம் செய்வது ஷமீராவின் மனதிற்கு இன்பமாக இருந்தது.

அதேபோல் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்த செழியனோ தனது சந்தோஷத்தை விசில் அடித்தவாறு வெளிப்படுத்திக் கொண்டு வந்தான்.

சிறிது தூரம் சென்றிருக்க சிறு சிறு தூரல்கள் விழுந்தது.வானத்தை பார்த்தவளோ அச்சச்சோ மழை வந்துடும் போல என்கவும் ஆமாடி அதுக்குள்ள வீட்டுக்கு போயிடலாம் என்றான்...

மேலும் சிறிது தூரம் சென்றிருக்க தூரலும் கொஞ்சம் அதிகமாகவும் ஏற்கனவே மலை கிராமம் என்பதால் குளிர் ஒரு பக்கம் இருக்க இப்பொழுது தூரலும் சேர்ந்து கொண்டதால் கணவனோடு இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்...

மனைவியின் நிலையை மனதிற்குள் ரசித்தவன் என்னடி குளிருதோ என்க, இல்லையே நார்மலாக தான் இருக்கென்றாள்...ம்ம் எனக்கோ சொர்க்கத்தில் மிதக்குற போல இருக்கு டி என்று சிரித்துக் கொண்டே சொல்ல,ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க.

எதுக்கு பேய் போல இந்த நேரத்துல சிரிக்கிறீர்கள் என்று ஷமீரா கடுப்பாக கேட்க ஒன்னும் இல்லடி ஒரு விஷயத்தை நினைச்சு சிரிச்சேன். மனுஷன் சிரிக்க கூடாதாடி என்றான். ..

"சிரிக்கலாமே"

என்கிட்ட சொன்னால் நானும் சிரிப்பேன் என்கவும் இவ்வளவுதான் விஷயமா அது ஒன்னும் இல்ல மனுஷன் வண்டி ஓட்டிட்டு இருக்கேன் டி.மொத்தமா வந்து மேல சாயிறியே.... இந்த கன்னிப் பையன் மனசு எப்படி பரிதவிக்கும்னு கொஞ்சம் யோசிச்சியாடி?..நீங்க இருக்கீங்களே என்று கணவனின் முதுகிலேயே அடித்தாள்...

இதுக்கு தாண்டி நான் எதுவும் சொல்லாம இருந்தேனென்றான்.

ஏழு ஊர் வாய் உங்களுக்கென்க, உன்கிட்ட தானடி இதெல்லாம் காட்ட முடியும் வேறு யாருகிட்ட காட்ட முடியும் சொல்லு டி என்றான்.

ஓஓஓஓ அய்யாவுக்கு இந்த ஆசை வேற இருக்கோஓஓ...போய் காட்ட வேண்டியதுதானே?யாரு வேண்டாம் என்றாங்களென்று கடுப்பாக சொல்ல, உன்னை கரெக்ட் பண்றதுக்குள்ளவே பாதி ஜீவன் போனது எனக்கு தானடி தெரியும் என்றான்.

தூரலும் கொஞ்சம் அதிகமாக செல்லம் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நிமிஷத்துல மழை அதிகமா வந்துரும் போல டி.வீட்டுக்கு போறதுக்குள்ள சுத்தமா நனைச்சிருவோம்.இங்க நம்ம பரசு சித்தப்பாவோட குடில் இருக்குடி.அங்க வேணா நின்னுட்டு மழை விட்ட பிறகு போகலாமா என்க...

நாம் நனைந்தாலும் பரவாயில்லை புது துணி எல்லாம் நனைந்தால் என்ன ஆவதென்று யோசித்தவள் சரி என்றாள்...

ம்ம் என்றவன் வண்டியை வலது பக்கமாக செல்லும் பாதையில் திருப்பி வேகமாக சென்றவன் அங்கே இருந்த குடில் முன்னால் போய் வண்டியை நிறுத்த ஷமீராவும் வேகமாக இறங்கி போய் கதவின் ஓரம் நின்று கொண்டாள்.

செழியனும் அங்கிருந்த மரத்தின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு தலைமுடியை தட்டிக் கொண்டே வந்தவன் அங்கிருந்த எரவாணத்தில் கையை விட்டு சாவி எடுத்து கதவை திறக்க ஷமீராவோ அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

மனைவியின் பார்வையை அந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்டவன்,இங்கு சாவி இருக்கிறது சிலருக்கு தெரியும் டி.நைட்ல கம்பு கேழ்வரகு பட்டரை போட்டிருந்தால் இங்கு தான் வந்து தங்குவோம்.

பின்னாடி ஒரு வாய்க்கால் இருக்கு.அது வழியா போனால் நம்ப வயலுக்கு போயிடலாம் டி என்றபடியே உள்ளே போனவன் போன் டார்ச்சை ஆன் பண்ணி லாந்தர் விளக்கு எங்கேயென்று தேடி பற்ற வைக்க அந்த குடிலுக்குள் வெளிச்சம் வந்தது.

லாந்தர் விளக்கை கையில் எடுத்துக் கொண்டு திரும்பியவனோ,விளக்கின் வெளிச்சத்தில் ஓவிய பாவை போல் நிற்பவளை பார்த்து அசந்தவனோ ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா என்று காதல் பொங்க பாட கணவனின் குரலை கேட்டு கண்கள் விரிய அதிர்ந்து போய் ஷமீரா பார்க்க,ஹாஹாஹா என்று சிரித்துக் கொண்டே அவளின் அருகில் வந்தான்....

ஒரு அடி இடைவெளி விட்டு நின்றவன் விளக்கை அங்கிருந்த இரும்பு கொக்கியில் மாட்டிவிட்டு புருவங்களை தூக்கி என்ன என்று கேட்க அதிர்ச்சியில் இருந்தவளோ அப்படியே தான் இருந்தாள்...

ரைட்டு என் பொண்டாட்டி பிரீஸாகிட்டாளென்று சிரித்தவன் மனைவியின் கன்னத்தை தொட போகும் போது அவனது போனுக்கு கால் வரும் சத்தம் கேட்டு ஷமீராவும் அதிர்விலிருந்து நிகழ்விற்கு வந்தாள்.

பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து யார் என்று பார்க்க அம்மா என்று வரவும் அட்டென்ட் பண்ணியவன் சொல்லுமா என்றான்...ஐயா மழை வேற வெளில அதிகமா பேஞ்சிட்டு இருக்கு,எங்க இருக்கீங்க நீங்க?என்க...

வந்துட்டு இருந்தோம் மா மழை அதிகமாகுற போல இருக்க குடிலுக்கு வந்துட்டேன் என்கவும்,சரிய்யா மழை விட்ட பிறகு அங்கிருந்து கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

ஷமீராவோ இன்னும் இந்த மனுஷன் என்னென்ன தான் நம்ம கிட்ட இருந்து மறைத்து வைத்திருக்கிறானோ என குறுகுறு என்று கணவனை பார்க்க, போனை அங்கிருந்த மர அலமாரியில் வைத்தவன் ஓய் பொண்டாட்டி...

என்னடி,என்னமோ புதுசா பாக்குற போல பாக்குற என்று சொல்லிக் கொண்டு குனிந்து இரண்டு கைகளிலும் மனைவியை தூக்கியவன் வெளியே போக,அய்யய்யோ எங்க போறீங்க?.

வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது என்று ஷமீரா கத்த, அதனால் தான் டி என்றவன் மனைவியோடு வெளியே போய் நிற்க அடித்து பெய்த மழையில் இருவரும் தொப்பலாக நனைந்தனர்...

வானிலிருந்து விழும் தண்ணீர்களோ தனது கையில் இருப்பவளின் மேலே விழுந்து சிதறுவதை பார்த்த செழியனுக்கோ ஹார்மோன்களின் தூண்டலில் அங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது....

ஷமீராவோ கண்களை மூடி அந்த பொழுதை ரசித்துக் கொண்டிருக்க,ஈர உடைகள் உடலோடு ஒட்டிக் கொண்டதால் மனைவியின் அங்க வளைவுகளோ அப்பட்டமாக காட்சியளிப்பதை கண்ட செழியனோ ரசனை பொங்க பார்த்துக் கொண்டிருந்தான்...


வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top