Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
இதுபோல பிரச்சனை எல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆரம்பத்திலேயே நான் உங்ககிட்ட இருந்து விலகிப் போனேன்.
என்னை பற்றி முழுவதும் தெரிஞ்சு தானே லவ் பண்ணுனீங்க,தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுனீங்க?இப்ப வந்து இந்த ஜாதியையும் மதமும் எங்க அப்பா போல நான் பாக்குறேன்னு சொன்னாக்க என்ன அர்த்தம்?
அதெல்லாம் பார்க்குற போல இருந்தால் உங்ககிட்ட நான் பேசிருப்பனா?இல்லை உங்களையே உசுறா நினைத்து வாழ்ந்துருப்பேனா,உங்களை நம்பி இப்படி எல்லாவற்றையும் உதறி தள்ளிட்டு நீங்கள் தான் வேண்டும்னு வந்துருப்பேனா சொல்லுங்க என்கும் போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
மனைவியின் அழுகையை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியல...சிறிது நொடிகள் சென்று சாரி டி மன்னிச்சிடு...உன் மனசை நான் கஷ்டப்படுத்திட்டேன்..
"தப்பு தான்"
இனிமேல் அப்படி பேச மாட்டேன் என்க,இனிமே நீங்க பேசுறீங்களோ, பேசலையோ அது அடுத்த பிரச்சினை. இப்பொழுது நீங்கள் பேசிட்டிங்களேங்க.
அப்போ உங்களுக்கு அந்த எண்ணம் இருக்குது தானே...ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணியதும்,நான் வேற மதமா இருக்குறதம் பிரச்சினையாக இருந்திருந்தால் அப்பையே என்னை தலை மூழ்கிட்டு போயிருக்க வேண்டியது தானே என்று கதறி அழுதாள்....
"ஏய்..."
உன்னை விட்டுட்டு எப்படி டி என்னால் இருக்க முடியும்?
கல்யாணமென்று ஒன்னு என் வாழ்வில் நடந்தால் அது உன் கூட தானென்பதை உன்னை பார்த்த அன்னைக்கே சொன்னேன்.
அதையே மூணு வருஷம் கழிச்சு செயலில் காட்டினேன்.உனக்கும் அப்படித்தான்.அதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமென்று அவசியமில்லை. ..
"அப்படி பேசினது தப்புதான்"
இனிமே இப்படி நான் பேசமாட்டேன் நம்பு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ அழுகையோடு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..
அடியேய் இப்படி பேசாம இருந்து கொள்ளாதடி முடியல என்க...கணவனை பார்த்தவள் ஏன் ஒரு வருஷம் நல்லா குத்துக்கல்லு போல பேசாமல் தான இருந்தீங்க...அப்ப என்ன ஆச்சு? மூணு வேளை தின்னுட்டு தெம்பா தூங்கினீங்க தானே .
நான் நல்லா இருந்தனா இல்லையான்னு உன் மனசுக்கும் என் மனசுக்கும் தெரியும் டி என்றான்...
ம்கும் என விரக்தியாக சிரித்த ஷமிரா...நம்மள மீறி இவள் எங்கே போயிடப் போறாளென்ற திமிர்தனம் தானே உங்களுக்கு என்கவும்,ஆமாடி எனக்கு திமிர்த்தனம் தான்.
அதுவும் நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்.அதனால தான் நானும் அமைதியா இருந்தேன் போதுமா டி?
இப்ப என்ன பண்ண சொல்ற?அதான் தெரியாம பேசிட்டுன்னு சொல்றேனே உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா சொல்லு டி?கால்ல விழட்டுமானு செழியன் கத்த...
எந்திரிச்சு நின்றவள் புடவையின் முன்பக்க கொசுவத்தை தூக்கி இரண்டு கால்களையும் காட்ட, அடிப்பாவி....
"சண்டாள சிறுக்கி"
புருஷன்காரனை இப்படி காலில் விழ சொல்றியேடி நீ எல்லாம் குடும்ப பொண்ணா டி?.
அதைக் கேட்டு வெகுண்டவளோ ஓங்கி கணவனின் தலையிலே நங்கு நங்கென்று கொட்டியவள்,ஏன் என்ன பாத்தா குடும்பக்காரி போல தெரியலையாடா என்று செழியனின் தலையை முடியை கொத்தாக பிடித்து குலுக்கினாள்...
ஐயோ அம்மா அப்பா சீக்கிரம் வாங்க என்னை காப்பாத்துங்களென்று செழியன் கத்த...
எட்டி கணவனின் வாயை பொத்தவும்,மனைவியை பார்த்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தனது மடியில் உட்கார வைத்து இறுக்கமாக அணைத்து கொண்டான்.
நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல இப்படியே இருப்பதாக உத்தேசமா?விட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் என்கவும்,பரவால்ல நீ இப்படியே இரு நல்லா தான் இருக்குடி என்றான்..
உங்களுக்கு எதுதான் நல்லா இருக்காதென்ற ஷமீராவோ தனது பல்லை கடிக்க,எனக்கு எல்லாமே நல்லா இருக்கும் டி என்று செழியன் சிரிக்க கணவனின் சிரிப்பை வழக்கம் போல் ரசித்தவள்,இருந்தும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.
நல்லா வார்னிஷ் அடிச்ச தேக்கு போல இருக்கடி என்று மனைவியுடைய பிளவுஸின் இடைவெளியில் தெரியும் முதுகில் தனது முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டு செழியன் சொல்ல, கணவனின் தாடியும் மீசையும் குத்துவதில் நிலை குலைந்து போனாள்.
மனைவியின் நெளியலில் அவளின் தேகங்கள் அவனோடு உரச இன்னும் தன்னவளை தன்னோடு இறுக்கினான்.வலியில் லேசாக கண்ணை மூடி திறந்தவள் தொரை எங்கேயே கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்களே?.
அடியேய்....இப்படி துரைனு சொல்லாத டி.யாரு காதிலாவது விழுந்தா தப்பா நினைக்க போறாங்க என்கவும் அப்பொழுதுதான் தனது மாமனாரின் பெயர் செல்லதுரை என்பது அவளுக்கு ஞாபகம் வந்து ஐயோ என்று தனது வாயை பொத்திக் கொண்டாள்...
மனைவியின் செயல்களை பார்த்தவன் ஐயோ செல்லம் இது உன்னோட வேலை இல்லடி என்னோட வேலை என்று அவள் வாயை மூடியிருந்த கையை எடுத்துவிட்டு தனது வலிமையான உதடுகளால் மனைவியின் மென்மையான இதழ்களை மூடியவன் பின்வாக்கிலேயே மனைவியோடு பெட்டில் சரிந்தான்...
நேரமும் கடந்து செல்ல இருவரும் மீண்டும் குளித்து தயாராகி,பிளவுஸ் வாங்க வேண்டிய புடவைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.
பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர்கள் வண்டியில் ஏறி டவுனை நோக்கி சென்றனர்...
ஷமீராவோ அந்த இயற்கை அழகை மெய் மறந்து ரசித்துக் கொண்டே வர, நம்ம ஊரு எப்படி டி இருக்கு என்கவும், ரொம்ப நல்லா இருக்குங்க...
இங்கு இருக்கிறவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க இல்லையா, இயற்கையான காற்று,பொல்யூஷன் இல்லாத ஊர்,எந்த நோய் நொடியும் அவ்வளவு சீக்கிரம் வராது போலயென்று ஷமீரா சொல்ல,ஆமாடி நம்ம ஊர்ல எந்த டிஸீஸும் வராது...
கோவிட் கூட பக்கத்து ஊர்ல வந்துச்சே தவிர நம்ம ஊருக்கு பரவலைனா பாத்துக்க,எதிர்ப்பு சக்தி நமக்கு எப்பையுமே அதிகம் டி...
உங்களை போல கண்டதெல்லாம் சாப்பிடுவதற்கு வழி கிடையாது என்று கண்ணாடியை பார்த்துக் கொண்டே சொல்ல,கணவன் சொன்னதை கேட்ட ஷமீராவோ தனது வலது கை முட்டியால் ஓங்கி கணவனின் முதுகில் ஒரு குத்து குத்தியவள் நாங்க தான் 24 மணி நேரம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் இந்த கொய்யா பார்த்தாரென்றாள்..
ஆமா இதை நேரில் வேற வந்து பார்க்கணுமா டி...அதான் தெரியுதே. அதுவும் காலேஜ் போற நீங்கதான் கடையில விற்கும் கண்ட கண்டதெல்லாம் வாங்கி சாப்பிடுறீங்க.
அதெல்லாம் கெடுதலென்றால் எங்க தெரிய போகுது உங்களுக்கு...சத்தான பொருளை வீட்டுல செஞ்சு சாப்பிடுவதற்கும்,நோய் உள்ள உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு வித்தியாசம் இருக்கில்லையா டி என்றான்...
கணவன் சொல்வது நியாயமான விஷயம் என்பதை புரிந்தவள் அது என்னமோ உண்மைதான் என்றாள்.
ம்ம் என்னைக்குமே உன் புருஷன் உண்மையை தான்டி பேசுவேன் அதுல என்ன சந்தேகமென்று தனது மீசையை முறுக்கி விட,ஆமா ஐயா வந்து அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டு பையன்னு நியூஸ்ல கூட சொன்னாங்களே என்கவும், இதிலிருந்து நல்லா தெரிஞ்சுக்கடி உன் புருஷன் எவ்ளோ பாப்புலரானவன் என்றான்.
இங்க பாரு செல்லம் உனக்கு சில விஷயத்தை சொல்லணும் டி.நம்ப ரூமுக்குள்ள என்ன டிரஸ் வேணாலும் பண்ணிக்க இல்ல பண்ணாம போ என்க...ஏதே என்று கணவனின் தலையில் கொட்டினாள்...
ஏய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி அதுக்கென்று நீ என்ன அப்படியா நிக்க போற சொல்லு என்று சத்தமாக சிரிக்க வெக்கமாக இல்லையா இப்படியெல்லாம் பேச என்று,கணவனின் முதுகில் மீண்டும் குத்த...
அடியேய் வண்டி ஓட்டுட்டு இருக்கேன் நீ பாட்டிலே அடிக்கிற குத்திக்கிட்டு இருக்க இதுக்கெல்லாம் கணக்கு வச்சுக்குறேன் அப்பறம் வட்டியும் முதலும் சம்பாதித்திட்டு தான் டி மறுவேளை பார்ப்பேன் என்கவும்,போயா போயா என்றாள்.
ரொம்ப தாண்டி துளிர் விட்டுடுச்சு உனக்கு என்கவும்,அப்படியா இருக்கட்டும் என்றவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் ஓஓஓஓஓ...
ஆனா அதுக்கான பலனை நீ அனுபவிச்சு தான் ஆகணும் அதுக்கு ரெடியா இருந்துக்க என்று சத்தமாக சிரித்தான்.
ஓய் பொண்டாட்டி உன்கிட்ட ஒன்னு கேட்கணும் டி என்க..ம்ம், பக்கத்துல தான் இருக்கேன்.நான் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறேன், கேளுங்கள்.
அதுசரி...உன்கிட்ட ரொம்ப பிடித்தது இந்த வாய் தான் டி.எந்த பால் போட்டாலும் அசரமா திருப்பி அடிப்படி.
அது வந்து உங்க அம்மாவை நீ ரொம்ப மிஸ் பண்ற தானே என்று கண்ணாடி வழியாக தெரியும் தனது மனைவியை பார்த்துக் கொண்டு செழியன் கேட்க,இப்படி ஒரு கேள்வி இவ்வளவு சீக்கிரம் வருமென்பதை எதிர்பார்க்கவில்லை..
பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் உன்ன தாண்டி கேட்கிறேன் ஆமா இல்லைன்னு ஏதாவது ஒன்னு சொல்லு என்க...அது உங்களுக்கே தெரியும்.
பதில் தெரிஞ்சிக்கிட்டு என்னை கேட்டா என்ன அர்த்தம்.தெரியாத கேள்விக்கு தானே பதில் சொல்ல முடியும் என்க, நல்லா பேசுறடி நீ...
ஏன் செல்லம் ஒன்னு பண்ணட்டுமா,நீ லா படிக்கிறியா டி?
மாமா உன்ன படிக்க வைக்கிறேன் என்கவும் ஒரு நேரத்துல அப்படி ஒரு ஆசை இருந்துச்சு.இப்ப எனக்கு லா படிக்கணும் என்கிற எண்ணமே இல்லை என்கவும்,ஏண்டி இப்படி சொல்ற?
கனவுகளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க கூடாதுடி.வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன் படுத்திக்கணும் டி என்றான்.
ஹம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நானும் டிகிரி முடிச்சிட்டு லா படிக்க போறேன்னு சொன்னேன்.அப்ப எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க அதுல இருந்து எனக்கு மனசு உடைஞ்சு போயிடுச்சு என்றாள்...
என்னடி சொல்ற?
என் மாமியார் அப்படி என்ன சொன்னாங்க சொல்லு பார்க்கலாம் என்கவும்,மாமியாராயென்று ஷமீரா ஆச்சரியமாக கேட்க,ஆமாம் பின்னே உன்ன பெத்தவங்க எனக்கு மாமியார் இல்லாமல் பின்ன சாமியாராடி?.
இதுபோல பிரச்சனை எல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆரம்பத்திலேயே நான் உங்ககிட்ட இருந்து விலகிப் போனேன்.
என்னை பற்றி முழுவதும் தெரிஞ்சு தானே லவ் பண்ணுனீங்க,தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுனீங்க?இப்ப வந்து இந்த ஜாதியையும் மதமும் எங்க அப்பா போல நான் பாக்குறேன்னு சொன்னாக்க என்ன அர்த்தம்?
அதெல்லாம் பார்க்குற போல இருந்தால் உங்ககிட்ட நான் பேசிருப்பனா?இல்லை உங்களையே உசுறா நினைத்து வாழ்ந்துருப்பேனா,உங்களை நம்பி இப்படி எல்லாவற்றையும் உதறி தள்ளிட்டு நீங்கள் தான் வேண்டும்னு வந்துருப்பேனா சொல்லுங்க என்கும் போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
மனைவியின் அழுகையை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியல...சிறிது நொடிகள் சென்று சாரி டி மன்னிச்சிடு...உன் மனசை நான் கஷ்டப்படுத்திட்டேன்..
"தப்பு தான்"
இனிமேல் அப்படி பேச மாட்டேன் என்க,இனிமே நீங்க பேசுறீங்களோ, பேசலையோ அது அடுத்த பிரச்சினை. இப்பொழுது நீங்கள் பேசிட்டிங்களேங்க.
அப்போ உங்களுக்கு அந்த எண்ணம் இருக்குது தானே...ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணியதும்,நான் வேற மதமா இருக்குறதம் பிரச்சினையாக இருந்திருந்தால் அப்பையே என்னை தலை மூழ்கிட்டு போயிருக்க வேண்டியது தானே என்று கதறி அழுதாள்....
"ஏய்..."
உன்னை விட்டுட்டு எப்படி டி என்னால் இருக்க முடியும்?
கல்யாணமென்று ஒன்னு என் வாழ்வில் நடந்தால் அது உன் கூட தானென்பதை உன்னை பார்த்த அன்னைக்கே சொன்னேன்.
அதையே மூணு வருஷம் கழிச்சு செயலில் காட்டினேன்.உனக்கும் அப்படித்தான்.அதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமென்று அவசியமில்லை. ..
"அப்படி பேசினது தப்புதான்"
இனிமே இப்படி நான் பேசமாட்டேன் நம்பு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ அழுகையோடு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..
அடியேய் இப்படி பேசாம இருந்து கொள்ளாதடி முடியல என்க...கணவனை பார்த்தவள் ஏன் ஒரு வருஷம் நல்லா குத்துக்கல்லு போல பேசாமல் தான இருந்தீங்க...அப்ப என்ன ஆச்சு? மூணு வேளை தின்னுட்டு தெம்பா தூங்கினீங்க தானே .
நான் நல்லா இருந்தனா இல்லையான்னு உன் மனசுக்கும் என் மனசுக்கும் தெரியும் டி என்றான்...
ம்கும் என விரக்தியாக சிரித்த ஷமிரா...நம்மள மீறி இவள் எங்கே போயிடப் போறாளென்ற திமிர்தனம் தானே உங்களுக்கு என்கவும்,ஆமாடி எனக்கு திமிர்த்தனம் தான்.
அதுவும் நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்.அதனால தான் நானும் அமைதியா இருந்தேன் போதுமா டி?
இப்ப என்ன பண்ண சொல்ற?அதான் தெரியாம பேசிட்டுன்னு சொல்றேனே உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா சொல்லு டி?கால்ல விழட்டுமானு செழியன் கத்த...
எந்திரிச்சு நின்றவள் புடவையின் முன்பக்க கொசுவத்தை தூக்கி இரண்டு கால்களையும் காட்ட, அடிப்பாவி....
"சண்டாள சிறுக்கி"
புருஷன்காரனை இப்படி காலில் விழ சொல்றியேடி நீ எல்லாம் குடும்ப பொண்ணா டி?.
அதைக் கேட்டு வெகுண்டவளோ ஓங்கி கணவனின் தலையிலே நங்கு நங்கென்று கொட்டியவள்,ஏன் என்ன பாத்தா குடும்பக்காரி போல தெரியலையாடா என்று செழியனின் தலையை முடியை கொத்தாக பிடித்து குலுக்கினாள்...
ஐயோ அம்மா அப்பா சீக்கிரம் வாங்க என்னை காப்பாத்துங்களென்று செழியன் கத்த...
எட்டி கணவனின் வாயை பொத்தவும்,மனைவியை பார்த்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தனது மடியில் உட்கார வைத்து இறுக்கமாக அணைத்து கொண்டான்.
நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல இப்படியே இருப்பதாக உத்தேசமா?விட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் என்கவும்,பரவால்ல நீ இப்படியே இரு நல்லா தான் இருக்குடி என்றான்..
உங்களுக்கு எதுதான் நல்லா இருக்காதென்ற ஷமீராவோ தனது பல்லை கடிக்க,எனக்கு எல்லாமே நல்லா இருக்கும் டி என்று செழியன் சிரிக்க கணவனின் சிரிப்பை வழக்கம் போல் ரசித்தவள்,இருந்தும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.
நல்லா வார்னிஷ் அடிச்ச தேக்கு போல இருக்கடி என்று மனைவியுடைய பிளவுஸின் இடைவெளியில் தெரியும் முதுகில் தனது முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டு செழியன் சொல்ல, கணவனின் தாடியும் மீசையும் குத்துவதில் நிலை குலைந்து போனாள்.
மனைவியின் நெளியலில் அவளின் தேகங்கள் அவனோடு உரச இன்னும் தன்னவளை தன்னோடு இறுக்கினான்.வலியில் லேசாக கண்ணை மூடி திறந்தவள் தொரை எங்கேயே கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்களே?.
அடியேய்....இப்படி துரைனு சொல்லாத டி.யாரு காதிலாவது விழுந்தா தப்பா நினைக்க போறாங்க என்கவும் அப்பொழுதுதான் தனது மாமனாரின் பெயர் செல்லதுரை என்பது அவளுக்கு ஞாபகம் வந்து ஐயோ என்று தனது வாயை பொத்திக் கொண்டாள்...
மனைவியின் செயல்களை பார்த்தவன் ஐயோ செல்லம் இது உன்னோட வேலை இல்லடி என்னோட வேலை என்று அவள் வாயை மூடியிருந்த கையை எடுத்துவிட்டு தனது வலிமையான உதடுகளால் மனைவியின் மென்மையான இதழ்களை மூடியவன் பின்வாக்கிலேயே மனைவியோடு பெட்டில் சரிந்தான்...
நேரமும் கடந்து செல்ல இருவரும் மீண்டும் குளித்து தயாராகி,பிளவுஸ் வாங்க வேண்டிய புடவைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.
பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர்கள் வண்டியில் ஏறி டவுனை நோக்கி சென்றனர்...
ஷமீராவோ அந்த இயற்கை அழகை மெய் மறந்து ரசித்துக் கொண்டே வர, நம்ம ஊரு எப்படி டி இருக்கு என்கவும், ரொம்ப நல்லா இருக்குங்க...
இங்கு இருக்கிறவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க இல்லையா, இயற்கையான காற்று,பொல்யூஷன் இல்லாத ஊர்,எந்த நோய் நொடியும் அவ்வளவு சீக்கிரம் வராது போலயென்று ஷமீரா சொல்ல,ஆமாடி நம்ம ஊர்ல எந்த டிஸீஸும் வராது...
கோவிட் கூட பக்கத்து ஊர்ல வந்துச்சே தவிர நம்ம ஊருக்கு பரவலைனா பாத்துக்க,எதிர்ப்பு சக்தி நமக்கு எப்பையுமே அதிகம் டி...
உங்களை போல கண்டதெல்லாம் சாப்பிடுவதற்கு வழி கிடையாது என்று கண்ணாடியை பார்த்துக் கொண்டே சொல்ல,கணவன் சொன்னதை கேட்ட ஷமீராவோ தனது வலது கை முட்டியால் ஓங்கி கணவனின் முதுகில் ஒரு குத்து குத்தியவள் நாங்க தான் 24 மணி நேரம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் இந்த கொய்யா பார்த்தாரென்றாள்..
ஆமா இதை நேரில் வேற வந்து பார்க்கணுமா டி...அதான் தெரியுதே. அதுவும் காலேஜ் போற நீங்கதான் கடையில விற்கும் கண்ட கண்டதெல்லாம் வாங்கி சாப்பிடுறீங்க.
அதெல்லாம் கெடுதலென்றால் எங்க தெரிய போகுது உங்களுக்கு...சத்தான பொருளை வீட்டுல செஞ்சு சாப்பிடுவதற்கும்,நோய் உள்ள உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு வித்தியாசம் இருக்கில்லையா டி என்றான்...
கணவன் சொல்வது நியாயமான விஷயம் என்பதை புரிந்தவள் அது என்னமோ உண்மைதான் என்றாள்.
ம்ம் என்னைக்குமே உன் புருஷன் உண்மையை தான்டி பேசுவேன் அதுல என்ன சந்தேகமென்று தனது மீசையை முறுக்கி விட,ஆமா ஐயா வந்து அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டு பையன்னு நியூஸ்ல கூட சொன்னாங்களே என்கவும், இதிலிருந்து நல்லா தெரிஞ்சுக்கடி உன் புருஷன் எவ்ளோ பாப்புலரானவன் என்றான்.
இங்க பாரு செல்லம் உனக்கு சில விஷயத்தை சொல்லணும் டி.நம்ப ரூமுக்குள்ள என்ன டிரஸ் வேணாலும் பண்ணிக்க இல்ல பண்ணாம போ என்க...ஏதே என்று கணவனின் தலையில் கொட்டினாள்...
ஏய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி அதுக்கென்று நீ என்ன அப்படியா நிக்க போற சொல்லு என்று சத்தமாக சிரிக்க வெக்கமாக இல்லையா இப்படியெல்லாம் பேச என்று,கணவனின் முதுகில் மீண்டும் குத்த...
அடியேய் வண்டி ஓட்டுட்டு இருக்கேன் நீ பாட்டிலே அடிக்கிற குத்திக்கிட்டு இருக்க இதுக்கெல்லாம் கணக்கு வச்சுக்குறேன் அப்பறம் வட்டியும் முதலும் சம்பாதித்திட்டு தான் டி மறுவேளை பார்ப்பேன் என்கவும்,போயா போயா என்றாள்.
ரொம்ப தாண்டி துளிர் விட்டுடுச்சு உனக்கு என்கவும்,அப்படியா இருக்கட்டும் என்றவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் ஓஓஓஓஓ...
ஆனா அதுக்கான பலனை நீ அனுபவிச்சு தான் ஆகணும் அதுக்கு ரெடியா இருந்துக்க என்று சத்தமாக சிரித்தான்.
ஓய் பொண்டாட்டி உன்கிட்ட ஒன்னு கேட்கணும் டி என்க..ம்ம், பக்கத்துல தான் இருக்கேன்.நான் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறேன், கேளுங்கள்.
அதுசரி...உன்கிட்ட ரொம்ப பிடித்தது இந்த வாய் தான் டி.எந்த பால் போட்டாலும் அசரமா திருப்பி அடிப்படி.
அது வந்து உங்க அம்மாவை நீ ரொம்ப மிஸ் பண்ற தானே என்று கண்ணாடி வழியாக தெரியும் தனது மனைவியை பார்த்துக் கொண்டு செழியன் கேட்க,இப்படி ஒரு கேள்வி இவ்வளவு சீக்கிரம் வருமென்பதை எதிர்பார்க்கவில்லை..
பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் உன்ன தாண்டி கேட்கிறேன் ஆமா இல்லைன்னு ஏதாவது ஒன்னு சொல்லு என்க...அது உங்களுக்கே தெரியும்.
பதில் தெரிஞ்சிக்கிட்டு என்னை கேட்டா என்ன அர்த்தம்.தெரியாத கேள்விக்கு தானே பதில் சொல்ல முடியும் என்க, நல்லா பேசுறடி நீ...
ஏன் செல்லம் ஒன்னு பண்ணட்டுமா,நீ லா படிக்கிறியா டி?
மாமா உன்ன படிக்க வைக்கிறேன் என்கவும் ஒரு நேரத்துல அப்படி ஒரு ஆசை இருந்துச்சு.இப்ப எனக்கு லா படிக்கணும் என்கிற எண்ணமே இல்லை என்கவும்,ஏண்டி இப்படி சொல்ற?
கனவுகளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க கூடாதுடி.வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன் படுத்திக்கணும் டி என்றான்.
ஹம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நானும் டிகிரி முடிச்சிட்டு லா படிக்க போறேன்னு சொன்னேன்.அப்ப எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க அதுல இருந்து எனக்கு மனசு உடைஞ்சு போயிடுச்சு என்றாள்...
என்னடி சொல்ற?
என் மாமியார் அப்படி என்ன சொன்னாங்க சொல்லு பார்க்கலாம் என்கவும்,மாமியாராயென்று ஷமீரா ஆச்சரியமாக கேட்க,ஆமாம் பின்னே உன்ன பெத்தவங்க எனக்கு மாமியார் இல்லாமல் பின்ன சாமியாராடி?.