Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
டெல்லி:
அரை மணி நேர ஆட்டோ பயணத்தில் அந்த பெரிய சர்ச்சின் வாசலின் முன்னால் வந்து ஆட்டோ நிற்க, எவ்வளவு ஆனதென கூகுள் பே மூலமாக பணத்தை செலுத்தி விட்டு மூவரும் உள்ளே போனார்கள்..
எஸ்தரோ அவ்வளவு பெரிய சர்ச்சை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே வந்தார்..என்னங்கம்மா இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கிறீர்களென்று ரூபா கேட்க நான் இதுவரைக்கும் இவ்வளவு பெரிய சர்ச் பார்த்ததே இல்லை மா. அங்க வேளாங்கண்ணியில் பார்த்ததை விட இங்கு பெரிதாக இருக்குடா.
எங்களுக்கும் வேளாங்கண்ணி பாக்கணும்னு ரொம்ப ஆசைம்மா என்று ஜூலி சொல்ல அதுக்கு என்ன டா ஒரு நாள் கண்டிப்பா போயிட்டு வரலாமே என்றார்.இவர்கள் போன நேரம் உள்ளே பிரேயர் நடந்து கொண்டிருந்தது.
மூவரும் இடம் தேடி போய் உட்கார்ந்து கண்ணை மூடி ஜெபம் பண்ணி முடித்துவிட்டு பிறகு பாதரின் வார்த்தைகளை கேட்கலானர்...
பிரேயர் முடிந்ததும் தெரிந்தவர்கள் எல்லாம் ஜூலி ரூபாவிடம் பேச அவர்களுக்கு எஸ்தரையும் அறிமுகப்படுத்தினர்.. சரிங்கம்மா நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வரேனென்றவர் நேராக அங்கிருந்த உண்டியல் முன்பு போய் நின்றவர் சிறிது நொடிகள் சென்று கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அதில் போடுவதை ரூபாவும் ஜூலியும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
மற்றவர்கள் ஏதாவது வேண்டுதல் என்றால் இப்படி செய்வார்கள் என்பதால் அங்கிருப்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆண்டவரே எல்லாம் உங்கள் சித்தம் போல் நடக்கட்டும் என்று அங்கிருந்து பலிபீடத்தை பார்த்து சொல்லிய எஸ்தர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் மகள்களிடம் வந்தவர் நான் போய் வெளியில போய் சுத்தி பார்த்துட்டு இருக்கேன் நீங்க வாங்கடா என்க,நாங்களும் வரோம் மா என்றனர்...
பின்னர் வெளியே வந்து அந்த சர்ச்சை சுத்தி உள்ள குரோட்டான்ஸ் செடிகளையும்,பழவகை மரங்களையும் சிறு பிள்ளைகளுக்காக ஒரு பக்கம் இருந்த சின்ன விளையாட்டு சாதனங்கள் கூடிய மைதானம்,காப்பகம் என அங்கிருந்ததை எல்லாம் எஸ்தருக்கு சுற்றிக் காட்டி விட்டு வந்தார்கள்...
அத்தை இங்க பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு.அங்க ஸ்னாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கும் சாப்பிடுறீங்களா என்று ரூபா கேட்க,ஏய் வாலு பொண்ணு உனக்கு தானே சாப்பிடணும் போல இருக்கு என்று சிரித்துக் கொண்டே எஸ்தர் கேட்க..
ஆமாங்கத்தை உங்க பொண்ணு அப்படியே வாயை மூடிக்கிட்டு இருப்பா நான் மட்டும் தான் குண்டா குண்டான சாப்பிடுவேன் பாருங்களேனென்று ரூபா சொல்ல,ஏய் உனக்கு சாப்பிடணும் போல இருந்தாக்க அதை சொல்லுடி அதுக்கு எதுக்கு என்னையும் இழுத்து விடுற என்று ஜூலி முறைக்க...
அப்படியா...அங்க கடைக்கு வந்து ஏதாவது ஆர்டர் பண்ணுன உன் கைய வெட்டுறேன் டி பார்த்துட்டே இரு என்று சொல்லவும் சரி சரி சண்டை வேணாம் வாங்க போகலாமென்ற எஸ்தர் அவர்களோடு கடைக்கு சென்றார்.
மூவரும் உள்ளே போனவர்கள் அங்கே டேபிளின் முன்பு உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்த ஜூலியும் ரூபாவும் முறைத்தாளுங்கள்.
எவ்வளவு நேரம் தான் உங்களுக்காக வெயிட் பண்றது?,சீக்கிரமாக வாங்களென்று தீபன் சொல்லவும்,அதற்கு ரூபாவோ,ரிஷி கபூர் ரேஞ்சுக்கு உன் அண்ணன் எப்படி நடிக்கிறான் பாரேனென்றவள் ஒன்னும் தெரியாதது போல் அமைதியாக போய் தீபன் அருகில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டாள்...
நீங்க எப்படிப்பா இங்கேயென்று எஸ்தர் கேட்க,அதான் உங்க மகள் மெசேஜ் அனுப்பி இருந்தாளேங்கத்தை...
எப்படியும் இந்த கடைக்கு வருவார்கள் என்று தெரியும்.அதனால தான் முன்னாடியே வந்து நாங்க அட்டனன்ஸ் போட்டோம் என்று ருத்ரன் சொல்ல,இது வாடிக்கையா நடக்கிறதோ என்று சிரித்தார்...
வனிச்சூர்:
ஏண்டி என்னமோ அம்பது லட்சம் கொடுத்த போல ஓவரா பண்றியே...என் பொண்டாட்டிக்கு தான கொடுத்த?,அவளுக்காக 5000த்தை கொடுக்க மாட்டியா என்கவும்,மாமா..மரியாதையா வாயை மூடிகிட்டு போ,நானே செம கடுப்புல இருக்கேன். அப்புறம் வாய்க்கு வந்தபடி திட்டிடுவேன்..
அடியேய் நீ ஒரு டீச்சருடி..கொஞ்சமாவது மரியாதையா பேசு டி.அதுலாம் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது மரியாதை கொடுக்குறேன் உனக்கெல்லாம் மரியாதை ஒன்னு தான் கேடு என்றாள்.
ஏய் கண்ணு குட்டி நான் உன் மாமன்டி என்றான்...அதற்கு கண்மணியோ அதனாலதான் கொஞ்சம் டீசண்டா பேசுறேன்.இல்லன்னா வாயில வண்ட வண்டையா வந்துருமென்று முறைத்தாள்..
நல்ல வேளைடி உன்னை கல்யாணம் பண்ணலைனு செழியன் சொல்ல,ஆமா இப்ப நான் தான் உன்னை கட்டிக்கிறேன்னு ஒத்த காலில் நின்னேன் என்ற கண்மணியோ தனது அத்தை மகனை கொலை காண்டில் பார்த்துக் கொண்டிருந்தாள்...
ரொம்ப வாய் பேசின வாய் இருக்காதுடி என்றவன் என் பங்காளி ரொம்ப அப்பாவிடி.அவன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படிலாம் சீரழிய போறானோ?. ஆத்தா மலையைத்தா இவளுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை கொடு என்று தப்பிச்சால் போதுண்டா சாமினு அங்கிருந்து ஓடினான்.
தனது மாமன் தலை தெறிக்க ஓடுவதை பார்த்த கண்மணியோ சத்தமாக சிரித்தவள் என்னம்மா கண்ணு...உன் புருஷன் இப்படி தலை தெரிக்க ஓடுறாரு அவ்வளவு பயமா உனகென்று ஷமிராவிடம் கேட்க,ஆமா அவர் எனக்கு பயந்தார் நீ பார்த்தியா என்றாள்..
இவர்கள் இருவரும் மேலையே அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்க,உள்ளே வந்த காசிநாதனோ என்ன விசேஷம் எல்லாரும் ஒன்று கூடி இருக்கீங்க என்கவும்,வாப்பா காசி என்று தம்புசாமி தாத்தா சொல்ல வரேன் மாமா என்றார் .
நல்ல விஷயமா தான் உன்னை வர சொன்னேன் என்றபடி கண்மணியின் ஜாதகத்தையும் பாபுவின் பிறந்தநாள் தேதி வருஷத்தையும் கொடுத்தவர் இது ரெண்டுத்துக்கும் பொருத்தம் பாருயா என்க,சரி மாமா நல்லபடியா பார்த்து விடலாமென்று இரண்டு கைகளால் வாங்கியவர் எல்லாம் உன் சித்தமென்று சொல்லிக்கொண்டு கையோடு எடுத்துட்டு வந்த நோட்டில் முதலில் பாபுக்கு ஜாதக கட்டம் வரைய தொடங்கினார்..
பின்னர் இருவருக்கும் பொருத்தம் பார்த்துவிட்டு நிமிர்ந்தவர் ரொம்ப நல்லா இருக்கு மாமா..தாராளமா பண்ணலாம்.
கட்டம் என்ன சொல்லுதுனாக்க நம்ம மலையம்மா மேரி அம்மா வீட்டுக்கு போவார்களென்க,ஆமாம் அப்படித்தான் மச்சானென்று அன்பரசன் சிரிக்க...
போன வாரம் அந்த ஜாதகத்தை பற்றி நீ சொல்லும் போது இந்த இடத்தில் முடியாது,மேரி அம்மா வீட்டுக்கு தான் மருமகளா போகணும்னு கண்மணி ஜாதகத்துல இருக்கு,கடல் கடந்து போய் தான் வாழுமென்று நான் தான் சொன்னனே மச்சான்.
இது நீயும் நானும் முடிவு பண்றது கிடையாது.ஆண்டவன் இன்னாருக்கு இன்னாரென்று குறித்து தான் அனுப்புறார் என்றவர் பையனை நல்லா விசாரித்த பிறகு மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.
பொம்பள புள்ளைய குடுக்குறோம் அவசரப்பட்டு விழுந்துட கூடாது இல்லையா,நம்ம வீட்டு பொண்ணு நாளைக்கு கண்கலங்கி நின்னாக்க அது நம்மளால தாங்கிக்க முடியாது என்கவும்,அய்யா காசி கண்ணு முன்னாடி தான் மாப்பிள்ளை இருக்கிறார் பாருனு பாபுவை காட்டியவர் நம்ம செழியன் பொண்டாட்டியோட மாமா பையனுக்குதான் பேசி முடிச்சிருக்குயா,அப்படியா நல்லது மாமா.
இப்பவாவது வீட்டில் டீ தண்ணீர் ஏதாச்சும் குடிப்பீங்களானு அந்தோணியையும் ராணியையும் பார்த்து கேட்க அவர்களும் மௌனமாக சிரித்தனர்.
பொண்ணு கொடுப்பீங்களா கொடுக்க மாட்டீங்களா என்று மனசுல சின்ன கவலையோடு தான் வந்தோம். இப்பதான் முடிவு ஆயிடுச்சே சந்தோஷமா விருந்தே சாப்பிடலாமே என்கவும்,அங்கிருந்த கஸ்தூரியோ நானும் ஷமீராவும் அங்க எல்லாருக்கும் சமைச்சிட்டோமே என்றாள்.
சரிமா என்ற அன்பரசன் மனைவியை அருகில் அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் படி டீ கூட சாப்பிடுற போல போண்டா பஜ்ஜி ஏதாச்சும் பண்ணு. வாழக்காய் இல்லன்னாக்க கண்ணன் கிட்ட சொல்லி நம்ம தோப்பில் வெட்டிட்டு வர சொல்லி செய் என்க...
சரிங்க என்று சொல்லிக் கொண்டு ரஞ்சனியை பார்த்து கண்ணசைத்து விட்டு கிச்சனை நோக்கி போக கஸ்தூரியும் ரஞ்சனியும் புவனாவின் பின்னாடியே சென்றனர்.
அப்போ ஒரு நல்ல நாளு பாரு காசி நிச்சயதார்த்தம் வச்சிடலாம்.அப்படியே கல்யாணத்திற்கும் நாளை பார்த்து சொல்லிடுயானு தம்புசாமி தாத்தா சொல்ல,சரிங்க மாமா என்றவர் பஞ்சாங்கத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.
ஆளுக்கு ஒரு வேலையை வேகவேகமாக செய்து கொண்டிருக்கும் போது ஷமீராவும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள்.
நேரமும் கடந்து சென்றது...
காசிநாதனும் இரண்டு தேதியை குறித்து சொல்ல அதில் சரி வருமா வராதா என்று அவர்கள் அதைப்பற்றி வெளியே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
அதற்குள் இவர்கள் அனைத்தையும் தயார் பண்ணி முடித்ததும்,அம்மாடி நீங்க ரெண்டு பேரும் எடுத்துட்டு போய் எல்லாருக்கும் கொடுங்களென்க அவளுங்களும் சரி மா என்றவாறு எடுத்து போனார்கள்...
எல்லாருக்கும் டீ கொடுத்துக் கொண்டே வந்த ஷமீரா கணவனுக்கு கொடுக்கும் போது என் பொண்டாட்டியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்க... அவன் அருகில் இருந்த கண்ணனோ மானங்கெட்டவனே அதான் கல்யாணம் பண்ணிட்டல்ல மூடிட்டு உட்காரேண்டா என்றான்...
ஆமா எங்கே தீரன்-மாறன் இருவரையும் காணுமென்று செல்லதுரை கேட்க நானே விஷயத்தை சொல்ல நினைச்சேன் பா.தீரன் பொண்டாட்டி மாசமா இருக்குனு விட்டுட்டு வந்தானுங்க..
அதான் நேத்தி ராத்திரியே கிளம்பி போயிட்டானுங்க என்கவும்,இதைக் கேட்டவர்களும் அப்படியாயென்று சந்தோஷப்பட்டனர்.ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேனு வானதியும் வீராயியும் கேட்க,விடிஞ்சு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க எல்லாரும் வந்துட்டீங்களேனு தம்புசாமி தாத்தா சிரித்தார்...
அண்ணா நம்ம வீட்டுக்கு மருமகள் வந்த நேரம் எல்லாமே நல்ல காரியமா நடக்குதென்று செல்லத்துரையிடம் காசிநாதன் சொல்ல,ஆமா காசி..பெரியவங்க சும்மா சொல்லலை. பொண்ணு வர நேரத்தை குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி பேசுறது...
என் வூட்டுக்கு மருமகள் கால் வச்ச நேரம் நல்ல நல்ல செய்தியா காதுல வாங்குறேனென்று தனது பேரன் பொண்டாட்டியை பற்றி பெருமை பட்டுக் கொண்டிருந்தார் வீரையன் தாத்தா...
அரை மணி நேர ஆட்டோ பயணத்தில் அந்த பெரிய சர்ச்சின் வாசலின் முன்னால் வந்து ஆட்டோ நிற்க, எவ்வளவு ஆனதென கூகுள் பே மூலமாக பணத்தை செலுத்தி விட்டு மூவரும் உள்ளே போனார்கள்..
எஸ்தரோ அவ்வளவு பெரிய சர்ச்சை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே வந்தார்..என்னங்கம்மா இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கிறீர்களென்று ரூபா கேட்க நான் இதுவரைக்கும் இவ்வளவு பெரிய சர்ச் பார்த்ததே இல்லை மா. அங்க வேளாங்கண்ணியில் பார்த்ததை விட இங்கு பெரிதாக இருக்குடா.
எங்களுக்கும் வேளாங்கண்ணி பாக்கணும்னு ரொம்ப ஆசைம்மா என்று ஜூலி சொல்ல அதுக்கு என்ன டா ஒரு நாள் கண்டிப்பா போயிட்டு வரலாமே என்றார்.இவர்கள் போன நேரம் உள்ளே பிரேயர் நடந்து கொண்டிருந்தது.
மூவரும் இடம் தேடி போய் உட்கார்ந்து கண்ணை மூடி ஜெபம் பண்ணி முடித்துவிட்டு பிறகு பாதரின் வார்த்தைகளை கேட்கலானர்...
பிரேயர் முடிந்ததும் தெரிந்தவர்கள் எல்லாம் ஜூலி ரூபாவிடம் பேச அவர்களுக்கு எஸ்தரையும் அறிமுகப்படுத்தினர்.. சரிங்கம்மா நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வரேனென்றவர் நேராக அங்கிருந்த உண்டியல் முன்பு போய் நின்றவர் சிறிது நொடிகள் சென்று கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அதில் போடுவதை ரூபாவும் ஜூலியும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
மற்றவர்கள் ஏதாவது வேண்டுதல் என்றால் இப்படி செய்வார்கள் என்பதால் அங்கிருப்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆண்டவரே எல்லாம் உங்கள் சித்தம் போல் நடக்கட்டும் என்று அங்கிருந்து பலிபீடத்தை பார்த்து சொல்லிய எஸ்தர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் மகள்களிடம் வந்தவர் நான் போய் வெளியில போய் சுத்தி பார்த்துட்டு இருக்கேன் நீங்க வாங்கடா என்க,நாங்களும் வரோம் மா என்றனர்...
பின்னர் வெளியே வந்து அந்த சர்ச்சை சுத்தி உள்ள குரோட்டான்ஸ் செடிகளையும்,பழவகை மரங்களையும் சிறு பிள்ளைகளுக்காக ஒரு பக்கம் இருந்த சின்ன விளையாட்டு சாதனங்கள் கூடிய மைதானம்,காப்பகம் என அங்கிருந்ததை எல்லாம் எஸ்தருக்கு சுற்றிக் காட்டி விட்டு வந்தார்கள்...
அத்தை இங்க பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு.அங்க ஸ்னாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கும் சாப்பிடுறீங்களா என்று ரூபா கேட்க,ஏய் வாலு பொண்ணு உனக்கு தானே சாப்பிடணும் போல இருக்கு என்று சிரித்துக் கொண்டே எஸ்தர் கேட்க..
ஆமாங்கத்தை உங்க பொண்ணு அப்படியே வாயை மூடிக்கிட்டு இருப்பா நான் மட்டும் தான் குண்டா குண்டான சாப்பிடுவேன் பாருங்களேனென்று ரூபா சொல்ல,ஏய் உனக்கு சாப்பிடணும் போல இருந்தாக்க அதை சொல்லுடி அதுக்கு எதுக்கு என்னையும் இழுத்து விடுற என்று ஜூலி முறைக்க...
அப்படியா...அங்க கடைக்கு வந்து ஏதாவது ஆர்டர் பண்ணுன உன் கைய வெட்டுறேன் டி பார்த்துட்டே இரு என்று சொல்லவும் சரி சரி சண்டை வேணாம் வாங்க போகலாமென்ற எஸ்தர் அவர்களோடு கடைக்கு சென்றார்.
மூவரும் உள்ளே போனவர்கள் அங்கே டேபிளின் முன்பு உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்த ஜூலியும் ரூபாவும் முறைத்தாளுங்கள்.
எவ்வளவு நேரம் தான் உங்களுக்காக வெயிட் பண்றது?,சீக்கிரமாக வாங்களென்று தீபன் சொல்லவும்,அதற்கு ரூபாவோ,ரிஷி கபூர் ரேஞ்சுக்கு உன் அண்ணன் எப்படி நடிக்கிறான் பாரேனென்றவள் ஒன்னும் தெரியாதது போல் அமைதியாக போய் தீபன் அருகில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டாள்...
நீங்க எப்படிப்பா இங்கேயென்று எஸ்தர் கேட்க,அதான் உங்க மகள் மெசேஜ் அனுப்பி இருந்தாளேங்கத்தை...
எப்படியும் இந்த கடைக்கு வருவார்கள் என்று தெரியும்.அதனால தான் முன்னாடியே வந்து நாங்க அட்டனன்ஸ் போட்டோம் என்று ருத்ரன் சொல்ல,இது வாடிக்கையா நடக்கிறதோ என்று சிரித்தார்...
வனிச்சூர்:
ஏண்டி என்னமோ அம்பது லட்சம் கொடுத்த போல ஓவரா பண்றியே...என் பொண்டாட்டிக்கு தான கொடுத்த?,அவளுக்காக 5000த்தை கொடுக்க மாட்டியா என்கவும்,மாமா..மரியாதையா வாயை மூடிகிட்டு போ,நானே செம கடுப்புல இருக்கேன். அப்புறம் வாய்க்கு வந்தபடி திட்டிடுவேன்..
அடியேய் நீ ஒரு டீச்சருடி..கொஞ்சமாவது மரியாதையா பேசு டி.அதுலாம் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது மரியாதை கொடுக்குறேன் உனக்கெல்லாம் மரியாதை ஒன்னு தான் கேடு என்றாள்.
ஏய் கண்ணு குட்டி நான் உன் மாமன்டி என்றான்...அதற்கு கண்மணியோ அதனாலதான் கொஞ்சம் டீசண்டா பேசுறேன்.இல்லன்னா வாயில வண்ட வண்டையா வந்துருமென்று முறைத்தாள்..
நல்ல வேளைடி உன்னை கல்யாணம் பண்ணலைனு செழியன் சொல்ல,ஆமா இப்ப நான் தான் உன்னை கட்டிக்கிறேன்னு ஒத்த காலில் நின்னேன் என்ற கண்மணியோ தனது அத்தை மகனை கொலை காண்டில் பார்த்துக் கொண்டிருந்தாள்...
ரொம்ப வாய் பேசின வாய் இருக்காதுடி என்றவன் என் பங்காளி ரொம்ப அப்பாவிடி.அவன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படிலாம் சீரழிய போறானோ?. ஆத்தா மலையைத்தா இவளுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை கொடு என்று தப்பிச்சால் போதுண்டா சாமினு அங்கிருந்து ஓடினான்.
தனது மாமன் தலை தெறிக்க ஓடுவதை பார்த்த கண்மணியோ சத்தமாக சிரித்தவள் என்னம்மா கண்ணு...உன் புருஷன் இப்படி தலை தெரிக்க ஓடுறாரு அவ்வளவு பயமா உனகென்று ஷமிராவிடம் கேட்க,ஆமா அவர் எனக்கு பயந்தார் நீ பார்த்தியா என்றாள்..
இவர்கள் இருவரும் மேலையே அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்க,உள்ளே வந்த காசிநாதனோ என்ன விசேஷம் எல்லாரும் ஒன்று கூடி இருக்கீங்க என்கவும்,வாப்பா காசி என்று தம்புசாமி தாத்தா சொல்ல வரேன் மாமா என்றார் .
நல்ல விஷயமா தான் உன்னை வர சொன்னேன் என்றபடி கண்மணியின் ஜாதகத்தையும் பாபுவின் பிறந்தநாள் தேதி வருஷத்தையும் கொடுத்தவர் இது ரெண்டுத்துக்கும் பொருத்தம் பாருயா என்க,சரி மாமா நல்லபடியா பார்த்து விடலாமென்று இரண்டு கைகளால் வாங்கியவர் எல்லாம் உன் சித்தமென்று சொல்லிக்கொண்டு கையோடு எடுத்துட்டு வந்த நோட்டில் முதலில் பாபுக்கு ஜாதக கட்டம் வரைய தொடங்கினார்..
பின்னர் இருவருக்கும் பொருத்தம் பார்த்துவிட்டு நிமிர்ந்தவர் ரொம்ப நல்லா இருக்கு மாமா..தாராளமா பண்ணலாம்.
கட்டம் என்ன சொல்லுதுனாக்க நம்ம மலையம்மா மேரி அம்மா வீட்டுக்கு போவார்களென்க,ஆமாம் அப்படித்தான் மச்சானென்று அன்பரசன் சிரிக்க...
போன வாரம் அந்த ஜாதகத்தை பற்றி நீ சொல்லும் போது இந்த இடத்தில் முடியாது,மேரி அம்மா வீட்டுக்கு தான் மருமகளா போகணும்னு கண்மணி ஜாதகத்துல இருக்கு,கடல் கடந்து போய் தான் வாழுமென்று நான் தான் சொன்னனே மச்சான்.
இது நீயும் நானும் முடிவு பண்றது கிடையாது.ஆண்டவன் இன்னாருக்கு இன்னாரென்று குறித்து தான் அனுப்புறார் என்றவர் பையனை நல்லா விசாரித்த பிறகு மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.
பொம்பள புள்ளைய குடுக்குறோம் அவசரப்பட்டு விழுந்துட கூடாது இல்லையா,நம்ம வீட்டு பொண்ணு நாளைக்கு கண்கலங்கி நின்னாக்க அது நம்மளால தாங்கிக்க முடியாது என்கவும்,அய்யா காசி கண்ணு முன்னாடி தான் மாப்பிள்ளை இருக்கிறார் பாருனு பாபுவை காட்டியவர் நம்ம செழியன் பொண்டாட்டியோட மாமா பையனுக்குதான் பேசி முடிச்சிருக்குயா,அப்படியா நல்லது மாமா.
இப்பவாவது வீட்டில் டீ தண்ணீர் ஏதாச்சும் குடிப்பீங்களானு அந்தோணியையும் ராணியையும் பார்த்து கேட்க அவர்களும் மௌனமாக சிரித்தனர்.
பொண்ணு கொடுப்பீங்களா கொடுக்க மாட்டீங்களா என்று மனசுல சின்ன கவலையோடு தான் வந்தோம். இப்பதான் முடிவு ஆயிடுச்சே சந்தோஷமா விருந்தே சாப்பிடலாமே என்கவும்,அங்கிருந்த கஸ்தூரியோ நானும் ஷமீராவும் அங்க எல்லாருக்கும் சமைச்சிட்டோமே என்றாள்.
சரிமா என்ற அன்பரசன் மனைவியை அருகில் அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் படி டீ கூட சாப்பிடுற போல போண்டா பஜ்ஜி ஏதாச்சும் பண்ணு. வாழக்காய் இல்லன்னாக்க கண்ணன் கிட்ட சொல்லி நம்ம தோப்பில் வெட்டிட்டு வர சொல்லி செய் என்க...
சரிங்க என்று சொல்லிக் கொண்டு ரஞ்சனியை பார்த்து கண்ணசைத்து விட்டு கிச்சனை நோக்கி போக கஸ்தூரியும் ரஞ்சனியும் புவனாவின் பின்னாடியே சென்றனர்.
அப்போ ஒரு நல்ல நாளு பாரு காசி நிச்சயதார்த்தம் வச்சிடலாம்.அப்படியே கல்யாணத்திற்கும் நாளை பார்த்து சொல்லிடுயானு தம்புசாமி தாத்தா சொல்ல,சரிங்க மாமா என்றவர் பஞ்சாங்கத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.
ஆளுக்கு ஒரு வேலையை வேகவேகமாக செய்து கொண்டிருக்கும் போது ஷமீராவும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள்.
நேரமும் கடந்து சென்றது...
காசிநாதனும் இரண்டு தேதியை குறித்து சொல்ல அதில் சரி வருமா வராதா என்று அவர்கள் அதைப்பற்றி வெளியே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
அதற்குள் இவர்கள் அனைத்தையும் தயார் பண்ணி முடித்ததும்,அம்மாடி நீங்க ரெண்டு பேரும் எடுத்துட்டு போய் எல்லாருக்கும் கொடுங்களென்க அவளுங்களும் சரி மா என்றவாறு எடுத்து போனார்கள்...
எல்லாருக்கும் டீ கொடுத்துக் கொண்டே வந்த ஷமீரா கணவனுக்கு கொடுக்கும் போது என் பொண்டாட்டியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்க... அவன் அருகில் இருந்த கண்ணனோ மானங்கெட்டவனே அதான் கல்யாணம் பண்ணிட்டல்ல மூடிட்டு உட்காரேண்டா என்றான்...
ஆமா எங்கே தீரன்-மாறன் இருவரையும் காணுமென்று செல்லதுரை கேட்க நானே விஷயத்தை சொல்ல நினைச்சேன் பா.தீரன் பொண்டாட்டி மாசமா இருக்குனு விட்டுட்டு வந்தானுங்க..
அதான் நேத்தி ராத்திரியே கிளம்பி போயிட்டானுங்க என்கவும்,இதைக் கேட்டவர்களும் அப்படியாயென்று சந்தோஷப்பட்டனர்.ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேனு வானதியும் வீராயியும் கேட்க,விடிஞ்சு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க எல்லாரும் வந்துட்டீங்களேனு தம்புசாமி தாத்தா சிரித்தார்...
அண்ணா நம்ம வீட்டுக்கு மருமகள் வந்த நேரம் எல்லாமே நல்ல காரியமா நடக்குதென்று செல்லத்துரையிடம் காசிநாதன் சொல்ல,ஆமா காசி..பெரியவங்க சும்மா சொல்லலை. பொண்ணு வர நேரத்தை குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி பேசுறது...
என் வூட்டுக்கு மருமகள் கால் வச்ச நேரம் நல்ல நல்ல செய்தியா காதுல வாங்குறேனென்று தனது பேரன் பொண்டாட்டியை பற்றி பெருமை பட்டுக் கொண்டிருந்தார் வீரையன் தாத்தா...