• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சி புகழ் வீடு:

ஏங்க,நானும் பாத்துட்டு இருக்கேன் எப்ப பார்த்தாலும் ஏதோவொரு யோசனையிலே இருக்கீங்களே ஏதாவது பிரச்சனையா?.

இல்ல கல்யாணத்திற்கு பணம் தேவைப்படுதா என்றவாறு மானசா தனது கணவனின் பக்கத்தில் உட்கார அப்படி எல்லாம் ஒன்னுமில்லம்மா.

நீ எதுக்கு தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிற என்கவும் இல்லையே நானும் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கேன் எப்போதும் கலகலப்பா பேசிட்டு இருப்பீங்க.

இந்த மூணு நாளா நானும் பாக்குறேன் அமைதியாக ஏதோ விட்டத்தை பார்த்து யோசனையா இருக்கீங்களே எந்த கோட்டையை பிடிக்கறதுக்காக சிந்தனை பண்றீங்க.

இந்த வயசுல நான் எந்த கோட்டைய பிடிக்க போறேனென்று கொஞ்சம் கடுப்பாக கேட்க ,அப்படி என்ன உங்களுக்கு வயசாயிடுச்சு?

இன்னும் நம்ம அருணுக்கு அண்ணன் போல தானே இருக்கீங்கனு சிரிக,அதில் புகழுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.அப்போ உன் புருஷன் ஹேண்ட்ஸமா இருக்கான்னு சொல்ற இல்லையா என்க,ஆமாம் அதிலென்ன சந்தேகமென்று கணவரின் தோளில் சாய,அடியேய் மனுசனை உசுப்பேத்தாதடி என்றார்.

ம்கும்..இந்த வயசுல இவரை உசுப்பேத்துறாங்க என்ற மானசா இந்த வாரம் ஒரு முக்கியமான நாள் வருது உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்கும் போது இவ்வளவு நேரம் அவரிடமிருந்த சிரிப்பு போய் அழுகை வந்தது.

அது எப்படி மானசா என்னால மறக்க முடியும்?நம்ம பொண்ணு இந்த உலகத்தை விட்டு போன நாளாச்சேனு வருத்தப்பட,ப்ளீஸ்ங்க இந்த முறையாவது என்ன அந்த இடத்துக்கு கூப்பிட்டு போங்களேன்?.

நானும் கடந்த 23 வருஷமா உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேங்கனு கதறி அழுதார்.

இப்படி அழுது உன் உடம்பை கெடுத்துக்க வேண்டாம் என்பதற்காகதான் உன்னை கூட்டிட்டு போகாமல் இருக்கேன் மானசா.

அங்க போனால் உனக்கு நம்பளோட பொண்ணு ஞாபகம் வந்து வருத்தப்பட்டு உனக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற கவலை தான் மா...

அழுது கொண்டிருந்தவரோ ஏங்க இப்ப மட்டும் நம்ம பொண்ண மறந்துட்டா இருக்கேன் என்க....சரி அழாத டிக்கெட் போடுகிறேன்.ஆபிஸ்கு ஒருவாரம் லீவு எடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம் சரியா.

அழுது கொண்டிருந்தவரும் சரிங்க என்றவாறு அங்கே சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது மூன்று வயது மகளின் போட்டோவிற்கு மாலை போட்டுருப்பதை வேதனையோடு பார்த்தார்.

வனிச்சூர்:

காலையிலேயே குளித்து விட்டதால் வேகவேகமாக பீரோவை திறந்து அதிலிருந்த பட்டுப் புடவையை எடுத்து கட்டிக் கொண்டு தலையை பின்னி முடிக்க கவிதாவும் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவள் இந்தாக்கா அம்மா கொடுத்துச்சினு நகைகள் இருக்கும் பேகை கொடுக்க கண்மணியும் அதில் இருந்ததை எல்லாம் போட்டுக் கொண்டாள்.

அப்பொழுது மேலே வந்த புவனா வாடா கீழே போகலாமேன கண்மணியோடு கீழே வந்தார்.

வீராயி பாட்டியோ தனது கணவனைத் திட்டிக்கொண்டு பக்கத்து தெருவிலிருக்கும் தனது அப்பா வீட்டுக்கு வந்து கொண்டிருக்க,தெரிந்தவர்கள் பார்த்துவிட்டு என்ன வீராயி எதுக்கு இவ்வளவு வேகமா போற?என்கவும் ஒன்னும் இல்லை..

அண்ணன் வீட்டுக்கு போறேனென்று சொல்லிக் கொண்டு அந்த பெரிய வீட்டிற்குள் வந்தவர் அங்கு சொந்த பந்தங்கள் எல்லாரும் கூடியிருப்பதை பார்த்து என்ன விசேஷம் என்க,வாத்தா என்றார் வீராயின் ஒரே அண்ணன் தம்புசாமி.

அங்க வீட்ல யாருமே இல்லன்னு இங்க வந்தேன் என்கவும்,பேத்தியோட மாமா பையனுக்கு கண்மணியை பொண்ணு கேக்குறாங்க ஆத்தா,நீ என்ன சொல்றனு தனது தங்கச்சியிடம் தம்புசாமி கேட்க,நல்ல குணமான பையனா தான் தெரியுதுணா...இந்த ரெண்டு நாள்ல பாத்த வரைக்கும் சொல்றேன்,தாராளமா கட்டிக் கொடுக்கலாமே என்றார்.

அப்புறம் என்னங்க என் தங்கச்சிக்கு புடிச்சு போயிடுச்சு...அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் என் தங்கச்சி நல்லவன் கெட்டவனென்று உத்தரவாதம் கொடுக்காது என்கும் போது பதறியடித்துக் கொண்டு வீரையனும் வீட்டிற்குள் வர எதுக்கு மச்சான் என்னமோ அடுப்புக்கு கறி அள்ளிப்போட்ட போல வர என்கவும்,அதுலாம் ஒன்னும் இல்ல மச்சான் சும்மாதான்.வெயில்ல வந்தனே அதனால அப்படி தெரியுதென்றார்...

ஆமா இல்லன்னா மட்டும் அய்யா அப்படி சூரிய குஞ்சு கலரு பளபளன்னு இருப்பிங்களோனு தம்புசாமி சொல்ல அங்கிருந்தவர்களோ அதை கேட்டு சிரித்து விட்டனர்.

பாத்தியாடா உன் தாத்தன் என் அப்புச்சியை எப்படி கிண்டல் பண்றார்னு கண்ணனிடம் செழியன் சொல்ல,ஏய் அவரு தங்கச்சி புருசனா.உன் வேலையை பாருடா விளக்கெண்ணெய் என்றான்.

அப்பொழுது கொலுசு சத்தம் கேட்கவும் எல்லாரும் நிமிர்ந்து பார்க்க வந்தவர்கள் எல்லாரையும் பார்த்து வணக்கம் சொன்னவள் மறந்தும் பாபு இருக்கும் பக்கம் மட்டும் கண்மணி திரும்பவில்லை.

அவனோ தன்னவளைதான் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அன்பரசனோ தனது மகளை பார்த்தவர் அம்மாடி கண்மணி தம்பியை தான் உனக்கு பேசி முடிச்சிருக்கு.இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு இருக்கு.ஏன்னா மே மாசம் தானே உங்களுக்கு ஸ்கூல் லீவு...நீ என்ன சொல்றமா என்றார்.

உங்களோட விருப்பமே என்னுடையதுபானு தனது சம்மதத்தை சொன்னாள்.அப்புறம் என்னங்க பொண்ணுக்கு புடிச்சிருச்சு கையோடு ஜாதகத்தை பார்த்துடலாமே என்கவும்,எங்க பையனுக்கு ஜாதகம் இல்லைங்களே இப்ப என்ன பண்றதென்று ராணி கேட்க,அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை...

பொறந்த தேதியும் நேரமும் சொன்னாக்க கணிச்சுடுவாங்க,நம்ம பங்காளி வீட்டில் ஜாதகம் பார்க்கிறவங்க இருக்காங்க அவங்கள வர சொல்லி பார்த்துடலாமனு செல்லதுரை சொல்ல,இன்னைக்கு நாள் நல்லா தான் இருக்கு தொடர்ந்து இரண்டு முகூர்த்தம் இல்லையா...

அப்போ இன்னைக்கே அதையும் பாத்துரலாமேயென்ற அன்பரசன் தனது போனை எடுத்து பக்கத்து தெருவில் இருக்கும் உறவினருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார்.

சுத்தி எல்லாருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணா தான் இருக்கீங்க போலனு அந்தோணி கேட்க,ஆமாங்க இங்கு முக்காவாசி பேரு எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தான்.

இதோ இருக்காரே மச்சான் என்னோட சொந்த அத்தை பையன் தான். மச்சானுக்கு தான் என்னுடைய ஒரே தங்கச்சி வீராயியை கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.மச்சானோட தம்பி பொண்ணு தான் புவனா...

புவனாவோட சின்னம்மா பொண்ணு தான் ரஞ்சனி என்க...அப்படிங்களானு அந்தோணியும் ஆச்சரியமாக கேட்க...ஆமாங்க..சொந்த பத்தம் விட்டு போயிடக் கூடாதுன்னு நாங்க இப்படித்தான் கல்யாணம் பண்ணிக்கிறது

அதேபோல என்னோட ஒரே பொண்ணை தான் மச்சானோடு பெரியண்ணன் பையன் செல்லதுரைக்கு கொடுத்தது..

எங்களுக்கு அடுத்தது பிள்ளைகள் தலைமுறை வரும்போது மச்சான் வகையராவில் எல்லாருக்கும் பையன் தான்.கண்மணிய பெரியவன் நெடுஞ்செழியனுக்கு கட்ட முடியாது.
வயசுல பெரியவன் அதனால் தான் எங்க அம்மா வழியில கஸ்தூரியை கட்டியது.

சரி செழியனுக்கு கட்டலாம்னு இவங்க எல்லாரும் ஆசைப்பட்டாங்க.கடவுள் எப்படி நடத்தி வைப்பாரோ அப்படித்தானே நடக்கும்.இன்னைக்கு புது உறவு உங்க மூலமா எங்க குடும்பத்துக்கு வந்துருப்பது சந்தோஷம் என்றனர்.

ஏன் மாமா நம்பளே பேசிக்கிட்டா எப்படி?,கண்மணியும் பாபுவும் பேசிக்க சொல்லுங்களேன்.ஒருவரையொருவர் பேசி தெரிந்துப்பாங்களேனு செழியன் சொல்ல,அப்பாடா பங்காளி ரொம்ப நல்ல காரியம் பண்ணுனடா.

எல்லாம் என்னை பின்னாடி கவனிக்கணும் அதற்காகத்தானென்று செழியன் சிரிக்க,கண்டிப்பாக கவனிக்கிறான்டா என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,தாரலாமா பேசட்டும்.

அதான் பேசி முடிச்சிட்டோமேனு வீரையன் தாத்தா சொல்ல,பாபுவோ ஓரமாய் நிற்பவளிடம் வா என்று கண்ணை அசைத்து விட்டு அவர்கள் பார்வையிலிருந்து சற்று தள்ளி போய் நின்று கொண்டான்.

அவளும் எதுவும் சொல்லாமல் பின்னாடியே வந்து நிற்க,ஏண்டி ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டானே ஆமா இல்லையான்னு பதில் சொல்லணும் .

அதை விட்டுட்டு இரண்டு நாளா வாயில என்னடி கொழுக்கட்டையா வச்சிருக்கனு பாபு கேட்க, திடீரென்று இப்படி உரிமையாக வாடி போடி என்று பேசுவான் என்பது எதிர்பாக்காதவளோ அதிர்ந்து போய் பார்த்தாள்.

தன்னவளின் பார்வையை உணர்ந்தவன் முட்ட கண்ண வச்சுட்டு என்னடி முழிச்சிட்டு இருக்கிற?படுத்துறடி....எந்த பெண்ணு மேலையும் இப்படி ஒரு எண்ணம் வந்தது கிடையாது.

இந்த திருட்டுமுழிகாரி மேல வந்துடுச்சு என்கவும்,இவ்வளவு நேரம் அதிர்ந்து பார்த்தவளோ இப்பொழுது முறைத்தாள்.

ரொம்ப முறைக்காதடி..

அங்கு துபாயில் என்கூட தான் குடும்பம் பண்ணனும்டி.அப்போ உன்ன வச்சிக்கிறேன் டி என்றவன்,இதோ பாரு டி சீரியஸா கேட்கிறேன் உண்மையிலேயே என்னை உனக்கு புடிச்சிருக்கா?,இல்லையா?தயவு செய்து அதுக்கு மட்டும் பதில் சொல்லுடி?

யோவ் மட சாம்பிராணி பிடிக்காமதான் இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்கேனா மாங்கா மடையா?விருப்பம் இல்லைனா நான் ஏன் உன் கூட பேச தனியா வரப்போறேன் அந்த அறிவு கூட உனக்கு இல்லையானு அங்கிருந்து சென்று விட்டாள்..

எல்லாரும் இங்க இருக்கும்போது ஷமீராவும் கஸ்தூரியம் அங்க இருக்காங்களே அவங்களையும் கூட்டிட்டு வந்துருங்கப்பா நல்ல காரியம் பேசிட்டு இருக்கும்போது அவங்களும் இருக்கணுமென்க,நான் போய் கூட்டிட்டு வரேன் என்ற செழியனும் அங்கிருந்து சென்றான்.


அண்ணியென்று வாசலிலிருந்து குரல் கொடுக்க உள்ளே வா செழியா இங்கதான் இருக்கிறோம் என்றார். உங்களையும் இவளையும் அங்கு தாத்தாவிற்கு வீட்டுக்கு வர சொல்றாங்க என்க... சமைச்சிட்டு இருக்குறோமோ தம்பி...

என்னவாம் அங்கே என்க... கண்மணிய இவளோட மாமா பையனுக்கு பொண்ணு கேட்டதுக்கு எல்லாரும் சம்மதிச்சுட்டாங்க.

ஜாதகம் பார்ப்பதற்கு காசிநாதன் சித்தப்பாவும் வருது.அப்படியா....ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கின்ற போல உங்க விசேஷத்துக்கு வந்து அவங்களுக்கும் பொண்ணு பேசி முடிச்சிட்டாங்களா சூப்பர் என்கவும்,ஷமீராவுக்கோ ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது..

அவளின் முகத்தைப் பார்த்த செழியனோ ஒருவேளை கண்மணியை பாபுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவளுக்கு பிடிக்கவில்லை போலயென்று அவனே நினைத்துக் கொண்டு மனைவியை பார்த்து முறைத்து விட்டு சீக்கிரம் வாங்க...

இருவரில் ஒருவரை முதலில் போய் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்றவாறு வெளியே போனான். விளையாடிக் கொண்டிருந்த கவினை தூக்கிக்கொண்ட கஸ்தூரியோ,அந்த பொரியல்ல தண்ணீர் சுண்டியதும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வரேன்.

நீ முதல்ல போ...உன்னை விட்டு வருவதற்குள் அது ஆயிடும் என்கவும்,இல்லக்கா நீங்க கவினோடு பஸ்ட் போங்க,நான் இதை முடிச்சுட்டு வரேனென்றாள்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கஸ்தூரியையும் குழந்தையும் தனது தாத்தா வீட்டின் வாசலில் இறக்கி விட்டவன் மனைவியை அழைக்க திரும்பி வர,ஷமீராவும் கஸ்தூரி சொன்னது போல தண்ணீர் சுண்டிதும் பொரியலை மூடி வைத்தவள்,அடுப்பை ஆஃப் பண்ணிவிட்டு சிலிண்டரையும் நிறுத்திவிட்டு வெளியே வர கோபமாக உள்ளே வந்தவனோ மனைவியின் கையை இறுக்கிப் பிடித்தவன் ஏன் டி கண்மணிக்கு என்ன குறைச்சல்?

விஷயத்தை சொன்னதும் மூஞ்சியை அப்படி வச்சிக்கிற?

நாங்க ஒன்னும் பொண்ணு குடுக்குறோம்னு ஒத்த கால்ல நிக்கலை.உன்னோட மாமா வீட்ல தான் அங்க வந்து பொண்ணு கேட்டு உட்கார்ந்திருக்காங்க தெரியுமா என்று கோபமாக பேசவும்,இவருக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?

எதுக்கு இப்படி எல்லாம் பேசுறாரென்று யோசனையோடு ஷமீரா பார்க்க,உன்ன தான் டி கேட்கிறேன் பதில் சொல்லு என்கவும்,ஆமா என்ன உளறிட்டு இருக்கிறீங்கள்? விஷயத்தை முதல்ல தெளிவா சொல்லுங்களென்றாள்..

தெளிவா சொல்லணுமாடி என்று பல்லை கடித்தவன் பாபுவிற்கு கண்மணியை பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு சொன்னனே அதுக்கு எதுக்கு அவ்ளோ அதிர்ச்சி?

ஏன் நீ உன் அப்பன் போல் ஜாதி மதம் என்று நினைக்கிறாயானு கோவமாக கேட்கவும்,ஷமீராவோ தனது கணவனை ஒரு பார்வை பார்த்தவள் எதுவுமே பதில் சொல்லாமல் அவன் பிடியிலிருந்து தனது கையை உருவி விட்டு வாசலுக்கு செல்ல ஏய் உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன் நீ பாட்டிலேயே போனால் என்னடி அர்த்தமென்று பல்லை கடிக்கவும்,அதை காதில் வாங்காமல் நேராக வண்டியின் அருகில் போய் நின்று கொண்டாள்.

"திமிரு...உடம்பெல்லாம் திமிரு அடக்குறேன் இருடி" என்று சொல்லிக் கொண்டு அவள் கையிலிருந்த சாவியை பிடுங்கிட்டு போய் வீட்டை பூட்டிவிட்டு வண்டியில் ஏறி உக்காந்து ஸ்டார்ட் பண்ண,ஷமீராவும் எதுவும் சொல்லாமல் ஏறி உட்கார்ந்தாள்.

இருவரும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அங்கு வந்தனர். வண்டியிலிருந்து கீழே இறங்கியவளிடம் மூஞ்சை தூக்கி ஏழு மூழம் வச்சுக்கிட்டு அங்கு உள்ள வராத புரிகிறதா?

நல்ல விஷயத்திற்கு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு உனக்கு பிடிக்குதே பிடிக்கலையோ அது அடுத்த பிரச்சனை. மாமா வீட்ல நடக்கிற நல்ல விசேஷம் அதுல கொஞ்சம் சிரிச்ச போல கலந்துக்க என்கவும் அதற்கும் எதுவும் சொல்லாமல் வெறும் பார்வையை மட்டும் கணவனை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அங்கிருந்தவர்கள் வா மா என்று சொல்ல அமைதியாக சிரித்தவள் கண்மணி எங்கே என்க,மேல ரூம்ல தான் இருக்காடா என்று புவனா செல்லவும் சரிங்கமா என்றவள் மேலே வந்து கதவை தட்ட சிறிது நொடியில் கதவும் திறக்க,உள்ளே வந்த ஷமீராவோ ஒரு கையை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு இன்னொரு கையை கண்மணியின் முன்பு நீட்டியவள் எடு டி ஐயாயிரம் பணத்தை என்றாள்...

ஹி ஹி என சிரித்து மழுப்பும் கண்மணியை பார்த்தவள்,முடியாது பெட்ல நான் தான் ஜெயிச்சேன்.சீக்கிரம் சீக்கிரம் என்கவும்,தரேன் தரேன் என்று கடுப்பில் சொன்னாலும் முகத்தில் இருக்கும் பூரிப்பை அவளாலும் மறைக்க முடியவில்லை.

கபோர்டை திறந்தவள் தனது சம்பளத்தில் சேர்த்து வைத்ததிலிருந்து 5 ஆயிரம் பணத்தை எடுத்து ஷமீராவின் முன்னால் நீட்ட,அதை வாங்கிக் கொண்டவள் பெட்டில் நான் தான் ஜெயிச்சேனென்று கண்மணியை கட்டிக் கொண்டாள்...

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் யார் என்று போய் ஷமீரா கதவை திறக்க,அங்கே செழியன் தான் நின்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்தவளோ கண்டு கொள்ளாமல் வழியை விட உள்ளே வந்தவன் கண்மணி என்க,சொல்லு மாமா என்றாள்..

மனசார தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கி?அதாவது என் பங்காளி ரொம்ப நல்லவன் டி.ஒருவேளை வீட்ல எல்லாருக்கும் புடிச்சிருக்குன்னு நீ ஒன்னும் இதுக்கு ஓகே சொல்லவில்லையே?

ஏன்னா நம்ப மதம் வேற அவங்க மதம் வேற அதெல்லாம் உனக்கு தெரியும் தானே என்கவும்,கண்மணியோ தனது அத்தை மகனை கொலவெறியில் பார்த்தாள்...

மனைவியின் பக்கம் திரும்ப அவள் கையிலிருக்கும் பணத்தை பார்த்துவிட்டு ஏதுடி இவளுக்கு இவ்வளவு பணம் என்க... மாமா பேசாம போயிடு என் வாய கிளறாதே என்றாள் கண்மணி..

ஏய் எதா இருந்தாலும் புரியும்படி சொல்லுடி என்கவும்,யோவ் மாங்கா மண்டையா உன் பொண்டாட்டி ரெண்டு நாளைக்கு முன்னாடியே அந்த மனுஷனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது...

இந்த ஊரை விட்டு போறதுக்குள்ள எங்க மாமா உன்னை பொண்ணு கேட்டாலும் கேட்பாருனு சொன்னாள். அப்படி எல்லாம் நடக்காதுன்னு நானும் ஏதோ குருட்டு நம்பிக்கையில் சொன்னேன்.அப்படி நடந்தால் 5 ஆயிரம் பெட்னு பேசிக்கிட்டோம்.

இதோ நடந்துருச்சு...நான் சேர்த்து வச்ச காசு எல்லாம் அவளே ஜெயிச்சு வாங்கிட்டா போதுமாயா என்று பல்லை கடித்துக் கொண்டு செல்ல,எதேஏஏஏ என்று திரும்பி மனைவியை பார்த்தவன் ஆஹா அவசரப்பட்டு நம்ப வேற தப்பா வாய கொடுத்துட்டோமே?

சும்மாவே பாயிண்டு பாயிண்டா பேசுவாளே,இதுக்கு என்ன ஆக போறியோ செழியானு மனதிற்குள் சொல்லிக் கொண்டே தனது மனைவியை அசட்டு சிரிப்போடு பார்க்க, அவளோ கணவனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை...

டெல்லி

காலிங் பெல் சத்தம் கேட்டு எஸ்தர் போய் கதவை திறக்க அங்கே அவர்களின் பக்கத்து பிளாட்டிலிருக்கும் இரண்டு பெண்மணிகள் நின்று கொண்டிருந்தனர்.

இருவரையும் பார்த்து வாங்க ஆன்ட்டி என்று ஜூலி- ரூபா சொல்ல தலையை அசைத்து சிரித்தபடி சோபாவில் போய் உட்கார்ந்தவர்கள் என்ன ஆச்சு ஜூலி?
போலீஸ் வந்துச்சே?ஏதாச்சும் பிரச்சனையா பேட்டி??அதான் கேட்டுட்டு போகலாமென்று வந்தோமென்று இரண்டு பெண்களில் ஒரு பெண்மணி சொன்னார்...

பிரச்சனை ஒன்னும் இல்லைங்க ஆன்ட்டி...ருத்ரன் தான் மினிஸ்டர் அமர்நாத்தோட பேர குழந்தைக்கு சர்ஜரி பண்ணியிருக்கிறார்.குழந்தை நல்லா இருக்காம்.அதுக்காக அவரை பார்த்துட்டு தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னு வந்திருக்காங்க..

இன்னைக்கு அவருக்கு டூட்டி காலையிலே பையாவும்(அண்ணன்) அவரும் ஹாஸ்பிடல் போயாச்சி...அதுக்கு தான் வேற ஒன்றும் இல்லையென்றாள்...

அப்படியா...நாங்க கூட ஏதாச்சும் பிரச்சினையோனு பயந்துட்டோம். அவன் தான் ஊர அடிச்சு சொத்து குமிச்சி வைத்திருக்கிறானே நல்லவங்களுக்கு நல்லது நடக்கும் ஆனால் இது போல பாவிக்கெல்லாம் ஒன்னும் வர மாட்டேங்குது...அந்த கடவுளுக்கு கண்ணு இருக்கானு தெரியவில்லையே.

அப்பார்ட்மெண்ட் ஃபுல்லா இதே பேச்சா தான் இருக்கு...ருத்ரன் வீட்டுக்கு மினிஸ்டர் வந்தாரு போலீஸ் வந்ததுனு.

அந்த மினிஸ்டர் கேடுகெட்டவனா இருக்கிறானே அதனாலதான் தம்பிக்கு பிரச்சனையோனு பயந்து போய் வந்தோம்.

அவர்கள் அக்கறையை பார்த்து கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பின்னர் எஸ்தரை யாரென்று புருவத்தை சுருக்கி பார்க்கவும் இவங்க தான் ஜூலியோட அம்மா,அப்படிங்களா நமஸ்காரம் என்றனர்.

எஸ்தரும் வணக்கம் என்கவும், இப்பதான் உங்க பொண்ணை பார்க்கணும்னு தோணுச்சா?கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு தான் அவங்க மேல உள்ள கோபம் போயிருக்கா?.

ஓஓஓ காதல் பிரச்சனைனு சொல்லி வச்சிருக்காங்க அதுக்கு ஏற்ற போல நம்மளும் சமாளிப்போம் என்று நினைத்த எஸ்தர் ஆமாங்க..அவங்க இஷ்டத்துக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க.அதுதான் எங்களுக்கு பிடிக்கலை.

சரி எத்தனை நாளைக்கு தான் மகள் வேண்டாம் மருமகன் வேண்டாமென்று கோச்சிட்டு தனியா இருக்க முடியும்?மனசு கேட்கலையே அதான் வந்தேன் என்று அவர்களுக்கு ஏத்த போல எஸ்தர் சமாளிக்க ஜூலிக்கும் ரூபாவுக்கும் ஹப்பாடா என்று இருந்தது.

அந்த அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களோ இவர்கள் குடும்பத்தை பற்றி விசாரிக்காமல் இருந்ததில்லை. காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று மட்டும் சொல்லி வைத்திருந்தனர்.

அதற்கு தகுந்த போலவே எஸ்தரும் இன்று பதில் சொல்லியிருந்தால் இனிமேல் இந்த பேச்சுக்கள் வராது என்பதை நினைத்து ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது

வந்தவங்களுக்கு டீ கூட கொடுக்காம பேசிட்டு இருக்கேனென்று எழுந்து உள்ளே போன எஸ்தர் ஸ்ட்ராங்காக நான்கு காபியை போட்டுட்டு வந்து அவர்கள் இருவருக்கும் கொடுத்து விட்டு ரூபாவுக்கும் கொடுத்தவர் தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு ஜூலி உனக்கு டீ அடுப்புல வச்சிருக்கேன்டா என்கவும் சரிங்க மா என்றாள்.

என்னோட பையனும் இப்படி தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.என்ன பண்றது அவங்க வாழ்க்கையை அவங்களே தேர்ந்தெடுக்குறாங்க.

நம்ம தான் அவங்களுக்காக பொறுத்து போக வேண்டியதாக இருக்கு.எங்க வீட்டுக்காரர் இப்படித்தான் ஒத்துக்கவே இல்லை.குடும்பம் மானம் அது இதுனு சொன்னாரு..

நம்ப வாழ போறது கொஞ்ச காலம் அவர்கள் சந்தோஷமாக இருந்துட்டு போகட்டுமேனு என் பிடிவாதத்தில் தான் வீட்டில் சேர்த்துக்கிட்டேன்.நல்ல மருமகளா எங்க ரெண்டு பேரையும் கவனிக்கிறாள்.இதோ குழந்தை பிறந்து நாலு மாசம் ஆகுது என்று அதில் ஒரு பெண்மணி சொல்ல அப்படிங்களா சந்தோஷம் என்றார்..

உங்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடு என்று ரூபா சொல்லிருக்கிறாள் என்று அந்த பெண்மணியில் ஒருவர் கேட்க ஆமாம். ரூபாவோட அப்பா இங்க டெல்லியில் இன்கம் டேக்ஸ் ஆபிஸில் வேலை பார்த்துட்டு இருந்தாங்க...

அப்போ வந்து செட்டில் ஆயாச்சு என்று தனது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததை வைத்து எஸ்தர் சொல்லவும், உங்க அம்மா போட்டு தாக்குறாங்க போ என்று ஜூலி தனது நாத்தனாரின் காதில் சொல்ல,அம்மாவை பார்த்த பொய் சொல்ற போல தெரியலை டி...

"ரொம்ப தெளிவா பேசுறாங்க" அவங்க முகத்தை பாருடி.அதில் எந்த பதட்டமும் இல்லைனு ரூபாவும் ஜூலி காதில் விழுபடி சொன்னாள்..

மேலும் சிறிது நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிவிட்டு வீட்டிற்கு செல்ல கதவை பூட்டிய ரூபாவோ அப்பாடா என்று பெருமூச்சு விட்டவள் தேங்க்ஸ் மா...நல்ல வேலை எங்களை காப்பாத்துனீங்க...

இந்த நாலு வருஷமா இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க உங்க அப்பா எங்க அம்மா எங்கன்னு கேட்டு கேட்டு எங்களை பாடா படுத்திட்டாங்க என்கவும் அதுதான் அம்மா சமாளித்துவிட்டேனே என்றார்..

ஆமாம் மா சரியா சமாளிச்சுட்டீங்க..இனிமே இந்த கேள்வி வராது என்கும் ரூபாவை பார்த்து சிரித்தவர் எனக்கு சர்ச்சுக்கு போகணும் மா.இங்க பக்கத்துல எங்க சர்ச் இருக்கென்று சொன்னீங்கனாக்க நானே போயிட்டு வருவேன் என்றார்.

அதுக்கு என்னம்மா,நம்ம மூணு பேருமே போயிட்டு வரலாமே என்று ஜூலி சொல்ல இப்போ ருத்ரனும் தீபனும் வீட்டுக்கு வர மாட்டார்களா என்கவும் அவங்ககிட்ட ஒரு கீ இருக்குது ஒன்னும் பிரச்சனை இல்லைங்கத்தை.மெசேஜ் பண்ணிக்கலாம் என்று சொல்ல,அதேபோல் மூவரும் தயாராகியவர்கள் ஆட்டோவில் ஏறி சர்ச் நோக்கி சென்றனர்.


வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top