Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சி மகி ஆபிஸ்:
மதியம் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களேனு நாதன் கேட்க, சாப்பிட்டுக் கொண்டிருந்த மகியும் கேளுங்க நாதன்.வேலை செய்கிற நேரத்தில் தான் உங்களுக்கு மேலதிகாரி மற்ற இடத்தில் நம் இருவரும் நல்ல பிரண்டு தான்.
உங்க குணம் எனக்கு தெரியும் சார் வெளியில பலா தோல் போல உள்ளே அதன் சுளையைப் போல என்கவும் இப்பொழுது எதுக்கு இந்த முகஸ்துதி?.
நீங்க கேட்க வேண்டியதை கேளுங்க நாதன் என்று சிரித்துக் கொண்டே மகி சாப்பிட,சார் நானும் ரெண்டு மூணு நாளா உங்களை பாத்துட்டு இருக்கேன் உங்க முகமே சரியில்லை..ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க என்னால முடிஞ்சா நான் அதை சால்வ் பண்ணுகிறேன்.
நாதன் இப்படி கேட்பாரென்று எதிர்பார்க்காத மகியோ ஒரு நொடி அமைதியாக இருந்தவர் ஆமா நாதன் மிகப்பெரிய பிரச்சனைதான் அது நிச்சயமா உங்களால சால்வ் பண்ண முடியாது என்றார்...
சார் பிரச்சனை பெருசா சிறுசோ அடுத்த விஷயம் முதல்ல என்னன்னு சொல்லுங்க.என்னால் முடிஞ்சா கண்டிப்பா உங்களுக்கு நான் உதவி செய்வேன்.
வெறும் மேல் அதிகாரியாக மட்டும் கடந்த பத்து வருடமாக நீங்க எங்ககிட்ட பழகவில்லை.எனக்கு ஒரு மூத்த அண்ணன் போல தான் எல்லா நேரத்திலும் சிறந்த அறிவுரையை சொல்லிருக்கீங்க சார் அந்த உரிமையில் தான் கேட்கிறேன் வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க என்றார்..
நான் அப்படி எதுவும் நினைக்கல நாதன் என்றவர் பின்னர் தனது மகள் கல்யாணம் பண்ணிக் கொண்ட விஷயத்தையும் தற்போது எஸ்தர் வீட்டை விட்டு போனதையும் சொல்லி வருத்தப்பட்டார்.
இப்படி ஒரு விஷயம் இருக்குமென்பதை நாதன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பதால் என்ன சார் சொல்றீங்களென்று அதிர்ந்து போனார்..
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க சார்
இந்த காலத்து பொண்ணும் பையனும் அவங்க வாழ்க்கையை அவங்களே தேர்ந்தெடுக்குறாங்க சார்.சிலது நல்லதா போகுது சிலது தப்பா போகுது. பொண்ணு விஷயத்தை ஒன்னும் பண்ண முடியாது அது அவங்களோட வாழ்க்கை ஆனா நீங்க கொஞ்சம் யோசனை பண்ணிருக்கலாம் சார்.
வனிச்சூர்:
அப்புச்சி அப்புச்சி ஐயோ அப்புச்சி எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் உனக்கு காதுல விழுதா இல்லையானு செழியன் தனது சின்ன தாத்தாவிடம் கத்த,வீரையனோ மாடுகளுக்கு புல் எடுத்து போட்டுக் கொண்டிருந்தாரே தவிர,தனது பேரன் கூப்பிடுவதை காதில் வாங்கவேயில்லை...
ஏன் அப்புச்சி இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டு வந்துருக்கேன்? எனக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன் அது என்ன தெய்வ குத்தமா?
உம்பாட்டுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?
பேரனின் கெஞ்சலையும் கணவரின் முறுக்கலையும் பார்த்த வீராயி பாட்டியோ ஏன்யா எம்புட்டு நேரமா செழியன் கூப்புடுறான்,வாயை திறந்து பேசினால் உன் வாய்ல இருக்கும் பவளம் கொட்டிடுமோ?.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தாத்தாவோ மனைவியின் பக்கம் திரும்பியவர் ஏண்டி...அவ்வளவு திமிரா?.எவ்வளவு அதப்பு இருந்தா எங்க அய்யன் பேர சொல்லுவனு கோவமாக பார்த்தார்.
ஏய்யா கூப்பிட பேர் வச்சிட்டு என் அய்யன் பேரு நொய்யன் பேருனா?.
வேற எப்படி தான்யா கூப்பிட சொல்லுற??
அப்பாயிஈஈஈ...
இப்போது ரொம்ப முக்கியம் என்றவன் யோவ் தாத்தா என்க... இங்க பாருடி எவனும் தாத்தா நோத்தானு கூப்பிட வேண்டாம்.போய் அவன் அவன் வேலையை பார்க்க சொல்லு.
நான் கூப்பிடாமல் மேல தெரு வெள்ளையம்மா பேரன் கூப்பிடணுமோ என்று செழியன் கேட்க.... அடேய் என்று அதிர்ந்து போய் திரும்பிய தாத்தாவோ தனது மனைவியை பார்க்க அவரோ கணவரை தான் முறைத்துக் கொண்டு நின்றார்....
ஓஓஓஓஓ இப்படியா சங்கதி?.
அப்போ இன்னும் அவ கூட தான் இந்த நொய்யா சுத்திட்டு கிடக்குறீரோ?
எதேஏஏஏ... அடியேய் அவள் கிட்ட நான் பேசியே பத்து நாள் ஆகுது டி...அவ எங்கே ஊர்ல இருக்கா???மவள் சாந்தி வீட்டுக்கு போய் பத்து நாள் ஆகுதே என்று ஒரு ஆர்வத்தில் உலரிகொட்ட.
ஹா ஹா ஹா என்று சிரித்த செழியன் அப்புச்சி உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றான்...
அடப்பாவி குடி கெடுத்தவனே ஏன் டா இப்படி?நான் ஒன்னும் கோவமா இல்லை நீ போய் சாப்பிடு போ போ என்று பேரனை விரட்ட,யோவ் இப்ப எதுக்கு அப்புவை விரட்டுற?.கொஞ்சம் கூட வெக்கமாக இல்லையா?
புள்ளைக்கு சம்பந்தம் போட்டு அதோட பேர புள்ளைய தூக்கியாச்சி இன்னமும் உன் முன்னால் காதலிய நினைச்சிட்டு இருக்கியே நீயெல்லாம் பஞ்சாயத்துகாரனா?
இவர் ரொம்ப யோக்கியர் போல இதுல என் பேரனை நொட்டணம் பேசுறது?
இந்தா என் அண்ணன் கிட்ட போறேன்யா இதுக்கு ஒரு முடிவு தெரியாமல் இந்த வீட்டு படியேற மாட்டாள் இந்த வீராயி என்றவாறு கோவமா திரும்பி போக....
அடியேய் கமலாஆஆஆ...
ச்சை... ஏய் வீராயி செத்த நில்லுடி...
சும்மாவே உன் அண்ணன் மணி கணக்கா பேசுவான் டி.இப்போது இது தெரிஞ்சால் அவ்வளவு தான்...காது ரெண்டும் அறுந்து கீழ விழுந்துடும்..
ஏற்கனவே வெள்ளையம்மா ஒருநாள் என்னை மாமானு கூப்பிட்டான்னு அருவாளை எடுத்து வெட்ட வந்தான் டி. இந்த வயசுல நான் பஞ்சாயத்துல போய் நின்னாக்க என் மானம் என்ன ஆவது செத்த நில்லடி என்று கூப்பிட்டுக் கொண்டு வீரையன் பின்னாடி போக ஏன் அப்புச்சி அப்பயே ஒழுங்கா என்கிட்ட பேசி இருந்தாக்க இந்த வினை உனக்கு வந்திருக்குமா?.
நல்லா வேணும் வாங்கி கட்டு என்று செழியன் சொல்ல சண்டாள பாவி ஏண்டா இப்படி பண்ணுனனு பேரனை முறைத்து பார்த்தவர் ஒழுங்கு மரியாதையா போய் உன் அப்பாயியை தடுத்து நிறுத்துடா.
உன் தாத்தன் பேசுவது சத்தியமா தாங்க முடியாதுடானு தலையில் கை வைக்க அப்போ ஒழுங்கா முதல்ல நீ என்கிட்ட பேசு என்றான்.
ஆமா நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி இப்ப ரெண்டு பேரும் பேசிக்கலனா வீட்ல சோறு ஆகாது பாரு போடா என்றவர் மனைவியை தடுத்து நிறுத்துவதற்காக தனது வயதையும் மறந்து வேகமாக ஓடினார்...
வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டது ஹா ஹா என்று சிரித்தவனோ தனது வீட்டிற்கு வந்தான்.அப்பொழுது கஸ்தூரியோ கவினை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்...
அப்புகுட்டி சாப்டீங்களானு தனது அண்ணன் மகனை கேட்க,குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை தனது சித்தப்பாவை பார்த்து பொக்கை பல் தெரிய சிரித்தது..
என்னங்கண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா என்க,ஆமாங்க தம்பி உங்க அண்ணன் பேங்க்கு போறாராம் பாஸ்புக் எடுத்து வைக்க சொன்னாரு என்கவும் சரி என்றபடி வீட்டிற்குள் வந்தவன் அம்மா என்கவும் வீடே அமைதியாக இருந்தது.
எங்க யாரையுமே காணும் என்றவன் தோட்டத்து கதவு வழியாக வெளியே வந்து பார்க்க ஷமீராவோ மருதாணி பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஓய் என்று குரல் கொடுக்க புருஷனின் குரலை கேட்டவள் திரும்பிப் பார்க்க என்னடி பண்ணிட்டு இருக்க?.
ஏன் பார்த்தா கண்ணு தெரியலையானு தனது வேலையை தொடர்ந்தாள்..
வீட்டில் யாரையுமே காணுமே என்க,எல்லாரும் தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க என்கவும், தாத்தா விட்டிருக்கா?ஏன்டி என்றான்.தெரியாது என்றவளிடம் சரி மனுஷனுக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது போடுவியா போட மாட்டியா?.
இதோ வரேன் என்றவள் பறித்த மருதாணியை எடுத்துக்கொண்டு பூமிக்கு அதிராமல் பதுமையாய் புடவையில் எழில் கொஞ்சும் அழகோடு நடந்து வருபவளையே ரசித்துப் பார்த்தான்.
கணவரின் பார்வை தன்னை ரசிப்பதை உணர்ந்தவள் கீழே குனிந்து கொண்டே வர தரையில் என்னத்த போட்ட தேடிட்டு இருக்க என்றான்.தன்னை தான் கிண்டல் பண்ணுகிறான் என்பது புரிந்தவள் எதுவும் சொல்லாமல் அவனைத் தாண்டி போக...
ஏண்டி குத்தகல்லு போல இங்க ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு போனா என்னடி அர்த்தம் என்றபடியே மனைவியை பிடித்து இழுத்தான்..
ஐயோ என்ன பண்றீங்க யாராவது பாத்தா தப்பா நினைக்க போறாங்க கதவு வேற திறந்து இருக்குங்க.
உனக்கு அது தான் பெரும் கவலையா இப்ப பாருனு மனைவியை கையில் ஏந்தி கொண்டு போக அய்யோ இறக்கி விடுங்களென்று கால்களை உதறி இறங்க முயன்றாள்..
அடியே நீ இப்படி குதிச்சிட்டு இருந்தால் நாம ரெண்டு பேரும் தான் டி கீழே விழ வேண்டும் என்கவும் அப்ப நீங்க என்னை கீழே இறக்கி விடுங்கன்னு கத்திக்கிட்டே இருக்கவும் இம்சை பிடிச்சவளென்ற இறக்கி விட்டவன் சரி சாப்பாடு எடுத்து வை என்று கையை கழுவச் சென்றான்..
ஷமீராவும் ஹாட் பாக்ஸில் இருந்த டிபனை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிளில் வைக்க செழியனும் வந்து உட்கார்ந்தான்.
நீ சாப்பிட்டியா டி?
இன்னும் இல்லை என்றாள்.சாப்பிட வேண்டியதுதானே என்கவும் இதோ சாப்பிடணும் என்றவளை பார்த்தவன் புருஷனுக்காக வெயிட்டிங்கோ என்று சிரித்தான்..
அப்படி எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.எனக்கு பசிக்கல அதனால் இன்னும் சாப்பிடல. நீங்கள் முதல்ல சாப்பிடுங்களென்று சூடான இட்லியை வைத்து சாம்பார் ஊற்றி சட்னி வைக்க, அதை என் முகத்தை பார்த்து சொல்லுடி கீழ குனிஞ்சுகிட்டே சொன்னா?அங்கயா உன் புருஷன் உட்கார்ந்து இருக்கான்.
எங்க பார்த்து சொன்னா என்னவாம்? அதான் உங்களுக்கு காது நல்லா கேட்குமே வேற என்ன என்றாள்...
ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு நிறைவேறிடுச்சிடி.இந்த வீட்ல நீ பரிமாற நான் உன்னை ரசித்துக் கொண்டே சாப்பிடணும்னு என்று சொல்லிக் கொண்டே இரண்டு வாய் சாப்பிட்டவன் ஒரு வாய் உணவை தன்னவளுக்கு நீட்டினான்..
கணவனை நிமிர்ந்து பார்க்க கண்ணடித்து சாப்பிடு என்று சொல்லவும் அதை வாங்கியவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன் கொஞ்சிக் கொண்டே சில பல சேட்டைகளும் செய்தபடி அவளுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்தான்....
மதியம் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களேனு நாதன் கேட்க, சாப்பிட்டுக் கொண்டிருந்த மகியும் கேளுங்க நாதன்.வேலை செய்கிற நேரத்தில் தான் உங்களுக்கு மேலதிகாரி மற்ற இடத்தில் நம் இருவரும் நல்ல பிரண்டு தான்.
உங்க குணம் எனக்கு தெரியும் சார் வெளியில பலா தோல் போல உள்ளே அதன் சுளையைப் போல என்கவும் இப்பொழுது எதுக்கு இந்த முகஸ்துதி?.
நீங்க கேட்க வேண்டியதை கேளுங்க நாதன் என்று சிரித்துக் கொண்டே மகி சாப்பிட,சார் நானும் ரெண்டு மூணு நாளா உங்களை பாத்துட்டு இருக்கேன் உங்க முகமே சரியில்லை..ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க என்னால முடிஞ்சா நான் அதை சால்வ் பண்ணுகிறேன்.
நாதன் இப்படி கேட்பாரென்று எதிர்பார்க்காத மகியோ ஒரு நொடி அமைதியாக இருந்தவர் ஆமா நாதன் மிகப்பெரிய பிரச்சனைதான் அது நிச்சயமா உங்களால சால்வ் பண்ண முடியாது என்றார்...
சார் பிரச்சனை பெருசா சிறுசோ அடுத்த விஷயம் முதல்ல என்னன்னு சொல்லுங்க.என்னால் முடிஞ்சா கண்டிப்பா உங்களுக்கு நான் உதவி செய்வேன்.
வெறும் மேல் அதிகாரியாக மட்டும் கடந்த பத்து வருடமாக நீங்க எங்ககிட்ட பழகவில்லை.எனக்கு ஒரு மூத்த அண்ணன் போல தான் எல்லா நேரத்திலும் சிறந்த அறிவுரையை சொல்லிருக்கீங்க சார் அந்த உரிமையில் தான் கேட்கிறேன் வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க என்றார்..
நான் அப்படி எதுவும் நினைக்கல நாதன் என்றவர் பின்னர் தனது மகள் கல்யாணம் பண்ணிக் கொண்ட விஷயத்தையும் தற்போது எஸ்தர் வீட்டை விட்டு போனதையும் சொல்லி வருத்தப்பட்டார்.
இப்படி ஒரு விஷயம் இருக்குமென்பதை நாதன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பதால் என்ன சார் சொல்றீங்களென்று அதிர்ந்து போனார்..
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க சார்
இந்த காலத்து பொண்ணும் பையனும் அவங்க வாழ்க்கையை அவங்களே தேர்ந்தெடுக்குறாங்க சார்.சிலது நல்லதா போகுது சிலது தப்பா போகுது. பொண்ணு விஷயத்தை ஒன்னும் பண்ண முடியாது அது அவங்களோட வாழ்க்கை ஆனா நீங்க கொஞ்சம் யோசனை பண்ணிருக்கலாம் சார்.
வனிச்சூர்:
அப்புச்சி அப்புச்சி ஐயோ அப்புச்சி எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் உனக்கு காதுல விழுதா இல்லையானு செழியன் தனது சின்ன தாத்தாவிடம் கத்த,வீரையனோ மாடுகளுக்கு புல் எடுத்து போட்டுக் கொண்டிருந்தாரே தவிர,தனது பேரன் கூப்பிடுவதை காதில் வாங்கவேயில்லை...
ஏன் அப்புச்சி இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டு வந்துருக்கேன்? எனக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன் அது என்ன தெய்வ குத்தமா?
உம்பாட்டுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?
பேரனின் கெஞ்சலையும் கணவரின் முறுக்கலையும் பார்த்த வீராயி பாட்டியோ ஏன்யா எம்புட்டு நேரமா செழியன் கூப்புடுறான்,வாயை திறந்து பேசினால் உன் வாய்ல இருக்கும் பவளம் கொட்டிடுமோ?.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தாத்தாவோ மனைவியின் பக்கம் திரும்பியவர் ஏண்டி...அவ்வளவு திமிரா?.எவ்வளவு அதப்பு இருந்தா எங்க அய்யன் பேர சொல்லுவனு கோவமாக பார்த்தார்.
ஏய்யா கூப்பிட பேர் வச்சிட்டு என் அய்யன் பேரு நொய்யன் பேருனா?.
வேற எப்படி தான்யா கூப்பிட சொல்லுற??
அப்பாயிஈஈஈ...
இப்போது ரொம்ப முக்கியம் என்றவன் யோவ் தாத்தா என்க... இங்க பாருடி எவனும் தாத்தா நோத்தானு கூப்பிட வேண்டாம்.போய் அவன் அவன் வேலையை பார்க்க சொல்லு.
நான் கூப்பிடாமல் மேல தெரு வெள்ளையம்மா பேரன் கூப்பிடணுமோ என்று செழியன் கேட்க.... அடேய் என்று அதிர்ந்து போய் திரும்பிய தாத்தாவோ தனது மனைவியை பார்க்க அவரோ கணவரை தான் முறைத்துக் கொண்டு நின்றார்....
ஓஓஓஓஓ இப்படியா சங்கதி?.
அப்போ இன்னும் அவ கூட தான் இந்த நொய்யா சுத்திட்டு கிடக்குறீரோ?
எதேஏஏஏ... அடியேய் அவள் கிட்ட நான் பேசியே பத்து நாள் ஆகுது டி...அவ எங்கே ஊர்ல இருக்கா???மவள் சாந்தி வீட்டுக்கு போய் பத்து நாள் ஆகுதே என்று ஒரு ஆர்வத்தில் உலரிகொட்ட.
ஹா ஹா ஹா என்று சிரித்த செழியன் அப்புச்சி உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றான்...
அடப்பாவி குடி கெடுத்தவனே ஏன் டா இப்படி?நான் ஒன்னும் கோவமா இல்லை நீ போய் சாப்பிடு போ போ என்று பேரனை விரட்ட,யோவ் இப்ப எதுக்கு அப்புவை விரட்டுற?.கொஞ்சம் கூட வெக்கமாக இல்லையா?
புள்ளைக்கு சம்பந்தம் போட்டு அதோட பேர புள்ளைய தூக்கியாச்சி இன்னமும் உன் முன்னால் காதலிய நினைச்சிட்டு இருக்கியே நீயெல்லாம் பஞ்சாயத்துகாரனா?
இவர் ரொம்ப யோக்கியர் போல இதுல என் பேரனை நொட்டணம் பேசுறது?
இந்தா என் அண்ணன் கிட்ட போறேன்யா இதுக்கு ஒரு முடிவு தெரியாமல் இந்த வீட்டு படியேற மாட்டாள் இந்த வீராயி என்றவாறு கோவமா திரும்பி போக....
அடியேய் கமலாஆஆஆ...
ச்சை... ஏய் வீராயி செத்த நில்லுடி...
சும்மாவே உன் அண்ணன் மணி கணக்கா பேசுவான் டி.இப்போது இது தெரிஞ்சால் அவ்வளவு தான்...காது ரெண்டும் அறுந்து கீழ விழுந்துடும்..
ஏற்கனவே வெள்ளையம்மா ஒருநாள் என்னை மாமானு கூப்பிட்டான்னு அருவாளை எடுத்து வெட்ட வந்தான் டி. இந்த வயசுல நான் பஞ்சாயத்துல போய் நின்னாக்க என் மானம் என்ன ஆவது செத்த நில்லடி என்று கூப்பிட்டுக் கொண்டு வீரையன் பின்னாடி போக ஏன் அப்புச்சி அப்பயே ஒழுங்கா என்கிட்ட பேசி இருந்தாக்க இந்த வினை உனக்கு வந்திருக்குமா?.
நல்லா வேணும் வாங்கி கட்டு என்று செழியன் சொல்ல சண்டாள பாவி ஏண்டா இப்படி பண்ணுனனு பேரனை முறைத்து பார்த்தவர் ஒழுங்கு மரியாதையா போய் உன் அப்பாயியை தடுத்து நிறுத்துடா.
உன் தாத்தன் பேசுவது சத்தியமா தாங்க முடியாதுடானு தலையில் கை வைக்க அப்போ ஒழுங்கா முதல்ல நீ என்கிட்ட பேசு என்றான்.
ஆமா நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி இப்ப ரெண்டு பேரும் பேசிக்கலனா வீட்ல சோறு ஆகாது பாரு போடா என்றவர் மனைவியை தடுத்து நிறுத்துவதற்காக தனது வயதையும் மறந்து வேகமாக ஓடினார்...
வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டது ஹா ஹா என்று சிரித்தவனோ தனது வீட்டிற்கு வந்தான்.அப்பொழுது கஸ்தூரியோ கவினை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்...
அப்புகுட்டி சாப்டீங்களானு தனது அண்ணன் மகனை கேட்க,குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை தனது சித்தப்பாவை பார்த்து பொக்கை பல் தெரிய சிரித்தது..
என்னங்கண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா என்க,ஆமாங்க தம்பி உங்க அண்ணன் பேங்க்கு போறாராம் பாஸ்புக் எடுத்து வைக்க சொன்னாரு என்கவும் சரி என்றபடி வீட்டிற்குள் வந்தவன் அம்மா என்கவும் வீடே அமைதியாக இருந்தது.
எங்க யாரையுமே காணும் என்றவன் தோட்டத்து கதவு வழியாக வெளியே வந்து பார்க்க ஷமீராவோ மருதாணி பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஓய் என்று குரல் கொடுக்க புருஷனின் குரலை கேட்டவள் திரும்பிப் பார்க்க என்னடி பண்ணிட்டு இருக்க?.
ஏன் பார்த்தா கண்ணு தெரியலையானு தனது வேலையை தொடர்ந்தாள்..
வீட்டில் யாரையுமே காணுமே என்க,எல்லாரும் தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க என்கவும், தாத்தா விட்டிருக்கா?ஏன்டி என்றான்.தெரியாது என்றவளிடம் சரி மனுஷனுக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது போடுவியா போட மாட்டியா?.
இதோ வரேன் என்றவள் பறித்த மருதாணியை எடுத்துக்கொண்டு பூமிக்கு அதிராமல் பதுமையாய் புடவையில் எழில் கொஞ்சும் அழகோடு நடந்து வருபவளையே ரசித்துப் பார்த்தான்.
கணவரின் பார்வை தன்னை ரசிப்பதை உணர்ந்தவள் கீழே குனிந்து கொண்டே வர தரையில் என்னத்த போட்ட தேடிட்டு இருக்க என்றான்.தன்னை தான் கிண்டல் பண்ணுகிறான் என்பது புரிந்தவள் எதுவும் சொல்லாமல் அவனைத் தாண்டி போக...
ஏண்டி குத்தகல்லு போல இங்க ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு போனா என்னடி அர்த்தம் என்றபடியே மனைவியை பிடித்து இழுத்தான்..
ஐயோ என்ன பண்றீங்க யாராவது பாத்தா தப்பா நினைக்க போறாங்க கதவு வேற திறந்து இருக்குங்க.
உனக்கு அது தான் பெரும் கவலையா இப்ப பாருனு மனைவியை கையில் ஏந்தி கொண்டு போக அய்யோ இறக்கி விடுங்களென்று கால்களை உதறி இறங்க முயன்றாள்..
அடியே நீ இப்படி குதிச்சிட்டு இருந்தால் நாம ரெண்டு பேரும் தான் டி கீழே விழ வேண்டும் என்கவும் அப்ப நீங்க என்னை கீழே இறக்கி விடுங்கன்னு கத்திக்கிட்டே இருக்கவும் இம்சை பிடிச்சவளென்ற இறக்கி விட்டவன் சரி சாப்பாடு எடுத்து வை என்று கையை கழுவச் சென்றான்..
ஷமீராவும் ஹாட் பாக்ஸில் இருந்த டிபனை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிளில் வைக்க செழியனும் வந்து உட்கார்ந்தான்.
நீ சாப்பிட்டியா டி?
இன்னும் இல்லை என்றாள்.சாப்பிட வேண்டியதுதானே என்கவும் இதோ சாப்பிடணும் என்றவளை பார்த்தவன் புருஷனுக்காக வெயிட்டிங்கோ என்று சிரித்தான்..
அப்படி எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.எனக்கு பசிக்கல அதனால் இன்னும் சாப்பிடல. நீங்கள் முதல்ல சாப்பிடுங்களென்று சூடான இட்லியை வைத்து சாம்பார் ஊற்றி சட்னி வைக்க, அதை என் முகத்தை பார்த்து சொல்லுடி கீழ குனிஞ்சுகிட்டே சொன்னா?அங்கயா உன் புருஷன் உட்கார்ந்து இருக்கான்.
எங்க பார்த்து சொன்னா என்னவாம்? அதான் உங்களுக்கு காது நல்லா கேட்குமே வேற என்ன என்றாள்...
ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு நிறைவேறிடுச்சிடி.இந்த வீட்ல நீ பரிமாற நான் உன்னை ரசித்துக் கொண்டே சாப்பிடணும்னு என்று சொல்லிக் கொண்டே இரண்டு வாய் சாப்பிட்டவன் ஒரு வாய் உணவை தன்னவளுக்கு நீட்டினான்..
கணவனை நிமிர்ந்து பார்க்க கண்ணடித்து சாப்பிடு என்று சொல்லவும் அதை வாங்கியவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன் கொஞ்சிக் கொண்டே சில பல சேட்டைகளும் செய்தபடி அவளுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்தான்....