Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்:
ஏத்தா எஸ்தரு எதுக்கு புள்ள அழுகுற என்றவாறு உள்ளே வந்தார் எஸ்தர்- அந்தோணியின் சித்தியான சாரதா.
அய்யோ அம்மா....இந்த பாவி மகள் பண்ணிய காரியத்தை என்னனு நான் சொல்லுவேன்.உங்க மருமவன் வந்தா என்னை கொன்னு போட்டுறுவாரேயென தலையில் அடித்துக்கொண்டு எஸ்தர் அழ...
ஏ ராணி மொதல்ல கதவை சாத்துடி..
ஊர்ல இருக்கவங்களுக்கு நீங்களே படத்தை போட்டு காட்டுறீயேலோனு சத்தம் போட இதோ சாத்துறேனுங்கத்தைனு முன் கதவை சாற்றி தாழ்ப்பாள் போட,சொல்லு எஸ்தரு என்னாச்சி?
எங்கே உன் மவள்?
என்ன பண்ணுனா அந்த சீமச்சினு கேட்க,அழுது கொண்டே எஸ்தர் விஷயத்தை சொல்ல ஆண்டவரே என்றபடி தனது நெஞ்சில் கையை வைத்தவர்,அய்யா அந்தோணி மகிக்கு போனை போடு என்க,சித்தி அது வந்துனு தயங்கினார்.
என்னப்பா...?
"போனை போட்டு குடு நான் பேசுறேன்"
வேலைக்கு கிளம்புற நேரம்மா என்றவாறு அங்கிருந்த கடிகாரத்தை பார்க்க,காலை 9 மணியென்று காட்டியது.
தனது போனிலிருந்து தங்கை கணவருக்கு கால் பண்ணிய அந்தோணி தனது சித்தியிடம் போனை கொடுக்க,அந்த பக்கம் அட்டென் பண்ணிய மகி சொல்லுங்க மச்சானென்க,மகி நான் அத்தை பேசுறேன்ப்பா.
சொல்லுங்கத்தை...
நல்லா இருக்கீங்களா?
வீட்ல எல்லாரும் நலம்தானே?
எல்லாரும் நல்லாருக்காங்க,நீ வேலைக்கு கிளம்பிட்டியா மகியென்று பாட்டி கேட்க,இல்லைங்கத்தை.
கொஞ்சம் வேலை இருக்கு அதனால் லேட்டா தான் போறேனென்றவர் சொல்லுங்கத்தை எதாவது பிரச்சினையா?
ம்ம் நீ லீவ் சொல்லிட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வாப்பா.
அத்தை என்னாச்சி?
என்னனு சொல்லுங்க.அங்க யாருக்கு என்னவென்று மகி பதற எஸ்தருக்குதான் உடம்பு சரியில்லைப்பா நீ வா.
அப்படியா?
நேற்று பேசுனேன் உன் மவள் எதுவுமே சொல்லலையே?,சரிங்கத்தை இதோ நான் கிளம்பி வரேனென்று போனை வைத்தார்.
ராணி உன் மருமவள் ரூமுக்குள்ள போய் எதாவது கிடைக்குதானு அலசி பாரென்க,சரிங்கத்தை என்றவாறு கீழே இருக்கும் அவளது அறையில் தேடி பார்க்க எதுவும் கிடைக்கவில்லை.
அத்தை இங்க ஒன்னும் இல்லையென்க,மேலே தானே படிப்பாள்.
அங்க போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா என்றதும் ம்ம் என்றவாறு படியில் ஏறி மேலே வந்தவர் கதவை திறந்து உள்ளே போய் பார்த்தவர் ஷெல்பில் இருந்த புத்தகங்களிலும் நோட்டுகளிலும் தேடி பார்க்க எந்த பலனுமில்லை.
இரண்டாவது செல்பில் அவள் போட்டிருந்த நகைகள் இருந்தது.
கட்டிலுக்கு கீழே குனிந்து தேட அங்கும் வெறுமையாகவே இருக்க என்னடா இது.இவ்வளவு தெளிவா கிளம்பி போயிருக்காளே...அப்போ முன்னவே இவள் இந்த பிளானில் இருப்பாளோ என்ற யோசனையோடே கீழே வந்தார்.
என்ன ராணி எதாவது துப்பு கிடைச்சிதா?
இல்லைங்கத்தை.நல்லா பிளான் பண்ணி கிளம்பிருக்காள்.
எங்கே போனாளோ?
அவன் யாரு?
என்ன ஊருனு தெரியாமல் எப்படிங்கத்தை தேட?
வழி கிடைக்கும்.நீ போய் எஸ்தருக்கு எதாவது குடிக்க கொண்டு வந்து குடு.
அதேபோல் நால்வருக்கும் டீ போட்டு எடுத்து வர அழுது கொண்டிருந்த எஸ்தரோ எனக்கு வேண்டாங்கண்ணி...கொஞ்சம் வெசம் இருந்தால் குடுங்க அந்த மனுசன் வருவதற்குள் நான் குடிச்சிடுறேனென்று அழுதார்..
ஏத்தா என்ன நடந்து போயிருச்சு இப்போ இப்படி எல்லாம் பேசுற ஊர்ல உலகத்துல நடக்காதது ஒன்னும் நம்ம பொண்ணு செஞ்சிட்டு போகல புரியுதா..
முதல்ல அமைதியா இருத்தா மகி வந்த பின்னர் எல்லாத்தையும் பேசிக்கலாம் முதல்ல அதை வாங்கி குடியென்று தனது அக்கா மகளுக்கு ஆறுதல் சொல்ல,சித்தியின் வார்த்தையை மறுக்க முடியாமல் நாத்தனாரிடமிருந்து வாங்கி மனதே இல்லாமல் குடித்தார்.
மதுரை:
மனைவியோடு முதல் முதலாக வண்டியில் போவது உள்ளுக்குள் பேரானந்தமாக இருந்தது.கடந்து மூன்று வருடமாக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் தவிர இதுவரை அருகில் கூட நின்று பேசியதில்லை. இதை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
இருவரின் பேச்சுகளோ போனில் தான் அதிகமாக இருந்தது ஏன் ஃபோனில் தான் இருவரும் வாழ்ந்தார்களென்று சொன்னால் அது மிகையில்லை.
மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும் போதெல்லாம் கணவனின் தோளோடு போய் இடித்து உட்கார்ந்திருந்த ஷமீராவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
கண்ணாடி வழியாக மனைவியின் அவஸ்தையை ரசித்துக்கொண்டே செழியனும் பைக்கை ஒட்டியவன் அரை மணி நேரத்தில் டவுனுக்குள் இருக்கும் அந்த பெரிய துணி கடையின் பார்க்கிங்கில் வந்து வண்டியை நிறுத்தினான்.
பின்னர் மனைவியோடு படியில் ஏறி மேலே வந்தவன் லேடிஸ் செக்சன் எதுவென்று கேட்டு லிப்டில் ஏறி மூன்றாவது ப்ளோருக்கு வந்தவன் போய் உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கிக்கோ...
நான் இங்கே இருக்கிறேனென்று சொல்லிவிட்டு தனது ஃபோனை எடுத்துக் கொண்டு கண்ணனிடம் பேச தனியாக வந்தான்.
ஷமீராவோ இப்போதைக்கு இரண்டு ஜோடி துணி போதுமென்று நினைத்தவள் விலையைப் பார்த்து இரண்டு செட் எடுத்து அதற்கு தேவையான மற்ற அசசரீஸ் வாங்கிக்கொண்டு திரும்பி புருஷனை தேட சற்று தூரத்தில் செழியன் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
நேராக அவனிடம் வந்தாள்.
ஏதோ ஒரு உந்துதலில் திரும்பிப் பார்த்த செழியன் நான் அப்புறம் பேசுறேன்டா என்று ஃபோனை வைத்தவன் எடுத்துட்டியா என்க ஹம் என்றாள்...
அதுக்குள்ள எடுத்துட்டியானு ஆச்சரியமாக கேட்க ஆமா என்றாள்.
சரி வா என்று மனைவியை அழைத்து போனவன் அவள் எடுத்து வைத்த துணிகளை பார்த்து முறைத்து விட்டு அவனே மேலும் மூன்று ஜோடி வாங்கியவன், இதுக்கும் தேவையான இன்னர்ஸெல்லாம் நான் தான் வாங்கணுமானு கேட்க கணவனின் வார்த்தையில் அதிர்ந்து போனவள் பின்னர் சுற்றம் பார்த்து விட்டு தன்னவனை முறைக்க, போய் எடுத்துக்க டி.
"ஒரு வாரத்துக்கு தேவையானது வாங்கு"..
உன் புருஷன் சம்பாதித்த பணம் நிறைய இருக்குடி.உனக்கு என்ன தேவையோ தைரியமா வாங்கென்று மனைவியின் தோளின் தட்டி சொல்ல,ஷமீராவோ அவனிடம் பணம் இருக்குமா இல்லையா என்ற யோசனையோடுதான் இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையிலும் ஆனால் தரமானதையும் இவ்வளவு நேரம் தேடிப் பார்த்து வாங்கினாள்...
பின்னர் இரண்டு நைட்டியை எடுத்தவள் மற்ற பொருட்களை வாங்கிக் கொண்டு பில்லுக்கு அனுப்ப தனது ஏடிஎம் கார்டு கொடுத்து பே பண்ணி விட்டு மனைவியோடு வெளியே வந்தவன் நேராக பக்கத்திலிருக்கும் பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போனான்.
இங்கே எதற்கென்று அவள் கேட்க இவ்வளவு நாள் நீ இருந்தது வேற இனிமே என்கூட வாழ போற வாழ்க்கை வேற..அப்போ உனக்கு கண்டிப்பாக இதெல்லாம் தேவையென்று அங்கிருந்த பொட்டு மஞ்சள் குங்குமத்தை காட்டி சொல்லவும்..கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பது ஷமீராவுக்கு புரிந்தது..பின்னர் அவள் வழக்கமாக யூஸ் பண்ணும் பொருட்களையும் வாங்க அதற்கு பணத்தை கொடுத்தான்.
ஏதாவது குடிக்கிறியா டி என்க, இருக்கும் வெயிலில் ஏதாவது ஜில்லென்று குடித்தால் தேவலாம் போலென்று தானிருந்ததால் ஹம் என்று சொல்ல தனது மனைவிக்கு ஜிகர்தண்டா பிடிக்கும் என்பதால் அங்கிருக்கும் பேமஸான கடைக்கு அழைத்துப் போனவன் இரண்டு ஜிகர்தண்டாவை ஆர்டர் பண்ணி உட்கார சிறிது நிமிடத்தில் அவர்களின் டேபிளின் மேல் இரண்டு ஜிகர்தண்டாவை வெயிட்டரும் வந்து வைத்து சென்றார்.
எடுத்து சாப்பிடுடி என்கவும் ம்ம் என்றவள் அவளுக்கு பிடித்தமானதை விரும்பி சாப்பிட ஆரம்பித்தாள்.எதிரில் உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்தபடி செழியனும் சாப்பிட,இவர் இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் நம்மளால எப்படி இயல்பாக இருக்க முடியுமென்று தனக்குள்ளே முணுமுணுத்தாள்.
அதன் பின்னர் வேறு ஏதாவது வேணுமாடி என்க, இல்ல போதும் என்கவும் சரி வீட்டுக்கு கிளம்பலாமா?
அண்ணா அண்ணிக்கும் வாங்கிட்டு போகலாம் என்றாள்.
நாலு பார்சல் வரும்போது சொல்லிட்டு தாண்டி வந்தேன்.வா என்க ஷமீராவும் எதுவும் சொல்லாமல் அவன் பின்னாடியே வந்தாள்.பின்னர் இருவரும் வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
பானுவும் நசீராவும் மதிய உணவை சமைத்து விட்டு இவர்களுக்காக காத்திருந்தனர்.
இரண்டு கையிலும் பையோடு உள்ளே வந்தனர்.பானு இந்தா என்ற செழியனோ ஜிகர்தண்டா இருக்கும் கவரை கொடுக்க அதை வாங்கிப் போய் ஃப்ரிட்ஜில் வைத்தவள் அண்ணா முதலில் சாப்பிடலாம் என்கவும் சரிமா என்றான்.
பின்னர் பொண்ணு மாப்பிள்ளை இருவருக்கும் தலைவாழை இலையில் விருந்தை பரிமாறி விட்டு, சில பல கலாட்டாக்களோடு மூன்று ஜோடியும் சாப்பிட்டு முடித்தனர்.
தீரனும் மாறனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு தங்களது வேலையை பார்க்க கிளம்பி சென்றுவிட நசீராவும் பானுவும் ஷமீராவோடு பொதுவாக பேசிக் கொண்டிருக்க செழியனும் சிறிது நேரம் படுக்கிறேனென்று ரூமிற்குள் சென்றுவிட்டான்.
நேரமும் கடந்து சென்றது.
மாலை போய் இரவு வேளையும் வர அவளுங்களிடம் சொல்லிக்கொண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வனிச்சூருக்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் போய் இருவரோடும் நின்று கொண்டிருந்த மாறனும் தீரனும் எது நடந்தாலும் உடனே இன்பார்ம் பண்ணுடா...
"தேவையில்லாத பிரச்சினை வேண்டாம்".
நீ தான் உடனே போறேன்னு சொல்ற எனக்கு ஒன்னும் மனசு சரியில்லை என்று தீரன் சொல்ல,அவன் முடிவெடுத்தது நல்லது தான்.எத்தனை நாளைக்கு இப்படி தெரியாமல் இருக்க முடியும் சொல்லு ணா?
என்னைக்கு இருந்தாலும் இதுக்கு ஒரு தீர்வு தெரிஞ்சுதான் ஆகணுமென்று மாறன் கேட்க,அதுவும் நல்லது தான்டா என்று அரை மனதாகவே சொன்னான்.
பாப்பா அங்க என்ன வேணாலும் நடக்கலாம் நீ கொஞ்சம் பொறுத்துப் போ என்று சொல்லவும் சரிங்க அண்ணா என்றாள்.
இரவு 11 மணிக்கு வனிச்சூருக்கு செல்லும் பேருந்தும் வந்து நிற்க இருவரும் அதில் ஏறி கொண்டவர்கள் நீங்க கிளம்புங்க நாங்க போய்க் கொள்கிறோம் என்க,சரிடா பார்த்து போங்களென்று தீரனும்,மாறனும் அங்கிருந்து சென்றனர்.
சிறிது நிமிடத்தில் பஸ்சும் அங்கிருந்து புறப்பட்டது.கண்டக்டர் டிக்கட் டிக்கெட் என்று கேட்டுக் கொண்டே வர இரண்டு வனிச்சூர் என்றான்.
நம்ம ஊருக்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று ஷமீரா கேட்க காலை 7 மணிக்கு தான் போவோம் டி.
ஓஓஓ அவ்வளவு நேரமா என்க...ஆமா டி ஏன் உனக்கு தெரியாதா?எத்தனை நாளு சொல்லி இருக்கேன் என்றவன் மனைவியோடு கொஞ்சம் நெருங்கி உட்கார,என்ன பண்றீங்க எல்லாம் பக்கத்துல இருக்காங்களென்று முணுமுணுத்தாள்.
ஆமா டி அவங்க வேலையை விட்டுட்டு இப்ப நம்மளை தான் வேடிக்கை பாக்குறாராங்க என்றவாறு மனைவியின் தோளின் மேல் கையை போட்டவன் சரி தூங்கு என்க, ஜன்னல் புறமாக வந்த காற்றோ தாலாட்டு பாடுவது போலிருக்கவும் சிறிது நிமிடத்தில் இருவரும் சீட்டில் சாய்ந்தவாறு தூங்க ஆரம்பித்தனர்.
ஏத்தா எஸ்தரு எதுக்கு புள்ள அழுகுற என்றவாறு உள்ளே வந்தார் எஸ்தர்- அந்தோணியின் சித்தியான சாரதா.
அய்யோ அம்மா....இந்த பாவி மகள் பண்ணிய காரியத்தை என்னனு நான் சொல்லுவேன்.உங்க மருமவன் வந்தா என்னை கொன்னு போட்டுறுவாரேயென தலையில் அடித்துக்கொண்டு எஸ்தர் அழ...
ஏ ராணி மொதல்ல கதவை சாத்துடி..
ஊர்ல இருக்கவங்களுக்கு நீங்களே படத்தை போட்டு காட்டுறீயேலோனு சத்தம் போட இதோ சாத்துறேனுங்கத்தைனு முன் கதவை சாற்றி தாழ்ப்பாள் போட,சொல்லு எஸ்தரு என்னாச்சி?
எங்கே உன் மவள்?
என்ன பண்ணுனா அந்த சீமச்சினு கேட்க,அழுது கொண்டே எஸ்தர் விஷயத்தை சொல்ல ஆண்டவரே என்றபடி தனது நெஞ்சில் கையை வைத்தவர்,அய்யா அந்தோணி மகிக்கு போனை போடு என்க,சித்தி அது வந்துனு தயங்கினார்.
என்னப்பா...?
"போனை போட்டு குடு நான் பேசுறேன்"
வேலைக்கு கிளம்புற நேரம்மா என்றவாறு அங்கிருந்த கடிகாரத்தை பார்க்க,காலை 9 மணியென்று காட்டியது.
தனது போனிலிருந்து தங்கை கணவருக்கு கால் பண்ணிய அந்தோணி தனது சித்தியிடம் போனை கொடுக்க,அந்த பக்கம் அட்டென் பண்ணிய மகி சொல்லுங்க மச்சானென்க,மகி நான் அத்தை பேசுறேன்ப்பா.
சொல்லுங்கத்தை...
நல்லா இருக்கீங்களா?
வீட்ல எல்லாரும் நலம்தானே?
எல்லாரும் நல்லாருக்காங்க,நீ வேலைக்கு கிளம்பிட்டியா மகியென்று பாட்டி கேட்க,இல்லைங்கத்தை.
கொஞ்சம் வேலை இருக்கு அதனால் லேட்டா தான் போறேனென்றவர் சொல்லுங்கத்தை எதாவது பிரச்சினையா?
ம்ம் நீ லீவ் சொல்லிட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வாப்பா.
அத்தை என்னாச்சி?
என்னனு சொல்லுங்க.அங்க யாருக்கு என்னவென்று மகி பதற எஸ்தருக்குதான் உடம்பு சரியில்லைப்பா நீ வா.
அப்படியா?
நேற்று பேசுனேன் உன் மவள் எதுவுமே சொல்லலையே?,சரிங்கத்தை இதோ நான் கிளம்பி வரேனென்று போனை வைத்தார்.
ராணி உன் மருமவள் ரூமுக்குள்ள போய் எதாவது கிடைக்குதானு அலசி பாரென்க,சரிங்கத்தை என்றவாறு கீழே இருக்கும் அவளது அறையில் தேடி பார்க்க எதுவும் கிடைக்கவில்லை.
அத்தை இங்க ஒன்னும் இல்லையென்க,மேலே தானே படிப்பாள்.
அங்க போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா என்றதும் ம்ம் என்றவாறு படியில் ஏறி மேலே வந்தவர் கதவை திறந்து உள்ளே போய் பார்த்தவர் ஷெல்பில் இருந்த புத்தகங்களிலும் நோட்டுகளிலும் தேடி பார்க்க எந்த பலனுமில்லை.
இரண்டாவது செல்பில் அவள் போட்டிருந்த நகைகள் இருந்தது.
கட்டிலுக்கு கீழே குனிந்து தேட அங்கும் வெறுமையாகவே இருக்க என்னடா இது.இவ்வளவு தெளிவா கிளம்பி போயிருக்காளே...அப்போ முன்னவே இவள் இந்த பிளானில் இருப்பாளோ என்ற யோசனையோடே கீழே வந்தார்.
என்ன ராணி எதாவது துப்பு கிடைச்சிதா?
இல்லைங்கத்தை.நல்லா பிளான் பண்ணி கிளம்பிருக்காள்.
எங்கே போனாளோ?
அவன் யாரு?
என்ன ஊருனு தெரியாமல் எப்படிங்கத்தை தேட?
வழி கிடைக்கும்.நீ போய் எஸ்தருக்கு எதாவது குடிக்க கொண்டு வந்து குடு.
அதேபோல் நால்வருக்கும் டீ போட்டு எடுத்து வர அழுது கொண்டிருந்த எஸ்தரோ எனக்கு வேண்டாங்கண்ணி...கொஞ்சம் வெசம் இருந்தால் குடுங்க அந்த மனுசன் வருவதற்குள் நான் குடிச்சிடுறேனென்று அழுதார்..
ஏத்தா என்ன நடந்து போயிருச்சு இப்போ இப்படி எல்லாம் பேசுற ஊர்ல உலகத்துல நடக்காதது ஒன்னும் நம்ம பொண்ணு செஞ்சிட்டு போகல புரியுதா..
முதல்ல அமைதியா இருத்தா மகி வந்த பின்னர் எல்லாத்தையும் பேசிக்கலாம் முதல்ல அதை வாங்கி குடியென்று தனது அக்கா மகளுக்கு ஆறுதல் சொல்ல,சித்தியின் வார்த்தையை மறுக்க முடியாமல் நாத்தனாரிடமிருந்து வாங்கி மனதே இல்லாமல் குடித்தார்.
மதுரை:
மனைவியோடு முதல் முதலாக வண்டியில் போவது உள்ளுக்குள் பேரானந்தமாக இருந்தது.கடந்து மூன்று வருடமாக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் தவிர இதுவரை அருகில் கூட நின்று பேசியதில்லை. இதை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
இருவரின் பேச்சுகளோ போனில் தான் அதிகமாக இருந்தது ஏன் ஃபோனில் தான் இருவரும் வாழ்ந்தார்களென்று சொன்னால் அது மிகையில்லை.
மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும் போதெல்லாம் கணவனின் தோளோடு போய் இடித்து உட்கார்ந்திருந்த ஷமீராவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
கண்ணாடி வழியாக மனைவியின் அவஸ்தையை ரசித்துக்கொண்டே செழியனும் பைக்கை ஒட்டியவன் அரை மணி நேரத்தில் டவுனுக்குள் இருக்கும் அந்த பெரிய துணி கடையின் பார்க்கிங்கில் வந்து வண்டியை நிறுத்தினான்.
பின்னர் மனைவியோடு படியில் ஏறி மேலே வந்தவன் லேடிஸ் செக்சன் எதுவென்று கேட்டு லிப்டில் ஏறி மூன்றாவது ப்ளோருக்கு வந்தவன் போய் உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கிக்கோ...
நான் இங்கே இருக்கிறேனென்று சொல்லிவிட்டு தனது ஃபோனை எடுத்துக் கொண்டு கண்ணனிடம் பேச தனியாக வந்தான்.
ஷமீராவோ இப்போதைக்கு இரண்டு ஜோடி துணி போதுமென்று நினைத்தவள் விலையைப் பார்த்து இரண்டு செட் எடுத்து அதற்கு தேவையான மற்ற அசசரீஸ் வாங்கிக்கொண்டு திரும்பி புருஷனை தேட சற்று தூரத்தில் செழியன் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
நேராக அவனிடம் வந்தாள்.
ஏதோ ஒரு உந்துதலில் திரும்பிப் பார்த்த செழியன் நான் அப்புறம் பேசுறேன்டா என்று ஃபோனை வைத்தவன் எடுத்துட்டியா என்க ஹம் என்றாள்...
அதுக்குள்ள எடுத்துட்டியானு ஆச்சரியமாக கேட்க ஆமா என்றாள்.
சரி வா என்று மனைவியை அழைத்து போனவன் அவள் எடுத்து வைத்த துணிகளை பார்த்து முறைத்து விட்டு அவனே மேலும் மூன்று ஜோடி வாங்கியவன், இதுக்கும் தேவையான இன்னர்ஸெல்லாம் நான் தான் வாங்கணுமானு கேட்க கணவனின் வார்த்தையில் அதிர்ந்து போனவள் பின்னர் சுற்றம் பார்த்து விட்டு தன்னவனை முறைக்க, போய் எடுத்துக்க டி.
"ஒரு வாரத்துக்கு தேவையானது வாங்கு"..
உன் புருஷன் சம்பாதித்த பணம் நிறைய இருக்குடி.உனக்கு என்ன தேவையோ தைரியமா வாங்கென்று மனைவியின் தோளின் தட்டி சொல்ல,ஷமீராவோ அவனிடம் பணம் இருக்குமா இல்லையா என்ற யோசனையோடுதான் இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையிலும் ஆனால் தரமானதையும் இவ்வளவு நேரம் தேடிப் பார்த்து வாங்கினாள்...
பின்னர் இரண்டு நைட்டியை எடுத்தவள் மற்ற பொருட்களை வாங்கிக் கொண்டு பில்லுக்கு அனுப்ப தனது ஏடிஎம் கார்டு கொடுத்து பே பண்ணி விட்டு மனைவியோடு வெளியே வந்தவன் நேராக பக்கத்திலிருக்கும் பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போனான்.
இங்கே எதற்கென்று அவள் கேட்க இவ்வளவு நாள் நீ இருந்தது வேற இனிமே என்கூட வாழ போற வாழ்க்கை வேற..அப்போ உனக்கு கண்டிப்பாக இதெல்லாம் தேவையென்று அங்கிருந்த பொட்டு மஞ்சள் குங்குமத்தை காட்டி சொல்லவும்..கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பது ஷமீராவுக்கு புரிந்தது..பின்னர் அவள் வழக்கமாக யூஸ் பண்ணும் பொருட்களையும் வாங்க அதற்கு பணத்தை கொடுத்தான்.
ஏதாவது குடிக்கிறியா டி என்க, இருக்கும் வெயிலில் ஏதாவது ஜில்லென்று குடித்தால் தேவலாம் போலென்று தானிருந்ததால் ஹம் என்று சொல்ல தனது மனைவிக்கு ஜிகர்தண்டா பிடிக்கும் என்பதால் அங்கிருக்கும் பேமஸான கடைக்கு அழைத்துப் போனவன் இரண்டு ஜிகர்தண்டாவை ஆர்டர் பண்ணி உட்கார சிறிது நிமிடத்தில் அவர்களின் டேபிளின் மேல் இரண்டு ஜிகர்தண்டாவை வெயிட்டரும் வந்து வைத்து சென்றார்.
எடுத்து சாப்பிடுடி என்கவும் ம்ம் என்றவள் அவளுக்கு பிடித்தமானதை விரும்பி சாப்பிட ஆரம்பித்தாள்.எதிரில் உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்தபடி செழியனும் சாப்பிட,இவர் இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் நம்மளால எப்படி இயல்பாக இருக்க முடியுமென்று தனக்குள்ளே முணுமுணுத்தாள்.
அதன் பின்னர் வேறு ஏதாவது வேணுமாடி என்க, இல்ல போதும் என்கவும் சரி வீட்டுக்கு கிளம்பலாமா?
அண்ணா அண்ணிக்கும் வாங்கிட்டு போகலாம் என்றாள்.
நாலு பார்சல் வரும்போது சொல்லிட்டு தாண்டி வந்தேன்.வா என்க ஷமீராவும் எதுவும் சொல்லாமல் அவன் பின்னாடியே வந்தாள்.பின்னர் இருவரும் வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
பானுவும் நசீராவும் மதிய உணவை சமைத்து விட்டு இவர்களுக்காக காத்திருந்தனர்.
இரண்டு கையிலும் பையோடு உள்ளே வந்தனர்.பானு இந்தா என்ற செழியனோ ஜிகர்தண்டா இருக்கும் கவரை கொடுக்க அதை வாங்கிப் போய் ஃப்ரிட்ஜில் வைத்தவள் அண்ணா முதலில் சாப்பிடலாம் என்கவும் சரிமா என்றான்.
பின்னர் பொண்ணு மாப்பிள்ளை இருவருக்கும் தலைவாழை இலையில் விருந்தை பரிமாறி விட்டு, சில பல கலாட்டாக்களோடு மூன்று ஜோடியும் சாப்பிட்டு முடித்தனர்.
தீரனும் மாறனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு தங்களது வேலையை பார்க்க கிளம்பி சென்றுவிட நசீராவும் பானுவும் ஷமீராவோடு பொதுவாக பேசிக் கொண்டிருக்க செழியனும் சிறிது நேரம் படுக்கிறேனென்று ரூமிற்குள் சென்றுவிட்டான்.
நேரமும் கடந்து சென்றது.
மாலை போய் இரவு வேளையும் வர அவளுங்களிடம் சொல்லிக்கொண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வனிச்சூருக்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் போய் இருவரோடும் நின்று கொண்டிருந்த மாறனும் தீரனும் எது நடந்தாலும் உடனே இன்பார்ம் பண்ணுடா...
"தேவையில்லாத பிரச்சினை வேண்டாம்".
நீ தான் உடனே போறேன்னு சொல்ற எனக்கு ஒன்னும் மனசு சரியில்லை என்று தீரன் சொல்ல,அவன் முடிவெடுத்தது நல்லது தான்.எத்தனை நாளைக்கு இப்படி தெரியாமல் இருக்க முடியும் சொல்லு ணா?
என்னைக்கு இருந்தாலும் இதுக்கு ஒரு தீர்வு தெரிஞ்சுதான் ஆகணுமென்று மாறன் கேட்க,அதுவும் நல்லது தான்டா என்று அரை மனதாகவே சொன்னான்.
பாப்பா அங்க என்ன வேணாலும் நடக்கலாம் நீ கொஞ்சம் பொறுத்துப் போ என்று சொல்லவும் சரிங்க அண்ணா என்றாள்.
இரவு 11 மணிக்கு வனிச்சூருக்கு செல்லும் பேருந்தும் வந்து நிற்க இருவரும் அதில் ஏறி கொண்டவர்கள் நீங்க கிளம்புங்க நாங்க போய்க் கொள்கிறோம் என்க,சரிடா பார்த்து போங்களென்று தீரனும்,மாறனும் அங்கிருந்து சென்றனர்.
சிறிது நிமிடத்தில் பஸ்சும் அங்கிருந்து புறப்பட்டது.கண்டக்டர் டிக்கட் டிக்கெட் என்று கேட்டுக் கொண்டே வர இரண்டு வனிச்சூர் என்றான்.
நம்ம ஊருக்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று ஷமீரா கேட்க காலை 7 மணிக்கு தான் போவோம் டி.
ஓஓஓ அவ்வளவு நேரமா என்க...ஆமா டி ஏன் உனக்கு தெரியாதா?எத்தனை நாளு சொல்லி இருக்கேன் என்றவன் மனைவியோடு கொஞ்சம் நெருங்கி உட்கார,என்ன பண்றீங்க எல்லாம் பக்கத்துல இருக்காங்களென்று முணுமுணுத்தாள்.
ஆமா டி அவங்க வேலையை விட்டுட்டு இப்ப நம்மளை தான் வேடிக்கை பாக்குறாராங்க என்றவாறு மனைவியின் தோளின் மேல் கையை போட்டவன் சரி தூங்கு என்க, ஜன்னல் புறமாக வந்த காற்றோ தாலாட்டு பாடுவது போலிருக்கவும் சிறிது நிமிடத்தில் இருவரும் சீட்டில் சாய்ந்தவாறு தூங்க ஆரம்பித்தனர்.