Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
நண்பர்கள் மூவரும் படம் பார்த்துட்டு வந்தவனுங்களோ நேராக மொட்டை மாடியில் போய் படுத்து விட்டனர்.காலையில் குளித்துவிட்டு துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்த கண்மணியோ என்ன இங்கு படுத்திருக்கிறார்கள் என்று யோசனையோடு துணிகளை பிழிந்து காய வைத்து விட்டு திரும்ப,தூக்கம் கலைந்து எழுந்து சோம்பல் முறித்த பாபுவோ தனது தேவதை வருவதை பார்த்தான்.
திடீரென்று அவன் எழுந்திருப்பானென்று எதிர் பார்க்காதவர்களுக்கு திக்கென்று ஒரு நொடி அதிர்வோடு அவன் கேட்ட கேள்வி ஞாபகம் வந்ததும் வேகமாக அங்கிருந்து சென்றாள்.
இதுவரை தனது கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டே வந்தவன் மாடிப்படி ஓரத்தில் நின்று பார்க்க படியில் இறங்கி சென்றவளும் திரும்பி மேலே பார்க்க அங்கே பாபு நின்று கொண்டிருந்தான்.
இதை எதிர்பார்க்காதவளோ வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்...இவ என்ன எப்ப பார்த்தாலும் இப்படி ஓடுறாள்?நான் என்ன சிங்கமா இல்ல புலியா இவளை கடிச்சு குதர?.
,உன் மொகரகட்ட ராசி.அதனால தான் தங்கச்சி பதறி அடிச்சுட்டு ஓடுது டா என்கும் குரல் கேட்டு திரும்பி பார்க்க பாரத் நின்று கொண்டிருந்தான்.
நீ எப்போட நாயே எந்திரிச்ச என்க,நீ புலம்ப ஆரம்பிச்சியே அப்பவே எந்திரிச்சிட்டேன்.நல்லவேளை என் பங்காளி காதில் விழல.இல்லைன்னா உன் குருத்தெலும்பை இங்கேயே மிதிச்சு ஒடைச்சிருப்பான் என்கவும்,நீயே சொல்லிடுவ போல என்று பாபு முறைக்கவும் சரி சரி அப்படி எல்லாம் பாக்காதடா...
என் தலையெழுத்து உன் காதலை சேர்த்து வைக்கணும்னு இருக்கென்று சலிப்போடு சொன்னவன்,ஏய் பங்காளி விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க...
என்ன மனுஷன் நீ என்று கண்ணனின் பக்கத்தில் போய் நின்று சத்தமாக சொல்ல அவனும் கொட்டாவி எழுந்தான்.பின்னர் மூவரும் ரூமிற்கு வந்து பிரஷ் ஆகிவிட்டு கீழே வர அவர்களுக்கு கண்மணி தான் டீ கொண்டு வந்து கொடுத்துப் போனாள்.
தன்னருகில் வரும் போது தனது உதட்டை அசைத்து இந்த பொண்ணு எனக்கு பிடித்திருக்கென்று பாபு சொல்வதை புரிந்து கொண்ட கண்மணிக்கு சிரிப்பு வந்தது.ஆனால் அதை காட்டிக்காமல் முறைப்பது போல் அவனை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
அடேய் போதும்டா நம்மளால அடி வாங்க முடியாதுடா கொஞ்சம் அடக்கி வாசி டா என்று பரத் தான் நண்பனின் காதில் சொன்னான்...
சரி டா நாங்க போய் குளிச்சிட்டு வரோம் அநேகமா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினாலும் கிளம்புவோமென்று கண்ணனிடம் சொல்ல...அதுக்குள்ள ஏண்டா கிளம்புறீங்க?.இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போங்களேன் நீங்க எல்லாம் இருந்தது நல்லா இருந்துச்சுடா என்க,தங்கச்சிக்கு கல்யாணம் இல்லையாடா..
அந்த வேலையை பார்க்கணுமே, பங்காளி நானும் வரேனென்று கண்ணன் சொல்லவும்,அந்தளவுக்கு வேலை இல்லை.எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.
சீர்வரிசை கொடுக்கிற பொருள்தான் செய்ய சொல்லி இருக்காங்க.அடுத்து பத்திரிக்கை வைக்கிற வேலைதான் இருக்கு..அப்படி ஏதாவதுனா கண்டிப்பா உன்னை நான் கூப்பிடமாட்டேனா பங்காளி என்கவும்,ஒரு போனை போடு உடனே பாய்ஞ்சு வந்துடுவேன் என்று கண்ணன் சொல்ல,சரி பங்காளி என்றவாறு செழியனின் வீட்டுக்கு வந்தனர்.
சீக்கிரம் ரெண்டு பேரும் தயாராகி வாங்களென்று அந்தோணி சொல்ல, என்ன வேலை மாமா?என்று பரத் கேட்க...
அடேய் போய் குளிச்சிட்டு தான் வாங்கலாம்டா சொல்ல மாட்டேனா? இரண்டு துரையும் பெரிய கலெக்டர் நிற்க நேரம் இல்லாம கால்ல வெந்நீர் ஊத்திட்டு இருக்காங்க என்று அந்தோணி முறைக்க...அதானே நம்மள ஏதாச்சும் சொல்லவில்லை என்றால் இவங்களுக்கு தூக்கம் வராதேயென்று முணுமுணுத்து கொண்டே படியில் ஏற, என்னடா அங்க முணுமுணுப்பு என்றார்.
ஒன்னுமில்லை மாமா சும்மா பேசிட்டு இருந்தேன்னு பரத் செல்ல அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அனேகமா நம்ம ரெண்டு பேரும் ஒத்த வயது உடையவர்களாக தான் இருப்போமென்று செல்லத்துரையிடம் அந்தோணி சொல்ல,எனக்கு 58ஆகுது என்கவும்,எனக்கும் 58 தான் ஆகுது. அப்போ பேரு சொல்லியே கூப்பிட்டுக்கலாமே.
தாராளமா கூப்பிட்டலாமென்று சிரித்தார்.அது வந்து துரை என் மனசுல ஒரு விஷயம் பட்டுச்சு..அது சரி வருமானு தெரியல...முதல்ல விஷயத்தை சொல்லு என்னன்னு அப்புறம் பார்க்கலாமஎன்றார்.
பின்னர் விஷயத்தை அந்தோணி சொல்ல சிறிது நிமிடம் யோசித்த செல்லதுரை நல்ல விஷயம் தான் போய் பேசி பார்ப்போம்.
ஹப்பாடா எங்கே தப்பா நினைச்சிடுவியோனு ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன் என்றார்.
இதுல என்ன இருக்கு பொதுவா எல்லாரும் கேட்கிற விஷயம் தானே?நேர்ல பேசுவோமென்று பொதுவான விஷயத்தை பேசிக் கொண்டிருந்தனர்.
கிச்சனிலிருந்த ஷமீராவோ இன்னுமா இந்த மனுஷன் தூங்குறாரு என்றபடி மணியை பார்க்க அது காலை எட்டு முப்பதென்று காட்டியது.
ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்னு என்னவென்றால் அவள் தனது அத்தை மாமா ரூமிற்கு சென்று பேசிக் கொண்டிருக்கும்போது கீழே இறங்கி வந்த செழியனோ வயலுக்கு போவதாக சொல்லிவிட்டு எப்பயோ சென்று விட்டான்..
ஏண்டா மாப்பி என்ன விஷயமா இருக்கும்?பெருசு இவ்வளவு சீன் போடுதே என்று பரத் கேட்க,அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன்டா. நானும் உன் கூட தானே இருந்தேன். எனக்கு எப்படி தெரியுமென்று பாபு திட்ட,சரி சரி ரொம்ப புகழாதே வா என்று இருவரும் கீழே வந்தனர்.
ஏங்க மாமா அடுத்து இவனுக்கும் கல்யாணத்தை முடிச்சாலாமே என்க,பாபுபோ தனது நண்பனை கொலை வெறியில் பார்த்தான்.
ஏன்டா ஆயிரம் தான் நீ எனக்கு மாப்பிள்ளை முறை என்றாலும் இப்படியா ஓயாம என்ன முறைச்சு பார்த்துட்டே இருப்பே.அதற்கு பாபுவோ டேய் ராசா நீ ஆணியே புடுங்க வேணாம்..அமைதியா உட்காரு அதுவே பெரும் புண்ணியம் சாமியென்று தனது கையை கூப்பினான்.
டெல்லி...
நண்பர்கள் ஏழு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல, பின்னர் அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.
நீ போடா நான் குளிச்சிட்டு வரேன் என்ற தீபன் அவன் பிளாட்டிற்கு சொல்ல, படத்தில் மூழ்கி போயிருந்த இருவருக்கும் காலிங் பெல் சத்தம் கேட்கவே இல்லை...
கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த எஸ்தர் தான் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க என்னங்கம்மா உங்க ரெண்டு பொண்ணும் குறட்டை விட்டு தூங்குறாளுங்களா என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர அங்கு இருவரும் டிவியில் ஓடும் படத்தை ஆர்வமா பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் அட செவிட்டு முண்டங்களா...
எவ்ளோ நேரம் பெல்லடிக்கிறேன் இவளுங்க ரெண்டு பேரும் செவிடு போல உட்கார்ந்திருக்கிறார்களே என திட்டிக்கொண்ட சோபாவில் அழகுக்காக வைத்திருந்த சின்ன தலகாணிகள் இரண்டை எடுத்து இரண்டு பேர் மேலும் அங்கிருந்து தூக்கி எறிந்தான்.
அவளுங்களோ படம் பார்க்கும் ஆர்வத்தில் தங்கள் மேல் விழுந்ததைகூட கண்டுகொள்ளாமல் டிவியை பார்த்துக் கொண்டிருக்க இரண்டு பேரும் உலக மறந்து அப்படி என்னம்மா படம் பார்க்கிறாளுங்க என்க,தமிழ்ல வாழைனு ஒரு படம் வந்துச்சுப்பா.
ரொம்ப நல்லா இருக்கும்.அதுதான் பாத்துட்டு இருக்காங்க என்ற எஸ்தர்,குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா என்க,ஒன்னும் வேண்டாமா நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு அவன் ரூமிற்குள் சென்று விட்டான்...
சமைத்து முடித்த எஸ்தர் எல்லாத்தையும் ஹாட்பாக்ஸில் போட்டு முடியவர் அதை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள் வைக்க படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜூலியும் ரூபாவும் அழுது கொண்டிருப்பதை பார்த்து சிரித்துவிட்டு சோபாவில் வந்து உட்கார தீபனும் ருத்ரனும் பிரஷ் ஆகி வந்தார்கள்.
அப்படி என்ன கதைமா?இப்படி ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்காங்க என்கவும் பின்னர் சுருக்கமாக எஸ்தர் கதையை சொல்லவும் அப்படியா...
நல்ல படமாக தான் இருக்கு நாளைக்கு நமக்கு டூட்டி இருக்காடா என்று தீபனை கேட்க இல்லடா நாளைக்கு மருநாள் தான் அந்த இன்ஜினியருக்கு சர்ஜரி,நியாபகம் இல்லையாடா என்கவும் ஆமா ஆமாம் சரி அப்ப நம்மளும் அந்த படத்தை பார்க்கலாம் என்றான்.
பாத்துட்டா போச்சி என்றபடி எஸ்தரின் பக்கம் திரும்பியவன் ஏங்கம்மா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களே என்க...
நான் என்னப்பா நினைக்க போறேன் உன்னை பையன் என்று சொல்லிட்டேன்ல அம்மாகிட்ட கேக்குறதுக்கு உனக்கு என்ன தயக்கம் என்று தீபனிடம் சொல்ல,இல்லை....எந்த நம்பிக்கையில் இந்த லூசு பயல நம்பி டெல்லி வரை வந்தீர்கள் என்கவும்,ருத்ரனோ அருகில் உட்கார்ந்திருக்கும் மைத்துனனை கொலை வெறியில் முறைத்து பார்த்தான்..
எஸ்தரோ சத்தமாக சிரித்து விட்டார்....
பின்னர் தீபனின் கையை பிடித்தவர்
இப்படி ஒரு கேள்வி கேட்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்ல, எதிர்பாராததை இந்த தீபன் கிட்ட நீங்க எதிர்பார்க்கலாமா என்றான்.
இந்த மெண்டல் பிக் பாஸ் பைத்தியம் மா என்று ருத்ரன் சொல்ல,அதெல்லாம் பார்க்க யாருக்குப்பா நேரம் இருக்கு என்றார்.
உங்களுக்கு நேரமில்லை மா ஆனா இந்த நாய் இடியே விழுந்தாலும் அதை பார்க்காமல் தூங்காது என்க...இரண்டு பேர் ஒரு வீட்ல இருந்தாலே எப்படி இருக்கும் மா.அங்கு கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல உள்ள ஆணையும் பெண்ணையும் ஒரு இடத்துல விடுறாங்க ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு குணத்தோட இருக்கும். அதெல்லாம் பாத்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளணும் இல்லையா...
இதெல்லாம் இவனுக்கு எங்கம்மா புரிய போது...படிப்புல மட்டும்தான் நம்பர் ஒன் மத்ததெல்லாம் ஜீரோ..பட் உங்க பையன் ஆளினால் என்று தனது காலரை தூக்கி விட்டுக் கொண்டு தீபன் சொல்லும் போது ஒரு தலைகாணி வந்து தீபனின் மூஞ்சின் மேல் விழ,எவ அவள் என்று திரும்பிப் பார்க்க அங்கே ரூபாவோ கணவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
நண்பர்கள் மூவரும் படம் பார்த்துட்டு வந்தவனுங்களோ நேராக மொட்டை மாடியில் போய் படுத்து விட்டனர்.காலையில் குளித்துவிட்டு துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்த கண்மணியோ என்ன இங்கு படுத்திருக்கிறார்கள் என்று யோசனையோடு துணிகளை பிழிந்து காய வைத்து விட்டு திரும்ப,தூக்கம் கலைந்து எழுந்து சோம்பல் முறித்த பாபுவோ தனது தேவதை வருவதை பார்த்தான்.
திடீரென்று அவன் எழுந்திருப்பானென்று எதிர் பார்க்காதவர்களுக்கு திக்கென்று ஒரு நொடி அதிர்வோடு அவன் கேட்ட கேள்வி ஞாபகம் வந்ததும் வேகமாக அங்கிருந்து சென்றாள்.
இதுவரை தனது கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டே வந்தவன் மாடிப்படி ஓரத்தில் நின்று பார்க்க படியில் இறங்கி சென்றவளும் திரும்பி மேலே பார்க்க அங்கே பாபு நின்று கொண்டிருந்தான்.
இதை எதிர்பார்க்காதவளோ வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்...இவ என்ன எப்ப பார்த்தாலும் இப்படி ஓடுறாள்?நான் என்ன சிங்கமா இல்ல புலியா இவளை கடிச்சு குதர?.
,உன் மொகரகட்ட ராசி.அதனால தான் தங்கச்சி பதறி அடிச்சுட்டு ஓடுது டா என்கும் குரல் கேட்டு திரும்பி பார்க்க பாரத் நின்று கொண்டிருந்தான்.
நீ எப்போட நாயே எந்திரிச்ச என்க,நீ புலம்ப ஆரம்பிச்சியே அப்பவே எந்திரிச்சிட்டேன்.நல்லவேளை என் பங்காளி காதில் விழல.இல்லைன்னா உன் குருத்தெலும்பை இங்கேயே மிதிச்சு ஒடைச்சிருப்பான் என்கவும்,நீயே சொல்லிடுவ போல என்று பாபு முறைக்கவும் சரி சரி அப்படி எல்லாம் பாக்காதடா...
என் தலையெழுத்து உன் காதலை சேர்த்து வைக்கணும்னு இருக்கென்று சலிப்போடு சொன்னவன்,ஏய் பங்காளி விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க...
என்ன மனுஷன் நீ என்று கண்ணனின் பக்கத்தில் போய் நின்று சத்தமாக சொல்ல அவனும் கொட்டாவி எழுந்தான்.பின்னர் மூவரும் ரூமிற்கு வந்து பிரஷ் ஆகிவிட்டு கீழே வர அவர்களுக்கு கண்மணி தான் டீ கொண்டு வந்து கொடுத்துப் போனாள்.
தன்னருகில் வரும் போது தனது உதட்டை அசைத்து இந்த பொண்ணு எனக்கு பிடித்திருக்கென்று பாபு சொல்வதை புரிந்து கொண்ட கண்மணிக்கு சிரிப்பு வந்தது.ஆனால் அதை காட்டிக்காமல் முறைப்பது போல் அவனை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
அடேய் போதும்டா நம்மளால அடி வாங்க முடியாதுடா கொஞ்சம் அடக்கி வாசி டா என்று பரத் தான் நண்பனின் காதில் சொன்னான்...
சரி டா நாங்க போய் குளிச்சிட்டு வரோம் அநேகமா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினாலும் கிளம்புவோமென்று கண்ணனிடம் சொல்ல...அதுக்குள்ள ஏண்டா கிளம்புறீங்க?.இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போங்களேன் நீங்க எல்லாம் இருந்தது நல்லா இருந்துச்சுடா என்க,தங்கச்சிக்கு கல்யாணம் இல்லையாடா..
அந்த வேலையை பார்க்கணுமே, பங்காளி நானும் வரேனென்று கண்ணன் சொல்லவும்,அந்தளவுக்கு வேலை இல்லை.எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.
சீர்வரிசை கொடுக்கிற பொருள்தான் செய்ய சொல்லி இருக்காங்க.அடுத்து பத்திரிக்கை வைக்கிற வேலைதான் இருக்கு..அப்படி ஏதாவதுனா கண்டிப்பா உன்னை நான் கூப்பிடமாட்டேனா பங்காளி என்கவும்,ஒரு போனை போடு உடனே பாய்ஞ்சு வந்துடுவேன் என்று கண்ணன் சொல்ல,சரி பங்காளி என்றவாறு செழியனின் வீட்டுக்கு வந்தனர்.
சீக்கிரம் ரெண்டு பேரும் தயாராகி வாங்களென்று அந்தோணி சொல்ல, என்ன வேலை மாமா?என்று பரத் கேட்க...
அடேய் போய் குளிச்சிட்டு தான் வாங்கலாம்டா சொல்ல மாட்டேனா? இரண்டு துரையும் பெரிய கலெக்டர் நிற்க நேரம் இல்லாம கால்ல வெந்நீர் ஊத்திட்டு இருக்காங்க என்று அந்தோணி முறைக்க...அதானே நம்மள ஏதாச்சும் சொல்லவில்லை என்றால் இவங்களுக்கு தூக்கம் வராதேயென்று முணுமுணுத்து கொண்டே படியில் ஏற, என்னடா அங்க முணுமுணுப்பு என்றார்.
ஒன்னுமில்லை மாமா சும்மா பேசிட்டு இருந்தேன்னு பரத் செல்ல அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அனேகமா நம்ம ரெண்டு பேரும் ஒத்த வயது உடையவர்களாக தான் இருப்போமென்று செல்லத்துரையிடம் அந்தோணி சொல்ல,எனக்கு 58ஆகுது என்கவும்,எனக்கும் 58 தான் ஆகுது. அப்போ பேரு சொல்லியே கூப்பிட்டுக்கலாமே.
தாராளமா கூப்பிட்டலாமென்று சிரித்தார்.அது வந்து துரை என் மனசுல ஒரு விஷயம் பட்டுச்சு..அது சரி வருமானு தெரியல...முதல்ல விஷயத்தை சொல்லு என்னன்னு அப்புறம் பார்க்கலாமஎன்றார்.
பின்னர் விஷயத்தை அந்தோணி சொல்ல சிறிது நிமிடம் யோசித்த செல்லதுரை நல்ல விஷயம் தான் போய் பேசி பார்ப்போம்.
ஹப்பாடா எங்கே தப்பா நினைச்சிடுவியோனு ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன் என்றார்.
இதுல என்ன இருக்கு பொதுவா எல்லாரும் கேட்கிற விஷயம் தானே?நேர்ல பேசுவோமென்று பொதுவான விஷயத்தை பேசிக் கொண்டிருந்தனர்.
கிச்சனிலிருந்த ஷமீராவோ இன்னுமா இந்த மனுஷன் தூங்குறாரு என்றபடி மணியை பார்க்க அது காலை எட்டு முப்பதென்று காட்டியது.
ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்னு என்னவென்றால் அவள் தனது அத்தை மாமா ரூமிற்கு சென்று பேசிக் கொண்டிருக்கும்போது கீழே இறங்கி வந்த செழியனோ வயலுக்கு போவதாக சொல்லிவிட்டு எப்பயோ சென்று விட்டான்..
ஏண்டா மாப்பி என்ன விஷயமா இருக்கும்?பெருசு இவ்வளவு சீன் போடுதே என்று பரத் கேட்க,அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன்டா. நானும் உன் கூட தானே இருந்தேன். எனக்கு எப்படி தெரியுமென்று பாபு திட்ட,சரி சரி ரொம்ப புகழாதே வா என்று இருவரும் கீழே வந்தனர்.
ஏங்க மாமா அடுத்து இவனுக்கும் கல்யாணத்தை முடிச்சாலாமே என்க,பாபுபோ தனது நண்பனை கொலை வெறியில் பார்த்தான்.
ஏன்டா ஆயிரம் தான் நீ எனக்கு மாப்பிள்ளை முறை என்றாலும் இப்படியா ஓயாம என்ன முறைச்சு பார்த்துட்டே இருப்பே.அதற்கு பாபுவோ டேய் ராசா நீ ஆணியே புடுங்க வேணாம்..அமைதியா உட்காரு அதுவே பெரும் புண்ணியம் சாமியென்று தனது கையை கூப்பினான்.
டெல்லி...
நண்பர்கள் ஏழு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல, பின்னர் அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.
நீ போடா நான் குளிச்சிட்டு வரேன் என்ற தீபன் அவன் பிளாட்டிற்கு சொல்ல, படத்தில் மூழ்கி போயிருந்த இருவருக்கும் காலிங் பெல் சத்தம் கேட்கவே இல்லை...
கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த எஸ்தர் தான் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க என்னங்கம்மா உங்க ரெண்டு பொண்ணும் குறட்டை விட்டு தூங்குறாளுங்களா என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர அங்கு இருவரும் டிவியில் ஓடும் படத்தை ஆர்வமா பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் அட செவிட்டு முண்டங்களா...
எவ்ளோ நேரம் பெல்லடிக்கிறேன் இவளுங்க ரெண்டு பேரும் செவிடு போல உட்கார்ந்திருக்கிறார்களே என திட்டிக்கொண்ட சோபாவில் அழகுக்காக வைத்திருந்த சின்ன தலகாணிகள் இரண்டை எடுத்து இரண்டு பேர் மேலும் அங்கிருந்து தூக்கி எறிந்தான்.
அவளுங்களோ படம் பார்க்கும் ஆர்வத்தில் தங்கள் மேல் விழுந்ததைகூட கண்டுகொள்ளாமல் டிவியை பார்த்துக் கொண்டிருக்க இரண்டு பேரும் உலக மறந்து அப்படி என்னம்மா படம் பார்க்கிறாளுங்க என்க,தமிழ்ல வாழைனு ஒரு படம் வந்துச்சுப்பா.
ரொம்ப நல்லா இருக்கும்.அதுதான் பாத்துட்டு இருக்காங்க என்ற எஸ்தர்,குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா என்க,ஒன்னும் வேண்டாமா நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு அவன் ரூமிற்குள் சென்று விட்டான்...
சமைத்து முடித்த எஸ்தர் எல்லாத்தையும் ஹாட்பாக்ஸில் போட்டு முடியவர் அதை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள் வைக்க படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜூலியும் ரூபாவும் அழுது கொண்டிருப்பதை பார்த்து சிரித்துவிட்டு சோபாவில் வந்து உட்கார தீபனும் ருத்ரனும் பிரஷ் ஆகி வந்தார்கள்.
அப்படி என்ன கதைமா?இப்படி ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்காங்க என்கவும் பின்னர் சுருக்கமாக எஸ்தர் கதையை சொல்லவும் அப்படியா...
நல்ல படமாக தான் இருக்கு நாளைக்கு நமக்கு டூட்டி இருக்காடா என்று தீபனை கேட்க இல்லடா நாளைக்கு மருநாள் தான் அந்த இன்ஜினியருக்கு சர்ஜரி,நியாபகம் இல்லையாடா என்கவும் ஆமா ஆமாம் சரி அப்ப நம்மளும் அந்த படத்தை பார்க்கலாம் என்றான்.
பாத்துட்டா போச்சி என்றபடி எஸ்தரின் பக்கம் திரும்பியவன் ஏங்கம்மா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களே என்க...
நான் என்னப்பா நினைக்க போறேன் உன்னை பையன் என்று சொல்லிட்டேன்ல அம்மாகிட்ட கேக்குறதுக்கு உனக்கு என்ன தயக்கம் என்று தீபனிடம் சொல்ல,இல்லை....எந்த நம்பிக்கையில் இந்த லூசு பயல நம்பி டெல்லி வரை வந்தீர்கள் என்கவும்,ருத்ரனோ அருகில் உட்கார்ந்திருக்கும் மைத்துனனை கொலை வெறியில் முறைத்து பார்த்தான்..
எஸ்தரோ சத்தமாக சிரித்து விட்டார்....
பின்னர் தீபனின் கையை பிடித்தவர்
இப்படி ஒரு கேள்வி கேட்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்ல, எதிர்பாராததை இந்த தீபன் கிட்ட நீங்க எதிர்பார்க்கலாமா என்றான்.
இந்த மெண்டல் பிக் பாஸ் பைத்தியம் மா என்று ருத்ரன் சொல்ல,அதெல்லாம் பார்க்க யாருக்குப்பா நேரம் இருக்கு என்றார்.
உங்களுக்கு நேரமில்லை மா ஆனா இந்த நாய் இடியே விழுந்தாலும் அதை பார்க்காமல் தூங்காது என்க...இரண்டு பேர் ஒரு வீட்ல இருந்தாலே எப்படி இருக்கும் மா.அங்கு கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல உள்ள ஆணையும் பெண்ணையும் ஒரு இடத்துல விடுறாங்க ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு குணத்தோட இருக்கும். அதெல்லாம் பாத்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளணும் இல்லையா...
இதெல்லாம் இவனுக்கு எங்கம்மா புரிய போது...படிப்புல மட்டும்தான் நம்பர் ஒன் மத்ததெல்லாம் ஜீரோ..பட் உங்க பையன் ஆளினால் என்று தனது காலரை தூக்கி விட்டுக் கொண்டு தீபன் சொல்லும் போது ஒரு தலைகாணி வந்து தீபனின் மூஞ்சின் மேல் விழ,எவ அவள் என்று திரும்பிப் பார்க்க அங்கே ரூபாவோ கணவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.