• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி:

இருவரின் அதிர்ந்த முகத்தை பார்த்தவர் தாயில்லாமல் வளர்வது எவ்வளவு கொடுமையான விஷயமென்பதை உணர்ந்தவர் இருவரின் மனநிலையை மாற்ற நினைத்து எனக்கு ரொம்ப பசிக்கிற போல இருக்குமா.இந்த ஊர்ல பானிபூரி கச்சோரிலாம் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.அம்மாவுக்கும் கொஞ்சம் வாங்கி தர மாட்டீங்களா?.

அதிர்ந்து போயிருந்த இருவரும் சிரித்து விட்டனர்.

உங்களுக்கு இல்லாததா மா...என்ன சாப்பிடணும் சொல்லுங்கள் ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு செஞ்சி தரோம் என்று சொல்ல..ஐயோ அம்மாடி...

உங்க ரெண்டு பேரின் பிள்ளையை தூக்கி வளர்கணும் அதனால் இன்னும் பத்து வருஷமாவது நான் உயிரோடு இருக்கணும்..உங்க சமையல் சாப்பிட்டு எனக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று பயந்து கொண்டே சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு ஜூலியும் ரூபாவும் முறைத்து பார்த்தாளுங்கள்.

ஹாஹா என்று சிரித்தவர் சரி வீட்டிற்கு போகலாம்.டவுனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆகுது என்கவும்,பின்னர் மூவரும் அங்கிருக்கும் ரோட்டோர கடைகளில் விரும்பியதெல்லாம் சாப்பிட்டு,வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

தையல் மெஷினும் டெலிவரிக்கு வந்திருந்தது.மெஷினை வீட்டிற்குள் எங்கே வைக்கலாமென்று பார்க்க தன்னுடைய ரூமிலேயே வைத்துக் கொள்கிறேனென்றார்.

ஏனென்றால் இரவில் துணி தைக்கும் போது அந்த சத்தம் பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்குமோ என்ற எண்ணத்தில்....

அதேபோல் அவர் ரூமில் வைத்து விட்டு மெஷினை பிட் பண்ணி கொடுத்து செக் பண்ணி பார்க்க சொல்ல,ஆண்டவரேனு மனதிற்குள் ஜெபம் செய்துவிட்டு மிஷினில் உட்கார்ந்து தைத்துப் பார்த்தவர் எல்லாம் சரியாக இருக்கு பா இருங்கள் காபி எடுத்துவரேன் என்கவும் அவர்களோ வேண்டாமாயென்று சென்றனர்.

பின்னர் இருவரையும் ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டு அளவை நறுக்க ஆரம்பித்தார்..அவர் என்ன தைக்க போகிறாரென்பது ஜீலிக்கும் ரூபாவிற்கும் புரியவில்லை.

இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெட்டில் உட்கார்ந்தவர்கள் அப்படியே தூங்கிவிட்டனர்.

இருவருக்குமான துணியை பாதி தைத்து முடித்துவிட்டு எஸ்தர் நிமிர்ந்து பார்க்க,சுவரிலிருந்த கடிகாரமோ மாலை 5 மணி என்று காட்டியது.

பின்னர் கைகளை நீட்டி மடக்கி சோம்பல் முறித்தவர் இருவரும் தூங்குவதை பார்த்துவிட்டு கிச்சனிற்கு சென்று பாலை சுட வைத்து கொண்டிருக்கும் போது அவளுங்களும் எழுந்து பிரஷாகி வந்தனர்.

அம்மா என்கும் சத்தம் கேட்டு கிச்சன்ல இருக்கிறேன் டீயா இல்லை காபியா என்க எனக்கு காபி என்று ரூபா சொல்ல,ஜூலியோ எனக்கு டீ என்றாள்.

சரி என்று போட்டு எடுத்துட்டு வந்தவர் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து மூவரும் குடித்துக் கொண்டிருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது.

ரூபா போய் கதவை திறக்க ருத்ரனும் தீபனும் வந்தனர்.ருத்ரனின் முகத்தை வைத்து ஏதோ சரியில்லைனு உணர்த்துக் கொண்ட ஜூலி அண்ணா என்ன ஆச்சுன்னா என்க இன்னைக்கு ஒரு சின்ன குழந்தைக்கு ஆபரேஷன் அதனால் தான் அவன் அப்படி இருக்கானென்று தீபன் சொல்ல,சரி ணா என்றாள்.

தம்பி டீ எடுத்துட்டு வரட்டுமா என்கவும் நீங்க இருங்கம்மா அவள் எடுத்துட்டு வருவாளென்று தனது மனைவியை பார்த்து சொல்லியவன் எஸ்தரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சோபாவில் சாய்ந்து கண்ணை மூடினான்.

கிச்சனிற்குள் சென்ற ரூபாவும் இஞ்சி டீ போட்டு இரண்டு கப்பில் எடுத்துட்டு வந்தவள் ஒன்றை கணவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டு அண்ணனின் ரூம் கதவை தட்டிவிட்டு சில நொடிகள் சென்று கதவை திறக்க அங்கிருந்த சேரில் உட்கார்ந்து இருந்த ருத்ரனும் என்னமா என்க, டீ ணா என்றாள்.

ம்ம் குடு என்று சொல்லவும் அங்கிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு என்ன ஆச்சிணா ஏன் ஒரு மாதிரியா இருக்க?.

ஒன்னும் இல்லடா...ஒன்னரை வயது குழந்தைக்கு ஆப்ரேஷன் பண்ணினேன்.

சின்ன குழந்தை இல்லையா மனசு கஷ்டமா போயிடுச்சென்று தங்கையிடம் சொன்னாலும் உள்ளுக்குள் இருக்கும் எரிமலையோ அதன் வேலையை நிறுத்தவில்லை.

சரி ணா..வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே?,எனக்கு என்னடா பிரச்சனை இருக்க போகுது?அதான் எஸ்கார்ட் போல உன் புருஷன் 24 மணி நேரமும் என் கூடவே இருக்கானேயென்று சிரிக்க,ரூபாவோ தனது அண்ணனை செல்லமாக முறைத்தவள் இது உனக்கு ஓவரா தெரியலையா என்கவும்,முதல்ல அவன் எனக்கு பிரண்ட் அதுக்கப்புறம் தான் உன் புருஷன் போடி என்றான்.

தனது அண்ணனின் இயல்பு திரும்பியதைப் பார்த்த பிறகுதான் ரூபாவுக்கும் மனம் நிம்மதியாக இருந்தது..

சிறிது நிமிடத்தில் அண்ணன் தங்கை இருவரும் ஹாலிற்கு வர,வாங்க டி ஆர் என்று தீபன் சொல்ல,நக்கலு என்றபடியே நண்பனின் தோள்பட்டையில் ஓங்கி ஒன்னை வைத்துவிட்டு ஜுலியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தவன், என்னம்மா டெல்லி பிடித்து இருக்கா என்று எஸ்தரிடம் கேட்க,ரொம்ப பிடிச்சிருக்கு பா..இன்னைக்கு நாங்க மூணு பேரும் வெளியிலே போயிருந்தோம்.

அப்படியா?சொல்லவே இல்லையே என்றான்.

சும்மா வீட்ல இருக்க போர் அடிச்சது. அதனால தான் அம்மாவை கூட்டிட்டு போனோம்.அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் என்று ஜூலி சொல்ல என்ன என்றான்.

இரண்டு பேரும் அம்மா ரூம்ல பாருங்கள் என்க..என்னவா இருக்குமென்ற யோசனையோடு ரூம் கதவை திறந்து பார்க்க அங்கே தையல் மெஷின் இருப்பதை பார்த்து வாவ் சூப்பர்...

அம்மா உங்களுக்கு ஸ்டிச்சிங் தெரியுமா என்க,நல்லா தெரியும் பா.அதான் மருமகளும் மகளும் சேர்ந்து வாங்கி கொடுத்திருக்காங்க என்று அவர் உரிமையாக சொன்னதைக் கேட்டு நால்வருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.

உறவென்று சொல்ல இருந்த ஒரு ஜீவனும் இரண்டு வருடங்களாக தங்களிடமிருந்த விலகி இருக்கிறது.அதன் பிறகு நால்வருக்கும் நால்வரும் மட்டும்தான்.அடுத்ததாக பார்த்தால் டாக்டர் கர்ணனும் அவர் மனைவி ஷீத்தலும் தான்.மற்றபடி வேறு யார் கூடயும் அவர்கள் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை.

வனிச்சூர்:

என்னாது இந்த மனுஷன் ஜல்லிக்கட்டுல கலந்து கொள்ளவாறாஆஆஆஆ!!

"அடப்பாவி இன்னும் உனக்கு என்னென்ன திறமைதான்டா இருக்கு?"

இத்தனை நாளா என்கிட்ட மறைத்து வைத்திருக்கிறியேனு ஷமீரா புலம்பி கொண்டிருக்க வெளியே போய் மீண்டும் கதவைத் தட்டி உள்ளே வந்த கஸ்தூரி,வாம்மா சாமி கும்பிட வரச்சொல்றாங்க.

சரிங்கக்கானு கஸ்தூரின் பின்னாடியே போனாள்.

அவளை பூஜை அறைக்கு அழைத்துப்போக அங்கிருந்த விருமாயி பாட்டியோ அம்மாடி விளக்கை பற்றவை என்கவும் சரிங்க பாட்டி என்றவள் அங்கிருந்த காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டு கையை கூப்பி கண் மூடியவள் இதுவரை உங்களை வணங்க வேண்டிய சூழல் எனக்கு வந்ததில்லை...

இன்று முதல் முதலாக கேட்கிறேன் இன்று போல் என்றும் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குறையாமல் இருக்கணும்.

சொந்த பந்தங்கள் அனைவரும் நல்லா இருக்கணும்.இந்த குடும்பத்தில் ஒருத்தியாக என்னை கொண்டு வந்து சேர்த்ததற்கு கோடான கோடி நன்றி மா என்றாள்.

பின்னர் தட்டிலிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டவளிடம்,பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுமாறு அவள் காதில் பொறுமையாக கஸ்தூரி சொல்ல,சரிங்கக்கா என்றவள் அங்கிருந்த விருமாயி வீரையன் காலிலும்,செல்லதுரை வானதி,பின்னர் அவளுடைய அத்தை மாமா மூவரின் காலில் விழ நல்லா இருமா என்றனர்.

கஸ்தூரி என்று வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் கிச்சனில் இருந்த பால் சொம்பு எடுத்துட்டு வந்து ஷமீராவின் கையில் கொடுத்துவிட்டு வாமா என்று மாடியில் இருக்கும் ரூமிற்கு அழைத்துப் போனாள்.

படியில் ஏறி வந்து கொண்டிருந்த ஷமீராவிற்கு உள்ளுக்குள் நாலைந்து ட்ரெயின் ஓடுவது போல திக்திக்கென்று இருந்தது.ஒவ்வொரு பெண்ணும் இந்த சூழ்நிலையை கடந்து தான் வந்து ஆக வேண்டும் என்று நிதர்சனம் புரிந்தாலும் ஏதோ மனதிற்குள் கொஞ்சம் பயம் வராமலும் இல்லை .

அவளின் முகத்தை பார்த்த கஸ்தூரி பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லை மா.செழியன் தங்கமான பையன்.உன் மனசு அறிஞ்சு தான் நடந்துக்கும் என்க, கண்டிப்பாக இது தேவையாக்கா என்றாள்.

ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு வாழ்க்கை எப்ப ஆரம்பிக்கணும்னு நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணுங்க. மற்றவர்களுக்காக நம்ம வாழ்க்கையை தொடங்கக்கூடாது புரியுதா.

இதை நான் உனக்கு சொல்றதை விட உன் புருஷனே உனக்கு சொல்லுவாரு என்ற கஸ்தூரி,அறையின் முன்பு ஷமீராவை விட்டுவிட்டு கீழே வந்து விட்டாள்.

பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், கதவைத் திறந்து உள்ளே போக அங்கே அலங்கரிக்கப்பட்ட கட்டிலும் ரூமிற்குள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும் வரவேற்தது.

உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு கையிலிருந்த சொம்பை அங்கிருந்த டீப்பாயின் மேல் வைத்தவள் கணவன் எங்கே என்று தேட பால்கனி கதவு திறந்திருப்பது தெரிந்தது.

இந்த மனுஷன் அங்கு நிற்கிறாரோ,இன்னும் என்னலாம் மறைச்சிருக்கார்னு கேட்காமல் விடப் போவதில்லை.இதோ வருகிறேன் இருயா என்றவள்,கதவின் ஓரம் போய் எட்டிப் பார்க்க,செழியனோ பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு அங்கிருந்த பால்கனியின் கம்பியில் சாய்ந்தவாறு தூரத்து வான் நிலவை உற்று பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

சிறிது நொடிகள் நின்றவள் சரி தானாக வரட்டும் நம்ம ஏன் போய் கூப்பிடணுமென்று அமைதியாக உள்ளே வந்தவளோ அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

பால்கனியில் நின்றிருந்த செழியனோ இன்னும் இவ என்ன பண்றா?மனுஷன் ஒருத்தன் இவளுக்காக காத்துட்டு இருக்கிறேனேன்னு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா பாரு...

நாலு பொம்பளைங்க ஒன்னு சேர்ந்துட்டா போதும் ஊர் கதை உலகத்து கதை என்று பேசிட்டு நேரத்தை போக்குறது.

அவர்கள் தான் வயதானவர்கள் ஏதோ பேசிட்டு போறாங்கள்.என்னமோ நூத்து கெழவி போல இவளும் அவங்க கூட கதையளக்குறாள்.இன்னைக்கு நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான நாள்?.

சீக்கிரம் போய் நம்ம புருஷனை பார்ப்போம் சில பல முத்தங்களை கொடுப்போம் அப்படிங்கற எண்ணம் இவளுக்கு இருக்கா?.அதெல்லாம் சுத்தமாக கிடையாது என்று திட்டிக் கொண்டவன்,போன் பண்ணி தான் இவளை கூப்பிடணும் போல ஆண்டவா.

உலகத்துல என்ன போல எவனும் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட மாட்டான் என்று முணுமுணுத்துக் கொண்டு உள்ளே வந்தவன்,அங்கிருந்த மனைவியை பார்த்து வந்துட்டியாடி என்று விழிகள் விரிய கத்தினான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கணவனின் குரலை கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள் பின் பக்கம் திரும்பிப் பார்க்க அதற்குள் வேகமாய் வந்தவன் மனைவியை கைகளில் ஏந்த... அய்யோ என்ன பண்றீங்க என்ற கத்தினாள்..

ஏண்டி பார்த்தா என்ன பண்றேன்னு உனக்கு தெரியலையா என்கவும் எனக்கு தலையை சுத்துது இறக்கி விடுங்களென்றாள்.

முடியாது டி இந்த நாளுக்காக மனுஷன் எவ்வளவு ஏங்கிப் போயிருந்தேன் தெரியுமா என்கவும்,ஏதே என்றாள்...

"அடியேய் அறிவு கெட்டவளே" நான் வேற அர்த்தத்துல சொல்றேன்.நீ இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளாதே,எப்ப பார்த்தாலும் அதே நினைப்பு தானென்று அவள் கன்னத்தில் குத்த,யாரு நானா இந்த நினைப்புல இருக்கேனென்று கணவனை முறைத்து பார்த்தாள்..

மனைவியின் பார்வையை உணர்ந்தவன் ஹிஹி என்று சிரித்தவன்,பின்னர் அவளை கீழே இறக்கி நிற்க வைத்து இரண்டு அடி பின்னால் போனவன் ஒரு பக்கம் தனது மீசையை முறுக்கிக் கொண்டு மனைவியின் உச்சி முதல் பாதம் வரை ரசித்துப் பார்த்தான்.

கணவனின் பார்வையோ ஷமீராவுக்கு வெட்கத்தை தர,என்ன இப்படி பாக்குறீங்களென்று வேறு பக்கம் திரும்பி நிற்கவும்,அவள் திரும்பி நின்ற கோலமோ இடுப்பின் வளைவுகள் எல்லாம் அப்பட்டமாக தெரிய, ஆண்மகனான செழியனுக்கோ உணர்வுகள் மேலே எழும்பியது...

திரும்பி நின்றவளின் வெறுமையான முதுகில் சூடான மூச்சுக்காற்று பட ஒரு நொடி விதிர்த்துப் போனாள்.இடது கையால் மனைவியின் இடுப்பை வளைத்து தன் நெஞ்சொடு இறுக்கி அணைத்தவன்,இந்த ரூமிற்குள் நீ வரும் நாளுக்காக மூணு வருஷமா காத்துட்டு இருந்தேன் டி என்க,அவளோ எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

ஒவ்வொரு இரவும் அந்த நிலா கிட்ட கேட்பேன்,என்னைக்கு என் பொண்டாட்டி இங்க வருவாளென்று....இதோ வந்துட்டாளேயென்று அவள் காதில் முத்தம் வைக்க,மீசையின் குறுகுறுப்பில் தனது தலையை அங்குமிங்கும் அசைத்தாள்..

அப்புறம் பொண்டாட்டி வாழ்த்துக்கள் என்கவும் எதற்கென்றாள். இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட் இல்லையா அதுக்கு தாண்டி.

இது கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியலையா?எந்த பொண்டாட்டிக்காவது புருஷன் ஃபர்ஸ்ட் நைட்டில் வாழ்த்துக்கள் சொல்லுவானானு முறைக்க,மற்றவன் சொல்றானா இல்லையா அது நமக்கு தேவையில்லாத விஷயம்..

பட் உன் புருஷன் சொல்றானே அது வித்தியாசம் தானே டி. ஆமா ரொம்ப வித்தியாசமான புருஷன் தான் எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆமாடி தங்கம் யாருக்குமே கிடைக்காத இந்த அப்பாவி செழியன் ஷமீரா தாஸிற்கு கிடைத்திருக்கிறானே இது பெரிய விஷயம். ஏன் டி உன்கிட்ட பெரியவங்க ஒன்னும் சொல்லி அனுப்பவில்லையா என்க,இல்லையே...அப்படி ஒன்னும் சொல்லலையே என்றாள்..

சினிமாவில் பார்த்திருக்கிறாயா இல்லையா ?

பஸ்ட் நைட்ல பொண்டாட்டி என்ன பண்ணுவா என்க...அப்போதுதான் கஸ்தூரி சொன்ன விஷயங்கள் ஞாபகம் வர,கணவனின் கையை விலக்கி திரும்பியவள் பட்டென்று அவனின் காலில் விழ ஹா ஹா ஹா என்று சிரித்தவன் கீழே குனிந்து மனைவியின் தோளை பிடித்து தூக்கி விட்டு தீர்க்க சுமங்கலியாக பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க டி...

என்னத்தை செய்ய...இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியதாக இருக்கு பாரேன்...

சரி அடுத்தது என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று விஷயமாக கேட்க,அடுத்தது என்ன அந்த ஒரு செம்பு பாலையும் உங்களை மூக்கு முட்டு குடிச்சிட்டு பெட்ல படுத்து தூங்க சொன்னாங்க என்றாள்.

அப்படியா வேற ஒன்னும் சொல்லலையா?.

இன்னும் வேற என்ன சொன்னாங்கள் என்றால் உங்களை போட்டு நல்லா மிதிக்கணும்.பிறகு நல்லா உதைக்கணும்னு சொல்லி கொடுத்தாங்கனு கணவனை பார்க்க,அடிப்பாவி.. உன் மனசுல இப்படி எல்லாம் எண்ணம் இருக்கு அப்படித்தானே ஹா ஹா அதெல்லாம் இந்த மாமன் கிட்ட செல்லாது டி. ..

சரி வா என்று அங்கிருந்த அலங்கரிக்கப்பட்ட கட்டிலுக்கு போய் மனைவியை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன் வாழ்க்கையை இன்னைக்கு ஆரம்பிக்கலாமா இல்ல கொஞ்ச நாள் போகட்டுமா?.அது உன் கையில் தானிருக்கு என்க ஷமீராவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

உன்ன தான் டி கேட்கிறேன்?நீ என்ன சொல்ற?சடங்கு சம்பிரதாயமெல்லாம் அடுத்த விஷயம்.நீயும் நானும் என்ன நினைக்கிறோமோ அதுதான் முதலில் முக்கியம்...

இப்ப இருக்கும் உன்னோட மனநிலைக்கு இது நமக்கு தேவையில்லாத ஒன்றுதான்..சரி பெரியவங்கள் ஏற்பாடு பண்ணிட்டாங்கனு நானும் ஒன்னும் சொல்லலை.

கொஞ்ச நாள் போகட்டும் பிறகு நம்ம வாழ்க்கையை தொடங்கலாமா?

இதை தானே கஸ்தூரியும் சிறிது நேரத்துக்கு முன்னாடி சொன்னார் என்பதை நினைத்து பார்த்தாள்...

அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் சரி உனக்கு சம்மதம் இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்லடி இன்னைக்கே ப்ராசஸ்ல இறங்கிட வேண்டியதுதான் என்று மனைவியை அணைக்க...

அய்யைய்யோ என்று பதறி அடித்து எழுந்தவளை பார்த்து சிரித்தவன் செல்லம் உன்னோட டிரஸ் எல்லாம் கப்போர்ட்ல ஷிப்ட் பண்ணியாச்சு .

இந்த நகை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு வேறு டிரஸ் மாத்திக்கிட்டு சீக்கிரம் ரெடியாகு நம்ம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போகணும்.

இந்த நேரத்திலா?.

ஆமா இந்த நேரத்தில் தான்.எத்தனை நாள் ஆசை தெரியுமா என்றபடியே மனைவியின் கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

கணவனின் கண்களில் தெரியும் காதலை கண்டவள் லவ் யூ என்றவாறு இறுக்கமாக அணைக்க மனைவியின் அணைப்பை ரசித்தவன் வேணாம் டி வேணாம்...

நானே உனக்கு கொஞ்ச நாள் கொடுத்திருக்கேன்.என்னை இப்பயே வெறி கொண்ட வேங்கையாக மாற்றி விடாதே சீக்கிரம் ரெடியாகிட்டு வா டி.

எங்க தான் போறோம் அதை சொல்லுங்களேன் என்றாள்.

நோ டி நோ.

கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும்...பதிலே சொல்ல தெரியாது.நாங்க மட்டும் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணுமென்று திட்டிக் கொண்டே அங்கிருந்த கபோர்ட்டை திறந்தவள் சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த ஸ்கிரீனுக்கு மறைவில் போனாள்..

சிறிது நிமிடத்தில் டிரஸை மாற்றிக் கொண்டு வெளியே வர,வா என்றவன் பால்கனி கதவு வழியாக மாடி படியில் இறங்கி கீழே வந்தவன் அங்கிருந்த அவனின் பைக்கை தள்ளி கொண்டே போக ஏன் தள்ளிட்டு வரீங்களென்று ஷமீரா கேட்க,இங்கையே வண்டி ஸ்டார்ட் பண்ணினால் இந்த நேரத்துல எங்க போறன்னு ஏகப்பட்ட கேள்வி வரும் அதுக்கு தான் கொஞ்ச தூரம் போய் ஸ்டார்ட் பண்ணிக்கலாம் என்றான்.

ஓஓஓ...!

ஐயா எல்லாமே பிரீபிளான்
தான் என்கவும்,ஆமாடி எந்த ஒரு விஷயத்தையும் தொலைநோக்கு பார்வையோடு பாக்கணும்.

பிளானிங் இல்லாம எது பண்ணினாலும் சக்சஸ் ஆகாதுனு சிரித்துக் கொண்டே சொல்லியவன் வீட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணியவன் உட்காருடி என்கவும் ஷமீராவும் கணவனின் பைக்கில் ஏறி உட்கார இருவரும் அங்கிருந்து சென்றனர்.

மெல்லிய குளிர் உடம்புக்குள் ஜில்லென்று ஏறவும் கணவனோடு நெருங்கி உட்கார்ந்தாள்.என்னடி குளுருதா?.ஆமா பின்ன...உங்களுக்கு எருமை மாட்டு தோல் ஒன்னும் ஆகாது..நான் அப்படியா?.

நீ அப்படியா இல்லையானு சோதித்து பார்த்தால் தான் தெரியும். அதை நீயே சொல்லிக்கிறதானு சிரித்தான்.

பத்து நிமிட பயணத்தில் அங்கிருந்த மலையடிவாரத்தின் ஓரம் வண்டியை நிறுத்தியவன் வண்டியின் கவரிலிருந்த டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்தான்.

நிலவின் வெளிச்சத்தில் அது விவசாய நிலம் என்பது ஷமீராவுக்கு தெரிந்தது. எங்க தான் போறோம் சொல்லுங்களேன் என்க...சும்மா வாயேண்டி..

ஏண்டி நான் என்ன உன்னை கடத்திட்டா போறேன்?உன் புருஷன் கூட தானே வர, பிறகென்னடி.

,இல்லை..இந்த நேரத்தில் இங்கு வருகிறோமே காட்டிலிருக்கும் மிருகங்கள் எல்லாம் வராதா?.

வராது வராது பயப்படாதே..அப்படியே வந்தாலும் உன் புருஷன் இருக்கிறேன் ஒன்னும் ஆகாது என்றபடியே இடது பக்கம் வளைவில் திரும்பி அந்த ஒற்றையடி பாதையில் போக அருவியின் சத்தம் கேட்டது .

இங்கே எதாச்சும் அருவி இருக்கா இளா என்கவும்,அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாகவே முன்னாடி நடந்து போனவன் எட்டி மனைவியை இழுத்து அவள் கண்ணை பொத்தி விட்டு சில அடி தூரம் சென்று தனது கையை விலக்க,மூடியிருந்த விழிகளை திறந்து இரண்டு முறை கண்ணை சிமிட்டு விட்டு பார்த்தவள் அங்கே நிலவொளியின் வெளிச்சத்தில் கொட்டிக் கொண்டிருந்த அருவியை கண்டு அதிர்ந்து போனாள்.

வாவ் அமேசிங்...இப்ப நாம இங்கிருக்கிறோம் என்பது நிஜமாவா இளா?.

பகல்ல கூட்டிட்டு வந்திருக்கலாமேங்க?.

என்னனு தெரியலடி உன்னை இங்கு நைட்ல கூட்டிட்டு வரணுமென்று ரொம்ப ஆசை...

அதான் என்கவும்,அட போயா வில்லேஜ் மேங்கோ...இந்த நேரத்துல தண்ணில இறங்கி குளிக்க முடியாதென்று வருத்தமாக சொல்ல,எவண்டி சொன்னான்?.

நீ போய் குளி என்கவும், கணவன் சொன்னதைக் கேட்டவள் என்ன விளையாடுறீங்களா?ஏற்கனவே குளிரு தாங்க முடியல இதுல தண்ணில இறங்கினால் ஜில்லென்றிருக்கும்.

அப்புறம் நான் ஐஸ் கட்டி போல விறைச்சி போயாடுவேன்யா...அடி லூசு அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது டி.நீ வேணா கால் வச்சு பாரென்று செழியன் சொல்ல,நிஜமாவா என்றாள்...

ஆமா டி போய் கால் வச்சு பாரென்று மீண்டும் சொல்ல அங்கிருந்த பாறையில் இறங்கியவள் தண்ணீரில் கால் வைக்க அதுவோ எப்பொழுதும் போலிருந்தது.

அந்த அளவுக்கு ஒன்னும் குளுமையாக இருப்பது போல் தெரியவில்லை.உடனே அந்த தண்ணீரில் இறங்க ஆசை வரவும் இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்தவள் தண்ணிக்குள் இறங்கினாள். ..

இன்னும் கொஞ்ச தூரம் போய் அங்கே மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் அருவியில் நிற்கணும் போல ஆசையாக இருக்கவும்,திரும்பி கணவனை பார்க்க அவள் பார்வையை புரிந்தவன் போ என்க,டிரஸ் எல்லாம் ஈரமாயிடுமே என்றாள்..

அதுக்கு என்னடி...வீட்டுக்கு போறதுக்குள்ள காய்ந்து விடுமென்று மனைவியை பார்த்துக் கொண்டே சொல்லவும் அப்படியா?.

"ஆமாடி"

சரி என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி போய் இடுப்பளவு தண்ணீரில் நின்றவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெள்ளியை உருக்கியதை போல் கொட்டும் அருவியும்,சுற்றி பசுமையும் நிலவொளியில் வைரம் போல் மின்னும் தண்ணீரும் கம்பீரமாய் தன்னை கொள்ளையிட்ட ஆண்மகனையும் பார்த்தவளுக்கு எதை ரசிப்பதென்று புரியவில்லை.

கணவனை எப்பொழுது வேணாலும் ரசித்துக் கொள்ளலாம்,ஆனால் இதைப்போல் ஒரு சூழல் வராதென்று புரிந்து இயற்கை ரசிக்க முடிவு பண்ணி கைகளால் இரண்டு பக்கமும் தண்ணீரை அடித்து விளையாண்டு கொண்டிருந்தாள்...

மனைவியின் ஆரவாரத்தை பார்த்தவனுக்கு அவளோடு அந்த அருவியல் நிற்க வேண்டுமென்ற தனது வெகு நாள் ஆசை மனக்கண்ணில் வந்து சென்றது...

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Going good, expected some of Mahis polambal
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top