Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்-தம்புசாமி வீடு:
ஏண்டி சுமதி உன் பேரனுங்க ரெண்டு பேரும் என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்கானுங்க?நம்ம குடும்பத்தில் நடக்கிற முதல் விசேஷம்...
நம்ப பொண்ணு என்ன பத்து புள்ளையா பெத்து வைத்திருக்கு?.இதுக்கு வரலைன்னா அடுத்த பிள்ளைக்கு போகலாம்னு இருக்க?.ஒத்த புள்ளை கருவேப்பிலை கொத்து போல பெத்துருக்கு.அந்த புள்ளையோட விழாவுக்கு இரண்டு பயலாலையும் இவனுங்க பொண்டாட்டிய கூப்பிட்டு வர முடியாதா?
என்னமோ கட்டாகாளி பயலுக போல கையை வீசிட்டு வராங்களேயென்று முற்றத்திலிருந்த ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டு மனைவியிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்..
சுமதி பாட்டிக்கும் அந்த எண்ணம் இருக்க தான் செய்தது.தீரனும் மாறனும் மட்டுமே வந்திருந்தனர் தவிர பானுவையும் நசீராவையும் கூப்பிட்டு வரவில்லை.
சொந்த பந்தம் வந்துட்டு போகுற நேரத்தில் இப்படி சத்தம் போடாதீங்க என்கவும்,ஆமாண்டி நான் பேசினா உடனே சத்தம் போடுறேன்னு என் வாயை அடைச்சுரு.
அந்த ரெண்டு தடி மாடுகள் கிட்ட எதுவுமே கேட்டுறாதே,ஏன்னா உனக்கு அவனுங்கள் ரெண்டு பேரும் செல்ல பேரனுங்கள் இல்லையா என்றவாறு தம்புசாமி தாத்தா தனது மனைவியை முறைத்துப் பார்த்தார்.
அந்த நேரம் தீரன்,மாறன் மற்றும் கண்ணன் மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வர,பேரன்கள் வருவதை பார்த்த சுமதி பாட்டியோ என் கண்ணே பட்டுடும் போலிருக்கே...
ரஞ்சனி ரஞ்சனி கொஞ்சம் உப்பும் மிளகாயும் எடுத்துட்டு வா என்று மருமகளுக்கு குரல் கொடுக்க, இதோ வரேங்கத்தை என்றவரும் அவர் சொன்னது போல எடுத்துட்டு வந்து கொடுத்தார்.
ஐயா செத்த நில்லுங்களென்று தனது பேரனுங்களை பார்த்து சொல்ல,தாத்தாவை பார்த்து விட்டு என்னடா இந்த நம்பியார் வேற இங்கே இருக்கிறார்.அப்பாயி நம்மள நிக்க சொல்லுதென்று மாறன் முணுமுணுக்க,செத்த இருங்கடா..நம்பளை வச்சு நம்பியார் ஏதாச்சும் இப்ப படம் காட்டுவாரு என்ஜாய் பண்ணலாமென்று தீரனும் சிரிக்காமல் சொன்னான்.
தனது அண்ணன் சொன்னதை கேட்டதும் கண்ணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
தோட்டத்து பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்த தாத்தாவோ கண்ணன் சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவார் என்னடா இங்க ஆடிக்கிட்டா இருக்கிறாங்க சிரிக்கிறனு முறைத்தார்..
அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா..வேற ஒன்னு நினைச்சேன் சிரிச்சேன் என்றான்.
அப்படி என்ன நினைச்ச சொல்லித்தொலை நானும் சிரிப்பேன் என்கவும் அது சொன்னா நீ திட்ட மாட்டியே என்றான்.
நீ முதல்ல சொல்லுயென்றார்.
உனக்கு சூப்பர் மேன் டிரஸ் போட்டு பார்த்தேன் எப்படி இருக்குன்னு?அதை நினைத்து சிரிப்பு வருது என்கவும் தங்களது தம்பி சொன்னதை கேட்டு அவனுங்களும் தாத்தாவை அந்த கோலத்தில் நினைத்து பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்
தனது அண்ணன் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்த கவிதா கண்மணி இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை. .
பாத்தியாடி உன் பேரனை?.
எனக்கு இங்கிலீசு தெரியலன்னு கெட்ட வார்த்தைகளால் திட்டுறானேனு தாத்தாவும் கோபப்பட்டு கத்து,ஐயோ தாத்தா அண்ணன் உன்னை திட்டலை. இங்கிலீஷ் படத்துல வர ஹீரோ போல இருக்குன்னு சொல்லுதுனு கவிதா சொல்ல,என்ன சின்ன குட்டி உன் அண்ணனுக்கு ஒத்து ஊதுறியா?.
ஏன்டா ரெண்டு பேரும் என்னமோ கல்யாணம் ஆகாத பய போல மைனர் ஜாலி மணிபர்ஸ் காலினு வீசிட்டு வரீங்களே உங்க ரெண்டு பேர் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்தா இங்க என்ன எல்லாரும் கடிச்சு தின்னுடுவார்களா,இல்லை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவாங்களா சொல்லுங்கடா?.
அது வந்து தாத்தா...நசீரா கன்சீவா இருக்காள்.இப்போதைக்கு பஸ்ல இவ்வளவு தூரம் டிராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க என்று தீரன் சொல்ல,ஈசி சேரில் உட்கார்ந்திருந்தவரோ தனது குடும்பத்திற்கு அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு வரப்போவதை கேட்டு என்னய்யா சொல்லுறனு சந்தோஷத்தில் அதிர்ந்து போய் எழுந்தார்.
ஆமாம் தாத்தா.அதனால்தான் கூப்பிட்டு வரலை.துணைக்கு பானுவும் இருக்கு.
ஏன்யா இவ்ளோ பெரிய நல்ல விஷயத்தை இந்த கிழவன்டையும் வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையா?.
அந்த அளவுக்கா நாங்க பாவம் பண்ணிட்டோம் சொல்லு?.
முஸ்லிம் குடும்பத்தில் போய் கட்டிக்கிட்ட அவங்களுக்கும் நமக்கும் சாதி சண்டை வந்தா எப்படி இருக்கும்?அந்த பொண்ணோட வீட்ல என்னா பேச்சு பேசினார்கள் மறக்க முடியுமா?.
என்னமோ நம்ப ஒன்னு இல்லாத பய போலையும் அவன் கோடீஸ்வரன் போலையும் என் பொண்ணை வெச்சுகிட்டு வாழ வக்கில்லைனு சொல்லி காட்டுனாங்களே.
இன்னைக்கு அவங்க பொண்ணு ராணி போல என் பேரன் வச்சிருக்காங்கற சேதி எங்களுக்கு தெரியும்.அவங்களுக்கு தெரியுமா என்றார்..
"இல்ல தாத்தா"
நசீரா ரெண்டு வருஷமா அவங்ககிட்ட பேசறதில்லை.
சரி போனதை விடு இந்த நல்ல விஷயத்தை சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.பொண்ணை பெத்தவங்களுக்கு கோவதாபம் இருக்க தான் செய்யும்.சுமதி உன் மவனுக்கு போன் போட்டு வர சொல்லு என்றார்.
சின்ன குட்டி அப்பனுக்கு ஒரு போன் போட்டு கொடுத்தா என்க,சரி அப்பாயி என்றவள் பெரிய தந்தைக்கு போன் பண்ணி பாட்டியிடம் கொடுத்தாள்.
அன்பரசனோ பஞ்சாயத்து விஷயமாக பேசிக் கொண்டிருக்க போன் சத்தம் கேட்டு யாரேன்று பார்க்க வீட்டிலிருந்து கால் வருவது தெரிந்து அட்டென்ட் பண்ணியர் ஹலோ என்க அய்யா நான் தான் பேசுறேன் என்கவும்,சொல்லுமா.
தீரன் பொண்டாட்டி மாசமா இருக்காம்...உங்கப்பா வர சொல்றார்பா என்று போனை வைத்தார். ..
செழியனின் பெரியப்பா மருமகளான கஸ்தூரியை வானதி கூப்பிட, ஷமீராவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவளும் தனது சின்ன மாமியார் கூப்பிடுவதை கேட்டு,அத்தை கூப்பிடுறாங்க..
இதோ வந்துடுறேனென்று மடியிலிருந்த குழந்தையை தூக்கி கொண்டு வானதியிடம் வந்தவளோ சொல்லுங்கத்தை என்றாள்.
அம்மாடி ராவுக்கு உன் ஓப்படியாக்கு சடங்கு இருக்கு.சாமி ரூம்ல புடவையும் மத்த பொருளெல்லாம் இருக்கு அதை கொடுத்துட்டு விசயத்தை காதில் போடுமா என்கவும்,சரிங்கத்தை நான் பாத்துக்குறேன் என்றாள்.
மருமகளின் இடுப்பிலிருந்த பேரனை பார்த்தவர் ஐயா கவினு..ஆச்சி கிட்ட வரிங்களா சாமி என்கவும் அவனும் தனது சின்ன பாட்டியிடம் தாவினான்.
கஸ்தூரியோ அங்கிருந்த பூஜை அறைக்குள் சென்றவள் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு மலையம்மா என்றும் போல இந்த குடும்பம் சந்தோஷமாக தழைத்து வாழ நீயே அருள் புரியணுமென்று வேண்டினாள்..
பின்னர் ஷமீராவிற்கு சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் சடங்கு செய்து முடிக்கவும்,அவள் கையில் தாம்பாளத்தை கொடுத்த கஸ்தூரி அம்மாடி போய் குளிச்சிட்டு இதை கட்டிக்கிட்டு ரெடியாகு என்றாள்.
வானதி பால் காய்ச்சியாச்சா என்று விருமாயி கேட்க ஆச்சிங்கத்தை என்றார்.சரி அந்த வெள்ளி சொம்பில் ஊத்தி வை என்க.கஸ்தூரி உன் தங்கச்சியையும் கொழுந்தனாரையும் சாப்பிட கூப்பிட்டு வாம்மா.
இதோங்கத்தை என்றவளோ ஷமீராவின் ரூம் கதவை போய் தட்ட சிறிது நொடியில் அவளும் கதவை திறந்தாள்..
அம்மாடி சாப்பிட கூப்பிடுறாங்க என்கவும் அக்கா எனக்கு வெளியில் வர ஒரு மாதிரியா இருக்குங்கக்கா.நான் வேண்டுமானால் சாப்பாட்டை எடுத்துட்டு வந்து ரூமுக்குள்ளவே சாப்பிட்டுக்கட்டுமா என்று தயக்கமாக கேட்க...ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நாளில் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்த கஸ்தூரியும் இதுக்கு ஏன் தயக்கம்...
நான் எடுத்துட்டு வரேன் நீ இரு என்று சொல்லிவிட்டு கிச்சனிற்கு போனவர் அங்கிருந்த தனது சின்ன மாமியாரிடம் ஷமீராவுக்கு நான் ரூமுக்குள்ளயே சாப்பாடு கொடுக்கிறேன் என்கவும் சரிமா என்றார்...
மற்றவர்கள் எல்லாம் வெளியே இருந்த பந்தியில் சாப்பிட்டு முடித்தனர்.பரத்தும் பாபுவும் கண்ணனோடு செகண்ட் ஷோ படம் பார்ப்பதற்காக டவுனுக்கு போய்க் கொண்டிருந்தார்கள்...
ஏன் மாப்பி ஷோ எத்தனை மணிக்கு?.
9:00 மணிக்கு என்று சொல்லிக்கொண்டு கண்ணன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்...
என் கிரகத்தை பாரேன் மாப்பி...
இந்த நேரத்துல உன் தங்கச்சி கூட படம் பாக்க போக வேண்டிய வயசு ஆனால் இப்படி இரண்டு தடிமாடுங்க கூட போகணுமென்று இருக்கேயென பரத் சொல்ல உனக்கு கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா என்பதை நாங்க முடிவு பண்ணனும் மச்சி என்று சொல்லிக்கொண்டு நண்பனின் பிடரியில் பாபு ஒரு அடியை வைத்தான்.
அதேப்போல் ஷமீராவுக்கு டிபனை எடுத்துக் கொண்டு வந்த கஸ்தூரி கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார். அவரைப் பார்த்து கட்டில் மேல் உட்கார்ந்திருந்தவள் எழுந்து நிற்க நமக்குள்ள எதுக்கு இந்த சம்பிரதாயெல்லாம்..
நம்ப குடும்பத்துக்கு நான் மூத்த மருமகள் அடுத்த மருமகள் நீனு சரியா. நம்ம ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி அதனால இந்த மரியாதை எல்லாம் வேண்டாமென்க,கஸ்தூரியின் அன்பான பேச்சு ஷமீராவுக்கு ரொம்ப பிடித்து விட்டது..
ஒற்றைப் பெண்ணாய் பிறந்தவளுக்கு கூட ஒரு உடன்பிறப்பு இல்லை என்று எத்தனையோ நாள் வருத்தப் பட்டிருக்கிறாள்.இன்று தனது கணவன் மூலமாக எண்ணற்ற உறவுகள் தனக்கு கிடைத்திருக்கிறதை நினைக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.
சாப்பிடுனு கஸ்தூரி சொல்ல அக்கா நீங்க சாப்பிடலையா என்று கேட்டவளை பார்த்து சிரித்தவள் உங்க மாமா வெளியில் பந்தி பரிமாறிட்டு இருக்கிறார்கள்.
அவர் வந்த பிறகு நான் சாப்பிடுகிறேன் என்க...ஓஓஓ மாமாவை விட்டு நீங்க சாப்பிட மாட்டீங்களா என்று சிரித்துக்கொண்டே கேட்க நைட் ஒரு பொழுது தான் உங்க மாமா வீட்டில் சாப்பிடுகிறார்.
காலையிலேயே காட்டுக்கு போயிடுறாங்களா சாப்பாட்டை யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பி விடுவேன்.சரி ஒரு வேளையாவது ஒன்னா சாப்பிடுவோமே என்றுதான்னு சிரித்துக் கொண்டே கஸ்தூரி சொல்ல சரிங்கக்கா என்றாள்...
கொழுந்தனாரு அவருக்கு ஏத்த ஜோடியா தான் உன்ன பிடிச்சிருக்கார்.
அப்படிங்களா அக்கா நெஜமாவா?
ஆமாம்....என் கொழுந்தனார வளைச்சி போட சொந்த பந்தத்தில் எவ்வளவு போட்டி தெரியுமானு பெருமையாக கஸ்தூரி சொல்ல..
அதைக் கேட்ட ஷமீரா இந்த முரட்டு காளைக்கு அவ்வளவு போட்டியாக்கா என்று சத்தமாக சிரித்து விட்டாள்...
ஏண்டி சுமதி உன் பேரனுங்க ரெண்டு பேரும் என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்கானுங்க?நம்ம குடும்பத்தில் நடக்கிற முதல் விசேஷம்...
நம்ப பொண்ணு என்ன பத்து புள்ளையா பெத்து வைத்திருக்கு?.இதுக்கு வரலைன்னா அடுத்த பிள்ளைக்கு போகலாம்னு இருக்க?.ஒத்த புள்ளை கருவேப்பிலை கொத்து போல பெத்துருக்கு.அந்த புள்ளையோட விழாவுக்கு இரண்டு பயலாலையும் இவனுங்க பொண்டாட்டிய கூப்பிட்டு வர முடியாதா?
என்னமோ கட்டாகாளி பயலுக போல கையை வீசிட்டு வராங்களேயென்று முற்றத்திலிருந்த ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டு மனைவியிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்..
சுமதி பாட்டிக்கும் அந்த எண்ணம் இருக்க தான் செய்தது.தீரனும் மாறனும் மட்டுமே வந்திருந்தனர் தவிர பானுவையும் நசீராவையும் கூப்பிட்டு வரவில்லை.
சொந்த பந்தம் வந்துட்டு போகுற நேரத்தில் இப்படி சத்தம் போடாதீங்க என்கவும்,ஆமாண்டி நான் பேசினா உடனே சத்தம் போடுறேன்னு என் வாயை அடைச்சுரு.
அந்த ரெண்டு தடி மாடுகள் கிட்ட எதுவுமே கேட்டுறாதே,ஏன்னா உனக்கு அவனுங்கள் ரெண்டு பேரும் செல்ல பேரனுங்கள் இல்லையா என்றவாறு தம்புசாமி தாத்தா தனது மனைவியை முறைத்துப் பார்த்தார்.
அந்த நேரம் தீரன்,மாறன் மற்றும் கண்ணன் மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வர,பேரன்கள் வருவதை பார்த்த சுமதி பாட்டியோ என் கண்ணே பட்டுடும் போலிருக்கே...
ரஞ்சனி ரஞ்சனி கொஞ்சம் உப்பும் மிளகாயும் எடுத்துட்டு வா என்று மருமகளுக்கு குரல் கொடுக்க, இதோ வரேங்கத்தை என்றவரும் அவர் சொன்னது போல எடுத்துட்டு வந்து கொடுத்தார்.
ஐயா செத்த நில்லுங்களென்று தனது பேரனுங்களை பார்த்து சொல்ல,தாத்தாவை பார்த்து விட்டு என்னடா இந்த நம்பியார் வேற இங்கே இருக்கிறார்.அப்பாயி நம்மள நிக்க சொல்லுதென்று மாறன் முணுமுணுக்க,செத்த இருங்கடா..நம்பளை வச்சு நம்பியார் ஏதாச்சும் இப்ப படம் காட்டுவாரு என்ஜாய் பண்ணலாமென்று தீரனும் சிரிக்காமல் சொன்னான்.
தனது அண்ணன் சொன்னதை கேட்டதும் கண்ணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
தோட்டத்து பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்த தாத்தாவோ கண்ணன் சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவார் என்னடா இங்க ஆடிக்கிட்டா இருக்கிறாங்க சிரிக்கிறனு முறைத்தார்..
அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா..வேற ஒன்னு நினைச்சேன் சிரிச்சேன் என்றான்.
அப்படி என்ன நினைச்ச சொல்லித்தொலை நானும் சிரிப்பேன் என்கவும் அது சொன்னா நீ திட்ட மாட்டியே என்றான்.
நீ முதல்ல சொல்லுயென்றார்.
உனக்கு சூப்பர் மேன் டிரஸ் போட்டு பார்த்தேன் எப்படி இருக்குன்னு?அதை நினைத்து சிரிப்பு வருது என்கவும் தங்களது தம்பி சொன்னதை கேட்டு அவனுங்களும் தாத்தாவை அந்த கோலத்தில் நினைத்து பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்
தனது அண்ணன் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்த கவிதா கண்மணி இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை. .
பாத்தியாடி உன் பேரனை?.
எனக்கு இங்கிலீசு தெரியலன்னு கெட்ட வார்த்தைகளால் திட்டுறானேனு தாத்தாவும் கோபப்பட்டு கத்து,ஐயோ தாத்தா அண்ணன் உன்னை திட்டலை. இங்கிலீஷ் படத்துல வர ஹீரோ போல இருக்குன்னு சொல்லுதுனு கவிதா சொல்ல,என்ன சின்ன குட்டி உன் அண்ணனுக்கு ஒத்து ஊதுறியா?.
ஏன்டா ரெண்டு பேரும் என்னமோ கல்யாணம் ஆகாத பய போல மைனர் ஜாலி மணிபர்ஸ் காலினு வீசிட்டு வரீங்களே உங்க ரெண்டு பேர் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்தா இங்க என்ன எல்லாரும் கடிச்சு தின்னுடுவார்களா,இல்லை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவாங்களா சொல்லுங்கடா?.
அது வந்து தாத்தா...நசீரா கன்சீவா இருக்காள்.இப்போதைக்கு பஸ்ல இவ்வளவு தூரம் டிராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க என்று தீரன் சொல்ல,ஈசி சேரில் உட்கார்ந்திருந்தவரோ தனது குடும்பத்திற்கு அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு வரப்போவதை கேட்டு என்னய்யா சொல்லுறனு சந்தோஷத்தில் அதிர்ந்து போய் எழுந்தார்.
ஆமாம் தாத்தா.அதனால்தான் கூப்பிட்டு வரலை.துணைக்கு பானுவும் இருக்கு.
ஏன்யா இவ்ளோ பெரிய நல்ல விஷயத்தை இந்த கிழவன்டையும் வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையா?.
அந்த அளவுக்கா நாங்க பாவம் பண்ணிட்டோம் சொல்லு?.
முஸ்லிம் குடும்பத்தில் போய் கட்டிக்கிட்ட அவங்களுக்கும் நமக்கும் சாதி சண்டை வந்தா எப்படி இருக்கும்?அந்த பொண்ணோட வீட்ல என்னா பேச்சு பேசினார்கள் மறக்க முடியுமா?.
என்னமோ நம்ப ஒன்னு இல்லாத பய போலையும் அவன் கோடீஸ்வரன் போலையும் என் பொண்ணை வெச்சுகிட்டு வாழ வக்கில்லைனு சொல்லி காட்டுனாங்களே.
இன்னைக்கு அவங்க பொண்ணு ராணி போல என் பேரன் வச்சிருக்காங்கற சேதி எங்களுக்கு தெரியும்.அவங்களுக்கு தெரியுமா என்றார்..
"இல்ல தாத்தா"
நசீரா ரெண்டு வருஷமா அவங்ககிட்ட பேசறதில்லை.
சரி போனதை விடு இந்த நல்ல விஷயத்தை சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.பொண்ணை பெத்தவங்களுக்கு கோவதாபம் இருக்க தான் செய்யும்.சுமதி உன் மவனுக்கு போன் போட்டு வர சொல்லு என்றார்.
சின்ன குட்டி அப்பனுக்கு ஒரு போன் போட்டு கொடுத்தா என்க,சரி அப்பாயி என்றவள் பெரிய தந்தைக்கு போன் பண்ணி பாட்டியிடம் கொடுத்தாள்.
அன்பரசனோ பஞ்சாயத்து விஷயமாக பேசிக் கொண்டிருக்க போன் சத்தம் கேட்டு யாரேன்று பார்க்க வீட்டிலிருந்து கால் வருவது தெரிந்து அட்டென்ட் பண்ணியர் ஹலோ என்க அய்யா நான் தான் பேசுறேன் என்கவும்,சொல்லுமா.
தீரன் பொண்டாட்டி மாசமா இருக்காம்...உங்கப்பா வர சொல்றார்பா என்று போனை வைத்தார். ..
செழியனின் பெரியப்பா மருமகளான கஸ்தூரியை வானதி கூப்பிட, ஷமீராவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவளும் தனது சின்ன மாமியார் கூப்பிடுவதை கேட்டு,அத்தை கூப்பிடுறாங்க..
இதோ வந்துடுறேனென்று மடியிலிருந்த குழந்தையை தூக்கி கொண்டு வானதியிடம் வந்தவளோ சொல்லுங்கத்தை என்றாள்.
அம்மாடி ராவுக்கு உன் ஓப்படியாக்கு சடங்கு இருக்கு.சாமி ரூம்ல புடவையும் மத்த பொருளெல்லாம் இருக்கு அதை கொடுத்துட்டு விசயத்தை காதில் போடுமா என்கவும்,சரிங்கத்தை நான் பாத்துக்குறேன் என்றாள்.
மருமகளின் இடுப்பிலிருந்த பேரனை பார்த்தவர் ஐயா கவினு..ஆச்சி கிட்ட வரிங்களா சாமி என்கவும் அவனும் தனது சின்ன பாட்டியிடம் தாவினான்.
கஸ்தூரியோ அங்கிருந்த பூஜை அறைக்குள் சென்றவள் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு மலையம்மா என்றும் போல இந்த குடும்பம் சந்தோஷமாக தழைத்து வாழ நீயே அருள் புரியணுமென்று வேண்டினாள்..
பின்னர் ஷமீராவிற்கு சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் சடங்கு செய்து முடிக்கவும்,அவள் கையில் தாம்பாளத்தை கொடுத்த கஸ்தூரி அம்மாடி போய் குளிச்சிட்டு இதை கட்டிக்கிட்டு ரெடியாகு என்றாள்.
வானதி பால் காய்ச்சியாச்சா என்று விருமாயி கேட்க ஆச்சிங்கத்தை என்றார்.சரி அந்த வெள்ளி சொம்பில் ஊத்தி வை என்க.கஸ்தூரி உன் தங்கச்சியையும் கொழுந்தனாரையும் சாப்பிட கூப்பிட்டு வாம்மா.
இதோங்கத்தை என்றவளோ ஷமீராவின் ரூம் கதவை போய் தட்ட சிறிது நொடியில் அவளும் கதவை திறந்தாள்..
அம்மாடி சாப்பிட கூப்பிடுறாங்க என்கவும் அக்கா எனக்கு வெளியில் வர ஒரு மாதிரியா இருக்குங்கக்கா.நான் வேண்டுமானால் சாப்பாட்டை எடுத்துட்டு வந்து ரூமுக்குள்ளவே சாப்பிட்டுக்கட்டுமா என்று தயக்கமாக கேட்க...ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நாளில் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்த கஸ்தூரியும் இதுக்கு ஏன் தயக்கம்...
நான் எடுத்துட்டு வரேன் நீ இரு என்று சொல்லிவிட்டு கிச்சனிற்கு போனவர் அங்கிருந்த தனது சின்ன மாமியாரிடம் ஷமீராவுக்கு நான் ரூமுக்குள்ளயே சாப்பாடு கொடுக்கிறேன் என்கவும் சரிமா என்றார்...
மற்றவர்கள் எல்லாம் வெளியே இருந்த பந்தியில் சாப்பிட்டு முடித்தனர்.பரத்தும் பாபுவும் கண்ணனோடு செகண்ட் ஷோ படம் பார்ப்பதற்காக டவுனுக்கு போய்க் கொண்டிருந்தார்கள்...
ஏன் மாப்பி ஷோ எத்தனை மணிக்கு?.
9:00 மணிக்கு என்று சொல்லிக்கொண்டு கண்ணன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்...
என் கிரகத்தை பாரேன் மாப்பி...
இந்த நேரத்துல உன் தங்கச்சி கூட படம் பாக்க போக வேண்டிய வயசு ஆனால் இப்படி இரண்டு தடிமாடுங்க கூட போகணுமென்று இருக்கேயென பரத் சொல்ல உனக்கு கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா என்பதை நாங்க முடிவு பண்ணனும் மச்சி என்று சொல்லிக்கொண்டு நண்பனின் பிடரியில் பாபு ஒரு அடியை வைத்தான்.
அதேப்போல் ஷமீராவுக்கு டிபனை எடுத்துக் கொண்டு வந்த கஸ்தூரி கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார். அவரைப் பார்த்து கட்டில் மேல் உட்கார்ந்திருந்தவள் எழுந்து நிற்க நமக்குள்ள எதுக்கு இந்த சம்பிரதாயெல்லாம்..
நம்ப குடும்பத்துக்கு நான் மூத்த மருமகள் அடுத்த மருமகள் நீனு சரியா. நம்ம ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி அதனால இந்த மரியாதை எல்லாம் வேண்டாமென்க,கஸ்தூரியின் அன்பான பேச்சு ஷமீராவுக்கு ரொம்ப பிடித்து விட்டது..
ஒற்றைப் பெண்ணாய் பிறந்தவளுக்கு கூட ஒரு உடன்பிறப்பு இல்லை என்று எத்தனையோ நாள் வருத்தப் பட்டிருக்கிறாள்.இன்று தனது கணவன் மூலமாக எண்ணற்ற உறவுகள் தனக்கு கிடைத்திருக்கிறதை நினைக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.
சாப்பிடுனு கஸ்தூரி சொல்ல அக்கா நீங்க சாப்பிடலையா என்று கேட்டவளை பார்த்து சிரித்தவள் உங்க மாமா வெளியில் பந்தி பரிமாறிட்டு இருக்கிறார்கள்.
அவர் வந்த பிறகு நான் சாப்பிடுகிறேன் என்க...ஓஓஓ மாமாவை விட்டு நீங்க சாப்பிட மாட்டீங்களா என்று சிரித்துக்கொண்டே கேட்க நைட் ஒரு பொழுது தான் உங்க மாமா வீட்டில் சாப்பிடுகிறார்.
காலையிலேயே காட்டுக்கு போயிடுறாங்களா சாப்பாட்டை யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பி விடுவேன்.சரி ஒரு வேளையாவது ஒன்னா சாப்பிடுவோமே என்றுதான்னு சிரித்துக் கொண்டே கஸ்தூரி சொல்ல சரிங்கக்கா என்றாள்...
கொழுந்தனாரு அவருக்கு ஏத்த ஜோடியா தான் உன்ன பிடிச்சிருக்கார்.
அப்படிங்களா அக்கா நெஜமாவா?
ஆமாம்....என் கொழுந்தனார வளைச்சி போட சொந்த பந்தத்தில் எவ்வளவு போட்டி தெரியுமானு பெருமையாக கஸ்தூரி சொல்ல..
அதைக் கேட்ட ஷமீரா இந்த முரட்டு காளைக்கு அவ்வளவு போட்டியாக்கா என்று சத்தமாக சிரித்து விட்டாள்...