Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
டெல்லி:
ருத்ரன் ஜூலி தம்பதியினர் புதிதாக கிடைத்த உறவான எஸ்தரோடு டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
தனது வாழ்க்கையில் இதுவரை அவர் இருந்த ஊரை விட்டு வேறெங்கும் போனதில்லை.ஏதோ புதிதாக இறக்கை முளைத்தது போல் எஸ்தரும் உணர்ந்தார்.
கணவருக்கு என்னதான் லீவு கிடைத்தாலும் அவர் அழைத்துக் கொண்டு போவது அவர் ஊரை சுற்றி உள்ள ஊர்களுக்கு மட்டும் தான்.
இப்பொழுது எஸ்தருக்கு தனது சிறுவயதின் மன ஆசை நினைவுக்கு வந்தது..
சினிமா பார்க்கும் போதெல்லாம் சிறு வயதிலிருந்தே அவருக்கு தாஜ்மஹாலை பார்த்து விட வேண்டுமென்று பேராசை...
கல்யாணம் முடிந்த பிறகு மகி அவரிடம் நீ எங்கே போக வேண்டும் என்க இவரும் தனது ஆசையை சொல்ல போயும் போயும் ஒரு கல்லறையை பார்க்கறதுக்கா இத்தனை வருஷம் ஆசைப்பட்டிருக்கு என்று நக்கலாக சிரிக்க அன்றிலிருந்து தனது மன ஆசையை மூட்டை கட்டி விட்டார்.
ஒரு மணி நேரம் கடந்து செல்ல அந்த அப்பார்ட்மெண்டுக்குள் காரும் நுழைந்தது.வேகமாக போய் இடது பக்கம் திரும்ப வி பிளாக் இருக்கும் இடத்தில் அவர்கள் வீட்டின் எண்ணிற்கு முன்னால் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்திய ருத்ரன் அம்மா நம்ம வீடு வந்துடுச்சு இறங்குங்களென்றான்..
ஒரே போல சுற்றி இருக்கும் பில்டிங்கை பார்த்துக் கொண்டே எஸ்தரும் கீழே இறங்கினார்.
பின்னர் லிப்டில் ஏறி ஏழாவது ப்ளோரை பிரஸ் பண்ணவும் சிறிது நொடியில் அவர்கள் தளத்தில் வந்து லிப்ட் நின்றது.
வெல்கம் மா இந்த அனாதைகளுக்கு இப்பொழுது புதிதாக ஒரு உறவு கிடைத்திருக்கிறதென்க, ஜூலி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியாக பார்க்க ஆமாம் மா எங்களுக்கு யாருமே கிடையாது.
இப்போ இரண்டு பேருக்குமே சேர்த்து அம்மாவா நீங்க கிடைத்திருக்கிறீர்கள் ஆண்டவர் தான் கொடுத்திருக்கிறார் என்கவும் நீ கிறிஸ்டியானம்மா என்கவும்ஆமாங்கம்மா நான் சர்ச் ஆசிரமத்தில் தான் வளர்ந்தேனென்றாள்..
அம்மா நான் இருக்கும் போது இனி நீங்கள் ஒருபோதும் அனாதைனு சொல்லவே கூடாது என்கும்போது எஸ்தருக்கு தனது ஒரே மகளை நினைத்து அழுகை வந்தது.இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டார்.
அங்கிருந்த இன்னொரு ரூமை காட்டி இதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க என்க,கதவைத் திறந்து உள்ளே போய் பார்த்தால் சகல வசதிகளோடு இருந்தது.
பின்னர் அவரவர் அறையில் குளித்து வெளியே வரவும் ஜூலியோ கிச்சனில் சமையல் வேலையை தொடங்கியிருந்தாள்.
தள்ளுமா ஜூலி நான் செய்றேன் என்கவும் இருக்கட்டுமா நான் செய்றேன் நீங்க உக்காருங்க...நீங்க காபி குடிப்பீங்களா டீ குடிப்பீங்களா?.
இத்தனை நாள் வீடு பூட்டி தான் இருந்தது.எப்படி பால் வந்தது? என எஸ்தர் யோசனையோடு கேட்க அது வந்துங்கம்மா இந்த வீட்டுக்கு இரண்டு திருட்டு பூனை வந்துட்டு போகுமென்று சிரிக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்டது.
நான் சொன்னேன் இல்லங்கம்மா அதுங்க தானென்று அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு போய் கதவை திறக்க அங்கிருந்த ஜோடிகளை பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்து வீட்டிற்குள் அழைத்து வந்தவள் சர்ப்ரைஸ் என்று எஸ்தர் அம்மாவை கூப்பிட்டு காட்ட,யார் இவங்கறென்று பார்த்தனர்.
அம்மா இது ரூபா,இது தீபன் அண்ணா. நானும் தீபன் அண்ணனும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தோம்.ருத்திரனும் ரூபாவும் அண்ணன் தங்கச்சி.
அவர்களுக்கும் புதிதாக ஒரு உறவு கிடைத்ததை பார்த்து சந்தோஷத்தில் கண் கலங்கினர்..
ருத்ரனோ ஹாஸ்பிடல் போவதற்காக தயாராகி வந்தவன் தனது தங்கையையும் ஆருயிர் நண்பனையும் அணைத்து நலம் விசாரித்துவிட்டு ஜூலி சாப்பாடு எடுத்து வை என்றவன் அம்மா நீங்களும் உட்காருங்கள் என்றான்.நீ சாப்பிட்டுட்டு கிளம்புப்பா நாங்க பொறுமையை சாப்பிடுகிறோம் என்றார்.
அவனும் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு தீபனோடு அவர்கள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர். இப்பொழுது அங்கு எஸ்தர் ரூபா ஜூலி மூவர் மட்டும் இருந்தனர். .
அம்மாடி நீங்க ரெண்டு பேரும் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என்க ஆமாங்கம்மா என்றவள் பக்கத்திலிருக்கும் ஸ்கூலில் ரூபா கிளாசிக்கல் டான்ஸ் டீச்சராகவும்,நான் ஹிந்தி டீச்சராக வேலை பார்ப்பதாக சொன்னாள்....
ஆனுவல் ஹாலிடே என்பதால் ஸ்கூல் திறப்பதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் இருப்பதாக இருவரும் சொல்லினர்.பின்னர் மூவரும் பொதுவாக பேசிக் கொண்டே நேரத்தை போக்கினர்.
M. V Heartcare:
வழக்கமாக அவர்கள் வருகையை பதிவு செய்து விட்டு இன்று நடக்க போறோம் ஆபரேஷனிற்கு தயாராக அவரவர் அறைக்கு சென்றனர்..
தீபன் வாசுதேவ் MD Cardiologist,ருத்ரன் வம்சிகன் MD cardiologist என்ற பெயர் பொரித்த அறைக்குள் போக அங்கே நர்சும் ஆப்ரேஷனுக்கு அணிந்து கொள்ள வேண்டிய உடையோடு தயாராக இருந்தார்.
ருத்ரன் தயாராகும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க சிறிது நொடியில் கதவை திறந்து கொண்டு தீபனும் அங்கு வந்தான்.ஹம் போகலாம் என்றவாறு இருவரும் ஏழாவது ப்ளோரில் நடக்கும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு லிப்டில் ஏறி சென்றனர்....
இன்று ஒன்னரை வயது குழந்தைக்கு ஆபரேஷன் என்பதால் தான் தனது டூரை கேன்சல் பண்ணிவிட்டு ருத்ரனும் டெல்லிக்கு வந்து சேர்ந்தான்.
மற்ற மருத்துவமனைகளில் எங்களால் முடியாது என்று கை விட ருத்ரனின் திறமை பற்றி அங்கு பரவலாக தெரியும் என்பதால் இந்த ஹாஸ்பிடலுக்கு தங்களது குழந்தையுடன் வந்திருந்தனர்.
தீபனோ தற்பொழுது அவன் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லவும் வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலின் எம்டி சந்திப் சிங் நேரடியாக ருத்ரனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, உடனே வருவதாக ஒப்புக் கொண்டவன் அதேபோல் வந்து சேர்ந்து விட்டான்.
வனிச்சூர்:
ஆதவன் கிழக்கே உதயமாவதற்குள் இரண்டு வீட்டினரும் எழுந்து பரபரப்பாக தயாராகினர்.வேகமாக போன புவனாவோ ஷமீராவின் ரூம் கதவைத் தட்ட சிறிது நொடியில் கதவு திறக்கப்பட்டது.
அம்மாடி ஷமீரா என்று சொல்ல வர அங்கே அவள் குளித்து தலையில் துண்டு கட்டி இருப்பதை பார்த்தவர் குளிச்சிட்டியாடா.உன்னை எழுப்பி விட தான் வந்தேன்.நைட்டும் தூங்க நேரம் ஆயிடுச்சு.எங்கே தூங்கிட்டு இருப்பியோன்னு நினைச்சுட்டு இருந்தேன்.நல்லவேளை நீ எந்திரிச்சு குளிச்சிட்ட.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் அந்த பொண்ணு வந்துடுவாள்.7-8.30 முகூர்த்த நேரம் இல்லையா,அதனால உங்க அப்பா 6 மணிக்குலாம் வரச் சொல்லிட்டாங்கள்.
நீ தலைமுடியை காய வச்சுக்கிட்டு ரெடியா இரு அதற்குள் நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்னு கீழே சென்றார். .
அதேபோல் சிறிது நிமிடத்தில் காபியோடு வந்தவர் ஷமீராவுக்கு கொடுத்துவிட்டு கண்மணியையும் கவிதாவையும் எழுப்பிவிட்டு போனார்...
அரை மணி நேரம் கடந்திருக்க பியூட்டிஷியன் வந்தார்.ஷமீராவின் முடி நீளமானது என்பதாலும்,அவள் முகத்திற்கு ஏற்ற போல எந்தவிதமான மேக்கப் பண்ணலாமென்று பியூட்டிஷனும் சிறிது யோசனை பண்ணியவர் பின்னர் அவள் கூந்தலை சீவிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க யார் தான் இப்படி உசுர வாங்குறார்கள் என்றபடி கதவை திறக்க அந்தோணியும் ராணியும் கையில் தாம்பாளத்தோடு உள்ளே வந்தனர். கண்ணாடி வழியாக இருவரும் பார்த்த ஷமீராவோ அதிர்ந்து போய் எழுந்தாள்.
அத்தை மாமா என்கும்போதே ஷமீராவுக்கு அழுகை வந்தது.சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு கண்ணை கசிக்கிட்டு இருக்க என்றவாறு தனது அண்ணன் மகளின் கண்ணை ராணியும் துடைத்து விட,அத்தையென்று அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள்.
ஷமீ எதுக்கு அழுதிட்டு இருக்கிற?.
பாக்குறவங்க என்ன நினைப்பாங்க என்கவும் இது சந்தோஷத்தில் வந்த கண்ணீர் தான் வேற ஒன்றும் இல்லை என்றவளோ,யாருமே இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன்னு இவ்ளோ நேரம் மனதிற்குள் கவலைப்பட்டது எனக்கு தான் தான் தெரியுமென்று தனக்குள்ள சொல்லிக்கொண்டான்..
அப்பா அம்மா எப்படி இருக்காங்க என்க,எல்லாரும் நல்லா இருக்காங்க என்ற அந்தோணி ராணியென்று சொல்ல பின்னர் இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அந்த தாம்பாளத்தை கொடுக்க ஷமீராவும் வாங்கிக் கொண்டாள்.
அம்மாடி இதுல இருக்கிறதை போட்டு விடுங்களென்று பியூட்டிஷியனிடம் சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து கீழே சென்றனர்.
அந்தோணிக்கும் ராணிக்கும் தம்புசாமி தாத்தாவே தனது வீட்டினரை அறிமுகப்படுத்தினார்.அதேபோல் அவர் வீட்டினருக்கும் ஷமீராவின் தாய் மாமன் அத்தையென்று அறிமுகப்படுத்தினார்..
பின்னர் அவர்கள் பொதுவாக பங்ஷனை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.நேரமும் கடந்து செல்ல எல்லாரும் தயாராகினர்.
அங்கே கோயிலில் பாடல் ஒரு பக்கம் ஒலிக்க இன்னொரு பக்கம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் கண்ணன் தீரன் மாறன் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா தான் பேரன்கள் இருவருக்கும் போன் பண்ணி பங்க்ஷனுக்கு வருமாறு சொல்லியிருந்தார்...
கோயிலுக்கு முன்னாலிருக்கும் பெரிய திடலில் பந்தல் போட்டு கிழக்கு பக்கம் பார்த்த போல மணமேடை அலங்காரம் பண்ணியிருந்தனர்..
மருமகளுக்கு போடப்போகும் தாலி சரடை சாமியிடம் வைத்து வணங்கி விட்டு அதை எடுத்து டப்பாவில் வைத்து பூட்டி, தனது கையில் இருந்த பையில் வைத்துக் கொண்ட வானதி ஏங்க கோயிலுக்கு போகலாமா என்கவும் சரி வானதி என்றவர் மற்ற சொந்தங்களோடு வீட்டிலிருந்து கிளம்பினர்.
ஷமீராவிற்கு அலங்காரத்தை முடித்த பியூட்டிஷனும் மேடம் சரியா இருக்கா பாருங்களென்க,அவளுக்கோ தன்னை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.
இதுவரை இப்படி எல்லாம் மேக்கப் பண்ணியதில்லை என்பதால் பார்த்தவுடனே பிடித்தது.நல்லா இருக்கென்றாள்.கவிதாவுக்கும் கண்மணிக்கும் அதே போல் அலங்காரம் பண்ணி விட்டார்...
சுமதி பாப்பாவ கூப்பிட்டு வா என்று தம்புசாமி தாத்தா சொல்ல பாட்டியோ படியில் ஏறி மேலே வந்தவர் ரூம் கதவைத் தட்ட கண்மணி போய் கதவை திறக்கவும் உள்ளே வந்தவர் ஷமீராவின் அலங்காரத்தை பார்த்து அழகாக இருக்கமா என்று கன்னம் கிள்ளியவர் வா மா என அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.
அலங்காரத்தோடு வரும் மருமகளை பார்த்த அந்தோணிக்கும் ராணிக்கும் திருப்தியாக இருந்தது...
என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ராஜாத்தி என்று மருமகளை அணைத்துக் கொண்ட ராணிக்கு தனது அண்ணனும் அண்ணியும் இங்கிருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
ருத்ரன் ஜூலி தம்பதியினர் புதிதாக கிடைத்த உறவான எஸ்தரோடு டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
தனது வாழ்க்கையில் இதுவரை அவர் இருந்த ஊரை விட்டு வேறெங்கும் போனதில்லை.ஏதோ புதிதாக இறக்கை முளைத்தது போல் எஸ்தரும் உணர்ந்தார்.
கணவருக்கு என்னதான் லீவு கிடைத்தாலும் அவர் அழைத்துக் கொண்டு போவது அவர் ஊரை சுற்றி உள்ள ஊர்களுக்கு மட்டும் தான்.
இப்பொழுது எஸ்தருக்கு தனது சிறுவயதின் மன ஆசை நினைவுக்கு வந்தது..
சினிமா பார்க்கும் போதெல்லாம் சிறு வயதிலிருந்தே அவருக்கு தாஜ்மஹாலை பார்த்து விட வேண்டுமென்று பேராசை...
கல்யாணம் முடிந்த பிறகு மகி அவரிடம் நீ எங்கே போக வேண்டும் என்க இவரும் தனது ஆசையை சொல்ல போயும் போயும் ஒரு கல்லறையை பார்க்கறதுக்கா இத்தனை வருஷம் ஆசைப்பட்டிருக்கு என்று நக்கலாக சிரிக்க அன்றிலிருந்து தனது மன ஆசையை மூட்டை கட்டி விட்டார்.
ஒரு மணி நேரம் கடந்து செல்ல அந்த அப்பார்ட்மெண்டுக்குள் காரும் நுழைந்தது.வேகமாக போய் இடது பக்கம் திரும்ப வி பிளாக் இருக்கும் இடத்தில் அவர்கள் வீட்டின் எண்ணிற்கு முன்னால் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்திய ருத்ரன் அம்மா நம்ம வீடு வந்துடுச்சு இறங்குங்களென்றான்..
ஒரே போல சுற்றி இருக்கும் பில்டிங்கை பார்த்துக் கொண்டே எஸ்தரும் கீழே இறங்கினார்.
பின்னர் லிப்டில் ஏறி ஏழாவது ப்ளோரை பிரஸ் பண்ணவும் சிறிது நொடியில் அவர்கள் தளத்தில் வந்து லிப்ட் நின்றது.
வெல்கம் மா இந்த அனாதைகளுக்கு இப்பொழுது புதிதாக ஒரு உறவு கிடைத்திருக்கிறதென்க, ஜூலி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியாக பார்க்க ஆமாம் மா எங்களுக்கு யாருமே கிடையாது.
இப்போ இரண்டு பேருக்குமே சேர்த்து அம்மாவா நீங்க கிடைத்திருக்கிறீர்கள் ஆண்டவர் தான் கொடுத்திருக்கிறார் என்கவும் நீ கிறிஸ்டியானம்மா என்கவும்ஆமாங்கம்மா நான் சர்ச் ஆசிரமத்தில் தான் வளர்ந்தேனென்றாள்..
அம்மா நான் இருக்கும் போது இனி நீங்கள் ஒருபோதும் அனாதைனு சொல்லவே கூடாது என்கும்போது எஸ்தருக்கு தனது ஒரே மகளை நினைத்து அழுகை வந்தது.இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டார்.
அங்கிருந்த இன்னொரு ரூமை காட்டி இதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க என்க,கதவைத் திறந்து உள்ளே போய் பார்த்தால் சகல வசதிகளோடு இருந்தது.
பின்னர் அவரவர் அறையில் குளித்து வெளியே வரவும் ஜூலியோ கிச்சனில் சமையல் வேலையை தொடங்கியிருந்தாள்.
தள்ளுமா ஜூலி நான் செய்றேன் என்கவும் இருக்கட்டுமா நான் செய்றேன் நீங்க உக்காருங்க...நீங்க காபி குடிப்பீங்களா டீ குடிப்பீங்களா?.
இத்தனை நாள் வீடு பூட்டி தான் இருந்தது.எப்படி பால் வந்தது? என எஸ்தர் யோசனையோடு கேட்க அது வந்துங்கம்மா இந்த வீட்டுக்கு இரண்டு திருட்டு பூனை வந்துட்டு போகுமென்று சிரிக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்டது.
நான் சொன்னேன் இல்லங்கம்மா அதுங்க தானென்று அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு போய் கதவை திறக்க அங்கிருந்த ஜோடிகளை பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்து வீட்டிற்குள் அழைத்து வந்தவள் சர்ப்ரைஸ் என்று எஸ்தர் அம்மாவை கூப்பிட்டு காட்ட,யார் இவங்கறென்று பார்த்தனர்.
அம்மா இது ரூபா,இது தீபன் அண்ணா. நானும் தீபன் அண்ணனும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தோம்.ருத்திரனும் ரூபாவும் அண்ணன் தங்கச்சி.
அவர்களுக்கும் புதிதாக ஒரு உறவு கிடைத்ததை பார்த்து சந்தோஷத்தில் கண் கலங்கினர்..
ருத்ரனோ ஹாஸ்பிடல் போவதற்காக தயாராகி வந்தவன் தனது தங்கையையும் ஆருயிர் நண்பனையும் அணைத்து நலம் விசாரித்துவிட்டு ஜூலி சாப்பாடு எடுத்து வை என்றவன் அம்மா நீங்களும் உட்காருங்கள் என்றான்.நீ சாப்பிட்டுட்டு கிளம்புப்பா நாங்க பொறுமையை சாப்பிடுகிறோம் என்றார்.
அவனும் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு தீபனோடு அவர்கள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர். இப்பொழுது அங்கு எஸ்தர் ரூபா ஜூலி மூவர் மட்டும் இருந்தனர். .
அம்மாடி நீங்க ரெண்டு பேரும் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என்க ஆமாங்கம்மா என்றவள் பக்கத்திலிருக்கும் ஸ்கூலில் ரூபா கிளாசிக்கல் டான்ஸ் டீச்சராகவும்,நான் ஹிந்தி டீச்சராக வேலை பார்ப்பதாக சொன்னாள்....
ஆனுவல் ஹாலிடே என்பதால் ஸ்கூல் திறப்பதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் இருப்பதாக இருவரும் சொல்லினர்.பின்னர் மூவரும் பொதுவாக பேசிக் கொண்டே நேரத்தை போக்கினர்.
M. V Heartcare:
வழக்கமாக அவர்கள் வருகையை பதிவு செய்து விட்டு இன்று நடக்க போறோம் ஆபரேஷனிற்கு தயாராக அவரவர் அறைக்கு சென்றனர்..
தீபன் வாசுதேவ் MD Cardiologist,ருத்ரன் வம்சிகன் MD cardiologist என்ற பெயர் பொரித்த அறைக்குள் போக அங்கே நர்சும் ஆப்ரேஷனுக்கு அணிந்து கொள்ள வேண்டிய உடையோடு தயாராக இருந்தார்.
ருத்ரன் தயாராகும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க சிறிது நொடியில் கதவை திறந்து கொண்டு தீபனும் அங்கு வந்தான்.ஹம் போகலாம் என்றவாறு இருவரும் ஏழாவது ப்ளோரில் நடக்கும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு லிப்டில் ஏறி சென்றனர்....
இன்று ஒன்னரை வயது குழந்தைக்கு ஆபரேஷன் என்பதால் தான் தனது டூரை கேன்சல் பண்ணிவிட்டு ருத்ரனும் டெல்லிக்கு வந்து சேர்ந்தான்.
மற்ற மருத்துவமனைகளில் எங்களால் முடியாது என்று கை விட ருத்ரனின் திறமை பற்றி அங்கு பரவலாக தெரியும் என்பதால் இந்த ஹாஸ்பிடலுக்கு தங்களது குழந்தையுடன் வந்திருந்தனர்.
தீபனோ தற்பொழுது அவன் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லவும் வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலின் எம்டி சந்திப் சிங் நேரடியாக ருத்ரனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, உடனே வருவதாக ஒப்புக் கொண்டவன் அதேபோல் வந்து சேர்ந்து விட்டான்.
வனிச்சூர்:
ஆதவன் கிழக்கே உதயமாவதற்குள் இரண்டு வீட்டினரும் எழுந்து பரபரப்பாக தயாராகினர்.வேகமாக போன புவனாவோ ஷமீராவின் ரூம் கதவைத் தட்ட சிறிது நொடியில் கதவு திறக்கப்பட்டது.
அம்மாடி ஷமீரா என்று சொல்ல வர அங்கே அவள் குளித்து தலையில் துண்டு கட்டி இருப்பதை பார்த்தவர் குளிச்சிட்டியாடா.உன்னை எழுப்பி விட தான் வந்தேன்.நைட்டும் தூங்க நேரம் ஆயிடுச்சு.எங்கே தூங்கிட்டு இருப்பியோன்னு நினைச்சுட்டு இருந்தேன்.நல்லவேளை நீ எந்திரிச்சு குளிச்சிட்ட.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் அந்த பொண்ணு வந்துடுவாள்.7-8.30 முகூர்த்த நேரம் இல்லையா,அதனால உங்க அப்பா 6 மணிக்குலாம் வரச் சொல்லிட்டாங்கள்.
நீ தலைமுடியை காய வச்சுக்கிட்டு ரெடியா இரு அதற்குள் நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்னு கீழே சென்றார். .
அதேபோல் சிறிது நிமிடத்தில் காபியோடு வந்தவர் ஷமீராவுக்கு கொடுத்துவிட்டு கண்மணியையும் கவிதாவையும் எழுப்பிவிட்டு போனார்...
அரை மணி நேரம் கடந்திருக்க பியூட்டிஷியன் வந்தார்.ஷமீராவின் முடி நீளமானது என்பதாலும்,அவள் முகத்திற்கு ஏற்ற போல எந்தவிதமான மேக்கப் பண்ணலாமென்று பியூட்டிஷனும் சிறிது யோசனை பண்ணியவர் பின்னர் அவள் கூந்தலை சீவிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க யார் தான் இப்படி உசுர வாங்குறார்கள் என்றபடி கதவை திறக்க அந்தோணியும் ராணியும் கையில் தாம்பாளத்தோடு உள்ளே வந்தனர். கண்ணாடி வழியாக இருவரும் பார்த்த ஷமீராவோ அதிர்ந்து போய் எழுந்தாள்.
அத்தை மாமா என்கும்போதே ஷமீராவுக்கு அழுகை வந்தது.சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு கண்ணை கசிக்கிட்டு இருக்க என்றவாறு தனது அண்ணன் மகளின் கண்ணை ராணியும் துடைத்து விட,அத்தையென்று அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள்.
ஷமீ எதுக்கு அழுதிட்டு இருக்கிற?.
பாக்குறவங்க என்ன நினைப்பாங்க என்கவும் இது சந்தோஷத்தில் வந்த கண்ணீர் தான் வேற ஒன்றும் இல்லை என்றவளோ,யாருமே இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன்னு இவ்ளோ நேரம் மனதிற்குள் கவலைப்பட்டது எனக்கு தான் தான் தெரியுமென்று தனக்குள்ள சொல்லிக்கொண்டான்..
அப்பா அம்மா எப்படி இருக்காங்க என்க,எல்லாரும் நல்லா இருக்காங்க என்ற அந்தோணி ராணியென்று சொல்ல பின்னர் இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அந்த தாம்பாளத்தை கொடுக்க ஷமீராவும் வாங்கிக் கொண்டாள்.
அம்மாடி இதுல இருக்கிறதை போட்டு விடுங்களென்று பியூட்டிஷியனிடம் சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து கீழே சென்றனர்.
அந்தோணிக்கும் ராணிக்கும் தம்புசாமி தாத்தாவே தனது வீட்டினரை அறிமுகப்படுத்தினார்.அதேபோல் அவர் வீட்டினருக்கும் ஷமீராவின் தாய் மாமன் அத்தையென்று அறிமுகப்படுத்தினார்..
பின்னர் அவர்கள் பொதுவாக பங்ஷனை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.நேரமும் கடந்து செல்ல எல்லாரும் தயாராகினர்.
அங்கே கோயிலில் பாடல் ஒரு பக்கம் ஒலிக்க இன்னொரு பக்கம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் கண்ணன் தீரன் மாறன் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா தான் பேரன்கள் இருவருக்கும் போன் பண்ணி பங்க்ஷனுக்கு வருமாறு சொல்லியிருந்தார்...
கோயிலுக்கு முன்னாலிருக்கும் பெரிய திடலில் பந்தல் போட்டு கிழக்கு பக்கம் பார்த்த போல மணமேடை அலங்காரம் பண்ணியிருந்தனர்..
மருமகளுக்கு போடப்போகும் தாலி சரடை சாமியிடம் வைத்து வணங்கி விட்டு அதை எடுத்து டப்பாவில் வைத்து பூட்டி, தனது கையில் இருந்த பையில் வைத்துக் கொண்ட வானதி ஏங்க கோயிலுக்கு போகலாமா என்கவும் சரி வானதி என்றவர் மற்ற சொந்தங்களோடு வீட்டிலிருந்து கிளம்பினர்.
ஷமீராவிற்கு அலங்காரத்தை முடித்த பியூட்டிஷனும் மேடம் சரியா இருக்கா பாருங்களென்க,அவளுக்கோ தன்னை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.
இதுவரை இப்படி எல்லாம் மேக்கப் பண்ணியதில்லை என்பதால் பார்த்தவுடனே பிடித்தது.நல்லா இருக்கென்றாள்.கவிதாவுக்கும் கண்மணிக்கும் அதே போல் அலங்காரம் பண்ணி விட்டார்...
சுமதி பாப்பாவ கூப்பிட்டு வா என்று தம்புசாமி தாத்தா சொல்ல பாட்டியோ படியில் ஏறி மேலே வந்தவர் ரூம் கதவைத் தட்ட கண்மணி போய் கதவை திறக்கவும் உள்ளே வந்தவர் ஷமீராவின் அலங்காரத்தை பார்த்து அழகாக இருக்கமா என்று கன்னம் கிள்ளியவர் வா மா என அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.
அலங்காரத்தோடு வரும் மருமகளை பார்த்த அந்தோணிக்கும் ராணிக்கும் திருப்தியாக இருந்தது...
என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ராஜாத்தி என்று மருமகளை அணைத்துக் கொண்ட ராணிக்கு தனது அண்ணனும் அண்ணியும் இங்கிருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.