Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்:
இதோட நிறுத்திக்குங்க சும்மா என்னையே குறை சொல்லிட்டு இருக்காதீங்க என்கவும்,என்னடி அனாதை நாயே...வாய் ரொம்ப நீளுது...
அண்ணன் வீட்ட தவிர உனக்கு எங்கேயும் போக்கிடம் கிடையாது.அப்பா அம்மாவும் செத்துட்டாங்க.என் கால்ல தாண்டி கடைசி வரைக்கும் சுத்திட்டு கிடக்கணுமென்று தட்டை தூக்கி எறிந்து விட்டு மகி அங்கிருந்து சென்றார்...
எஸ்தருக்கு மகியின் வார்த்தைகள் மிகவும் வலித்து விட்டது.கடந்து 24 வருடங்களாக பார்த்த புருஷன் தான் இருந்தாலும் இப்படி எல்லாம் அவர் பேசியது இல்லை.
கோபம் வருமே தவிர மற்றபடி தன்னை அனாதை அப்படி இப்படி என்றுலாம் சொல்லியதில்லை.ஆனால் மகளின் காதல் விஷயம் தெரிந்ததிலிருந்து மகியின் ஒவ்வொரு சொல்லும் ஈட்டி போல் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
இனியும் நாம் ஏன் உயிரோடு இருக்கணுமென்ற எண்ணமே அவருக்கு சில நாளாக வந்து கொண்டிருந்தது என்பது அவர் மட்டும் அறிந்த உண்மை.கையை கழுவிட்டு வந்த மகி,மனைவி அங்கே நிற்பதை பார்த்து நீ என்னடி யோசனைல இருக்க?.
உன் பொண்ணு ஓடிட்ட போல நீ எவன் கூட ஓடலாம்னு எண்ணத்துல இருக்கியானு வார்த்தைகளை நெருப்பாய் கொட்ட,எஸ்தரோ எதுவும் சொல்லாமல் கீழே விழுந்த தட்டையும் சிதறி கிடந்த சாதத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு,சமைத்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவர் பச்சை தண்ணியை மட்டும் குடித்து விட்டு தோட்டத்து பக்கம் உட்கார பல்வேறு யோசனை வந்தது.
நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து சென்றது.நன்கு யோசித்து தீர்க்கமாய் ஒரு முடிவை எடுத்த எஸ்தர் இரவு உணவை சமைத்து வைக்க வெளியில் போன மகியும் சாப்பிட வந்து உட்காரவும் கணவருக்கு பரிமாறினார்.
மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் என்னடி விஷம் எதாவது கலந்து வைத்திருக்கிறாயா என்க,அதற்கும் அவர் எதுவும் சொல்லவில்லை.
சாப்பிட்டு எழுந்த மகி டிவியை ஆன் பண்ணி விட்டு,சோபாவில் உட்கார்ந்து கொண்டு அந்த காலத்து படத்தை தேடி வைத்து பார்க்க ஆரம்பித்தார்.
வழக்கமாக எல்லா வேலையும் முடித்த எஸ்தர் லைட்டை நிறுத்திவிட்டு ரூமில் வந்து படுத்தார்.மேலும் ஒரு மணி நேரம் சென்றிருக்க மகிக்கு தூக்கம் வரவும் டிவியை ஆஃப் பண்ணிவிட்டு மனைவி படுத்திருக்கும் பெட்டில் வந்து படுத்தவர் சிறுது நிமிடத்தில் தூங்கி விட்டார்.
அரை மணி நேரம் கடந்து செல்ல கணவரிடமிருந்து வந்த குறட்டை சத்தத்தை கேட்ட பிறகு பொறுமையாக எழுந்தவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கணவரின் பக்கத்திலே வைத்தவர்,எழுதிய லெட்டரையும் நகைகளின் கீழே வைத்து விட்டு தனது அண்ணன் இத்தனை வருடமாக வாங்கி கொடுத்த துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
எங்கே போவதென்ற யோசனையோடு தலையில் முக்காடு போட்டபடி நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்ததும் மனதில் இருந்த வலிகளும் சேர்ந்து எஸ்தருக்கு மயக்கத்தை வர வைக்க ரோட்டிலேயே மயங்கி விழுந்தார்.
தூரத்தில் வந்த காரிலிருந்தவர்கள் எஸ்தரின் அருகில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி போய் பார்த்தனர்.
மாமு இவங்க மயங்கிட்டாங்களென்று அருகில் இருந்தவள் சொல்ல ஆமாமென்று எஸ்தரின் கையை பிடித்து பார்த்தவாறு சொன்னவன் உள்ள தூக்கிட்டு போகலாம் ஜூலி என்க,சரி மாமு என்று இருவரும் சேர்ந்து கைதாங்களாக எஸ்தரை தூக்கிட்டு வந்து காரில் படுக்க வைத்தனர்.
அந்த மெடிக்கல் கிட்டை எடு என்க, ஜூலியும் அதை எடுத்துக் கொடுக்கவும் பெட்டியை திறந்து அதிலிருந்த இன்ஜெக்ஷன் எடுத்து எஸ்தருக்கு போட,ஏன் மாமு இன்ஜெக்ஷன் என்றாள்.
ரொம்ப அனிமிக்கா இருக்காங்க பாரு, அதனால தான் டி ஊசி போட்டிருக்கேன். இவங்க சரியா சாப்பிடலை போல,இருந்ததை நாமளும் சாப்பிட்டோமே,யாரு என்னன்னு தெரியலையேடி.அவங்க எழுந்தா தான் விசாரிக்கணும் என்று சொல்லிவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க எஸ்தருக்கு மயக்கம் தெளிந்தது.தான் காரில் படுத்திருப்பது தெரிந்து பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர் தம்பி வண்டியை நிறுத்துங்களென்று கத்த,அவரின் சத்தத்தை கேட்டு ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
யார் தம்பி நீங்க?என்னை ஏன் கார்ல கூப்பிட்டு போறீங்கள்னு பதற்றத்தோடு கேட்கவும்,பின்னர் நடந்ததை சொல்லியவன் சொல்லுங்கம்மா நீங்க எங்க போகணும்?
உங்களை அங்கு கொண்டு போய் விடுகிறோமென்று காரிலிருந்த இருவரும் கேட்க அப்படி எனக்கு சொல்லிக்கும்படி இல்லப்பா.யாருமில்லாத அனாதை என்றார்.
அப்படிங்களா மா...உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் எங்க கூட வர முடியுமா?என்கவும் அவரோ இருவரையும் சந்தேகமாக பார்த்தார்.
பயப்படாதீங்கள் மா.என் பேரு ருத்ரன் இவள் என்னுடைய மனைவி ஜுலி.நான் டாக்டர் என்று தன்னுடைய ஐடி கார்டை எடுத்து எஸ்தருக்கு காமிக்கவும் அதை வாங்கி பார்த்தவர் சரிங்க தம்பி உங்க கூட வரேனென்றார் .
அம்மா நாங்க டூக்காக தமிழ்நாட்டுக்கு வந்தோம்.ஆனால் நாங்கள் இருப்பது டெல்லியில் என்கவும் சரிங்கப்பா என்றவர் எப்படியோ கண் காணாத தூரத்திற்கு போனால் சரியென்று மனதில் நினைத்துக் கொண்டு கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தார்.
வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் போகும் வழியிலிருந்த ஹோட்டலில் முன்பு காரை நிறுத்த கண்களை திறந்து பார்த்தவரிடம் வாங்கம்மா நீங்க எதுவுமே சாப்பிடலன்னு தெரியுது என்றவன் எஸ்தரை அழைத்துட்டு போய் டிபனை வாங்கி கொடுக்க நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாததால் அவர் வேக வேகமாக சாப்பிடவும் புரையேறியது.
பார்த்துங்கம்மா என்ற ஜூலி அவரின் தலையில் தட்டவும் எஸ்தருக்கு தனது மகள் ஷமீராவின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கியது..அவர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
அம்மா நீங்க ஏதோ மன கஷ்டத்தில் இருக்கீங்கன்னு எனக்கு புரியுது நீங்களா சொல்ற வரைக்கும் நிச்சயமா அதை பற்றி நாங்க கேட்க மாட்டோம். நீங்க நிம்மதியா எங்க கூட இருக்கலாம்.
அப்புறம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க என்கவும் சொல்லுப்பா என்க,எந்த சூழ்நிலையிலும் சாப்பாட்டை மட்டும் ஸ்கிப் பண்ண கூடாது.அது உடம்புக்கு நல்லது இல்லைங்கம்மா.
சாதிக்கணும் என்றால் அதுக்கு உடம்புக்கு முதல்ல தெம்பு வேணும் இல்லையா என்று காரை ஓட்டியபடி ருத்ரன் கேட்க இனிமே நான் சாதித்து என்னப்பா பண்ண போறேனென்றார்.
அப்படி சொல்லாதீங்க மா....வயது முதிர்ந்த காலத்தில் எத்தனையோ பேர் சாதித்ததை நீங்கள் பார்க்கவில்லையா இல்லை கேள்விப்படவில்லையா என்று பேசிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே தங்கள் ரெண்டு பேருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் எஸ்தரை எப்படி அழைத்துப் போவதென்று யோசனையா இருக்கும் போது தம்பி என்ன ட்ரெயின்ல ஏத்தி விடுங்க நான் வந்து சேர்ந்து விடுகிறேனென்றார்.
இருங்கம்மா பிளைட்ல டிக்கெட் ஏதாவது இருக்காயென பார்க்கிறேன் என்று ஜூலி செக் பண்ண அவர்கள் நேரமோ அவர்கள் போகப் போகும் பிளைட்டில் ஒரே ஒரு சீட் இருக்க அதிலே புக் பண்ணினாள்.பின்னர் மூவரும் அவர்களுக்கான விமானத்தில் ஏறி டெல்லிக்கு வந்து சேர்ந்தனர்.
வனிச்சூர்:
ஏன்பா ரெண்டு பேரும் அங்கையே நிக்கிறீங்கள்?இளா எங்கே கண்ணுனு வானதி கேட்கவும் தற்செயலாக மூவரும் திரும்பி பார்க்க அங்கே தனது மகனும் அவன் ஆருயிர் நண்பன் பரத்தும் நிற்பதை பார்த்து பாபு பரத் என்று மூவரும் அதிர்ச்சியாக சொன்னார்கள்.
பாபு பரத் என்று சாரதா பாட்டி கூப்பிட, ம்ம் என்று சொல்லிக் கொண்டு இருவரும் பாட்டியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் எப்ப கண்ணுங்களா வந்திங்க?.
ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்க...நீங்க மூணு பேரும் எப்ப வந்தீங்க?ஏன் சொல்லவில்லை என்று அவர்களும் திருப்பிக் கேட்டார்கள்.
இப்பதான் வந்தோம் பா...ஆமா நீ எப்போ இந்தியாவுக்கு வந்தயென்று பாபுவிடம் கேட்க நான் முந்தா நேத்து வந்தேனென்றான்.
ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்றனர்...ஏன் நீங்க மட்டும் நடந்தது எல்லாத்தையும் தெளிவாக என்கிட்ட சொன்னீங்களானு முறைத்துக் கொண்டு கேட்க,வானதிக்கு அவர்கள் சூழ்நிலை புரிந்து அதை சுமூகமாக்க நினைத்து நடந்தது நடந்து போயிடுச்சு...
இனிமே அது பத்தி எதுக்கு வளர்த்துக்கிட்டு.வாங்கப்பா உட்காருங்க.ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வரட்டுமாயா என்க அதெல்லாம் ஒன்றும் வேண்டாங்கம்மா.
நைட் சமையல் ஆகிவிட்டது அது எடுத்துட்டு வருவதற்கு பாத்திரம் கேக்குறாங்க அதுக்கு தான் ரெண்டு பேரும் வந்தோமென்று அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு சொன்னானுங்கள்.
பாபு தம்பி உடனே கிளம்புனு தான் சொல்லுச்சு அப்பா தான் விழாவில் இருக்க சொன்னாங்களென்று வானதி அவர்களை காப்பாற்ற சொல்ல,அதற்கு ராணியோ நல்ல விஷயம் தானுங்க.
அதற்கு நான் ஒன்னும் சொல்லலை.
எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே அவ்வளவு தான்.பாபுவை பார்த்து மூணு வருஷம் ஆகுதென்று கண்ணீரோடு சொன்னார்.
அம்மா என் வேலை அப்படி எதுக்கு இப்ப தேவை இல்லாம அழுதுட்டு இருக்கீங்க?.வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்குது இப்படி அழுகிறீர்களே நல்லாவா இருக்கென பாபு முறைக்க, சாரி கண்ணா என்றவர் ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்கள.
கல்யாண வேலை எப்படி போயிட்டு இருக்குப்பா என்று பரத்திடம் கேட்க ஒரு பக்கம் அதுவும் போயிட்டு இருக்குங்கத்தை.ஏனூங்கத்தை இவ்வளவு தூரம் வரீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை.
நேற்று கூட என்கிட்ட போன்ல பேசினீங்களே?.
ஏன்டா நீங்க கூட தாண்டா வந்துருக்கீங்க ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று அந்தோணி முறைத்தார்.
அதற்குள் பாத்திரம் கேட்டு போன் வர சரி மற்றதை பிறகு பேசிக்கலாம் என்றவர் நீங்க போய் வேலையை பாருங்களென அனுப்பி வைக்க, அவர்கள் இருவரும் விட்டால் போதுமென்று அங்கிருந்து சென்றனர்..
அம்மாடி வந்ததுல இருந்து ஷமீராவை காணுமே என் பேத்தி எங்கே இருக்கிறாள்?
தனது அப்பா வீட்டில் தங்க வைத்திருப்பதாக சொல்லவும், அதை கேட்டவருக்கு பேத்தியின் மாமியார் மாமனார் மேல் நல்ல எண்ணம் வந்தது.
இவர்கள் ஐவரும் பேசிக் கொண்டிருக்க செழியனும் உள்ளே வர அம்மா இவங்கதான் என்னோட பையனென்று மகனை காட்டி சொல்ல,அவர்களை பார்த்தவன் வாங்க பாட்டி வாங்கப்பா வாங்கம்மா என்று மரியாதை நிமித்தமாக கைகூப்பி செழியன் சொல்ல,கம்பீரமான ஆண்மகனாக இருப்பவனை பார்த்த சாரதா பாட்டிக்கு பேத்திக்கேற்ற மாப்பிள்ளை தான் என்கும் எண்ணம் வந்தது...
இதோட நிறுத்திக்குங்க சும்மா என்னையே குறை சொல்லிட்டு இருக்காதீங்க என்கவும்,என்னடி அனாதை நாயே...வாய் ரொம்ப நீளுது...
அண்ணன் வீட்ட தவிர உனக்கு எங்கேயும் போக்கிடம் கிடையாது.அப்பா அம்மாவும் செத்துட்டாங்க.என் கால்ல தாண்டி கடைசி வரைக்கும் சுத்திட்டு கிடக்கணுமென்று தட்டை தூக்கி எறிந்து விட்டு மகி அங்கிருந்து சென்றார்...
எஸ்தருக்கு மகியின் வார்த்தைகள் மிகவும் வலித்து விட்டது.கடந்து 24 வருடங்களாக பார்த்த புருஷன் தான் இருந்தாலும் இப்படி எல்லாம் அவர் பேசியது இல்லை.
கோபம் வருமே தவிர மற்றபடி தன்னை அனாதை அப்படி இப்படி என்றுலாம் சொல்லியதில்லை.ஆனால் மகளின் காதல் விஷயம் தெரிந்ததிலிருந்து மகியின் ஒவ்வொரு சொல்லும் ஈட்டி போல் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
இனியும் நாம் ஏன் உயிரோடு இருக்கணுமென்ற எண்ணமே அவருக்கு சில நாளாக வந்து கொண்டிருந்தது என்பது அவர் மட்டும் அறிந்த உண்மை.கையை கழுவிட்டு வந்த மகி,மனைவி அங்கே நிற்பதை பார்த்து நீ என்னடி யோசனைல இருக்க?.
உன் பொண்ணு ஓடிட்ட போல நீ எவன் கூட ஓடலாம்னு எண்ணத்துல இருக்கியானு வார்த்தைகளை நெருப்பாய் கொட்ட,எஸ்தரோ எதுவும் சொல்லாமல் கீழே விழுந்த தட்டையும் சிதறி கிடந்த சாதத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு,சமைத்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவர் பச்சை தண்ணியை மட்டும் குடித்து விட்டு தோட்டத்து பக்கம் உட்கார பல்வேறு யோசனை வந்தது.
நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து சென்றது.நன்கு யோசித்து தீர்க்கமாய் ஒரு முடிவை எடுத்த எஸ்தர் இரவு உணவை சமைத்து வைக்க வெளியில் போன மகியும் சாப்பிட வந்து உட்காரவும் கணவருக்கு பரிமாறினார்.
மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் என்னடி விஷம் எதாவது கலந்து வைத்திருக்கிறாயா என்க,அதற்கும் அவர் எதுவும் சொல்லவில்லை.
சாப்பிட்டு எழுந்த மகி டிவியை ஆன் பண்ணி விட்டு,சோபாவில் உட்கார்ந்து கொண்டு அந்த காலத்து படத்தை தேடி வைத்து பார்க்க ஆரம்பித்தார்.
வழக்கமாக எல்லா வேலையும் முடித்த எஸ்தர் லைட்டை நிறுத்திவிட்டு ரூமில் வந்து படுத்தார்.மேலும் ஒரு மணி நேரம் சென்றிருக்க மகிக்கு தூக்கம் வரவும் டிவியை ஆஃப் பண்ணிவிட்டு மனைவி படுத்திருக்கும் பெட்டில் வந்து படுத்தவர் சிறுது நிமிடத்தில் தூங்கி விட்டார்.
அரை மணி நேரம் கடந்து செல்ல கணவரிடமிருந்து வந்த குறட்டை சத்தத்தை கேட்ட பிறகு பொறுமையாக எழுந்தவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கணவரின் பக்கத்திலே வைத்தவர்,எழுதிய லெட்டரையும் நகைகளின் கீழே வைத்து விட்டு தனது அண்ணன் இத்தனை வருடமாக வாங்கி கொடுத்த துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
எங்கே போவதென்ற யோசனையோடு தலையில் முக்காடு போட்டபடி நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்ததும் மனதில் இருந்த வலிகளும் சேர்ந்து எஸ்தருக்கு மயக்கத்தை வர வைக்க ரோட்டிலேயே மயங்கி விழுந்தார்.
தூரத்தில் வந்த காரிலிருந்தவர்கள் எஸ்தரின் அருகில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி போய் பார்த்தனர்.
மாமு இவங்க மயங்கிட்டாங்களென்று அருகில் இருந்தவள் சொல்ல ஆமாமென்று எஸ்தரின் கையை பிடித்து பார்த்தவாறு சொன்னவன் உள்ள தூக்கிட்டு போகலாம் ஜூலி என்க,சரி மாமு என்று இருவரும் சேர்ந்து கைதாங்களாக எஸ்தரை தூக்கிட்டு வந்து காரில் படுக்க வைத்தனர்.
அந்த மெடிக்கல் கிட்டை எடு என்க, ஜூலியும் அதை எடுத்துக் கொடுக்கவும் பெட்டியை திறந்து அதிலிருந்த இன்ஜெக்ஷன் எடுத்து எஸ்தருக்கு போட,ஏன் மாமு இன்ஜெக்ஷன் என்றாள்.
ரொம்ப அனிமிக்கா இருக்காங்க பாரு, அதனால தான் டி ஊசி போட்டிருக்கேன். இவங்க சரியா சாப்பிடலை போல,இருந்ததை நாமளும் சாப்பிட்டோமே,யாரு என்னன்னு தெரியலையேடி.அவங்க எழுந்தா தான் விசாரிக்கணும் என்று சொல்லிவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க எஸ்தருக்கு மயக்கம் தெளிந்தது.தான் காரில் படுத்திருப்பது தெரிந்து பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர் தம்பி வண்டியை நிறுத்துங்களென்று கத்த,அவரின் சத்தத்தை கேட்டு ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
யார் தம்பி நீங்க?என்னை ஏன் கார்ல கூப்பிட்டு போறீங்கள்னு பதற்றத்தோடு கேட்கவும்,பின்னர் நடந்ததை சொல்லியவன் சொல்லுங்கம்மா நீங்க எங்க போகணும்?
உங்களை அங்கு கொண்டு போய் விடுகிறோமென்று காரிலிருந்த இருவரும் கேட்க அப்படி எனக்கு சொல்லிக்கும்படி இல்லப்பா.யாருமில்லாத அனாதை என்றார்.
அப்படிங்களா மா...உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் எங்க கூட வர முடியுமா?என்கவும் அவரோ இருவரையும் சந்தேகமாக பார்த்தார்.
பயப்படாதீங்கள் மா.என் பேரு ருத்ரன் இவள் என்னுடைய மனைவி ஜுலி.நான் டாக்டர் என்று தன்னுடைய ஐடி கார்டை எடுத்து எஸ்தருக்கு காமிக்கவும் அதை வாங்கி பார்த்தவர் சரிங்க தம்பி உங்க கூட வரேனென்றார் .
அம்மா நாங்க டூக்காக தமிழ்நாட்டுக்கு வந்தோம்.ஆனால் நாங்கள் இருப்பது டெல்லியில் என்கவும் சரிங்கப்பா என்றவர் எப்படியோ கண் காணாத தூரத்திற்கு போனால் சரியென்று மனதில் நினைத்துக் கொண்டு கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தார்.
வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் போகும் வழியிலிருந்த ஹோட்டலில் முன்பு காரை நிறுத்த கண்களை திறந்து பார்த்தவரிடம் வாங்கம்மா நீங்க எதுவுமே சாப்பிடலன்னு தெரியுது என்றவன் எஸ்தரை அழைத்துட்டு போய் டிபனை வாங்கி கொடுக்க நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாததால் அவர் வேக வேகமாக சாப்பிடவும் புரையேறியது.
பார்த்துங்கம்மா என்ற ஜூலி அவரின் தலையில் தட்டவும் எஸ்தருக்கு தனது மகள் ஷமீராவின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கியது..அவர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
அம்மா நீங்க ஏதோ மன கஷ்டத்தில் இருக்கீங்கன்னு எனக்கு புரியுது நீங்களா சொல்ற வரைக்கும் நிச்சயமா அதை பற்றி நாங்க கேட்க மாட்டோம். நீங்க நிம்மதியா எங்க கூட இருக்கலாம்.
அப்புறம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க என்கவும் சொல்லுப்பா என்க,எந்த சூழ்நிலையிலும் சாப்பாட்டை மட்டும் ஸ்கிப் பண்ண கூடாது.அது உடம்புக்கு நல்லது இல்லைங்கம்மா.
சாதிக்கணும் என்றால் அதுக்கு உடம்புக்கு முதல்ல தெம்பு வேணும் இல்லையா என்று காரை ஓட்டியபடி ருத்ரன் கேட்க இனிமே நான் சாதித்து என்னப்பா பண்ண போறேனென்றார்.
அப்படி சொல்லாதீங்க மா....வயது முதிர்ந்த காலத்தில் எத்தனையோ பேர் சாதித்ததை நீங்கள் பார்க்கவில்லையா இல்லை கேள்விப்படவில்லையா என்று பேசிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே தங்கள் ரெண்டு பேருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் எஸ்தரை எப்படி அழைத்துப் போவதென்று யோசனையா இருக்கும் போது தம்பி என்ன ட்ரெயின்ல ஏத்தி விடுங்க நான் வந்து சேர்ந்து விடுகிறேனென்றார்.
இருங்கம்மா பிளைட்ல டிக்கெட் ஏதாவது இருக்காயென பார்க்கிறேன் என்று ஜூலி செக் பண்ண அவர்கள் நேரமோ அவர்கள் போகப் போகும் பிளைட்டில் ஒரே ஒரு சீட் இருக்க அதிலே புக் பண்ணினாள்.பின்னர் மூவரும் அவர்களுக்கான விமானத்தில் ஏறி டெல்லிக்கு வந்து சேர்ந்தனர்.
வனிச்சூர்:
ஏன்பா ரெண்டு பேரும் அங்கையே நிக்கிறீங்கள்?இளா எங்கே கண்ணுனு வானதி கேட்கவும் தற்செயலாக மூவரும் திரும்பி பார்க்க அங்கே தனது மகனும் அவன் ஆருயிர் நண்பன் பரத்தும் நிற்பதை பார்த்து பாபு பரத் என்று மூவரும் அதிர்ச்சியாக சொன்னார்கள்.
பாபு பரத் என்று சாரதா பாட்டி கூப்பிட, ம்ம் என்று சொல்லிக் கொண்டு இருவரும் பாட்டியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் எப்ப கண்ணுங்களா வந்திங்க?.
ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்க...நீங்க மூணு பேரும் எப்ப வந்தீங்க?ஏன் சொல்லவில்லை என்று அவர்களும் திருப்பிக் கேட்டார்கள்.
இப்பதான் வந்தோம் பா...ஆமா நீ எப்போ இந்தியாவுக்கு வந்தயென்று பாபுவிடம் கேட்க நான் முந்தா நேத்து வந்தேனென்றான்.
ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்றனர்...ஏன் நீங்க மட்டும் நடந்தது எல்லாத்தையும் தெளிவாக என்கிட்ட சொன்னீங்களானு முறைத்துக் கொண்டு கேட்க,வானதிக்கு அவர்கள் சூழ்நிலை புரிந்து அதை சுமூகமாக்க நினைத்து நடந்தது நடந்து போயிடுச்சு...
இனிமே அது பத்தி எதுக்கு வளர்த்துக்கிட்டு.வாங்கப்பா உட்காருங்க.ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வரட்டுமாயா என்க அதெல்லாம் ஒன்றும் வேண்டாங்கம்மா.
நைட் சமையல் ஆகிவிட்டது அது எடுத்துட்டு வருவதற்கு பாத்திரம் கேக்குறாங்க அதுக்கு தான் ரெண்டு பேரும் வந்தோமென்று அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு சொன்னானுங்கள்.
பாபு தம்பி உடனே கிளம்புனு தான் சொல்லுச்சு அப்பா தான் விழாவில் இருக்க சொன்னாங்களென்று வானதி அவர்களை காப்பாற்ற சொல்ல,அதற்கு ராணியோ நல்ல விஷயம் தானுங்க.
அதற்கு நான் ஒன்னும் சொல்லலை.
எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே அவ்வளவு தான்.பாபுவை பார்த்து மூணு வருஷம் ஆகுதென்று கண்ணீரோடு சொன்னார்.
அம்மா என் வேலை அப்படி எதுக்கு இப்ப தேவை இல்லாம அழுதுட்டு இருக்கீங்க?.வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்குது இப்படி அழுகிறீர்களே நல்லாவா இருக்கென பாபு முறைக்க, சாரி கண்ணா என்றவர் ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்கள.
கல்யாண வேலை எப்படி போயிட்டு இருக்குப்பா என்று பரத்திடம் கேட்க ஒரு பக்கம் அதுவும் போயிட்டு இருக்குங்கத்தை.ஏனூங்கத்தை இவ்வளவு தூரம் வரீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை.
நேற்று கூட என்கிட்ட போன்ல பேசினீங்களே?.
ஏன்டா நீங்க கூட தாண்டா வந்துருக்கீங்க ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று அந்தோணி முறைத்தார்.
அதற்குள் பாத்திரம் கேட்டு போன் வர சரி மற்றதை பிறகு பேசிக்கலாம் என்றவர் நீங்க போய் வேலையை பாருங்களென அனுப்பி வைக்க, அவர்கள் இருவரும் விட்டால் போதுமென்று அங்கிருந்து சென்றனர்..
அம்மாடி வந்ததுல இருந்து ஷமீராவை காணுமே என் பேத்தி எங்கே இருக்கிறாள்?
தனது அப்பா வீட்டில் தங்க வைத்திருப்பதாக சொல்லவும், அதை கேட்டவருக்கு பேத்தியின் மாமியார் மாமனார் மேல் நல்ல எண்ணம் வந்தது.
இவர்கள் ஐவரும் பேசிக் கொண்டிருக்க செழியனும் உள்ளே வர அம்மா இவங்கதான் என்னோட பையனென்று மகனை காட்டி சொல்ல,அவர்களை பார்த்தவன் வாங்க பாட்டி வாங்கப்பா வாங்கம்மா என்று மரியாதை நிமித்தமாக கைகூப்பி செழியன் சொல்ல,கம்பீரமான ஆண்மகனாக இருப்பவனை பார்த்த சாரதா பாட்டிக்கு பேத்திக்கேற்ற மாப்பிள்ளை தான் என்கும் எண்ணம் வந்தது...