Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்...
வீட்டுக்குள் வந்த எஸ்தர் தங்களது ரூமை எட்டிப் பார்க்க,அங்கே மகி பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது..
பின்னர் சத்தம் இன்றி கதவை லேசாக ஒருகளித்து சாற்றி விட்டு,பக்கத்து ரூமிற்கு போய் பீரோவை திறந்தவர் அதில் மகளுக்காக கணவருக்கு தெரியாமல் சீட்டு போட்டதில் வாங்கி வைத்த நகைகளையெல்லாம் ஒரு பேக்கில் போட்டவர்,தனது புடவை முந்தானைக்குள் மறைத்து எடுத்துட்டு வந்து முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தோட்டத்துக் கதவு வழியாக 4 வீடு தள்ளி இருக்கும் அண்ணன் வீட்டுக்கு வேகவேகமாக வந்தார்.
ராணியோ அங்கே தோட்டத்தில் உள்ள குப்பைகளை கூட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அண்ணி என்று கதவை திறந்து உள்ளே வந்தவர் இது உங்க மருமகளுக்காக வாங்குனது...
உங்க அண்ணனுக்கு தெரியாம சீட்டு போட்ட பணத்தில் இத்தனை வருஷமா நான் வாயை கட்டி வயித்தை கட்டி குருவி போல சேர்த்து வச்சிருக்கேன்.
இது அவகிட்ட கொடுத்திருங்கள் அண்ணி என்கும்போது எஸ்தருக்கு அழுகை வர,இதை சந்தோஷமா நீங்களே அவ கையில கொடுத்தாக்க எவ்வளவு நல்லா இருக்கும்?.
ஏங்கண்ணி தெரிஞ்சே இப்படி கேக்குறீங்களே?
இது நியாயமா?
சரி விடுங்கண்ணி ஏதோ ஒரு ஆதங்கத்தில் கேட்டுட்டேன்.உள்ள வாங்க டீ வைக்கிறேன் என்க,அய்யோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராணி.
உங்க அண்ணன் தூங்கிட்டு இருக்காரு அதான் இதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.எந்திரிச்சி பார்த்து நான் இல்லையென்றால்,நானும் எங்கேயோ ஓடிட்டேன்னு சொன்னாலும் சொல்லுவாரு என்கும் போது எஸ்தருக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.
ராணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை...அண்ணனையும் ஏதும் கேட்க முடியாது.அண்ணிக்கு எவ்வளவு தான் ஆறுதல் சொல்ல முடியும்?மகியின் குணமே இப்படித்தான்...தான் பேசுவது மட்டுமே சரி.தான் மட்டும் தான் எல்லாவற்றிலும் பர்பெக்ட் என்ற எண்ணம்.
ஏங்கண்ணி அப்பயே அத்தை இந்த கல்யாணம் வேண்டாமென்று சொன்னாங்கள் தானேயென்று ராணி கேட்கவும்,காலம் போன பிறகு அதை பத்தி யோசித்து என்ன புண்ணியம்?
உங்க அண்ணனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க கொஞ்சம் கூட எங்கம்மாக்கு விருப்பமே இல்லை.அவங்க அண்ணன் பையன கட்டிக்கிட்டா ராணி போல வச்சிருப்பார்னு சொன்னாங்க...
நான் தான் நம்ம அத்தை குடும்பமென்று எங்க அம்மாவை மீறி உங்கம்மா பேசுன வார்த்தையை கேட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் அதனால்தான் இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன்.
என்னைக்கு நான் செத்து அந்த ஆண்டவருக்குள்ள போறேனோ அன்னைக்கு தான் எனக்கு நிம்மதி கிடைக்கும் என்கவும் அப்படி எல்லாம் சொல்லாதீங்கண்ணி என்று வருத்தப்பட்டார்.
என் தலையெழுத்து இது தான் இதை மாற்ற முடியாதென்று வேகமாக தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ராணிக்கோ தனது அத்தை மகளை நினைத்து வருத்தமாக இருந்தது..
தனது அண்ணனுக்கு அப்படியே தாயைப் போல குணம்.எல்லாம் மாறிடும் அண்ணியென்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் போனார்.
அந்தோணியும் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு மேலும் சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
நேரமும் கடந்து சென்றது...இரவு சாப்பாட்டு முடித்துவிட்டு மறுநாள் எடுத்திட்டு போக வேண்டிய பொருட்களை எல்லாம் தயாராக இருவரும் எடுத்து வைக்கும் போது சாரதா பாட்டியும் வந்தார்..
சித்தி காலையிலேயே கிளம்பிடலாமா என்க...ஆமாயா...அதுக்காக தான் இப்பவே உன் தம்பி பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு வந்துட்டேனென்றார்.
விடியலும் ஆரம்பமாக அதிகாலையிலே தயாரானவர்கள் வனிச்சூரை நோக்கி பயணமாகினர்.
டிரைவர் வைத்துக் கொள்ளலாமென்று ராணி சொல்ல அதான் நான் இருக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று அந்தோணி சொல்லிவிட்டார்.
போகும் போது எஸ்தரை பற்றி சொல்லி வருத்தப்பட அவர்களுக்கும் வருத்தம் தான் பட முடிந்ததே தவிர மகியை எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.
சின்ன பிள்ளையா அடித்து திருத்துவதற்கு தலைக்கு மேல உயர்ந்த ஆண்மகனை போய் என்ன கேட்பதென்று சாரதா பாட்டியும் வருத்தப்பட்டார்.
அந்தோணிக்கோ தன்னால் தானே தங்கை வாழ்க்கை இப்படி ஆனதென்பதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடியவில்லை...
ஒருவேளை அன்று ராணி என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தங்கைக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
தனது அம்மா சொந்தத்தில் மாமன் மகனை கல்யாணம் பண்ணிக் கொண்டு தங்கை நல்லா இருந்திருப்பாளேயென்ற எண்ணம் வராமலும் இருக்கவில்லை.
என்னுடைய சுயநலத்துக்காக உன் வாழ்க்கை பலியாக வேண்டிய சூழல் வந்து விட்டதே??இந்த அண்ணனை மன்னிச்சிடுமா என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
வழக்கம்போல் தூங்கி எழுந்த மகி சர்ச்சுக்கு போக ரெடியாகென்று சொல்லிவிட்டு சென்றார்.
பின்னர் இருவரும் காரில் ஏறி டவுனுக்குள் இருக்கும் சர்ச்சுக்கு சென்றனர்..
பிரேயர் முடிந்து வீட்டுக்கு வரவே மதியம் 12 ஆனது.நல்லவேளை காலையிலேயே எழுந்து எஸ்தர் சமைத்து வைத்திருந்ததால் மகியிடம் திட்டு வாங்காமல் இருக்க முடிந்தது.
சாப்பாடு எடுத்து வை என்று சொல்லவும் சமைத்ததை திரும்ப சூடு பண்ணி டைனிங் டேபிள் எடுத்து வைக்க மகியும் வந்து சாப்பிட உட்கார்ந்தார்.
என்ன உன் அண்ணனும்,எங்க அத்தையும் கிளம்பிட்டாங்களா என்க,எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
உன்ன தாண்டி கேட்கிறேன் காதில் விழுதா இல்லையா?.
ஏன் உங்க தங்கச்சியும் தானே போயிருக்காங்க அங்கு கேட்க வேண்டியது தானே என்க..என்ன டி ரொம்ப வாய் நீளுது என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி அடிக்க வந்தார்.
வனிச்சூர்:
"பணம் வந்துட்டா தாம் தூம்னு குதிக்கிறது"
எனக்காக எந்த கிப்ட் வாங்காதீங்கன்னு உங்க கிட்ட பல முறை சொல்லிருக்கேன்.
உங்கள யாரு இவ்ளோ பணத்தை செலவு பண்ண சொன்னா?ஏற்கனவே நம்ம கல்யாணத்துக்காக செலவு பண்ணிட்டீங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கா இல்லையா?
நீங்க எல்லாம் வயல்ல இறங்கி கஷ்டப்பட்டு இருந்தீங்கனாக்க உங்களுக்கு பணத்தோட அருமை தெரியும்.ஐயா தான் நல்ல ஜாலியா ஏசிலையும் பேன் காத்துலையும் வேலை பாக்குறீங்களே உங்களுக்கு எங்கு இதோட அருமை தெரியும்?.
அப்போ இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு தான் இருப்பீங்களென்று ஷமீரா பொரிந்து தள்ள பொறுத்து பொறுத்து பார்த்தவன் மனைவியும் வாயை தனது பாணியில் அடைத்தான்...
ம்ம் என்றவாறு கணவனின் முதுகில் ஷமீரா அடிக்க அதையெல்லாம் சட்ட பண்ணாதவன் ஏதோ நீண்ட நாள் பசியாக இருந்தவன் போல் மனைவியின் உதட்டை மென்று தின்பதிலே குறியாக இருந்தான்..
கணவனின் நீண்ட முத்தமும் அவன் கைகள் உடலில் பயணிக்கும் சிலிர்ப்பில் ஷமீரா தான் தவித்து போனாள்.மனைவியின் நிலை புரிந்தாலும் தனது செயலை மட்டும் செழியன் நிறுத்தவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் இல்லையே மூன்று வருட காதல் இதில் ஒன்றரை வருடம் இருவரும் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை.
இரண்டு வருட காதலில் தனது விரல் நகத்தை கூட தன்னவள் தீண்ட விட்டதில்லை அவ்வளவு கண்ணியமான காதலா என்று கேட்டால் ஆமாம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவான்.
வழக்கமான எல்லா காதலர்களும் போலும் பரிசை பரிமாறிக் கொள்ளவில்லை.பீச்,பார்க்,சினிமா ஷாப்பிங் என்று இருவரும் சென்றதில்லையே இரண்டு வருடமாக தங்கள் வாழ்க்கையை போனில் பேசியபடி தானே வாழ்ந்தனர்...
கணவனின் அடர்ந்த தாடியும் மீசையும் பெண்ணவளின் முகத்தில் அங்கும் இங்கும் உரசுவதில் சிலிர்த்துப் போனவள் அவன் முதுகு பக்கம் இருக்கும் சட்டையை இறுக்கி பிடிக்க போதும் இதற்கு மேலும் இருந்தால் இங்கு என்ன வேணாலும் நடக்கலாமென்று செழியனின் மனதிற்குள் தோண, என் மனைவி தானே அவளோடு என் வாழ்க்கை தொடங்குவதில் என்ன தப்பு? என்று இன்னொரு பக்கம் அவன் மனம் கேட்டது.
பொருத்ததுதான் பொருத்தோம் இன்னும் ஓர் இரவு மட்டும் தானே அதன் பின்னர் மனைவி தன்னோடு தன் வீட்டில் தன்னறையில் இருப்பாள் என்னும் உண்மை புரிய,பின்னர் அவளிடம் இருந்து விலகியவன் மனைவியின் உதட்டை பார்க்க பல் தடங்கள் அப்பட்டமாக தெரிந்தது..
எப்படி உன் புருஷனோட முத்தம் என்க அவளோ அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
சிரித்துக் கொண்டே மனைவியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் அதிகமா செலவு பண்ணலடி என்று சொல்லிக் கொண்டு பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து அதில் தனது ஜிபே அக்கவுண்ட்டை ஓபன் பண்ணியவன் பாரு?.
என்ன செலவு பண்ணி இருக்கேன் இதுவரைக்கும் என்று காட்ட,அதில் ட்ரான்ஸாக்க்ஷன் ஹிஸ்டரியை பார்க்க இதுவரை அவன் அக்கவுண்டில் இருந்து கடந்து எட்டு வருஷமா எந்த அமௌண்டும் டெபிட் ஆகவில்லை .
ஒரு வாரத்திற்கு முன்புதான் அதிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் பணம் டெபிட்டாகி இருப்பது காட்டியது.
கண்கள் விரிய புருஷனை நிமிர்ந்து பார்க்கவும் ஆமாம் என்று தலையை அசைத்தவன் உன்கிட்ட சொன்ன போல இதுவரைக்கும் அப்பா அம்மா என் சம்பளத்தை பத்தி கேட்கவே இல்லடி.
அதுக்காக ஊதாரி தனமா செலவு பண்றவன் உன் புருஷன் கிடையாது. இதுலாம் நான் ஓட்டி பார்த்து சம்பாதிக்கிற காசு.
அதுவும் இல்லாம நடுவுல ஏதாச்சும் வேலை வந்துச்சுன்னாக்க நானும் கண்ணனும் போவோம்.அதை பற்றி உன்கிட்ட நான் சொல்லிருக்கேன் இல்லையா,அதுல வரும் பணத்தை தான் செலவு பண்ணுவேன்.
உனக்கு வாங்குனது கூட உன் புருஷன் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி சம்பாரிச்ச காசு தாண்டி எங்கவும் இப்பொழுது ஷமீராவோ தனது கணவனிடம் நெருங்கி வந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் அவன் நெஞ்சின் மேல் தலை சாய்த்து லவ் யூ இளா என்கவும் என்ன சொன்னடி என்று அதிர்ந்து போய் கேட்டான் .
ஏன் காது கேட்காதா?.
ஹேய் திரும்ப சொல்லுடி என்கவும், முடியாது ஒருமுறை தான் சொல்வேன் என்க,ஏய் ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி சொன்ன டி திரும்ப இன்னொரு வாட்டி சொல்லுடி என்று மனைவியின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கேட்க ப்ளீஸ் வலிக்குது என்றாள்.
வலிக்கட்டும்...அப்போ சொல்லு அதான் சொன்னேனே என்க...எனக்கு காதில் விழல இப்ப திரும்பவும் சொல்லு என்றான்.
சொல்லாமல் நிச்சயமாக கணவன் தன்னை விட மாட்டான் என்பது புரிந்து நிமிர்ந்து கணவனின் கண்ணை பார்த்தவள் லவ் யூ சோ மச் இளா என்று அவன் கழுத்தில் தனது கரங்களை மாலையாக கோர்த்தது போல் கட்டிக் கொண்டாள்..
வீட்டுக்குள் வந்த எஸ்தர் தங்களது ரூமை எட்டிப் பார்க்க,அங்கே மகி பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது..
பின்னர் சத்தம் இன்றி கதவை லேசாக ஒருகளித்து சாற்றி விட்டு,பக்கத்து ரூமிற்கு போய் பீரோவை திறந்தவர் அதில் மகளுக்காக கணவருக்கு தெரியாமல் சீட்டு போட்டதில் வாங்கி வைத்த நகைகளையெல்லாம் ஒரு பேக்கில் போட்டவர்,தனது புடவை முந்தானைக்குள் மறைத்து எடுத்துட்டு வந்து முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தோட்டத்துக் கதவு வழியாக 4 வீடு தள்ளி இருக்கும் அண்ணன் வீட்டுக்கு வேகவேகமாக வந்தார்.
ராணியோ அங்கே தோட்டத்தில் உள்ள குப்பைகளை கூட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அண்ணி என்று கதவை திறந்து உள்ளே வந்தவர் இது உங்க மருமகளுக்காக வாங்குனது...
உங்க அண்ணனுக்கு தெரியாம சீட்டு போட்ட பணத்தில் இத்தனை வருஷமா நான் வாயை கட்டி வயித்தை கட்டி குருவி போல சேர்த்து வச்சிருக்கேன்.
இது அவகிட்ட கொடுத்திருங்கள் அண்ணி என்கும்போது எஸ்தருக்கு அழுகை வர,இதை சந்தோஷமா நீங்களே அவ கையில கொடுத்தாக்க எவ்வளவு நல்லா இருக்கும்?.
ஏங்கண்ணி தெரிஞ்சே இப்படி கேக்குறீங்களே?
இது நியாயமா?
சரி விடுங்கண்ணி ஏதோ ஒரு ஆதங்கத்தில் கேட்டுட்டேன்.உள்ள வாங்க டீ வைக்கிறேன் என்க,அய்யோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராணி.
உங்க அண்ணன் தூங்கிட்டு இருக்காரு அதான் இதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.எந்திரிச்சி பார்த்து நான் இல்லையென்றால்,நானும் எங்கேயோ ஓடிட்டேன்னு சொன்னாலும் சொல்லுவாரு என்கும் போது எஸ்தருக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.
ராணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை...அண்ணனையும் ஏதும் கேட்க முடியாது.அண்ணிக்கு எவ்வளவு தான் ஆறுதல் சொல்ல முடியும்?மகியின் குணமே இப்படித்தான்...தான் பேசுவது மட்டுமே சரி.தான் மட்டும் தான் எல்லாவற்றிலும் பர்பெக்ட் என்ற எண்ணம்.
ஏங்கண்ணி அப்பயே அத்தை இந்த கல்யாணம் வேண்டாமென்று சொன்னாங்கள் தானேயென்று ராணி கேட்கவும்,காலம் போன பிறகு அதை பத்தி யோசித்து என்ன புண்ணியம்?
உங்க அண்ணனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க கொஞ்சம் கூட எங்கம்மாக்கு விருப்பமே இல்லை.அவங்க அண்ணன் பையன கட்டிக்கிட்டா ராணி போல வச்சிருப்பார்னு சொன்னாங்க...
நான் தான் நம்ம அத்தை குடும்பமென்று எங்க அம்மாவை மீறி உங்கம்மா பேசுன வார்த்தையை கேட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் அதனால்தான் இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன்.
என்னைக்கு நான் செத்து அந்த ஆண்டவருக்குள்ள போறேனோ அன்னைக்கு தான் எனக்கு நிம்மதி கிடைக்கும் என்கவும் அப்படி எல்லாம் சொல்லாதீங்கண்ணி என்று வருத்தப்பட்டார்.
என் தலையெழுத்து இது தான் இதை மாற்ற முடியாதென்று வேகமாக தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ராணிக்கோ தனது அத்தை மகளை நினைத்து வருத்தமாக இருந்தது..
தனது அண்ணனுக்கு அப்படியே தாயைப் போல குணம்.எல்லாம் மாறிடும் அண்ணியென்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் போனார்.
அந்தோணியும் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு மேலும் சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
நேரமும் கடந்து சென்றது...இரவு சாப்பாட்டு முடித்துவிட்டு மறுநாள் எடுத்திட்டு போக வேண்டிய பொருட்களை எல்லாம் தயாராக இருவரும் எடுத்து வைக்கும் போது சாரதா பாட்டியும் வந்தார்..
சித்தி காலையிலேயே கிளம்பிடலாமா என்க...ஆமாயா...அதுக்காக தான் இப்பவே உன் தம்பி பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு வந்துட்டேனென்றார்.
விடியலும் ஆரம்பமாக அதிகாலையிலே தயாரானவர்கள் வனிச்சூரை நோக்கி பயணமாகினர்.
டிரைவர் வைத்துக் கொள்ளலாமென்று ராணி சொல்ல அதான் நான் இருக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று அந்தோணி சொல்லிவிட்டார்.
போகும் போது எஸ்தரை பற்றி சொல்லி வருத்தப்பட அவர்களுக்கும் வருத்தம் தான் பட முடிந்ததே தவிர மகியை எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.
சின்ன பிள்ளையா அடித்து திருத்துவதற்கு தலைக்கு மேல உயர்ந்த ஆண்மகனை போய் என்ன கேட்பதென்று சாரதா பாட்டியும் வருத்தப்பட்டார்.
அந்தோணிக்கோ தன்னால் தானே தங்கை வாழ்க்கை இப்படி ஆனதென்பதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடியவில்லை...
ஒருவேளை அன்று ராணி என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தங்கைக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
தனது அம்மா சொந்தத்தில் மாமன் மகனை கல்யாணம் பண்ணிக் கொண்டு தங்கை நல்லா இருந்திருப்பாளேயென்ற எண்ணம் வராமலும் இருக்கவில்லை.
என்னுடைய சுயநலத்துக்காக உன் வாழ்க்கை பலியாக வேண்டிய சூழல் வந்து விட்டதே??இந்த அண்ணனை மன்னிச்சிடுமா என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
வழக்கம்போல் தூங்கி எழுந்த மகி சர்ச்சுக்கு போக ரெடியாகென்று சொல்லிவிட்டு சென்றார்.
பின்னர் இருவரும் காரில் ஏறி டவுனுக்குள் இருக்கும் சர்ச்சுக்கு சென்றனர்..
பிரேயர் முடிந்து வீட்டுக்கு வரவே மதியம் 12 ஆனது.நல்லவேளை காலையிலேயே எழுந்து எஸ்தர் சமைத்து வைத்திருந்ததால் மகியிடம் திட்டு வாங்காமல் இருக்க முடிந்தது.
சாப்பாடு எடுத்து வை என்று சொல்லவும் சமைத்ததை திரும்ப சூடு பண்ணி டைனிங் டேபிள் எடுத்து வைக்க மகியும் வந்து சாப்பிட உட்கார்ந்தார்.
என்ன உன் அண்ணனும்,எங்க அத்தையும் கிளம்பிட்டாங்களா என்க,எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
உன்ன தாண்டி கேட்கிறேன் காதில் விழுதா இல்லையா?.
ஏன் உங்க தங்கச்சியும் தானே போயிருக்காங்க அங்கு கேட்க வேண்டியது தானே என்க..என்ன டி ரொம்ப வாய் நீளுது என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி அடிக்க வந்தார்.
வனிச்சூர்:
"பணம் வந்துட்டா தாம் தூம்னு குதிக்கிறது"
எனக்காக எந்த கிப்ட் வாங்காதீங்கன்னு உங்க கிட்ட பல முறை சொல்லிருக்கேன்.
உங்கள யாரு இவ்ளோ பணத்தை செலவு பண்ண சொன்னா?ஏற்கனவே நம்ம கல்யாணத்துக்காக செலவு பண்ணிட்டீங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கா இல்லையா?
நீங்க எல்லாம் வயல்ல இறங்கி கஷ்டப்பட்டு இருந்தீங்கனாக்க உங்களுக்கு பணத்தோட அருமை தெரியும்.ஐயா தான் நல்ல ஜாலியா ஏசிலையும் பேன் காத்துலையும் வேலை பாக்குறீங்களே உங்களுக்கு எங்கு இதோட அருமை தெரியும்?.
அப்போ இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு தான் இருப்பீங்களென்று ஷமீரா பொரிந்து தள்ள பொறுத்து பொறுத்து பார்த்தவன் மனைவியும் வாயை தனது பாணியில் அடைத்தான்...
ம்ம் என்றவாறு கணவனின் முதுகில் ஷமீரா அடிக்க அதையெல்லாம் சட்ட பண்ணாதவன் ஏதோ நீண்ட நாள் பசியாக இருந்தவன் போல் மனைவியின் உதட்டை மென்று தின்பதிலே குறியாக இருந்தான்..
கணவனின் நீண்ட முத்தமும் அவன் கைகள் உடலில் பயணிக்கும் சிலிர்ப்பில் ஷமீரா தான் தவித்து போனாள்.மனைவியின் நிலை புரிந்தாலும் தனது செயலை மட்டும் செழியன் நிறுத்தவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் இல்லையே மூன்று வருட காதல் இதில் ஒன்றரை வருடம் இருவரும் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை.
இரண்டு வருட காதலில் தனது விரல் நகத்தை கூட தன்னவள் தீண்ட விட்டதில்லை அவ்வளவு கண்ணியமான காதலா என்று கேட்டால் ஆமாம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவான்.
வழக்கமான எல்லா காதலர்களும் போலும் பரிசை பரிமாறிக் கொள்ளவில்லை.பீச்,பார்க்,சினிமா ஷாப்பிங் என்று இருவரும் சென்றதில்லையே இரண்டு வருடமாக தங்கள் வாழ்க்கையை போனில் பேசியபடி தானே வாழ்ந்தனர்...
கணவனின் அடர்ந்த தாடியும் மீசையும் பெண்ணவளின் முகத்தில் அங்கும் இங்கும் உரசுவதில் சிலிர்த்துப் போனவள் அவன் முதுகு பக்கம் இருக்கும் சட்டையை இறுக்கி பிடிக்க போதும் இதற்கு மேலும் இருந்தால் இங்கு என்ன வேணாலும் நடக்கலாமென்று செழியனின் மனதிற்குள் தோண, என் மனைவி தானே அவளோடு என் வாழ்க்கை தொடங்குவதில் என்ன தப்பு? என்று இன்னொரு பக்கம் அவன் மனம் கேட்டது.
பொருத்ததுதான் பொருத்தோம் இன்னும் ஓர் இரவு மட்டும் தானே அதன் பின்னர் மனைவி தன்னோடு தன் வீட்டில் தன்னறையில் இருப்பாள் என்னும் உண்மை புரிய,பின்னர் அவளிடம் இருந்து விலகியவன் மனைவியின் உதட்டை பார்க்க பல் தடங்கள் அப்பட்டமாக தெரிந்தது..
எப்படி உன் புருஷனோட முத்தம் என்க அவளோ அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
சிரித்துக் கொண்டே மனைவியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் அதிகமா செலவு பண்ணலடி என்று சொல்லிக் கொண்டு பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து அதில் தனது ஜிபே அக்கவுண்ட்டை ஓபன் பண்ணியவன் பாரு?.
என்ன செலவு பண்ணி இருக்கேன் இதுவரைக்கும் என்று காட்ட,அதில் ட்ரான்ஸாக்க்ஷன் ஹிஸ்டரியை பார்க்க இதுவரை அவன் அக்கவுண்டில் இருந்து கடந்து எட்டு வருஷமா எந்த அமௌண்டும் டெபிட் ஆகவில்லை .
ஒரு வாரத்திற்கு முன்புதான் அதிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் பணம் டெபிட்டாகி இருப்பது காட்டியது.
கண்கள் விரிய புருஷனை நிமிர்ந்து பார்க்கவும் ஆமாம் என்று தலையை அசைத்தவன் உன்கிட்ட சொன்ன போல இதுவரைக்கும் அப்பா அம்மா என் சம்பளத்தை பத்தி கேட்கவே இல்லடி.
அதுக்காக ஊதாரி தனமா செலவு பண்றவன் உன் புருஷன் கிடையாது. இதுலாம் நான் ஓட்டி பார்த்து சம்பாதிக்கிற காசு.
அதுவும் இல்லாம நடுவுல ஏதாச்சும் வேலை வந்துச்சுன்னாக்க நானும் கண்ணனும் போவோம்.அதை பற்றி உன்கிட்ட நான் சொல்லிருக்கேன் இல்லையா,அதுல வரும் பணத்தை தான் செலவு பண்ணுவேன்.
உனக்கு வாங்குனது கூட உன் புருஷன் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி சம்பாரிச்ச காசு தாண்டி எங்கவும் இப்பொழுது ஷமீராவோ தனது கணவனிடம் நெருங்கி வந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் அவன் நெஞ்சின் மேல் தலை சாய்த்து லவ் யூ இளா என்கவும் என்ன சொன்னடி என்று அதிர்ந்து போய் கேட்டான் .
ஏன் காது கேட்காதா?.
ஹேய் திரும்ப சொல்லுடி என்கவும், முடியாது ஒருமுறை தான் சொல்வேன் என்க,ஏய் ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி சொன்ன டி திரும்ப இன்னொரு வாட்டி சொல்லுடி என்று மனைவியின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கேட்க ப்ளீஸ் வலிக்குது என்றாள்.
வலிக்கட்டும்...அப்போ சொல்லு அதான் சொன்னேனே என்க...எனக்கு காதில் விழல இப்ப திரும்பவும் சொல்லு என்றான்.
சொல்லாமல் நிச்சயமாக கணவன் தன்னை விட மாட்டான் என்பது புரிந்து நிமிர்ந்து கணவனின் கண்ணை பார்த்தவள் லவ் யூ சோ மச் இளா என்று அவன் கழுத்தில் தனது கரங்களை மாலையாக கோர்த்தது போல் கட்டிக் கொண்டாள்..