• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

பாபு பேசியதை கேட்டவர்களுக்கு நியாயமாக தான் தோணியது.மேலும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க,காபி எடுத்துட்டு வந்த ஷமீராவோ இருவருக்கும் கொடுத்தவள், அண்ணா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?


நல்லா இருக்காங்கடா பாப்பா.பாரதிக்கு கல்யாணம் டா. அதான் இந்தியாவுக்கு வந்தேன்...

அப்படியாணா,ரொம்ப சந்தோஷமென்று இவனுங்களோடு பேசிக் கொண்டிருக்க அங்கு ஒருத்தனுக்கோ நெருப்பு இல்லாமல் புகைய,மனைவியை கொலை காண்டில் பார்த்து கொண்டிருந்தான்..

கணவனின் பார்வையை உணர்ந்தவள் எதுக்கு இவரு நம்மள முறைச்சிட்டு இருக்காரென்று யோசிக்க,மேல வாடியென்று கண்ணை காட்டினான்.

எல்லாரும் இருக்கும் போது எப்படி மேல வருவதென்று அவனைப் போல் கண்களால் பேச,அதெல்லாம் எனக்கு தெரியாதென்ற செழியனோ, மேலே வா என்று புருவத்தை தூக்கி சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக செல்ல,சிறிது நொடிகள் சென்று ஷமீராவும் மேலேயிருக்கும் அறைக்குள் வர,எட்டி மனைவியை இழுத்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு என்னடி ரொம்ப ஓட்டி உரசிட்டு நிற்கிற..

புருஷன்காரன் இருக்கிறேனே அவனை உனக்கு கண்ணு தெரியலையா?என்று அவள் கையை பிடித்து முறுக்கிக் கொண்டு தனது நெஞ்சோடு அணைத்தபடி கேட்க,என்ன செழியன் பொறாமையோ என்றாள்.

நான் என்ன வெங்காயத்துக்கு பொறாமைப்பட போறேனென்று, அவளின் தோள் பட்டையில் கடித்து வைக்க,பின்ன எதுக்கு இப்படி பண்றீங்களாம்?.

அது எப்படி டி நான் இருக்கும் போது நீ போய் அவன் வாய பொத்துர..என்ன விட அவ்ளோ உரிமையானவனானு மனைவியை தன்னோடு இறுக்க, இதுதான் பொசசிவ்னஸ் என்றாள்.

"ம்ம் மயிறுனஸ்"

பரவாயில்லை,என் பொண்டாட்டி கிட்ட தானே பொசசிவ்வா இருக்க முடியும். இனிமே விளையாட்டுக்கு கூட என்ன தவிர வேற எவனையும் தொடக்கூடாது புரியுதா டி.

உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு மாமா சட்டையை பிடிக்கிறீங்களென்று ஷமீராவும் கோபமாக கேட்க,மாமா,மண்ணாங்கட்டி எல்லாம் உன் கழுத்துல இது ஏறுவதற்கு முன்னாடினு ஞாபகம் வச்சுக்கோ.

எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்க...அப்ப என்னை தப்பா நினைக்கிறீங்களானு கோவமா கேட்கவும்,அடியேய் நான் என்ன அர்த்தத்துல சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன அர்த்தத்துல பேசுறேடி?.

ஓஓஓ..நீங்கள் சொல்றதுக்கு வேற அர்த்தம் என்ன சொல்லுங்க?
உங்ககிட்ட இப்படி ஒரு புத்தியை எதிர்பார்க்கவே இல்லையென்று தன்னை கட்டிப் பிடித்து நிற்பவனை உதறி தள்ளிய ஷமீராவோ கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள்...

கீழேயிருந்த பாபுவிற்கு வெளிநாட்டிலிருந்து கால் வர,சார் தாண்டா பண்றாருனு பரத்திடம் சொல்லியவன் அட்டென்ட் பண்ணி பேசிக்கொண்டு வெளியே வர,அது வளைவான பகுதி என்பதால் வெளியேயிருந்து உள்ளே வந்த கண்மணியோ எதிரே ஆள் வருவதை எதிர்பார்க்காமல் வேகமாக வந்து மோத,ஒரு நொடி அதிர்ந்த பாபுவோ தன் மேல் மோதியவள் கீழே விழப் போவதை பார்த்து எட்டி அவளை இழுத்து பிடித்து நிறுத்த அவன் நெஞ்சில் மேல் மோதி நின்றாள்.

முதல் முறையாக யாரோ முன் பின் தெரியாத பெண்ணின் ஸ்பரிசம் பட்டவனுக்கு உடல் சிலிர்க்க, கண்மணிக்கும் அதே உணர்வு தான் வந்தது.

ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க மீண்டும் கால் வரும் சத்தம் கேட்டு சுதாரித்தனர்.

சாரி என்று அவன் சொல்ல கண்மணியே எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்.

தனது தலையை கோதிக் கொண்டவனோ யார்ரா இவள்?.

பார்த்த நிமிடத்திலேயே நம்மள சாய்ச்சிட்டாளேயென்று முணுமுணுத்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லுங்க சாரென்றவனோ,அங்கு சொல்லிய செய்தியை கேட்டு ஓகே சார் செக் பண்றேனென்று சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்தவன்,சற்று முன்னால் தன்னை தீண்டியவள் எங்கேயாவது தென்படுகிறாளானு பார்வையால் அலச,அவளங்கில்லை.

ஷமீரா மட்டும் தான் ஹாலிலிருக்கும் பரத்திடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது...

ஒருவேளை சொந்தக்கார பொண்ணா இருப்பாளோ?.இல்ல இந்த வீட்டு பொண்ணா இருப்பாளா?.ஒன்னும் புரியலையே...ஆனா ஆளு பார்க்க அம்சமா இருக்கிறாளே..

இவள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு தெரியலையே?.மத்த பொண்ணுங்க மேல வராத பீலிங்ஸ் இவள் கிட்ட வருதே...பார்த்தவுடனே பச்சை குத்தியது போல நெஞ்சில் ஒட்டிக்கிட்டாளேனு தனக்குள் பேசிக் கொண்டிருக்க,அங்கு வந்த புவனாவோ தம்பி சாப்பிட வாங்கப்பா என்கவும் பரத்தும் பாபுவும் எழுந்து சென்றனர்.

புவனாவும் ஷமீராவும் எல்லாருக்கும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தனர்....

பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை இவளுக்கிருக்கு.அது இல்லையென்று என்னால் மறுக்க முடியாது.இவ்வளவு தூரம் நம்பி முடிவெடுத்துருக்காள் என்றால் அப்ப உங்க வீட்டு பையன் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை புரிஞ்சுக்க முடியுது.இந்த நம்பிக்கையை கடைசி வரைக்கும் நீங்க காப்பாத்தணுமென்றான்.

அதற்கு தம்புசாமி தாத்தாவோ,நிச்சயமாக தம்பி.பொண்ணு எங்கள் வீட்டுக்கு வந்துருச்சு.இனிமே அதோட பொறுப்பு எங்களுடையது தான்.ஒன்னும் கவலைப்படாதப்பா என் பேரன் நல்லபடியா பார்த்துப்பான்.

சரிங்க தாத்தா நாங்கள் கிளம்புகிறோம் என்க...ஏன் தம்பி இன்னும் ரெண்டு நாள்ல பிள்ளைகளுக்கு நல்ல காரியம் இருக்கே,இருந்து முடிச்சிட்டு போங்களேன்னு சொல்ல... பாபுவும் பரத்தும் யோசனையாக பார்த்துக் கொண்டனர்.

அதான் தாத்தா உங்களை பங்ஷனுக்கு இருந்துட்டு போக சொல்றாங்களே என்கும் செழியனை பார்த்த பாபுவோ,தாத்தா தான கூப்பிடுகிறார்கள்.நீங்க கூப்பிடலையே என்றான்.

பாபு சொன்னதை கேட்டு செழியானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ஆமாம் நாம இதுவரைக்கும் எங்களுடைய பங்க்ஷனில் கலந்து கொள்ளுங்களென்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையேனு அவனுக்கு தோன்றியது.

கணவனின் முகத்தை பார்த்தவள் அவனை காப்பாற்றுவதாக நினைத்து ஏன் மாமா நாங்க சொன்னா தான் நீங்க கலந்து கொள்ளுவீங்களா என்க, அவளை முறைத்து பார்த்தவன் எதுவும் பதில் சொல்லவில்லை.

தம்பி உங்களுக்கு மேல ரூம் சுத்தம் பண்ண சொல்றேனென்று அன்பரசன் சொல்ல,மாமா அங்க நம்ம வீட்டுக்கு நான் கூப்பிட்டு போறேன்னு செழியன் சொல்லவும்,அப்படியா சரிய்யா...

ஒரு சோட்டு புள்ளைங்க,கலகலப்பா இருப்பீங்க என்றவர் மனைவியிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து தங்களது வயல் காட்டை நோக்கிச்சென்றார்.

மனைவி தன்னை பார்ப்பாளென்று செழியனும் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவன் பக்கம் திரும்பவேயில்லை..

சும்மாவே இவளுக்கு மிளகாய் கடித்த போல சுள்ளுன்னு கோவம் வரும். இப்போது எத்தனை நாளைக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க போறாளோ தெரியலையே என்று மனதிற்குள் முணுமுணுத்தவன் பங்காளி நம்ம கிளம்பலாமா என்று பாபுவை கேட்க...தன்னை அவன் உரிமையோடு கூப்பிட்டதை பார்த்தவனுக்கு கோபம் குறைய சரி பங்காளி என்றான்.

பின்னர் பரத்தும் பாபுவும் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

தனது அறைக்குள் வந்த கண்மணிக்கு படபடப்பாக இருந்தது.சிறிது நிமிடத்தில் அவள் முகம் எல்லாம் வியர்த்து விட்டது. இதுவரை எந்த ஆண்மகனோடும் இப்படி அவள் நெருங்கி நின்றதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னே தன்னிடம் காதலை சொன்னவனின் மேல் கூட அவளுக்கு பெரிதாக எந்த ஒரு உணர்வும் வரவில்லை.

முறைமாமன் செழியன் என்பதால் ஊரில் இருப்பவர்களோ செழியனையும் அவளையும் சேர்த்து கிண்டல் பண்ணும் போதெல்லாம் அவளுக்கு அப்படி ஒரு உணர்வு தோன்றியதில்லை..

இன்று யாரோ ஒரு ஆண்மகன் தன்னை அணைக்க இதுவரை தனக்குள் தோன்றாத உணர்வுகள் சடுதியில் உண்டாகியதை நினைத்தவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது .

யார் இவன்?மாமா கூட வந்திருக்கிறானே,இதுவரைக்கும் இவனை நம்ம பார்த்ததே இல்லையே??மாமாவோட பிரண்டா இருப்பாங்களோ என்று யோசனை பண்ணினாள்.

கீழே பேச்ச குரல் கேட்டு,தனது ரூம் ஜன்னல் வழியாக நின்று அவர்கள் பேசுவதை கூர்மையாக கேட்க அப்பொழுது தான் அவன் ஷமீராவின் சொந்தக்காரன் என்பது புரிந்தது..

ஒருவேளை ஷமீக்கு அண்ணனா இருப்பாங்களோ?.

அய்யய்யோ ஷமீக்கு அண்ணன் என்றால் நமக்கும் அண்ணன் முறை வருதே...அடச்சி என்ன இப்படி ஆயிட்டோமென்று தனது தலையிலேயே தட்டிக் கொண்டவள் அங்கிருந்த கண்ணாடியை பார்க்க அவளின் இடது பக்கத்தில் தாவணி இடைவெளியில் இருக்கும் இடுப்பு தெரிய,இங்க தானே அவங்க பிடித்தார்களென்று நினைத்தவளுக்கு இப்பொழுதும் அவன் கையில் இருக்கும் வலிமையை உணர முடிந்தது...

அய்யோ கடவுளே நான் என்ன இப்படி ஆயிட்டேனென்று தனது நெற்றியிலே அடித்துக் கொண்டவள்,தலையை உலுக்கி அவனின் நினைவை கலைத்து விட்டு,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று முகத்தில் தண்ணீரை அடித்தாள்..

பின்னர் முகத்தை துடைத்துக்கொண்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக கீழே வர,கண்மணி நாம தான் இன்னும் சாப்பிடவில்லை என்று புவனா சொல்ல இதோமா என்றாள்.பிறகு மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

அவன் எப்படி உறவாக வேண்டும் என்பதை கேட்கணுமென்று கண்மணிக்கும் ஆர்வமாக இருந்தது. இதைப்பற்றி கேட்டால் எங்கே ஷமீரா தன்னை தப்பா நினைப்பாளோ என்று யோசனையாக இருக்க,அதற்கு வழியில்லாமல் புவனாவே ஷமீராவின் அத்தை பையனஎன்று சொல்ல, அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்டவளுக்கு மனதிற்குள் அப்போ ஷமீக்கு மாமன் முறை,ஹேய் எனக்கும் மாமா முறை தானென்கும் போது உள்ளுக்குள் ஓர் இதம் பரவியது...

பாபுக்கோ உள்ளே போனவள் ஒருமுறையாவது வெளியே வர மாட்டாளா என்று எண்ணம் வராமல் இல்லை.

சரி இங்க தானே இருக்கிறோம் அவளை பத்தி தெரிஞ்சுக்கலாமென்று நினைத்துக்கொண்டான்.

வீட்டிற்கு வந்த செழியனோ ரெண்டு பேரும் இங்கதான் தங்குறாங்கள் மா என்கவும் தாராளமாக தங்கட்டுமே இளா...இரு நான் போய் பக்கத்து ரூம் சுத்தமா இருக்கானு பார்க்கிறேன் என்றவாறு அவர் மேலே செல்ல போக...

எதுக்கு பங்காளி தனி ரூம்.உங்க ரூம்லே நாங்க தங்கிக்கிறோமென்று பாபு சொல்ல,அப்படியா அப்போ சரிங்கப்பா நான் போய் நைட்டுக்கு சமைக்கிறேன் என்றார்..

மச்சான்,மாத்து டிரஸ் எதுவும் நான் எடுத்துட்டு வரலையேடா என்க,டேய் நீயும் நானும் ஒரே அளவு தானடா நாயே.இதில் என்ன உனக்கு வருத்தமென்று பாபு கேட்க,அட நாதாரி பயலே டிரஸ் ஒகே தான்..

உள்ளே போட மற்ற துணிலாம் வேண்டாமாடா பன்னாடை பயலே,இலையவாடா கட்டிக்க முடியுமென்று பரத் திட்ட,செழியனுக்கோ அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சிரிப்பு வந்து விட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
செழியன் வீடு:

சிரித்துக் கொண்டிருந்த செழியனை பார்த்த பரத்,இவன் எனக்கு மச்சான்.அப்போ நீங்களும் எனக்கு மச்சான் தான்.சோ உங்களை மாப்பிள்ளையென்று கூப்பிடலாமாயென்க,தாராளமா கூப்பிடு மாப்பினு செழியன் சொல்லவும் வாரே வா சூப்பரூஊஊஊ...


டேய் புதுசா நமக்கு மச்சான் கிடைத்திருக்கிறானென்று பரத் குதிக்க, லூசு பயலே நமக்கில்லை உனக்கு தான் மாப்பு கிடைச்சிருக்காங்கடா மானங்கெட்டவனேயென்று பாபு முறைக்க...அட ஆமாம்...

இத நம்ப கொண்டாடியே ஆகணுமே என்கவும்,மச்சி உங்களுக்கு ட்ரிங்க்ஸ் அடிக்கிற பழக்கமிருக்கானு செழியன் கேட்க இருவரும் அதிர்ந்தனர்...

ஐயோ ஏதாவது தப்பா கேட்டு விட்டேனா என்றவாறு சங்கடமாக செழியன் பார்க்க,அப்படி இல்லை நாங்க ரெண்டு பேரும் மொடா குடிகாரன் கிடையாது எப்பயாவது பார்ட்டிக்கு போனால் ரெண்டு பேரும் லைட்டா சாப்பிடுவோம் அதும் ரெட் வொய்ன் என்றனர்.

அடத்தூஊஊஊ.இதுக்காடா இவ்வளவு பில்டப்.நான் வேற ஒரு நிமிடம் ஜெர்காகிட்டேனென்ற செழியன்,அப்ப நீங்களும் நம்ம கேஸு தானென்றான்.

ஆனால் ஷமீராவுக்கு நான் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது இன்னும் தெரியாது என்க..இது வேறயா அப்ப என் தங்கச்சி கிட்ட முதல்ல போட்டு கொடுக்கிறது தான் என் வேலையென்று பரத் சொல்லவும்,நன்னாரி பயலே..போட்டு விடுவதிலேயே குறியா இருக்கிறியாடா என்ற பாபு,நண்பனை எட்டி ஒரு உதை விட அவனோ மெத்தையில் போய் விழுந்தான்...

நீ மாப்புனு செழியனிடம் கேட்க....பெஸ்டிவல் அப்ப லைட்டா சாப்பிடுற பழக்கமிருக்கு என்கவும்,அப்ப இன்னைக்கு பார்ட்டி கொண்டாடலாமா என்றான்.

கொண்டாடிட்டா போச்சு...மச்சானும் வரட்டுமென்று செழியன் சொல்லவும் யார் என்றனர்...

சின்ன மாமா பையன் தானென்றான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மாப்பி மாப்பி என்று கண்ணனும் அங்க வர பின்னர் கண்ணனுக்கு இவர்களை அறிமுகப்படுத்த,பங்காளியென்று பரத்தும் கண்ணனும் கட்டிப்பிடிக்க,இருவரின் செயலை பார்த்த செழியன் கெரகம்,இந்த கன்றாவியெல்லாம் பாக்கணும் போல இருக்கே.

ஏண்டா உனக்கு பங்காளி கிடைக்கும் போது எனக்கு பங்கு கிடைக்க கூடாதானு கண்ணன் கேட்க,கிடைக்கலாம் தப்பே இல்லைடா.

சரி மச்சி டவுனுக்கு போயிட்டு வந்துடலாமா?

இப்போ ரொம்ப வெயிலாக இருக்குடா சாயந்தரம் போகலாமே என்க.பின்னர் பேசிக்கொண்டே நால்வரும் குட்டி தூக்கத்தை போட்டு தூங்கி எழுந்தனர்.

மச்சி இங்குள்ள இடம்லாம் பார்க்க அழகா இருக்கும்,நம்ப தோப்பு பக்கம் போகலாமா?

மலையடிவாரத்துல நம்ம மிளகா தோப்பு கிட்ட ஒரு சுனை ஒன்னு இருக்கு எப்பவுமே தண்ணி ஜில்லுனு இருக்குமென்று செழியன் சொல்ல,அப்படியா...

அதை பார்த்தே ஆகணுமே என்று பரத்தும் பாபுவும் சொல்ல போய்ட்டா போகுது மச்சி என்றவன்,ஆனா அங்க இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு வர முடியாதேடா என்றான்...

வேற எப்படி டா?

ஒன் பீஸாஆஆஆ...

அய்யோ மானம் போகுமேடானு பரத் சொல்ல, ஏண்டா ஏன்...சுனைக்கு போறோம் டா அங்க இப்படி பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு போனா நல்லா இருக்காது டா என்று கண்ணன் சொல்ல ஆமா பங்காளி இதை நான் யோசிக்கலைடா என்றான்...

செழியனோ பீரோவிலிருந்த இரண்டு புது லுங்கியை எடுத்து இருவருக்கும் கொடுத்தான்...ஆஹா இது நல்லா காற்றோட்டமாக இருக்கும் மச்சியென்று சிரித்துக் கொண்டே வாங்கியவர்கள் லுங்கியை கட்டிக்கொண்டு போலாமா என்க ரைட்டு என்று சொல்லவும் நால்வரும் கீழே வந்தவர்கள் வானதியிடம் சொல்லிக் கொண்டு மிளகாய் தோப்பையை நோக்கி சென்றனர்.

பார்க்க எவ்வளவு சூப்பரா இருக்கு பங்கு அதனாலதான் இவ கவுந்துட்டாளானு பாபு கேட்க,அவளுக்கு இந்த இடத்தை பற்றிலாம் தெரியவே தெரியாது.ஊர் மட்டும்தான் நான் சொல்லிருக்கிறேன்.

ஓஓஓஓ முதல்ல உங்க காதல் கதையை தெரிஞ்சுக்கணும்.எப்படி இவ்வளவு தூரத்தில் கனெக்ட் ஆச்சென்று பரத் கேட்கவும் அதெல்லாம் ஒரு பொக்கிஷமான நினைவுகள் பங்காளியென்றான்.

ஏன் பங்காளி மாப்ள தான் காதலிச்சு கரெக்ட் பண்ணிட்டாரு உங்களுக்கு அந்த காதல் கீதெல்லாம் ஒன்னும் கிடையாதான்னு கண்ணனிடம் கேட்கவும்,இதுவரைக்கும் அப்படி ஒரு நல்ல காரியம் என் வாழ்க்கையில் நடக்கல பங்காளி. .

நம்ப தலையெழுத்து ஒருத்தியும் நமக்கு செட் ஆக மாட்டேங்குறானு கண்ணன் வருத்தத்தோடு சொல்ல,அதைக் கேட்ட பரத் சொல்ல முடியாது பங்கு...காதல் ஒரு வியாதி போல எப்ப வருதுனே தெரியாது பங்காளி.எனக்கும் ஒருத்தி கூட கிடைக்க மாட்டேங்குறா

ஊர்ல யாராவது இருந்தா சொல்லு புடிச்சு போட்டுறலாம் என்கவும்,இதை கேட்ட செழியனோ ஷமீராவை பார்க்க வந்தீங்களா இல்ல பொண்ணு தேட வந்தீங்களா என்க...

"டூயின் ஒன் மச்சி" ஒற்றைக் கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறது தானே நம்ம தமிழர் பண்பாடு என்கவும்,நல்ல பண்பாடு டா என்று சிரித்தான்.

அங்கிருக்கும் இயற்கை சூழலை ரசித்துக் கொண்டு புதிதாக கிடைத்த நண்பர்களோடு அரட்டை அடித்தபடியே பாபுவும் பரத்தும் அந்த மிளகாய் தோப்பில் நடந்து சென்றனர்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தூரத்து மலைகளும் விவசாய பூமியாகவும் இருந்தது...

அப்புறம் சகலை,நீங்க என்ன வேலை பாக்குறீங்க?.துபாய்ல ஒட்டகம் மேய்க்கிறதா?இல்ல ஒட்டகப்பாலில் டீ போடுறீங்களானு கண்ணன் கேட்க, பரத்தோ ஏன் பங்கு ஏன் இப்படி என்றான்..

"எல்லாம் ஒரு ஜெனரல் நாலேஜ் தானென்று சிரித்தான்"

நாங்கள் இரண்டு பேரும் அங்கிருக்கும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கோம் பங்கு. கம்ப்யூட்டர் இன்ஜினியர்.

ஓ...அந்த டிவி பொட்டி ரிப்பேர் பண்ற வேலையானு கண்ணன் சொல்ல, இந்த உலகத்துலையே இப்படி யாரும் கம்ப்யூட்டர் என்ஜினியரை கேவலப்படுத்த முடியாது மாப்பியென்று பாபு சொல்ல,அதற்கு கண்ணனோ ரொம்ப புகழாதீங்க மச்சி.
"வெக்கவெக்கமா வருதென்று சிரித்தான்".

ஒத்த வயது என்பதால் நால்வருக்கும் புதிதாக பழகுவது போல் தோன்றவில்லை.விரைவிலேயே நண்பர்களாகி விட்டனர்.

இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும் டா?பாதயாத்திரை நடக்கிற போல இழுத்துட்டு போறிங்களேனு பரத் கேட்க...நடப்பது உடலுக்கு நல்லது தான் மச்சி.நடந்து வாயா என்ற செழியன் இளநீர் குடிக்கிறீர்களா என்க..இந்த நேரத்தில் வேண்டாமென்றனர்.

பின்னர் பேசிக்கொண்டே அந்த மிளகு தோப்பிற்குள் நுழையும் போது அருவியிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது..

மச்சி தண்ணி சத்தம் கேக்குதென்று பாபு சொல்லவும் ஆமாம் டா. நமது காட்டில் மட்டும்தான் இந்த சுனை இருக்கென்று கண்ணன் சொல்ல அப்படியா ரொம்ப சந்தோஷம்.அப்போ அந்த சுனை எப்படியும் ஒரு நூறு வருஷமா இங்கு இருக்குமா?

எதேஏஏ நூறு வருஷமா?.

"அது ஏழு எட்டு தலைமுறையா இருக்கென்றான்"என்னாஆஆஆ..என்று நண்பர்கள் இருவரும் அதிர்ந்தானுங்கள்...

அப்போ இரண்டு பேரும் இங்கதான் வந்து ஊறுவிங்க போலனு பரத் சொல்ல, ஆமா இத்தனை வருஷமாக நாங்க ரெண்டு எருமை மாடு மட்டுமே வந்த ஊறுனோம்.இப்ப புதுசா இரண்டு எருமை மாடு வந்துருக்கு.

அடப்பாவி சந்தடி சக்கில் எங்களையும் எருமைமாடு ஆக்கிட்டியேடாயென்று பரத் சொல்ல மற்றவர்களோ இதில் என்னடா சந்தேகமென்று சிரித்தனர்..

ஒற்றையடி பாதை வரவும் பரத்தோ இது லவ்வர்ஸ் மீட் பண்றதுக்கெல்லாம் செம்மையான இடம் போலடா என்க...நமக்கு எங்கே பங்கு அந்த கொடுப்பினை இருக்கென்று கண்ணன் அலுப்பாக சொல்ல. ..

நம்ப மொகரகட்ட ராசி அப்படி மச்சி? விடுவிடுயென்று செழியன் சொல்ல, அதற்கு கண்ணனோ, ஏண்டா அவனுக்கு ஆள் இல்லன்னு வருத்தப்படுறான் அது நியாயம்.நீ கல்யாணம் பண்ணிட்டு வருத்தப்படுற பாரேன்,செருப்பு பிஞ்சிடும் பிஞ்சி,நீ எங்க கூட எல்லாம் ஜோடி சேரக்கூடாது.

மச்சி இன்னும் எவ்வளவு நேரம் தான் நடக்குறது..காலு ரெண்டும் பின்னி எடுக்குதென்று பரத் சொல்ல இதோ வந்துட்டோம் மச்சி என்று இடது பக்கம் திரும்ப,அங்கிருக்கும் சூழலை பார்த்து இருவரும் வாவ் என்று வாயை பிளந்தனர்.

மச்சி இந்த இடம் செமையா இருக்குயா என்க,இது நம்மளோடது தான்..எப்போது உருவாகினதுன்னு தெரியல ஆனா பல தலைமுறையா இந்த இடத்துல இருக்கு மாப்பி...

எந்த சூழ்நிலையிலும் இந்த இடத்தில் மட்டும் தண்ணி வத்த மாட்டேங்குது. எங்க இருந்து வருதுன்னு தான் கண்டுபிடிக்க முடியலை..

முன்னோர்களும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டாங்க அந்தா மேல நீட்டு பாறை இருக்கே அது வரைக்கும் தான் ஏற முடியுது.அதுக்கப்புறம் நம்மளை ஏற விடலை.வழுக்கி விட்டுறுதுடா என்கவும்,கேட்ட இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது...

சரி வாங்க போய் குளிக்கலாமென்று நால்வரும் தண்ணீரில் இறங்கினார். அதும் இல்லாம இது மூலிகை கலந்து வருது.

இந்த தண்ணியை குடிச்சு பாருங்க ஒரு வித வாசனை இருக்குமென்று சொல்லவும் பாபுவும் பரத்தும் அதே போல் தண்ணியை முகர்ந்து பார்க்க அப்படித்தான் இருந்தது.பயங்கரமா இருக்கேடா என்றனர்.

நேரம் போனதே தெரியாமல் சுனையில் நீச்சல் அடித்தனர்...உள்ள போக ரொம்ப ஆழமா பங்குனு பாபு கேட்க...அந்த அளவுக்கு ஆழம் இல்ல நம்ம இடுப்பு உயரம் இருக்குமென்றான்.

பொம்பளைங்களாம் இங்க வருவாங்களா?

லீவுல பசங்க எல்லாரையும் கூப்பிட்டு அம்மாவும் அத்தையும் வருவாங்க.

மத்தபடி யாரும் இங்க வர மாட்டாங்க என்ற கண்ணன் அங்கிருந்த பாறையின் மேல் நின்று பொதிரென்று தண்ணிக்குள் குதிக்க தொரைக்கு இப்பதான் 10 வயசு ஆகுது,டைவ் அடிக்குதென்று செழியன் திட்ட,புகழாத மாப்பியென்றான்.

எங்க போனார் இந்த மனுஷன்?.

மாமா கிட்ட எப்படி பேசுறாருன்னு தெரியலையே?.பாபு மாமா கிட்ட உரிமையா பேசுனது இவருக்கு என்ன இப்படி கோவம் வருது...

கால் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கறாரே என்ற யோசனையோடு ஷமீராவும் வேலை பார்த்துக் கொண்டிருக்க,அவள் முகத்தை பார்த்த கவிதாவோ அக்கா அப்படி என்ன தீவிர யோசனையில் இருக்கீங்க என்க, ஒன்னும் இல்லடி என்றாள்

ஓஓஓஓ...மாமாவை பத்தி தானே யோசிக்கிறீங்க என்கவும்,ஷமீரா மௌனமாக சிரிக்க உங்க சிரிப்பே சொல்லுது கா மாமாவை பத்தி தான் யோசனைனு.அண்ணன் கூட தான் எங்கேயாவது வெளியில போயிருப்பாங்க கா..இரண்டு பேரும் இரட்டை பிறவிகள் போல ஒன்னா திரிவாங்களென்று சிரித்தாள் ..

ஷமீராவோ தனது இடது பக்கமாக திரும்பிப் பார்க்க அங்கே கண்மணி ஏதோ யோசனையோடு உட்கார்ந்திருப்பதை பார்த்தவள் நீ என்ன டி கப்பல் கவிழ்ந்து போல உட்கார்ந்திருக்க?

அதற்கு கண்மணியோ எந்த பதிலும் சொல்லவில்லை.

கவிதாவோ வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல்,ஒருவேளை அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டதால் காதல் தோல்வியை நினைச்சுக்கிட்டு இருக்கிறியோ என்கும்போது கனலரசன் வீட்டுக்குள் வர,அவருக்கு காதல் என்ற வார்த்தை விழ கவிதானு குரல் கொடுக்க அய்யய்யோ போச்சாயென்று பல்லை கடித்தாள்...

வாயெல்லாம் ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன்.ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு.இல்ல உனக்கும் கண்ணன்,கண்மணி கல்யாணத்தோடு சேர்த்து பண்ணிடுவேன்.

அய்யய்யோ அப்பா அப்படியெல்லாம் பண்ணிடாதீங்கப்பா.அக்கா கிட்ட விளையாட்டுக்கு பேசினேன் பா.

இது தான் விளையாட்டாயென்று முறைத்தார்.

வீழ்ந்தேனடி..
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Ponnu eduthu ponnu kudakka poranghala
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top