• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
மாறா என்று நிலவன் தான் தடுத்து நிறுத்த,தண்ணி அடிக்கிற பழக்கத்தை கத்து வச்சிருக்கான்டா. இன்னும் வேற என்னென்ன பழக்கம் உனக்கு இருக்கு சொல்லி தொலை என்கவும் வேற எதுவும் இல்லை ணா.

பிரெண்ட்ஸ் ரொம்ப கம்பல் பண்ணுனாங்க.நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை ரொம்ப உசுப்பித்து விட்டுட்டாங்க அது எனக்கு அவமானமாக போயிடுச்சு அதனாலதான் நான் குடிச்சேன் என்றான்.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் உனக்கு சொரணை இல்லையா? மனசை நம்ப தான் கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கணும்.உன்னை நம்பி வந்த பொண்ணு கிட்ட போய் இப்படி நடந்துருக்கியே உனக்கு வெக்கமா இல்லையாடா என்று கத்தினான்...

தப்பு தான் ணா.

போதை எனக்கு காலைல தான் தெளிஞ்சது பிறகு நடந்ததை புரிந்து நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவ கிட்ட சொன்னேன்.

கொஞ்ச நாள் போகட்டும் அவள் சொல்ல சரினு நாங்க ரெண்டு பேரும் யாருக்கு தெரியாம லவ் பண்ணிட்டு இருந்தோம்.ஒரு நாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் நைட் 8 மணிக்கு எனக்கு கால் பண்ணியவள் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு என்க நானும் எங்க இருக்கன்னு கேட்டேன்.

நம்ம வழக்கமா சந்திக்கிற இடத்துல தான் வெயிட் பண்றேன்னு சொன்னாள். நானும் அவ சொன்ன நேரத்துல அங்க போய் பார்த்தேன் இல்லை.

ரொம்ப நேரம் அவளுக்காக வெயிட் பண்ணுனேன் நேரம் தான் போனதே தவிர அவ வரலை.பிறகு நான் வீட்டுக்கு வந்துட்டேன் அதுக்கப்புறம் அவ எங்க போனானு தெரியவில்லை என்று தரையில் மண்டியிட்டு கதறி அழுதான்.

சரி விடு அவள் தங்கியிருந்த வீட்டோட சாவி எங்க இருக்கென்க,கீழே தான் ணா இருக்கு என்கவும் சரி வா எடுத்துக் கொடு என்றான்.தனது கண்ணை துடைத்துக் கொண்டு நிறமாறனும் அண்ணனோடு கீழே வந்தவன் சாவி எடுத்துக் கொண்டு மூவரும் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸிற்கு சென்று கதவை திறந்து உள்ளே போனார்கள்.

மூன்று மாதமாக பூட்டியே இருந்ததால் தூசி படிந்து போய் கிடந்தது.ஏன் நீலு அதுக்கப்புறம் நீ இங்கு வந்தியா என்று கேட்க இல்ல ணா. ஒரு சாவி அவகிட்ட தான் இருக்கு இன்னொரு சாவி தான் நம்ம கிட்ட இருக்கு என்றான்.

சரி என்று சொல்லிய மாறன் நீ எதுமே டச் பண்ணாத அமைதியா அங்க போய் நில்லு என்று சொல்லிவிட்டு நிலவனும் மாறனும் வீட்டை சோதித்தார்கள்.

பெட் ரூமிற்கு வந்து தேட கபோர்டில் சூட்கேஸ் இருப்பது தெரிந்து வெளியே எடுக்க நம்பர் பேட்டனில் லாக் பண்ணிருந்தது.

நீலு என்க இதோ ணா என்று உள்ளே வந்தவனிடம் இதோட நம்பர் உனக்கு தெரியுமா என்று கேட்க ஹம் என்றவன் நம்பர் சொல்லவும் பெட்டியும் திறந்தது.அதனுள் ட்ரெஸ்,கொஞ்சம் பணம் கோத்தகிரியில் இருக்கும் பேங்க் பாஸ்புக் இருந்தது.

அதை எடுத்து ஓபன் பண்ணி பார்த்தவன் உள்ளே இருந்த பர்சை திறக்க பேங்க் லாக்கர் சாவி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

ஏன் நீலு வெரோனிகா இங்க அக்கவுண்ட் ஓபன் பண்ணியது தெரியுமா என்று கேட்கவும் நான் தான் ஓபன் பண்ணி கொடுத்தேன் ணா.

அவளோட சம்பளத்தை அக்கவுண்ட்ல தானே போட முடியும் என்க,அப்படியா என்றவன் சரி என்று வீட்டிற்கு போனவர்கள் குளித்து தயாராகி காலை டிபனை சாப்பிட்டுவிட்டு இருவரும் காரை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு போனவர்கள் அங்கிருந்த மேனேஜரிடம் தங்கள் யார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டு வெரோனிகாவின் லாக்கர் சாவியை கொடுத்து அதை ஓபன் பண்ண சொன்னார்கள்.

போலீஸ் என்பதால் அவர்களும் வேறு ஏதும் கேட்காமல் லாக்கரை ஓப்பன் பண்ண,அதன் உள்ளே வெரோனிகாவின் பாஸ்போர்ட் அவள் பெற்றோர்களான விக்டர் பியூலா கலா இருக்கும் போட்டோ மற்றும் டைரியின் ஜெராக்ஸ் காப்பி, அதோடு ஒரு நியூஸ் பேப்பரும் இருந்தது.

அந்த நியூஸ் பேப்பரை எடுத்து என்ன என்று பார்க்க அதில் ஏழாவது பக்கத்தில் மார்க் பண்ணியிருப்பது என்னவென்று பார்க்க கோத்தகரியில் இருக்கும் சாலா எஸ்டேட்டிற்கு செகரட்டரி தேவை என்ற விளம்பரம் இருந்தது.

அதை எல்லாம் எடுத்துக்கொண்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவர்கள் ஒருவேளை சதாசிவத்தை பார்க்க போயிருப்பாளா?.இது அந்த வேலனுக்கு தெரிஞ்சிருக்குமா என்று நிலவனிடம் கேட்க,என்னன்னு தெரியலையே அங்க போனா தானே விஷயம் புரியும் என்றான்.

சரி முதல்ல அந்த சதாசிவத்தை பார்த்து வெரோனிகா பற்றி எதாவது விஷயம் தெரியுமா என்று கண்டு பிடிக்கலாம்.நம்ம ரெண்டு பேரும் மட்டும் போனா சந்தேகம் வரும்.நீலுவையும் கூப்பிட்டு போகலாமென்று மாறன் சொல்ல, நல்ல ஐடியா மச்சி என்று சொல்லியவன் நிலமாறனுக்கு கால் பண்ணி கவி வீட்டுக்கு போகணும் வா என்க...

"ஏன் மாமா என்றான்"

கேள்வி எல்லாம் கேட்டுட்டு தான் வருவியா என்று பக்கத்தில் இருந்து மாறன் கத்த சாரி ணா என்றவன் எங்க வரணும் என்க மன்னார்குடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்துரு என்று கட் பண்ணி விட்டு இருவரும் அங்கிருந்து சென்றனர்.

நிலமாறனும் என்னவா இருக்கும் என்ற யோசனையோடு காத்திருக்க அவனுங்களும் வந்தானுங்கள்.பின்னர் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வேலன் பேலஸிற்கு வர நிலமாறனின் காரை பார்த்து வாட்ச்மென் கதவை திறக்க இரண்டு காரும் உள்ளே போய் நின்றது.

மூவரும் உள்ளே போக அங்கிருந்த சரளாவோ வாங்க தம்பி என்க, இப்போது கவி எப்படி இருக்கா பாட்டியென்று நிலமாறன் கேட்க ஆர்ப்பாட்டம் தான் பண்ணுறாள்.

நான் உயிரோட இருக்க வேண்டாம் என்னை கொன்னுடுங்கனு சைகையில் சொல்றா என்று கலங்கினார். தனது அண்ணனையும் மாமனையும் நிலமாறன் அறிமுகப்படுத்த மரியாதை நிமித்தமாக இருவரும் சரளாவிற்கு வணக்கம் சொல்ல அவர்களும் வணக்கம் தம்பி உங்க ரெண்டு பேரையும் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.

உக்காருங்க தம்பி டீ எடுத்துட்டு வரேன் என்று சொல்லவும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பாட்டி நாங்க போய் அங்கிளை பாத்துட்டு வரோம் என்க போங்கப்பா உள்ள தான் இருக்கிறார் என்றதும் நிலமாறன் முன்னே போக ஓ ஆடு இங்கு தான் இருக்காயென மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிலமாறன் பின்னாடி இருவரும் சென்றனர்.

அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவன் வாங்க என்க ஹம் என தலையசைத்து விட்டு உள்ளே வந்த இருவரும் வழக்கம் போல் அவர்கள் போலீஸ் புத்தியால் அந்த ரூமை ஒரு பார்வையில் அலசினர்..

பெட்டில் படுத்திருந்த சதாசிவத்தின் அருகில் போன நிலமாறன் அண்ணா மாமா வாங்க என்க,அவர் ஏதோ சாதாரணமாக படுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருவரும் வர அங்கிளுக்கு பேரலைஸ் ஆயிடுச்சு என்றான்.

இப்படி ஒரு விஷயத்தை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிள் அங்கிள் என்று கூப்பிட சதாசிவம் கண்ணை திறக்க என்னோட அண்ணன் இவங்க என்னுடைய மாமாயென அறிமுகப்படுத்த சதாசிவம் தலையசைத்து வாங்க என்று சொல்லவும் இப்போ உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா என்று இருவரும் அவரிடம் நலம் விசாரிக்க அவரும் தலையசைத்து தனது இடது கையால் சைகையில் பதில் சொன்னார்.

சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் சரிங்க அங்கிள் உடம்ப பாத்துக்க நாங்க வரோம் என்று சொல்லிவிட்டது வெளியே வர பாட்டி அவர்களை மதிய சாப்பாடு சாப்பிட கூப்பிட இருக்கட்டும் அங்கு பாட்டி ரெடி பண்ணிருப்பாங்க நாங்க போயிட்டு வரோம் என்று வீட்டிற்குள் வந்தார்கள்.

நேரமும் கடந்து செல்ல தனது வாட்ச்சை பார்த்த இளமாறன் நல்ல வேலை நம்ம சூட்கேஸ் நிலவன் எடுத்துட்டு வந்தானே என்று சொல்லிக்கொண்டு அதை திறந்தவன் அதன் உள்ளே இருந்த சிறிய கன்னை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு அங்கிருந்த ஜன்னல் கதவை திறந்து கீழே குதித்தான்.

சுற்றிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெரிய காம்பவுண்ட் சுவரை தாவி குதித்து வெளிய வந்தவன் அங்கே வண்டியில் ஒரு உருவம் உட்கார்ந்திருப்பதை பார்த்து வேகமாக போய் உட்கார அதில் இருந்தவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண இருவரும் அங்கிருந்து காற்று போல் பறந்தவர்கள் மன்னார்குடியில் இருக்கும் வேலன் பேலஸ் நோக்கி வந்தார்கள்.

பேலஸில் இருந்து சில அடி தூரத்திலேயே வண்டியை நிறுத்திய இருவரும் யாராவது அவர்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே வர வாசலில் உட்கார்ந்து இருந்த வாட்ச்மேன் தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.

பின்னர் அங்கிருந்த மரத்தில் ஏறி உள்ளே தாவி குதித்து சதாசிவம் இருக்கும் ரூம் பக்கம் பொறுமையாக போனானுங்கள்.

பெரிய பேலஸ் என்பதால் அந்த இருட்டில் ரூமை கண்டு பிடிக்கவே சிறிது நிமிடங்கள் ஆனது.ஒரு வழியாக தேடி வந்தவர்களுக்கு ஏதோ பேச்சு சத்தம் கேட்க,யாராவது நம்மை பார்த்து விட்டார்களோ என்று தோன்றியது.

பின்னர் பேச்சு குரல் ரூமில் இருந்து கேட்பது புரிந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்து யோசனை ஆனானுங்கள்.சை கையில் ஏதோ பேசியவனுங்கள் உள்ளே பேசுவதை கவனிக்க....

அங்கே....

டேய் குமார் தயவு செய்து இங்கு இருந்து எப்படியாவது நான் வெளியே வர ஐடியா பண்ணுடா.இன்னும் எத்தனை மாதத்திற்கு தான் நான் இப்படி கை கால் முடமான போல நடிக்கிறது?.

சரோஜாவை நினைத்தால் பாவமாக இருக்குடா?

நான் விசாரிக்க சொன்னனே அந்த விஷயம் என்னாச்சு?. அந்த பொண்ணு யாரென்று தெரிந்ததா?.

நான் இப்படி நடிக்கிறேன்னு எங்கப்பாவுக்கு தெரிந்தது என்னையும் கொன்னுடுவார் டா.அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு நிலமாறனோட அண்ணனும் மாமாவும் இங்கு வந்தார்கள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
எதாவது சந்தேகம் வந்துருக்குமோனு பயமா இருக்குடா? என்று சொல்வதை இருவரும் கேட்டவனுங்கள் வந்த போலவே அங்கிருந்து வெளியேறி வண்டி நிற்கும் இடத்திற்கு வரும் போது ஒரு இளம் பெண் ஓடி வந்தவள் இவர்களை பார்த்து அண்ணா பிளிஸ் காப்பாற்றுங்கள் என்று அழுதாள்.

என்னாச்சு என்று இவனுங்க சுற்றி பார்த்து கொண்டு கேட்க அந்த பங்களாவில் என் அக்காவை அடைச்சி வச்சிருக்காங்க ணா பிளிஸ் காப்பாற்றுங்கள் என்றாள்...

வா மா எந்த பங்களானு காட்டு மா என்கவும்,அந்த பைக்கில் அவளையும் ஏற்றிக்கொண்டு அவள் சொல்லும் வழியில் வந்தவர்கள் கோத்தகிரியில் இருக்கும் வேலன் பேலஸின் முன்பு வந்து சேர்ந்தவனுங்கள் இங்கையாமா என்க எந்த பதிலும் இல்லை.

உன்னை தான் மா கேட்கிறோமென்று நிலவன் திரும்ப அங்கு அந்த பெண் இல்லாமல் போக மாறா என்று பயத்தில் கத்தி விட்டான்.

நிலவனின் சத்தத்தை கேட்டவன் நாயே எதுக்குடா இப்படி கத்தி காட்டி கொடுக்கிற என்க,அந்த பொண்ணு பொண்ணு என்று அதற்கு பிறகு நிலவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை.

என்னடா என்று திரும்பிப் பார்க்க நிலவனைத் தவிர அந்த இடத்தில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. எங்கடா அந்த பொண்ணு?என்று மாறன் கேட்க,அதுதாண்டா எனக்கும் தெரியல என்று பயந்து கொண்டே சொன்னான்.

மச்சி எனக்கு என்னமோ பயமா இருக்கு சீக்கிரம் வண்டி எடுடா என்கவும் சரியென ஸ்டார்ட் பண்ணி புயலை போல் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வந்த போலவே ஜன்னல் வழியாக ஏறி ரூமிற்குள் வந்தவர்கள் பெருமூச்சு விட்டு அங்கிருந்த ஜக்கிலிருந்த தண்ணீரை குடித்து சோபாவில் உட்கார்ந்தவனுங்களுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

யார்ரா அந்த பொண்ணு??

ஒருவேளை பேய் பிசாசா இருக்குமா என்க..நிலவன் சொன்னதை கேட்ட மாறனோ முறைத்து பார்த்தான்.அந்த பொண்ணோட முகம் ஞாபகம் இருக்கில்ல என்க,ஆமாண்டா என்றான்.

சரி நம்ம நீலுக்கு தான் டிராயிங் பண்ண தெரியுமே அவன் கிட்ட சொல்லி அந்த பொண்ணோட பேஸ் வரைய சொல்லலாம்.ஆமாம் இந்த சதாசிவம் எதுக்குடா நடிச்சுட்டு இருக்கான்?.
அந்த ஆளுகிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு டா. எப்படி அவர் கிட்ட உண்மையை வர வைக்கிறது என்று இருவரும் டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவு எடுத்துவிட்டு படுத்து தூங்கினார்.

லேட்டாக படுத்தாலும் வழக்கம் போல் எழுந்தவர்கள் வழக்கமாக செய்யும் எக்சர்சைஸ்சை முடித்துவிட்டு வர நிலமாறனோ ஹாலில் உட்கார்ந்து பேப்பரை படித்துக் கொண்டிருந்தான்.

அங்கு வந்த மாறன் நீலு கொஞ்சம் ட்ராயிங் ரூமுக்கு வாடா என்க சரி ணா என்றான்.

அதேபோல் டிராயிங் ரூமுக்கு வர,நாங்க சொல்றோம் நீ வரை என்று கண்ணு மூக்கு என நைட் பார்த்த அந்த பெண்ணின் உருவத்தை நிலவனும் மாறனும் மாற்றி மாற்றி சொல்ல அதைப் போலவே வரைந்து முடித்தவன் அந்த உருவத்தை பார்த்து ஆர்த்தி என்று அதிர்த்தான்.

இந்த பெயரை கேட்ட இருவரும் டேய் உனக்கு இந்த பொண்ணையும் தெரியுமாடா என்கவும்,முதல்ல இந்த பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியுமென்றான்.

டேய் நைட் அந்த பொண்ணு எங்க கிட்ட காப்பாற்ற சொல்லி ஹெல்ப் கேட்டா டா என்று நிலவன் சொல்ல,என்ன மாமா சொல்ற?அதுக்கு வாய்ப்பே இல்லையே என்று நிலமாறன் பதற்றமாக கேட்டான்.

அடேய் நாங்க என்ன பொய்யா சொல்றோம்?ஆமா ஏன் இந்த பொண்ணு யாரிடமும் பேசாதா என்க,அய்யோ மாமா இவளால் எப்படி கேட்க முடியும்,இந்த பொண்ணு தான் இறந்து போய் மூணு மாசம் ஆகுது என்றான்.

"எதேஏஏஏஏஏ"

அப்போ என் பின்னாடி உட்கார்ந்து வந்தது பேயா என்றவாறு நிலவன் மயங்கி விழ அடச்சை என்ற மாறன் தண்ணி எடு என்று தம்பியிடம் சொல்ல நிலமாறனும் அங்கிருந்த ஜக்கை எடுத்து வந்தவன் அதில் இருந்த தண்ணீரை மயங்கி கிடந்தவனின் முகத்தில் தெளித்தான்...

சிறிது நொடியில் கண்ணை திறந்தவன் அய்யோ பேய் பேய் என்று கத்த இளமாறனோ ஓங்கி ஓரு அறை விடவும் அதன் பிறகே நிலவன் அமைதியானான்.

நீலு நீ சொல்றது உண்மையா என்று மாறன் கேட்க ஆமா ணா.அந்த பொண்ணு ஆக்ஸிடன்டில் இறந்து போயிட்டாள்.கவியோட அப்பா தான் அவளை தத்து எடுத்து வளர்த்தாரு ணா.

அது நடந்து 3 மாதம் இருக்கும் என்க....அப்படியா என்றவனுக்கு ஆமா ணா.நான் ஏன் பொய் சொல்ல போறேன் என்றான்.

ஆஆஆஆஆ என்று கத்திய மாறன் என்னடா நடக்கின்றது?இந்த கேஸ் என்ன இப்படி சுத்தல்ல இழுத்து விடுது என்று அங்கிருந்த சுவற்றில் கையை மடக்கி குத்தியவன் அந்த சதாசிவத்தை தூக்கிட்டு வந்தால் எதாவது விஷயம் கிடைக்கும்.

அதுக்கு முன்னாடி அந்த பேலஸை சர்ச் பண்ணனும்.ஆனால் யாருக்கும் இது தெரியக்கூடாது என்ன பண்ணலாம் என்க,அண்ணா அந்த பேலஸ் வாட்ச்மென் ஊமை ணா.ஒரு விபத்தில் அவருக்கு பேச்சு போயிடுச்சு என்று நிலமாறன் சொல்ல...

அப்படியா!

அந்த வாட்ச்மெனுக்கு பேமிலி இருக்கா?

அங்கு தான் தங்கிருக்காரா என்று கேட்க ஆமாணா.ரொம்ப நல்லவர் ணா.பேர் சந்தர்.அவங்க பையன் தான் இப்போது வேலன் எஸ்டேட் மேனேஜர் என்றான்.

ஓஓஓ என்றவன்.... பின்னர் சுதாரித்து இப்போது நீ என்ன பேர் சொன்ன டா என்று கேட்க சந்தர் ணா என்று நிலமாறன் சொல்ல நிலவனும் மாறனும் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.

சரி டா கீழ போகலாமென்று மூவரும் ஹாலுக்கு வர சாலா பாட்டியோ பேரன்களை பார்த்து முறைத்தவர் ஆஹ இப்போது கூட பாட்டிக்காக வரலை.உங்கள் கேஸ் விஷயமாக தான் வந்துருக்கிங்க இல்லையா என்றார்.

அது வந்து பாட்டி என்று மாறன் சொல்ல அப்பாயி எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற என்று நிலவன் அவரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு கேட்க போடா போக்கிரிங்களா உங்களை பத்தி எனக்கு தெரியாதா?

இத்தனை வருஷம் பாட்டி மேல இல்லாத அக்கறை இப்ப மட்டும் என்ன புதுசா உங்களுக்கு பொத்துக்கிட்டு ஊத்துது...

எப்படியோ கேஸ் விஷயமாவது இந்த கிழவி கூட நான்கு நாள் தங்கி இருப்பீங்களே அது போதும் என்று கண் கலங்கினார்.

எங்களுடைய வேலை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி வருத்தப்படுவது நல்லாவா இருக்கு என்று இளமாறன் கேட்க உன் மாமன் இப்படி சொல்லி சொல்லி தான் என்னை விட்டு ஒரேடியா விலகிப் போயிட்டான்.

அதே வேலையில் நீங்கள் இரண்டு பேரும் இருக்கீங்களே, நான் பாடையில போகும் போதாவது வேதாவும் நீங்களும் வருவீங்களா என்னன்னு தெரியல என்று கலங்க,இப்போது எதுக்கு இப்படி பேசுறீங்க என்று கோபப்பட்டானுங்கள்.

ஹாஸ்பிடல்:

நினைவு வந்த பிறகு தனது நிலையை பார்த்த கவிக்கு ஒவ்வொரு நொடியும் சித்ரவதையாக இருந்தது.இன்னும் எதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டும் எப்படியாவது என்ன கொன்னுடுங்க டாக்டர் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டே இருந்தாள்.

அவளின் கத்தலை அங்கிருந்த கருப்பு உருவம் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தது.நல்லா அழுவு.இன்னும் நீ அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு அவ்வளவு சீக்கிரம் உன்னையும் உன் தாத்தாவையும் விட்டுவிடுருவேனா?.

கெஞ்சி கதறினேனே என்ன விட்டுடுங்கனு,நீயும் உன் தாத்தாவும் கேட்டீங்களா?இன்னைக்கு நீ கதறும் போது உன்னை நான் விடுவேனா என்றதோ அவள் நெஞ்சில் மேல் போய் உட்கார திடீரென்று எதுவோ பாரமான ஒன்று மேலே இருப்பதை உணர்ந்தவளுக்கு கண் விழிகள் இரண்டும் பிதுங்கியது.

தொண்டையில் ஆபரேஷன் பண்ணி இருப்பதால் கழுத்தை அசைக்க முடியவில்லை கையை மட்டும் பெட்டில் போட்டு தட்டிக் கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவள் மேல் உட்கார்ந்து இருந்த உருவம் மறைந்து போக பிறகு பெருமூச்சு விட்டாள்.

உள்ளே வந்த நர்ஸ் அவளைப் பார்த்து என்ன ஆச்சு என்க,சைகையில் அவள் ஏதோ சொல்ல அது நர்சுக்கு புரியவில்லை.

வழக்கம்போல சாகடிக்க சொல்கிறாள் என்று நினைத்து விட்டு காலையில் போட வேண்டிய மாத்திரையை கொடுத்துவிட்டு நர்சும் அங்கிருந்து சென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
நிலமாறன் தன்னை வந்து பார்க்கவில்லையே ஏற்கனவே அவனுக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை இதுதான் சாக்கு என்று எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்த நம்மளே வழி செய்து விட்டோமே என்று இன்னொரு பக்கம் ஆத்திரமும் வந்தது.

அவளின் நிலையைப் பார்த்து சிரித்த கருப்பு உருவமோ போய் உன் தாத்தனை பார்க்கிறேன் அவன் அங்கு நிம்மதியா படுத்திருக்கிறான்.அவனை விட்டுடுவேனா என்று சொல்லிக் கொண்டு சென்றது.

ரூமில் படுத்திருந்த வேலனுக்கு ஜூஸ் குடிக்கணும் போல இருக்கு கத்தினான்.

கதவு பூட்டிருப்பதால் குரல் வெளியே கேட்காது என்ற அறிவு கூட வேலனுக்கு இல்லாமல் கத்திக் கொண்டிருந்தவன் எங்க தான் போய் தொலைஞ்சாள்? இவள் என்று இன்டர்காமை எடுத்து ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லிவிட்டு போனை வைத்தவன் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரும்போது அங்க இருந்த மேட்டை அந்த கருப்பு உருவம் இழுத்து விட,தள்ளாடி கீழே விழுந்த வேலன் அங்கிருந்து டேபிளில் மேல் இடித்து விழும்போது பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியோ வேலனின் வயிற்றின் மேல் செங்குத்தாக விழ அய்யோ என்று அலறினான்.

அந்த நேரம் பார்த்து ஜூஸை எடுத்து வந்தது சரளாவும் கணவரின் சத்தம் கேட்டு என்னாச்சுங்க என்று திரும்ப அங்கு வயிற்றில் குத்தியிருக்கும் கத்தியோட கதறிக் கொண்டிருந்தான்.

வேகமாய் வந்தவர் கையில் இருந்த ஜூசை கீழே போட்டுவிட்டு கத்தியை பிடுங்கியவர்,எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?கத்தி கூட எப்ப பார்த்தாலும் விளையாட்டா உங்களுக்கு என்க...

எந்த நேரத்தில் என்னடி பேசுற?

ரத்தம் வருது பாருடி சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போடி என்று பதறினான்.

கடவுளே என்றவர் கதவை திறந்து விட்டு வெளியே போய் அங்கிருந்த டிரைவரிடம் சொல்ல உள்ளே வந்தவன் வேலனை தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போக,ஏழு தையல் போட்டு விட்டு ஹாஸ்பிடலில் மூன்று நாட்கள் இருக்கட்டுமென்று டாக்டரும் சொல்லிச் சென்றார்.

மாறனும் நிலவனும் வண்டியில் ஏறி கோத்தகிரியில் இருக்கும் வேலன் பேலஸை நோக்கி சென்றனர். ஒருவேளை நம்ம டைரியில் படித்த சந்தரா இருக்குமா?இல்ல வேற யாராவது இருக்குமா என்று பேசிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள்.

வாசலில் நின்று ஹாரன் அடிக்க 55 வயது தக்க ஒருவர் அங்கிருந்த சின்ன கேட்டை திறந்து யாரென்று பார்க்க ஐயா நீங்க தான் சந்தரா என்க ஆமாம் என்று தலையசைத்தார்.

உங்களை பார்க்க தான் வந்திருக்கோம் என்கவும் புது முகமாக இருக்க நீங்கள் யார் என்று சைகையில் அவனுங்களிடம் விசாரிக்க உள்ள போய் பேசலாமா என்று நிலவன் கேட்க யோசனையோடு வாங்க என்று வழிவிட்டார்.

உள்ளே வந்து வண்டியை நிறுத்தவும் அதற்குள் அந்த கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தவர் அவர்களை பார்த்து யாரா இருக்கும் என்று யோசனையாக,பெட்ரோல் டேங்கின் கவரில் இருந்த டைரியை எடுத்த மாறன் அதன் முன்பக்கத்தை திறந்து அவரிடம் காட்டினான்.

அதை பார்த்த சந்தரோ தன்னை மறந்து சந்திரிகா என்றவர் அந்த டைரியை பிடுங்கி அதில் இருக்கும் அவள் முகத்தை தடவும் போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

அப்போ பவுல் ஆசிரமத்தில் விக்டர் பியூலாகூட வளர்ந்த சந்தர் நீங்க தானே என்கவும் அதில் சுதாரித்தவர் எனக்கு தெரியாது என்று டைரியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து இருவரையும் வெளியில போங்கள் என்று சைகையில் சொல்ல அதான் வேஷம் கலந்திடுச்சு எதுக்கு தேவை இல்லாம நடிக்கிறீங்க?.

ஒரு முக்கியமான விஷயமாக உங்களை பாத்துட்டு போலாம்னு வந்திருக்கோம் தேவை இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துட்டு போக வைக்க வேணாம் என்றானுங்கள்.

அப்போ நீங்க ரெண்டு பேரும் என்று அவர் பயந்து கிட்ட கேட்க நாங்க ரெண்டு பேரும் போலீஸ் சந்திரிகாவோட பொண்ணை தேடி வந்திருக்கோம் என்கவும்,அதைக்கேட்ட சந்தர் என்ன வெரோனிகா இங்க வந்திருக்கிறாளா என்று அதிர்ச்சியாக கேட்டார்.

ஆமாம் என்றவன் கொஞ்சம் உட்கார்ந்து பேசலாம் என்க,வாங்க தம்பி என்று அங்கிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு கூப்பிட்டு போனவர் சுற்றி பார்த்துக் கொண்டே கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே இருந்த மனைவிடம் பத்மா பத்மா இரண்டு டீ போட்டு எடுத்துட்டு வா என்க,இதோ என்று சிறிது நிமிடத்தில் வந்தவர் அங்கிருந்த இருவரையும் பார்த்து அவர் பயப்பட அம்மா பயப்படாதீங்க.

நாங்க ரெண்டு பேரும் சாலா எஸ்டேட் ஓனரோட பேரனுங்கள் என்றானுங்கள்.

அப்படியா தம்பி,இத்தனை வருஷத்துல உங்களை பார்த்ததே இல்லையே என்க, ரெண்டு பேரும் வேலை விஷயமா வெளி ஊரில் இருக்கிறதால இங்க வர்றது கிடையாது என்றனர்.

சாலா எஸ்டேட்ல செகரட்டரியா என் தம்பிக்கு வேலை பார்த்த பொண்ணுதான் வெரோனிகா. சந்திரிகா சதாசிவத்தோட பொண்ணு என்கவும்,என்ன தம்பி சொல்றீங்க அந்த பாப்பா என் தங்கச்சி சந்திரிகாவோட பொண்ணா என்று பதட்டத்தோடு சந்தர் கேட்க ஆமாங்கய்யா என்றான்.

ஐயோ கடவுளே என்று தனது நெற்றியில் அடித்துக் கொண்டவர் என் பிள்ளையை இந்த எஸ்டேட்டுக்கு கீழ இருக்கும் பாதாள சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்களே,இதை பற்றி வெளில சொன்னா என் பொண்டாட்டியையும் பையனையும் கொன்னுடுவாங்கப்பா.

அந்த வீட்டில் 10 அடியாக்கள் இருக்கிறார்கள்.ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு கொடுக்கிறார்கள் எங்களை கூட உள்ளார விடுறது கிடையாது.என் பொண்டாட்டி தான் சமைச்சு கொடுக்கிறாள்.

எங்க பையன் உயிரோட இருக்கனுமென்றால் இத பத்தி வெளியில செல்லக்கூடாதுன்னு பெரியைய்யா எங்களை மிரட்டி வைத்திருக்கிறார் பா.

தம்பி என் தங்கச்சியோட பொண்ணு தான் இந்த பாப்பாவா?என்று மீண்டும் சந்தர் கேட்க,உங்களுக்கு நடந்ததை சொல்கிறேன் என்று எல்லா விஷயத்தையும் மாறனும் நிலவனும் சொல்லக் கேட்டவர் தனது தலையிலே அடித்துக் கொண்டார்.

தம்பி அந்த 10 பேரும் பொல்லாதவங்க பா.யாரையும் கொலை பண்றதுக்கு தயங்க மாட்டாங்க.அவங்களுக்கு சாப்பாடு என் பொண்டாட்டி தானே ஆக்குறாள்.அதுல ஏதாச்சும் மயக்கம் மருந்தை கலந்து கொடுத்திடலாம்.

உங்கள் ரெண்டு பேரால் அவனுங்களை சமாளிக்க முடியாது யா.என் தங்கச்சி புள்ளைய எப்படியாவது காப்பாத்திடுங்க தம்பி என்று அவர்கள் கையை பிடித்துக் கொண்டு சந்தர் கதறினார்.

கண்டிப்பாக..அதற்கு தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றானுங்கள். தம்பி உங்க வண்டியை பார்த்துட்டா அவனுங்களுக்கு சந்தேகம் வந்துரும் வண்டி சாவியை கொடுங்க,மறைவா ஒளிய வச்சுட்டு வந்துட்டுறேன் என்கவும் அய்யா உங்களால வண்டி தள்ள முடியாமா என்றனர்.

தம்பி இது வைரம் பாஞ்ச கட்டை.சாவிய கொடு பா என்று வாங்கிக் கொண்டு வேகமாக போய் போனவர் அங்கே இருந்த வண்டியை குரோட்டான்ஸ் செடிகளுக்கு பின்னாடி ஒளிய வைத்தார்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top