Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 721
- Thread Author
- #1
ஓகே என்ற நிலவன் வாடா என்று மாறனை அழைத்துக் கொண்டு கீழே வந்தவன் இப்ப என்ன பண்ணலாம் என்க,உன் அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லு அவர் என்ன சொல்றாரு அதுபோல பண்ணலாம் என்றவன்,தனது போனை எடுத்து அவனது அப்பாவிற்கு கால் பண்ணினான்.
அந்த பக்கம் இரண்டாவது ரிங்கிளே அட்டென்ட் பண்ணிய மதி தம்பி என்று நா தழுக்க பேச,என்ன வாத்தி? எப்படி இருக்க? உன் பொண்டாட்டி நல்லா இருக்கா?ஆச்சி எப்படி இருக்காங்க என்றான்.
பழைய போலவே மகன் பேசுவதை கேட்டவர் மன்னிச்சிடுப்பா.அப்பா வேணும்னு எதுவும் பண்ணல.இப்படி ஒரு விஷயத்தை அந்த பொண்ணு எதுக்கு செஞ்சதுன்னு தெரியல என்க, நீயும் உன் பொண்டாட்டியும் கிளம்பி உடனே உன் மாமியார் வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
நிலவனும் அதேபோல் வேதநந்தனிடம் விஷயத்தை சொல்ல,அந்த பக்கமிருந்து அவர் சொன்னதை கேட்டவன் சரி பா என்று ஃபோனை வைத்துவிட்டு அவங்களை கஸ்டடியில் வைத்து விசாரிக்க சொல்றாரு என்கவும், அப்புறம் என்ன கிளம்பு போகலாம்.இந்த கேஸ முடிச்சு தூக்கி எறிஞ்சிட்டு டெல்லிக்கு போயி சேர்ந்தா தான் மனுஷனுக்கு நிம்மதியா இருக்கும் என்று வெளியே போனான்..
கடவுளே...
இவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு குடும்பமா கூட்டிட்டு போலாம்னு இருந்தா இப்படி ஆயிடுச்சே என்று நினைத்துக் கொண்டே கார் சாவியை எடுத்துக் கொண்டு நிலவன் வெளியே வர,அங்கே காரின் மேல் மாறனோ யோசனையோடு சாய்ந்து நிற்பது தெரிந்தது.
இருவரும் வேலன் பேலஸ் நோக்கி செல்லும்போது எதிரே போலீஸ் ஜீப் வந்தது.இவர்கள் காரை பார்த்து நிற்கவும், இவனுங்களும் காரை நிறுத்திவிட்டு எட்டிப் பார்க்க,அதிலிருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் இருவருக்கும் சல்யூட் அடித்தவன் சார் அந்த வேலனையும் அவங்க பேத்தியையும் அரெஸ்ட் பண்றதுக்கு வாரண்ட் வந்திருக்கு என்று சொல்ல,கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டவன் எங்களை ஃபாலோ பண்ணி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
கால் மணி நேரம் பயணத்தில் வேலா பேலஸுக்கு போலீஸ் ஜீப்பும் வந்து நிற்க,அங்கிருந்த வேலை ஆட்களோ எதுக்கு போலீஸ் வருது என்று பேசிக் கொண்டனர்.
நேராக உள்ளார போக ஹாலில் உட்கார்ந்து இருந்த சரோஜா இவர்களை பார்த்து வாங்க தம்பி உட்காருங்கள் என்கவும் இருக்கட்டும் என்றவன் மிஸ்டர் வேலன் என்க..மாமாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க என்றார் .
என்ன அவருக்கென்று கேட்கவும்,பழம் வெட்டும் கத்தி வயிற்றில் குத்திடுச்சு தம்பி என்கவும் அப்படியா என்று தனது தாடியை தடவிய மாறன் மிஸ்டர் சதாசிவம்?.
ரூம்லதாப்பா இருக்கிறார் என்றார்.
நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க, போங்க தம்பி என்றதும் கதவை தட்டி உள்ளே போனவன் மிஸ்டர் சதாசிவம் நீங்க நடிச்ச நாடகம் வரைக்கும் போதும் இன்னும் ரெண்டு செகண்ட்ல எந்திரிச்சு வெளியில வரணும்.இல்லனாக்க அடிச்சு இழுத்துட்டு போவேன் என்று மாறன் சொல்ல அதில் பதறி அடித்து எழுந்த சதாசிவம் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று திருத்திருவென்று முழித்தார்.
"போட்ட டிராமாவ கச்சிதமா போடணும்" அரைகுறையா போட்டா இப்படித்தான் மாட்டிப்பீங்க என்று சொல்லிவிட்டு நிலவனும் மாறனும் வெளியே வர, அவர்களுக்கு பின்னாடி வந்த சதாசிவத்தை பார்த்த சரோஜா என்னங்க உங்களுக்கு சரியாயிடுச்சா என்று சந்தோஷத்தில் அதிர்ந்து போக...
மனசை தேற்றிங்கங்கமா,உங்க புருஷன் இத்தனை நாள் நடிச்சுகிட்டு தான் இருந்தாரு.அவரை ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கணும் கூப்பிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தோடு அங்கிருந்து சென்றனர்.
சரோஜாவோ கணவர் இத்தனை நாளா நம்மளை ஏமாற்றி இருக்கிறாரா என்று நினைத்து உடைந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து விட்டார்.
அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் இவரை போய் கஷ்டடியில் வையுங்க நாங்கள் அவரோடு வரோம் என்று சொல்ல,எஸ் சார் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தை அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் அவர்கள் சென்றுவிட இவனுங்கள் இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்றவர்கள் அங்கிருந்த ரிசப்ஷனில் வேலன் பற்றி விசாரிக்க செகண்ட் ப்ளோரில் மூணாவது ரூம் என்றனர்.
அதேபோல் மாடிக்கு வந்தவர்கள் கதவை தட்டி உள்ளே போக அங்கே வேலனோ டிவியை பார்த்துக் கொண்டு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.
இருவரையும் பார்த்தவன் வாங்க தம்பி எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியலை?மாத்தி மாத்தி எப்படி ஆயிருக்கு பாருங்கள் என்கவும் தனது காதை குடைந்த மாறன்,கடுப்பா வருது எனக்கு,சப்புனு அறைஞ்சிடுவேன் வயச கூட பாக்காம..இந்த ஆளை நீ கவனி டா என்றான்.
இப்ப எப்படி இருக்கீங்க வேலன் என்கவும் நம்ம வயசு என்ன? அனுபவத்தில் கூட இவன் பாதி கிடையாது?பேர் சொல்லி கூப்பிடுறானே என்று நிலவனை பார்த்து மனதிற்குள் திட்டிய வேலன் பரவால்ல தம்பி...
அப்படியா,எந்திரிச்சு நடக்கலாம் முடியுதா என்றான்.ஓ அதெல்லாம் நடக்க முடியுது பாருங்க.ஆனா எதுக்கு தான் டாக்டர் இங்கே இருக்க சொல்லிருக்கிறார் என்று தெரியவில்லை என்று பெட்டில் இருந்து கீழே இறங்கி நடந்து காட்ட,ஓகே அப்போ வாங்க போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றான்.
என்ன தம்பி சொல்றீங்க என்று அதிர்ந்து போய் வேலன் கேட்க,போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வாங்கன்னு சொன்னேன்.நீங்களே நடந்து வரிங்களா இல்ல உங்களை ஸ்ட்ரக்சர்ல வச்சி தூக்கிட்டு போகணுமா எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க என்று பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நிலவன் சொல்ல..
கண்டிப்பா அவன் சொன்னதை செய்வான் என்பது புரிந்து என்னுடைய வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.
நீங்கள் யார் கிட்ட வேணா பேசுங்க அது தேவையில்லாத விஷயம். இப்போதைக்கு எங்களோட வாருங்கள் என்று அவரை அழைத்துக்கொண்டு காரில் ஏறியவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றார்கள்
கவியால் இப்பொழுது நடக்க முடியாது என்பதால் அவள் குணமாகி வந்த பிறகு அவளை கஸ்டடியில் வைக்கலாமென்று வேதநந்தன் இருவரிடமும் சொல்லிவிட்டார்.
இரண்டு சேரில் அப்பனும் மகனும் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொண்டு நிலவனும் மாறனும் அவர்களுக்கு எதிரில் இருந்த சேரில் வந்து உட்கார்ந்தவர்கள் அப்புறம் ரெண்டு பேரும் எந்த சென்டர்ல டிராமாவுக்கு கத்துக்கிட்டீங்க?.
நல்லா நடிக்கிறீங்களே,சொன்னா எங்களுக்கும் அது பயன்படுமே என்று மாறன் கேட்க,நிலவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
தனது மகன் அங்கு நன்றாக உட்கார்ந்திருப்பதை பார்த்த வேலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இப்போதைக்கு இங்க இருந்து வெளியே போகணும் என்று நினைத்தவன்,தம்பி எதுக்குப்பா எங்களை இப்படி கூப்பிட்டு வந்திருக்கிற என்றார்..
சொல்றேன்...அப்புறம் அப்பாவும் பிள்ளையும் பாசத்தை புழிஞ்சிட்டீங்களா? உடம்பு எப்படினு நல்லா விசாரிச்சிட்டீங்களா என்க...ஆமா தம்பி கடவுள் புண்ணியத்துல என் பையன் குணமாகிட்டான் என்கவும்...அப்படியா கடவுள் புண்ணியத்துலயா ஆமா ஆமா என்று மாறன் சொல்ல,ஏண்டா இப்படி...என்னால சிரிப்ப அடக்க முடியல டா மாறா...
"நேரடியாக விஷயத்துக்கு வாடா" இந்த ரெண்டு காமெடி பீஸை பாத்து கடுப்பா வருது என்று நிலவன் சொல்லவும்...
சரி வேலன் ஆர்த்தியை எப்படி கொலை பண்ணுனீங்க என்க...என்னா என்று அதிர்ந்து போன சதாசிவமோ அப்போ அன்னைக்கு கத்தியால குத்தினது ஆர்த்தியை தானாப்பா என்று வாயை விட்டான்.
மகன் சொன்னதைக் கேட்டவர் அடே என்று திரும்பி சதாசிவத்தை அறைய போக வெல்டன் மிஸ்டர் வேலன் வெல்டன்.இத்தனை வயசு ஆன பிறகும் பையனை அடிக்க கைய ஓங்குறீங்களே என்ன ஒரு கண்டிப்பான அப்பா சூப்பர் சூப்பர் என்று கையை தட்டினான்.
தம்பி எங்களை கிண்டல் பண்ணியது போதும் எதுக்கு எங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க அதற்கான முதல்ல காரணத்தை சொல்லுங்க என்றான்.
நல்ல கேள்வி ஆனா உங்களோட கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்று தனது நெற்றியில் தட்டிய மாறன் சந்திரிகாவை கொலை பண்றதுக்கு ஆட்களையே அனுப்புனீங்களே அந்த கேஸ்லயா?.
இல்ல பணத்துக்கு ஆசைப்பட்டு ஆர்த்தியை கொலை பண்ணுனீங்களே அதை சொல்றதா, இல்லை வெரோனிகாவை கடத்தி பாதாள அறையில் அடைத்து வைத்திருக்கிங்களே அந்த கேஸ் சொல்றதா இல்லை சொத்துக்காக உங்க மாமனாரை கொலை பண்ணிங்களே அதுக்காக சொல்வதா இதில் எந்த கேஸ்ல உங்களை அரெஸ்ட் பண்ணியதை சொல்வது என்கவும், அதையெல்லாம் கேட்ட வேலனோ ஆடிப் போய் உக்காந்து விட்டான்.
இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று திருதிருவென்று வேலன் முழிக்க உங்க சாயமெல்லாம் வெளுத்துப் போய் ரொம்ப நேரம் ஆகுது.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்ஸ்பெக்டர் பன்னீர கூட நீங்க தானே ஆளு வச்சி கொன்னீங்க என்கவும்,அப்பா இவங்க சொல்றதெல்லாம் என்ன என்று சதாசிவம் பதற மிஸ்டர் சதாசிவம் எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்றீங்க?.உங்களுக்கு இது செட் ஆகலையே..!
உண்மையிலேயே நீங்க ஆர்த்திக்காக வருத்தப்படுறீங்களா என்கவும் ஆமாம் சார் நான் பெத்த பொண்ணு போல தான் வளர்த்தேன்.ஆர்த்தி ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு தான் எங்க அப்பா சொன்னாங்க .
ஆனா அவளை கத்தியால குத்தினதை என் கண்ணால பார்த்தேன் என் அப்பாவும் கவியும் அங்கு இருந்தாங்க. குத்துவதை நான் தூரத்தில் இருந்து பார்த்ததால அது என் பொண்ணு ஆர்த்தினு எனக்கு தெரியாது என்கவும் தெரியாமலே எப்படி அது ஆர்த்தி நீங்க சொல்றீங்க என்றான்.
உண்மையிலேயே அது ஆர்த்தி என்று முகத்தை பார்க்கல… நான் தூரத்தில் இருந்து பார்த்தேன்.எங்க எஸ்டேட்டுக்கு வர வழியில் தான் இந்த சம்பவம் நடந்தது.
அதற்கு மறுநாள் தான் ஆர்த்தி கார்ல போயிட்டு இருக்கும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க ஏன்னா ஆர்த்தி என்கிட்ட அவளுடைய பிரண்டோட கல்யாணத்துக்காக கோயம்புத்தூர் போறதாவே சொன்னாள்.
அப்பா...நீங்க தான் கெட்டவர்னா எதற்கு என் பொண்ணையும் இப்படி கெடுத்து வச்சிருக்கீங்க ஏன்ப்பா இப்படி பண்ணுனீங்க என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் வேலனிடம் கேட்க வாய மூடுடா நான் பண்ணுனேன்னு நீ பார்த்தியா?.
இவனுங்க ரெண்டு பேரும்தான் புரியாம பேசுறாங்க நீயும் என்னை கேள்வி கேட்குறியா என்கவும் மிஸ்டர் வேலன் இன்னொரு வார்த்தை எங்களை பார்த்து அவன் இவன் பேசுனிங்க நல்லா இருக்காது ஒரு அதிகாரி கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா என்று நிலவன் அங்கிருந்த டேபிளை தட்ட அதில் அப்பனும் மகனும் அரண்டு போனானுங்கள்.
அப்புறம் ஒரு விஷயம் வேலன் உங்க பேத்தி கவி இருக்காங்களே நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நீங்களும் சொல்லிட்டீங்கன்னா சுலமபாகிடும் என்க...
என்னாஆஆஆ கவி எல்லாத்தையும் சொல்லிட்டாளா முட்டாள் முட்டாள் அவளுக்காக தானே இவ்வளவும் பண்ணுனேன் அவ எப்படி என்னை மாட்டி விடலாம் என்று கத்தினார்...
கூல் கூல்..என்ன நடந்துச்சுனு உங்க பக்க கதையை சொல்லுங்க முடிந்தால் உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று மாறன் சொல்ல,இதற்கு அப்புறம் மறைக்கிறதுக்கு என்ன இருக்கு என்று நினைத்தவன் என்னை ஏமாற்றிவிட்டு இனி நீ எப்படி ஊருக்குள்ள இருக்குற நானும் பாக்குறேன் என்று சொந்த பேத்தி என்று நினைக்காமல் கவியின் மேல் சினத்தை கொண்டு நடந்ததை வேலனும் சொல்ல தொடங்கினான்.
அதாவது கவி என் பையனுக்கு ஒரே பொண்ணு தான்.பணம் கொஞ்சம் அதிகமா இருந்தால அவளோட பழக்க வழக்கங்கள் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே சரியில்லை.
இது என் பையனுக்கு தெரியாம நான் தான் பாத்துக்கிட்டேன்.ஏன்னா எனக்கு இருக்கிற ஒரே வாரிசு அவ என்ன போலையே வளருவது ஒரு விதத்தில் பெருமையாகவும் எனக்கு இருந்துச்சு.
எங்க அவளோட குணம் தெரிஞ்சு என் பையன் என்கிட்ட இருந்து அவளை பிரித்துவிடுவான் என்று அவளை வெளி ஊர்ல தங்கி படிக்க வச்சேன் அங்க போய் இன்னும் அவள் சகவாசாம் கெட்டுப் போயிடுச்சு.
அந்த பக்கம் இரண்டாவது ரிங்கிளே அட்டென்ட் பண்ணிய மதி தம்பி என்று நா தழுக்க பேச,என்ன வாத்தி? எப்படி இருக்க? உன் பொண்டாட்டி நல்லா இருக்கா?ஆச்சி எப்படி இருக்காங்க என்றான்.
பழைய போலவே மகன் பேசுவதை கேட்டவர் மன்னிச்சிடுப்பா.அப்பா வேணும்னு எதுவும் பண்ணல.இப்படி ஒரு விஷயத்தை அந்த பொண்ணு எதுக்கு செஞ்சதுன்னு தெரியல என்க, நீயும் உன் பொண்டாட்டியும் கிளம்பி உடனே உன் மாமியார் வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
நிலவனும் அதேபோல் வேதநந்தனிடம் விஷயத்தை சொல்ல,அந்த பக்கமிருந்து அவர் சொன்னதை கேட்டவன் சரி பா என்று ஃபோனை வைத்துவிட்டு அவங்களை கஸ்டடியில் வைத்து விசாரிக்க சொல்றாரு என்கவும், அப்புறம் என்ன கிளம்பு போகலாம்.இந்த கேஸ முடிச்சு தூக்கி எறிஞ்சிட்டு டெல்லிக்கு போயி சேர்ந்தா தான் மனுஷனுக்கு நிம்மதியா இருக்கும் என்று வெளியே போனான்..
கடவுளே...
இவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு குடும்பமா கூட்டிட்டு போலாம்னு இருந்தா இப்படி ஆயிடுச்சே என்று நினைத்துக் கொண்டே கார் சாவியை எடுத்துக் கொண்டு நிலவன் வெளியே வர,அங்கே காரின் மேல் மாறனோ யோசனையோடு சாய்ந்து நிற்பது தெரிந்தது.
இருவரும் வேலன் பேலஸ் நோக்கி செல்லும்போது எதிரே போலீஸ் ஜீப் வந்தது.இவர்கள் காரை பார்த்து நிற்கவும், இவனுங்களும் காரை நிறுத்திவிட்டு எட்டிப் பார்க்க,அதிலிருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் இருவருக்கும் சல்யூட் அடித்தவன் சார் அந்த வேலனையும் அவங்க பேத்தியையும் அரெஸ்ட் பண்றதுக்கு வாரண்ட் வந்திருக்கு என்று சொல்ல,கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டவன் எங்களை ஃபாலோ பண்ணி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
கால் மணி நேரம் பயணத்தில் வேலா பேலஸுக்கு போலீஸ் ஜீப்பும் வந்து நிற்க,அங்கிருந்த வேலை ஆட்களோ எதுக்கு போலீஸ் வருது என்று பேசிக் கொண்டனர்.
நேராக உள்ளார போக ஹாலில் உட்கார்ந்து இருந்த சரோஜா இவர்களை பார்த்து வாங்க தம்பி உட்காருங்கள் என்கவும் இருக்கட்டும் என்றவன் மிஸ்டர் வேலன் என்க..மாமாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க என்றார் .
என்ன அவருக்கென்று கேட்கவும்,பழம் வெட்டும் கத்தி வயிற்றில் குத்திடுச்சு தம்பி என்கவும் அப்படியா என்று தனது தாடியை தடவிய மாறன் மிஸ்டர் சதாசிவம்?.
ரூம்லதாப்பா இருக்கிறார் என்றார்.
நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க, போங்க தம்பி என்றதும் கதவை தட்டி உள்ளே போனவன் மிஸ்டர் சதாசிவம் நீங்க நடிச்ச நாடகம் வரைக்கும் போதும் இன்னும் ரெண்டு செகண்ட்ல எந்திரிச்சு வெளியில வரணும்.இல்லனாக்க அடிச்சு இழுத்துட்டு போவேன் என்று மாறன் சொல்ல அதில் பதறி அடித்து எழுந்த சதாசிவம் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று திருத்திருவென்று முழித்தார்.
"போட்ட டிராமாவ கச்சிதமா போடணும்" அரைகுறையா போட்டா இப்படித்தான் மாட்டிப்பீங்க என்று சொல்லிவிட்டு நிலவனும் மாறனும் வெளியே வர, அவர்களுக்கு பின்னாடி வந்த சதாசிவத்தை பார்த்த சரோஜா என்னங்க உங்களுக்கு சரியாயிடுச்சா என்று சந்தோஷத்தில் அதிர்ந்து போக...
மனசை தேற்றிங்கங்கமா,உங்க புருஷன் இத்தனை நாள் நடிச்சுகிட்டு தான் இருந்தாரு.அவரை ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கணும் கூப்பிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தோடு அங்கிருந்து சென்றனர்.
சரோஜாவோ கணவர் இத்தனை நாளா நம்மளை ஏமாற்றி இருக்கிறாரா என்று நினைத்து உடைந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து விட்டார்.
அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் இவரை போய் கஷ்டடியில் வையுங்க நாங்கள் அவரோடு வரோம் என்று சொல்ல,எஸ் சார் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தை அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் அவர்கள் சென்றுவிட இவனுங்கள் இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்றவர்கள் அங்கிருந்த ரிசப்ஷனில் வேலன் பற்றி விசாரிக்க செகண்ட் ப்ளோரில் மூணாவது ரூம் என்றனர்.
அதேபோல் மாடிக்கு வந்தவர்கள் கதவை தட்டி உள்ளே போக அங்கே வேலனோ டிவியை பார்த்துக் கொண்டு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.
இருவரையும் பார்த்தவன் வாங்க தம்பி எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியலை?மாத்தி மாத்தி எப்படி ஆயிருக்கு பாருங்கள் என்கவும் தனது காதை குடைந்த மாறன்,கடுப்பா வருது எனக்கு,சப்புனு அறைஞ்சிடுவேன் வயச கூட பாக்காம..இந்த ஆளை நீ கவனி டா என்றான்.
இப்ப எப்படி இருக்கீங்க வேலன் என்கவும் நம்ம வயசு என்ன? அனுபவத்தில் கூட இவன் பாதி கிடையாது?பேர் சொல்லி கூப்பிடுறானே என்று நிலவனை பார்த்து மனதிற்குள் திட்டிய வேலன் பரவால்ல தம்பி...
அப்படியா,எந்திரிச்சு நடக்கலாம் முடியுதா என்றான்.ஓ அதெல்லாம் நடக்க முடியுது பாருங்க.ஆனா எதுக்கு தான் டாக்டர் இங்கே இருக்க சொல்லிருக்கிறார் என்று தெரியவில்லை என்று பெட்டில் இருந்து கீழே இறங்கி நடந்து காட்ட,ஓகே அப்போ வாங்க போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றான்.
என்ன தம்பி சொல்றீங்க என்று அதிர்ந்து போய் வேலன் கேட்க,போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வாங்கன்னு சொன்னேன்.நீங்களே நடந்து வரிங்களா இல்ல உங்களை ஸ்ட்ரக்சர்ல வச்சி தூக்கிட்டு போகணுமா எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க என்று பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நிலவன் சொல்ல..
கண்டிப்பா அவன் சொன்னதை செய்வான் என்பது புரிந்து என்னுடைய வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.
நீங்கள் யார் கிட்ட வேணா பேசுங்க அது தேவையில்லாத விஷயம். இப்போதைக்கு எங்களோட வாருங்கள் என்று அவரை அழைத்துக்கொண்டு காரில் ஏறியவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றார்கள்
கவியால் இப்பொழுது நடக்க முடியாது என்பதால் அவள் குணமாகி வந்த பிறகு அவளை கஸ்டடியில் வைக்கலாமென்று வேதநந்தன் இருவரிடமும் சொல்லிவிட்டார்.
இரண்டு சேரில் அப்பனும் மகனும் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொண்டு நிலவனும் மாறனும் அவர்களுக்கு எதிரில் இருந்த சேரில் வந்து உட்கார்ந்தவர்கள் அப்புறம் ரெண்டு பேரும் எந்த சென்டர்ல டிராமாவுக்கு கத்துக்கிட்டீங்க?.
நல்லா நடிக்கிறீங்களே,சொன்னா எங்களுக்கும் அது பயன்படுமே என்று மாறன் கேட்க,நிலவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
தனது மகன் அங்கு நன்றாக உட்கார்ந்திருப்பதை பார்த்த வேலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இப்போதைக்கு இங்க இருந்து வெளியே போகணும் என்று நினைத்தவன்,தம்பி எதுக்குப்பா எங்களை இப்படி கூப்பிட்டு வந்திருக்கிற என்றார்..
சொல்றேன்...அப்புறம் அப்பாவும் பிள்ளையும் பாசத்தை புழிஞ்சிட்டீங்களா? உடம்பு எப்படினு நல்லா விசாரிச்சிட்டீங்களா என்க...ஆமா தம்பி கடவுள் புண்ணியத்துல என் பையன் குணமாகிட்டான் என்கவும்...அப்படியா கடவுள் புண்ணியத்துலயா ஆமா ஆமா என்று மாறன் சொல்ல,ஏண்டா இப்படி...என்னால சிரிப்ப அடக்க முடியல டா மாறா...
"நேரடியாக விஷயத்துக்கு வாடா" இந்த ரெண்டு காமெடி பீஸை பாத்து கடுப்பா வருது என்று நிலவன் சொல்லவும்...
சரி வேலன் ஆர்த்தியை எப்படி கொலை பண்ணுனீங்க என்க...என்னா என்று அதிர்ந்து போன சதாசிவமோ அப்போ அன்னைக்கு கத்தியால குத்தினது ஆர்த்தியை தானாப்பா என்று வாயை விட்டான்.
மகன் சொன்னதைக் கேட்டவர் அடே என்று திரும்பி சதாசிவத்தை அறைய போக வெல்டன் மிஸ்டர் வேலன் வெல்டன்.இத்தனை வயசு ஆன பிறகும் பையனை அடிக்க கைய ஓங்குறீங்களே என்ன ஒரு கண்டிப்பான அப்பா சூப்பர் சூப்பர் என்று கையை தட்டினான்.
தம்பி எங்களை கிண்டல் பண்ணியது போதும் எதுக்கு எங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க அதற்கான முதல்ல காரணத்தை சொல்லுங்க என்றான்.
நல்ல கேள்வி ஆனா உங்களோட கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்று தனது நெற்றியில் தட்டிய மாறன் சந்திரிகாவை கொலை பண்றதுக்கு ஆட்களையே அனுப்புனீங்களே அந்த கேஸ்லயா?.
இல்ல பணத்துக்கு ஆசைப்பட்டு ஆர்த்தியை கொலை பண்ணுனீங்களே அதை சொல்றதா, இல்லை வெரோனிகாவை கடத்தி பாதாள அறையில் அடைத்து வைத்திருக்கிங்களே அந்த கேஸ் சொல்றதா இல்லை சொத்துக்காக உங்க மாமனாரை கொலை பண்ணிங்களே அதுக்காக சொல்வதா இதில் எந்த கேஸ்ல உங்களை அரெஸ்ட் பண்ணியதை சொல்வது என்கவும், அதையெல்லாம் கேட்ட வேலனோ ஆடிப் போய் உக்காந்து விட்டான்.
இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று திருதிருவென்று வேலன் முழிக்க உங்க சாயமெல்லாம் வெளுத்துப் போய் ரொம்ப நேரம் ஆகுது.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்ஸ்பெக்டர் பன்னீர கூட நீங்க தானே ஆளு வச்சி கொன்னீங்க என்கவும்,அப்பா இவங்க சொல்றதெல்லாம் என்ன என்று சதாசிவம் பதற மிஸ்டர் சதாசிவம் எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்றீங்க?.உங்களுக்கு இது செட் ஆகலையே..!
உண்மையிலேயே நீங்க ஆர்த்திக்காக வருத்தப்படுறீங்களா என்கவும் ஆமாம் சார் நான் பெத்த பொண்ணு போல தான் வளர்த்தேன்.ஆர்த்தி ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு தான் எங்க அப்பா சொன்னாங்க .
ஆனா அவளை கத்தியால குத்தினதை என் கண்ணால பார்த்தேன் என் அப்பாவும் கவியும் அங்கு இருந்தாங்க. குத்துவதை நான் தூரத்தில் இருந்து பார்த்ததால அது என் பொண்ணு ஆர்த்தினு எனக்கு தெரியாது என்கவும் தெரியாமலே எப்படி அது ஆர்த்தி நீங்க சொல்றீங்க என்றான்.
உண்மையிலேயே அது ஆர்த்தி என்று முகத்தை பார்க்கல… நான் தூரத்தில் இருந்து பார்த்தேன்.எங்க எஸ்டேட்டுக்கு வர வழியில் தான் இந்த சம்பவம் நடந்தது.
அதற்கு மறுநாள் தான் ஆர்த்தி கார்ல போயிட்டு இருக்கும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க ஏன்னா ஆர்த்தி என்கிட்ட அவளுடைய பிரண்டோட கல்யாணத்துக்காக கோயம்புத்தூர் போறதாவே சொன்னாள்.
அப்பா...நீங்க தான் கெட்டவர்னா எதற்கு என் பொண்ணையும் இப்படி கெடுத்து வச்சிருக்கீங்க ஏன்ப்பா இப்படி பண்ணுனீங்க என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் வேலனிடம் கேட்க வாய மூடுடா நான் பண்ணுனேன்னு நீ பார்த்தியா?.
இவனுங்க ரெண்டு பேரும்தான் புரியாம பேசுறாங்க நீயும் என்னை கேள்வி கேட்குறியா என்கவும் மிஸ்டர் வேலன் இன்னொரு வார்த்தை எங்களை பார்த்து அவன் இவன் பேசுனிங்க நல்லா இருக்காது ஒரு அதிகாரி கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா என்று நிலவன் அங்கிருந்த டேபிளை தட்ட அதில் அப்பனும் மகனும் அரண்டு போனானுங்கள்.
அப்புறம் ஒரு விஷயம் வேலன் உங்க பேத்தி கவி இருக்காங்களே நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நீங்களும் சொல்லிட்டீங்கன்னா சுலமபாகிடும் என்க...
என்னாஆஆஆ கவி எல்லாத்தையும் சொல்லிட்டாளா முட்டாள் முட்டாள் அவளுக்காக தானே இவ்வளவும் பண்ணுனேன் அவ எப்படி என்னை மாட்டி விடலாம் என்று கத்தினார்...
கூல் கூல்..என்ன நடந்துச்சுனு உங்க பக்க கதையை சொல்லுங்க முடிந்தால் உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று மாறன் சொல்ல,இதற்கு அப்புறம் மறைக்கிறதுக்கு என்ன இருக்கு என்று நினைத்தவன் என்னை ஏமாற்றிவிட்டு இனி நீ எப்படி ஊருக்குள்ள இருக்குற நானும் பாக்குறேன் என்று சொந்த பேத்தி என்று நினைக்காமல் கவியின் மேல் சினத்தை கொண்டு நடந்ததை வேலனும் சொல்ல தொடங்கினான்.
அதாவது கவி என் பையனுக்கு ஒரே பொண்ணு தான்.பணம் கொஞ்சம் அதிகமா இருந்தால அவளோட பழக்க வழக்கங்கள் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே சரியில்லை.
இது என் பையனுக்கு தெரியாம நான் தான் பாத்துக்கிட்டேன்.ஏன்னா எனக்கு இருக்கிற ஒரே வாரிசு அவ என்ன போலையே வளருவது ஒரு விதத்தில் பெருமையாகவும் எனக்கு இருந்துச்சு.
எங்க அவளோட குணம் தெரிஞ்சு என் பையன் என்கிட்ட இருந்து அவளை பிரித்துவிடுவான் என்று அவளை வெளி ஊர்ல தங்கி படிக்க வச்சேன் அங்க போய் இன்னும் அவள் சகவாசாம் கெட்டுப் போயிடுச்சு.