• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jan 20, 2025
Messages
4
வருணமேகமே

varunamegame.jpg


இருள் சூழ்ந்த இரவு….. ஊரே அடங்கி அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அந்த அமைதியைத் தகர்த்தெறிந்து புலம்பலால் நிறைந்திருந்தது.

“மச்சா அவள் என் அஞ்சலடா! என்னை விட்டுப் போயிட்டா….. நான் வேண்டாமா அவளுக்கு?” என்று வலி நிறைந்த குரலில் கையில் நுரை பொங்கும் பீருடன் அவன் சொல்ல,

அதைக்கேட்டு, அவனின் நண்பன் அசோக் சலிப்புடன், “டேய் உனக்கு இது அநியாயமா தெரியலையா. உன்னோடுதே ஒரு பக்க காதல்… இதுல தோல்வி வேற, வலிக்கும் தான் அதுக்காக மூன்று மணி நேரமா இதே தான் சொல்லிட்டு இருக்க, பேசாமல் வா மண்டபம் பக்கத்தில் தானே இருக்கு கடத்திட்டு வந்திடலாமே” என

அதற்குள், முரளி அவனின் மற்றொரு நண்பன் “ஆமா கடத்தல் ஒன்று தான் குறை. நீ அஞ்சல அஞ்சல சொல்லித் தான் உன் காதல் கை கூடவில்லை போல” என்று மொக்கை காரணம் கொண்டு நண்பனைச் சமாளிக்க,

நேரம் செல்ல செல்ல அவனின் புலம்பல் தான் அதிகம் ஆனது. அதைக் கடுப்புடன் கேட்ட முரளி பக்கத்திலிருந்த முழு பொத்தலையும் வாயில் சரித்துக் கொண்டு “போதும் டா கடுப்பா இருக்கு, கிளம்பலாமா” என்று எழுந்துவிட்டான்.

அசோக் “இவன் கூட நான் கிளம்பறேன் டா. உனக்குப் பக்கத்தில் தானே வீடு, நீ பார்த்து போய்டுவ தானே. இவனைத் தனியா அனுப்ப முடியாது போல டா” என அவனும் “எனக்குத் தெரியும் கிளம்பு” என்று கடுப்புடன் சொல்லவும், இருவரும் கிளம்பினர். போகும் அவர்களையே இவன் வெறித்துக் கொண்டு இருந்தான்.


எட்டு வருடங்களுக்கு பின்,


தென்காசி மாவட்டத்தின் அழகிய நகரமான சுரண்டையில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற அகத்தீஸ்வர் குகை கோவில். இக்கோவில் தென்னகத்தின் காசி என்று போற்றப்படுகிறது.

சூரியன் இன்னும் தனது பொன்னிழைகள் பூமியை வருடாமல் இருந்த நேரம். கோவிலின் வளாகம் அமைதியாக இருந்தது. பூசாரியைத் தவிர, வெகு சிலரே அங்கிருந்தனர், அதில் நம் நாயகியும் ஒருத்தி. அவள் தான் வருணிகா.

அவளின் பெயரில் மட்டும் வண்ணம் இருந்தது. ஆனால், அவளின் வாழ்க்கை ஊடுருவிப் பார்ப்பவர்களுக்கு அது கருமை நிறைந்ததாகவே தோன்றும், சோகமே அவளின் நிழலாகத் தொடர்ந்து இருந்தது.

அவளை வழக்கம்போல கோவிலில் பார்த்த வயதான பெண்மணி, அருகிலிருந்தவரிடம், “இந்த பொண்ணுக்கு எப்பதான் விடிவு வருமோ தெரியலை! இவ்வளவு வருஷமா, நாளும் தவறாமல் கோவிலுக்கு வருகிற அவள் வேண்டுதல் தான் பலிக்க காணோம்”

அதற்கு அருகிலிருந்தவர் ஆழ்ந்த கவலையோடு, “அது வாங்கி வந்த வரம் கனகா… நம்ம கவலைப்பட்டு என்ன பண்றதும், அவள் வீட்டில் இருக்கிறவங்களுக்கு இவ நல்ல மனசு புரியலை. இந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணிருக்காதுனு புரியலை ” என்று பேசிக்கொண்டே சென்றனர்.


வருணிகா எதிரே இருக்கும் ஈஸ்வரனிடம் “எட்டு வருசமா போராடிட்டு இருக்கேன் இன்னும் போராடலாம் தான். ஆனால் என் மனசிலும் தைரியம் இல்ல உடம்பிலும் தெம்பு இல்ல. இப்ப நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். எட்டு வருஷம் முன்ன எந்த தப்பை நான் பண்ணதா சொல்லி இத்தனை வருடம் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கேனா அந்த தப்பையே பண்ண போறேன். சந்தோசம் தான் என் வாழ்க்கையில் இல்ல, இனி நிம்மதியாவது கொடு. நீ இருக்கிற நம்பிக்கையில் தான் இந்த பெரிய முடிவை எடுத்து வைக்கிறேன். உன்னை இதுக்கு அப்பறமா எப்ப பார்ப்பேன்னு தெரியலை. ஆனால் கண்டிப்பா மறக்க எல்லாம் மாட்டேன். அடுத்த முறை உன்னை பார்க்கும் போது நான் இழந்தது எல்லாம் என் கிட்ட இருக்கணும்” என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு இருந்தாள்.

வருணிகா பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இருபத்தி எட்டு வயதாகும் இளம் மங்கை. தாய் காமாட்சி, தந்தை சுந்தரம் மற்றும் தங்கை வானதி என்ற வளமான குடும்பம் தான், சந்தோஷமான வாழ்க்கை தான். ஆனால் எல்லாமே எட்டு வருடம் முன்பு வரை. இப்பொழுது ஏன் வாழ்கிறோம் என்ற நிலையில் தான் இருக்கிறாள்.

வீட்டுக்கு வந்தவளை வரவேற்ற அவளின் தாய் “வேலைக்குக் கிளம்பர நேரத்தில் எங்க போயிட்டு வர?” என்று கடுமையாகக் கேட்க,

“கோவிலுக்கு தான்மா” என்று மெலிதான குரலில் சொல்ல, “என்னத்த கோவிலோ! கிளம்பு. உன்னால எங்களுக்கு நடக்கிற ஒரே நல்லது நீ வாங்கற சம்பளம் மட்டும் தான்” என்று சலிப்பாகச் சொல்லி விட்டுச் செல்ல,

செல்லும் அவரையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒருகாலத்தில் அளவில்லா அன்பை வாரி வழங்கியவள், இப்போது கோபத்திலும், வெறுப்பிலும் மட்டும் பேசியிருப்பதை நினைத்து வருணிகா ஏக்கத்துடன் நின்றாள். தந்தையோ பேசுவது கூட இல்லை. அன்பைப் பொழிந்த தங்கை, இப்பொழுது எல்லாம் நக்கலாகப் பார்ப்பது போல் தோன்றுகிறது.

இரவு ஊரே அமைதியில் மூழ்கியபோது, வருணிகா மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்தாள். அவளது கையில் ஒரே ஒரு ட்ராவல் பை! பிறந்து வளர்ந்து, உயிரோடு கலந்த வீட்டை விட்டுப் போகத் தயாரானாள். எல்லா பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டு உறவுகளைத் தியாகம் செய்ய வேண்டிய தருணம் வரும். ஆனால், இவள் செய்யப்போகும் தியாகம் வேறு விதமானது.

வெளியே வந்தவள் அவளுக்காகக் காத்திருந்த இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிட்டாள். எண்ணங்களோ எங்கையோ செல்ல, முன்னே இருந்த நபர் பேசுவது கூட காதில் விழவில்லை.

“ஹே நான் பேசறது கேக்குதா” என்ற பின் தான் அவள் “ஹான்… என்ன கேட்ட” என்று திரும்பக் கேட்க,

“சரியா போச்சு. நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்கோ. உன்னைப் பற்றி என் தோழியிடம் சொல்லிருக்கேன். அவளுக்கே இன்னும் பத்து நாளில் கல்யாணம் இருக்கு. அதுக்கு கண்டிப்பா நான் வருவேன். அப்ப மற்றதை எல்லாம் பார்த்துக்கலாம். நான் வர வரைக்கும் அவ உனக்கு சப்போர்ட் பண்ணுவா” என

“ரொம்ப தேங்க்ஸ் ரோகினி நீ இல்லாம இருந்தா, நான் இந்த முடிவைத் தைரியமா எடுத்து இருக்க முடியுமோ தெரியல” என்று கண் கலங்கச் சொல்ல,

“இதில் என்ன இருக்கு, உனக்காக இது கூட பண்ண மாட்டேனா?” என்று அவளைச் சென்னை செல்லும் பேருந்தில் அமர்த்தி விட்டுப் பல அறிவுரைகள் கூறிய பின்னரே சென்றாள். இதோ வருணிகா வாழ்வின் புதிய தொடக்கம் தொடங்கி விட்டது. இந்த இரவோடு கருமை நிறைந்த அவளின் வாழ்வில் ஒளி தோன்றப் போகிறது.

ஒரு வாரம் கழித்து,

திவ்யா “வரு உனக்கு ஜாப் எல்லாம் ஓகே தானே? செட் ஆகிடுச்சா?” என்று கேட்டாள், ரோகிணியின் தோழி. முதலில் வருணிகாவை தன்னுடன் வைத்துக்கொள்ளத் தான் நினைத்தாள், ஆனால் கல்யாண வீட்டில் நிலைமை அமளி துமிலியாக இருக்க, நல்ல பாதுகாப்பான இடத்தில் தான் வீட்டை வாடகை எடுத்துக்கொடுத்திருக்கிறாள்.

வருணிகா “ரொம்ப நல்லா இருக்கு, நான் கூட முதலில் ரொம்ப பயந்தேன் இப்ப பயமே இல்லை. என்ன இன்னும் என் டீம் ஹெட்டை தான் சந்திக்கலை. இந்த வாரம் முழுக்க பெங்களூரு பிரென்சில் வேலை போல. நாளைக்கு வருவதாக சொல்லியிருக்காங்க. பார்க்கலாம்” என

"ஓகே ஓகே! நீ இன்னும் என்னோட வருங்காலத்தைப் பார்க்கவே இல்லையே! நாளைக்குக் கண்டிப்பா உனக்கு அறிமுகம் பண்ணிடறேன்” எனக் கூறியதோடு, முகத்தில் ஒரு அழகான சிரிப்பு பரவியது திவ்யாவிற்கு.

“லவ் மேரேஜ் தானே. ரோகினி சொன்னாள், அவ இன்னும் இரண்டு நாளில் கிளம்பி வருகிறாளாம்” என்று இருவரும் பேசிக்கொண்டே அந்த நாளை கழித்தனர்.
 
Last edited:
New member
Joined
Jan 20, 2025
Messages
4
மறுநாள் காலை ‘லேட் ஆகிடுச்சே சீக்கிரமா கிளம்பனும்’ என்று அறக்கப்பறக்க வருணிகா கிளம்பிக்கொண்டு இருக்க, சரியாக அந்த நேரத்தில் திவ்யா போன் செய்தாள்.

“ஹே நானும் என் ஆளும் வெளிய போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம். நீயும் வாரியா?” என, அவளோ “இல்ல, திவி! நீங்க போயிட்டு வாங்க. நானே பஸ் பிடிக்கணும்னு டென்ஷனில் இருக்கேன். கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு” என்று பரபரப்பாகச் சொல்ல,

திவ்யா “நீ ரெடியா இரு. நான் அந்த பக்கம் தான் வரேன் உன்னை ஆபீஸில் ட்ரோப் பண்ணிடறேன்” என்று அவளின் பதில் மொழியைக் கூட கேட்காமல் வைத்துவிட்டாள். அதில் மென்புன்னகை புரிந்து ‘ரோஹி உன் தோழி கூட உன்னை மாதிரி தானா’ என்று கீழே தயாராகிச் செல்ல,

சரியாகக் கருப்பு நிற ஆடி கார் அவள் முன் வந்து நின்றது. கதவைத் திறந்து கொண்டு திவ்யா இறங்க, வருணிகாவின் மனம் சொல்லமுடியாத அளவிற்கு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. முகமோ ஒரே நிமிடத்தில் வியர்வையில் நனைந்து போயிருந்தது. ஏன் என்றே புரியாமல் தன்னை நோக்கி வரும் திவ்யாவைக் கண்டு கடினமாக முயன்று புன்னகைத்தாள்.

யாரோ தன்னை விழியால் ஊடுருவது போல் இருக்க, சுற்றிப் பார்த்தாள், அவளுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. திவ்யா “நேரம் ஆகுதுன்னு சொல்லிட்டு என்னடி வேடிக்கை பார்த்துட்டு இருக்க?, வா கிளம்பலாம்” என்று அவளின் கையை இழுத்துக் கொண்டு சென்று காரின் பின்னால் அவள் அமர்த்திய பின்பு தான் ஓய்ந்தாள்.

வழியும் வேர்வையைத் துடைத்துக் கொண்டு சற்று நிமிர்ந்து பார்த்தவள், அடுத்த நொடியே கண்கள் அதிர்வில் பல மடங்கு விரிந்து கொண்டது. அவளது அதிர்ச்சி அடங்குவதற்குள், திவ்யா எதையோ மகிழ்ச்சியாகக் கூறிக்கொண்டிருந்தாலும், அவள் காதில் ஒன்றும் விழவில்லை.

“இதோ இவ தான் வருணிகா, நான் சொன்னேன்ல” அவ்வாறு சொல்லியவுடன், அவளிடம் திரும்பி, “இவர்தான் மேகமாறன்!" எனக் கூறினாள். திவ்யாவின் குரல் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், வருணிகாவின் மனம் “எப்ப தான் ஆபீஸ் வருமோ?" என்ற எண்ணத்திலேயே மிதந்துக் கொண்டிருந்தது.

அதை விட பெரும் சலனமாக இருந்தது, எதிரே இருந்தவனின் ஆளைக் கொள்ளும் பார்வை! அது, அவளை உள்ளிருந்து நெளிய வைத்தது. அடுத்த பத்து நிமிடத்தில் அவள் நினைத்ததை போல் ஆபீஸ் வந்திருக்க, இருவரிடமும் ‘நேரம் ஆகிடுச்சு’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.

ஓடும் இவளையே பார்த்துக் கொண்டு இருந்த இருவரில் திவ்யா தான் “ரொம்ப நல்ல பொண்ணு மாம்ஸ். பார்த்து கொஞ்ச நாளிலே எனக்கு செம கிளோஸ் ஆகிட்டா” என்றவள் மேலே சொல்ல நினைத்ததை மறைத்து கொண்டு, “சரி எங்க போகணும்?” என்று இவர்களின் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

‘இவரை தான் திவி கல்யாணம் பண்ணிக்க போகிறாளோ?’ என்று நினைத்துக் கொண்டே அன்றைய வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள். சில மணி நேரம் பின்பு உடன் வேலை புரியும் ஜோசேப் “வருணிகா ஹெட் உங்களை பார்க்கணும்னு சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, “ஓ… வந்துடாங்களா” என்று உள்ளே சென்றவள் அன்றில் மட்டும் இரண்டாவது முறையாக அதிர்ந்தாள் விழித்தாள்.

“வாங்க மிஸஸ்…. வருணிகா” என்று அழுத்தம் நிறைந்த குரலில் அவளை வரவேற்க, என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தவள், பின் தன் நிலையை உணர்ந்து “வணக்கம் சார்” என்றாள். ‘இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்று அவன் முணுமுணுப்பது இவளுக்கு நன்றாகக் கேட்டது.

"வெல்… ஐ அம் மேகமாறன். உங்க ப்ராஜெக்ட் ஹெட். வேலை விஷயத்தில் எதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்கலாம்"என்று தான் பேச வேண்டியது அவ்வளவு தான் என்பது போல் அமைதி ஆகிவிட,

“ஓகே சார்…” என்று அவளும் வெளியேறிவிட்டாள். வெளியேறும் அவளைத் தான் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளது பயோடேட்டா ஏற்கனவே அவனது பார்வைக்கு வந்துவிட்டது. இன்னும் கல்யாணமாகாததைக் கண்டவுடன், மனதுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. ஆனால் இவன் அனுபவித்த வலி,

பத்து வருடம் முன்பு, அசோக் “டேய் மாறா இந்த வருஷமாவது கமிட் ஆகிடுடா” என்ற நண்பனிடம் இல்லை என்று தலையை ஆட்டிக்கொண்டே “இந்த மாறன் மனசும் சரி, உடம்பும் சரி, ஒரே ஒருத்திக்குத்தான். கல்யாணம் பண்ணிட்டு என் பொண்டாட்டியை காதலிக்கிறேன்” என்றவனுக்குத் தெரியவில்லை அவனை மயக்கும் மாய மோகினியை அன்றே சந்திக்க இருப்பதை.

தென்காசியில் இருக்கும் பிரபலமான பொறியியல் கல்லூரி, “அப்பா இப்பவே சொல்லிட்டேன் நானும் இங்க தான் படிப்பேன். அக்காவை மட்டும் இவ்வளவு பெரிய காலேஜ் சேர்த்துட்டு என்னைக் குட்டியா எதாவது காலேஜில் சேர்த்த அவ்வளவு தான்” என்று பள்ளிப் படிப்பையே முடிக்காத வானதி தன் தந்தையிடம் சண்டையிட்டு கொண்டிருக்க,

அவர்கள் அருகே சம்மந்தமே இல்லாத அமைதியுடன், சுற்றி இருக்கும் அழகை ரசித்துக் கொண்டே வந்தாள், பதினெட்டே வயதை நெருக்கும் வருணிகா. கண்ணில் சாதிக்க வேண்டிய கனவுகளுடன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த வருணிகாவை, அந்த தூரத்திலிருந்து பார்த்தவனை அறியாமல், மேகமாறன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டான்.

அவன் அருகிலிருந்த முரளி, நண்பனின் பார்வை எந்த திசையில் செல்கிறது என்று திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பெண்.
அதைக் கண்டு இன்னும் அதிகமாக அதிர்ந்த முரளி, “டேய்! இப்பதானே நல்லவன் மாதிரி பேசின? அதுக்குள்ள என்ன வேலைடா பார்த்துட்டு இருக்க?" என


அவனோ “முடிவு பண்ணிட்டேன் டா. இந்த மாறனை மொத்தமாக ஆளப் போற ராணி அவ தான்” என்று பார்த்ததும் காதலில் விழுந்தான். ஆனால் அவனால் அவளின் காதல் என்ன, அவளின் ஒரு பார்வையைக் கூட இவன் பக்கம் திருப்ப முடியவில்லை.

இரண்டு வருடம் வேகமாகச் சென்றது தான் மிச்சம். எதோ இந்த வருடத்துடன் மாறனின் கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது ஆனால் இன்னும் அவன் காதல் கைகூடவில்லை.

ஒரு நாள் அவள் தனியாகச் செல்லும் நேரத்தில் வழிமறித்து நின்றவன் “உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…. என் கூட வாழ்க்கை முழுக்க என்னோட மனைவியாக வர முடியுமா?” என்று எடுத்ததும் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல,

“ஐயோ..” என்று பதறியவள் பின் “எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். இப்படி தப்பு தப்பா எல்லாம் இனி என் கிட்ட பேசாதீங்க” என்று கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு சென்று விட்டாள். அன்று தான் அவன் இவளைக் கடைசியாகப் பார்த்தது, அதன் பின் இப்பொழுது தான் பார்க்கிறான். பார்த்ததும் தெரிந்து கொண்டான் எதோ அவள் வாழ்வில் நடந்து இருக்கிறது என்று. ஆனால் அவனால் தான், என்ன செய்ய முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறான்.

சரியாய் இரண்டு நாள் கழித்து மாலை நேரத்தில் ரோகினி போன் செய்தாள். “சொல்லு ரோஹி” என்றதும் “நான் இன்றைக்கு நைட் கிளம்பறேன், அப்பறமா சொல்ல மறந்துட்டேன் பாரு, உன் தங்கச்சி திரும்ப முழுகாமல் இருக்க போல, நீ போனதோ, இல்லை உன் அப்சென்ஸோ, அவங்களுக்கு முக்கியமே இல்லை போல!" என்று அவள் சொல்லிவிட்டு வைத்துவிட, இவளின் என்னமோ எட்டு வருடம் முன் நடந்த நிகழ்விலே சூழன்றுக்கொண்டு இருந்தது.

விடிந்தால் திருமணம், பெரிதாக ஆசை எதுவும் இல்லை, படிக்கவேண்டு என்பதைத் தவிர, தாய் தந்தை சொன்னதற்காக அவளும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து இருந்தாள்.

அதிகாலையே எழுந்தவள் அவசரமாகக் கழிவறை செல்ல வேண்டுமே என்று பார்க்க, யாரோ உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கவே, அந்த தளத்தில் ஓரமாக இருந்த கழிவறையைத் தேடிச் சென்றாள். அவளது கெட்ட நேரம் யாரும் அவளைப் பார்க்கவில்லை. வெளியே வரக் கதவைத் திறக்க நினைக்க கதவோ அழுத்தமாக மூடிக்கொண்டு, திறக்கமுடிவவில்லை.

எல்லாம் முடிந்தது, மணப்பெண் காணோம் என்பது மாறி ஓடிப்போய்விட்டாள், என்று திரிந்து கடைசியாக அவளின் தங்கையை மணப்பெண்ணாக அமர்த்திவிட்டனர். கதவைத் தட்டி தட்டி இவள் கைகள் ஓய்ந்தது தான் மிச்சம். வேலையாள் கதவைத் திறந்ததும் ஓடிச் சென்று நடந்ததைக் கூறியும் யாரும் நம்பவில்லை. அதன்பின் சொந்தவீட்டுனரே அந்நியராகி போகினர்.


அவளின் எண்ணத்தைக் கலைத்தது எதிரே வந்த பேருந்தின் ஓசை தான். அவள் தோழி ரோகிணியை அழைத்துச் செல்லவே பேருந்துநிலையம் வந்திருந்தாள்.

வந்ததும் அவளை அணைத்துக்கொள்ள, “என்னடி என்ன ஆச்சு” என, சற்று தயங்கிக் கொண்டே “மாறனைப் பார்த்தேன் டி” என்றதும் அவளோ “உண்மையாவா?? கடவுள் உன் பக்கம் தான் இருக்காருடி. அவர் கிட்ட பேசனியா” என்றதும் கலங்கிய கண்களுடன்,

“என்னடி பேச சொல்ற, நீங்க என்கிட்ட காதல் சொல்லும் போது எனக்குக் காதல் வரலை, என் கல்யாணம் நின்னு நான் தனிமரமா ஆனா பின்ன தான் இந்த பாழாய்ப்போன மனசு உங்களை தேடுத்துனா. வேண்டாம்டி எதுவும் வேண்டாம் அதுவும் இல்லாமல் இப்ப அவர் வாழ்க்கையில் வேற பெண்” என்று நிறுத்து “உன் தோழி திவ்யாவைக் கல்யாணம் செய்துக்க போகிறது அவர் தான் போல, எனக்கு எதுவும் வேண்டாம் அவர் சந்தோசமா இருந்தால் போதும்” என்று அவளைத் தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

மாறனின் இல்லம், திவ்யா “இப்போ என் ஃபிரண்ட் வரு இங்கே வருகிறதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று அவள் முன்னே இருக்கும் அஷோக் மற்றும் முரளியை முறைத்துக்கொண்டு கேட்க,

முரளி “அதை எல்லாம் சொல்ல முடியாது அவங்க இங்க வரக் கூடாது” என்று இவளிடம் வாதாடிக்கொண்டு இருக்க, மாறனோ அமைதியாகத் தான் இருந்தான். நண்பர்கள் அவனுக்காகத் தான் பேசுவது தெரியும் இருந்தும் அவன் மனம் மட்டும் அவளின் வரவை எதிர்நோக்கியது என்பது தான் உண்மை.

“அவளே பாவம்… இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக அவள் துன்பத்திலிருந்து வெளியே வருகிறாள்" என்றவுடன், அசோக் “என்ன கஷ்டம்” என்றதும் அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்லி விட்டாள்.

இதை எல்லாம் கேட்டு முரளி சங்கடமாக “நீ உண்மையைத் தான் சொல்றியா” என அவளும் ஆம் என்று தலையை ஆட்ட, “ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்டா” என்றான்.

‘இவன் என்ன சொல்றன்’ என்று எல்லாரும் அவனைப் பார்க்க, “அன்றைக்கு நீ புலம்பிட்டே இருந்தியா அந்த கோவத்தில் நான் தான் ஒரு லெட்டர் எழுதி மண்டபம் உள்ளே கொடுக்கச் சொன்னேன்” என, மாறன் அவனை அறைத்து விட்டு “என்ன எழுதி இருந்த” என்று கோவமாகக் கேட்க,

தலையைக் குனிந்து கொண்டே “ ‘சீக்கிரமா வெளியே ஓடிவந்திடு உனக்காக நான் வெளியே இருக்கேன்’ சாரி மச்சான் நீ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியாமல் இப்படி பண்ணிட்டேன். ஆனால் காலையில் போதை தெளிஞ்சு செய்த தப்பு புரிஞ்சு அந்த மண்டபம் கிட்ட வந்தேன் டா. உள்ளே போகலை ஆனால் கல்யாணம் நல்லபடியா நடந்துடுச்சு என்று தெரிஞ்ச பின் தான் கிளம்பினேன். ஆனால் இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாதே” என

திவ்யா “மாம்ஸ் இவன் என்ன சொல்றான்” என்று புரியாமல் கேட்க, மாறனோ “இப்ப நேரம் இல்லை தீவி… எனக்கு உடனே உன் பிரெண்டை பார்க்கணும்” என்றதும் அவனை மட்டுமல்ல அங்கே இருந்த எல்லாரையும் அழைத்துக்கொண்டு வருணிகா தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

கூட்டத்தைப் பார்த்து வருணிகா அதிர்ந்து நிற்க, நேரே அவளை நோக்கிச் சென்றவன் “எனக்கு உண்மையாவே என்ன நடந்ததுன்னு தெரியாது. இந்த முறை தப்பு பண்ண மாட்டேன். உனக்கு என் மேல காதல் இல்லனா கூட பரவாயில்லை, என் காதலே போதும் நம்ம இரண்டு பேரும் சந்தோசமா வாழ்கிறதுக்கு, எனக்கு வாழ்க்கை கொடு, காலம் முழுக்க உன்னைச் சந்தோசமா பார்த்துப்பேன்” என

இவளோ அதிர்ந்து திவ்யாவைப் பார்க்க, அவளின் அருகிலிருந்து “அண்ணி சீக்கிரமா ஓகே சொல்லுங்க, எங்க கல்யாணம் நடக்கிற அன்றைக்கே உங்க கல்யாணத்தையும் வைத்துக்கலாம்” என்றான் ஜெகன், மேகமாறனின் தம்பி, திவ்யாவின் காதலன்.

திவ்யா “இவன் தான்டி என் லவர் ஜெகன், அன்றைக்கு சாருக்கு முக்கியமான வேலையைனு என்னைப் பாதியில் விட்டுட்டு போயிட்டான்” என்றாள்.

தன் முன்னே பதிலுக்காக முகத்தையே பார்பவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆழ்ந்த மூச்சி விடுத்தவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவனும் சந்தோசமாக அணைத்துக்கொண்டான்.

அசோக் “அப்பாடா ஒரு வழியா நீ கமிட் ஆகிட்ட, எங்க இவங்க நியாபகமா கல்யாணமே பண்ணிக்க மாட்டியோன்னு பயந்தோம்” என, மாறன் முறைக்க மற்றவர்கள் சிரித்தனர்.

இந்த சிரிப்பின் சத்தம் என்றும் அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கட்டும்….

முற்றும்
நிலானி
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இந்த நண்பர்களால பல கெட்டது நடந்தாலும், சில நல்லதும் நடக்கத்தான் செய்யுது. வருணமேகமே மனதை நனைத்தது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நிலானி. 💐 💐 💐
 
New member
Joined
Jan 20, 2025
Messages
4
இந்த நண்பர்களால பல கெட்டது நடந்தாலும், சில நல்லதும் நடக்கத்தான் செய்யுது. வருணமேகமே மனதை நனைத்தது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நிலானி. 💐 💐 💐
தேங்க்ஸ் அக்கா 😍😍
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top