• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
531
வேகமாக வந்து கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி போடி.

போய் உருண்டு புரண்டு கும்புடு.

வேண்டும்ணா அவருக்கு துணையா பக்கத்திலே உட்கார்ந்துக்கடி என்றவன் தாமரை வண்டியில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வேகமாக சென்றான்.

போகும் தனது மாமனை பார்த்தவள் இவருக்கு என்ன பைத்தியம் எதாவது புடிச்சிட்டா?

கோயிலுக்கு கூப்பிட்டது ஒரு குத்தமா என்று முணுமுணுத்தவள் சரி சாமியை முதலில் கும்பிடுவோமென்று அந்த செம்மண் பாதையில் நடந்து போனவளுக்கு கடைசியாக இந்த கோயிலுக்கு வந்த நினைவுகள் வந்து சென்றது.

சில அடி தூரத்தில் கடந்து வரும் போதே அங்கே குதிரையின் மேல் கம்பீரமாக இருக்கும் அய்யனாரை பார்த்தவளுக்கு அழுகை பொங்கி வந்தது.

வேகமாக ஓடி வந்தவள் அய்யாஆஆஆ

என் வேண்டுதல் படி நிறைவேற்றுனீரோ என் உசுரு இருக்கும் வரை உன்னை மறக்கமாட்டேன்யா என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

எவ்வளவு நிமிடம் அவரை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லை.

அப்பொழுது யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டாலும் சாமியின் முகத்திலிருந்து அவள் தனது பார்வையை விலக்கவில்லை.

பூசாரியோடு வந்த கதிர் சித்தப்பா நீ பூசையை பண்ணு என்று அவர் கையில் பூசைக்கான பொருட்கள் உள்ள பையை நீட்டினான்...

சரிடா தம்பி என்றவாறு அதை வாங்கியவர் குதிரையின் மேல் கம்பீரமாய் இருக்கும் அய்யனாரை வணங்கிவிட்டு வாழை இலையை விரித்து அதில் பூசைக்கான பொருட்களை பரப்பியவர் தேங்காயை உடைத்து வைத்து சூடத்தை ஏற்றி அய்யனாருக்கு காட்டி விட்டு தம்பதிகளுக்கு காட்ட இருவரும் ஆரத்தி எடுத்துக் கொண்டனர்.

எங்கள் குலத்தை காக்கும் அப்பனே என் கனவை அடைஞ்சிட்டு வாழ்க்கையை தேடி மீண்டும் இங்கு வந்துருக்கேன். இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கின்றதோ தெரியாது.எல்லாத்தையும் நீயே பார்த்துக்கைய்யா.என் மாமா கூட யாரும் வாழாத வாழ்வை நான் வாழணும்...நீயே அதுக்கு துணையா இருய்யா என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.

எம்மா தாமரை விபூதி எடுத்துக்கத்தா என்று பூசாரி சொல்ல கண்ணை திறந்தவள் அவர் முன்பு வலது கையை நீட்ட குங்குமத்தையும் விபூதியை கையில் எடுத்து போட்டவர் தீர்க சுமங்கலியா வாழுத்தா என்று சொல்லி அவள் நெற்றியில் விபூதியை பூசினார்.

மீண்டும் ஒரு முறை மனதார சாமியை வணங்கியவள் திரும்பி கணவனை பார்க்க அவனோ யார்க்கு வந்த விதியோவென தூரத்தில் இருக்கும் ஏரியை பார்த்தபடி நின்றான்.

அதற்குள் கோயிலை பூட்டி வெளியே வந்த பூசாரி,நல்லா இருக்கியாத்தா தாமரை என்க...

நல்லா இருக்கேன் மாமா.நீங்கள்,வீட்டில் அத்தை புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா என்றாள். எல்லாரும் சுகம் தான் தா. இந்தா இதை போய் பெரியாத்தாகிட்ட குடு என்றவாறு கவரை நீட்ட சரிங்க மாமா என்றவளிடம் பார்த்து வீட்டுக்கு போங்க.

எலேய் கூப்டு போடா என்று கதிரிடம் சொல்ல சரி சித்தப்பா என்றவன் முன்னே செல்ல இவர்கள் இருவரும் அவன் பின்னே சென்றனர்.

சரிமா நான் கிளம்புறேனென்ற பூசாரி அவர் வண்டியில் ஏறி போக, கதிரும் அவனுடைய புல்லட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் அடுத்து எந்த கோயிலுக்கு போகணும் சொல்லுடியென்று கேட்டான்.

நான் என்ன கோயில் கோயிலா கூழா ஊத்துறேனென்று சொல்லியபடி ஏறி உட்கார்ந்தவள் இப்போ பாருடா என்றவாறு கதிரோடு நெருங்கி உட்கார்ந்து அவன் இடுப்பை பிடிக்க....

யாத்தே.....

ஏய் என்னடி பண்ற கையை எடுடி. மனுஷன் வண்டியை ஓட்டுறதா இல்லையா என்று பதறினான்.

ஏன் நான் என்ன பண்ணுனேன் என்று தாமரை கேட்க என்னடி பண்ணலயென்றவன் வண்டி ரோட்ல போகணும்டி.நீ இப்படி இருந்தால் ஏரிக்குள்ள தான் போகுமென்க ஓஓஓஓ தொரைக்கு வாய் சவடால் மட்டும் தான் போல..மத்ததுக்கு ஒன்னும் லாயக்கில்லைனு இப்போ தானே தெரியுதென்று சொல்லியவள் சிறிது இடைவெளி விட்டு தள்ளி உட்கார..

எதேஏஏஏ லாயக்கில்லையா?என்னடி லந்தா?.உன் புருஷனை பற்றி இன்னும் தெரியலைடி தெரிஞ்சா இப்படி பேசமாட்ட என்றவனின் முரட்டு இதழில் அடக்கப்பட்ட சிரிப்போடு வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.

ஏனோ வரும் போது இருந்த இறுக்கம் இப்பொழுது கதிருக்கு இல்லை.

மாமா என்றாள்.

ம்ம் சொல்லுடி என்க...

எனக்கு தாமரை வேண்டுமென்க, ஏண்டி இந்த வசனத்தை நான் சொல்லணும் விதி நீ சொல்லுற..

யோவ் வில்லேஜ் மேங்கோ நான் தாமரைப்பூ வேண்டும்னு சொல்லுறேன் என்றாள்.

இப்போவா டி?

ஏன் இப்போ என்னவாம்?

நாள் நல்லா இல்லையா? என கோவமாக தாமரை கேட்க,அடி கூறு கெட்ட குப்பாயி.கோயிலுக்கு போய்ட்டு வந்து யாராவது குளிப்பாங்களா? என்றான்.

அட ஆமாம் இதை நான் யோசிக்கலையே என்றவளுக்கு அங்கு தான் மேல்மாடி காலியாச்சே பிறகு என்னத்தை யோசிக்க என்று சொல்லி சிரித்தான்.

இருவரும் அந்த வாக்கு வாத பேச்சை ரசித்தபடியே சிறிது நிமிடத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.அம்மாச்சி இதை பூசாரி மாமா கொடுத்தாங்களென்று வள்ளி அப்பாயிடம் பையை கொடுத்தாள்.

அப்பொழுது கதிரின் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டு பாக்கெட்டில் இருந்ததை எடுத்து யாரென்று பார்த்து அட்டென் பண்ணியவன் சொல்லுங்கம்மா..

நல்லா இருக்கீங்களா என பரஸ்பரம் நலம் விசாரித்து பேசியவன் மனைவிடம் வந்து போனை நீட்ட யாரென்று யோசனையோடு ஹலோ என்றவள் அங்கு கேட்ட குரலில் ஆன்டிஇஇ என்க...

ம்ம்...

உன் போன் என்னாச்சி ஏஞ்சல்?.
போய் சேர்ந்துட்டேனு சொல்றது இல்லையா என்று விவி சத்தம் போட சாரிங்க ஆன்ட்டி.மிட் நைட் ஆச்சுனு வந்ததும் படுத்துட்டேன்.மார்னிங் பேசணுமென்று இருந்தேனா கோயிலுக்கு போய்ட்டு இப்போ தான் வந்தேனென்க...

ஹேப்பி அனிவர்சரி ஏஞ்சல் என்றவரிடம் மேலும் சிறிது நிமிடம் பேசிவிட்டு வைத்தாள்.

நேரமும் கடந்து சென்றது.

வளவனோ தூங்க போகாமல் ஹாலில் உட்கார்ந்து டீவியை பார்க்க வீட்டினரோ அவனை அதிசயமாக பார்த்தனர்.

நைட் ஷிப்ட் போய்ட்டு வந்தால் காலையில் சாப்பிட்டு படுப்பவன் இரவு உணவுக்கு தான் எழுவான்.
அப்படியாப்பட்டவன் தூங்க போகாமல் உட்கார்ந்திருப்பதை கண்ட பிரகாசம் தாத்தா தனது அருகில் இருந்த வேலுவிடம் என்னடா இவன் சங்கதி என்றார்.

ம்ம் காதல் தோல்வி தாத்தா என வேலு சொல்ல...

எதேஏஏஏ என்று அதிர்ந்தார்!!.

தாத்தாவின் அதிர்ச்சியை பார்த்தவன் உனக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி!
என்னமோ உன் பொண்டாட்டியை காதலிச்சு தோல்வியானவன் போல பதருற என்று கேட்டான்.

அடேய் கூறுகெட்ட பயலே என்னடா பேசுரயென்று வேலுவின் தலையில் பிரகாசம் தாத்தா தட்டினார்.

என்னை விடு முதல்ல..அந்த டி.ஆர் கதை என்னனு கேளு பெருசு என்றவனுக்கு இதோடா என்றவர் சின்னப்பு இங்க வாய்யா என்க,சொல்லு தாத்தா என்றவாறு அருகில் வந்து நின்றான் வளவன்.

ஏன்யா தூங்கலையா?
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
531
உடம்பு எதாவது சொகம் இல்லையா என்க,அதுலாம் நல்லா தான் இருக்கு உடம்புக்கு என்ன கேடு என்றான்.

அவனுக்கு மனசு சரியில்லை போல தாத்தா என்று வேலு எடுத்துகொடுக்க மாமா என பல்லை கடித்தான்.

நான் தான் டா சொல்லு என வேலு கேட்க மலைக்கு போனாலும் மச்சான் துணை வேண்டும் ஒன்னுக்கு நாலு பேரு இருக்கோம்.ஏறி மிதிச்சோம்னு வச்சிக்க மண்ணுக்குள்ள போய்டுவ.

அடேய் என்னடா மாமன்னு மரியாதை இல்லை என்று வேலு கேட்க ஆமா இந்த மானங்கெட்ட மாமக்கு மரியாதை ஒன்னு தான் கொறைச்சல் என்றவனை பார்த்து வேலு முறைத்தான்.

டேய் உங்க கதைய பிறகு வச்சிக்குங்க என்ற பிரகாசம் தாத்தா,நம்ப தேனுர்ல ராஜாங்கம் மூனாவது பொண்ண உனக்கு பாக்கலானு இருக்கு. அடுத்தா வாரம் பொண்ணு பாக்க போகணுமென்று சொல்ல, எதேஏஏஏ என்று அதிர்ந்தவனை பார்த்தவன் என்னடா.

தமிழ்ல தானே சொல்லுறேன்.
உனக்கும் முடிச்சிட்டா ஒரு கடமை இப்போதைக்கு முடிஞ்சிடும். செல்வி எப்படியும் காலேஜ் முடிச்சி மேல வேலைக்கு போனால் அது ஆகும் இன்னும் ஆறு இல்ல ஏழு வருஷமென்று வேலுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தாத்தா சொல்ல...

எதுக்கு அவ்வளவு சீக்கிரம் பண்ணிவைக்குற.நேரடியா அறுபதாங் கல்யாணமே கட்டிக்குறனே என்று வேலு சொல்ல இது தான் உன் ஆசைனா அப்படியே பண்ணிடலாம் மாமாயென்று சொல்லி வளவன் சிரித்தான்.

என் கல்யாண கதை அப்புறம் இருக்கட்டும் முதல்ல இவனுக்கு ராஜாங்க சித்தப்பா பொண்ணை பேசி முடித்துவிடு தாத்தா என்றான்.

மாமா என்று வளவன் கூப்பிட்டு முறைக்க என்ன முறைச்சி என்னடா புண்ணியம். உன் தங்கச்சி படிச்சி முடிக்கிறதுக்கு தான் வருஷம் ஆகும்னு சொல்றீங்களே அதுவரைக்கும் நான் ஜாலியா இருந்துட்டு போறேன்.

தாத்தா எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எல்லாம் கிடையாது இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் என்று வளவன் சொல்ல அது என்ன கணக்கு இரண்டு வருஷம் என்று கேட்டார்.

வளவனுக்கு தான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

அத்தை என்று தாமரை தயங்கி நிற்க, மருமகளை பார்த்த ராதா,கதிரு தாமரை கூப்பிட்டு கவிதா வீட்டிக்கு போய்ட்டு வா என்றார்.

சரிமா என்றவன் போகலாமா என்க ஒரு நிமிஷமென்று வேகமாக மாடிக்கு போனவள் சிறிது நிமிடத்தில் டிராலி பேகோடு வந்தவள் ம்ம் போகலாமென்றாள்.

இவ என்ன அங்கையே தங்க போறாளா? துணி மூட்டையோடு வராளே என்று யோசனையாய் கதிர் பார்க்க அங்க வீட்டில் உள்ளவங்களுக்கு வாங்கியதுலாம் இதில் இருக்கென்று அவன் பார்வையை வைத்து பதில் சொன்னாள்.

ஓஓ என்றவன்... குத்து கல்லு போல புருஷன்காரன் ஒருத்தன் இருக்கான் அவனுக்கு ஒரு மருந்து டப்பாவாது வாங்கிட்டு வந்துருக்காளா பாரென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன் வா என்று வெளியே போனான்.

டிராலி பேகோடு வெளியே வந்தவளை பார்த்தவன் உட்காருடி என்க டிராலியோடு எப்படி உட்கார? முன்னாடி வச்சிக்குங்களென்று தூக்கி பெட்ரோல் டேங்க் மேல் வைத்துவிட்டு பின்னாடி வந்து உட்கார்ந்து கொண்டவள் ம்ம் போகலாம்.

போறேன் போறேன்டி என்றவாறு வண்டியை பக்கத்து தெருவில் இருக்கும் அத்தை வீட்டை நோக்கி போனான்.

சிறிது நிமிடத்தில் வீட்டு வாசலின் முன்பு வந்து வண்டியை நிறுத்த கீழே இறங்கிய தாமரை கணவனுக்காக நிற்க...

ஏன் மேடம் வாசல்லையே நிக்குறீங்களென்றவனிடம் லூசு மாமா. கல்யாணத்திற்கு பிறகு இன்னைக்கு தானே இருவரும் வரோம் தனியாவா போவது. இதுல காதல் இதுனு பீத்தல் வேற...ஒரு மண்ணும் தெரியாத மடசாம்பிராணிய கட்டியிருக்கேன் பாருங்களென்று தாமரை புலம்பினாள்..

அடிங்கொப்பன் மவளே எவ்வளவு ஏத்தம்டி உனக்கு இதே நம்ப வீடா இருந்தது அந்த வாயை தச்சிடுவேன் என்றான்.

அப்படியா சந்தோஷம் எனக்கும் கொஞ்சம் துணி தைக்கிற வேலை இருக்கு அதை தச்சி கொடுங்கள்...

அடியேய் வேண்டாமென்றான்.

வாசலில் வண்டி சத்தம் கேட்டு யாரையும் காணுமேயென்று வெளியே வந்த கலா அப்பாயி அங்கு நின்ற பேத்தியை பார்த்து ஏத்தா தாமரை என்று அதிர்ந்தார்.

அப்பாயி என்று தாமரை கூப்பிட வந்துட்டியஎன்றழரவர் கொஞ்ச நேரம் அங்கேயே இருங்கள் என்று வேகமாக உள்ளே போய் ஆலம் கரைத்து எடுத்துட்டு வந்தவர் பேரனுக்கும் பேத்திக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துப் போனவர் பேத்தியை கட்டி பிடித்து அழுதார்.

அதான் வந்துட்டேனே அப்பாயி எதுக்கு கண்ணு கலங்குற என்று தாமரை கேட்க ரெண்டு வருஷம் ஆத்தா உன்னை பார்த்து என்றவர்..நான் ஒரு கூறுகெட்ட சிறுக்கி வந்த புள்ளைங்களுக்கு ஒரு வாய் தண்ணி குடுக்காம இருக்கேனே என்றவாறு வீட்டிற்குள் போனவர் அடுப்பில் இருந்த சூடான பாலை இரண்டும் டம்ளரில் ஊற்றி பனங்கற்கண்டு கலந்து எடுத்துட்டு வந்தவர் இந்தாங்கப்பா என்று நீட்டினார்.

எங்க அப்பாயி வீட்டில் யாருமே காணோம் என்றவாறு பாட்டியிடம் டம்ளரை வாங்கிக்கொண்டு தாமரை கேட்க உன் அம்மாவும் அப்பாவும் தேனூரு வரைக்கும் போயிருக்காங்க.

வயல்ல எள்ளு விதைக்குறாங்கணு உன் தாத்தா வயல்ல இருக்காருத்தா.அந்த சின்னவள் பள்ளிகூடம் போய்ட்டாள்.சிவா தான் வந்துட்டு இருப்பானென்றவர் வாங்கய்யா சாப்டலாம்.உம்மா ஆக்கி வச்சிட்டு தான் பாயிருக்காளென்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்த இரண்டு பாட்டிகளும் வீட்டுக்கு வந்தவர்கள் தாமரை பார்த்து ஏத்தா தாமரை எப்ப வந்த என்று நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

கதிருக்கு தான் என்ன பண்ணுவதென்று தெரியவில்லை.

அந்நேரம் அவனுக்கு கால் வர நல்ல வேளை எந்த புண்ணியவான் காப்பாத்துனாரோ என மனதிற்குள் நினைத்து போனில் பெயரை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவன் இதோ வரேனென்று சொல்லி கட் பண்ணி விட்டு ஆச்சி லோடு ஏத்த வண்டி வந்துருக்கு நான் கிளம்புறேனென்றவன் தாமரையை பார்க்க அவளோ முறைத்தாள்.

நான் தான் இவளை முறைக்கணும் இங்க தலைகீழா இருக்கேயென்று நினைத்தவன் வாயென்று கண்ணை காட்டி வெளியே செல்ல தாமரையும் எழுந்து பின்னாடியே வந்தாள்.

அடியேய் அங்க வண்டி வந்து நிற்குது நீ இப்படி மொகரைய தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தமென்று மனைவியின் அருகில் வந்து கேட்க...
சரி போய்ட்டு வாங்களென்றாள்.ம்ம் வந்துடுறேனென்று சொல்லிவிட்டு சுற்றி யாராவது இருக்காங்களாயென்று பார்த்தவன் தாமரை சுதாரிப்பதற்குள் அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்...

தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top