• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
616
சீமக்கரை:

இரண்டாவது செமஸ்டரை எழுதி முடித்து வீட்டிற்கு வந்த மகளிடம் ஊருக்கு போவதற்கு நிலவன் டிக்கெட் போட்டிருப்பதை ராதா சொல்ல சரிமா என்றாள். பின்னர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு மூவரும் அங்கிருந்து சீமக்கரைக்கு பயணமானார்கள்.

அதிகாலை தேனூர் பேருந்து நிலையத்திற்கு வர அவர்களுக்கு வளவனும் காரில் காத்திருந்தான் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு தம்பி தங்கை இருவரிடம் எப்படி பரீட்சை எழுதி இருக்க என்று கேட்க நல்லா எழுதிருக்கோம் ணா என்றனர்.

அண்ணா என்னை அங்கு வீட்டில் விடு என்க சரிடா என்றவன் அதே போல் அத்தை வீட்டில் தங்கையை இறக்கி விட்டு செல்ல,வாசல் கூட்ட வந்த பார்வதி கதவு திறக்கும் சத்தம் கேட்டு யாரென்று பார்த்தவர் செல்வி என்றார்.

நான் தான் த்தை..

எப்படி இருக்கத்தா என்க...

நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க நல்லா இருக்கீங்களா மாமா நல்லா இருக்காரா என்க எல்லாரும் நல்லா இருக்கிறோம். என்னத்தா வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்க... பரீட்சை முடிந்து லீவு விட்டுட்டாங்க அத்தை அதனால் தான் நான் அண்ணன் அம்மா மூணு பேரும் கிளம்பி வந்தோம் என்றாள்.

அப்படியா சரித்தா சரித்தா சரி உள்ள போ வாசல் கூட்டிட்டு பால் கறந்துட்டு வருகிறேன் என்கவும் சரிங்கத்தை என்று லக்கேஜோடு உள்ளே போனவள் கதவை திறந்து பார்க்க அங்கே கணவன் நன்கு உறக்கத்தில் இருப்பதை தெரிந்தது.

சத்தம் இல்லாமல் போனவள் மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு போய் குளித்து கபோர்டில் இருந்த புடவை சட்டை எடுத்து மாற்றிக்கொண்டு வர அதற்குள் பார்வதியும் சானம் தெளித்து வாசலை கூட்டி கோலம் போட்டிருந்தார்.

மருமகளாக வீட்டு வேலையை கையில் எடுக்க இருவரும் பேசிக்கொண்டே டீ போட்டு குடிக்க செல்வமும் எழுந்து வந்தவர் அங்கிருந்த மருமகளை பார்த்து நலம் விசாரித்தார்.

தம்பி எந்திரிக்கலையா என்க..வந்ததே நைட்டு இரண்டு மணிக்கு மாமா என்றார்.

அவ்வளவு நேரம் மாமா எங்கே போனாங்களென்று செல்வி கேட்க,
நம்ம வயல்ல நெல்லு மூட்டை எடை போடுவதற்கு லாரி லேட்டா தான் வந்துச்சு அது முடிச்சிட்டு தான் வந்தான் என்றார்.


சிங்கப்பூர்:

தாமரை செல்ல வேண்டிய பிளைட்டிற்கான அறிவிப்பு வந்ததும் மீண்டும் குழந்தைகள் இருவரையும் தூக்கி முத்தமிட்டவளுக்கு அழுகை வந்தது.வழியும் கண்ணீரோடு எல்லாரையும் பார்த்து தலையசைத்தவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

குழந்தைகள் இருவரும் அம்மா அம்மா என்று கூப்பிட தாமரைக்கு அந்த வலியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

கண்ணை கூட துடைக்காமல் அவள் போக எதிரே வந்தவர்கள் அவளை பார்த்துக் கொண்டுதான் சென்றனர் அதையெல்லாம் அவள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

அவளுக்கான சீட்டில் உட்கார்ந்து கொண்டவளுக்கு மனமெல்லாம் கணவன் குழந்தைகள் மேல தான் இருந்தது. மேலும் சிறிது நிமிடத்தில் மதுரையிலிருந்து சிங்கப்பூர்கான பிளைட் வானில் பறந்து சென்றது.

ஒன்பது மணி நேரம் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவள் மற்ற பார்மாலிட்டிஸை முடித்துக் கொண்டு தாமரை வெளியே வர அவளுக்காக அங்க லீலாவும் மாறனும் நின்றனர் இருவரையும் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அதிர்ந்து போனாள்.

தாமரையை பார்த்து உள்ளுக்குள் சுருக்கென்று ஒரு வலி வந்தாலும் அதை வழக்கம் போல் மறைத்துக்கொண்ட மாறனும் இயல்பாக அவளிடம் பேசினான்.

பின்னர் மூவரும் அங்கிருந்து விவி பேலசை நோக்கி சென்றனர்.போகும் வழியில் குழந்தைகள் மற்றவர்கள் பற்றி இருவரும் விசாரிக்க அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தாள்.

தாமரைக்காக வினிதாவும் அங்கு காத்திருந்தார் இரண்டு வருடங்களுக்கு பிறகு தனது அத்தையை பார்த்தவளோ இறுக்கமாக அணைத்துக் கொண்டதும் அழுகை வந்தது.

நான் நல்லா இருக்கேன் டா..

மாறன் என்ன ரொம்ப நல்லா பாத்துக்குறான் என்கவும் ம்ம் என்று தலையசைத்தாள்.

கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்புறம் பேசலாம் என்க சரியென்று மேலே இருக்கும் அவள் ரூம்கதவை திறந்து பார்க்க இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ இன்றும் அதேபோலவே இருந்தது.

பின்னர் பெட்டில் படுத்தவளோ சிறிது நிமிடத்தில் தூங்கி விட்டாள்.

ஒரு வழியாக தூங்கி எழ காலை 11:00 மணியானது கொட்டாவி விட்டுக்கொண்டு கைகளை தூக்கி சோம்பல் முறித்தவள் கண்களை திறந்து எதிரில் பார்க்க அங்கே கதிர் உட்கார்ந்து இருப்பது போல் இருக்க என்ன மாமா பக்கத்துல இல்லணும் கனவில் வந்துட்டியா என்று சொல்லிக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு போனாள்.

பின்னர் குளித்துவிட்டு டவலோடு வந்தவள் அங்கிருந்த ஷோபாவில் கதிர் உட்கார்ந்து இருப்பது போல தெரிய என்ன இது?

கனவு இவ்வளவு நேரமாக இருக்கு என்று கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க அங்கே கால் மேல் கால் போட்டு கொண்டு சோபாவில் கைகளை நீட்டிக்கொண்டு கதிர் உட்கார்ந்திருந்தான்.

இது நிஜமா என்று வேகமாய் வந்தவள் கணவனின் கன்னத்தை தொட நிஜம் என்று உணர்ந்தவள் மாமா என்கவும் மனைவியை எட்டி இழுத்து அணைத்தவன் அந்த தரையிலே சரிந்தான்.

கணவனை விட்டு பிரிந்து இருந்தது வெறும் பத்து மணி நேரம்தான் அதற்குள் அவள் எவ்வளவு தவித்தாள் என்று அவள் தவிப்பை செயல்களில் உணர்த்த...

தனக்கான தேடல் மனைவியிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல சந்தோஷப்பட்டான்.

காதலோடு காமத்தை நிறைவாக கொடுத்தும் பெற்றும் மகிழ்ந்தவர்கள் மீண்டும் குளித்து பிரஷ் ஆகி கீழே வர அங்கே வினிதாவும் சீதாவும் குழந்தைகளோடு இருப்பதை பார்த்து சர்ப்ரைஸ் பயங்கரமா இருக்குங்க அத்தை..சொல்லவே இல்லையே என்று சொல்லிக் கொண்டே குழந்தைகள் இருவரின் முன்பு மண்டியிட்டு அணைத்தவள் எண்ணற்ற முத்தங்களை கொடுத்தாள்.

ஏண்டி என்னமோ பத்து வருஷம் பாக்காத போல இவ்வளவு சீன் போடுறியே என்று அந்த முத்தங்கள் தனக்கு கொடுக்கவில்லை என்று கடுப்பில் கதிர் சொல்ல கணவனை திரும்பி பார்த்தவள் எலி எதுக்கு அம்மனமா ஓடுதுனு தெரியாதா என்கவும் வினிதாவும் சீதாவும் சத்தமாக சிரித்து விட்டனர்.

தாமரை சிங்கப்பூர் வந்த விஷயத்தை எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று வினிதா கறாராக சொல்லிவிட்டார் அதேபோல் அவளுக்கு வீட்டிலேயே ட்ரைனிங் கொடுத்தனர்.

குழந்தைகளும் கணவனும் பக்கத்திலே இருப்பதால் தாமரையும் தனது பேஷன் பரைடில் கவனத்தை செலுத்தினாள். அதோ இதோ என்று நாட்களும் வேகமாக ஓட,பேஷன் ஷோ நடக்க வேண்டிய நாளும் வந்தது.

நான் சீதாவை கூப்பிட்டு முன்னாடி போறேன் கதிர் மாறன் லீலா தாமரை பத்திரம் சரியான நேரத்துக்கு வந்துடுங்க என்று சொல்லிக்கொண்டு இன்னொரு காரில் குழந்தைகளோடு வினிதா ஏறி சென்றனர்

ரோசி இன்னைக்கு நான் தான் வின் பண்ண போறேன் என்று விக்டர் சொல்ல கண்டிப்பா அதுல சந்தேகம் இல்லை என்றாள்.

இன்னும் அவள் சிங்கப்பூருக்கு வரலையே ரெண்டு குழந்தைகளுக்கு மூக்கு சிந்தி ஆய் கழுவி விட்டுட்டு வீட்ல இருப்பா.நீ எதுக்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகுற இந்த முறை பெஸ்ட் டிசைனரா நீ தான் செலக்டாக போற என்று ரோசி சொல்ல சரிடி என்றான்.

மற்றவர்களெல்லாம் வந்து அரங்கத்தில் குழுவினர்.ஷோ ஆரம்பிப்பதற்கு இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது வினிதாவும் அப்போது தனது வாட்சைப் பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு எதிர்பக்கமாக உட்கார்ந்து இருந்த விக்டர் வினிதாவை பார்த்து இளக்காரமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

லீலாவின் மாமனார் மாமியார் அவர்களோடு சீதா குழந்தை வைத்து உட்கார்ந்து இருப்பதால் தாமரையின் குழந்தைகள் என்பது ரோசி-விக்டர் இருவருக்கும் தெரியவில்லை.

ஷோ ஆரம்பிப்பதாக ஆங்கரும் சொல்ல அங்கிருந்த டிசைனர்களின் மாடல்கள் ஒவ்வொருவராக அவர்கள் தயாரித்த ஆடையை போட்டுக் கொண்டு மேடையில் ஒய்ரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

எல்லாரும் ஆவளுடன் எதிர்பார்த்தது வினிதாவின் டிசைனர் தான்...

மற்றவர்கள் மாடல்கள் எல்லாம் அவர்கள் தயாரித்த உடையில் வந்து போஸ் கொடுத்து விட்டு செல்ல கடைசியாக வி வி பேஷன் என்கவும் யாரா இருக்கும் என்று விக்டரும் ரோசியும் எதிர் பார்க்க அங்கே மேடைக்கு வந்தவளை பார்த்து இருவரும் அதிர்ந்து போனார்கள்.

தாமரையோ இந்த முறை அவள் தயாரித்த ஆடைகளிலேயே அன்ன நடை போட்டு ஸ்டேஜிற்கு வந்து செல்ல அவளை பார்த்து சீதாவும் கதிரும் வாய் அடைத்துப் போனார்கள்.

ஒவ்வொரு உடையிலும் அவளின் அழகு மேலும் மேலும் மெருகேறிக் கொண்டே இருக்க அடுத்தது என்ன ஆடை போட்டுட்டு வருவா என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.மொத்தமாக எல்லா ரவுண்டு முடிந்த பிறகு கடைசியில் ரிசல்டிற்கான நேரமும் வந்தது .

விகடருக்கு புரிந்து விட்டது நிச்சயமாக இந்த முறையும் பெஸ்ட் டிசைனராக விவிக்கு தான் போகும் என்பது,ரோசியை கொலவெறியில் பார்த்துக் கொண்டிருக்க அவளும் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை சொன்னாள்.

பின்னர் ஜட்ஜ்கள் அவரவர் மார்க் டோட்டல் பண்ணி ரிசல்ட் அறிவிக்கிற ஸ்டேஜ் க்கு வந்தனர்.முதலில் பெஸ்ட் டிசைனர் விவி பேஷன் தாமரை என்கவும் அரங்கமே கைத்தட்டலில் குலுங்கியது.

அதன் பின்னர் பெஸ்ட் மாடல் அவார்டும் தாமரைக்கு கொடுக்க கதிருக்கு தனது மனைவியின் மேல் இருந்து பார்வையை அங்கே இங்கே திருப்ப முடியவில்லை.

இவ்வளவு திறமையான பெண்ணை இரண்டு வருடமாக வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறோம் என்று உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியும் இருந்தது.

அப்பொழுது தாமரை அங்கிருந்த ஜட்ஜிடம் ஏதோ சொல்லவும் சீதா பெருமாள் என்று மைக்கில் அலோன்ஸ் பண்ண தனது பெயரை சொல்கிறார்கள் என்று சீதா அதிர்ந்து போய் பார்க்க அத்தை வாங்க என்று தாமரை அங்கிருந்து கையசைத்தாள்.

உன்னை தான் மா என்று கதிர் சொல்ல தம்பி என்ன எதுக்குடா உன் பொண்டாட்டி கோர்த்து விட்டிருக்கா என்க... மேடைக்கு போ மா என்றான்.

இத்தனை பேருக்கு முன்னாடி ஸ்டேஜுக்கு வர ஒரு வித கூச்சம் இருந்தாலும் தைரியத்தை வர வைத்துக் கொண்டு சீதாவும் மேடைக்கு வர அப்பொழுது மைக்கில் தாமரையும் பேச தொடங்கினாள்.

பட்டுப் புடவைக்கு டிசைன் பண்ணியது தான் நான்.மத்தபடி என்னுடைய டிசைனர் சாரிக்கெல்லாம் ஆரி ஒர்க் எம்பிராய்டிங் டிசைன் பண்ணியது என்னோட அத்தை என்கவும் நான் போட்ட டிசைனா என்று சீதா அதிர ஆமாங்கத்தை என்றாள்.

அப்போ நியாயமாக இந்த அவார்டு என்னுடைய அத்தைக்கு தான் சேரனும் என்று சீதாவிற்கு கொடுக்க சொல்ல திஸ் இயர் பெஸ்ட் டிசைனர் அவார்ட் கோஸ் டு மிஸ்ஸஸ் சீதா பெருமாள் என்று அவருக்கு கொடுக்க கண்கள் கலங்கி ஒருவித உணர்ச்சி பிழம்பிலிருந்து அந்த அவார்ட் வாங்கியவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

ஃபேமிலியே டிசைனர்ஸா இருக்கீங்களே என்று அங்கிருந்து ஆங்சர் கிண்டல் பண்ண என் மருமகள் அளவுக்கு நான் கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்குனேன் என்கவும் அம்மா இதுங்களா கிறுக்கல் என்று கேட்டனர்.

பின்னர் மற்ற டிசைனர்களையும் பாராட்டி விட்டு ஷோவும் முடிய இரவு உணவு அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.

குழந்தைகள் இருவரும் தூங்கிவிட ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மேல் இருக்கும் அறைக்கு வந்தனர் சீதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
616
அந்த அவார்டை தனது நெஞ்சில் மீது அணைத்து கொண்டு உட்கார்ந்திருக்க அவரின் மனநிலையை புரிந்து கொண்ட வினிதா விடு சீதா எந்த நேரத்தில் என்ன நடக்குமோ அது நடந்தே தீரும்.

உன்னோட டிசைனிங் திங்கிங் பத்தி ஒவ்வொரு முறையும் என்கிட்ட தாமரை சொல்லிக்கிட்டே இருப்பா. அதனால் தான் நீ சொன்ன டிசைன் எல்லாம் வீடியோ எடுத்து எனக்கு அனுப்ப சொன்னேன்.

அங்கு ரெடியானது எல்லாமே உன்னோட டிசைன் தான் அதிலேயே சீதா டிசைன் தான் எழுத சொல்லி இருக்கேன் தெரியுமா என்கவும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல வினிதா என்று அவர் கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்ட சீதாவிற்கு தேம்பி தேம்பி அழுகை வந்தது.

சந்தோஷத்தில் வந்து அழுகை என்பதால் சிறிது நேரம் அழட்டும் என்று விட்ட வினிதா உனக்காக தாமரை ஒன்று ஏற்பாடு பண்ணியிருக்காள் தெரியுமா என்கவும் தெரியாது என்றார்.

ஊருக்கு போன பிறகு தெரிஞ்சுக்க.

நமக்கு உண்மையிலேயே நல்ல மருமகள் இல்லை மகள் கிடைச்சிருக்கா கடவுள் ஏதோ ஒரு விதத்தில் நம்ம மேல கருணை காட்டி இருக்கிறார் என்கவும் கண்டிப்பா என்றார்.சரி நேரம் ஆயிடுச்சு காலையில பேசிக் கொள்ளலாம் என்று அவரவர் ரூமிற்குள் சென்று விட்டனர்.

குழந்தைகள் இருவரும் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்து விட்டு ரெஸ்ட் ரூமிற்கு போகப் போன மனைவியை இழுத்தவன் அந்த கருப்பு சாரியை கட்டு என்றான்.

இதுவரை எதுவும் பேசாதவன் இப்பொழுது கருப்பு புடவையை கட்டிட்டு வா என்று சொல்வதைக் கேட்டு கணவனை பார்க்க கண்ணை மூடியவன் ப்ளீஸ் என்றான்.

சரி என்று தனது சூட்கேசி ல் இருந்த புடவை எடுத்து கட்ட போக இங்கேயே கண் முன்னாடியே கட்டு என்கவும் கூச்சமா இருக்கு என்றாள்.

அதுலாம் தெரியாது டிரஸ் மாத்து என்றான்.மாமா என்று சிணுங்க முடியாது என்கவும் வேறுவழி என்று இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு போட்டிருந்த ஆடை கலைக்கும்போது புதிதாக பார்ப்பது போல் மனைவியே அங்குலம் அங்குலமாக ரசித்தவன் கருப்பு புடவை கட்டி முடிக்க எதுவும் சொல்லாமல் வேகமாய் வந்து அணைத்துக் கொண்டு மெத்தையில் சரிந்தவன் எண்ணற்ற முத்தங்களை வன்மையாகவும் மென்மையாகவும் கொடுக்க கணவனின் மனம் ஒருவித அழைப்புறுதளோடு இருப்பதை புரிந்து கொண்டவள் என்னாச்சி மாமா என்க எனக்கு தெரியாது...

எனக்கு நீ வேணும் என்று சொல்ல நான் இங்கே தானே இருக்கிறேன் என்றாள். முடியாது எனக்கு நீ வேணும்டி என்றான். கணவன் எதை தன்னிடம் எதிர்பார்க்கிறான் என்பதை புரிந்தவள் அவன் உதட்டோடு தனது உதட்டை புதைத்துக் கொண்டு இறுக்கி அணைத்தாள்...

யோவ் எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்க?ஆபீஸ்க்கு தான் போறேன்னு சொன்னேன் என்னமோ இந்த நாட்டை விட்டுட்டு வேற கண்டத்துக்கு போற போல பண்ணிட்டு இருக்க என்றாள்.

ஏய் நான் வந்த பிளான் வேற டி...அதாவது ஹனி மூனுக்கு வந்தேன் என்க,எது என்று தாமரை திரும்பிப் பார்க்க கதிரோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆமாம் என்றான்.

என்னைய்யா நக்கலா?

என்னமோ இப்போது தான் புதுசா கல்யாணம் ஆன போல பேசிட்டு இருக்கியே என்று பல்லை கடிக்க ஏண்டி நாம ஹனிமூன் போக கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்கா?.

என்ன அந்த தேவி கூடையும் பார்வதி கூடயுமா போக நினைக்கிறேன். என் பொண்டாட்டி உன் கூட தானே என்க..அவன் சொன்ன பெயரை கேட்டவள் எதுவும் சொல்லாமல் ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு கதவை திறந்து கீழே சென்று விட்டாள்.

அதன் பிறகு சுதாரித்தவன் அட கடவுளே இந்த வாய் ஏழரை என்று சொன்னாலும் உனக்கு புத்தியை வரமாட்டேங்குதுனு தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து துப்பி கொண்டவன் வேகமாக இறங்கி கீழே வர தாமரையோ காரில் ஏறி ஆபீஸிற்கு சென்று விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த விவி பில்டிங்கிற்கு வந்தவளுக்கு மனதில் பழைய சந்தோஷம் திரும்பி வந்தது போல இருந்தது.

அங்கிருந்தவர்கள் அவளிடம் நலம் விசாரித்தனர் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டு தனது கேபினுக்கு போனவள் அங்குள்ள சேரில் போய் உட்கார்ந்து கண்களை மூட தனது இடத்திற்கு வந்த போல் ஒரு நிம்மதி வந்தது.

அதன் பின்னர் வேலையில் மூழ்கும் போது அவளுடைய ரூம் கதவை தட்டி உள்ளே வந்தவர் மேடம் பிசினஸ் டீலிங் காக வி எம் டெக்ஸ்டைல்ஸ் ஓனர் மிஸ்டர் மாறன் வந்திருக்கிறார் என்று பிஏ சொல்ல வர சொல்லுங்கள் என்றாள்.

சிறிது நிமிடத்தில் கதவைத் தட்டி உள்ளே வந்தவன் குட்மார்னிங் என்க குட்மார்னிங் சார் என்றவள் அங்கிருந்த சேரை காட்டி உக்கார சொல்ல தாமரையை பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான்.

சொல்லுங்க சார் என்க,நேற்று நடந்த பேஷன் ஷோவில் கட்டிருந்த மாடலில் எனக்கு வேண்டும் என்றான்.அதன் பின்னர் அவனுக்கு தேவையான புடவைகள் ஆர்டர் பண்ணி அதற்கான அமௌண்டில் முக்கால் பாகத்தை செக்கில் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தான்.

எவ்வளவு நாள் டெலிவரி ஆகும் என்று கேட்க அதைப்பற்றி டீடெயில்கள் எல்லாம் இருவரும் பேசிக் கொண்டிருக்க ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

குடிப்பதற்கு என்றதும் காபி என்றான் அங்கிருந்து இன்டர்காமில் இரண்டு காபி எடுத்துட்டு வர சொல்ல அதேபோல் வேலையாலும் இரண்டு காபியை கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றார்.

சார் என்று கூப்பிட சொல்லுங்க மேடம் என்க,பர்சனலா உங்கள் கிட்ட கொஞ்சம் பேசிணும் என்றதும் சொல்லு தாமரை என்றான்.எப்பொழுது கல்யாணம் பண்ணிக்க போறீங்க?

நீங்க கல்யாணம் பண்ணிக்காததை நினைத்து ஆன்ட்டி ரொம்ப பீல் பண்றாங்கள் என்க,நீ ம் என்று சொல்லு இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான்.

தனது காதில் விழுந்தது சரிதானா என்று தாமரையே ஒரு நொடி குழம்பி போனவள் நீங்க என்ன சொன்னீங்க என்று குழப்பமாக கேட்க நீ சரின்னு சொல்லு இன்னைக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு திரும்பவும் சொன்னான்.

கேட்ட விஷயத்தில் அதிர்ந்து போய் எழுந்தவள் பின்னர் கோபம் வந்து உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதாச்சு பிடிச்சிருச்சு என்க...ஆமா உன் மேல எனக்கு பைத்தியம் தான் டி புடிச்சிருக்கு என்க,மரியாதையா வெளியே போங்க என்றாள்.

அது எப்படி போக முடியும் உன்னிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாம நானும் எத்தனை நாளைக்கு தான் மனசுல வச்சிக்கிறது சொல்லு?

எது உங்க வீட்ல வந்து ஒரு நாலு மாசம் தங்கியிருந்தானே அதுல காதல் வந்துடுச்சா என்று தாமரை முறைக்க, எவண்டி சொன்னான் அந்த நாலு மாசத்துல உன் மேல காதல் வந்துச்சுனு??.


லிசன் தாமரை கிட்டத்தட்ட ஒன்பது வருஷமா நான் உன்னை காதலிக்கிறேன் தெரியுமா உன்னை முதலில் நான் 12வது படிக்கும்போது பார்த்தேன்.நான் இல்லை நீ 12வது படிக்கும்போது....

எங்க அப்பாவோட சொந்த ஊர் நீலகிரி என்கிற விஷயம் எனக்கு தெரியும் அவங்களோட பரம்பரை பிசினஸ் பற்றியும் எனக்கு தெரியும் அது மூலமா ஒரு பிசினஸ் டீலிங் காக நான் கோயம்புத்தூருக்கு வந்த போது எங்க பூர்விகத்தை பாக்குறதுக்காக வந்தேன்.

நீ உன் பிரண்டு பவியும் மருதுக்கு தெரியாம டான்ஸ் டீச்சர் வீட்டுக்கு பரதம் கத்துக்க போவீங்களே அந்த டீச்சர் வேறு யாரும் இல்ல என்னோட அத்தை தான்.

அங்கதான் உன்னை முதன் முதலில் பார்த்தேன் என்னமோ தெரியல பார்த்த உடனே எனக்கு புடிச்சது சரி சின்ன பொண்ணா இருக்கே படிச்சு முடிச்ச பிறகு என் மனசுல இருக்குறத உன்னிடம் சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் அதுக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சு.

மீண்டும் உன்னை நான் எங்க வீட்ல பார்க்கும்போது கதிர் பொண்டாட்டி சொன்னதும் என் மனசு என்ன பாடு பட்டுச்சுன்னு எனக்கு தாண்டி தெரியும்.

மனசுல உன்ன நெனச்சிட்டு இன்னொருத்தி கூட என்னால வாழ முடியாது அப்படி என்ன பத்தி உனக்கு கவலை இருந்தால் நீயே கல்யாணம் பண்ணிக்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

தாமரையோ மாறன் பேசியதை கேட்டு பேயறைந்த போல் உட்கார்ந்திருந்தாள். இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இனி ஒரு நிமிஷம் கூட நம்ப சிங்கப்பூர்ல இருக்கக்கூடாது என்று நினைத்தவள் வேகவேகமாக தனது வேலையை முடித்துக் கொண்டு டிசைன் பண்ண வேண்டிய பைல்களை மட்டும் எடுத்துக் கொண்டு காரில் ஏறி வீட்டிற்கு வந்தாள்.

இங்கு குழந்தைகள் வினிதா கூட விளையாட்டு கொண்டு இருக்க தனது ரூமிற்குள் வந்தவள் பிரஷ் ஆகிவிட்டு எப்போ ரிட்டன் டிக்கெட் போட்டிருக்கென்று பார்க்க நாளை காலையில் என்று தெரிந்தது.

வெகு நேரம் வரை வினிதாவோடு பேசிக் கொண்டிருந்தாள்.ஊருக்கு வந்த தங்கிடுங்கத்தை என்று சொல்ல முடியாத பட்சத்தில் நிச்சயமா உன்கிட்ட வராம வேற யாருகிட்ட போவேன் என்று வினிதா சொல்ல கண்டிப்பா நீங்க என்கூட வந்து தங்கனும் என்று தாமரையும் கண்ணீரோடு சொன்னாள்.

ஆமா என் ஏஞ்சலுக்கு இதில் என்ன சந்தேகம் என்றார் விடியலும் அழகாய் தொடங்க அவர்களிடம் சொல்லிக் கொண்டு கதிர் தாமரை குழந்தைகள் சீதாவோடு இந்தியாவிற்கு பயணமானார்கள்.

அவர்களுக்காய் வளவனும் அங்கு காரோடு மதுரை ஏர்போர்ட்டில் காத்திருந்தான் பின்னர் ஃபார்மாலிட்டிஸை முடித்துக் கொண்டு குழந்தைகளோடு மூவரும் வெளியே வர வளவனும் காரை எடுத்துட்டு வந்து நிற்க அதில் ஏறி சீமக்கரையை நோக்கி சென்றனர்...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top