Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 583
- Thread Author
- #1
நீலகிரி:
பொடிநடையாக நடந்து வந்த குப்பிளான் பள்ளிக்கூடத்தின் அருகில் வர இன்டர்வல் நேரம் என்பதால் பிள்ளைகள் அங்கே ஓடி ஆடி விளையாடுவது தெரிந்தது.
மகள் எங்கேயாவது தென்படுகிறாளா என்று கேட்டின் அருகே நின்று எட்டி பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் வெளியே வந்த செல்லா, தற்செயலாக வாசல் பக்கம் பார்க்க அங்கே தனது அப்பா நிற்கவும் வேகமாக நடந்து வந்து அப்பா என்றாள்.
ஆத்தா என்று அங்கிருந்த இரும்பு கேட்டின் இடைவெளியில் கையை விட்டு மகளின் கன்னத்தை தடவியவர் உடனே பார்க்கணும் போல இருந்துச்சு ஆத்தா, அதனால் தான் வந்துட்டேன் என்று சொல்லும்போது சந்தோஷத்தில் அவரின் கண்கள் கலங்கியது.
அப்பா நீங்க எப்ப வந்தீக?
இன்னும் இரண்டு பீரியட் தான் இருக்கிறது.அது முடிஞ்ச பிறகு நானே வீட்டுக்கு வரேன்.எதுக்குப்பா இந்த வெயில்ல நீங்க வந்தீங்க என்று தனது தந்தைக்காக செல்லா பேச...உன்ன விட வெயில் ஒன்னும் முக்கியமாத்தா.
மழை புயல் தாங்கின உடம்பு இது.என்ன ஆயிட போகுது உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சினாவே போதும் பாதி வயசு திரும்பிடும் என்றார்.தனது தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை கேட்டு அமைதியாக சிரித்தாள்.
பின்னர்,எப்படிப்பா தெரியும் என்க, மயிலா தான் போன் பண்ணி சொல்லுச்சு...நானும் உன் அம்மாகாரியும் வந்துட்டோம்.உன் ஆத்தா தலகால் புரியாம அங்க ஆடிக்கிட்டு இருக்கிறா என்று சிரித்துக் கொண்டே சொன்னவர் சரித்தா நான் வீட்டுக்கு போறேன் நீ பார்த்து பத்திரமா வா.இல்லை வெயிலா இருக்கு நீ வர வேணாம் சோறு நான் உனக்கு எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க அப்பாவை பார்த்து சிரித்தவள் நான் வீட்டுக்கு வந்துடுவேன் பா.
மாமா தான் கூப்பிட வருமே என்கவும் சரித்தா சரித்தா. கொடை எடுத்துட்டு வந்தியா என்க சிரித்துக் கொண்டே இல்லப்பா என்றாள்.
என்னா வெயில் அடிக்குது குடை எடுத்து வராமல் வந்திருக்கிறாயே என்ன புள்ள நீனு நான் போய் எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்கும் தனது தந்தையின் அன்பை பார்த்து அவளுக்கு வழக்கம் போல் பிரமிப்பாக தான் இருந்தது.
காசு பணம் இல்லை என்றாலும் அன்புக்கு ஏழைகள் இடத்தில் என்றுமே பஞ்சமில்லை இல்லையே என்று மனதிற்கு நினைத்தவள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா.
மாமா வந்துருவாங்க...
வரும்போது குடை எடுத்துட்டு தான் வரும் என்று சொல்ல சரி நான் போயிட்டு வரேன் நீ உள்ள போ என்றவர் திரும்பி ஒரு நிமிஷம் ஆத்தா என்று தனது இடுப்பு வேஷ்டியில் மேல் கட்டி இருந்த பச்சை வார் பெல்ட்டை திறந்தவர் அதற்கு உள்ளே இருந்த ஜிப்பை திறந்து அதிலிருந்த பொருளை எடுத்து மகளின் கையை காட்ட சொல்லி அதில் வைத்தார்.
செல்லாவும் அது என்னதுனு பார்க்க அதில் அம்மன் சிலை போட்ட தங்க காசு இருந்தது.இது எங்க அம்மாவோட அம்மா தன் குடும்பத்துல யாருக்கு மொத வாரிசு பொறக்குறாங்களோ அவங்களுக்கு கையில் கொடுத்து வைக்க சொல்லுவாங்க. இது அந்த மலையாத்தவே கூட துணைக்கு வந்த போல இருக்குமாம். எங்க அம்மாவோட அம்மாவுக்கு அப்புறம் எங்க அம்மா கிட்ட கொடுத்தாங்க.
எங்க அம்மா சாகும்போது என்கிட்ட கொடுத்துட்டு செத்துப்போனாங்க.அது இன்னைக்கு உனக்கு கொடுக்கிறேன் பத்திரமா வச்சுக்கோ போ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார்.
தனது தந்தையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.சிரித்துக் கொண்டே அதை துடைத்தவள் ஸ்கூல் உள்ளே செல்ல பெல் அடித்து அடுத்த பீரியட் ஆரம்பமானது.
....
ஏங்க முரளி தான் எஸ்டேட்டை நல்லா கவனிக்குறானே பொறுப்பை புள்ளகிட்ட ஒப்படைச்சிட்டு நீங்கள் ஓய்வெடுங்களேன் என்று சொல்லிய கோமதி டீ கப்பை கணவரிடம் நீட்டினார்..
மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் எனக்கு மட்டுமே ஆசையா சாகுற வரைக்கும் இப்படி நான் அல்லாட பட்டுக்கிட்டு இருக்கணும்னு?.
உன் பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு ஆனா உன் மருமகளுக்கு இன்னும் பேராசை போகல கோமதி..அந்த பொண்ணோட சிந்தனை எண்ணம் ஆசை எல்லாமே பணம் மட்டும்தான் புரியுதா?
பணம் என்று வரும் போதும் நம்ப புள்ளைய தூக்கி எறிய கூட அந்த பொண்ணு தயங்காது மா...ஒன்னும் இன்று நேற்று அந்த பொண்ணை நான் பார்க்கல...
எத்தனையோ முறை நான் கவனித்ததில் பேராசை மட்டுமே இருக்கு...இந்த லட்சணத்தில் முரளிகிட்ட எல்லாவற்றையும் தூக்கி கொடுத்துட்டு நாம பிச்சை தான் எடுக்கணும் தெரியுமா?.
கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான கோமதி என்னங்க இப்படி சொல்றீங்க??நம்ம புள்ள ஒரு காலத்திலும் அப்படி விட மாட்டாங்க என்கவும் நம்ப புள்ள விடமாட்டான் தான்...ஆனால் அந்த பொண்ணு விடும் கோமதி...
நான் நிறைய விதத்தில் பாத்துட்டேன் அந்த பொண்ணோட ஆசை சொத்து மேல தான் இருக்கே தவிர மற்றபடி குடும்பம் கணவன் குட்டி அதில் கிடையாது. வந்து ரெண்டு வருஷம் ஆகுது இதுவரைக்கும் உனக்கு ஒரு நல்ல மருமகளா நடந்து இருக்கா சொல்லு பாக்கலாம் என்க அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
ஆனாலும் கணவரிடம் விட்டுக் கொடுக்காமல் ஏங்க வேலைக்கு போற பொண்ணு நம்ம வீட்டுல தான் இத்தனை வேலைக்காரங்க இருக்காங்க என்றார்...
கோமதி எங்கப்பா இந்த எஸ்டேட் நிர்வாகிக்கும் போது நானும் வேலைக்கு தான் போனேன் நீ அப்படித்தான் இருந்தியா?.
நம்ம காலம் வேறு இந்த காலம் வேறு என்கும் மனைவியை பார்த்தவர் எத்தனை காலமானாலும் புருஷன் புருஷன் தான் பொண்டாட்டி பொண்டாட்டி தான் பொறுப்பு வரட்டும் தானாகவே நானே கொடுப்பேன் என்று சொன்னார்.
இதை எல்லாம் தனது ரூம் ஜன்னல் வழியாக காதில் வாங்கிய பவியோ தனது மேல் இப்படி ஒரு எண்ணம் இருக்கே...அப்ப நாம் நல்ல மருமகளா நடந்து கொள்ளவில்லையே என்பதை நினைத்து வருத்தப்பட்டாள்.
பின்னர் அவர் சொல்வது போல தானே நம்ம நடந்து கொண்டிருக்கோம் நம்மள பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்கே...பின்னர் முரளியை நினைத்துப் பார்க்க அவ்வளவு பெரிய பணக்காரன் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பது தெரிந்தும் தன்னை உருகி உருகி காதலிச்சானே.அவன்கிட்ட இருக்க பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணுன அது உண்மைதானே என்று மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை..
முதல் வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கையாவது ஒழுங்காக வாழப்பார் என்று மனசாட்சி சொல்லும்போது அன்று எஸ்டேட்டில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது ஞாபகம். ..முதலில் தனது வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்தவள் இனி நல்ல மருமகளாக நீங்கள் பார்ப்பீங்க மாமா என்று சொல்லிக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள்
சீமக்கரை:
தயவுசெய்து போயிட்டு படுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.உங்க கிட்ட பேசி என் மூட ஸ்பாயில் பண்ணிக்க நான் விரும்பல..இன்னும் நிறைய எனக்கு டிசைன் பண்ற வேலை இருக்கு என்கவும் ஏண்டி என்னை விட உனக்கு அந்த காக்கா வலிப்பு வந்த போல கிறுக்கிறது தான் முக்கியமா என்றான்...
தாமரையோ அவன் கிறுக்குறது என்று சொன்னதை கேட்டு பல்லை கடித்தாள். அட கடவுளே கதிர் உன் வாயில வசம்பு தாண்டா வெச்சு தேய்க்கணும்...உனக்கு நேரமே சரியில்லை வாயைக் கொடுத்து அவகிட்ட வாங்கி கட்டுகிறதே பொழப்பா வைத்திருக்கிற என்று தனக்குள் சொல்லியவன் சாரி டி சாரிடி டிசைன் பண்றது...
எதுக்கு என்ன தொங்கிட்டு இருக்கீங்க?.போயிட்டு உங்க வேலையை பார்க்க வேண்டியது தானே என்க..என் பொண்டாட்டி நீ தானடி பின்ன உங்க பின்னாடி தானே தொங்கிட்டு அலைய முடியும் வேற எவளை போய் தொங்க சொல்ற?.
அதான் ரெண்டு பேரு இருங்காங்களே அவங்க பின்னாடி போய் அலைய வேண்டியதானே என்றாள்.
ஏன்டி என்ன பாத்தா என்ன பொம்பள பொறுக்கி போலயா இருக்கு என்று கோவமாக கேட்க கணவனை மேலிருந்து கீழாக பார்த்தவள் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு மீண்டும் சேரில் உட்கார்ந்து வேலையை பார்த்தாள்.
என்னடி இப்படி சொல்ற என்க போங்க போய் ரெண்டு பேருக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க எப்ப இருந்து விவசாய வேலையில் இருந்து தரகரா ஆனீங்களென்று தெரியவில்லை. உங்களை நினைச்சு கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறா என்பதனால் தான் இரவில் உறக்கம் இல்லாமே தவிக்கிறீங்களே...இப்பதான் எனக்கு விஷயம் புரியுது அடிக்கடி எந்திரிச்சு போய் பால்கனியில் நிற்கும் காரணம் என்கவும், அடிப்பாவி....!
ஏன் டி, எதையும் எதோடு நீ சேர்த்து முடிச்சு போடுற?அந்த குள்ள மாடு ஏதோ இல்லாததை அள்ளி போட்டிருக்காள். அதை போய் நம்பிகிட்டு உன் புருஷன் கிட்ட சண்டை போடுறிய பார்வதி இதெல்லாம் நல்லாவாடி இருக்கு என்கவும்,வீல் சேர் என்பதால் டக்குனு திரும்பி பார்த்தாள்.
இப்போ என்ன பேர் சொன்னீங்க?என்றாள்...ஆஹா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானடா சொன்னோம் வாய் தான் உனக்கு எதிரி என்று செத்தடா நீனு என்று திருதிருயென்று முழித்தான்.
மாமா உங்களுக்கு நிஜமாகவே அந்த பார்வதியை கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் இருந்தா தயவுசெய்து கல்யாணம் பண்ணிக்கீங்க...சும்மா என்கிட்ட அத சொல்லிக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க என்று தாமரை வருத்தமாக சொல்ல, மனைவியின் முகத்தை பார்த்தவன் ஏய் தங்கமே செல்லமே அப்படி ஒரு எண்ணம் கனவுல கூட எனக்கு கிடையாது டி. ..ஏதோ வாய் தவறி அவ பேரு வந்துடுச்சு.
சத்தியமா எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லடி என்கவும்,இல்ல மாமா தாமரை என்கிற பேரு உங்க வாயில வந்து எத்தனை நாளாவது நல்லா யோசிங்க?.
வாயை திறந்தவே பார்வதி பார்வதி பார்வதி என்று தான் சொல்லிட்டு இருக்கீங்க அப்போ உங்க மனசுல தேவி இருப்பதில்லாமல் இப்ப பார்வதி ஏறிட்டாளா என்க...
பொடிநடையாக நடந்து வந்த குப்பிளான் பள்ளிக்கூடத்தின் அருகில் வர இன்டர்வல் நேரம் என்பதால் பிள்ளைகள் அங்கே ஓடி ஆடி விளையாடுவது தெரிந்தது.
மகள் எங்கேயாவது தென்படுகிறாளா என்று கேட்டின் அருகே நின்று எட்டி பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் வெளியே வந்த செல்லா, தற்செயலாக வாசல் பக்கம் பார்க்க அங்கே தனது அப்பா நிற்கவும் வேகமாக நடந்து வந்து அப்பா என்றாள்.
ஆத்தா என்று அங்கிருந்த இரும்பு கேட்டின் இடைவெளியில் கையை விட்டு மகளின் கன்னத்தை தடவியவர் உடனே பார்க்கணும் போல இருந்துச்சு ஆத்தா, அதனால் தான் வந்துட்டேன் என்று சொல்லும்போது சந்தோஷத்தில் அவரின் கண்கள் கலங்கியது.
அப்பா நீங்க எப்ப வந்தீக?
இன்னும் இரண்டு பீரியட் தான் இருக்கிறது.அது முடிஞ்ச பிறகு நானே வீட்டுக்கு வரேன்.எதுக்குப்பா இந்த வெயில்ல நீங்க வந்தீங்க என்று தனது தந்தைக்காக செல்லா பேச...உன்ன விட வெயில் ஒன்னும் முக்கியமாத்தா.
மழை புயல் தாங்கின உடம்பு இது.என்ன ஆயிட போகுது உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சினாவே போதும் பாதி வயசு திரும்பிடும் என்றார்.தனது தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை கேட்டு அமைதியாக சிரித்தாள்.
பின்னர்,எப்படிப்பா தெரியும் என்க, மயிலா தான் போன் பண்ணி சொல்லுச்சு...நானும் உன் அம்மாகாரியும் வந்துட்டோம்.உன் ஆத்தா தலகால் புரியாம அங்க ஆடிக்கிட்டு இருக்கிறா என்று சிரித்துக் கொண்டே சொன்னவர் சரித்தா நான் வீட்டுக்கு போறேன் நீ பார்த்து பத்திரமா வா.இல்லை வெயிலா இருக்கு நீ வர வேணாம் சோறு நான் உனக்கு எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க அப்பாவை பார்த்து சிரித்தவள் நான் வீட்டுக்கு வந்துடுவேன் பா.
மாமா தான் கூப்பிட வருமே என்கவும் சரித்தா சரித்தா. கொடை எடுத்துட்டு வந்தியா என்க சிரித்துக் கொண்டே இல்லப்பா என்றாள்.
என்னா வெயில் அடிக்குது குடை எடுத்து வராமல் வந்திருக்கிறாயே என்ன புள்ள நீனு நான் போய் எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்கும் தனது தந்தையின் அன்பை பார்த்து அவளுக்கு வழக்கம் போல் பிரமிப்பாக தான் இருந்தது.
காசு பணம் இல்லை என்றாலும் அன்புக்கு ஏழைகள் இடத்தில் என்றுமே பஞ்சமில்லை இல்லையே என்று மனதிற்கு நினைத்தவள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா.
மாமா வந்துருவாங்க...
வரும்போது குடை எடுத்துட்டு தான் வரும் என்று சொல்ல சரி நான் போயிட்டு வரேன் நீ உள்ள போ என்றவர் திரும்பி ஒரு நிமிஷம் ஆத்தா என்று தனது இடுப்பு வேஷ்டியில் மேல் கட்டி இருந்த பச்சை வார் பெல்ட்டை திறந்தவர் அதற்கு உள்ளே இருந்த ஜிப்பை திறந்து அதிலிருந்த பொருளை எடுத்து மகளின் கையை காட்ட சொல்லி அதில் வைத்தார்.
செல்லாவும் அது என்னதுனு பார்க்க அதில் அம்மன் சிலை போட்ட தங்க காசு இருந்தது.இது எங்க அம்மாவோட அம்மா தன் குடும்பத்துல யாருக்கு மொத வாரிசு பொறக்குறாங்களோ அவங்களுக்கு கையில் கொடுத்து வைக்க சொல்லுவாங்க. இது அந்த மலையாத்தவே கூட துணைக்கு வந்த போல இருக்குமாம். எங்க அம்மாவோட அம்மாவுக்கு அப்புறம் எங்க அம்மா கிட்ட கொடுத்தாங்க.
எங்க அம்மா சாகும்போது என்கிட்ட கொடுத்துட்டு செத்துப்போனாங்க.அது இன்னைக்கு உனக்கு கொடுக்கிறேன் பத்திரமா வச்சுக்கோ போ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார்.
தனது தந்தையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.சிரித்துக் கொண்டே அதை துடைத்தவள் ஸ்கூல் உள்ளே செல்ல பெல் அடித்து அடுத்த பீரியட் ஆரம்பமானது.
....
ஏங்க முரளி தான் எஸ்டேட்டை நல்லா கவனிக்குறானே பொறுப்பை புள்ளகிட்ட ஒப்படைச்சிட்டு நீங்கள் ஓய்வெடுங்களேன் என்று சொல்லிய கோமதி டீ கப்பை கணவரிடம் நீட்டினார்..
மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் எனக்கு மட்டுமே ஆசையா சாகுற வரைக்கும் இப்படி நான் அல்லாட பட்டுக்கிட்டு இருக்கணும்னு?.
உன் பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு ஆனா உன் மருமகளுக்கு இன்னும் பேராசை போகல கோமதி..அந்த பொண்ணோட சிந்தனை எண்ணம் ஆசை எல்லாமே பணம் மட்டும்தான் புரியுதா?
பணம் என்று வரும் போதும் நம்ப புள்ளைய தூக்கி எறிய கூட அந்த பொண்ணு தயங்காது மா...ஒன்னும் இன்று நேற்று அந்த பொண்ணை நான் பார்க்கல...
எத்தனையோ முறை நான் கவனித்ததில் பேராசை மட்டுமே இருக்கு...இந்த லட்சணத்தில் முரளிகிட்ட எல்லாவற்றையும் தூக்கி கொடுத்துட்டு நாம பிச்சை தான் எடுக்கணும் தெரியுமா?.
கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான கோமதி என்னங்க இப்படி சொல்றீங்க??நம்ம புள்ள ஒரு காலத்திலும் அப்படி விட மாட்டாங்க என்கவும் நம்ப புள்ள விடமாட்டான் தான்...ஆனால் அந்த பொண்ணு விடும் கோமதி...
நான் நிறைய விதத்தில் பாத்துட்டேன் அந்த பொண்ணோட ஆசை சொத்து மேல தான் இருக்கே தவிர மற்றபடி குடும்பம் கணவன் குட்டி அதில் கிடையாது. வந்து ரெண்டு வருஷம் ஆகுது இதுவரைக்கும் உனக்கு ஒரு நல்ல மருமகளா நடந்து இருக்கா சொல்லு பாக்கலாம் என்க அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
ஆனாலும் கணவரிடம் விட்டுக் கொடுக்காமல் ஏங்க வேலைக்கு போற பொண்ணு நம்ம வீட்டுல தான் இத்தனை வேலைக்காரங்க இருக்காங்க என்றார்...
கோமதி எங்கப்பா இந்த எஸ்டேட் நிர்வாகிக்கும் போது நானும் வேலைக்கு தான் போனேன் நீ அப்படித்தான் இருந்தியா?.
நம்ம காலம் வேறு இந்த காலம் வேறு என்கும் மனைவியை பார்த்தவர் எத்தனை காலமானாலும் புருஷன் புருஷன் தான் பொண்டாட்டி பொண்டாட்டி தான் பொறுப்பு வரட்டும் தானாகவே நானே கொடுப்பேன் என்று சொன்னார்.
இதை எல்லாம் தனது ரூம் ஜன்னல் வழியாக காதில் வாங்கிய பவியோ தனது மேல் இப்படி ஒரு எண்ணம் இருக்கே...அப்ப நாம் நல்ல மருமகளா நடந்து கொள்ளவில்லையே என்பதை நினைத்து வருத்தப்பட்டாள்.
பின்னர் அவர் சொல்வது போல தானே நம்ம நடந்து கொண்டிருக்கோம் நம்மள பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்கே...பின்னர் முரளியை நினைத்துப் பார்க்க அவ்வளவு பெரிய பணக்காரன் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பது தெரிந்தும் தன்னை உருகி உருகி காதலிச்சானே.அவன்கிட்ட இருக்க பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணுன அது உண்மைதானே என்று மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை..
முதல் வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கையாவது ஒழுங்காக வாழப்பார் என்று மனசாட்சி சொல்லும்போது அன்று எஸ்டேட்டில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது ஞாபகம். ..முதலில் தனது வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்தவள் இனி நல்ல மருமகளாக நீங்கள் பார்ப்பீங்க மாமா என்று சொல்லிக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள்
சீமக்கரை:
தயவுசெய்து போயிட்டு படுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.உங்க கிட்ட பேசி என் மூட ஸ்பாயில் பண்ணிக்க நான் விரும்பல..இன்னும் நிறைய எனக்கு டிசைன் பண்ற வேலை இருக்கு என்கவும் ஏண்டி என்னை விட உனக்கு அந்த காக்கா வலிப்பு வந்த போல கிறுக்கிறது தான் முக்கியமா என்றான்...
தாமரையோ அவன் கிறுக்குறது என்று சொன்னதை கேட்டு பல்லை கடித்தாள். அட கடவுளே கதிர் உன் வாயில வசம்பு தாண்டா வெச்சு தேய்க்கணும்...உனக்கு நேரமே சரியில்லை வாயைக் கொடுத்து அவகிட்ட வாங்கி கட்டுகிறதே பொழப்பா வைத்திருக்கிற என்று தனக்குள் சொல்லியவன் சாரி டி சாரிடி டிசைன் பண்றது...
எதுக்கு என்ன தொங்கிட்டு இருக்கீங்க?.போயிட்டு உங்க வேலையை பார்க்க வேண்டியது தானே என்க..என் பொண்டாட்டி நீ தானடி பின்ன உங்க பின்னாடி தானே தொங்கிட்டு அலைய முடியும் வேற எவளை போய் தொங்க சொல்ற?.
அதான் ரெண்டு பேரு இருங்காங்களே அவங்க பின்னாடி போய் அலைய வேண்டியதானே என்றாள்.
ஏன்டி என்ன பாத்தா என்ன பொம்பள பொறுக்கி போலயா இருக்கு என்று கோவமாக கேட்க கணவனை மேலிருந்து கீழாக பார்த்தவள் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு மீண்டும் சேரில் உட்கார்ந்து வேலையை பார்த்தாள்.
என்னடி இப்படி சொல்ற என்க போங்க போய் ரெண்டு பேருக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க எப்ப இருந்து விவசாய வேலையில் இருந்து தரகரா ஆனீங்களென்று தெரியவில்லை. உங்களை நினைச்சு கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறா என்பதனால் தான் இரவில் உறக்கம் இல்லாமே தவிக்கிறீங்களே...இப்பதான் எனக்கு விஷயம் புரியுது அடிக்கடி எந்திரிச்சு போய் பால்கனியில் நிற்கும் காரணம் என்கவும், அடிப்பாவி....!
ஏன் டி, எதையும் எதோடு நீ சேர்த்து முடிச்சு போடுற?அந்த குள்ள மாடு ஏதோ இல்லாததை அள்ளி போட்டிருக்காள். அதை போய் நம்பிகிட்டு உன் புருஷன் கிட்ட சண்டை போடுறிய பார்வதி இதெல்லாம் நல்லாவாடி இருக்கு என்கவும்,வீல் சேர் என்பதால் டக்குனு திரும்பி பார்த்தாள்.
இப்போ என்ன பேர் சொன்னீங்க?என்றாள்...ஆஹா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானடா சொன்னோம் வாய் தான் உனக்கு எதிரி என்று செத்தடா நீனு என்று திருதிருயென்று முழித்தான்.
மாமா உங்களுக்கு நிஜமாகவே அந்த பார்வதியை கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் இருந்தா தயவுசெய்து கல்யாணம் பண்ணிக்கீங்க...சும்மா என்கிட்ட அத சொல்லிக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க என்று தாமரை வருத்தமாக சொல்ல, மனைவியின் முகத்தை பார்த்தவன் ஏய் தங்கமே செல்லமே அப்படி ஒரு எண்ணம் கனவுல கூட எனக்கு கிடையாது டி. ..ஏதோ வாய் தவறி அவ பேரு வந்துடுச்சு.
சத்தியமா எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லடி என்கவும்,இல்ல மாமா தாமரை என்கிற பேரு உங்க வாயில வந்து எத்தனை நாளாவது நல்லா யோசிங்க?.
வாயை திறந்தவே பார்வதி பார்வதி பார்வதி என்று தான் சொல்லிட்டு இருக்கீங்க அப்போ உங்க மனசுல தேவி இருப்பதில்லாமல் இப்ப பார்வதி ஏறிட்டாளா என்க...