• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
581
நீலகிரி:

ஏன் மயிலா கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகுது இன்னும் மருது பொண்டாட்டி வயித்துல ஒன்னும் புள்ள பூச்சி உண்டாகலையா என்று கேட்டுக்கொண்டே கூடை பின்னிக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி...

பொறுமையாக இருக்கட்டுமேக்கா... இருவருக்கும் இப்ப என்ன வயசு ஆகிவிட்டது என்று கேட்டுக் கொண்டே மயிலாவும் கூடையை பின்னிக் கொண்டிருக்கு அப்போது அம்மா அம்மா என்று மருத கூப்பிடும் குரல் சத்தமா கேட்டது.

மயிலாவும் மருது கூப்பிடுற போல இருக்கே கா என்று எட்டிப் பார்க்க அவன் தான் வாசலில் வந்து நின்று சற்று தூரத்தில் கூடை பின்னிக் கொண்டிருக்கும் தனது அம்மாவை பார்த்து அம்மா சீக்கிரமா என்று பதட்டமாக கூப்பிட்டான்..

மகனின் பதட்டத்தை பார்த்தவர் என்னாச்சுன்னு தெரியலையே என்று பின்னிய கூடையே அப்படி கீழே போட்டுக்கிட்டு வேகமாக உள்ளே வர என்னன்னு தெரியல வாந்தி மேல வாந்தி எடுத்துட்டு இருக்காள்.

அங்க படுக்க வச்சிருக்கேன் என்று சொன்னான்.ஆத்தா மலையம்மா என்று வேண்டிக்கொண்டு வேகமாக மருமகள் படுத்து இருக்கும் ரூமிற்குள் வந்தவர் என்னாச்சு செல்லா?இந்த மாசம் தல குளிர்ச்சியா?

சிறிது நிமிடம் யோசித்தவள் இல்லைங்க என்றாள்.ஏஏஏஏ ஆத்தா வந்துட்டியா என் வீட்டுக்கு என்று சொல்லும் போது மயிலாவின் கண்கள் கலங்கியது...

இதோ வந்துடுறேன் என்று வேகமாக அங்கிருந்து வேதாவை கூப்பிடுவதற்காக சென்றார்.சிறிது நிமிடத்தில் அங்கு வந்தவர் மருமகளின் கைய பிடித்து பார்க்க சந்தோஷம் தாங்கவில்லை.

மயிலா நாம பாட்டி ஆகிட்டோம் என்க, பார்ப்பவர்கள் எல்லாரும் குழந்தை இல்லை என்று சொல்லும் போதெல்லாம் கஷ்டமாகத்தான் இருந்தது.

இப்பொழுது தனது மருமகள் மாசமாய் இருப்பதை கேட்டு சந்தோஷத்தில் கலங்கினர்.பின்னர் மகன் மருமகள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.

மருதுவோ கதவை தாழ்ப்பாள் போட்டவன் மனைவியை கீழ குனிந்து அள்ளித் தூக்கியவன் அவளுக்கு ஆழ்ந்த முத்தத்தை பரிசாக கொடுக்கும்போது இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் வடிந்து ஓடியது.

எத்தனை நாள் குழந்தை இல்லை என்று இந்த நான்கு மாதங்களாக செல்லா அழுவது அவர்கள் இருவருக்குமே தெரியும் பார்ப்பவரெல்லாம் குழந்தையை பற்றி கேட்டு கேட்டு அவளை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இன்று தங்களுக்கு வாரிசு வந்து விட்டதென்கும் மகிழ்ச்சியில் திளைக்க,மாமா நேரம் ஆகிவிட்டது என்ன ஸ்கூல்ல கொண்டு வந்து விடுங்கள் என்க,ஏய் இன்றைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோடி நாளைக்கு போகலாம் என்றான்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் நல்லா தான் இருக்கேன் வாங்க என்று வெளியே வந்து தனது அத்தைகளிடம் சொல்லிக் கொண்டு கணவனோடு ஸ்கூலை நோக்கி சென்றாள்.
நீலகிரி:

மயிலா உடனே தனது போனை எடுத்து நாத்தனாருக்கு கால் பண்ணினார் முருகாயியும் அந்த பக்கம் இருந்து அட்டென்ட் பண்ணியவர் சொல்லு மயிலா நல்லா இருக்கியா எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று பொதுவாக இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஆத்தா முருகாயி உன் மவள் மாசமா இருக்கிறாத்தா என்று சொன்னவுடனே அப்படியா என்று கேட்ட முருகாயிக்கு அழுகையை வந்து விட்டது சந்தோஷத்தில்.

நெசமாவா என்று கேட்கவும் இதுல எங்கேயாச்சும் பொய் சொல்லுவனா என்றவர் சரி நான் வைக்கிறேன் என்று போனை வைத்து விட்டார்.கண்ணை துடைத்துக் கொண்ட முருகாயி உள்ளே இருக்கும் தனது குலதெய்வத்திடம் போய் நின்று ஆத்தா என் மகள் மூலமாக என் அண்ணன் குடும்பத்தை தழைக்க வச்சுட்டியா உனக்கு நாலு கிடாவெட்டுறேனு வேண்டிக் கொண்டார்....

பின்னர் தோட்டத்தில் கூடை பின்னி கொண்டிருக்கும் தனது கணவரை தேடி வேகமாக ஓடியவர் ஏய்யா ஏய்யா என்க....அடியேய் 18 வயசு குமரி ஆட்டம் ஓடி வர....காலு தடுக்கி கீழே விழுந்ததாக மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துடும் என்னும் போது மனைவி முகத்தில் இருக்கும் சிரிப்பும் பதட்டத்தையும் பார்த்தவர் என்னடி..ஆற அமர சொல்லு இங்கதான் இருக்கிறேன்....

உடனே போயிட்டு எல்லா வகை இனிப்பு வாங்கிக்கொண்டு சீக்கிரம் வா நம்ப அங்க போகணும்...

ஏப்புள்ள விஷயத்தை சொல்லாம மொட்டையா இப்படி சொன்னாக்க என்னடி அர்த்தம் கூறு கெட்டவளே புரிகிற போல சொல்லுடி என்றார்.

நம்ம மவள் உண்டாகியிருக்காயா எங்கவும் என்னடி சொல்ற என்று அவரும் சந்தோஷத்தில் எழுந்தவர் தலையில் கட்டி இருந்த துண்டை உதறி போட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து போனார்.

அரைமணி நேரத்தில் இரண்டு பை நிறைய மகளுக்கு வேண்டிய பழங்களை இனிப்பு வகையில் கண்ணில் படுவது எல்லாம் வாங்கிட்டு வர அதற்குள் முருகாயியும் இன்னும் இரண்டு நாளில் மகளை பார்க்க போகலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே தயார் செய்து வைத்திருந்த தின்பண்டங்கள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு தயாராக இருக்க வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் ஜீப் வரும் இடத்திற்கு போனார்கள்.

பத்து நிமிடத்தில் ஜீப்பும் நீலகிரிக்கு போவதற்காக வர ஏறி உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்தில் நீலகிரிக்கு வந்து சேர்ந்தார்கள்.இருவரும் ஆளுக்கு ஒரு பையை எடுத்துக்கொண்டு நடையை எட்டிப் போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

இருவரையும் பார்த்த மயிலா வாங்கண்ணா வா முருகாயி என்றவர் இருவருக்கும் ஆளுக்கு ஒரு சொம்பு மோரை கலக்கி கொடுக்க வெயிலுக்கு அது தொண்டைக்கு இதமாக இருந்தது.

நல்லா இருக்கிறீர்களா என்று பொதுவாக நலம் விசாரித்துக் கொண்டனர்.

மச்சான் எங்கத்தா என குப்பிளான் கேட்க, முறம் பின்னி எடுத்துட்டு போனாரு அங்க எஸ்டேட் கொடுக்கிறது இன்னும் வரலைணா.

மருதுவும் கோயம்புத்தூருக்கு போய் இருக்கிறான் என்று சொல்லவும் செல்லா இல்லையா என்றனர்.

சொல்வதை கேட்காமல் பள்ளிக்கூடம் போயிருக்கிறாளே என்க....ஒன்னும் அவசரமில்லை என்று நாத்தனார்- நாத்தனார் இருவரும் பேசிக்கொண்டு மதிய உணவை சமைத்தனர்.

குப்பிளானுக்கு தனது மகளை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்க எழுந்து அப்படி பொடி நடையாக ஸ்கூலை நோக்கி சென்றார்

சீமக்கரை:

மேலும் மூன்று நாட்கள் கடந்த இருக்க கதிரும் மனைவியிடம் பேச எவ்வளவோ முயற்சி செய்தும் புண்ணியமில்லை.

விடிந்தால் கணேசனின் மகனுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் அதற்கு தேவையான புடவையை தயார் பண்ணியவள் சீதாவிடம் கொடுத்து அவர்கள் வீட்டில் கொடுக்கச் சொன்னாள்.

அதேப்போல சீதாவும் ராதாவும் கொண்டு போய் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.மறுநாளும் வந்தது. இன்று தேனூரில் இருக்கும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தம் என்பதால் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சிலர் மாப்பிள்ளை வீட்டில் வைத்த வேனில் ஏறி சென்று விட மற்றவர்கள் எல்லாம் பைக் ஆட்டோ என கிடைத்ததில் சென்றனர்.

தாமரை தயாராகி கீழே வர அவளுக்காக கதிர் காத்திருந்தான்.அவளோ வழக்கம் போல் கணவனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த சீதா ராதவரிடம் அத்தை போகலாமா என்கவும் போகலாம் தாமரை என்றனர்.

பின்னர் அனைவரும் காரில் ஏறிக்கொள்ள பின்னாடி உட்கார்ந்திருக்கும் மனைவியை தான் கண்ணாடி வழியாக அவ்வப்போது கதிரும் பார்த்துக் கொண்டே வந்தான்.

இன்னைக்கு கணேசன் மருமகளோட மொகரை உடையது நிச்சயம் தான் என்று வள்ளிய அப்பாயி தனது கணவரிடம் சொல்ல, விடு வள்ளி ஏதோ சின்ன புள்ள பேசிடுச்சு என்கவும் அது என்னங்க வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுறதா என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

அவர்களும் மண்டபத்திற்கு வந்து சேர தெரிந்தவர்கள் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர் கதிரும் வேலுவும் அங்கு இருக்கிறவர்களோடு கலந்து கொண்டனர்.

சுதாவிற்கோ புடவை எப்படி இருக்குமோ என்றுதான் பெருங் கவலையாக இருந்தது.பியூட்டிஷனும் அவளுக்கு மேக்கப் பண்ணி முடித்தாலும் அதைப்பற்றி அவள் பெரிதும் கண்டுகொள்ளாமல் தனது அருகில் இருந்த தோழியிடமே அந்த பெண் புடவை எப்படி செஞ்சிருக்காங்கன்னு தெரியலையே?.
அறைகுறையா செஞ்சி இருந்தாக்க அசிங்கமா போயிடுமே அப்படி இப்படி என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.

சிலர் பொண்ணு எப்படி இருக்குன்னு வாங்க பார்த்துட்டு வரலாம் என்று கதவை திறந்து அவளை பார்த்துட்டு சென்றனர்.

வந்தவருக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக சுதாவும் கொடுத்துக் கொண்டிருந்தாள் நேரமும் கடந்திருக்க வழக்கமான சம்பிரதாயபடி நிச்சயதார்த்தம் ஆரம்பமானது.

அப்பொழுது பொண்ணுக்கு புடவையை கொடுக்க அவளை ஸ்டேஜுக்கு வர வைத்தனர் அவளும் அங்கே வர,தாம்பாளத்தை எடுத்துக் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு கீழே இருக்கும் ரூமிற்குள் சென்றாள்...

புடவையில் இருக்கும் டிசைனை பார்த்த அதிர்ச்சியில் சுதாவிற்கு வாயடைத்து போனது....

சுதாவின் உறவினர் பெண்களோ புடவையை பாராட்டி தள்ளிவிட்டனர் அவளுக்கு புடவை கட்டி அலங்காரம் பண்ணி ஸ்டேஜிற்கு அனுப்பிவிட்டார் நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய அந்த மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் புடவை பற்றிய பேச்சு தான் இருந்தது.

அப்பொழுது அவர்களை ஆசிர்வாதம் பண்ண கதிர் குடும்பத்தை வந்து கணேசன் கூப்பிட குடும்பமாய் ஸ்டேஜ்க்கு சென்றனர்.அங்கிருந்த சுதாவிடம் என்னுடைய பெரிய அண்ணன் மருமகள் தான்
உனக்கு புடவை தயார் பண்ணி கொடுத்ததுமா...

இதான் எங்க குடும்பத்து மூத்த மருமகள் தாமரை என்று சொல்லியவர் புடவை எப்படி இருக்குமோனு என்று ரொம்ப கவலையா இருந்தியே..என் அண்ண மருமக வெளிநாட்டில் வேலை பார்த்த பொண்ணு என்கவும் சுதாவிற்கு பேச்சே வரவில்லை.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ராதாவும் என் மருமகள் இதை போல சின்ன வேலைகள் எல்லாம் செஞ்சு கொடுக்கிறது கிடையாது.

மாமா கேட்டார்கள் என்பதற்காக தான் உனக்காக பண்ணி கொடுத்தாம்மா மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாள்.அங்கு வேலையை விட்டுட்டு இங்க வந்து இருக்கு என்று குத்தலாக சொல்லவும் சுதாவிற்கு மூஞ்சி செத்துவிட்டது. ..

அந்த பங்க்ஷனிற்கு வந்திருந்த சுதாவின் சொந்தக்காரங்கள் சிலரோ தாமரையிடம் தேடிப் போய் பேசியவர்கள் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு இதேபோல் செய்து தர முடியுமா என்று கேட்கவும் தாமரையும் சரி என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்...

எவ்வளவு பெரிய வேலையில் இருக்கிற பொண்ணு இவ்வளவு அடக்கமாக அமைதியாக தலைகணம் இல்லாமல் பதில் சொல்லுது என்று சொல்லுவது சுதாவின் காதிலும் விழுந்தது....

ஆமாம் உங்க அண்ணி என்ன படிசாசிருக்காங்களென்று தனது அருகில் இருக்கும் கணவனிடம் சுதா கேட்க அவளை ஒரு பார்வை பார்த்தவன் கூகுள்ல போய் வி. வி டிசைன்ஸ்னு செக் பண்ணி பாரு தெரியும் என்றவன் நாவடக்கம் ரொம்ப முக்கியம் இல்லைனா மூஞ்சி மொகரை உடைபட வேண்டிய நிலை வரும் என்றான்... கணவனின் பேச்சை கேட்டவளுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.

இரவு டின்னரை அங்கையே முடித்துக்கொண்டு பங்ஷனிற்கு வந்தவர்களும் கிளம்பி சென்றனர்.

கதிர் வீட்டினரும் காரில் ஏறி வீட்டை நோக்கி கிளம்பினர்.பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.தாமரை கொஞ்சம் லெமன் சோடா போட்டு தரட்டுமாயென ராதா கேட்க, அவளுக்கும் அன்னீசியாக இருப்பது போல இருந்ததால் சரிங்கத்தை என்றாள்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
581
.

ஏன்மா உனக்கு மருமகள் மட்டும் தான் கண்ணு தெரியுமா?நாங்களும் குடிப்போமே என்று செல்வி சொல்ல அம்மா அந்த அண்டால போட்டு வந்து ஊற்று குடிக்கட்டும் என்றவாறு வளவனும் உள்ளே வந்தான்...

அணணாஆஆ என்று பல்லை கடித்தவள் சினிமாக்கு போனியே வீட்ல சொல்லட்டுமா என்க...வளவனோ திருதிருவென முழித்தான்.

இப்போது பேசு பார்க்கலாமென்கும் தங்கையை பார்த்தவன் ஹி ஹி ஹி உனக்கு இல்லாத ஜூஸாடா குடிடா செல்லம் நல்லா ஐஸ் போட்டு குடிடா என்க அந்த பயம் இருக்கட்டும் என்றாள்.

சிறிது நிமிடமும் சென்று ஆளுக்கு ஒரு கிளாஸ் லெமன் ஜூஸை ராதாவும் கொண்டு வந்து கொடுக்க அவர்களுக்கும் குடுத்துவிட்டு படுக்க சென்றனர்.

தாமரையும் பொறுமையாக மேலே வந்தவள் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி வைத்து புடவையை கழட்டிய பிறகு தான் அவளுக்கு இயல்பாக மூச்சு விடுவது போல் இருந்தது.

ரெஸ்ட்ரூம் போய் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இலகுவான நைட்டியை போட்டு வெளியே வர கதவு தட்டும் சத்தம் கேட்டது எதுவும் சொல்லாமல் போய் கதவை திறந்து விட்டு வந்தவள் தனது வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே வந்தவன் மனைவியை பார்த்துக் கொண்டு போட்டிருந்த டிரஸ்சை மாற்றி விட்டு கட்டில் மேல் உட்கார்ந்தவன் ஏண்டி இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு இருக்க போறேன் என்க...

தாமரையோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள் உன்கிட்ட தாண்டி கேட்டுட்டு இருக்கேன் அப்படி என்ன தப்பு பண்ணினேன் சொல்லு என்கவும் அதுக்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. ..

எவளோ பண்ணிய வேலைக்கு என்ன போயிட்டு காய விடுறியேடி என்று கேட்டுக் கொண்டு மனைவியின் அருகில் வந்து அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன் உன்கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன் வேற எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம் என்க...

மரியாதையா என் மேல் இருந்து கையை எடுங்கள் என்றாள்.என்னடி இப்படியே சொல்லிட்டு இருக்க?உன்ன தொட கூட எனக்கு உரிமை இல்லையா என்கவும் ஆமா இல்ல என்றாள்.

அப்போ இந்த கழுத்தில் போட்டு இருக்கியே தாலி அது நான் கட்டினது தானடி என்று கோவமாக கேட்க வேண்டும் என்றால் கழட்டி எடுத்துட்டு போய் எவ கழுத்திலாவது போட்டுக் கொள்ளுங்கள் என்க....

ஏய் என மனைவியின் கழுத்தை பிடித்தவன் என்னடி இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற அவதான் ஏதோ லூசு பிடிச்சவ உளறிட்டு இருக்காள்...எனக்கு நீதான் டி வேண்டும்...அவ பேச்சை கேட்டு ஆடிட்டு இருக்கியே?

எவள் பேச்சு என தாமரை கேட்க அந்த பார்வதி பற்றி தானே என்று கதிர் சொல்ல நான் பார்வதி பத்தி பேசுறேன்னு சொல்லவே இல்லையே....

அடுத்தது அந்த பொண்ணு பேர் பார்வதியானு நான் கேட்கவே இல்லையே என்கவும் கதிரோ திரு திருவென்று முழித்தான்.....

சொல்லுங்க நான் பார்வதின்னு பேர் சொல்லவே இல்லையே?சம்பந்தமே இல்லாம பார்வதி என்கிற பெயர் எதுக்கு எடுக்குறீங்க??

அப்ப நீங்க அவள தான் நினைச்சுட்டு இருக்கீங்களா என்று கேட்க,கதிரால் ஒண்ணுமே சொல்ல முடியவில்லை.

அவன் முழிப்பதை பார்த்தவள் வாய் கிழிய பேசுவீங்களே இப்போது ஒன்னும் பதில் காணோமே என்று எழுந்து நின்று கையை கட்டிக் கொண்டு கேட்க இவ என்னத்த சொல்றான்னு தெரியலையே?.

நம்ம எதுல மாட்டுனோமோ?

ஆண்டவா அந்த பார்வதி விஷயத்தை தான் பேசுறாள்னு பார்த்தா இவ அது இல்லைன்னு சொல்றாளே...அப்ப வேற என்ன விஷயமா இருக்கும் என்று கதிர் யோசனை பண்ண அவன் முகத்தை பார்த்தவள் பின்னர் டேபிளின் மேல் இருந்த தனது போனை எடுத்து அதில் இருக்கும் ஒரு வீடியோவை ஆன் பண்ண அந்த வீடியோவில் ஓடியதை பார்த்து விழி பிதுங்கி போனான்..

அடி சண்டாள சிறுக்கி நீ பண்ணிய வேலையா டி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனுக்கு அந்த நாளை பற்றிய நினைவு வந்தது

கதிர் கனியூர் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது மாந்தோப்பிற்கு சென்றிருந்தான்.
இவர்களுடைய தோப்புக்கும் பக்கத்து தோப்பு தான் தேவி வீட்டின் மாந்தோப்பு என்பதால் அவளும் தோட்டத்தில் நடக்கும் வேலையை பார்க்க வந்திருந்தாள்.

இவனும் தனது தோட்டத்தை சுத்திப் பார்த்துக் கொண்டே அந்தப் பக்கம் திரும்ப அங்கே தேவி உக்காந்திருப்பது தெரிந்தது.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் நேராக அவர்கள் தோப்பிற்கு போனவன் என்ன தேவி வேலை எல்லாம் முடிந்து விட்டதா என்று கேட்க அவளோ ம்ம் என்று சொன்னாள்.

சற்று தூரத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியாக இருக்கலாம் என்று இருக்க?
உன்ன நினைச்சு அத்தையும் தேவ் மாமாவும் ரொம்ப வருத்தப்படுறாங்க என்று சொல்ல,அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.வருஷமோ போயிட்டு இருக்கு உனக்கு வயசு போகுது தேவி.காலகாலத்தோட ஒரு கல்யாணத்தை நீ பண்ணினால் அத்தையும் தேவ் மாமாவும் திரும்ப இங்க வீட்டுக்கு வந்துருவாங்க.

மாமாவுடைய கடைசி காலத்துல அத்தையோட துணை நிச்சயமா அவங்களுக்கு வேணும்.நீ ஏன் இன்னும் என்னை நெனச்சிட்டு இருக்க?என்று சொல்ல,அவனை நிமிர்த்து பார்த்தவாறு எழுந்து நின்றவள் யார் சொன்னது நான் உங்களை தான் நினைச்சுட்டு கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று திருப்பி கேட்க...

யார் சொல்லி எனக்கு தெரியனும்?.

உன் மனசுல நான் இருக்கேன் என்பது தெரியும் தேவி.எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு நான் என்ன கல்யாணம் பண்ணிக்காமலா இருக்கிறேன் உன்னுடைய காதலை புரிந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு என்கவும் நான் உங்ககிட்ட கேட்கவே இல்லையே என்ன கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு...
எதுக்கு தேவையில்லாத எல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க என்றாள்.

அப்ப நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போ.நீ இப்படி இருக்கும் போது பார்க்க எனக்கு உண்மையிலேயே கஷ்டமாக இருக்கிறதுமா...

அப்படியா?அப்ப கஷ்டமா இருந்தாக என்னை கல்யாணம் பண்ணிக்கீங்க என்று தேவி கேட்க எதேஏஏஏ என்ன விளையாடுறியா டி?.ஏற்கனவே ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் படுற பாடு போதாதா? இதுல இன்னொன்னும் கட்டிக்கிட்டு அவஸ்தைப்படணுமா என்று கதிர் சொல்ல,ஓஓஓ அப்ப நீங்க தாமரை கூட சந்தோஷமா வாழலையா என்று தேவி குதுர்க்கமாக கேட்டாள்.

யார் சொன்னா??...நல்லதா வாழுறேன்.
சரி அது எதுக்கு தேவை இல்லாத விஷயம்,நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற அதை சொல்லு என்றான்.

நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்ககிட்ட சொல்லவே இல்லையே கடைசி வரைக்கும் நான் இப்படியே தான் இருக்க போறேன். .

ஏய் நீ இப்படியே இருக்க அது உண்மையிலேயே எனக்கு பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு தேவி என்று மீண்டும் கதிர் சொல்ல அதுக்கு தேவியோ அவ்வளவு கஷ்டமா இருந்தா நீங்களே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கள் என்று மீண்டும் சொல்ல,நான் தான் சொல்லிட்டு இருக்கேன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டி.இல்லையென்றால் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறது எனக்கு என்ன பிரச்சனை என்று சொல்வதோடு அந்த வீடியோ முடிந்து இருந்தது...

அடி பாவி....உன்னுடைய நல்லதுக்கு சொல்லப்போனால் இதை அப்படியே வீடியோ ரெக்கார்டிங் எடுத்து இந்த வைஜெயந்தி போலீசுக்கு அனுப்பி இருக்கிறாளே?. இது தெரியாம நான் வேற பைத்தியக்காரன் போல பார்வதி விஷயத்தை நினைத்து கோவமா இருக்குறானு இருக்குறோமோ என்று தலையில் கை வைத்துக் கொண்டான்.

வீடியோ முடிந்ததும் பிறகு தேவி அனுப்பிய மெசேஜை கதிரிடம் காமிக்க அதில்,என்ன தான் உனக்கு தாலி கட்டி இருந்தாலும் மாமாவோட மனசுல இன்னும் என்ன பத்தி நினைவுகள் தான் இருக்கு...

அப்போ அவருக்கு முதல் உரிமை எனக்கு தான்.சோ என் புருஷனை தான் நீ கல்யாணம் பண்ணியிருக்க..உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போட்ட போல இருக்கட்டும் என்று இருப்பதை படித்தவன் அதிர்ந்து போய் இல்லைடி...

சத்தியமா அப்படி ஒரு எண்ணத்தில் நான் சொல்லுலடி அந்த புள்ள தனியா இருக்கிறாளே...அது பாவமா இருக்கவும் தாண்டி நான் சொன்னேன் இந்த பிரச்சனையில் வசந்தி அத்தையும் தேவ் மாமாவும் மதுரையில போய் இருக்கிறார்கள்.

எப்படியாவது இவ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பமாக இருப்பானு நினைச்சு தாண்டி சொன்னேன் வேறு எந்த எண்ணத்தில் நான் சொல்லலைடி தயவுசெய்து என்னை நம்பு என்று மனைவியிடம் கெஞ்ச அவளோ அவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அடிப்பாவிங்களா எங்க இருந்துடி வரீங்க என் வாழ்க்கையில விளையாட...ஒருத்தன் நல்லவனா இருந்தா ஒருத்திக்கும் பொறுக்காது போல என்று திட்டியவன் தாமரை தயவு செய்து நான் சொல்றதை கேளுடி.என் மனசுல நெனப்புல நீ மட்டும் தான் இருக்க என்று சொல்ல மரியாதையா வாய மூடுங்க நான் மட்டும் தான் இருக்கிற போல இருந்தா எதுக்கு இன்னொரு பொண்ணு பத்தி ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டு கண்ணீர் வடிச்சிட்டு இருக்கீங்க?.

ஏய் கவலைதாண்டி படுறேன் கண்ணீர் எல்லாம் விடலை டி...ஓ அப்ப அவ கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது உங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கா?போய் இரண்டாந்தரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே...இது காலம் காலமா நடக்குற விஷயம் தானே இதில் என்ன கெட்டுப் போயிட போகுது அவ பத்தாதுனாக்க அந்த பார்வதி ஒருத்தி சுத்திட்டு இருந்தாளே அவளையும் கட்டிக்கீங்க...

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல வேணும்னா சொல்லுங்க டைவர்ஸ் பத்திரத்தில் நானே கையெழுத்து போட்டு தரேன் என்று தாமரை சொல்ல, எதேஏஏஏ டைவர்ஸாஆஆஆ..

அய்யோ செல்லம் என் உசுரே நீதான் டி..இந்த ஜென்மம் இல்லை எல்லா ஜென்மத்திலும் எனக்கு நீ மட்டும் போதும்டி என்று மனைவியின் கையை பிடித்தான்....

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top