Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 563
- Thread Author
- #1
சீமக்கரை:
நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய எல்லாரையும் சாப்பிட அனுப்பி வைத்தனர்.வந்தவர்கள் எல்லாரையும் நன்கு கவனித்து அனுப்பவும் கடைசியாக பொண்ணு மாப்பிள்ளையோடு வீட்டினர் எல்லாரும் சாப்பிட போனார்கள்..
தாமரையும் கதிரும் அருகருகே அமர்ந்தது போல வேலு-செல்வி,ஜான்-அல்லி ஜோடி ஒரே வரிசையில் அவரவர் இணையோடு அமர்ந்து கொண்டனர்.
தனது இடது பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவளின் இடது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கதிர் உட்கார்ந்திருக்க மாமா என்றாள்.
என்னடி என்று அவள் பக்கம் குனிந்து கேட்க லவ் யூ என்று சொல்லவும் கதிருக்கோ சிரிப்பு வந்துவிட்டது.என்னடி திடீர்னு என்று கேட்க ரொம்ப அழகா இருக்க என்றாள்.
ஓஓஓஓ அப்போ இத்தனை நாளும் என்ன குறவன் போலயா இருந்தேன் என்று கேட்க ,ஆமா அதுல என்ன சந்தேகம். இருந்தாலும் இதைவிட அந்த தாடியோடு தான் நல்ல அழகா இருந்த மாமா. பார்க்க நல்லா அடங்காத காளை போல என்று சொல்ல அடக்கடவுளே...உனக்கு பிடிக்கலைன்னு தாண்டி நான் வேறு அவசரப்பட்டு மனசு இல்லாம ஷேவ் பண்ணுனேன்.
இனி எந்த காலம் தாடி வளரும் என்று கேட்க,யோவ் இப்பயும் நல்லா இருக்குயா என்று அவசரமாக சொன்னாள்.
அப்படியா...உனக்கு புடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்டி.என் பொண்டாட்டிக்காக தான் ஷேவ் பண்ணுனேன் என்று சொல்ல, நிஜமாவா என்பவளுக்கு ஆமாண்டி இதுல என்ன சந்தேகம். அந்த நேரத்தில் அந்த ஏர்போர்ட் சுத்தி இருக்கிற இடம் ஃபுல்லா அலைஞ்சேன்.
ஒரே ஒரு பார்லர் திறந்து இருந்துச்சு. அவனும் கடை கட்டுற நேரம்.அவனிடம் கெஞ்சி கையில கால்ல விழாத குறையா மனுஷன் சேவ் பண்ணிட்டு வந்தேன்டி என்க அப்படி என்று ஆச்சரியப்பட்டாள்.
ஆமாடி காலையில உன்னை பார்க்கும் போது இந்த கெட்டப்பல இருக்கணும் நீ அசந்து போறதை பார்த்து ரசிக்கணும்னு ஆசை ஆசையா வந்தேன். திடீர்னு வேதா அம்மா போன் பண்ணிச்சு.மதுரை கிட்ட வரும்போது அவங்க வந்த கார் பிரேக் டவுன்ஆயிடுச்சுணு. அதனால தான் நான் கார் எடுத்துட்டு அவங்களை பிக் அப் பண்ணிக்க போனேன்.
கொஞ்ச நேரம் கார்ல வெயிட் பண்ணுங்க நான் ரெடி ஆயிட்டு வரேன்னு உள்ள போய் கிடுகிடுன்னு ரெடி ஆயிட்டு தான் அவங்க கூட உள்ள வந்தேன்டி என்று சொன்னான்.
காலையில இருந்து உன்னை தேடி எப்படி தவித்தேன் தெரியுமா மாமா என்று கவலையாக கேட்க,தெரியும்டி.என் பொண்டாட்டியோட தவிப்பு எனக்கு இருக்காதா.நான் மட்டும் உன்னை நினைக்காமலா இருந்தேன் சொல்லுடி என்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பவளை பார்த்து கண்ணடித்தபடியே தனது இடது பக்க மீசையை முறுக்கி விட்டவன் வேற எதுக்குடி குறைச்சல் சொல்லு பார்க்கலாம் என்க...
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஜான் சாப்பிட வந்திருக்கோம் டா. அதை விட்டு இங்க என்னடா நடக்குது என்க,உன் பொண்டாட்டி தான் பக்கத்துல இருக்கிறாளே மைக் முழுங்கியபோல...அவளிடம் பேச வேண்டியதுதானே.இங்கே எட்டி பாக்குறியே பங்காளி, வெக்கமா இல்லையா என்று கதிர் கேட்க எனக்கு இது தேவைதான் என்றவன் அல்லி பக்கம் திரும்பி அப்புறம் செல்லம் நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் என்று கேட்க அவளோ முறைத்து பார்த்தாள்.
ஏண்டி கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு தானே கேட்டேன்.என்னமோ இப்பவே குழந்தை பெத்துக்கலாம்னு கூப்பிட்ட போல இப்படி முறைக்கிறியே என்று சொல்ல, வாய் வாய் என்று ஜானின் தலையில் அல்லி குட்ட மற்றவர்களும் அதை பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்.
அடி சண்டாள சிறிக்கி... மானத்தை வாங்கிட்டியேடி.உன் அண்ணனை பார்டி விழுந்து விழுந்து சிரிக்கிறானே என்று வேலுவை காட்ட,நீ நடத்துடா சின்ன குட்டி.அண்ணன் நான் இருக்கிறேன். அங்க பாரு ஆப்போசிட்ல தான் அந்த குழம்பு கரண்டி எல்லாம் இருக்கு.அதால அடிடா உனக்கு கை வலிக்காது செல்லம் என்க, அப்படியாண்ணா அப்போ சரி..
யாராச்சும் சாப்பாடு பரிமாற வருவார்களே அவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்ணா என்று அல்லி சொல்ல அட கொலைகார கும்பலிடம் தெரிஞ்சே வந்து தலையை கொடுத்துட்டனே...
அப்பா அய்யனாரே.. இவனுங்களுக்கு மத்தியில் நீதான் என் உசுர காப்பாத்தணும் என்றான். அவர்களுக்கு உணவு பரிமாற போட்டோகிராபரும் அங்கு வந்து விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி மூவர் ஜோடியும் போட்டோ எடுத்து செல்ல ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தனர்.
பின்னர் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் சம்பிரதாயபடி சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
மருது செல்லாவை பற்றி வீட்டினார்கள் பேசிக் கொண்டிருக்க தாமரை அவர்களிடம் சொல்லிக் கொண்டு மேலே அறைக்குள் வந்தவுடன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு குளிக்கு சென்று சிறிது நிமிடத்திலேயே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
என்ன மாமா என்க...
சீக்கிரம் கதவு திறடி அர்ஜெண்டா இருக்கு என்று சொல்ல, உன்ன பத்தி எனக்கு தெரியும் இப்படித்தான் சொல்லுவ பின்ன வேற வேலை எல்லாம் பண்ணுவ என்று கேட்க இல்லடி இல்லடி அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்றான்.
நம்பலாமா என்று கேட்க நம்பலாண்டி என்று சொன்னவுடன் கதவை திறக்க புயல் போல் உள்ள வந்தவன் கதவை தாழிட்டு விட்டு மனைவியோடு காதல் பாடத்தோடு காம பாடத்தையும் அங்கே தொடங்க, இருவரும் குளித்து முடித்து வெளியே வரவே ஒரு மணி நேரத்துக்கு மேலானது.
இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது என்க,காதலுக்கு ஏதடி நேரம்.கிடைக்கும்போது லவ் பண்ணிட்டு தான் இருக்கணும்.
இது கூட தெரியாதாடி மக்கு பொண்டாட்டி என்க, போயா என்று சொல்லி வெட்கப்பட்ட தாமரை சிரித்தபடியே வெளியே போனவள் அங்கிருந்த மறைவில் நைட் டிரஸை மாற்றினாள்.
சீக்கிரம் வாடி செல்லம் நேரம் ஆயிடுச்சு அடுத்த நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்லு எதே என்று அதிர்ந்தவளை பின்னாடி இருந்து அணைத்து தூக்கியவன் பெட்டின் மேல் வந்து உக்காந்து தனது மடியில் மனைவியை உட்கார வைத்துக் கொண்டு சந்தோசமா இருக்கியாடி என்று கேட்டான் .
வாயால சொல்லுவதை விட செயலே தன்னவனுக்கு பிடித்தமானது என்று புரிந்தவள் கணவனின் கழுத்தில் கையை வைத்து தன் பக்கம் இழுத்தவள் அவன் முரட்டு இதழில் தனது மென்மையான இதழை பதித்தாள்...
.
ஆதவனின் பொற்கரங்கள் கிழக்கே உதயமாக வழக்கம்போல் அவரவர் வேலை பார்க்க தொடங்கினர். இன்று வயலில் எள்ளு விதைப்பதால் ஆண்களோ காலையிலேயே சென்றுவிட்டனர்.
காலை டிபனை மற்றவர்கள் முடித்திருக்க,
அப்பொழுது டெம்போவில் சில பொருட்களோடு வந்து நான்கு பேர் கதிரின் வீட்டின் முன்னால் இறங்கினர்.
சார் சார் என யாரோ கூப்பிட சத்தம் கேட்டு தாமரையும் வாசலில் வந்து பார்த்தவள் சொல்லுங்க என்க,பெருமாள் சார் என்கவும், உட்காருங்க இதோ வருவாங்களென்று அங்கிருந்த திண்ணையை காட்டி சொல்லியவள் வீட்டிற்குள் சென்று அத்தை மாமாவை பார்க்க வந்திருக்கிறார்கள் என்க...
சரிமா நீயே போன் போட்டு விஷயத்தை சொல்லு என்கவும் வீட்டிலிருந்த போனிலிருந்து பெரும்மாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல இதோ வருகிறேன் என்று சொல்லி போனை வைத்தார்.
அந்த நால்வரும் டெம்போவில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே இறக்கி வைக்க அண்ணா டீ குடிக்கிறீங்களா இல்ல மோரா என்று தாமரை கேட்க எதுவுமே வேண்டாம் மா.வரும்போது சாப்பிட்டு வந்தோம் என்றனர்.
பெருமாளும் வந்துவிட பின்னர் அவரிடம் சில விஷயங்களை பேசிவிட்டு வந்த வேலையை ஆரம்பித்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு அங்கே என்ன வேலை பண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை. உள்ளே வந்தவரோ வேலையை முடித்து போகும் வரை அவர்களுக்கும் சேர்த்து சமைக்குமாறு சொன்னார்.
மேலும் இரண்டு நாட்கள் வேதா மயிலா மூக்கையன் மூவரும் சீமக்கரையில் தங்கி விட்டு அன்று இரவே அவர்களிடம் சொல்லிக் கொண்டு நீலகிரிக்கு கிளம்பினர்.
தனது மருமகளிடம் வந்த வேதாவோ அடுத்த முறை உன்னை பார்க்கும் பொழுது என் பேரப்பிள்ளை செய்தி ஏதாவது சொல்லணும் என்க தனது அத்தையை அணைத்துக் கொண்டவள் சரிகத்தை என்றாள்.
அவர்களை பஸ் ஏற்றி விட்டு வீட்டிற்கு மேலே இருக்கும் தனது ரூமிற்கு வந்த கதிர் என்னடி ரெடியா என்று கேட்க தாமரையோ கம்ப்யூட்டரில் டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்தவள்,என்ன சொல்லிட்டு போனீங்க ரெடி பண்ணி வைக்கிறதுக்கு என்று குழப்பமாக கேட்க...
என்னடி இப்படி கேட்டுட்ட??
எங்க அம்மா எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு போயிருக்காங்க அதற்கான ப்ராசஸ்ல இறங்காமல் உன் பாட்டுக்கு ஹாயா உட்கார்ந்து இருக்கிறியேடி. ..
கணவன் என்ன பேசுகிறான் என்பது புரியாமல் அத்தை என்கிட்ட அப்படி எந்த வேலையையும் கொடுக்கவில்லையே என்று யோசனை செய்து பார்த்தாள்.
கதிருக்கு தனது மனைவியை பார்த்து சிரிப்பு வந்தது.இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னடி இவ்வளவு மக்கா இருக்க??
உன்னை வச்சிக்கிட்டு நான் எப்படி காலத்தை தள்றது. படிப்பில் மட்டும் தான் மார்க் போல மற்றதில் ஜீரோ தானோ...
இந்த கதிருக்கு இப்படி ஒரு மக்கு மட சாம்பிராணி பொண்டாட்டியா என்க...யோவ் ஒழுங்கு மரியாதைய என்ன விஷயம் சொல்லுயா. அதைவிட்டு உன் பாட்டுக்கு நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்கியே என்றாள்.
ஏதேஏஏஏ யோவா என்றவாறு மனைவியிடம் வந்தவன் அவள் உதட்டை பிடித்து திருக வலியில் ஆஆஆ என்று கத்துபவளை பிடித்து இழுத்தவன் அவள் உதட்டோடு தனது முரட்டிதழை பொருத்தினான்.
சிறிது நொடிகளில் சென்று விட்டவன் எங்க அம்மா பேரப்பிள்ளை கேட்டாங்களே ஞாபகம் இல்லையாடி என அவள் காதில் சொல்ல இப்பொழுது தாமரைக்கு வெட்கம் வந்தது.
குழந்தை பெத்துக்கலாமாடி என்று கேட்க போயா என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...
மேலும் ஒரு வரம் கடந்து சென்றது. ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கோ பக்கத்தில் ஷெட் போட்டு சுற்றியும் ஹாலோ பிளாக் கல்லால் சிறிய வீடு போல கட்டுகிறார்களே அது எதற்கு என்பது மட்டும் தெரியவில்லை
நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய எல்லாரையும் சாப்பிட அனுப்பி வைத்தனர்.வந்தவர்கள் எல்லாரையும் நன்கு கவனித்து அனுப்பவும் கடைசியாக பொண்ணு மாப்பிள்ளையோடு வீட்டினர் எல்லாரும் சாப்பிட போனார்கள்..
தாமரையும் கதிரும் அருகருகே அமர்ந்தது போல வேலு-செல்வி,ஜான்-அல்லி ஜோடி ஒரே வரிசையில் அவரவர் இணையோடு அமர்ந்து கொண்டனர்.
தனது இடது பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவளின் இடது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கதிர் உட்கார்ந்திருக்க மாமா என்றாள்.
என்னடி என்று அவள் பக்கம் குனிந்து கேட்க லவ் யூ என்று சொல்லவும் கதிருக்கோ சிரிப்பு வந்துவிட்டது.என்னடி திடீர்னு என்று கேட்க ரொம்ப அழகா இருக்க என்றாள்.
ஓஓஓஓ அப்போ இத்தனை நாளும் என்ன குறவன் போலயா இருந்தேன் என்று கேட்க ,ஆமா அதுல என்ன சந்தேகம். இருந்தாலும் இதைவிட அந்த தாடியோடு தான் நல்ல அழகா இருந்த மாமா. பார்க்க நல்லா அடங்காத காளை போல என்று சொல்ல அடக்கடவுளே...உனக்கு பிடிக்கலைன்னு தாண்டி நான் வேறு அவசரப்பட்டு மனசு இல்லாம ஷேவ் பண்ணுனேன்.
இனி எந்த காலம் தாடி வளரும் என்று கேட்க,யோவ் இப்பயும் நல்லா இருக்குயா என்று அவசரமாக சொன்னாள்.
அப்படியா...உனக்கு புடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்டி.என் பொண்டாட்டிக்காக தான் ஷேவ் பண்ணுனேன் என்று சொல்ல, நிஜமாவா என்பவளுக்கு ஆமாண்டி இதுல என்ன சந்தேகம். அந்த நேரத்தில் அந்த ஏர்போர்ட் சுத்தி இருக்கிற இடம் ஃபுல்லா அலைஞ்சேன்.
ஒரே ஒரு பார்லர் திறந்து இருந்துச்சு. அவனும் கடை கட்டுற நேரம்.அவனிடம் கெஞ்சி கையில கால்ல விழாத குறையா மனுஷன் சேவ் பண்ணிட்டு வந்தேன்டி என்க அப்படி என்று ஆச்சரியப்பட்டாள்.
ஆமாடி காலையில உன்னை பார்க்கும் போது இந்த கெட்டப்பல இருக்கணும் நீ அசந்து போறதை பார்த்து ரசிக்கணும்னு ஆசை ஆசையா வந்தேன். திடீர்னு வேதா அம்மா போன் பண்ணிச்சு.மதுரை கிட்ட வரும்போது அவங்க வந்த கார் பிரேக் டவுன்ஆயிடுச்சுணு. அதனால தான் நான் கார் எடுத்துட்டு அவங்களை பிக் அப் பண்ணிக்க போனேன்.
கொஞ்ச நேரம் கார்ல வெயிட் பண்ணுங்க நான் ரெடி ஆயிட்டு வரேன்னு உள்ள போய் கிடுகிடுன்னு ரெடி ஆயிட்டு தான் அவங்க கூட உள்ள வந்தேன்டி என்று சொன்னான்.
காலையில இருந்து உன்னை தேடி எப்படி தவித்தேன் தெரியுமா மாமா என்று கவலையாக கேட்க,தெரியும்டி.என் பொண்டாட்டியோட தவிப்பு எனக்கு இருக்காதா.நான் மட்டும் உன்னை நினைக்காமலா இருந்தேன் சொல்லுடி என்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பவளை பார்த்து கண்ணடித்தபடியே தனது இடது பக்க மீசையை முறுக்கி விட்டவன் வேற எதுக்குடி குறைச்சல் சொல்லு பார்க்கலாம் என்க...
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஜான் சாப்பிட வந்திருக்கோம் டா. அதை விட்டு இங்க என்னடா நடக்குது என்க,உன் பொண்டாட்டி தான் பக்கத்துல இருக்கிறாளே மைக் முழுங்கியபோல...அவளிடம் பேச வேண்டியதுதானே.இங்கே எட்டி பாக்குறியே பங்காளி, வெக்கமா இல்லையா என்று கதிர் கேட்க எனக்கு இது தேவைதான் என்றவன் அல்லி பக்கம் திரும்பி அப்புறம் செல்லம் நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் என்று கேட்க அவளோ முறைத்து பார்த்தாள்.
ஏண்டி கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு தானே கேட்டேன்.என்னமோ இப்பவே குழந்தை பெத்துக்கலாம்னு கூப்பிட்ட போல இப்படி முறைக்கிறியே என்று சொல்ல, வாய் வாய் என்று ஜானின் தலையில் அல்லி குட்ட மற்றவர்களும் அதை பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்.
அடி சண்டாள சிறிக்கி... மானத்தை வாங்கிட்டியேடி.உன் அண்ணனை பார்டி விழுந்து விழுந்து சிரிக்கிறானே என்று வேலுவை காட்ட,நீ நடத்துடா சின்ன குட்டி.அண்ணன் நான் இருக்கிறேன். அங்க பாரு ஆப்போசிட்ல தான் அந்த குழம்பு கரண்டி எல்லாம் இருக்கு.அதால அடிடா உனக்கு கை வலிக்காது செல்லம் என்க, அப்படியாண்ணா அப்போ சரி..
யாராச்சும் சாப்பாடு பரிமாற வருவார்களே அவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்ணா என்று அல்லி சொல்ல அட கொலைகார கும்பலிடம் தெரிஞ்சே வந்து தலையை கொடுத்துட்டனே...
அப்பா அய்யனாரே.. இவனுங்களுக்கு மத்தியில் நீதான் என் உசுர காப்பாத்தணும் என்றான். அவர்களுக்கு உணவு பரிமாற போட்டோகிராபரும் அங்கு வந்து விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி மூவர் ஜோடியும் போட்டோ எடுத்து செல்ல ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தனர்.
பின்னர் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் சம்பிரதாயபடி சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
மருது செல்லாவை பற்றி வீட்டினார்கள் பேசிக் கொண்டிருக்க தாமரை அவர்களிடம் சொல்லிக் கொண்டு மேலே அறைக்குள் வந்தவுடன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு குளிக்கு சென்று சிறிது நிமிடத்திலேயே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
என்ன மாமா என்க...
சீக்கிரம் கதவு திறடி அர்ஜெண்டா இருக்கு என்று சொல்ல, உன்ன பத்தி எனக்கு தெரியும் இப்படித்தான் சொல்லுவ பின்ன வேற வேலை எல்லாம் பண்ணுவ என்று கேட்க இல்லடி இல்லடி அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்றான்.
நம்பலாமா என்று கேட்க நம்பலாண்டி என்று சொன்னவுடன் கதவை திறக்க புயல் போல் உள்ள வந்தவன் கதவை தாழிட்டு விட்டு மனைவியோடு காதல் பாடத்தோடு காம பாடத்தையும் அங்கே தொடங்க, இருவரும் குளித்து முடித்து வெளியே வரவே ஒரு மணி நேரத்துக்கு மேலானது.
இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது என்க,காதலுக்கு ஏதடி நேரம்.கிடைக்கும்போது லவ் பண்ணிட்டு தான் இருக்கணும்.
இது கூட தெரியாதாடி மக்கு பொண்டாட்டி என்க, போயா என்று சொல்லி வெட்கப்பட்ட தாமரை சிரித்தபடியே வெளியே போனவள் அங்கிருந்த மறைவில் நைட் டிரஸை மாற்றினாள்.
சீக்கிரம் வாடி செல்லம் நேரம் ஆயிடுச்சு அடுத்த நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்லு எதே என்று அதிர்ந்தவளை பின்னாடி இருந்து அணைத்து தூக்கியவன் பெட்டின் மேல் வந்து உக்காந்து தனது மடியில் மனைவியை உட்கார வைத்துக் கொண்டு சந்தோசமா இருக்கியாடி என்று கேட்டான் .
வாயால சொல்லுவதை விட செயலே தன்னவனுக்கு பிடித்தமானது என்று புரிந்தவள் கணவனின் கழுத்தில் கையை வைத்து தன் பக்கம் இழுத்தவள் அவன் முரட்டு இதழில் தனது மென்மையான இதழை பதித்தாள்...
.
ஆதவனின் பொற்கரங்கள் கிழக்கே உதயமாக வழக்கம்போல் அவரவர் வேலை பார்க்க தொடங்கினர். இன்று வயலில் எள்ளு விதைப்பதால் ஆண்களோ காலையிலேயே சென்றுவிட்டனர்.
காலை டிபனை மற்றவர்கள் முடித்திருக்க,
அப்பொழுது டெம்போவில் சில பொருட்களோடு வந்து நான்கு பேர் கதிரின் வீட்டின் முன்னால் இறங்கினர்.
சார் சார் என யாரோ கூப்பிட சத்தம் கேட்டு தாமரையும் வாசலில் வந்து பார்த்தவள் சொல்லுங்க என்க,பெருமாள் சார் என்கவும், உட்காருங்க இதோ வருவாங்களென்று அங்கிருந்த திண்ணையை காட்டி சொல்லியவள் வீட்டிற்குள் சென்று அத்தை மாமாவை பார்க்க வந்திருக்கிறார்கள் என்க...
சரிமா நீயே போன் போட்டு விஷயத்தை சொல்லு என்கவும் வீட்டிலிருந்த போனிலிருந்து பெரும்மாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல இதோ வருகிறேன் என்று சொல்லி போனை வைத்தார்.
அந்த நால்வரும் டெம்போவில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே இறக்கி வைக்க அண்ணா டீ குடிக்கிறீங்களா இல்ல மோரா என்று தாமரை கேட்க எதுவுமே வேண்டாம் மா.வரும்போது சாப்பிட்டு வந்தோம் என்றனர்.
பெருமாளும் வந்துவிட பின்னர் அவரிடம் சில விஷயங்களை பேசிவிட்டு வந்த வேலையை ஆரம்பித்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு அங்கே என்ன வேலை பண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை. உள்ளே வந்தவரோ வேலையை முடித்து போகும் வரை அவர்களுக்கும் சேர்த்து சமைக்குமாறு சொன்னார்.
மேலும் இரண்டு நாட்கள் வேதா மயிலா மூக்கையன் மூவரும் சீமக்கரையில் தங்கி விட்டு அன்று இரவே அவர்களிடம் சொல்லிக் கொண்டு நீலகிரிக்கு கிளம்பினர்.
தனது மருமகளிடம் வந்த வேதாவோ அடுத்த முறை உன்னை பார்க்கும் பொழுது என் பேரப்பிள்ளை செய்தி ஏதாவது சொல்லணும் என்க தனது அத்தையை அணைத்துக் கொண்டவள் சரிகத்தை என்றாள்.
அவர்களை பஸ் ஏற்றி விட்டு வீட்டிற்கு மேலே இருக்கும் தனது ரூமிற்கு வந்த கதிர் என்னடி ரெடியா என்று கேட்க தாமரையோ கம்ப்யூட்டரில் டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்தவள்,என்ன சொல்லிட்டு போனீங்க ரெடி பண்ணி வைக்கிறதுக்கு என்று குழப்பமாக கேட்க...
என்னடி இப்படி கேட்டுட்ட??
எங்க அம்மா எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு போயிருக்காங்க அதற்கான ப்ராசஸ்ல இறங்காமல் உன் பாட்டுக்கு ஹாயா உட்கார்ந்து இருக்கிறியேடி. ..
கணவன் என்ன பேசுகிறான் என்பது புரியாமல் அத்தை என்கிட்ட அப்படி எந்த வேலையையும் கொடுக்கவில்லையே என்று யோசனை செய்து பார்த்தாள்.
கதிருக்கு தனது மனைவியை பார்த்து சிரிப்பு வந்தது.இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னடி இவ்வளவு மக்கா இருக்க??
உன்னை வச்சிக்கிட்டு நான் எப்படி காலத்தை தள்றது. படிப்பில் மட்டும் தான் மார்க் போல மற்றதில் ஜீரோ தானோ...
இந்த கதிருக்கு இப்படி ஒரு மக்கு மட சாம்பிராணி பொண்டாட்டியா என்க...யோவ் ஒழுங்கு மரியாதைய என்ன விஷயம் சொல்லுயா. அதைவிட்டு உன் பாட்டுக்கு நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்கியே என்றாள்.
ஏதேஏஏஏ யோவா என்றவாறு மனைவியிடம் வந்தவன் அவள் உதட்டை பிடித்து திருக வலியில் ஆஆஆ என்று கத்துபவளை பிடித்து இழுத்தவன் அவள் உதட்டோடு தனது முரட்டிதழை பொருத்தினான்.
சிறிது நொடிகளில் சென்று விட்டவன் எங்க அம்மா பேரப்பிள்ளை கேட்டாங்களே ஞாபகம் இல்லையாடி என அவள் காதில் சொல்ல இப்பொழுது தாமரைக்கு வெட்கம் வந்தது.
குழந்தை பெத்துக்கலாமாடி என்று கேட்க போயா என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...
மேலும் ஒரு வரம் கடந்து சென்றது. ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கோ பக்கத்தில் ஷெட் போட்டு சுற்றியும் ஹாலோ பிளாக் கல்லால் சிறிய வீடு போல கட்டுகிறார்களே அது எதற்கு என்பது மட்டும் தெரியவில்லை