Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 561
- Thread Author
- #1
நீலகிரி:
குழந்தைக்கு சளி அதனால் தான் என்னால் வர முடியவில்லை என்று பவி சொல்ல பரவாயில்லைக்கா இதுல என்ன இருக்கு என்பவள் போட்டிருக்கும் நகைகளை பார்த்தவள் என்ன இவ்வளவு போட்டுருக்காள்.
பார்த்தால் கவரிங் போல தெரியலையேனு நினைத்தவள் தாலியை காட்டு செல்லா என்க,அவளும் தனது கழுத்தில் இருந்ததை காட்ட என்ன ரெண்டு பவுன் இருக்குமா என்க...
அந்நேரம் அங்கு வந்து மயிலாவோ சிரித்துவிட்டு அது 9 பவுன் பவி என்கவும், எனது ஒன்பது பவுனா என்று அதிர்ந்து போனாள்.
நம்பலே அஞ்சு பவுண்ல தான் போட்டு இருக்கோம் இந்த ஆடு மேய்க்கிறவளுக்கு ஒன்பது பவுன் கேட்குதா என உள்ளுக்குள் பொறாமையாக...அப்படி என்ன இதுல இருக்கு?வெறும் கருப்பு மணி தானே இருக்கு என்று குறை சொல்ல...ஐயோ பவி உனக்கு கண்ணு தெரியலையா அந்த தாலி டாலரே நாலு பவுன் என்கவும் அவ்வளவா என்று அதிர்ந்தாள்.
நானும் மருமகளா இருந்தேன் இந்தக் கிழவி எனக்கு ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்கி கொடுக்கல.இன்னைக்கு இந்த ஆட்டுக்காரிக்கு மட்டும் ஒன்பது பவுன்ல தாலி செய்து வாங்கி கொடுத்து இருக்கா பாரு சண்டாளி..
இவள் நடக்கும்போது எங்கையாச்சும் தடுக்கி விழுந்து கை கால் உடைந்து போகணும் என்று மனிதிற்குள் திட்டியவள்,இதற்கு மேலும் அங்கு இருந்தால் கோபத்தில் வெடித்து விடுவோம் என்பது புரிந்து சரி செல்லா நான் கிளம்புறேன் என்று சொல்ல...
இருங்கக்கா சாப்பிட்டு போகலாம் என்றவளுக்கு அதுலாம் ஒன்னும் வேண்டாம் செல்லா.அங்கு அரண்மனையில் எனக்கு சாப்பாடு இருக்கு நான் போயிருக்கிறேன் என்று சொல்லவும் சரி போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டாள்.
அப்பொழுது பவி கொஞ்சம் நில்லு என்று கையில் ஒரு பையோடு வந்த மயிலா இந்தா..கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ஞாபகார்த்தமாக மருது கிப்ட் வாங்கினான் என்று சொல்ல அப்படி என்ன பொல்லாத கிப்ட்...
தேங்காவும் பழமும் தான் இருக்கும்.இதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று மனதிற்கு நினைத்தபடியே எதுக்கு இதெல்லாம் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்க..சும்மா வச்சுக்க உனக்கு வேண்டாம்னா அங்க வீட்ல அம்மா கிட்ட கொடுத்து என்று சொல்லவும் அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வேண்டா வெருப்பாக பையை வாங்கிக்கொண்டு செல்லும்போது என்ன இவ்வளவு வெயிட்டா இருக்கு ?எங்கையாவது ஓசில கிடைச்சிதுனு ரெண்டு தேங்காயா போட்டிருப்பாங்க போல என்று சொல்லிக் கொண்டாள்.
நீலகிரி...
நேரமும் கடந்து சென்றது. மருது செல்லா இருவருக்குமான சம்பிரதாய சாந்தி முகூர்த்த சடங்கு அன்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுவரை இருந்த மனநிலை போய் இப்பொழுது செல்லாவிற்கு திக் திக்கென்று இருந்தது. அவளை குளித்து தூதுவடையை மாற்றி வரச் சொன்னார்கள் அதேபோல் செல்லவும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து மேலே இருக்கும் மருதவின் ரூமிற்கு அனுப்பி வைத்தனர்.
கை கால் நடுங்க படியில் ஏறி மேலே வந்தவள் கதவு பிடியில் கையை வைத்து திருகு கதவும் திறந்து கொண்டது.உள்ளே வந்தவள் கதவை லாக் பண்ணிவிட்டு கட்டிலின் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பவனை பார்த்து கீழே குனிந்து கொண்டாள்.
கண்ணெதிரிலே வெட்கம் கொண்டு கீழே குனிந்து நிற்கும் மனைவியை ஆசை திரு ரசித்துப் பார்த்தான்.
நிமிடங்களும் ஓட இன்னும் எவ்வளவு நேரம் டி ஆணி அடித்த போல் அங்கே நிற்க போறேன் என்றவன் எழுந்து ஈவள் எதிரில் வர செல்லாவோ பின்னாடியே சென்றவள் அங்கிருந்த கபோர்டின் மேல் இடித்து நின்றாள்.
சிரித்துக் கொண்டே அவளின் இரண்டு தோள்பட்டையின் வழியாக தனது நீண்ட கைகளை சுவற்றில் ஊன்றியவன் என்னவாம் புலிக்குட்டியா இருப்பனு பார்த்தால் பூனை குட்டி போல பம்முறியேடி...
ஆமா உன் பிரண்டுங்க எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு எப்படி வரணும்னு ஒருத்தியும் உனக்கு பாட எல்லாம் எடுக்கலையா புருஷன் காரில் வந்து விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும் அதெல்லாம் சொல்லவில்லையா அப்புறமா புருஷன் கன்னத்தை எல்லாம் கிள்ளி முத்தம் கொடுக்கணும்னு சொல்லவில்லையா என்று கேட்க மருது சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க நாணம் தாங்காமல் அவன் நெஞ்சில் மீது சாய்ந்து கொண்டாள்.
இதுக்கே வெக்கப்பட்டால் என்னடி நான் பண்ணுவேன் என்று ஒரு கையால் தன்னவளை இறுக்கமாய் அணைத்தவன் அவள் காதோரம் செல்ல கடி கடித்து வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமென்று ஒன்னும் அவசரமில்லை சரியா...
இன்னும் நமக்கு எவ்வளவோ வயசு இருக்கு முதல் என்னை நீயும் உன்னை நானும் புரிந்து கொள்ளலாம்டி.கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணுவோம் அப்புறம் புருஷன் பொண்டாட்டியா வாழ்க்கை தொடங்கலாம் ஓகேவா என்று சொல்ல இவ்வளவு நேரம் இருந்து நடுக்கம் போய் இப்பொழுது செல்லா இயல்பாக இருந்தாள்.
ம்ம் என்று தலையாட்ட..
இப்படி எல்லாம் சொல்லுவன்னு கனவுல கூட காணாதடி என்றபடியே அவளை கையில் ஏந்தியவன் அவள் கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி பாதி அவன் குடித்தவன் மிதி அவளுக்கு நீட்ட கையெனில் வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டகருந்தவளோ இப்படி அந்தரத்தில் மிதந்து கொண்டே எப்படி குடிப்பது என்று கேட்டாள்.
ஓஓஓ..இவ்வளவு தானா...இப்ப பார் என்று மீதமிருந்த பாலை தனது வாயில் கவுத்தவன் அவள் வாயோடு தனது வாயை பொருத்த செல்லாவோ அதிரடியில் அதிர்ந்து கண்களை விரிக்க முத்தமிட்டபடியே நடந்து சென்றவன் அங்கிருந்த மெத்தையில் சரிய அழகான இல்லரம் காதலோடும் காமத்தோடும் அரங்கேறியது...
விடியலும் ஆரம்பமாக இன்று செல்விக்கு நிச்சயதார்த்தத்துக்கு காலையிலே நாங்கள் கிளம்பினோம் என்று முதல் நாள் இரவே மருதுவிடவும் செல்லாவிடவும் மூவரும் சொல்லியிருந்ததால் மூக்கையன், வேதா,மயிலா மூவரும் குளித்திட்டு தயாராக,செல்லாக்கு அதிகாலையிலே எழுந்து பழக்கம் உள்ளதால் அந்த நேரத்திற்கெல்லாம் விழிப்பு வந்தது.
தன்னை அணைத்தி படுத்திருக்கும் கணவனின் கையை பொறுமையாக விலக்கியவள்,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஹீட்டரை ஆன் பண்ணியவள் குளித்து தயாராகி கீழே வந்தாள்.
மருமகளின் முகத்தை பார்த்து அவர்களுக்கு திருப்தியாக இருக்க செல்லா விளக்கு ஏத்திடுத்தா என்று மயிலா சொல்லு சரிங்க அத்தை என்றவள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு வெளியே வந்தாள்.
நாங்க டீ குடிச்சிட்டோம் பால் காய்ச்சி தயாராதான் இருக்கு காபி வேணுமோ இல்லை டீ வேண்டுமோ போட்டு குடிச்சுக்கோங்க...
நம்ப பொன்னாத்தா வரும் உறியில் தயிர் இருக்கு நாலு கரண்டி மொண்டு குடுத்தா. எப்போதும் அவங காலைல இங்க வந்தால் தயிர் கொடுக்க மறந்துடாத செல்லா என்கவும் சரிங்கத்த என்றாள்.
முதல் நாளே இவர்கள் சீமக்கரைக்கு போவதற்காக மருது புக் பண்ணிய காரும் வந்துவிட சரி பத்திரமா இருங்க நாளைக்கு இல்லனா நாளைக்கு நாங்க வந்து விடுவோம் என்று சொல்லிக்கொண்டு மூவரும் செல்ல அவர்களை வழி அனுப்பி விட்டு கதவை பூட்டியவள் கிச்சனிற்கு சென்று டீயை போட்டவள் கணவனுக்கும் அவளுக்கும் எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அறையை நோக்கி சென்றாள்
சீமக்கரை:
வெகுநேரம் வரை கணவனுக்காய் தூங்காமல் விழித்திருந்த தாமரை பிறகு தன்னையே மறந்து தூங்கி விட்டாள். அசாமிலிருந்து மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்த தனது அத்தையான சிந்துவை அழைத்துக்கொண்டு அதிகாலை நாலரை மணிக்குளாம் கதிரும் சீமக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
அந்த நேரத்திலும் வீட்டினர் சிந்துக்காய் தூங்காமல் காத்திருந்தனர்.இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது வீட்டினரை பார்த்த மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க கதிரோ படியில் ஏறி மேலே வந்தவன் ரூம் கதவை திறந்து உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு பெட்டில் தூங்குபவளை பார்த்துக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கைலியை மாற்றி வந்து அவள் அருகில் படுத்தவன் அசதியில் தூங்கிவிட்டான்.
விடியலும் தொடங்க வீட்டின் முன்னே இருந்த இடத்தில் பங்க்ஷனிற்கு பந்தல் போட ஆட்கள் வந்து அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
சிந்துவோ தனது அத்தை வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்து வந்தார்.
நேரமும் கடந்து சென்றது..ஒரு வழியாக பந்தல் அலங்காரம் முடிந்து ரேடியோ செட்டுக்காரர் இளையராஜா பாட்டை ஓட விட அக்கம் பக்கத்தில் இருக்கும் சின்ன பிள்ளைகள் எல்லாம் அங்கு வந்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நிச்சயதார்த்தம் மாலை 6 மணிக்கு ஆரம்பம் என்பதால் இரவு டிபனுக்கான சமையல் வேலையை ஒரு பக்கம் சமையல்காரர்களும் அவர்கள் வேலையை ஆரம்பித்தனர்.
தாமரையும் காலையிலிருந்து கணவனை பார்க்க முடியாமல் தவித்து தான் போனாள்.இந்த மனுஷன் எங்க தான் போனாரு என்று அவளும் அவ்வப்போது வெளியே வந்து பார்த்தாலும் கதிர் அங்கு இருப்பது போல் தெரியவில்லை..
நேரமும் கடந்த ஓட உறவினர்களின் வீட்டிற்கு வர தொடங்கினர். வந்தவர்களுக்கு தாமரையும் ராதாவும் டீ போட்டு கொடுத்து கொண்டிருந்தனர்.
ஏம்மா கவிதா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க அப்புறம் அங்கு வந்து அது இல்ல இது இல்லன்னு அக்கா தங்கச்சி ஏதாச்சும் சொன்னீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று செல்வம் சொல்ல..மாமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு தான் இருக்கிறோம் அதெல்லாம் ஒன்னும் குறை வராது என்றார்.
சரித்தா என்றபடியே அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் ஒருமுறை பார்வதியும் கவிதாவும் அங்கிருந்து சீர்வரிசை பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர்.கவிதா போய் உன் மாமன் கிட்ட சொல்லு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்க சரிக்கா என்றபடியே வெளியே வந்த கவிதா மாமா நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்கவும் சரி கிளம்புங்க என்றார்.
சொந்த பந்தங்களிடம் ஆளுக்கு ஒரு சிறு வரிசை தட்டையை எடுத்துக்க சொல்லிவிட்டு மேல தாளங்களும் வான வேடிக்கை விண்ணை பிளக்க பக்கத்து தெருவில் இருக்கும் செல்வின் வீட்டை நோக்கி சென்றனர்.
வேட்டு சத்தம் பெண் வீட்டில் இருந்தவர்களுக்கு கேட்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரார்கள் என்று குரல் கொடுத்தனர்.
பார்லரில் இருந்து வந்த பெண்ணும் செல்வியின் நீண்ட கூந்தலை பின்னி அலங்காரம் பண்ணி முடித்தார்.
இதுவரை இல்லாத உணர்வு இப்பொழுது செல்விக்கு வந்து படபடப்பாக இருந்தது. சிறுவயதிலேயே வேலுக்கும் செல்விக்கு தான் திருமணம் என்று பேச்சு இருந்தாலும் வளரவளர மாமனின் மேல் மானசிகமாக அவள் காதல் கொண்ட விஷயம் இதுவரை வேலுக்கு தெரியாது.
அவன் அறியாமல் அவனைப் பார்த்து ரசிப்பதும் அவன் பார்க்கும் போது அவனை கிண்டல் பண்ணுவது இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவே அவள் பெரும்பாடு பட்ட விஷயம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
தாமரையும் மேலே உள்ள ரூமில் தயாரானவள் இந்த மனுஷன் எங்க தான் போய் தொலைஞ்சான் என்று வாய்விட்டு திட்டிக் கொண்டு கீழே வந்தாள்.
மற்றவர்களும் கதிர் எங்கே கதிர் எங்கே என்று கேட்க வேலையா வெளிய போயிருக்கான்.வந்து விடுவான் என்று ராதா தான் சொல்லிக் கொண்டிருந்தார்....!!!
பங்க்ஷனிற்கு அழைத்த எல்லாரும் வந்து சேர்ந்திருந்தாலும் கதிரை மட்டும் அங்கு காணாமல் தாமரை தவித்துக் கொண்டிருந்தாள்.உள்ளுக்குள் கோபம் எரிமலை போல் பொங்கிக் கொண்டிருக்க அதை வெளியே காட்டாமல் சிரித்த முகத்தோடு இருப்பது போல் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டாரும் சொந்த பந்தங்கள் சூழல சீர்வரிசை தட்டோடு அங்கு வந்து சேர அவர்களை பிரகாசம் குடும்பத்தினர் வாசலில் நின்று கைகூப்பி வரவேற்தனர்.
அவர்களும் அங்கிருக்கும் அலங்காரத்தை பார்த்து அசந்து போனார்கள்.வழக்கமாய் சாமியானாவை தான் பந்தலாக போட்டிருப்பார்கள் என்று அவர்களெல்லாம் நினைத்திருக்க, வண்ண பூக்களோடு விதவிதமான துணிகளை வைத்து அலங்காரம் பண்ணியிருப்பது அவ்வளவு அழகாக இருந்தது.
குழந்தைக்கு சளி அதனால் தான் என்னால் வர முடியவில்லை என்று பவி சொல்ல பரவாயில்லைக்கா இதுல என்ன இருக்கு என்பவள் போட்டிருக்கும் நகைகளை பார்த்தவள் என்ன இவ்வளவு போட்டுருக்காள்.
பார்த்தால் கவரிங் போல தெரியலையேனு நினைத்தவள் தாலியை காட்டு செல்லா என்க,அவளும் தனது கழுத்தில் இருந்ததை காட்ட என்ன ரெண்டு பவுன் இருக்குமா என்க...
அந்நேரம் அங்கு வந்து மயிலாவோ சிரித்துவிட்டு அது 9 பவுன் பவி என்கவும், எனது ஒன்பது பவுனா என்று அதிர்ந்து போனாள்.
நம்பலே அஞ்சு பவுண்ல தான் போட்டு இருக்கோம் இந்த ஆடு மேய்க்கிறவளுக்கு ஒன்பது பவுன் கேட்குதா என உள்ளுக்குள் பொறாமையாக...அப்படி என்ன இதுல இருக்கு?வெறும் கருப்பு மணி தானே இருக்கு என்று குறை சொல்ல...ஐயோ பவி உனக்கு கண்ணு தெரியலையா அந்த தாலி டாலரே நாலு பவுன் என்கவும் அவ்வளவா என்று அதிர்ந்தாள்.
நானும் மருமகளா இருந்தேன் இந்தக் கிழவி எனக்கு ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்கி கொடுக்கல.இன்னைக்கு இந்த ஆட்டுக்காரிக்கு மட்டும் ஒன்பது பவுன்ல தாலி செய்து வாங்கி கொடுத்து இருக்கா பாரு சண்டாளி..
இவள் நடக்கும்போது எங்கையாச்சும் தடுக்கி விழுந்து கை கால் உடைந்து போகணும் என்று மனிதிற்குள் திட்டியவள்,இதற்கு மேலும் அங்கு இருந்தால் கோபத்தில் வெடித்து விடுவோம் என்பது புரிந்து சரி செல்லா நான் கிளம்புறேன் என்று சொல்ல...
இருங்கக்கா சாப்பிட்டு போகலாம் என்றவளுக்கு அதுலாம் ஒன்னும் வேண்டாம் செல்லா.அங்கு அரண்மனையில் எனக்கு சாப்பாடு இருக்கு நான் போயிருக்கிறேன் என்று சொல்லவும் சரி போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டாள்.
அப்பொழுது பவி கொஞ்சம் நில்லு என்று கையில் ஒரு பையோடு வந்த மயிலா இந்தா..கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ஞாபகார்த்தமாக மருது கிப்ட் வாங்கினான் என்று சொல்ல அப்படி என்ன பொல்லாத கிப்ட்...
தேங்காவும் பழமும் தான் இருக்கும்.இதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று மனதிற்கு நினைத்தபடியே எதுக்கு இதெல்லாம் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்க..சும்மா வச்சுக்க உனக்கு வேண்டாம்னா அங்க வீட்ல அம்மா கிட்ட கொடுத்து என்று சொல்லவும் அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வேண்டா வெருப்பாக பையை வாங்கிக்கொண்டு செல்லும்போது என்ன இவ்வளவு வெயிட்டா இருக்கு ?எங்கையாவது ஓசில கிடைச்சிதுனு ரெண்டு தேங்காயா போட்டிருப்பாங்க போல என்று சொல்லிக் கொண்டாள்.
நீலகிரி...
நேரமும் கடந்து சென்றது. மருது செல்லா இருவருக்குமான சம்பிரதாய சாந்தி முகூர்த்த சடங்கு அன்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுவரை இருந்த மனநிலை போய் இப்பொழுது செல்லாவிற்கு திக் திக்கென்று இருந்தது. அவளை குளித்து தூதுவடையை மாற்றி வரச் சொன்னார்கள் அதேபோல் செல்லவும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து மேலே இருக்கும் மருதவின் ரூமிற்கு அனுப்பி வைத்தனர்.
கை கால் நடுங்க படியில் ஏறி மேலே வந்தவள் கதவு பிடியில் கையை வைத்து திருகு கதவும் திறந்து கொண்டது.உள்ளே வந்தவள் கதவை லாக் பண்ணிவிட்டு கட்டிலின் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பவனை பார்த்து கீழே குனிந்து கொண்டாள்.
கண்ணெதிரிலே வெட்கம் கொண்டு கீழே குனிந்து நிற்கும் மனைவியை ஆசை திரு ரசித்துப் பார்த்தான்.
நிமிடங்களும் ஓட இன்னும் எவ்வளவு நேரம் டி ஆணி அடித்த போல் அங்கே நிற்க போறேன் என்றவன் எழுந்து ஈவள் எதிரில் வர செல்லாவோ பின்னாடியே சென்றவள் அங்கிருந்த கபோர்டின் மேல் இடித்து நின்றாள்.
சிரித்துக் கொண்டே அவளின் இரண்டு தோள்பட்டையின் வழியாக தனது நீண்ட கைகளை சுவற்றில் ஊன்றியவன் என்னவாம் புலிக்குட்டியா இருப்பனு பார்த்தால் பூனை குட்டி போல பம்முறியேடி...
ஆமா உன் பிரண்டுங்க எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு எப்படி வரணும்னு ஒருத்தியும் உனக்கு பாட எல்லாம் எடுக்கலையா புருஷன் காரில் வந்து விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும் அதெல்லாம் சொல்லவில்லையா அப்புறமா புருஷன் கன்னத்தை எல்லாம் கிள்ளி முத்தம் கொடுக்கணும்னு சொல்லவில்லையா என்று கேட்க மருது சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க நாணம் தாங்காமல் அவன் நெஞ்சில் மீது சாய்ந்து கொண்டாள்.
இதுக்கே வெக்கப்பட்டால் என்னடி நான் பண்ணுவேன் என்று ஒரு கையால் தன்னவளை இறுக்கமாய் அணைத்தவன் அவள் காதோரம் செல்ல கடி கடித்து வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமென்று ஒன்னும் அவசரமில்லை சரியா...
இன்னும் நமக்கு எவ்வளவோ வயசு இருக்கு முதல் என்னை நீயும் உன்னை நானும் புரிந்து கொள்ளலாம்டி.கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணுவோம் அப்புறம் புருஷன் பொண்டாட்டியா வாழ்க்கை தொடங்கலாம் ஓகேவா என்று சொல்ல இவ்வளவு நேரம் இருந்து நடுக்கம் போய் இப்பொழுது செல்லா இயல்பாக இருந்தாள்.
ம்ம் என்று தலையாட்ட..
இப்படி எல்லாம் சொல்லுவன்னு கனவுல கூட காணாதடி என்றபடியே அவளை கையில் ஏந்தியவன் அவள் கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி பாதி அவன் குடித்தவன் மிதி அவளுக்கு நீட்ட கையெனில் வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டகருந்தவளோ இப்படி அந்தரத்தில் மிதந்து கொண்டே எப்படி குடிப்பது என்று கேட்டாள்.
ஓஓஓ..இவ்வளவு தானா...இப்ப பார் என்று மீதமிருந்த பாலை தனது வாயில் கவுத்தவன் அவள் வாயோடு தனது வாயை பொருத்த செல்லாவோ அதிரடியில் அதிர்ந்து கண்களை விரிக்க முத்தமிட்டபடியே நடந்து சென்றவன் அங்கிருந்த மெத்தையில் சரிய அழகான இல்லரம் காதலோடும் காமத்தோடும் அரங்கேறியது...
விடியலும் ஆரம்பமாக இன்று செல்விக்கு நிச்சயதார்த்தத்துக்கு காலையிலே நாங்கள் கிளம்பினோம் என்று முதல் நாள் இரவே மருதுவிடவும் செல்லாவிடவும் மூவரும் சொல்லியிருந்ததால் மூக்கையன், வேதா,மயிலா மூவரும் குளித்திட்டு தயாராக,செல்லாக்கு அதிகாலையிலே எழுந்து பழக்கம் உள்ளதால் அந்த நேரத்திற்கெல்லாம் விழிப்பு வந்தது.
தன்னை அணைத்தி படுத்திருக்கும் கணவனின் கையை பொறுமையாக விலக்கியவள்,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஹீட்டரை ஆன் பண்ணியவள் குளித்து தயாராகி கீழே வந்தாள்.
மருமகளின் முகத்தை பார்த்து அவர்களுக்கு திருப்தியாக இருக்க செல்லா விளக்கு ஏத்திடுத்தா என்று மயிலா சொல்லு சரிங்க அத்தை என்றவள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு வெளியே வந்தாள்.
நாங்க டீ குடிச்சிட்டோம் பால் காய்ச்சி தயாராதான் இருக்கு காபி வேணுமோ இல்லை டீ வேண்டுமோ போட்டு குடிச்சுக்கோங்க...
நம்ப பொன்னாத்தா வரும் உறியில் தயிர் இருக்கு நாலு கரண்டி மொண்டு குடுத்தா. எப்போதும் அவங காலைல இங்க வந்தால் தயிர் கொடுக்க மறந்துடாத செல்லா என்கவும் சரிங்கத்த என்றாள்.
முதல் நாளே இவர்கள் சீமக்கரைக்கு போவதற்காக மருது புக் பண்ணிய காரும் வந்துவிட சரி பத்திரமா இருங்க நாளைக்கு இல்லனா நாளைக்கு நாங்க வந்து விடுவோம் என்று சொல்லிக்கொண்டு மூவரும் செல்ல அவர்களை வழி அனுப்பி விட்டு கதவை பூட்டியவள் கிச்சனிற்கு சென்று டீயை போட்டவள் கணவனுக்கும் அவளுக்கும் எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அறையை நோக்கி சென்றாள்
சீமக்கரை:
வெகுநேரம் வரை கணவனுக்காய் தூங்காமல் விழித்திருந்த தாமரை பிறகு தன்னையே மறந்து தூங்கி விட்டாள். அசாமிலிருந்து மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்த தனது அத்தையான சிந்துவை அழைத்துக்கொண்டு அதிகாலை நாலரை மணிக்குளாம் கதிரும் சீமக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
அந்த நேரத்திலும் வீட்டினர் சிந்துக்காய் தூங்காமல் காத்திருந்தனர்.இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது வீட்டினரை பார்த்த மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க கதிரோ படியில் ஏறி மேலே வந்தவன் ரூம் கதவை திறந்து உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு பெட்டில் தூங்குபவளை பார்த்துக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கைலியை மாற்றி வந்து அவள் அருகில் படுத்தவன் அசதியில் தூங்கிவிட்டான்.
விடியலும் தொடங்க வீட்டின் முன்னே இருந்த இடத்தில் பங்க்ஷனிற்கு பந்தல் போட ஆட்கள் வந்து அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
சிந்துவோ தனது அத்தை வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்து வந்தார்.
நேரமும் கடந்து சென்றது..ஒரு வழியாக பந்தல் அலங்காரம் முடிந்து ரேடியோ செட்டுக்காரர் இளையராஜா பாட்டை ஓட விட அக்கம் பக்கத்தில் இருக்கும் சின்ன பிள்ளைகள் எல்லாம் அங்கு வந்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
நிச்சயதார்த்தம் மாலை 6 மணிக்கு ஆரம்பம் என்பதால் இரவு டிபனுக்கான சமையல் வேலையை ஒரு பக்கம் சமையல்காரர்களும் அவர்கள் வேலையை ஆரம்பித்தனர்.
தாமரையும் காலையிலிருந்து கணவனை பார்க்க முடியாமல் தவித்து தான் போனாள்.இந்த மனுஷன் எங்க தான் போனாரு என்று அவளும் அவ்வப்போது வெளியே வந்து பார்த்தாலும் கதிர் அங்கு இருப்பது போல் தெரியவில்லை..
நேரமும் கடந்த ஓட உறவினர்களின் வீட்டிற்கு வர தொடங்கினர். வந்தவர்களுக்கு தாமரையும் ராதாவும் டீ போட்டு கொடுத்து கொண்டிருந்தனர்.
ஏம்மா கவிதா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க அப்புறம் அங்கு வந்து அது இல்ல இது இல்லன்னு அக்கா தங்கச்சி ஏதாச்சும் சொன்னீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று செல்வம் சொல்ல..மாமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு தான் இருக்கிறோம் அதெல்லாம் ஒன்னும் குறை வராது என்றார்.
சரித்தா என்றபடியே அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் ஒருமுறை பார்வதியும் கவிதாவும் அங்கிருந்து சீர்வரிசை பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர்.கவிதா போய் உன் மாமன் கிட்ட சொல்லு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்க சரிக்கா என்றபடியே வெளியே வந்த கவிதா மாமா நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்கவும் சரி கிளம்புங்க என்றார்.
சொந்த பந்தங்களிடம் ஆளுக்கு ஒரு சிறு வரிசை தட்டையை எடுத்துக்க சொல்லிவிட்டு மேல தாளங்களும் வான வேடிக்கை விண்ணை பிளக்க பக்கத்து தெருவில் இருக்கும் செல்வின் வீட்டை நோக்கி சென்றனர்.
வேட்டு சத்தம் பெண் வீட்டில் இருந்தவர்களுக்கு கேட்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரார்கள் என்று குரல் கொடுத்தனர்.
பார்லரில் இருந்து வந்த பெண்ணும் செல்வியின் நீண்ட கூந்தலை பின்னி அலங்காரம் பண்ணி முடித்தார்.
இதுவரை இல்லாத உணர்வு இப்பொழுது செல்விக்கு வந்து படபடப்பாக இருந்தது. சிறுவயதிலேயே வேலுக்கும் செல்விக்கு தான் திருமணம் என்று பேச்சு இருந்தாலும் வளரவளர மாமனின் மேல் மானசிகமாக அவள் காதல் கொண்ட விஷயம் இதுவரை வேலுக்கு தெரியாது.
அவன் அறியாமல் அவனைப் பார்த்து ரசிப்பதும் அவன் பார்க்கும் போது அவனை கிண்டல் பண்ணுவது இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவே அவள் பெரும்பாடு பட்ட விஷயம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
தாமரையும் மேலே உள்ள ரூமில் தயாரானவள் இந்த மனுஷன் எங்க தான் போய் தொலைஞ்சான் என்று வாய்விட்டு திட்டிக் கொண்டு கீழே வந்தாள்.
மற்றவர்களும் கதிர் எங்கே கதிர் எங்கே என்று கேட்க வேலையா வெளிய போயிருக்கான்.வந்து விடுவான் என்று ராதா தான் சொல்லிக் கொண்டிருந்தார்....!!!
பங்க்ஷனிற்கு அழைத்த எல்லாரும் வந்து சேர்ந்திருந்தாலும் கதிரை மட்டும் அங்கு காணாமல் தாமரை தவித்துக் கொண்டிருந்தாள்.உள்ளுக்குள் கோபம் எரிமலை போல் பொங்கிக் கொண்டிருக்க அதை வெளியே காட்டாமல் சிரித்த முகத்தோடு இருப்பது போல் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டாரும் சொந்த பந்தங்கள் சூழல சீர்வரிசை தட்டோடு அங்கு வந்து சேர அவர்களை பிரகாசம் குடும்பத்தினர் வாசலில் நின்று கைகூப்பி வரவேற்தனர்.
அவர்களும் அங்கிருக்கும் அலங்காரத்தை பார்த்து அசந்து போனார்கள்.வழக்கமாய் சாமியானாவை தான் பந்தலாக போட்டிருப்பார்கள் என்று அவர்களெல்லாம் நினைத்திருக்க, வண்ண பூக்களோடு விதவிதமான துணிகளை வைத்து அலங்காரம் பண்ணியிருப்பது அவ்வளவு அழகாக இருந்தது.