Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 557
- Thread Author
- #1
சீமக்கரை:
சமையல்கட்டில் எல்லாருக்கும் மதிய உணவை தாமரை சமைத்துக் கொண்டிருக்க வீட்டினரோ வயலில் களையெடுப்பதால் எல்லாரும் அங்கு சென்று இருந்தனர்.
அப்பு போயிட்டு டீயும் வடையும் வாங்கிட்டு வா.சூரியன் உச்சிக்கு வந்துடுச்சு பாரு என்று பிரகாசம் தனது பேரனிடம் சொல்ல,களைகளை கூடையில் அள்ளிக் கொண்டிருந்த கதிரோ சரி தாத்தா என்றவன் அங்கிருந்த வாய்க்காலில் கை கால்களை கழுவிக்கொண்டு மடித்துக் கட்டிய கைலியோடு வரப்பில் நடந்து ரோட்டில் நிறுத்தி இருக்கும் புல்லட்டின் அருகில் வந்தவன் அதில் ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி சென்றான்.
உச்சி வெயிலோ சுள்ளெண்டு சுட்டெரித்தது.
வயலில் 40 பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எப்படித்தான் இத்தனை பேருக்கு டீ போட்டுருப்பாளோ ஒன்னும் புரியலையே?
சொன்னா கேக்க மாட்டேங்குறாள் நானே பார்த்து பண்ணிடுறேன்னு பெரிய வீரப்பாக வேறு காலையில சொல்லிட்டாள். என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே என்று புலம்பி கொண்டே வீட்டில் முன்னால் வந்து வண்டியை நிறுத்தியவன் கதவை தட்டினான்.
சிறிது நொடிகளில் வந்து கதவை திறந்தவளை இமைக்காமல் பார்த்தவன்,எட்டி இழுத்து தன்னோடு அணைத்தவன் பார்க்க எப்படி இருக்க தெரியுமா என்று அவள் காதில் கேட்க மீசையும் தாடியும் குத்தும் குறுகுறுப்பில் தாமரையோ நெளிந்தாள்.
என்னடி என்று தன் கைக்குள் நெளிபவளை கோவமாக கேட்க, மணி ஆயிடுச்சு சீக்கிரம் டீ வடை எடுத்துட்டு போங்களென்றாள்.
போறேன் போறேன்..போகாம இங்கே வா இருக்க போறேன் என்றவன் என்ன லட்சணத்துல பண்ணிருக்கியோ முதல்ல எனக்கு எடுத்துட்டு வா நான் குடித்து பார்க்கிறேன். எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு டவுன்ல போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி அவளை விட்டவன் அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அவனை முறைத்துக் கொண்டு கிட்சனிற்கு சென்றவள் ஒரு டம்ளரில் சூடாக டீயும் ஒரு தட்டில் இரண்டு வடையும் எடுத்துட்டு வந்து நீட்ட உக்காருடி என்றான்.
பரவாயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு சொல்ல அவள் திரும்பி நின்றதால் இடை தெரிய அதில் நறுக்கென்று கிள்ளினான்.
வலியில் ஐயோ என்று துள்ளினாள்.
எதுவும் தெரியாது போல் ஊஞ்சல் மேலிருந்த டீயை எடுத்து ஒருவாய் குடித்தவன் பின்னர் வடையை பிட்டு சாப்பிட பரவாயில்லை நல்லாதான் பண்ணி இருக்கிறாள் என்று சொல்லிக்கொண்டே இரண்டையும் காலி பண்ணியவன் இன்னொரு வடை எடுத்துட்டு வா என்று சொல்ல, தாமரையும் எதுவும் சொல்லாமல் கிச்சனுள் சென்றவள் இன்னும் இரண்டு வடையை வைத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை அதன் மேல் ஊற்றியவள் பொரியல் தாளிப்பதற்காக வெட்டி வைத்திருந்த பொடிதான வெங்காயத்தையும் அதன் மேல் தூவி எடுத்து வந்து நீட்டினாள்.
என்னடி என்னென்னமோ அலங்காரம் பண்ணியிருக்கிற என்றவாறு வாங்கியவன் சூடான சாம்பாருக்கும் வடைக்கும் அதன் மேல் தூவி இருந்த வெங்காயத்திற்கும் ருசியாக இருக்கவும் பிட்டு அவளுக்கு ஒரு வாய் நீட்ட வேண்டாம் என்றாள்.
சும்மா சாப்பிடுடி...நீ பார்த்துக் கொண்டே இருந்தால் எனக்கு வயிறு வலிக்கும் இல்லையா என்று மீண்டும் சொல்ல இப்போ பாருடா என்று அவன் நீட்டியதை வாங்கும்போது கதிரின் விரல்களை நன்கு கடித்து விட்டாள்.
ஆஆஆஆஆ ராட்சசி.....
அடியே நேத்து தானடி கறி சோறு சாப்பிட்ட அதுக்குள்ள இவ்வளவு வெறியா என்று தனது விரல்களை பார்த்துக் கொண்டே கதிர் கேட்க தாமரையோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
பயமில்லை துளிர்விட்டு போயிடுச்சு டி நைட்டு வந்து வச்சிக்கிறேன் இருடி என்றவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் போய் கையை கழுவியவன்,சரிடி போய் டீ வடை எடுத்துட்டு வா...
அங்க உன் தாத்தா அக்னி பகவானுக்கே போட்டியா நிற்பாரு என்றவன் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க தாடி கொஞ்சம் அதிகமாக இருக்கே நாளைக்கு ஷேவ் பண்ணிடனுமென்றவாறு கிச்சனிற்குள் பொறுமையாக போனவன் வடையை எடுத்து வைத்துக் கொண்டிருப்பவளை போய் பின்பக்கமாய் இடையோடு இறுக்கி அணைக்க அய்யோ என்று கத்தினாள்...
ஏய்....
கிறுக்கு புடிச்சவளே...
பட்ட பகல்ல என்னடி உனக்கு பயம் என்க... இந்த திருட்டு பூனை இப்படி வந்து நிற்கும்னு யாருக்கு தெரியும். கொஞ்சமாவது உங்களுக்கு கூறு இருக்கா என்று சத்தம் போட்டாள்..
ஏகப்பட்ட கூறு இருக்க போகத் தாண்டி உன்னை கட்டி இருக்கேன் என்று தனது மீசையை முறுக்கிக் கொண்டு கதிர் சொல்ல, ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
ஐயா அப்படியே பத்து வருஷம் நடையா நடந்து என்ன பொண்ணு தேடி கட்டின போல தான்...நான் ஏமாந்த நேரத்துல தாலியை கட்டி போட்டுட்டு பெரிய வீரவசனம் பேசிட்டு இருக்குறீங்களே போயா அங்குட்டு என்றவள் அடுப்பில் இருந்த டீயை இறக்கி அங்கிருந்த கேனில் ஊற்றி மூடினாள்.
தாமரையோ சும்மா கிண்டலுக்காக தான் தன் கணவனிடம் தாலி கட்டியதை பற்றி பேசியது..ஆனால் கதிருக்கு அதைக் கேட்ட உடனே முகம் ஒரு மாதிரியாகிவிட்டது..
உண்மையிலேயே அவள் சம்மதம் இல்லாமல் தானே தாலி கட்டினோம் என்று எண்ணம் வர அங்கிருந்து அமைதியாக வெளியே சென்று விட்டான்.
அதை கவனிக்காத தாமரையோ என்ன வாயில கொழுக்கட்டையா இருக்கு ஒன்னும் பேசாம நிக்கிறீங்களே என்று அவனிடம் பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருந்தவள் எந்த பதிலும் இல்லாமல் போகவும் திரும்பி பார்க்க கதிர் அங்கு இல்லை..எங்கே போனாரு என்றவாறு டீ கேனையும் வடை இருக்கும் பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வர அங்கே முற்றத்தில் இருக்கும் சேர் மேல் உட்கார்ந்திருப்பவனை பார்த்தவள் இந்தாங்களென்க அமைதியாக எழுந்து வந்தவன் அவள் கையிலிருந்ததை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
தாமரையோ அவன் பின்னாடியே வந்து வாசலில் நின்று பார்க்க வண்டியில் ஏறியவன் வீட்ட பூட்டிக்கோ என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றான்...
டீ குடிக்கும் நேரம் ஆகிட்டு போல அதான் அமைதியா போறாரோயென நினைத்தவள் கதவை தாழ்பாள் போட்டு விட்டு விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.
ஏண்டா...
இவன் வீட்டுக்கு டீ எடுக்க போனானா இல்லை சீமைக்கு போய் மாடு வாங்கிட்டு வந்து பால கறந்து டீ போடுறானாயென வேலுவிடம் பிரகாசம் தாத்தா கேட்க...
செத்த பொறு சகலபாடி...மச்சான் வந்துடுவான் கேட்டு சொல்லுறேன் என்றான்.....
மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க இப்பொழுது தான் கணவனின் நடவடிக்கை தாமரைக்கும் புரிந்தது.
காலையிலே வயலுக்கு செல்பவன் விளக்கு வைத்த நேரத்திற்கு மேல்தான் வீட்டிற்கு வருவது.அப்படி வந்தாலும் இரவு அவள் தூங்கிய பிறகே மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு வந்து தூங்குவான்.
எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டமென்று மண்டையை உருட்டி யோசிக்க அவன் வேண்டுமென்று தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்தவள் என்ன தப்பு செய்தோமென்று நினைத்து பார்க்க,
அன்று வயலுக்கு டீ எடுத்து போனது தான் கடைசி..அதன் பின்னர் வந்த நாட்களிலிருந்து தான் இப்படி என்பது புரிந்தது.
சரி வீட்டிற்கு வரட்டும் இன்னைக்கு என்ன விஷயமென்று தெரிஞ்சிக்காமல் விடுவதில்லையென்று நினைத்தவள் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்..
வக்கீல் ஆபிஸ்:
எதுக்கு இந்த நாய் இங்க கூப்பிட்டு வந்துருக்கென்று வேலு-ஜான் இருவரும் அங்கிருந்த கதிரை பார்க்க அவனோ இஞ்சி தின்ன குரங்கு போல உட்கார்ந்திருந்தான்.
நேரமும் கடந்து செல்ல வக்கீல் முனியப்பனும் அங்கே வந்தவர் அவர்கான சேரில் உட்கார்ந்து கொண்டு மூவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் என்ன கேஸ் என்கவும்,கதிரோ விவாகரத்து கேசாக வந்து இருக்கேன் என்றான்.
அவன் சொன்னதை கேட்டு நண்பர்கள் இருவரும் யாருக்கு கேட்கிறான் இவன் என்று குழப்பமாக...
ஓகே..யாருக்கு என்று வக்கில் கேட்க எனக்கு தான் என்று சொல்லவும் நண்பர்கள் இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.
சார் தப்பா எடுத்துக்காதீங்க என்றவாறு ஆளுக்கொரு அறையை இருவரும் கதிருக்கு விட்டர்கள் ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சி வா... இல்லை இங்க என்ன நடக்குமென்று தெரியாதென்று சொல்லிய வேலு வேகமாய் வெளியே செல்ல...
ஜானோ வாடா என்கவும் கதிரும் அவனோடு அமைதியாக சென்றான்.
வக்கீலோ பாவம் இந்த பையன் நல்லா மாட்டுனான் நண்பர்கள்கிட்டயென்று சிரித்தார்.
எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவன் அங்கே வண்டியில் இருவரும் உட்கார்ந்திருப்பதை பார்த்து தனது புல்லட்டில் ஏறியதும் அவர்கள் இருவரும் வேகமாய் சென்றனர்.
என்ன பண்ண போறானுங்களோயென்று கதிரும் புலம்பிக்கொண்டே போக வழக்கம் போல் அவர்கள் சந்தித்து பேசும் அந்த ஆலமரத்திடம் நின்றனர்.
கதிரும் வண்டியை நிறுத்திட்டு அவர்களிடம் போக, ஏண்டா நாயே உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கயென்று கேட்டு மேலும் இரண்டு அறையை விட்ட ஜான்,என்ன குடி மூழ்கி போயிடிச்சென்று இப்படி ஒரு முடிவெடுத்துருக்க சொல்டா முண்டம் என்று நண்பனின் சட்டையை பிடித்து கேட்டான்..
அவன் தங்கச்சிக்கு என்னை புடிக்கலை போலடா என்க...
செருப்பு பிஞ்சிடும் நன்னாரி பயலே.. என் தங்கச்சி உன்கிட்ட சொல்லுச்சாடாயென்று வேலு கேட்க,அப்படிதான் நினைக்கிறேனென்று சொல்பவனை பார்த்த இருவரும் அய்யா ராசா முதல்ல நடந்ததை சொல்லி தொலை என்கவும் கதிரும் தாமரை சொல்லியதை சொல்லி வருத்தப்பட்டான்.
ஸ்சுஊஊஊஊஊ...
எட்டி வாய்லே மிதிங்கணும் போல இருக்குடா.பண்ணாடை பயலே...என் கொழுந்தியா விளையாட்டுக்கு சொல்லியிருக்கு.
இவன் சின்ன தங்கச்சிகாரியோ தேவியை ரூட் விட்டதை வச்சிக்கிட்டு தினமும் என்னை பாடாய் படுத்துறாள்டா.அப்படி பார்த்தால் நான் தினமும் டைவர்ஸ் பண்ணனுமே என்று சொல்லவும் இருக்கும் சூழல் மறந்து அப்படியாடா பங்காளியென்று கதிரும் சிரித்துவிட்டான்.
அடேய் லூசு பயலே விளையாட்டுக்கு சொன்ன ஒரு விஷயத்தை போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நீயே ஒரு முடிவு எடுத்துருக்கியே இது தாமரைக்கு தெரிஞ்சா என்ன நினைக்கும்?
சரி அதை விடு தங்கச்சி உன்கிட்ட எப்படி பழகுது சொல்லு?மனதார பழகுற போல இருக்கா இல்ல கடமைக்கு இருக்க போல உனக்கு தோணுதா என்று கேட்கவும் யோசித்துப் பார்த்த கதிருக்கு அவள் மனதார அவன்கூட வாழ்வது போல தான் இருந்துச்சு.
இல்லடா கடமைக்கு அவள் எதுவும் பண்ற போல தெரியவில்லை என்க,பின்ன என்னடா,கணவன் மனைவிக்குள்ள இது போல வார்த்தைகள் வருவது இயல்பு தானே இதை எல்லாரும் சீரியஸா எடுத்துட்டா யாரும் யாரு கூட வாழ மாட்டாங்க.
சமையல்கட்டில் எல்லாருக்கும் மதிய உணவை தாமரை சமைத்துக் கொண்டிருக்க வீட்டினரோ வயலில் களையெடுப்பதால் எல்லாரும் அங்கு சென்று இருந்தனர்.
அப்பு போயிட்டு டீயும் வடையும் வாங்கிட்டு வா.சூரியன் உச்சிக்கு வந்துடுச்சு பாரு என்று பிரகாசம் தனது பேரனிடம் சொல்ல,களைகளை கூடையில் அள்ளிக் கொண்டிருந்த கதிரோ சரி தாத்தா என்றவன் அங்கிருந்த வாய்க்காலில் கை கால்களை கழுவிக்கொண்டு மடித்துக் கட்டிய கைலியோடு வரப்பில் நடந்து ரோட்டில் நிறுத்தி இருக்கும் புல்லட்டின் அருகில் வந்தவன் அதில் ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி சென்றான்.
உச்சி வெயிலோ சுள்ளெண்டு சுட்டெரித்தது.
வயலில் 40 பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எப்படித்தான் இத்தனை பேருக்கு டீ போட்டுருப்பாளோ ஒன்னும் புரியலையே?
சொன்னா கேக்க மாட்டேங்குறாள் நானே பார்த்து பண்ணிடுறேன்னு பெரிய வீரப்பாக வேறு காலையில சொல்லிட்டாள். என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே என்று புலம்பி கொண்டே வீட்டில் முன்னால் வந்து வண்டியை நிறுத்தியவன் கதவை தட்டினான்.
சிறிது நொடிகளில் வந்து கதவை திறந்தவளை இமைக்காமல் பார்த்தவன்,எட்டி இழுத்து தன்னோடு அணைத்தவன் பார்க்க எப்படி இருக்க தெரியுமா என்று அவள் காதில் கேட்க மீசையும் தாடியும் குத்தும் குறுகுறுப்பில் தாமரையோ நெளிந்தாள்.
என்னடி என்று தன் கைக்குள் நெளிபவளை கோவமாக கேட்க, மணி ஆயிடுச்சு சீக்கிரம் டீ வடை எடுத்துட்டு போங்களென்றாள்.
போறேன் போறேன்..போகாம இங்கே வா இருக்க போறேன் என்றவன் என்ன லட்சணத்துல பண்ணிருக்கியோ முதல்ல எனக்கு எடுத்துட்டு வா நான் குடித்து பார்க்கிறேன். எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு டவுன்ல போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி அவளை விட்டவன் அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அவனை முறைத்துக் கொண்டு கிட்சனிற்கு சென்றவள் ஒரு டம்ளரில் சூடாக டீயும் ஒரு தட்டில் இரண்டு வடையும் எடுத்துட்டு வந்து நீட்ட உக்காருடி என்றான்.
பரவாயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு சொல்ல அவள் திரும்பி நின்றதால் இடை தெரிய அதில் நறுக்கென்று கிள்ளினான்.
வலியில் ஐயோ என்று துள்ளினாள்.
எதுவும் தெரியாது போல் ஊஞ்சல் மேலிருந்த டீயை எடுத்து ஒருவாய் குடித்தவன் பின்னர் வடையை பிட்டு சாப்பிட பரவாயில்லை நல்லாதான் பண்ணி இருக்கிறாள் என்று சொல்லிக்கொண்டே இரண்டையும் காலி பண்ணியவன் இன்னொரு வடை எடுத்துட்டு வா என்று சொல்ல, தாமரையும் எதுவும் சொல்லாமல் கிச்சனுள் சென்றவள் இன்னும் இரண்டு வடையை வைத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை அதன் மேல் ஊற்றியவள் பொரியல் தாளிப்பதற்காக வெட்டி வைத்திருந்த பொடிதான வெங்காயத்தையும் அதன் மேல் தூவி எடுத்து வந்து நீட்டினாள்.
என்னடி என்னென்னமோ அலங்காரம் பண்ணியிருக்கிற என்றவாறு வாங்கியவன் சூடான சாம்பாருக்கும் வடைக்கும் அதன் மேல் தூவி இருந்த வெங்காயத்திற்கும் ருசியாக இருக்கவும் பிட்டு அவளுக்கு ஒரு வாய் நீட்ட வேண்டாம் என்றாள்.
சும்மா சாப்பிடுடி...நீ பார்த்துக் கொண்டே இருந்தால் எனக்கு வயிறு வலிக்கும் இல்லையா என்று மீண்டும் சொல்ல இப்போ பாருடா என்று அவன் நீட்டியதை வாங்கும்போது கதிரின் விரல்களை நன்கு கடித்து விட்டாள்.
ஆஆஆஆஆ ராட்சசி.....
அடியே நேத்து தானடி கறி சோறு சாப்பிட்ட அதுக்குள்ள இவ்வளவு வெறியா என்று தனது விரல்களை பார்த்துக் கொண்டே கதிர் கேட்க தாமரையோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
பயமில்லை துளிர்விட்டு போயிடுச்சு டி நைட்டு வந்து வச்சிக்கிறேன் இருடி என்றவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் போய் கையை கழுவியவன்,சரிடி போய் டீ வடை எடுத்துட்டு வா...
அங்க உன் தாத்தா அக்னி பகவானுக்கே போட்டியா நிற்பாரு என்றவன் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க தாடி கொஞ்சம் அதிகமாக இருக்கே நாளைக்கு ஷேவ் பண்ணிடனுமென்றவாறு கிச்சனிற்குள் பொறுமையாக போனவன் வடையை எடுத்து வைத்துக் கொண்டிருப்பவளை போய் பின்பக்கமாய் இடையோடு இறுக்கி அணைக்க அய்யோ என்று கத்தினாள்...
ஏய்....
கிறுக்கு புடிச்சவளே...
பட்ட பகல்ல என்னடி உனக்கு பயம் என்க... இந்த திருட்டு பூனை இப்படி வந்து நிற்கும்னு யாருக்கு தெரியும். கொஞ்சமாவது உங்களுக்கு கூறு இருக்கா என்று சத்தம் போட்டாள்..
ஏகப்பட்ட கூறு இருக்க போகத் தாண்டி உன்னை கட்டி இருக்கேன் என்று தனது மீசையை முறுக்கிக் கொண்டு கதிர் சொல்ல, ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
ஐயா அப்படியே பத்து வருஷம் நடையா நடந்து என்ன பொண்ணு தேடி கட்டின போல தான்...நான் ஏமாந்த நேரத்துல தாலியை கட்டி போட்டுட்டு பெரிய வீரவசனம் பேசிட்டு இருக்குறீங்களே போயா அங்குட்டு என்றவள் அடுப்பில் இருந்த டீயை இறக்கி அங்கிருந்த கேனில் ஊற்றி மூடினாள்.
தாமரையோ சும்மா கிண்டலுக்காக தான் தன் கணவனிடம் தாலி கட்டியதை பற்றி பேசியது..ஆனால் கதிருக்கு அதைக் கேட்ட உடனே முகம் ஒரு மாதிரியாகிவிட்டது..
உண்மையிலேயே அவள் சம்மதம் இல்லாமல் தானே தாலி கட்டினோம் என்று எண்ணம் வர அங்கிருந்து அமைதியாக வெளியே சென்று விட்டான்.
அதை கவனிக்காத தாமரையோ என்ன வாயில கொழுக்கட்டையா இருக்கு ஒன்னும் பேசாம நிக்கிறீங்களே என்று அவனிடம் பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருந்தவள் எந்த பதிலும் இல்லாமல் போகவும் திரும்பி பார்க்க கதிர் அங்கு இல்லை..எங்கே போனாரு என்றவாறு டீ கேனையும் வடை இருக்கும் பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வர அங்கே முற்றத்தில் இருக்கும் சேர் மேல் உட்கார்ந்திருப்பவனை பார்த்தவள் இந்தாங்களென்க அமைதியாக எழுந்து வந்தவன் அவள் கையிலிருந்ததை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
தாமரையோ அவன் பின்னாடியே வந்து வாசலில் நின்று பார்க்க வண்டியில் ஏறியவன் வீட்ட பூட்டிக்கோ என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றான்...
டீ குடிக்கும் நேரம் ஆகிட்டு போல அதான் அமைதியா போறாரோயென நினைத்தவள் கதவை தாழ்பாள் போட்டு விட்டு விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.
ஏண்டா...
இவன் வீட்டுக்கு டீ எடுக்க போனானா இல்லை சீமைக்கு போய் மாடு வாங்கிட்டு வந்து பால கறந்து டீ போடுறானாயென வேலுவிடம் பிரகாசம் தாத்தா கேட்க...
செத்த பொறு சகலபாடி...மச்சான் வந்துடுவான் கேட்டு சொல்லுறேன் என்றான்.....
மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க இப்பொழுது தான் கணவனின் நடவடிக்கை தாமரைக்கும் புரிந்தது.
காலையிலே வயலுக்கு செல்பவன் விளக்கு வைத்த நேரத்திற்கு மேல்தான் வீட்டிற்கு வருவது.அப்படி வந்தாலும் இரவு அவள் தூங்கிய பிறகே மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு வந்து தூங்குவான்.
எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டமென்று மண்டையை உருட்டி யோசிக்க அவன் வேண்டுமென்று தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்தவள் என்ன தப்பு செய்தோமென்று நினைத்து பார்க்க,
அன்று வயலுக்கு டீ எடுத்து போனது தான் கடைசி..அதன் பின்னர் வந்த நாட்களிலிருந்து தான் இப்படி என்பது புரிந்தது.
சரி வீட்டிற்கு வரட்டும் இன்னைக்கு என்ன விஷயமென்று தெரிஞ்சிக்காமல் விடுவதில்லையென்று நினைத்தவள் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்..
வக்கீல் ஆபிஸ்:
எதுக்கு இந்த நாய் இங்க கூப்பிட்டு வந்துருக்கென்று வேலு-ஜான் இருவரும் அங்கிருந்த கதிரை பார்க்க அவனோ இஞ்சி தின்ன குரங்கு போல உட்கார்ந்திருந்தான்.
நேரமும் கடந்து செல்ல வக்கீல் முனியப்பனும் அங்கே வந்தவர் அவர்கான சேரில் உட்கார்ந்து கொண்டு மூவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் என்ன கேஸ் என்கவும்,கதிரோ விவாகரத்து கேசாக வந்து இருக்கேன் என்றான்.
அவன் சொன்னதை கேட்டு நண்பர்கள் இருவரும் யாருக்கு கேட்கிறான் இவன் என்று குழப்பமாக...
ஓகே..யாருக்கு என்று வக்கில் கேட்க எனக்கு தான் என்று சொல்லவும் நண்பர்கள் இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.
சார் தப்பா எடுத்துக்காதீங்க என்றவாறு ஆளுக்கொரு அறையை இருவரும் கதிருக்கு விட்டர்கள் ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சி வா... இல்லை இங்க என்ன நடக்குமென்று தெரியாதென்று சொல்லிய வேலு வேகமாய் வெளியே செல்ல...
ஜானோ வாடா என்கவும் கதிரும் அவனோடு அமைதியாக சென்றான்.
வக்கீலோ பாவம் இந்த பையன் நல்லா மாட்டுனான் நண்பர்கள்கிட்டயென்று சிரித்தார்.
எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவன் அங்கே வண்டியில் இருவரும் உட்கார்ந்திருப்பதை பார்த்து தனது புல்லட்டில் ஏறியதும் அவர்கள் இருவரும் வேகமாய் சென்றனர்.
என்ன பண்ண போறானுங்களோயென்று கதிரும் புலம்பிக்கொண்டே போக வழக்கம் போல் அவர்கள் சந்தித்து பேசும் அந்த ஆலமரத்திடம் நின்றனர்.
கதிரும் வண்டியை நிறுத்திட்டு அவர்களிடம் போக, ஏண்டா நாயே உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கயென்று கேட்டு மேலும் இரண்டு அறையை விட்ட ஜான்,என்ன குடி மூழ்கி போயிடிச்சென்று இப்படி ஒரு முடிவெடுத்துருக்க சொல்டா முண்டம் என்று நண்பனின் சட்டையை பிடித்து கேட்டான்..
அவன் தங்கச்சிக்கு என்னை புடிக்கலை போலடா என்க...
செருப்பு பிஞ்சிடும் நன்னாரி பயலே.. என் தங்கச்சி உன்கிட்ட சொல்லுச்சாடாயென்று வேலு கேட்க,அப்படிதான் நினைக்கிறேனென்று சொல்பவனை பார்த்த இருவரும் அய்யா ராசா முதல்ல நடந்ததை சொல்லி தொலை என்கவும் கதிரும் தாமரை சொல்லியதை சொல்லி வருத்தப்பட்டான்.
ஸ்சுஊஊஊஊஊ...
எட்டி வாய்லே மிதிங்கணும் போல இருக்குடா.பண்ணாடை பயலே...என் கொழுந்தியா விளையாட்டுக்கு சொல்லியிருக்கு.
இவன் சின்ன தங்கச்சிகாரியோ தேவியை ரூட் விட்டதை வச்சிக்கிட்டு தினமும் என்னை பாடாய் படுத்துறாள்டா.அப்படி பார்த்தால் நான் தினமும் டைவர்ஸ் பண்ணனுமே என்று சொல்லவும் இருக்கும் சூழல் மறந்து அப்படியாடா பங்காளியென்று கதிரும் சிரித்துவிட்டான்.
அடேய் லூசு பயலே விளையாட்டுக்கு சொன்ன ஒரு விஷயத்தை போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நீயே ஒரு முடிவு எடுத்துருக்கியே இது தாமரைக்கு தெரிஞ்சா என்ன நினைக்கும்?
சரி அதை விடு தங்கச்சி உன்கிட்ட எப்படி பழகுது சொல்லு?மனதார பழகுற போல இருக்கா இல்ல கடமைக்கு இருக்க போல உனக்கு தோணுதா என்று கேட்கவும் யோசித்துப் பார்த்த கதிருக்கு அவள் மனதார அவன்கூட வாழ்வது போல தான் இருந்துச்சு.
இல்லடா கடமைக்கு அவள் எதுவும் பண்ற போல தெரியவில்லை என்க,பின்ன என்னடா,கணவன் மனைவிக்குள்ள இது போல வார்த்தைகள் வருவது இயல்பு தானே இதை எல்லாரும் சீரியஸா எடுத்துட்டா யாரும் யாரு கூட வாழ மாட்டாங்க.