Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 555
- Thread Author
- #1
மேகமலை...
நம்ப வழக்கப்படி ரெண்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கல்யாணம் என்பது, மணமக்கள் சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினர் காதோடு காது வைத்தாற் போல திடீரென தீர்மானித்து நடத்தி முடிப்பது காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதற்கு கெட்டி மேளம் கொட்டனுமென்றில்லை, அர்ச்சகர் எவரும் தேவையில்லை.நம்மை சுற்றி இருக்கும் குறைந்த சொந்தங்களை கொண்டு திருமணத்தை முடித்து அதையே சிறப்பானதாக முப்பாட்டனுங்க வழிவழியா வந்தாங்களே மாமா என்று மூக்கையன் சொல்ல மச்சான் நீ நடத்துயா...
என்னைக்கு இருந்தாளும் என் மவள் உனக்கு மருமவள்னு முடிவு பண்ணிட்ட அப்படிதானே என்று கந்தன் சிரிக்க அதே தான் மாமா என்றார்.
அம்மாடி செல்லக்கிளி...கண்ணாலம் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் நடைபெறும் இன்றியமையாத ஒன்றுதான்.தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று இனிமையாய் வாழ வேண்டும் என நம்ப மூதாதையர்கள் பெரியோர்கள் பல சடங்கு முறைகளைச் செய்து திருமணத்தை நடத்திக் வைக்கின்றனர்.
இப்போ கால மாற்றத்தில் அவங்கவங்க வசதிக்கு ஏத்தப்போல ஆடம்பரமா கண்ணாலத்தை பண்ணுறாங்க.
இருந்தாலும் ஆண்கள் விருப்பத்தை விட, பெண்களின் விருப்பங்களும், உணர்வுகளும் உயர்வாய் மதிக்கப்படுகின்றது.
நம்ப சாதிப்படி மாப்ளை வீட்டார், பெண் வீட்டிற்குத் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் கேட்டுச் செல்வர்.உன் மாமனும் நல்லா விவரமா ஞாயிறுலதான் வந்துருக்காரு.
அதும் நல்லா முடிவு பண்ணி.. பெண் கேட்டுச் செல்லும்பொது, கையில் ஒரு இரும்புத்தடி அல்லது மரத்தடியைக் கொண்டு செல்ல வேண்டும்.அதையும் வெவரமா கொண்டு வந்துருக்கார்னா பாரு என்று சிரித்தவர் உன் மனசுல இருப்பதை சொல்லு கண்ணு.
அவங்க மவனுக்கு பொண்டாட்டினு எண்ணத்தோடதான் நம்ப வூடு தேடி வந்துருக்காங்க,நீ சொல்லுத்தா என்றார்.
இவ்வளவு நேரம் அவர் சொன்னதையெல்லாம் ஏற்கனவே தெரிந்ததென்றாலும் அமைதியாக கீழே குனிந்து கேட்டவளுக்கு எதிரில் உட்கார்ந்திருப்பவனின் மடித்த கால்களும் அதில் தெரிந்த சுருள் முடிகளும் விரல்களின் நீளமும் தெரிய ஒருவித படபடப்பு வந்தது.
சுற்றி இருப்பவர்களோ செல்லா என்ன சொல்ல போறாளோயென அவளையே பார்த்திருக்க,ஆத்தா உன் முடிவு எதா இருந்தாலும் சொல்லுத்தா யாருக்கும் நீ பயப்பட வேண்டாமென்று மீண்டும் கந்தன் சொல்ல...
எனக்கு சம்மதம்பா என்றுவள் அங்கிருந்து உள்ளே இருக்கும் கதவை திறந்து தனது குடிலுக்குள் ஓடிவிட்டாள்.செல்லாவின் முடிவை கேட்டு எல்லாருக்கும் சந்தோஷம் தாளவில்லை.
அப்புறம் என்ன....கண்ணால நாளை கையோடு முடிவு பண்ணிடலாமே மச்சானென்று மூக்கையன் சொல்ல,யோவ் வெவரமான ஆளுயா என்று சிரித்தவர் ஆத்தா முருகாயி அந்த நாள்காட்டிய கொண்டுவா என்றார்.
முகம் கொள்ளா சிரிப்பு தாண்டவம் ஆட முருகாயியும் காலண்டரை எடுத்துட்டு வந்து கொடுக்க அதை வாங்கிய கந்தன் திருப்பி முகூர்த்த நாளை பார்த்தார்.
குப்புளான்-மச்சான் இன்னைல இருந்து ஏழா நாளு வெள்ளிக்கிழமை நல்ல நாள் வருது அதை விட்டா அடுத்த மாசம்தான்.இதில் எதை வச்சிக்கலாமென்க...
வர வெள்ளியே வச்சிக்கலாம் மாமா..
எதுக்கு நாள கடத்தணும்.நீங்க என்ன சொல்றீங்க மச்சானென்று தனது தங்கச்சி புருஷனை கேட்க,எனக்கு ஒன்னும் இல்லை மச்சான்.எதுக்கும் உன் தங்கச்சிகாரிய ஒரு எட்டு கேட்டுக்கலாமென்றவர் முருகாயி நீ என்ன சொல்லுற?
இவர்கள் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க மருதுவின் போனிற்கு சவுதியிலிருந்து கால் வரவும் அங்கிருந்து எழுந்தவன் அட்டென் பண்ணி பேசிக் கொண்டே வெளியே வந்தான்.
சில நிமிடங்கள் பேசியவன் வீட்டை எட்டி பார்க்க அவர்கள் திருமண பேச்சில் சீரியஸாக ஆலோசனை பண்ணுவது தெரிந்து பக்கத்திலிருக்கும் குடிலை நோக்கி போனவன் கதவின் மேல் கையை வைக்க பட்டென்று திறந்தது.
உள்ளே கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் காலடி சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கிருப்பவனை பார்த்து அய்யோ என அதிர்ந்து எழுந்தவள் ஒரு மூலையில் போய் திரும்பி நிற்க...
நிதானமாய் அவளின் அருகிள் வந்தவன் தனது பாக்கெட்டிலிருந்த ஒன்றை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட அதை பார்த்து திகைத்தாள்.
இன்னும் கொஞ்ச நாள்ல இதில் என் பொண்டாட்டி என்ற உரிமையோட தாலியை கோர்த்து போட்டுக்கலாமென்றவன் அதிர்ந்து பார்ப்பவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் என் மனசுல பொண்டாட்டியா நீ மட்டும் தான் டி இருக்க.
தேவையில்லாமல் மண்டைய போட்டு உழட்டாதே என்றவன் தன்னவளின் நடுங்கும் இதழை தனது முரட்டிதழால் சிறை செய்தான்.
நிதானமாக செல்லாவின் உதடுகளை தன்னிடமிருந்து பிரித்தவன் நான் முத்தமிடும் முதலும் கடைசியுமான பெண் நீ மட்டும் தான்டி.
தேவையில்லாத விஷயங்களை மனசுல நினைச்சி வாங்கி கட்டிக்காதே என்க செல்லாவோ அவன் அதிரடியில் மிரண்டவள் வேறு பக்கம் திரும்பி நிற்க மீண்டும் தன்வளின் இடையோடு இறுக்கி அணைத்தவன் என்னடி 45 கிலோக்குள்ள தான் இருப்ப போல...
நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தால் தானே இந்த மாமனை ரசிக்க முடியுமென்க,பேசுவது தன் மாமன் மகன் மருது தானாயென செல்லாவிற்கு நம்பவே முடியவில்லை.
சரி தலை முடியை சரி பண்ணு நான் வெளியே போறேனென்றவன் அங்கிருந்து வீட்டிற்குள் வர பெரியவர்களும் இருவரின் திருமணத்தை எப்படி பண்ணலாமென்று பேசி முடித்திருந்தனர்.
பின்னர் வந்தவர்களுக்கு மரியாதை செய்து வழியனுப்ப மூக்கையன் குடும்பத்தாரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
ஒரு முறையாவது தன்னவள் பார்ப்பாளென்று மருதுவும் எதிர் பார்ப்போடு அங்கிருந்து பஸ் ஏற சென்றான்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று குப்புளானும் முருகாயியும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு அய்யோ மாமா கிளம்பிட்டாரா என்று நினைத்தவள் போகும் போது ஒருமுறை பார்த்திருக்கலாமோ என்று எண்ணம் வர குடிலில் இருந்து வெளியே வந்தவள் பின்பக்கம் உள்ள வயலில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினாள்.
ஏதோ ஓர் உந்துதலில் இடது பக்கமிருக்கும் வயலை மருது பார்க்க செல்லா ஓடி வருவது தெரிந்தது.ஹப்பாடா வந்துட்டாலென்று நினைத்தவன் பஸ் வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் அப்படியே அங்கிருந்து மரங்களை நோக்கி சென்றான்.
ஓடி வந்தவள் சற்று தள்ளி இருந்த மரங்களுக்கு பின்னால் மறைந்து நிற்க அங்கு வந்தவன் என்னடி என்றான்.
மருதுவின் குரலை கேட்டவள் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க மரத்தின் மேல் இருக்கும் அவள் கையின் மேல் தனது கையை வைத்தவன் இன்னும் அஞ்சு நாள் தான்...அதுக்குள்ள இந்த ஊருக்குள்ள எங்க எங்க சுத்தி ஓடனுமோ ஓடிக்கோ..
அதுக்கப்புறம் என் பொண்டாட்டியா நீ அங்க இருக்கணும் என்கவும் மாமனின் பேச்சை கேட்ட செல்ல கிளிக்கு வெட்கம் வந்தது.
கையைப் பிடித்துக் கொண்டே மறைவில் நிற்பவளிடம் அங்க வரட்டுமாடி என்க என்று ஐயோ என்றாள். அப்போ வரச்சொல்லுற சரிதானென்று பட்டென்று அவளிடம் வந்தவன் மரங்களுக்கு ஊடே இரு கைகளால் சிறை செய்ய செல்லாவோ கீழே குனிந்து கொண்டாள். ஏய் ஒரு முறை நிமிர்ந்து பாருடி என்று சொல்ல கண்கள் படபடக்க நிமிர்ந்தவள் எதிரே நிற்பவனை பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க கண்களை மூடிக்கொண்டாள்.
மூடியே இரு கண்களிலும் மீசை முடி குத்த முத்தமிட்டவன் அடுத்து துடித்துக் கொண்டிருக்கும் இதழை தொடப் போக மருது என்று அவன் அப்பா கூப்பிடும் சத்தம் கேட்டு ப்ச் என்றான்.
தன் காதல் கைகூடிய மயக்கத்தில் மூழ்கியிருந்தவளுக்கும் மூக்கையனின் குரல் காதில் கேட்டது கண்ணு திறந்தவள் மாமா கூப்பிடுறாங்க தான் என்று ஓட போக ஏய் இருடி என்று மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் பத்திரமா போ என்க கீழே குனிந்து கொண்டு தலையாட்டினாள்.
அப்புறம் இந்த கழுத்துல இருக்குற செயின் பற்றி வீட்ல கேப்பாங்க என்றதும்,அதைக் கேட்ட உடனே ஐயோ என்று சொன்னவளை பார்த்தவன் அப்படி கேட்கக்கூடாது .
உன் கழுத்தில் இருப்பது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் புரியுதா என்க சரி என்றாள்.ம்ம் உன் மாமனார் நம்மள ரொமான்ஸ் பண்ண விட மாட்டேங்குறாரு.மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன் இப்ப நீ போ என்றவன் அவள் கன்னத்தை தட்டி அனுப்பி விட்டு சிரித்துக் கொண்டே தனது தலைமுடி கோதிக்கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.
அவர்களுக்கான பஸ் வந்ததும் அதில் ஏறி நீலகிரிக்கு வந்து சென்றனர்.
வீட்டிற்குள் வந்து செல்லாவிற்கு அவள் தாயும் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவதும் காதல் விழுந்தது.
என்ன முருகாயி நீ ஆசைப்பட்ட போலயே உன் பொறந்த வீட்டுக்கு உன் மகளை மருமகளா அனுப்பி வைக்கிற என்று கேட்க ஆமாங்க அக்கா இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு.
எனக்கு அப்புறம் என் பொண்ணுக்கு உறவு என் அண்ணன் வீடு தானே என்க, அதுவும் வாஸ்தவம் தான் மருது போல நல்ல பிள்ளைகள் படிச்சு நம்ம இனத்துல முன்னேறுவது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதை தான்
நம்ப வழக்கப்படி ரெண்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கல்யாணம் என்பது, மணமக்கள் சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினர் காதோடு காது வைத்தாற் போல திடீரென தீர்மானித்து நடத்தி முடிப்பது காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதற்கு கெட்டி மேளம் கொட்டனுமென்றில்லை, அர்ச்சகர் எவரும் தேவையில்லை.நம்மை சுற்றி இருக்கும் குறைந்த சொந்தங்களை கொண்டு திருமணத்தை முடித்து அதையே சிறப்பானதாக முப்பாட்டனுங்க வழிவழியா வந்தாங்களே மாமா என்று மூக்கையன் சொல்ல மச்சான் நீ நடத்துயா...
என்னைக்கு இருந்தாளும் என் மவள் உனக்கு மருமவள்னு முடிவு பண்ணிட்ட அப்படிதானே என்று கந்தன் சிரிக்க அதே தான் மாமா என்றார்.
அம்மாடி செல்லக்கிளி...கண்ணாலம் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் நடைபெறும் இன்றியமையாத ஒன்றுதான்.தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று இனிமையாய் வாழ வேண்டும் என நம்ப மூதாதையர்கள் பெரியோர்கள் பல சடங்கு முறைகளைச் செய்து திருமணத்தை நடத்திக் வைக்கின்றனர்.
இப்போ கால மாற்றத்தில் அவங்கவங்க வசதிக்கு ஏத்தப்போல ஆடம்பரமா கண்ணாலத்தை பண்ணுறாங்க.
இருந்தாலும் ஆண்கள் விருப்பத்தை விட, பெண்களின் விருப்பங்களும், உணர்வுகளும் உயர்வாய் மதிக்கப்படுகின்றது.
நம்ப சாதிப்படி மாப்ளை வீட்டார், பெண் வீட்டிற்குத் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் கேட்டுச் செல்வர்.உன் மாமனும் நல்லா விவரமா ஞாயிறுலதான் வந்துருக்காரு.
அதும் நல்லா முடிவு பண்ணி.. பெண் கேட்டுச் செல்லும்பொது, கையில் ஒரு இரும்புத்தடி அல்லது மரத்தடியைக் கொண்டு செல்ல வேண்டும்.அதையும் வெவரமா கொண்டு வந்துருக்கார்னா பாரு என்று சிரித்தவர் உன் மனசுல இருப்பதை சொல்லு கண்ணு.
அவங்க மவனுக்கு பொண்டாட்டினு எண்ணத்தோடதான் நம்ப வூடு தேடி வந்துருக்காங்க,நீ சொல்லுத்தா என்றார்.
இவ்வளவு நேரம் அவர் சொன்னதையெல்லாம் ஏற்கனவே தெரிந்ததென்றாலும் அமைதியாக கீழே குனிந்து கேட்டவளுக்கு எதிரில் உட்கார்ந்திருப்பவனின் மடித்த கால்களும் அதில் தெரிந்த சுருள் முடிகளும் விரல்களின் நீளமும் தெரிய ஒருவித படபடப்பு வந்தது.
சுற்றி இருப்பவர்களோ செல்லா என்ன சொல்ல போறாளோயென அவளையே பார்த்திருக்க,ஆத்தா உன் முடிவு எதா இருந்தாலும் சொல்லுத்தா யாருக்கும் நீ பயப்பட வேண்டாமென்று மீண்டும் கந்தன் சொல்ல...
எனக்கு சம்மதம்பா என்றுவள் அங்கிருந்து உள்ளே இருக்கும் கதவை திறந்து தனது குடிலுக்குள் ஓடிவிட்டாள்.செல்லாவின் முடிவை கேட்டு எல்லாருக்கும் சந்தோஷம் தாளவில்லை.
அப்புறம் என்ன....கண்ணால நாளை கையோடு முடிவு பண்ணிடலாமே மச்சானென்று மூக்கையன் சொல்ல,யோவ் வெவரமான ஆளுயா என்று சிரித்தவர் ஆத்தா முருகாயி அந்த நாள்காட்டிய கொண்டுவா என்றார்.
முகம் கொள்ளா சிரிப்பு தாண்டவம் ஆட முருகாயியும் காலண்டரை எடுத்துட்டு வந்து கொடுக்க அதை வாங்கிய கந்தன் திருப்பி முகூர்த்த நாளை பார்த்தார்.
குப்புளான்-மச்சான் இன்னைல இருந்து ஏழா நாளு வெள்ளிக்கிழமை நல்ல நாள் வருது அதை விட்டா அடுத்த மாசம்தான்.இதில் எதை வச்சிக்கலாமென்க...
வர வெள்ளியே வச்சிக்கலாம் மாமா..
எதுக்கு நாள கடத்தணும்.நீங்க என்ன சொல்றீங்க மச்சானென்று தனது தங்கச்சி புருஷனை கேட்க,எனக்கு ஒன்னும் இல்லை மச்சான்.எதுக்கும் உன் தங்கச்சிகாரிய ஒரு எட்டு கேட்டுக்கலாமென்றவர் முருகாயி நீ என்ன சொல்லுற?
இவர்கள் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க மருதுவின் போனிற்கு சவுதியிலிருந்து கால் வரவும் அங்கிருந்து எழுந்தவன் அட்டென் பண்ணி பேசிக் கொண்டே வெளியே வந்தான்.
சில நிமிடங்கள் பேசியவன் வீட்டை எட்டி பார்க்க அவர்கள் திருமண பேச்சில் சீரியஸாக ஆலோசனை பண்ணுவது தெரிந்து பக்கத்திலிருக்கும் குடிலை நோக்கி போனவன் கதவின் மேல் கையை வைக்க பட்டென்று திறந்தது.
உள்ளே கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் காலடி சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கிருப்பவனை பார்த்து அய்யோ என அதிர்ந்து எழுந்தவள் ஒரு மூலையில் போய் திரும்பி நிற்க...
நிதானமாய் அவளின் அருகிள் வந்தவன் தனது பாக்கெட்டிலிருந்த ஒன்றை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட அதை பார்த்து திகைத்தாள்.
இன்னும் கொஞ்ச நாள்ல இதில் என் பொண்டாட்டி என்ற உரிமையோட தாலியை கோர்த்து போட்டுக்கலாமென்றவன் அதிர்ந்து பார்ப்பவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் என் மனசுல பொண்டாட்டியா நீ மட்டும் தான் டி இருக்க.
தேவையில்லாமல் மண்டைய போட்டு உழட்டாதே என்றவன் தன்னவளின் நடுங்கும் இதழை தனது முரட்டிதழால் சிறை செய்தான்.
நிதானமாக செல்லாவின் உதடுகளை தன்னிடமிருந்து பிரித்தவன் நான் முத்தமிடும் முதலும் கடைசியுமான பெண் நீ மட்டும் தான்டி.
தேவையில்லாத விஷயங்களை மனசுல நினைச்சி வாங்கி கட்டிக்காதே என்க செல்லாவோ அவன் அதிரடியில் மிரண்டவள் வேறு பக்கம் திரும்பி நிற்க மீண்டும் தன்வளின் இடையோடு இறுக்கி அணைத்தவன் என்னடி 45 கிலோக்குள்ள தான் இருப்ப போல...
நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தால் தானே இந்த மாமனை ரசிக்க முடியுமென்க,பேசுவது தன் மாமன் மகன் மருது தானாயென செல்லாவிற்கு நம்பவே முடியவில்லை.
சரி தலை முடியை சரி பண்ணு நான் வெளியே போறேனென்றவன் அங்கிருந்து வீட்டிற்குள் வர பெரியவர்களும் இருவரின் திருமணத்தை எப்படி பண்ணலாமென்று பேசி முடித்திருந்தனர்.
பின்னர் வந்தவர்களுக்கு மரியாதை செய்து வழியனுப்ப மூக்கையன் குடும்பத்தாரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
ஒரு முறையாவது தன்னவள் பார்ப்பாளென்று மருதுவும் எதிர் பார்ப்போடு அங்கிருந்து பஸ் ஏற சென்றான்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று குப்புளானும் முருகாயியும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு அய்யோ மாமா கிளம்பிட்டாரா என்று நினைத்தவள் போகும் போது ஒருமுறை பார்த்திருக்கலாமோ என்று எண்ணம் வர குடிலில் இருந்து வெளியே வந்தவள் பின்பக்கம் உள்ள வயலில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினாள்.
ஏதோ ஓர் உந்துதலில் இடது பக்கமிருக்கும் வயலை மருது பார்க்க செல்லா ஓடி வருவது தெரிந்தது.ஹப்பாடா வந்துட்டாலென்று நினைத்தவன் பஸ் வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் அப்படியே அங்கிருந்து மரங்களை நோக்கி சென்றான்.
ஓடி வந்தவள் சற்று தள்ளி இருந்த மரங்களுக்கு பின்னால் மறைந்து நிற்க அங்கு வந்தவன் என்னடி என்றான்.
மருதுவின் குரலை கேட்டவள் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க மரத்தின் மேல் இருக்கும் அவள் கையின் மேல் தனது கையை வைத்தவன் இன்னும் அஞ்சு நாள் தான்...அதுக்குள்ள இந்த ஊருக்குள்ள எங்க எங்க சுத்தி ஓடனுமோ ஓடிக்கோ..
அதுக்கப்புறம் என் பொண்டாட்டியா நீ அங்க இருக்கணும் என்கவும் மாமனின் பேச்சை கேட்ட செல்ல கிளிக்கு வெட்கம் வந்தது.
கையைப் பிடித்துக் கொண்டே மறைவில் நிற்பவளிடம் அங்க வரட்டுமாடி என்க என்று ஐயோ என்றாள். அப்போ வரச்சொல்லுற சரிதானென்று பட்டென்று அவளிடம் வந்தவன் மரங்களுக்கு ஊடே இரு கைகளால் சிறை செய்ய செல்லாவோ கீழே குனிந்து கொண்டாள். ஏய் ஒரு முறை நிமிர்ந்து பாருடி என்று சொல்ல கண்கள் படபடக்க நிமிர்ந்தவள் எதிரே நிற்பவனை பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க கண்களை மூடிக்கொண்டாள்.
மூடியே இரு கண்களிலும் மீசை முடி குத்த முத்தமிட்டவன் அடுத்து துடித்துக் கொண்டிருக்கும் இதழை தொடப் போக மருது என்று அவன் அப்பா கூப்பிடும் சத்தம் கேட்டு ப்ச் என்றான்.
தன் காதல் கைகூடிய மயக்கத்தில் மூழ்கியிருந்தவளுக்கும் மூக்கையனின் குரல் காதில் கேட்டது கண்ணு திறந்தவள் மாமா கூப்பிடுறாங்க தான் என்று ஓட போக ஏய் இருடி என்று மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் பத்திரமா போ என்க கீழே குனிந்து கொண்டு தலையாட்டினாள்.
அப்புறம் இந்த கழுத்துல இருக்குற செயின் பற்றி வீட்ல கேப்பாங்க என்றதும்,அதைக் கேட்ட உடனே ஐயோ என்று சொன்னவளை பார்த்தவன் அப்படி கேட்கக்கூடாது .
உன் கழுத்தில் இருப்பது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் புரியுதா என்க சரி என்றாள்.ம்ம் உன் மாமனார் நம்மள ரொமான்ஸ் பண்ண விட மாட்டேங்குறாரு.மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன் இப்ப நீ போ என்றவன் அவள் கன்னத்தை தட்டி அனுப்பி விட்டு சிரித்துக் கொண்டே தனது தலைமுடி கோதிக்கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.
அவர்களுக்கான பஸ் வந்ததும் அதில் ஏறி நீலகிரிக்கு வந்து சென்றனர்.
வீட்டிற்குள் வந்து செல்லாவிற்கு அவள் தாயும் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவதும் காதல் விழுந்தது.
என்ன முருகாயி நீ ஆசைப்பட்ட போலயே உன் பொறந்த வீட்டுக்கு உன் மகளை மருமகளா அனுப்பி வைக்கிற என்று கேட்க ஆமாங்க அக்கா இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு.
எனக்கு அப்புறம் என் பொண்ணுக்கு உறவு என் அண்ணன் வீடு தானே என்க, அதுவும் வாஸ்தவம் தான் மருது போல நல்ல பிள்ளைகள் படிச்சு நம்ம இனத்துல முன்னேறுவது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதை தான்