• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
557
சீமக்கரை:

தங்க நிற புடவைகட்டி,வைரமும் மரகதமும் கலந்த நகைகளை போட்டுக்கொண்டு அதிக மேக்கப் இல்லாமல் நீளமான முடியை அழகிய கொண்டையாக்கி அதைசுற்றி மல்லிகை பூ சுற்றி,முந்தானையை ஒற்றை பின் குற்றி அதை இடது கையில் தாங்கி பிடித்தவாறு படியில் மகாராணி போல இறங்கி வரும் மனைவியை கண்டு தடுமாறினான்.

எந்த டிரஸ் போட்டாலும் என் பொண்ட்டாட்டி செம்மையா இருக்காளே என்க,மச்சி வாய்ல ஜொல்லு ஒழுகுதுடாயென்று வேலு சொல்ல நீ கண்ணை மூடிகிட்டு வேலைய பாருடா என்றான்.

கீழே வந்தவள் ஓரக்கண்ணால் கணவனை பார்க்கவும் சிரிப்பு வந்தது. அப்பொழுது அக்கா என்றவாறு வேகமாய் வந்த அல்லி தனது உடன்பிறந்தவளை கட்டிக்கொண்டு விசும்பினாள்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்த தங்கையை தாமரையும் கட்டிக்கொண்டு அழாத டி.எப்படி இருக்க என்றாள்.

நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்கவும் சரி பேசாதே என்று தாமரை சொல்ல அப்படியெல்லாம் கனவில் கூட நினைக்காத நான் பேசுவேன் என்று மூக்கை உறிஞ்சு கொண்டே சொன்னாள்.

ஏய் உன் கண்ணீரால் என் பொண்டாட்டி புடவை அழுக்காய்ட போகுதென்று கதிர் சொல்ல ,அய்யோஓஓஓ...இந்த விருமாண்டி இருப்பதை மறந்துட்டனே என்று அல்லி முணுமுணுக்க,தாமரை சிரித்துவிட்டாள்.

நேரமும் கடந்து செல்ல அம்மாடி ஆரம்பிங்களென்று வள்ளி அப்பாயி சொல்ல,அங்கே தரையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் இருவரையும் உட்கார சொன்னார்கள்.

தாமரையிடம் வேறொரு தாலிக்கயிற்றை கொடுத்து கழுத்தில் கட்டிக்கச்சொல்லி அவள் போட்டிருந்ததை கழட்டி வாங்கிய பின்,ஓரகத்தி முறை உள்ளவரோடு சீதா ராதா மூவரும் அதை பொறுமையாக பிரித்து எடுத்து அவளுக்காக வாங்கி வைத்த தாலி கொடியில் மற்ற உருக்களை கோர்த்து முடிக்க முக்கால்மணி நேரத்திற்கு மேலானது.

அத்தை இதை சாமிக்கிட்ட வச்சி எடுத்து வாங்களென்று வள்ளி அப்பாயிடம் கொடுக்க, அவரும் வாங்கிட்டு போய் பூஜையறையிலிருக்கும் சாமிக்கு முன்னர் உள்ள தட்டில் வைத்தவர் பேச்சிஆத்தா,அய்யனாரப்பா என் குலம் தலைச்சி ஆலமரமா உசந்து நிக்கணும் என வேண்டியவர் அதை எடுத்து வந்து பேரனிடம் கொடுக்க கையில் வாங்கியவன் அருகில் இருக்கும் மனைவியின் கழுத்தில் போட்டுவிட்டான்.

ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்கிக்குங்கப்பா என்க எல்லாம் வரிசையா நில்லுங்க...

எல்லார் கால்லையும் விழுந்து முடிக்கிறதுக்குள்ள என் தங்கச்சிக்கு முதுகு போய்டுமென்று வேலே சொல்ல....ஏண்டா என் பேரனுக்கு வலிக்காதா என பிரகாசம் தாத்தா கேட்க...தெரியாது சகலபாடி என்றான்.

வேலு சொல்வதை போல எல்லாரும் ஒன்றாக நிற்க இருவரும் காலில்விழ அவர்களும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் பண்ண,ஏத்தா தாமரை இந்தாயென்ற வள்ளி அப்பாயி,இது என் மாமியாரோட மாமியாருது.

ஊட்டு மருமவளுக்குனு அவங்க வச்சிட்டு போனது. உன் அத்தைகாரிங்களுக்கு பொறவு இது உனக்கு சேரணும்த்தா.நாள பின்ன உங்களோட மருமவளுக்கு இதை கொடுங்களென்று ரெட்டவட செயினும் மரகதகல்லு வச்ச அட்டிகையும் கொடுத்தார்.

ஆண்கள் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மதிய விருந்துக்கு பெண்கள் ஒரு பக்கம் பரபரப்பாய் சமைத்தனர்.

பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு வேலை செய்ய தாமரைக்கு அசௌகரியமாக இருப்பதை கண்ட பார்வதி,அம்மாடி போய் புடைவைய மாத்திக்கடா.

இந்த வேக்காடுல அது வேற படுதாபோல சுத்திக்கிட்டு என்க ஹப்பாடா என மனதிற்குள் நினைத்தவள் சரிங்கம்மாயென்று படியில் ஏறி வேகமாய் சென்றவள் உள்ளே போய் கதவை தாழிட பால்கனி கதவு தட்டும் சத்தம் கேட்டது.

யாரு என ஜன்னல் வழியாய் பார்க்க கதிர் நின்றான். இந்த மனுசன் ஏன் இங்க வந்தாரு என்றவாறு கதவை திறக்க உள்ளே வந்து தாழிட்டவன் என்னடி பண்ணுற என்க...

ம்ம் நாத்து நடுறேன் என்றாள்.

நல்ல வேலைடி என்றவனை பார்த்து முறைத்தவள் இங்க எதுக்கு வந்தீங்களென்க என் பொண்டாட்டிக்கு உதவி பண்ணதானென்று அவளின் கன்னத்தை பிடித்தவன் சவால்ல ஜெயிக்க தயாராக இருடி என அவள் இடுப்பில் கிள்ளி விட ஆஆஆ என்று கத்தியவள் வாயை தனது பாணியில் மூடினான்.

திருட்டு பூனையென்று சிரித்தபடியே வேறு புடவையை மாற்றிக்கொண்டு கீழே போனவள் கிச்சனில் அவர்களோடு இணைந்து கொள்ள ஒரு மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்தனர்.

பின்னர் ஆண்களுக்கு முதலில் பரிமாற அவர்கள் சாப்பிட்டு சென்றதும் பெண்களெல்லாரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

நேரமும் கடந்து செல்ல தாமரைக்கு படபடப்பாக இருந்தது.

அவளுக்கு நலுங்கு வைத்து குளித்து வரச்சொல்லியவர்கள் புதிய புடவையை கொடுத்து கட்டிக்கச்சொல்லி நகைகளை போட்டு அலங்காரம் பண்ண அய்யோஓஓ என்றானது.

கதிர் தாமரை இருவருக்கும் உணவை பரிமாறியவர்கள் சாமியை வணங்கச்சொல்லி தாமரையின் கையில் பால் சொம்பை குடுத்து மேலே அனுப்பி வைக்க எவ்வளவு பொறுமையாக போக முடியுமோ அவ்வளவு நிதானமாக சென்றவள் கதவை திறந்து உள்ளே பார்க்க ஒரே இருட்டாய் இருந்தது.

அய்யனாரு இங்கு இல்லை போலயென்று இருட்டில் சுவிட்ச் பாக்சை எப்படி கண்டுபிடிக்கயென்று யோசிக்கும் போது கதவை தாழிடும் சத்தம் கேட்க மாமா என்றாள்.

ம்ம் என்றவன் தனது போனில் லைட்டை ஆன் பண்ணியவன் ஒளியிலே தெரிவது தேவதையா என்று பாட வாவ்.... செம்ம வாய்ஸ்... உங்களுக்கு பாடலாம் தெரியுமாயென்றவளுக்கு இல்லைடி ஆள் வச்சி பாடுறேனென்றவன் அவள் கையிலிருந்த சொம்பை வாங்கி வைத்துவிட்டு மனைவியை தூக்கியவன் அங்கிருந்த சேரில் போய் உட்கார்ந்தான்.

தாமரை.... என்க ம்ம் என்றாள்..

முதல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்டி.பிறகு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமே என்க அதற்கும் ம்ம் என்றவளை ஏண்டி வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கயென்று அவளின் தோள்பட்டையில் கடிக்க அச்சோஓஓ என்ன பண்றீங்களென்று நெளிபவளின் அங்கங்கள் உரசுவதில் ஆண்மகனின் உடலுக்குல் ஹார்மோன்களின் ஆட்டம் தொடங்கியது....

கதிரோ...தாமரை என்க.. ஹம் என்னும் சத்தம் மட்டுமே வந்தது...அது வந்துடியென கதிர் தடுமாற தான் விலகி இருந்தால் தன்னவன் குறுகி போவான் என்பதை உணர்ந்தவள் இரண்டு கைகளையும் மாலையாய் அவன் கழுத்தில் கோர்த்தவள் லவ் யூ மாம்ஸ் என்றாள்.

லவ் யு டூ டி என்றவன் முரட்டு தனமாய் முத்தங்களை பரிசளித்தவன் மடியில் இருந்தவளை அள்ளிக்கொண்டு போய் மெத்தையில் சரிந்தான்...

நன்கு தூக்கத்தில் இருந்தவளுக்கு 5 மணிக்கு வழக்கமாய் பாங்க் ஊதும் சத்தம் கேட்டதும் கண்விழித்து பார்க்க,கதிரோ அவளை அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பொறுமையாய் அவன் கையை விலக்கி எழ போக இரும்பு வளையத்திற்குள் சிக்கியதை போல இறுக்கி அணைத்தவன் மீண்டும் மனைவியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.

மாமு நேரமாகிட்டு என்க... ம்ம் ஆகட்டும்டி என்றான்.

எல்லாரும் கீழ இருக்காங்கள் என்ன நினைப்பாங்களென்க,அதுலாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்களென்று தன்னோடு அணைத்தவன் சிறிது நிமிடங்கள் சென்று,சரி போ என்றதும் விட்டால் போதுமென்று எழுந்தவளை கண்டு சிரிப்பு வந்தது.

தாமரையும் குளித்து முடித்து வெளியே வர ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.கதிரோ எழுந்து பால்கனிக்கு சென்றுவிட இதோ வரேனென்றவாறு வேகமாய் நைட்டியை போட்டவள் கதவை திறக்க அங்கே சீதா நின்று கொண்டிருந்தார்.

அம்மாடி இன்னைக்கு அய்யனாருக்கு நம்ப வீட்ல கெடாவெட்டு வச்சிருக்கு.சொந்த பந்தங்களையெல்லாம் உங்க மாமாங்க ரெண்டு பேரும் கூப்பிட போயிருக்காங்க.
பட்டு புடவை கட்டிக்கிட்டு நகையெல்லாம் போட்டு வா...

எல்லாரும் கல்யாணத்துக்கு பிறகு இப்போ தான் உன்னை பார்க்க போறாங்க என்க,சரிங்கத்தை என்றாள்.

மருமகளின் முகத்திலிருந்த சிரிப்பே மனதிற்கு இதத்தை கொடுக்க சரிமாயென்று அங்கிருந்து கீழே சென்றுவிட்டார்.

உள்ளே வந்தவள் கணவனை தேட அவன் பால்கனியில் நிற்பது தெரிந்தது.சரியென்று புடவை செல்க்ட் பண்ண பால்கனி கதவு சாத்தும் சத்தம் கேட்டது.

காலடி சத்தமோ தன்னை நோக்கி நெருங்கி வருவதை கேட்க ஒருவித படபடப்பு வர,அந்நேரம் சூடான மூச்சுக்காத்து கழுத்தோரம் பட்டதும் விதிர்த்து போய் நிமிர்ந்தவள் அது வந்து வந்துயென தடுமாறினாள்.

ஹம்... சொல்லு என்றான்..

அத்தை வந்தாங்களென்க...

ம்ம் வந்தாங்கள் பிறகு என்பவனை மனதிற்குள் திட்டியவள் மனுஷன் இப்படி படுத்துறாரே அய்யோஓஓ...

அது வந்து இன்றைக்கு கோயிலுக்கு போகணுமாமென்று ஒருவழியாய் சொல்லி முடித்தாள்.

சரி... போகலாம்..

அதுக்கு என்றவனின் மேல் காண்டு வர கோவமாக திரும்பியவள் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் தாண்டவமாட கீழே குனிந்து நின்றாள்.

மனைவியின் படபடப்பையும் அவளின் நளினம் கலந்த வெட்கத்தையும் பார்த்தவனுக்கு ஆண்மகனாய் பெருமை வர மேலும் தன்னவளை ஒடுங்கவிடாமல் சரிடக...எடை குறைவா உள்ள புடவைய கட்டு.

அங்க நம்ப சொந்தத்தில் உள்ளவங்களுக்கு உன்னை தான் பரிமாற சொல்வாங்க அப்போ சிரமமாக இருக்க கூடதே என்றவன் அவள் எடுத்து வைத்த புடவையை பார்க்க மனதிற்கு திருப்தியாக இருக்கவும் அங்கிருந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்றுவிட்டான்.

கதவு தாழிடும் சத்தம் கேட்ட பின்னரே தாமரைக்கு உயிர் வந்தது போல இருந்தது.இதழ் பிரியாத புன்னகையோடு புடவையை வேக வேகமாய் கட்டி முடித்தவள் நீண்ட கூந்தலை சீவி பின்னல் போடவும் கதிரும் குளித்து ஈர உடலோடு வெளியே வர கண்ணாடி வழியாக பார்த்தவள் அய்யோ என்று கண்ணை மூடிக்கொண்டாள்.

உழைப்பேறிய தேகத்தில் அங்கங்கே பனித்துளிகள் போல நீர் திவலைகள் கோர்த்திருக்க காடுபோல் வெஞ்சின் ரோமங்கள் நீரில் பளபளக்க ஆண்மை ததும்பும் கம்பீரமாய் நிற்பவனின் தோற்றம் மனதிற்குள் கிளர்சியை உண்டாக்கியது.

மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவன் என்னடி என்றவாறு தலையை துவட்ட ஒன்னுமில்லையென்றவள் பால்கனி கதவை திறந்து வேகமாய் சென்றாள்.

ஹாஹாஹா என சிரித்தவன் அடியேய் சண்டிராணி என்னடி பண்ணுற?

எத்தனை நாளைக்குதான் ஓடுவனு பாக்குறேனென்டி என்றவன் பீரோவை திறந்து டிரஸை பார்க்க... அவன் மனசாட்சியோ டேய் வீணா போன வெங்காயம், நீயே உன் காதலை நேரில் சொல்ல துப்பில்லாத துடப்பக்கடை..

அவள் பொண்ணு... அச்சம் மடம் ஞாணம் இல்லாமல் இருக்குமா என்க... ஹிஹி ஹி என சிரித்தான்.பின்னர் தன்னவள் போட்டிருக்கும் டிரஸிற்கு ஏற்ற போல சர்ட்டை தேடி எடுத்தவன் அதோடு வேஸ்டியும் போட்டுக்கொண்டு ஓய் வாடி என்று குரல் கொடுக்க தாமரையும் கீழே குனிந்தபடியே உள்ளே வந்தாள்.

என்னத்தை தொலைச்சடி இப்படி தேடுறயென்று அவளை சீண்ட கொஞ்ச நஞ்சம் கொழுப்பில்லை இந்த மனுஷனுக்கென்று முணுவினாள்.

சரி சரி சீக்கிரமா மேக்கப் பண்ணு கீழே போகணுமென்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவன் தனது போனை ஆன் பண்ணி பார்க்கலானான்.

இவர் இங்க இருந்தால் என்னத்தை நான் தயாராகவென்று புலம்பியவாறு எளிமையான நகைகளை போட்டவள் கண்ணாடியில் பார்க்க ஓகேதானென்று எழுந்தவளின் முன்னால் வந்து நின்றவன் மேலிருந்து கீழ் வரை பார்வையை ஓட விட்டவன் எதோ மிஸ்ஸாகுதேடி என்க...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
557
தாமரையோ என்னனு தெரியலையே என்றவாறு திரும்பி கண்ணாடியை பார்க்க பூ மட்டும் இருந்தால் பர்பெக்ட் டி என்றவன் சரி வா போகலாமென்று முன்னே செல்ல தாமரையும் கதவை சாத்தி விட்டு வர இருவரும் இணைந்தே கீழே வந்தனர்.

பேரனையும் பேத்தியையும் பார்த்த வள்ளி அப்பாயிக்கு மனது பூரிக்க,அப்பு சாமி கும்பிட்டு வாங்களென்க சரி அப்பாயி என்றவன் மனைவியோடு பூஜையறைக்கு செல்ல தாமரையோ அங்கிருந்த விளக்கை ஏற்றவும் இருவரும் கண்களை மூடி வணங்கினர்.

பின்னர் வெளியே வர அம்மாச்சி எங்க யாரையுமே காணுமென்றவளிடம், உன் அத்தைங்க ரெண்டு பேரும் பாரு கவிதா கூட கோயிலுக்கு போயிட்டாங்கத்தா.

பெரிய ஊட்டு கெடா வெட்டாச்சே நாமளும் கூட இருந்து பாக்கணுமில்லையா அதான் என்றவர் அடுப்புல பால் கடக்காம்.உன் புருசனுக்கு டீ போட்டு குடு நீயும் குடித்தா என்றவர், இந்தா என்று இதுவரை கட்டிய பூ சரத்தை பேத்தியிடம் நீட்ட தாமரையும் போய் வாங்கியவள் ஹேர்பின் தேடி தலையில் வைத்துக்கொள்ள இப்போ தான் கண்ணுக்கு லட்சணமா இருக்கென்றார்.

அதுக்கு முன்ன ஒரு செல்பி எடுத்துக்களாமென்று தன்னவளை தோளோடு அணைத்து வித விதமாய் போட்டோக்களை கிளிக் பண்ணியவன்
அப்பாயி எப்படி இருக்கு எங்க ஜோடி பொருத்தமென்று கேட்க...

உங்களுக்கென்ன அப்பு... நம்ப சொக்கநாதனும் மீனாட்சி போல இருக்கீங்க கண்ணுங்களாயென பேரப்பிள்ளைகளுக்கு திருஷ்டி சுத்தி போட்டவர் சீக்கிரம் என் பேரனை பெத்து கையில குடுத்தா இந்த சிறுக்கி மனசு குளுந்துடுமென்றார்.

அந்நேரம் செல்லம் செல்லமென்று உள்ளே வந்த வேலு, வா கெடா வெட்ட போறாங்களென்க அடேய் நானும் இங்க தாண்டா இருக்கேனென்று கதிர் சொல்ல சரி மாப்பு....

நீ அம்முவை கூட்டிட்டு பொறுமையா வாடா நாங்க போறேமென்றவனை முறைத்தவன் அந்த வாயாடியை செல்வி கூட வர சொல்லு பிறகு உன் தங்கச்சிகாரிய கூப்பிட்டுக்கலாம் என்றான்.....

பத்து கிடாயை சாமிக்கு முன்பு வெட்டி போட பின்னர் அடுத்து சமையலுக்கான வேலை ஆரம்பமானது.

அய்யனார் கோயிலின் முன்பு பெரிய பந்தல் போட்டிருக்க அங்கங்கே ஆட்கள் நடமாட்டமாயிருக்க ஏதோ திருவிழா போல தோணியது.

வேலுவும் கதிரும் சமையல்காரரோடு இணைந்து கொள்ள வளவனும் சிவாவும் மற்ற வேலையை பார்த்தனர்.

ஊருக்கே விருந்து என்பதால் எந்த குறையும் வரக்கூடாதென்று பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தார்கள்.

தாமரைக்கு துணையாக அல்லியும் செல்வியும் வீட்டிலிருந்தாளுங்கள்.ஏண்டி உன் நொண்ணன் இருக்க வேண்டியதுதானே. ஏதோ இன்றைக்குதான் பவி சரோவோடு நாமுளும் ஒன்னா இருக்க வாய்ப்பு கிடைச்சிது. அதையும் இந்த விருமாண்டி கெடுத்துட்டாரேயென்று பத்தாவது முறையாக அல்லி புலம்ப செல்வி செல்வி என்கும் ஜானின் சத்தம் வாசலில் கேட்டது.

ம்கும்...அடுத்து பனமரம் வந்துருக்கு போய் பாரென்றவள் டிவியில் சேனலை மாற்ற,செல்வியும் வேகமாய் வெளியே போனவள் சொல்லுணா என்றாள்.

பெருமாள் கேட்டதை எடுத்து வரச்சொன்னவன் அவள் உள்ள தான் இருக்காளா என்கவும், ஆமாணா என்று சிரித்தவள் வீட்டிற்குள் வந்து அல்லி அண்ணன் கூப்பிடுது என்றவாறு தந்தையின் அறைக்குள் போனாள்.

தாமரையோ தனது டிராலி சூட்கேஸில் எடுத்து வந்த துணிகளை எல்லாம் ரூமில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கவும் கீழே நடப்பது அவளுக்கு தெரியவில்லை.

எதுக்கு இந்த பனமரம் நம்மை கூப்பிடுதென்று முணவியவள் டிவியை பார்த்துக் கொண்டே முற்றத்தில் நடந்து வர எதிரே வந்தவன் மேல் இடித்து கீழே விழவும்...யோவ் கண்ணு தெரியாத கபோதி.ஆள் நடந்து வறாளேனு பார்த்து வர மாட்டியா என்று தன்னவனை திட்டிக்கொண்டவள் அப்பாடி என்று இடுப்பை பிடித்துக் கொண்டே எழ ஜானோ அவளை முறைத்தபடி நின்றான்.

ஆத்தாடி இந்த மனுஷனோட பார்வையே சரி இல்லடி அல்லி என்கும் போதே எட்டிப் பிடித்து அவள் வாயை பொத்தியவன் பக்கத்தில் இருந்த வள்ளி அப்பாயியோட ரூமிற்குள் தள்ளிட்டு போய் கதவை சாத்தினான்.

ம்ம் என கை கால்களை அவள் உதர கையை எடுத்தவன் அவள் கத்துவதற்குள் தனது இதழை பதித்தான்.

அதிர்ந்து போனவள் அகலமாய் இரு கண்களையும் விரிக்க,அவளைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடியவன் தன்னவளின் இதழோடு இதழ் போரை நிகழ்தினான்.

அப்பொழுது அண்ணா என்னும் செல்வியின் குரல் கேட்டு அவளிடம் இருந்து விலகியவன் ரொம்ப வாய் டி...இப்படியே பேசிட்டு இருந்த கடிச்சு தின்னுடுவேன் பாத்துக்க என்று அவள் உதட்டை நன்கு திருவியவன் கதவைத் திறந்து வெளியே செல்ல, செல்வி அவனை வாசலில் போய் தேடுவது தெரிந்து பாப்பு என்றான்.

இந்தாணா என கையிலிருந்த பையை நீட்ட அதை வாங்கியவன் வண்டியில் ஏறி சென்றுவிட, இவ எங்க போனா என்று அல்லி அல்லி என கூப்பிட்டுக் கொண்டே வீட்டிற்குள் வர அவளோ தன்னவனை திட்டிக்கொண்டே கண்ணாடியில் தனது உதட்டை பார்க்க அது சிவந்து போய் இருந்தது.

செல்வியின் குரலைக் கேட்டவள் பாத்ரூம்ல இருக்கேன்டி என்று குரல் கொடுத்தாள்.

மேகமலை:

தொடர்ந்து ஸ்கூல் மூன்று நாள் லீவ் என்பதால் என்ன செய்யலாமென்று யோசனையோடு இருந்த மகளை பார்த்தவாறு அங்கு வந்த குப்புளான் ஆத்தா என்றார்.

அப்பாவின் குரலை கேட்டவள் சொல்லுப்பா என்க,உன் மாமான் வீட்டுல இருந்து இன்னைக்கு பொண்ணு கேட்டு வாராங்களாம்தா என்கவும் என்னப்பா சொல்லுறயென்று செல்லா அதிர்ந்து போனாள்.

ஆமாத்தா... நேற்று வேதா போன் போட்டு விசயம் இப்படிணானு சொல்லுச்சித்தா.ஒம்மாகாரிக்கு சந்தோசத்துல தலகால் புரியலை.

அவ ஆசப்பட்டது உன்னை அவ வூட்டுக்கு தன் மவள மருமகளா அனுப்பனும்னு தான். அது நடக்குதுன்னு கேட்ட உடனே பத்து வயசு குழந்தை போல துளிளி குதிச்சிட்டு கிடக்கிறாள்.

உன் மனசுல மருது இருக்கான்னு எனக்கு தெரியும் டா இருந்தும் நடுவுல என்னென்னமோ நடந்துருச்சுத்தா.

அவங்கள வர சொல்லலாமா வேண்டாமா உன்னோட பதிலில் தான் இருக்கு .நான் இதுவரைக்கும் வாங்களென்று வாய் திறந்து சொல்லல என் பொண்ணோட விருப்பம் தான் எனக்கு முக்கியம்.

நீ என்ன சொல்லுறத்தா?

ஏற்கனவே கல்யாணம் ஆனவன். நாளை பின்ன உன் மனசுல இது இரண்டாவது கல்யாணமென்ற எண்ணம் வரக் கூடாது.

ஏன்னா இன்னைக்கு நாளைக்கு முடியுற கதை இல்ல இது.காலம் பூராவும் வாழ போற வாழ்க்கை.யோசனை பண்ணி நல்லதா சொல்லுத்தா.அவங்க மூணு மணிக்கு வரேன்னு சொல்லிருக்காங்க அதுக்குள்ள உன் பதிலை சொல்லு என்று அங்கிருந்து சென்றார்.

இப்படி ஒரு விஷயத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை .அவள் நினைத்தது என்னவென்றால் மருது பவிக்காகத்தான் இப்படி பேசுகிறான் என்றிருக்க...பொண்ணு பார்க்க வரும் அளவிற்கு முடிவு எடுத்திருக்கிறார்களென்றால் மருத விருப்பம் இல்லாமல் இது நடக்க சாத்தியமில்லை.

ஒருவேளை அத்தையின் கட்டாயத்தின் பேரில்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணியிருக்கிறாரோ என்று உள்ளுக்குள் கேள்வி வண்டாய் குடைந்தது.

யாரிடம் கேட்டால் இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று யோசித்தவளுக்கு வேதாவின் முகம் ஞாபகம் வர உடனே உள்ளே போய் தனது போனை எடுத்தவள் வேதாவிற்கு கால் பண்ணினாள்.

முதல் ரிங் முழுவதும் சென்று கட்டாக மீண்டும் கால் பண்ண அந்த பக்கம் அட்டென் பண்ணியவர் சொல்லுமா என்க அத்தை என்று தயங்கினாள்.

என் பையனை கட்டிக்க உனக்கு மனசு வரலையா செல்லா?

இஷ்டம் இல்லைனா இப்பவே சொல்லிடு சொந்த பந்தங்களோடு அங்கு வந்து அவமானப்பட வேண்டாமே என்றார்.

அத்தை அது வந்து வந்து என்பவளின் மனநிலையை புரிந்தவர் எல்லாருக்கும் சம்மதம்மா என்க வேறு எதுவும் கேட்காமல் சரிங்கத்தை என்று போனை வைத்து விட்டாள்.

முருகாயியோ வீட்டையே இரண்டாக மாற்றி வைத்திருக்க தாயின் அலப்பறையை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

ஏம்மா என்னமோ ஊர்ல இல்லாத சீமையிலிருந்து பொண்ணு பாக்க வர போல இவ்வளவு அக்கப்போர் பண்ணுறியே...

உன் அண்ணன் வீட்டில் இருந்துதான வராங்க..அந்த கருவாயனுக்கு இவ்வளவு சீன் போடுறியே என்றாள்...

அடியே என் மருமகன் கருப்பா இருந்தாலும் கண்ணுல ஒத்திக்கிலாம். எட்டு சீமை வந்தாலும் என் மருமவன் குணத்துக்கும் ராசா போல தோரணைக்கும் ஈடாகாது...

நீ போய் குளிச்சிட்டு தலை சீவுத்தா போ போ என மகளை அவள் குடிலுக்கு அனுப்பி வைத்தார்..

காத்திருந்தேன்...
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top