• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

துடிக்கும் ரோஜா - 5

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
13

அத்தியாயம் – 5

மெல்ல பெடல் பண்ணிக் கொண்டே ஏரியின் அழகை ரசித்தபடி உதயனும் பிரதியூஷாவும் இருவர் செல்லும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டிக் கொண்டிருந்தான் உதயன்.

“என்ன உதயா ஆள் இல்லாத இடமா பார்த்துப் போற? நானே கூப்பிட்டாலும் ஆள் இல்லா இடத்துக்கு வரமாட்ட. நீ ரொம்ப நல்லவன் ஆச்சேப்பா அதுக்குத்தானே நான் உன்னைக் காதலிச்சேன்” என்ற பிரதியூஷாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“என்ன சிரிக்கிற? நீ சிரிக்கிறதைப் பார்த்தா ஏதோ திட்டம் போட்டுக் கூட்டிட்டு வந்திருக்கப் போல. கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் வேண்டாம் உதயா. நீ படகைக் கரைக்குத் திருப்பு. எனக்கும் பெடல் போட்டுக் கால் வலிக்குது” உள்ளுக்குள் உள்ள பதற்றத்தை மறைத்துப் பேசினாலும், உதயன் இரண்டு நாட்களுக்கு முன்னாடி கேட்டது உதறல் எடுக்க வைத்தது.

உதயன் சிரித்த சிரிப்பில் படகு பரதநாட்டியத்திலிருந்து கும்மாங்குத்துக்கு மாறி ஆடத் தொடங்கியது. படகு ஆடிய வேகத்தைக் கண்டு பயந்து படகைக் கெட்டியாகப் பிடித்தாள் பிரதியூஷா.

“உதயா, எனக்குப் பயமா இருக்கு படகு ரொம்ப ஆடுது பாரு கவிழ்ந்திடப் போகுது” அவள் நினைத்தது நடந்துவிடுமோ என்ற பயம் ஆட்டிப் படைத்தது.

“இந்த ஆட்டத்துக்கே பயந்தா எப்படி? ஆட்டமே இனிமேதான் இருக்கு பிரதி” என வில்லங்கமாகச் சிரித்தான் உதயன்.

“சும்மா பயமுறுத்தாத உதயா. படகைத் திருப்பு. நாம கரைக்குப் போலாம்” வழக்கம்போல் உதயன் இல்லையென்று பிரதியூஷாவுக்கு நன்றாகப் புரிந்தது.

குறிப்பிட்ட எல்லை தாண்டிப் போகக் கூடாதென்று படகுத் துறை பொறுப்பாளர்கள் சொல்லியிருந்தும் அதைக் கடந்து வந்திருந்தான் உதயன். எல்லை தாண்டிச் செல்பவர்களை எச்சரிக்கை செய்யச் சில நேரம் வருவார்கள். அவர்கள் வருவதற்குள் வேலையை முடித்துவிட வேண்டுமென்று காரியத்தில் இறங்கினான்.

“இப்ப எதுக்குக் கிளவுஸ் மாட்டுற உதயா? எத்தனையோ பேருக்கு மத்தியில் நீ நல்லவன்னு தெரிஞ்சதால்தான் காதலித்தேன். வேண்டாம் உதயா அந்த நம்பிக்கையைக் கெடுத்திராத” பயத்தில் கெஞ்சத் தொடங்கினாள் பிரதியூஷா.

“ஹா! ஹா! எத்தனையோ பேருக்கு மத்தியில்…” என்று மீண்டும் சிரித்தவன், “டயலாக் எல்லாம் நல்லா பேசுற பிரதி. நீ சொன்ன பார்த்தியா நல்லவன்னு… அப்படி நல்லவனா இருக்கிறதுனாலதான் உனக்குத் தண்டனை கொடுக்க முடிவு பண்ணிட்டேன்” பிரதியூஷா என்னவென்று யோசிப்பதற்குள் அவள் இதயத்தில் நடுவில் கத்தியைச் சொருகினான். வேகமாகத் துடித்தவள் மெல்ல அடங்கிப் போனாள்.

படகிலிருந்து நீருக்குள் இறங்கி நீச்சலடித்து மறுகரைக்குச் சென்று மரங்களுக்குள் மறைந்து போனான். சிறிது தூரம் தள்ளிச் சென்றவன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த உடைகளை எடுத்து வந்து தன் ஈர உடைகளை மாற்றிய பிறகு குப்பியிலிருந்த பெட்ரோலை நனைந்த உடைகள் மீது ஊற்றிப் பற்ற வைத்துவிட்டுச் சென்றான்.

குறிப்பிட்ட எல்லை தாண்டிப் போக அனுமதி இல்லை. மீறிப் போறவர்களை எச்சரிக்கை செய்வார்கள். சில நேரம் கண்டும் காணாமல் போய்விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் வரவில்லை என்றால் மட்டுமே தேடி வருவார்கள்.

பிரதியூஷாவின் உயிர் பிரிந்து பல மணித்துளிகள் கடந்தும் யாரும் வரவில்லை. இன்னொரு படகில் நான்கு நண்பர்கள் கேளிக்கை கொண்டாட்டங்களுடன் வர, தனியாக ஒரு பெண் படகில் இருப்பதைக் கண்டதும் ஏதோ பிரச்சனையென நினைத்து அருகில் வந்தவர்கள், நெஞ்சில் கத்தி குத்தப்பட்டு இருப்பளைக் கண்டதும் அலறியடித்து உடனே நூறுக்கு தகவல் கொடுத்துவிட்டு கரை வந்து சேர்ந்து படகுத் துறை பொறுப்பாளர்களிடம் விபரத்தைக் கூறினர்.

அரைமணி நேரத்தில் கவின், தான்யா, சந்தியா, சரவணன் நால்வரும் வர, அடுத்தச் சில நிமிடங்களில் மாதேஷும் வந்தான். தனி மோட்டார் படகில் வந்தவர்கள் பிரதியூஷா இருந்த படகைச் சுற்றி வந்து, மறுகரைக்குச் சென்று இறங்கி மரங்களுக்கு இடையில் சென்றனர். அங்குப் புகை வருதைக் கண்டு அருகில் சென்று பார்க்கப் பாதி எரிந்த நிலையில் உடைகள் இருந்தது.

எரிந்த உடைகளைக் கண்டதும் இந்த வழியாகத் தப்பித்துப் போயிருக்கலாம் என்று சிறிது தூரம் சென்றவர்களின் கண்களில் மரங்கள், செடிகள் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை. அதனால், போன வழி திரும்பி வந்தனர்.

மோப்ப நாய்கள் வந்ததும் சரவணனும் உடன் செல்ல, நான்கு மரங்களுக்கு நடுவே சுற்றி சுற்றி வந்து நின்றுவிட்டது. எரிந்த உடைகளில் எதுவும் தடயம் கிடைக்குமா என்று மாதேஷ் புகைப்படக் கருவியில் படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

“மாதேஷ், எதுவும் தடயம் இருக்கா?” எனக் கவின் கேட்க,

“இதைப் பார்” என்று புகைப்படக் கருவியை அவன் முன் காண்பிக்க, “இதை வைத்து அவனைப் பிடிக்க முடியுமா பார்க்கலாம்” மாதேஷ் சொல்ல,

“ஒரு முனை கிடைத்தாலும் போதும் அதை வைத்து அவனைப் பிடிச்சிரலாம். எதுவும் கிடைக்காம கேஸ் நின்ன இடத்திலே நிற்குது” எனச் சலித்துக் கொண்டான் கவின்.

“சார், அந்தப் பொண்ணோட மொபைலில் கடைசியா உதயன்னு ஒருத்தன் பேசியிருக்கான். அந்த நம்பருக்கு கால் பண்ணினா ரிங் போகுது எடுக்கமாட்டேங்கிறான்” தன் கைப்பேசியைப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்தாள் சந்தியா.

“நான் இங்க இருக்கேன். நீ யாரிடம் சொல்லிட்டு இருக்கச் சந்தியா?” கவின் கேட்கச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் தன் முன் மாதேஷ் நிற்பதைக் கண்டு இங்க கவின்தானே இருந்தான். இவர் எப்ப இங்க வந்து நின்றார். கைப்பேசியை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு வந்ததில் இருவரும் மாறி நின்றதைக் கவனிக்காமல் மாதேஷிடம் சொல்லியிருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
13
“அது ஒன்னுமில்லை கவின் எப்பவும் என் நினைப்பாவே இருக்காளா? அதான் கொஞ்சம் குழப்பமாயிட்டா. என்னம்மா…” என்றவனை ஐந்து விரல்களையும் மடக்கி முகத்திற்கு நேரே குத்துவிட வந்தவளிடம், “பின்னாடி டிஐஜி” என்ற அடுத்த நொடி சல்யூட் அடித்துத் திரும்ப, சரவணன் நிற்பதைக் கண்டு இவள் முழிக்க, இவளைக் கண்டு சரவணன் முழித்தான். நற நறன்னு பல்லைக் கடித்தவள் மாதேஷை தள்ளிவிட்டு நகர்ந்து சென்று நின்றாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க? சுற்றி பப்ளிக் பார்த்துட்டு இருக்காங்க. ஹெட்கான்ஸ்டபிளைப் பார்த்து சப்-இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறதைப் பார்த்தா என்ன நினைப்பாங்க” எனச் சரவணன் மாதேஷைக் கண்டிக்க,

“தடவியல் நிபுணரைக் கேள்வி கேட்க ஹெட் கான்ஸ்டபிளுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது?” என்ற மாதேஷை, “உன்னை…” எனத் தண்ணியில் தள்ளிவிட்டு, உதவி செய்வது போல் சிரித்தபடியே கையை நீட்டி நின்றான் சரவணன். சந்தியா சிரிப்பை அடக்கி நின்றாள்.

“சார், படகுத் துறை சிசிடிவி செக் பண்ணிட்டேன். இவ கூட யாருமே வரலை. இவ மட்டும் தனியாதான் வந்திருக்கா. படகுக்கு இவ மட்டும்தான் டிக்கெட் எடுத்திருக்கா. படகில் ஏறும் போதும் இவ மட்டும்தான் ஏறியிருக்கா. கூட யாருமில்லாம இவ எப்படிப் படகை ஓட்டிட்டு வந்தா? இவ படகில் கிளம்பினப்ப ரெண்டு படகு கூடக் கிளம்பியிருக்கு. அவங்க எதுவும் பார்த்தாங்களான்னு கேட்கலாம்னா. அவங்க யாருமே இங்க இல்லை” என்றாள் தான்யா.

“கொலையைப் பார்த்துக் கால் பண்ணாங்களே அவங்க இருக்காங்களா போயிட்டாங்களா? அவங்க யாருன்னு சிசிடிவியில் பார்த்தியா? அவங்க பண்ணியிருக்க வாய்ப்பிருக்கலாம்.”

“அவங்க பண்ணியிருக்க வாய்ப்பு இல்லை. ஏன்னா சிசிடிவியில் பார்த்த மாதிரி அவங்க கிளம்பின கொஞ்ச நேரத்திலே திரும்ப வந்திருக்காங்க. அந்த நேரத்தைக் கணக்குப் பண்ணா அவ்வளவு சீக்கிரம் கொலை பண்ணிட்டு திரும்ப வாய்ப்பு இல்லை.”

தடயங்களைச் சேகரித்த மாதேஷ் நனைந்த உடையோடு வர, அவனை மேலும் கீழும் பார்த்த தான்யா, “தண்ணிக்குள்ள போய்த் தடயம் தேடுனீயா என்ன? டிரெஸ்ஸெல்லாம் நனைஞ்சிருக்கு” எனக் கேட்டாள்.

“ம்ம்… காலையில் வீட்டில் குளிக்காம வந்துட்டேன். அதான் இப்ப குளிச்சிட்டு வரேன்” என்றவன் தான்யாவின் முறைப்பில் அடங்கிப் போனவன், “உன் மேல் உள்ள கோபத்தை என்னிடம் காட்டுறா பார்த்துக்க… இதெல்லாம் சரியில்லை. அப்புறம் நான் பண்றது வேற மாதிரி ஆகிடும்.”

“என்ன பண்ணுவ?” என்று கவின் கேட்க, தான்யா புருவங்களைச் சுருக்கிப் பார்த்திருந்தாள்.

“உங்க ரெண்டு பேரையும் கடத்திட்டு போய், நானே கல்யாணம் செய்து வைத்திருவேன்” முறைத்துப் பார்த்த தான்யா லத்தியால் தன் தலையில் அடித்துக் கொண்டு சென்றாள்.

ஏரி முழுவதும் சல்லடைப் போட்டுத் தேடியவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் காவல் துணைத் தலைவர் (DIG) வர, எல்லோரும் பதற்றமானார்கள். அவர் கவின் அருகில் வந்து நின்று, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இதோட மூனு கொலை நடந்திருக்கு. அதுவும் ஒரே மாதிரி. ஒரு துப்புக் கூடக் கிடைக்கலையா? மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்க” எனக் கோபத்தில் கர்ஜித்தவர் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தார்.

“சார், கொலைகாரன் நம்மைவிடப் புத்திசாலியா இருக்கான்” என்ற மாதேஷை திரும்பிக் காவல் துணைத் தலைவர் முறைக்க, “அவனைவிட நம்ம புத்திசாலின்னு அவனுக்குக் காட்டனும்… அதனால், சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம்” என்று இழுத்தான்.

“கவின், நீ சொன்னதுனாலதான் இவனை இடம் மாற்றாம விட்டு வச்சிருக்கேன். கொஞ்சம் சொல்லி வை. அப்புறம் நான் அனுப்புற இடம் பாலைவனமாத்தான் இருக்கும். ஐந்து பேரும் ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து பல கேஸை முடிச்சிருக்கீங்க. ஆனால், இந்தக் கேஸ்ல ஏன் எந்த முன்னேற்றமும் இல்லாம இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?”

“ஆமா சார், சரவணனுக்கு மாமா பொண்ணு இருந்தான்னு கல்யாணம் பண்ணிட்டான். எங்களுக்குப் பொண்ணே கிடைக்கமாட்டேங்குது. அதான் சார் எந்த முன்னேற்றமும் இல்லை” என்ற மாதேஷை மற்ற நால்வரும் முறைக்க,

சிரிப்பை அடக்கி நின்ற காவல் துணைத் தலைவர், “சந்தியா, உன் அப்பா மொபைல் எண்ணைச் சொல்லு” என்றதும் மடமடவென்று சந்தியா சொல்ல, தன் கைப்பேசியில் பதிந்தவர், “உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அதைப் பற்றிப் பேசத்தான் கேட்டேன்” என்று அங்கிருந்து புறப்பட, மாதேஷ் முழி பிதுங்கக் காவல் துணைத் தலைவர் பின்னாடியே ஓடினான்.

பின்னாடியே ஓடியவன் திரும்ப வந்து, “அவர் நம்பர் கேட்டா உடனே கொடுப்பியா? யோசிக்கமாட்ட… உன்னையெல்லாம் வச்சிட்டு…” சந்தியாவிடம் முனுமுனுக்க, அவளோ சிரித்தபடி நின்றிருந்தாள்.

“அவர் எதுக்குக் கேட்கிறார்னு தெரிந்துதான் கேட்டேன். கேஸ் பற்றிப் பார்க்க வந்த இடத்தில் எல்லோரிடமும் வம்பு பண்ணிட்டு இருக்க… உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு நான் அவஸ்தைப் படனுமா? அதுக்கு சார் பார்க்கிற மாப்பிள்ளை எவ்வளோ மேல்” என்றவளின் கழுத்தை நெறிக்கக் கையைக் கொண்டு சென்றவன் கீழே இறக்கிவிட்டு மீண்டும் காவல் துணைத் தலைவர் பின்னாடி ஓடினான்.

“சார், இந்தப் பொண்ணோட கொலையில் ரெண்டு துப்புக் கிடைச்சிருக்கு. ஒன்னு இந்தக் கைப்பேசி. ஒன்னு இந்தப் போட்டோவைப் பாருங்க” எனக் காட்டினான் கவின்.

“கைப்பேசி ஓகே. இதை வைத்து என்ன பண்ணுவ எந்தக் கடைன்னு போய்த் தேடுவ?” காவல் துணைத் தலைவர் சந்தேகமாகக் கேட்க, கவின் அதற்குள்ள விளக்கத்தைச் சொல்ல அவரின் முகம் மலர்ந்தது.

மூச்சிரைக்க வந்த மாதேஷிடம், “கவின் கேஸை கண்டுபிடிக்க நல்ல விஷயம் சொல்லியிருக்கான். அதனால், இந்த முறை உன்னை விடுறேன். திரும்ப ஏதாவது வம்பு பண்ண சந்தியாவுக்கு நான் பார்க்கிற மாப்பிள்ளைதான்” என்றவர் காரில் ஏற, கவினும் மாதேஷும் சல்யூட் அடித்தனர்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top