- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
9
“டேய்! தாலி கட்டுற நேரத்துல என்ன உளறிட்டிருக்க? பேசாம உட்கார்” என்றார் அவனின் தந்தை.
“முடியாதுப்பா. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. என்னால இந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக்க முடியாதுன்னு உங்ககிட்ட ஆயிரம் முறை சொல்லிட்டேன். நீங்க கேட்கலை. எனக்கும் வேற வழி தெரியல. இந்தப் பொண்ணுகிட்ட பேசவும் நீங்க அலோ பண்ணல. உங்களுக்காகவாவது மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைச்சாலும், என்னால இவங்க பக்கத்துல கூட உட்கார முடியல.”
அதுவரை அமர்ந்திருந்த தாரிணி சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள்.
“என்னை மன்னிச்சிருங்கப்பா” என்று தன் தகப்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டான்.
ஜெயராமனுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் தங்கையைப் பார்க்க, “அண்ணா எனக்கு இதெல்லாம் தெரியாதுண்ணா. ரொம்ப தெரிஞ்சவங்கன்ற நம்பிக்கையில தான் சொன்னேன். மத்தபடி நம்ம புள்ளையோட வாழ்க்கையை கெடுக்க இல்லண்ணா” என்று அவனின் பெற்றோரிடம் சண்டையிட்டார்.
தாரிணியின் தாயோ, ‘தன் பெண்ணின் வாழ்க்கையை தாங்களே கெடுத்துவிட்டோமே’ என்ற எண்ணத்தில் கண்களில் கண்ணீருடன் நின்ற இடத்தில் அப்படியே நின்றார்.
அதற்குள் நண்பர்கள் அனைவரும் மேடைக்கு வர, “சாரிமா” என்றான் தாரிணியிடம் அவளை வேண்டாமென்ற மணமகன்.
“யாரையாவது லவ் பண்றீங்களா?” என்ற கேள்வி தாரிணியிடம் இருந்து அமைதியாக வந்தது. அவனோ தலைகவிழ, “அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” என்றாள் கோவத்தை அடக்கியபடி.
“அ...அது வீட்ல ப்ளாக்மெய்ல் பண்ணினாங்க. அதான்.” என்றான் குரலே வராமல்.
“கல்யாணம் பண்ணிக்க ப்ளாக்மெய்ல் பண்ணினதால மேடைக்கு வந்திட்ட. அவங்க செத்துபோகச் சொன்னா, ஆறு குளம்னு விழுந்து டெமோ காட்டுவியா? இல்ல கத்தி, கயிறுன்னு குத்தியோ, தொங்கியோ காண்பிப்பியா?” கோவத்தில் பாகீரதி தோழிக்காக பேசி, அவள் கையை தன் கையுடன் இறுக்கிக் கொண்டாள், ‘உனக்கு நானிருக்கிறேன்’ எனும் விதமாய்.
அதுவரை மௌனமாக இருந்தவன் அவளின் நக்கலில், “ஏய்! என்ன ஓவரா பேசுற?” என அவன் எகிறியபடி வர,
அதைப் பார்த்திருந்த ஸ்ரீனிவாசனும், ப்ரவீணும் மணமேடை நோக்கி செல்ல, அதற்குள் நண்பர்கள் அவனை சூழ்ந்தனர்.
அவர்களைத் தடுத்த தாரிணியோ, “உனக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லைன்னா சூஸைட் பண்ணிட்டு சாக வேண்டியதுதான. அதை விட்டுட்டு, அடுத்தவங்களை சாகடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? என்னை பொண்ணு கேட்டு வரச்சொல்லி நாங்களா கூப்பிட்டோம். படிச்சிட்டிருக்கிறவளை பொண்ணு கேட்டு, அதுவும் ஒரே வாரத்துல அவசர அவசரமா ஃபிக்ஸ் பண்ணி, சே... எங்க அப்பாவுக்காகதான் சம்மதிச்சேன். இல்லன்னா... ப்ச்...” என சலித்து வார்த்தையை முடிக்காமல், “ஒழுங்கா மரியாதையா என் கண்முன்னாடி நிற்காம போயிரு” என வாசற்புறம் கைநீட்டினாள்.
அதற்குமேல் அங்கு நிற்காமல் அவனும் கிளம்பி சென்றான். மாப்பிள்ளை வீட்டினரோ தலைகவிழ, தாரிணியின் அத்தையோ அவர்களை வார்த்தைகளால் கொன்று கொண்டிருந்தார்.
கோவத்துடனும் கண்களில் நீருடனும் இருக்கும் மகளை, சமாதானப்படுத்த வழி தெரியாமல் நொந்து போய் ஜெயராமன் தரையில் அமர, அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த ஜானகி ஓடி வந்து அவரைத் தாங்க, அந்த இடமே களேபரமானது. தாரிணியும் மேடையிலிருந்து தந்தையை நோக்கி வர, “என்னை மன்னிச்சிருமா” என மகளிடமே தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
அடுத்து என்ன என்ற கேள்வி அனைவரிடமும் இருக்க, “பணக்காரன் வெளிநாட்டுல இருக்கான்னுதான அவசரமா கல்யாணத்தை வச்சான். அதான் பேராசை பெருநஷ்டமாகிருச்சி. ஆசைக்கும் அளவு இருக்கணும்பா. இவ்வளவு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்றதுக்கு இவன் பொண்ணு சென்னையில் என்ன தப்பு பண்ணினாளோ?” என பல நாக்குகள் பலவாறு சுழன்றடிக்க, இதைப்போல் பேச்சுகளெல்லாம் கேட்டிராத தாரிணியோ மறுத்துப் பேசமுடியாமல் வாயடைத்துப் போயிருந்தாள்.
அவளின் அத்தையோ பேசியவர்களை பதிலுக்கு திட்டிக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்திருந்த பாகீரதி, தாரிணியை அவளின் தாயிடம் ஒப்படைத்துத் தன் அண்ணனின் அருகில் வந்து, “அண்ணா தாரிணியை எல்லாரும் கண்டபடி பேசுறாங்க. அவ நல்லவள்ணா. அவ அழறா பாருங்க. எனக்கு கஷ்டமாயிருக்கு. அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்கணா ப்ளீஸ்” என ப்ரவீணிடம் கெஞ்சினாள்.
“அம்மூஊஊ” என அதிர்ந்தவனுக்கு சூழ்நிலையும், அவளின் நிலையும் புரிந்தாலும், ஏற்கனவே வீட்டில் ஒரு பெண்ணை பேசியிருக்கும் பட்சத்தில், அதுவும் அப்பா சொன்ன அந்த காரணத்திற்காகவே திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான் என்றால் அந்த பெண்ணுடனான திருமணம் ரொம்ப முக்கியமானதாகிற்றே.
அவனின் தங்கைக்கோ அது எதுவும் நினைவேயில்லை. தற்பொழுது தோழி மட்டுமே மனதினுள் நிற்க, அவளை மற்றவர்கள் கண்டபடி பேசுவது பிடிக்கவில்லை. தன் அண்ணனை விட யாரும் அவளைப் பார்த்துக்கொள்ள முடியாதென்ற எண்ணம் மட்டுமே மனமெங்கும் வியாபித்திருந்தது.
தங்கையின் கெஞ்சல் பொறுக்காமல் ப்ரவீண் சம்மதிக்க, “தேங்க்யூண்ணா. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று தாரிணியின் தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.
சற்று நேரத்திற்கு முன் பாகீரதியைத் திட்டியதைத் தாங்க முடியாமல் ஸ்ரீனிவாசன் மேடையை நோக்கி வர, அதற்குள் நண்பர்கள் அரண் அமைத்ததால், ‘பரவாயில்லையே பசங்க’ என்றுதான் தோன்றியது. அதன்பின் மேடைக்கு செல்லாமல் கீழேயே நின்று அவர்களைத்தான் கவனித்திருந்தான்.
இந்த களேபரங்களைப் பார்த்திருந்த சுதர்ஷன் தன் நண்பனிடம் “ஸ்ரீ நான் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கவா?” என கேட்டதும், கேள்வியாய் நண்பனைப் பார்க்க, “இல்லடா பொண்ணைப் பார்த்தா பாவமாயிருக்கு. நல்ல பொண்ணா தெரியுறா” எனும்போது நடுவில் சிந்துவின் முகம் வந்தாலும், அவள் இன்னொருவனுக்குச் சொந்தமாகப் போகிறாள் என்ற எண்ணத்தில் வந்த நினைப்பை உதறி, “நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்டா” என்றான்.
“தர்ஷா என்ன உளர்ற? இதென்ன வியாபாரமா இது இல்லன்னா அதுன்னு எக்ஸ்சேஞ்ச் பண்றதுக்கு. வாழ்க்கைடா. அந்தப் பொண்ணுக்கு இஷ்டம் இருக்கணும்.”
“அதெல்லாம் பார்க்க இது நேரமில்லைடா” என்று தர்ஷன் தாரிணியின் தந்தையை நோக்கிச் செல்ல,
அதே நேரம் ப்ரவீணும் தங்கையுடன் ஜெயராமனை நோக்கிச் சென்றான்.
சுதர்ஷன் அவரை அழைக்க வாய்திறக்க,
அதற்குள், “அங்கிள் தாரிணியை எனக்கு அண்ணியா கொடுக்குறீங்களா?” என்றிருந்தாள் பாகீரதி.
பாகீரதி தோழியை அண்ணனுக்கு கேட்டதில், தர்ஷனோ திறந்த வாய் மூடாதிருக்க, ஸ்ரீனிவாசனோ அதிர்ச்சியின் உச்சியிலிருந்தான். ‘எப்படி சாத்தியம்? அப்ப என் தங்கை? ஏனிப்படி செய்கிறாள் இந்த ரதி?’ கேள்விகள் மனதிற்குள் சுழல, ‘ஐயோ’ என்றிருந்தது அவனுக்கு. இருப்பினும் இன்னும் உறுதியாக எந்த முடிவும் எடுக்காத திருமணப்பேச்சி தானே என தோன்றினாலும், அவளின் மேல் சிறிது கோபமும் வந்தது.
“என்னமா புரிஞ்சிதான் பேசுறியா? இதொண்ணும் சின்னப்பிள்ளைங்க விளையாடுற விளையாட்டில்ல” என்றார் ஜெயராமன்.
“நிஜமா அங்கிள். எங்கண்ணா டாப் ஒன் பிசினஸ்மேன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதை விட ரொம்ப நல்லவங்க. உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பாங்க.”
“என்ன தம்பி சின்னப்பொண்ணு என்னவோ சொல்றாள்னா நீங்களும் பார்த்துட்டு சைலண்ட்டா இருக்கீங்க?” ப்ரவீணிடம் நேரடியாகவே கேட்டார்.
“என்கிட்ட கேட்டபிறகுதான் உங்ககிட்டேயே சொல்றா. உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் அவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்த தாரிணியின் கண்கள் பார்த்து.
இருக்காதா பின்ன! முதல் பார்வையிலேயே அத்தனை வெறுப்பைக் காட்டியவனாயிற்றே!
“இல்லப்பா. பெரியவங்ககிட்ட கேட்காம செய்யுறது தப்பு. இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற விஷயமில்லை” என்றார் பெரிய மனிதராய்.
அவரின் இந்த குணம் ப்ரவீணுக்கு பிடித்திருந்தது. பணக்காரன் ஒருவன் மாட்டியிருக்கிறான். சூழ்நிலை காரணமாக தானே வந்தும், பெண்ணை அவன் தலையில் கட்ட முயற்சிக்காமல், இந்த நேரத்திலும் தன்னால் அடுத்தவர்கள் பாதிக்கக்கூடாது என்கிற அவரின் நல்லெண்ணம் ரொம்பப் பிடித்தது.
“எங்க அப்பாகிட்ட நான் பேசுறேன்” என்று போன் செய்யப் போனவனைத் தடுத்த பகீரதி, “நான் பேசுறேன்ணா” என்று நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் தந்தையை போனில் அழைக்க... அவரின் “ரதிமா போய் சேர்ந்துட்டீங்களாடா?” என்றதில் மனதிலிருந்த கோபம் எங்கேயோ போக, “ம்.. வந்துட்டோம்ப்பா” என்றாள் குரலே வராமல்.
“சரிம்மா. கல்யாணம் முடிஞ்சதும் பார்த்து பத்திரமா வாங்க” என்றவருக்குள் கணக்கிலடங்கா நிம்மதி. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மகளின் “அப்பா” என்ற அழைப்பைக் கேட்டிருக்கிறாரே.
“அப்பா” என தயங்கியவளிடம், “என்னமா? எதாவது பிரச்சனையா? கல்யாணம் நல்லபடியா நடக்குதுதான? உங்களுக்கு எதாவது..” என்றதும் தந்தையின் கற்பனைகள் விரிவதை உணர்ந்து...
“அச்சோ! அப்பா எங்களுக்கு எதுவுமில்லை தாரிணிக்குத்தான்” என நிறுத்தியவள் நடந்ததை வேகவேகமாக ஒப்பிக்க, “அம்மு நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவு பண்ணினியா? என்றார்.
“ஆமாப்பா. தாரிணியை எல்லாரும் தப்பா விமர்சனம் பண்றாங்க. இப்ப மேரேஜ் வேண்டாம்னு சொல்லி அவளை படிக்க அனுப்பினாலும், இந்த நேம் அப்படியேத்தான்ப்பா இருக்கும். அவளை உங்களுக்கும் தெரியுமேப்பா என்னைவிட நல்லவப்பா. ப்ளீஸ்பா ஓகே சொல்லுங்கப்பா?” என கெஞ்சினாள்.
“அம்மு! அப்ப சிந்து?” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார்.
“அப்பா!” என அதிர்ந்தவள், “நான் மறந்தே போயிட்டேன்ப்பா. இங்க இவங்ககிட்டேயும்...” முடிக்க முடியாமல் தொண்டையடைக்க வந்த அழுகையை அடக்க முயற்சித்தும் அடங்காது வந்த கண்ணீர் கன்னம்தொட, “ஐ ஐம் சாரிப்பா” என்றாள் மிதமிஞ்சிய வருத்தத்தில்.