• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
உன் நினைவுகள்
எனை
நெருங்கத்
தேவையில்லை!

உண்ணாமல், உறங்காமல்
உனக்காக உருகத்
தேவையில்லை!
உனக்காக ஏங்கி
வாசலில் வாசமிருக்கத்
தேவையில்லை!

உன்னுறவுகளை
என்னுறவாக எண்ணத்
தேவையில்லை!

உனைக்காண
என் தாயிடத்தில்
பொய்யுரைக்கத்
தேவையில்லை!
மறைந்து மறைத்து
உனை சந்திக்கத்
தேவையில்லை!

தோழிகளின் சீண்டல்
பேச்சுக்களைக் கேட்கத்
தேவையில்லை!

வாட்சப்பில்
வம்படியாகப் பேசத்
தேவையில்லை!

கைபேசியைக்
கையிலேயே வைத்திருக்கத்
தேவையில்லை!

கடன்காரி போல்
கால்கடுக்கக் காத்திருக்கத்
தேவையில்லை!

உன் வரவு இல்லையெனில்
மனம் மரண வலியை
உணரத் தேவையில்லை!

எனைப் பொய்யாக வர்ணிக்கும்
உன் பசப்பு வார்த்தைகளை
ரசிக்கத் தேவையில்லை!

நான் காணும் காட்சிகளை
உன்னிடம் பகிரத்
தேவையில்லை!

ஒரு தோல்வியில்
துவழ்ந்து விடுவேனென்று
நீ எண்ணத்
தேவையில்லை!

நீ மறுத்ததால்
இத்தனைத் தேவையில்லைகள்
என் வாழ்வில்!

ஆனால்,
தேவை!
எனக்கேயே எனக்கான
எனைப் புரிந்துணர்ந்து,
என் வாழ்வை மலரவைக்க
ஒரு அன்பான கணவன்!

காத்திருக்கிறேன்
என் கணவனை காதலனாக்க!

தேவை எந்தன் தே(கண)வனே!

நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top