• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Sep 3, 2024
Messages
10
தனக்கென்ற வாழ்வு

கடல் அலைகளின் ஆர்ப்பரின் நடுவில் மெல்ல மெல்ல தன் முகத்தைக் காட்டும் ஆதவனின் ஒளிக் கதிர்வீச்சில் பிரகாசிக்கும் ஆழியின் அழகில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? என்று சிறுவயது முதல் தன் வீட்டின் பால்கனியில் நின்று ரசிக்கும் சங்கவி கடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தீராத ஆர்வத்தில் பள்ளிப் படிப்பை முடித்ததும், கடல்சார்ந்த படிப்பு வேண்டாமென்று மாதவன் சொல்லியும் பிடிவாதமாக நின்று முதுநிலை கடல் பொறியியல் (Marine Engineering) படிப்பை முடித்துவிட்டாள்.

கல்லூரி படிப்பை முடித்த கையோடு பல தேர்வுகளை எழுதியும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று ஆஸ்திரேலியாவில் கடல் சார்ந்த வேலை கிடைக்கவும், திருமணத் தேதியையும் குறித்துவிட்டார் மாதவன். திருமணம் முடிந்த கையோடு ஒன்றரை இலட்சம் சம்பளத்துடன் தனக்குப் பிடித்த வேலையுடன் தேன்நிலவையும் கொண்டாட இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கணவன் பிரேமுடன் ஆஸ்திரேலியா பயணமானாள்.

ஐந்து வருட ஒப்பந்தத்தில் சென்றதால் தாய் நாட்டிற்கும் வீட்டிற்கும் வர முடியாமல், இரண்டு பெண் குழந்தைகளோடு ஐந்து வருடங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையில் பெற்றவர்களைப் பார்க்கப் போகும் ஆவலில் குடும்பத்தோடு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினாள்.

தன்னை வரவேற்க விமான நிலையத்திற்குப் பெற்றவர்கள் வந்திருப்பார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து வந்தவளுக்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. மனதில் எழுந்த பிரளயத்தை வெளிப்படுத்தாமல் தாய் வீடு நோக்கிப் பயணமானாள்.

பெற்ற மகளையும் பேரக் குழந்தைகளையும் மகிழ்ச்சியோடு ஓடி வந்து அரவணைத்து முத்தங்களோடு வரவேற்க துடிக்கும் பெற்றவர்கள், நடக்கத் திராணியற்று இருப்பதைக் கண்டவளின் இதயம் அடுத்த நொடி வெடித்துச் சிதறத் தொடங்கியது.

கமலா, மாதவனின் நிலை கண்டு பிரேமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். வாரத்தில் ஒரு முறை காணொளிக் காட்சி மூலம் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு அவர்களின் உடல்நிலையின் நிலை தெரியாமல் போனது. வெகுதூரத்தில் இருப்பவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாமென்று இருவரும் மறைத்துவிட்டனர்.

குழந்தைகளைப் பிரேமிடம் விட்டுவிட்டுப் பெற்றவர்களை உடனே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். ஒரு மணி நேரமாக வெளி நோயாளிகள் பிரிவில் கமலாவுடனும் மாதவனுடனும் காத்திருந்தவள் செவிலியரின் அழைப்புக்கு உள்ளே சென்றாள்.

எப்பொழுதும் தனியாக வருபவர்கள் சங்கவியுடன் வந்ததைக் கண்ட மருத்துவர் யாரென்று புருவங்களை உயர்த்த, “என் மக ஆஸ்திரேலியாவிலிருந்து லீவுக்கு வந்திருக்கா” என்றார் கமலா.

புன்னகைத்த மருத்துவர், “ரெண்டு பேரையும் ஏன் தனியா விட்டீங்க? யாராவது ஆள் வைத்தாவது பார்த்திருக்கலாமில்ல? யாருமில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க” மருத்துவர் சொன்னதும் சங்கவியின் கண்களில் நீர் தேங்க சங்கடமாக அமர்ந்திருந்தாள்.

“என்னிடம் எதையுமே அவங்க சொல்லலை டாக்டர். இப்பவும் நாங்க நேரில் வந்ததால்தான் தெரிந்தது. இல்லைன்னா என்ன நடந்தாலும் எங்களுக்குத் தெரிந்திருக்காது” என்ற சங்கவியின் குரல் தழுதழுத்தது.

“சிஸ்டர், ரெண்டு பேரையும் பரிசோதனைச் செய்யக் கூட்டிட்டுப் போங்க” என்றதும் இருவரும் எழுந்து செவிலியரின் பின்னால் சென்றனர். சங்கவி மட்டும் மருத்துவரிடம் பேச அமர்ந்திருந்தாள்.

“டாக்டர், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன ஆச்சு? நல்லா இருந்தவங்க ஏன் இப்படி ஆயிட்டாங்க?” சங்கவி கேட்க,

“அப்பாக்கு வயசானா வர வலிகள்தான். பிஸியோ தெராபி கொடுத்தா நல்லா நடமாட ஆரம்பிச்சிருவார். அம்மாவுக்கு…” என்று தயங்கியவர், “புற்று நோய் அதுவும் கடைசி ஸ்டேஜ் ஒன்னும் பண்ண முடியாது. சிகிச்சை கொடுத்தாலும் அவங்களை வதைப்பது போல்தான். அதனால், அவங்க இருக்கிற வரை பக்கத்திலிருந்து சந்தோஷமா வச்சுக்கோங்க. உங்க கூடக் கூட்டிட்டுப் போக முடியும்னா கூட்டிட்டுப் போங்க” என்றார் மருத்துவர். விழிகளில் நீர் வழிய சங்கவியால் சரியெனத் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது.

சில ஆறுதலான வார்த்தைகளைக் கூறிய மருத்துவர் இருவரையும் பரிசோதிக்கச் சென்றுவிட்டார். சில நேரங்கள் கடந்த பிறகு அறையைவிட்டு வெளியில் வந்த இருவரையும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் இருவரையும் அவர்கள் அறையில் படுக்க வைத்துவிட்டு, தன் அறைக்கு வந்த சங்கவி பிரேமிடம் அனைத்தையும் கூற, இருவரும் பல விஷயங்களை விவாதித்த பிறகு இருவரும் நன்றாக இருக்கும் போதே உடன் வர மறுத்தவர்கள்.

இந்த நிலையில் கண்டிப்பாக வர இயலாது. அதனால், ஆட்கள் வைத்துப் பார்க்கலாம் என்றால் நாம் இருக்கும் வரை நன்றாகப் பார்த்துவிட்டு, நாம் சென்ற பிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வதென்று அந்த முடிவையும் விட்டனர்.

நல்ல நிலைமையில் இருக்கும் போதே எட்டிப் பார்க்காத உறவுகள் இந்த நிலைமையிலா வந்துவிடுவார்கள் என்று யாரையும் அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். கடைசியில் வேறு எந்த வழியுமின்றிச் சங்கவி தன் நிறுவன மின்னஞ்சலுக்கு, பெற்றவர்களின் சூழ்நிலையைச் சொல்லி ஒரு வருட விடுப்பிற்கு விண்ணப்பித்தாள்.

விடுப்பு கிடைத்தால் ஒரு வருடத்தில் மாதவனின் உடல்நிலையைத் தேற்றிவிடலாம். இருவருக்கும் தன் நிலையை எடுத்துக் கூறி தன்னுடனே அழைத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தனர்.

சங்கவி வர முடியாத காரணத்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னைப் பெற்றவர்களையும் உடன் பிறந்தவனையும் காணச் சென்றான் பிரேம். விபரங்கள் கேள்விப்பட்டதும் பத்து நாட்கள் கழித்துப் பிரேமுடன் அனைவரும் வந்து கமலா, மாதவன் இருவரையும் பார்த்துச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பிரேம் புறப்படும் போதே மீண்டும் வந்தார்கள்.

பிரேம் இருந்தவரை குழந்தைகளைக் கவனித்துக் கொண்டான். வீட்டு வேலைகளுக்கும் உதவி செய்தான். அதனால், சங்கவிக்கு எல்லாம் சுலபமாக இருந்தது. அவன் சென்ற பிறகு அனைத்தையும் ஒருவளே செய்ய வேண்டிய நிலைமை ஆனது.

குழந்தைகளை அருகில் இருந்த பள்ளியில் சேர்த்துவிட்டாள். வீட்டிலிருந்த பெரிய குழந்தைகளைத் தன் முழு நேரக் கவனிப்பில் வைத்திருந்தாள். சங்கவியின் தீவிர கவனிப்பால் மாதவன் மூன்று மாதங்களிலே நன்றாக நடக்க ஆரம்பித்திருந்தார். தனக்காகச் சில மணி நேரங்களை ஒதுக்கிக் கொண்டாள். அந்த நேரத்தில் அருகில் உள்ள மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளில் வீட்டிலிருந்து கற்பிக்க ஆரம்பித்தாள் சங்கவி. வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள கோயிலுக்கு வாரம் தவறாமல் சென்று வந்தாள்.

எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்க, உயிர்கொல்லி நோய் ஆட்கொண்ட கமலாவின் தேகம் மெல்ல மெல்ல மெலிய ஆரம்பித்தது. ஆனாலும் சங்கவியின் அருகாமை எழுந்து நடமாட முடியாமல் இருந்தவரை நன்றாக நடமாட வைத்திருந்தது.

இருவரின் உடல் கொஞ்ச கொஞ்சமாகத் தேற, நாட்களும் ஓடி ஒரு வருடத்தைக் கடக்கக் காந்திருந்தது. சங்கவிக்கு ஒரு வருட விடுப்பு முடிய ஒரு மாதமே இருந்த நேரத்தில், கட்டிலிருந்து இறங்கும் போது நிற்க முடியாமல் கீழே விழுந்தார் கமலா.
 
New member
Joined
Sep 3, 2024
Messages
10
மருத்துவ அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவளுக்கு மருத்துவர் இனிமேல் கமலாவால் நடமாட முடியாது படுத்த படுக்கைதான் என்ற இடியை இறக்கினார். கமலாவைப் படுத்த படுக்கையிலே பார்த்த மாதவனின் உடல்நிலையையும் மோசமாக ஆரம்பித்தது.

கமலா, மாதவன், குழந்தைகள் எனத் தேவையானதைச் செய்து கொடுத்துக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் தனக்கென்று ஒதுக்கிய நேரமும் அவளுக்கென்று இல்லாமல் போனது. சதா ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. அவளுக்கென்று ஓய்வு இரவு தூக்கம்தான். அந்த நேரமும் கமலா படுக்கையில் கழித்த இயற்கை உபாதைகளைச் சுத்தம் செய்துவிட்டு மாற்றுத் துணிகளை மாற்றுவதிலே பாதி இரவும் கழிந்துவிடுகிறது.

வருட விடுமுறையில் வந்திருந்த பிரேம் சங்கவி படும்பாட்டைக் கண்டு குழந்தைகள் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான். கமலாவை சுலபமாகப் பார்த்துக் கொண்ட சங்கவி மாதவனைக் கவனிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானாள். அதனால், அந்தப் பொறுப்பையும் பிரேம் எடுத்துக் கொண்டான்.

“சங்கவி, என்ன முடிவு பண்ணியிருக்க? ஒரு வருஷம்தான் உனக்கு லீவு இருக்கு. அத்தை, மாமாவை இப்படியே விட்டுட்டும் போக முடியாது. வேற யார் பொறுப்பிலும் விட முடியாது. நானும் ரொம்ப நேரமா யோசித்தேன். ஒண்ணுமே தோணமாட்டேங்குது.”

“நானும் பல நாட்கள் யோசித்து முடிச்சிட்டேன் பிரேம். ஒரே வழி நான் வேலையை இராஜினாம பண்றதுதான்.”

“விளையாடுறியா! ஈஸியா சொல்லிட்ட. இது உன்னோட கனவு. இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப?”

“உண்மைதான் பிரேம். நான் உயர்ந்த நிலைக்கு வரக் காரணமே அம்மா, அப்பாதான். அவங்க கடைசி நேரம் நான் இல்லாம கொடுமையா இருக்கனுமா?” அதற்கு மேல் பிரேமாலும் என்ன சொல்வதென்று அமைதியானான்.

தானும் வேலையை இராஜினாமா செய்வதாகச் சொல்ல, ஏன் என்ற தொணியில் சங்கவி பார்க்க, “உன்னையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டு எனக்கு அங்க இருக்கப் பிடிக்கலைமா. நான் இங்கேயே நல்ல வேலை தேடிக்கிறேனே?” எனக் குழைந்தவனிடம் மறுக்க முடியவில்லை. அவளும் பிரேம் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாள்.

இருவரும் பேசுவதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமலா, மாதவன் கண்களின் ஓரம் நீர் வடியத் தொடங்கியது. ஏற்கனவே, இருவருக்கும் உடலின் வேதனை அதனுடன் மனதின் வலியும் சேர்ந்து கொண்டது.

பெற்ற ஒரே மகளியின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அதை அனுபவிக்க விடாமல் தடைக் கல்லாக ஆகிவிட்டோமே என்ற எண்ணம் அவர்களை மேலும் நொடிய செய்தது. எல்லாம் சேர்ந்து அடுத்த இரண்டு வருடத்தில் நெஞ்சு வலியால் மாதவன் இவ்வுலகை விட்டுச் சென்றார்.

படுத்த படுக்கையாக இருந்தாலும் மாத்திரை மருந்துகளின் உதவியால் கமலாவின் உயிரைச் சங்கவி பிடித்து வைத்திருந்தாள். குழந்தைகளும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். அதனால், சங்கவி பழையபடி சொற்ப நேரங்களைத் தனக்கென்று ஒதுக்கிக் கொண்டாள்.

நாட்களும் மெல்ல மெல்ல நகரத் தொடங்கி இரண்டு வருடங்களைக் கடந்திருந்தது. கமலாவிற்கு நோயின் வீரியம் அதிகமாக அதிகமாக மாத்திரை, மருந்து, சிகிச்சை எதுவும் வேலை செய்யவில்லை. தன் சுயநினைவை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு தூக்கத்திலே அவரின் மூச்சும் நின்றிருந்தது.

ஐந்து வருடங்கள் இரவு பகல் பாராமல் அருகிலிருந்து கவனித்தது என்றாவது ஒரு நாள் அம்மா பழையபடி திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த சங்கவியைத் தேற்ற பிரேமால் முடியவில்லை.

கமாலாவிற்கான சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து மூன்று மாதங்கள் ஆகியிருக்க, மடிக்கணினியில் மும்முரமாக எதையோ தேடிக் கொண்டிருந்த சங்கவியிடம், “ரொம்ப நேரமா என்ன பண்ணிட்டு இருக்க?” பிரேம் கேட்க,

“இனிமே நான் வீட்டில் சும்மாதானே இருக்கனும். ஒவ்வொரு கம்பெனிக்கும் அப்ளிகேஷன் போட்டுட்டு இருக்கேன்.”

“நானே சொல்லனும்னு நினைச்சேன். நீயே செஞ்சிட்ட. நானும் ஒரு சில கம்பெனிகளை உனக்காகப் பார்த்து வைத்திருக்கேன். அதுக்கும் அப்ளிகேஷன் போட்டுடு” என்ற பிரேமின் கைப்பேசிக் கூப்பிட அதைக் கையில் எடுத்துப் பேசத் தொடங்கவும் அவன் முகம் சட்டென்று மாறியது. உடனே எழுந்து வெளியில் சென்றான்.

“நீ என்ன சொல்ற? நான் எப்படி ஊருக்கு வந்து பார்க்க முடியும்? என்னோட வேலை இங்க. சங்கவி இத்தனை நாள் இங்க பட்டக் கஷ்டம் என்னன்னு உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் நீ பேசுறது சரியில்லை” எனத் தன் தமயனிடம் சீறினான் பிரேம்.

“இத்தனை நாள் நாங்கதானே பார்த்துகிட்டோம். இப்போ எனக்கும் உன் அண்ணிக்கும் துபாயில் வேலை கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பை நாங்க எப்படி விட முடியும்? இத்தனை நாள் உன் மாமியார், மாமனாருக்காக அங்க இருந்து பார்த்துகிட்டல்ல, இனிமே அம்மா, அப்பாவுக்காக இங்க வந்து இரு. மாமனார், மாமியாருக்காக ஆஸ்திரேலியாவில் எல்லாத்தையும் விட்டுட்டு வந்த உன்னால், பெற்றவங்களுக்காக எதுவும் செய்ய முடியாதா?” சகோதரனின் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும், அவன் கேள்விகளுக்குப் பிரேம் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

தலையைப் பிடித்து வெளியிலே அமர்ந்துவிட்டான் பிரேம். அவன் முகம் மாறியதைக் கண்டு, அவன் பின்னாடியே வந்த சங்கவி பிரேம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பிரேமிடம் எதுவும் கேட்காமல் உள்ளே சென்று யோசனையில் ஆழ்ந்தாள்.

தன் தாய், தந்தைக்காக நான் எடுத்த முடிவுக்குக் குறுக்கே நிற்காமல், தான் படும் கஷ்டத்தைப் பார்த்து, தனக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் தன் ஆசையையும் கனவுகளையும் மறந்து, மனைவி என்ற ஒருவள் எனக்காக வந்த பிரேம்க்கு நான் துணை நிற்கவில்லை என்றால் என்னைப் போல் கல் நெஞ்சம் யாருக்கும் இருக்காது என்ற ஒரு முடிவோடு வெளியில் வந்து பிரேமின் அருகில் அமர்ந்தாள்.

“பிரேம், மாமாவும் அக்காவும் எப்போ துபாய்க்கு கிளம்புறாங்க? ஏன்னா, நாம குழந்தைங்க ஸ்கூலில் டிசி வாங்கனும். ஊரில் உள்ள ஸ்கூலில் சேர்க்கனும். ஊருக்குப் போக எல்லா ஏற்பாடும் பண்ணனும்” தன் மனதில் எழுந்த வலியை மறைத்துக் கேட்டாள் சங்கவி.

சங்கவி பேசியதைக் கேட்டு, அதுவரை அடக்கி வைத்திருந்த பிரேமின் மனம் வெடிக்கத் தொடங்கியது. சங்கவியின் தோளில் சாய்ந்து, “என்னை மன்னிச்சிரும்மா. என்னால் எதிர்த்து எந்தப் பதிலும் சொல்ல முடியலை. அம்மா, அப்பா ரெண்டு பேரும் நல்லா இருந்தாங்கன்னா பரவாயில்லை. ரெண்டு பேருமே நாட்களை எண்ணிட்டு இருக்காங்க” என்றவனைத் தன் கைகளில் தாங்கினாள் சங்கவி.

ஒவ்வொரு பெண்ணும் கணவன், பெற்றவர்கள், மாமியார், மாமனாருக்கு அடுத்துப் பிள்ளைகள் எனத் தனக்கென்ற வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். அவளுக்கென்ற வாழ்க்கையை அவள் எப்போது வாழ்வாள்?
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அன்பு அதானே எல்லாம்னு சொல்ல வைக்குது கதை. கான்செப்ட் நல்லாயிருக்கு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மோனிகா 💐 💐 💐
 
New member
Joined
Sep 3, 2024
Messages
10
அன்பு அதானே எல்லாம்னு சொல்ல வைக்குது கதை. கான்செப்ட் நல்லாயிருக்கு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மோனிகா 💐 💐 💐
Thank you sis :love:
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top