Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 642
- Thread Author
- #1
உதய்ப்பூர்:
காலை 10:00 மணி. சப்-கலெக்டர் அலுவலகத்தின் அந்தப் பழைய கட்டிடம் வழக்கமான பரபரப்பில் இருந்தது. மிருதுளாவோ தனது பெற்றோருடன் காரில் வந்து இறங்கினாள் (அரசு காரைப் பயன்படுத்த இன்னும் அவள் விரும்பவில்லை).
அவள் இறங்கியதும் அங்கிருந்த காவலர் அவசரமாக எழுந்து நின்று சல்யூட் அடிக்கவும் மெல்லிய புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டவள், "அப்பா, அம்மா, மாமா, அத்தை. வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ஒரு அதிகாரி தன் பெற்றோருடன் இவ்வளவு எளிமையாக வருகிறாரேயென அங்கிருந்தவர்கள் ஆர்வத்தோடு பார்த்தனர்.
அப்பொழுது வட்டாட்சியர் முன்வந்து பூங்கொத்தை நீட்டினார். மிருதுளாவும் அதை வாங்கிக்கொண்டு, "வணக்கம் சார், எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாள்.
மிருதுளாவின் பெற்றோரோ இந்தச் சூழலைப் பார்த்து கொஞ்சம் மலைத்துப் போய் நின்றனர். இதுவரை தங்கள் மகளாக மட்டுமே பார்த்தவளுக்கு, ஒரு அலுவலகமே எழுந்து நின்று மரியாதை கொடுப்பது அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள். வரிசையாக நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலுக்குத் தந்துவிட்டு நேராகத் தனது அறைக்குச் சென்றாள்.
அறையின் வாசலில் நின்றிருந்த உதவியாளர் கதவைத் திறந்து விட, தன் வீட்டினரை முதலில் உள்ளே செல்லுமாறு சைகை காட்டினாள். அந்த அறையில் நிலவிய ஏசியின் குளிர்ச்சியும், மெல்லிய நறுமணமும், அங்கிருந்த கோப்புகளின் அடுக்கும் ஒரு புதிய அதிகாரத்தின் வருகையை உறுதிப்படுத்தின.
எந்த ஆரவாரமும் இல்லாமல், ஒரு அமைதியான அதே சமயம் நேர்த்தியான வரவேற்பு அவளுக்குக் காத்திருந்தது.
தனது அறைக்குள் நுழைந்ததும், அந்தப் பெரிய மர மேஜையும், அதன் பின்னால் இருந்த இருக்கையும் அவளை வரவேற்றன. அந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்னால், இங்கேயே உட்காருங்க. நான் ஜாயினிங் ரிப்போர்ட்ல சைன் பண்ணிட்டு வந்திடுறேன்," என்றாள்.
அவளது அப்பா சுரேந்தர், அந்த அறையையே வியப்போடு பார்த்தார். "நல்லா இருக்குமா... நல்லா விசாலமா இருக்கு," என்று ஒரு சாமானிய மனிதராக அந்த அறையை மதிப்பிட, அம்மா உமாவோ அமைதியாகத் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
டேபிளின் மேல் இருந்த "மிருதுளா சுரேந்தர், I.A.S., சப்-கலெக்டர்" என்ற பெயர்ப்பலகை அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல் இருந்தது.
பின்னர் அந்தப் பெரிய மர மேஜையின் பின்னால் இருந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும் அறையில் இருந்த ஏசியின் குளுமையோ அவளது பதற்றத்தை மெல்லக் குறைத்தது.
அப்பொழுது கதவை தட்டி உள்ளே வந்த அவளது உதவியாளர் கையிலிருந்த பைலை அங்கிருந்த டேபிளில் வைத்தவர், "மேடம், உங்க ஜாயினிங் ரிப்போர்ட்," என்றார்.
ஹம் என்றவள் தனது ஹேண்ட் பேகிலிருந்த பேனாவை எடுத்துப் பார்க்கையில் ஏதேதோ நினைவுகள் அவளுக்குள் சுழலாமல் இல்லை.
இந்தப் பேனா முனையில் தான் எத்தனை பேரின் தலையெழுத்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் எதிரிலிருக்கும் தனது பெற்றோர்களையும் அத்தை மாமாவையும் பார்க்க, அவர்களும் ஹம் என தலையசைக்கவும், பின்னர் நிதானமாக, தன் பெயரை அந்தத் தாளில் பதித்தாள்.
சரிங்க மேடம் நாங்க கிளம்புறோமென்று சுரேந்தர் சொல்ல, அப்பா என்று செல்லமாக முறைத்தாள். இல்லை டா நீ வேலையை பாரு என்றவாறு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
முதல் நாள் என்பதால் சில கோப்புகளைப் படித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது. அப்போது கதவுத் தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மேடம் உங்களுக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்காங்க என்கவும், அதற்குள் மணியாகிட்டா என்று வாட்சை பார்க்க, அதுவோ மதியம் 1.30 என்று காட்டியது.
ஓகே சார். மத்த ஃபைல்ஸை அப்புறம் பார்க்கிறேன் என்றவாறு அவளுக்கான டைனிங் ஹாலுக்கு போக அங்கே உமா இருக்கவும் அம்மா என்க...வா குட்டிமா.
நேரம் ஆகிட்டென பரபரப்போடு மகளுக்கு சாப்பாடு எடுத்து வைக்க கையை கழு விட்டு வந்து உட்கார்ந்தவள் நான் வீட்டிற்கு வந்துருப்பேனே மா என்றவாறு சாப்பிட்டு எழுந்தவள், சரி மா நீ பார்த்து போ, ஈவினிங் பார்க்கலாமென்றனர்.
அங்கிருந்த வட்டாட்சியரை அழைத்தவள், "சார், இன்னைக்கு முதல் நாள்... இப்போதைக்கு முக்கியமான பைல்கள் ஏதும் இருக்கா?" என்றாள்.
அவர் சில பைல்களைக் காண்பித்துவிட்டு, "மேடம், வெளியே ஒரு முப்பது நாற்பது பேர் மனு கொடுக்கக் காத்துட்டு இருக்காங்க. நீங்க வந்ததும் பார்க்கலாம்னு சொல்லிட்டோம்," என்றார்.
அப்படியா என்றவளோ ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, சுட்டெரிக்கும் வெயிலில், மரத்தடியில் முதியவர்களும் பெண்களும் கையில் காகிதங்களுடன் காத்திருப்பது தெரிந்ததும், "சார், முதல்ல அவங்களுக்கு அங்கே குடிக்கத் தண்ணி வசதி இருக்கான்னு பாருங்க. அப்புறம், ஒரு பத்து நிமிஷத்துல அவங்களை வரிசையா உள்ளே வரச் சொல்லுங்க. முதல் நாளே அவங்க காத்திட்டுப் போக வேண்டாம்," என்றாள்
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு மிருதுளா நிமிர்ந்து பார்க்க, முதிய தம்பதிகள் இருவர் வருவது தெரிந்தது.
தாத்தாவோ ஒரு கையில் அழுக்கான துணிப்பையையும், இன்னொரு கையில் தனது மனைவியின் கையையும் பிடித்துக் கொண்டு தயங்கியவாறு நின்றார்.
மிருதுளாவும் முகத்தில் புன்னகையோடு "வாங்க பெரியவரே... உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கிறீங்க? பாட்டி, நீங்களும் வாங்க."
அவர்களோ மெதுவாக உள்ளே வரும் போது தரையில் விரிக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த விரிப்பைப் பார்த்து, செருப்பைக் கழற்றத் தொடங்க, இதைப்பார்த்தவளோ உடனே எழுந்து வந்தவள் "பரவாயில்லை பாட்டி, செருப்போடவே உள்ளே வாங்க..." என்றபடி தனக்கு முன்னால் இருக்கும் சோபாவில் உட்கார வைத்தாள்.
பின்னர் அவளுக்கான சேரில் உட்காராமல், அவர்களுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தவள் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து நீட்டியவள் "முதல்ல இதைக் குடிங்க. ரொம்ப நேரமா வெயில்ல காத்துக்கிட்டு இருந்தீங்களா?"
"ஆமாம்மா... காலையில 9 மணிக்கே வந்துட்டோம். வெளிய இருந்தவங்களோ, மேடம் 'சாப்பிட்டு வருவாங்க, அப்புறம் வாங்க'ன்னு சொன்னாங்க. அதான்..." என்றவாறு தொண்டை அடைக்க தாத்தா சொன்னார்.
"எங்க மனுவை கொஞ்சம் பாருங்க தாயி. பையன் எங்களை அடிச்சுத் துரத்திட்டான். வீதி திண்ணையில தான் படுத்திருக்கோம். அரசாங்கம் கொடுக்கிற அந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா, ஒரு வேளை கஞ்சியாவது குடிச்சிப்போம்." என்று அவளை பார்த்து கையை கூப்பினார்.
அச்சோ பாட்டி இப்படி பண்ணாதீங்க என்று அவரின் கையை கீழே இறக்கியவள் அவர்களின் மனுவை வாங்கிப் படிக்க, அதில் பல இடங்களில் சிவப்பு மையால் 'நிராகரிக்கப்பட்டது' என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை பார்த்தவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
பின்னர் வேகமாக டேபிளின் மேலிருந்த மணியை அழுத்தி உதவியாளரை அழைத்தவள், "எதற்காக இந்த மனுவை மூணு தடவை தள்ளுபடி செஞ்சிருக்கீங்க? 'சொந்த வீடு இருக்கிறது'ன்னு காரணம் சொல்லியிருக்கீங்க. நேர்ல போய் நீங்கள் யாராவது பார்த்தீங்களா? அவங்க பையன் துரத்திட்டது உங்களுக்குத் தெரியாதா?"
அதைக் கேட்ட பி. ஏ வோ அது வந்துங்க மேடமென்க
காலை 10:00 மணி. சப்-கலெக்டர் அலுவலகத்தின் அந்தப் பழைய கட்டிடம் வழக்கமான பரபரப்பில் இருந்தது. மிருதுளாவோ தனது பெற்றோருடன் காரில் வந்து இறங்கினாள் (அரசு காரைப் பயன்படுத்த இன்னும் அவள் விரும்பவில்லை).
அவள் இறங்கியதும் அங்கிருந்த காவலர் அவசரமாக எழுந்து நின்று சல்யூட் அடிக்கவும் மெல்லிய புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டவள், "அப்பா, அம்மா, மாமா, அத்தை. வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ஒரு அதிகாரி தன் பெற்றோருடன் இவ்வளவு எளிமையாக வருகிறாரேயென அங்கிருந்தவர்கள் ஆர்வத்தோடு பார்த்தனர்.
அப்பொழுது வட்டாட்சியர் முன்வந்து பூங்கொத்தை நீட்டினார். மிருதுளாவும் அதை வாங்கிக்கொண்டு, "வணக்கம் சார், எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாள்.
மிருதுளாவின் பெற்றோரோ இந்தச் சூழலைப் பார்த்து கொஞ்சம் மலைத்துப் போய் நின்றனர். இதுவரை தங்கள் மகளாக மட்டுமே பார்த்தவளுக்கு, ஒரு அலுவலகமே எழுந்து நின்று மரியாதை கொடுப்பது அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள். வரிசையாக நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலுக்குத் தந்துவிட்டு நேராகத் தனது அறைக்குச் சென்றாள்.
அறையின் வாசலில் நின்றிருந்த உதவியாளர் கதவைத் திறந்து விட, தன் வீட்டினரை முதலில் உள்ளே செல்லுமாறு சைகை காட்டினாள். அந்த அறையில் நிலவிய ஏசியின் குளிர்ச்சியும், மெல்லிய நறுமணமும், அங்கிருந்த கோப்புகளின் அடுக்கும் ஒரு புதிய அதிகாரத்தின் வருகையை உறுதிப்படுத்தின.
எந்த ஆரவாரமும் இல்லாமல், ஒரு அமைதியான அதே சமயம் நேர்த்தியான வரவேற்பு அவளுக்குக் காத்திருந்தது.
தனது அறைக்குள் நுழைந்ததும், அந்தப் பெரிய மர மேஜையும், அதன் பின்னால் இருந்த இருக்கையும் அவளை வரவேற்றன. அந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்னால், இங்கேயே உட்காருங்க. நான் ஜாயினிங் ரிப்போர்ட்ல சைன் பண்ணிட்டு வந்திடுறேன்," என்றாள்.
அவளது அப்பா சுரேந்தர், அந்த அறையையே வியப்போடு பார்த்தார். "நல்லா இருக்குமா... நல்லா விசாலமா இருக்கு," என்று ஒரு சாமானிய மனிதராக அந்த அறையை மதிப்பிட, அம்மா உமாவோ அமைதியாகத் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
டேபிளின் மேல் இருந்த "மிருதுளா சுரேந்தர், I.A.S., சப்-கலெக்டர்" என்ற பெயர்ப்பலகை அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல் இருந்தது.
பின்னர் அந்தப் பெரிய மர மேஜையின் பின்னால் இருந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும் அறையில் இருந்த ஏசியின் குளுமையோ அவளது பதற்றத்தை மெல்லக் குறைத்தது.
அப்பொழுது கதவை தட்டி உள்ளே வந்த அவளது உதவியாளர் கையிலிருந்த பைலை அங்கிருந்த டேபிளில் வைத்தவர், "மேடம், உங்க ஜாயினிங் ரிப்போர்ட்," என்றார்.
ஹம் என்றவள் தனது ஹேண்ட் பேகிலிருந்த பேனாவை எடுத்துப் பார்க்கையில் ஏதேதோ நினைவுகள் அவளுக்குள் சுழலாமல் இல்லை.
இந்தப் பேனா முனையில் தான் எத்தனை பேரின் தலையெழுத்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் எதிரிலிருக்கும் தனது பெற்றோர்களையும் அத்தை மாமாவையும் பார்க்க, அவர்களும் ஹம் என தலையசைக்கவும், பின்னர் நிதானமாக, தன் பெயரை அந்தத் தாளில் பதித்தாள்.
சரிங்க மேடம் நாங்க கிளம்புறோமென்று சுரேந்தர் சொல்ல, அப்பா என்று செல்லமாக முறைத்தாள். இல்லை டா நீ வேலையை பாரு என்றவாறு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
முதல் நாள் என்பதால் சில கோப்புகளைப் படித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது. அப்போது கதவுத் தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மேடம் உங்களுக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்காங்க என்கவும், அதற்குள் மணியாகிட்டா என்று வாட்சை பார்க்க, அதுவோ மதியம் 1.30 என்று காட்டியது.
ஓகே சார். மத்த ஃபைல்ஸை அப்புறம் பார்க்கிறேன் என்றவாறு அவளுக்கான டைனிங் ஹாலுக்கு போக அங்கே உமா இருக்கவும் அம்மா என்க...வா குட்டிமா.
நேரம் ஆகிட்டென பரபரப்போடு மகளுக்கு சாப்பாடு எடுத்து வைக்க கையை கழு விட்டு வந்து உட்கார்ந்தவள் நான் வீட்டிற்கு வந்துருப்பேனே மா என்றவாறு சாப்பிட்டு எழுந்தவள், சரி மா நீ பார்த்து போ, ஈவினிங் பார்க்கலாமென்றனர்.
அங்கிருந்த வட்டாட்சியரை அழைத்தவள், "சார், இன்னைக்கு முதல் நாள்... இப்போதைக்கு முக்கியமான பைல்கள் ஏதும் இருக்கா?" என்றாள்.
அவர் சில பைல்களைக் காண்பித்துவிட்டு, "மேடம், வெளியே ஒரு முப்பது நாற்பது பேர் மனு கொடுக்கக் காத்துட்டு இருக்காங்க. நீங்க வந்ததும் பார்க்கலாம்னு சொல்லிட்டோம்," என்றார்.
அப்படியா என்றவளோ ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, சுட்டெரிக்கும் வெயிலில், மரத்தடியில் முதியவர்களும் பெண்களும் கையில் காகிதங்களுடன் காத்திருப்பது தெரிந்ததும், "சார், முதல்ல அவங்களுக்கு அங்கே குடிக்கத் தண்ணி வசதி இருக்கான்னு பாருங்க. அப்புறம், ஒரு பத்து நிமிஷத்துல அவங்களை வரிசையா உள்ளே வரச் சொல்லுங்க. முதல் நாளே அவங்க காத்திட்டுப் போக வேண்டாம்," என்றாள்
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு மிருதுளா நிமிர்ந்து பார்க்க, முதிய தம்பதிகள் இருவர் வருவது தெரிந்தது.
தாத்தாவோ ஒரு கையில் அழுக்கான துணிப்பையையும், இன்னொரு கையில் தனது மனைவியின் கையையும் பிடித்துக் கொண்டு தயங்கியவாறு நின்றார்.
மிருதுளாவும் முகத்தில் புன்னகையோடு "வாங்க பெரியவரே... உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கிறீங்க? பாட்டி, நீங்களும் வாங்க."
அவர்களோ மெதுவாக உள்ளே வரும் போது தரையில் விரிக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த விரிப்பைப் பார்த்து, செருப்பைக் கழற்றத் தொடங்க, இதைப்பார்த்தவளோ உடனே எழுந்து வந்தவள் "பரவாயில்லை பாட்டி, செருப்போடவே உள்ளே வாங்க..." என்றபடி தனக்கு முன்னால் இருக்கும் சோபாவில் உட்கார வைத்தாள்.
பின்னர் அவளுக்கான சேரில் உட்காராமல், அவர்களுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தவள் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து நீட்டியவள் "முதல்ல இதைக் குடிங்க. ரொம்ப நேரமா வெயில்ல காத்துக்கிட்டு இருந்தீங்களா?"
"ஆமாம்மா... காலையில 9 மணிக்கே வந்துட்டோம். வெளிய இருந்தவங்களோ, மேடம் 'சாப்பிட்டு வருவாங்க, அப்புறம் வாங்க'ன்னு சொன்னாங்க. அதான்..." என்றவாறு தொண்டை அடைக்க தாத்தா சொன்னார்.
"எங்க மனுவை கொஞ்சம் பாருங்க தாயி. பையன் எங்களை அடிச்சுத் துரத்திட்டான். வீதி திண்ணையில தான் படுத்திருக்கோம். அரசாங்கம் கொடுக்கிற அந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா, ஒரு வேளை கஞ்சியாவது குடிச்சிப்போம்." என்று அவளை பார்த்து கையை கூப்பினார்.
அச்சோ பாட்டி இப்படி பண்ணாதீங்க என்று அவரின் கையை கீழே இறக்கியவள் அவர்களின் மனுவை வாங்கிப் படிக்க, அதில் பல இடங்களில் சிவப்பு மையால் 'நிராகரிக்கப்பட்டது' என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை பார்த்தவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
பின்னர் வேகமாக டேபிளின் மேலிருந்த மணியை அழுத்தி உதவியாளரை அழைத்தவள், "எதற்காக இந்த மனுவை மூணு தடவை தள்ளுபடி செஞ்சிருக்கீங்க? 'சொந்த வீடு இருக்கிறது'ன்னு காரணம் சொல்லியிருக்கீங்க. நேர்ல போய் நீங்கள் யாராவது பார்த்தீங்களா? அவங்க பையன் துரத்திட்டது உங்களுக்குத் தெரியாதா?"
அதைக் கேட்ட பி. ஏ வோ அது வந்துங்க மேடமென்க