Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
மீஞ்சூர்:
ஓ ஷிட் என்று ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தியவன் இன்னும் பத்து நிமிடத்தில் நான் வந்துடுவேன் நீ அழாதே என்று அழைப்பை துண்டித்தவன் மச்சி, மதி விஷயம் டார்லிங்கிற்கு தெரிஞ்சிடுச்சு டா.
நியூஸ் ல சொல்லியதை பார்த்திருக்காங்க என்க, ஹம் என்றவன் வேறு எதுவும் பேசாமல் மேக மூட்டத்தோடு இருக்கும் வானத்தை பார்க்க அங்கே, இவனை தனியாக விட்டுவிட்டு மேலுலகம் போன அவனது அன்பிற்குரியவர்கள் எல்லாரும் வரிசையாக நிற்பது போல தெரிந்தது.
நண்பனை வேதனையோடு பார்த்த மித்ரன் வேகமாக தனது அம்மாவிற்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டெண்ட் பண்ணிய உமா, ஹம் சொல்லு கண்ணா?.நாங்கள் அங்கு தான் வந்துட்டு இருக்கோம். டாடி நேராக அங்கு ஏர்போர்ட்டிற்கு வராங்களாம் பா என்கவும், அப்படியா மா. அப்போ கார் அனுப்பட்டுமா என்க, இல்லை பா.
நாங்கள் அப்பாவிற்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். இன்னும் மூன்று மணி நேரத்தில் வந்துடுவோம். வேறு வழியில்லை அதனால் தான் நியூஸ்ல விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம்.
கேஸ் கோர்ட்டில் இருக்கிறது இல்லையா, ஜெயில் ல போலீஸ்காரர்கள் மூலமாக எதாவது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடாதுனு அவங்க மேலிடத்தில் பர்மிஷன் வாங்கிட்டாங்க என்றபடி அழைப்பை துண்டித்தார்.
ஓ காட் என்றவாறு காரை ஸ்டார்ட் பண்ணியவன் காற்றைவிட வேகமாக வந்து சேர அதற்குள் விஷயத்தை தெரிந்து கொண்ட சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர்.
காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மித்ரன், மச்சி என்க சமாளித்து தான் டா ஆகணும். என் தலையெழுத்து இப்படி தானே. இது ஒன்னும் புதிதில்லையே என்றவாறு இடது பக்க கையால் கார் கதவை திறந்து கீழே இறங்கியவன் அங்கிருப்பவர்களை பார்த்து தலையசைத்தபடி வீட்டிற்குள் போக, அய்யோஓஓஓ விக்கி என்று தனது வயதை பொருட்படுத்தாமல் ஓடி வந்த வசுந்தரா தனது பேரனை கட்டிக்கொண்டு கதறினார்.
சுந்தரமூர்த்தியோ இடிந்து போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தார்.
விக்ரமின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை ஆனால் கண்ணிலிருந்து மட்டும் அருவி கொட்டுவது நிற்கவில்லை.
பின்னர் ஊர்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மித்ரனே ஆக வேண்டியதை பார்க்கலானான்.
இரவு ஒன்பது மணி இருக்கும் போது மித்ரன் வீட்டினர் வந்து சேர்ந்தனர்.
சுந்தரி என்று தோழியை கட்டிக்கொண்டு வசு அழுக, வேலனோ தனது நண்பனின் கையை பிடித்துக்கொண்டார்.
மித்ரனின் அப்பா சுரேந்தரோ தனது ஆருயிர் நண்பனின் மகனான விக்ரமை அணைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் சிந்தியவர், ஏன் டா இப்படி எல்லாரும் பாதியிலே விட்டுட்டு போறிங்களென அங்கே ஆளுயர புகை படத்தில் தனது மனைவி கீதாவுடன் மாலை போட்டிருக்கும் பிரகாஷை பார்த்து கதறினார்.
மறுநாள் பொழுதும் வந்தது.
தொழில் ரீதியாகவும் தூரத்திலிருக்கும் சொந்தங்களும் வந்து கொண்டிருந்த வண்ணமே இருந்தனர்.
அப்போது மித்து தம்பியென ஊர் தலைவர் கூப்பிட, சொல்லுங்கள் மாமா என்கவும், வழக்கப்படி சடங்கு ஆரம்பிக்கனும் பா. பாடி இல்லை என்பதற்காக செய்ய வேண்டிய சடங்கை செய்யாமல் விடுவது குடும்பத்துக்கு நல்லது இல்லை என்கவும், புரிகிறது மாமா என்றவன் அம்மா யென்று உமாவை கூப்பிட்டான்.
சொல்லு பா என்று வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, மாடியில் இருக்கும் அகல்மதியின் ரூமிற்கு போனவர் கண்ணில் நீரோடு அவள் பயன்படுத்திய சில ஆடைகளையும் மற்ற பொருட்களையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்து வந்தார்.
இதையெல்லாம் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் மனநிலையோ வெறுமையாக இருந்ததென்பதே உண்மை.
பின்னர் இறந்தவர்களுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதையெல்லாம் அந்த துணிமூட்டைக்கு செய்துவிட்டு சுடலைக்கு எடுத்து போய் தீயிலிட்டனர்.
துக்க வீட்டிற்கு வந்து விட்டு திரும்பி போகும் போது சொல்லிவிட்டு போகக்கூடாது என்பதால் உமா- சுரேந்திரன் தம்பதியினர் சென்னைக்கு கிளம்பிவிட்டனர்.
வேலையாட்களோ அரண்மனை போன்ற வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ததும் சுந்தரி பாட்டியோ அகல்மதியின் புடவை ஒன்றை மணையில் வைத்து அதற்கு பக்கத்தில் நல்ல விளக்கை ஏற்றி வைத்தார்.
பதினாறாம் நாள் காரியம் முடியும் வரை நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று வேலனும் சுந்தரியும் தங்களது மகன் மருமகளிடம் சொல்லிவிட்டு தங்கி விட்டனர்.
மறுநாள் மிருதுளா வேலையில் சேர வேண்டும் என்பதால் தான் உமாவும் சுரேந்திரனும் உடனடியாக புறப்பட வேண்டியதானது.
வசு இப்படி பச்சை தண்ணி கூட குடிக்காமல் கிடந்தால் போனவள் வந்துடுவாளா? இல்லை நடந்தது இல்லைனு மாறிடுமா? சொல்லு?.
நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தால் சின்னவனை யார் தேற்றுவா?.தாயில்லாத பிள்ளை டி என்கும் போது சுந்தரிக்கும் அழுகை வந்தது.
அந்த வார்த்தை வசுவின் இதயத்தில் சுருக்கென தைக்கவும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தவர் பேரனை தேட, விக்ரமோ சோபாவில் உட்கார்ந்து கொண்டு சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் அவனது அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
வேகமாக தனது பேரன் பக்கத்தில் போய் உட்கார்ந்தவர் ஐயா நீ புது பிசினஸை ஆரம்பிக்கணும்னு சொன்னியே அது என்ன ஆச்சு?.
நம்மை பற்றி நினைக்காதவளை நாம் மட்டும் ஏன் நினைக்கனும் என்றாலும் மகள் வயிற்று பேத்தியை நினைத்து தொண்டை அடைத்தது.
தனது பாட்டியின் வார்த்தையை கேட்டு திரும்பி பார்த்தவன் நான் நல்லா இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படாதீங்க.
அவளை பற்றி நினைக்க இனி பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு என்று இருக்கிறது நீங்க எல்லாரும் தான் அந்த எண்ணம் உங்களுக்கு இருந்தா இதோட அவ பேச்ச விட்டுடுங்க என்றவாறு எழுந்து போய்விட்டான்.
மச்சி...என் யோசனை சரியா தவறா னு தெரியலை. ஆனால் எனக்கு இதான் தோணுது என்றவாறு மித்ரன்- விக்ரமை பார்த்து பரத் சொல்ல, டேய் டாக்டர் மயிறான் முதலில் விஷயத்தை சொல்லி தொலை டா என்று மித்ரன் முறைத்தான்.
ம்ம்...
நாம் ஏன் டெல்லிக்கு போக கூடாது?.
மதி தங்கியிருந்த இடத்தில் விசாரித்தால் ஏதாவது நமக்கு குளு கிடைக்கும் டா. மதி பற்றி நம்ப எல்லாருக்கும் நல்லா தெரியும். அவளால் அஞ்சு பேர் தற்கொலைக்கு முயன்றாலும் முயல்வார்கள் தவிர, இவள் இப்படி பண்ணிருக்கா என்றால் எதையோ மறைக்க முயற்சி பண்ண போல தோணலையா டா?.
உமா ஆன்ட்டி அவளோட ரிப்போர்ட் அனுப்பினார்கள். தவறா எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஏன் இப்படி என்ற அந்த கேள்வி மண்டைய குடையுது?.
நாம் உடனே டெல்லிக்கு போகலாம் என்கவும், செல்லமே.... வாழ்க்கையில் இன்று தான் டா பங்கு உருப்படியான ஐடியா கொடுத்திருக்க என்றவாறு பரத்தை அணைத்துக்கொண்டு மித்ரன் சொல்ல, பைத்தியக்கார பன்னி..
எட்டி மிதித்தேன் சங்கு நொருங்கிடும் என்றவன், உன் பாச வெள்ளத்தை கொஞ்சம் ஓரமாக மூட்டை கட்டி வை. இந்த நாய் எதுவும் சொல்லாமல் இருக்கிறானே அதை பாருடா என்றான்.
ம்ம் என்ற மித்ரன், டேய் இப்படி எதுவும் சொல்லாமல் இருக்கியே என்ன டா என்க, எனக்கு தூக்கம் வருது நான் போய் படுக்குறேனென்று பால்கனியில் நின்று கொண்டு இருளான வானத்தை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமோ ரூமிற்கு சென்று விட, இவன் என்னடா 9 மணிக்கே அதிசயமாக தூங்க போறானேன்று பரத் கேட்க, நீ தான் போலி டாக்டர் இருக்கியே கண்டு பிடித்து சொல்லு டா?.
ஓ ஷிட் என்று ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தியவன் இன்னும் பத்து நிமிடத்தில் நான் வந்துடுவேன் நீ அழாதே என்று அழைப்பை துண்டித்தவன் மச்சி, மதி விஷயம் டார்லிங்கிற்கு தெரிஞ்சிடுச்சு டா.
நியூஸ் ல சொல்லியதை பார்த்திருக்காங்க என்க, ஹம் என்றவன் வேறு எதுவும் பேசாமல் மேக மூட்டத்தோடு இருக்கும் வானத்தை பார்க்க அங்கே, இவனை தனியாக விட்டுவிட்டு மேலுலகம் போன அவனது அன்பிற்குரியவர்கள் எல்லாரும் வரிசையாக நிற்பது போல தெரிந்தது.
நண்பனை வேதனையோடு பார்த்த மித்ரன் வேகமாக தனது அம்மாவிற்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டெண்ட் பண்ணிய உமா, ஹம் சொல்லு கண்ணா?.நாங்கள் அங்கு தான் வந்துட்டு இருக்கோம். டாடி நேராக அங்கு ஏர்போர்ட்டிற்கு வராங்களாம் பா என்கவும், அப்படியா மா. அப்போ கார் அனுப்பட்டுமா என்க, இல்லை பா.
நாங்கள் அப்பாவிற்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். இன்னும் மூன்று மணி நேரத்தில் வந்துடுவோம். வேறு வழியில்லை அதனால் தான் நியூஸ்ல விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம்.
கேஸ் கோர்ட்டில் இருக்கிறது இல்லையா, ஜெயில் ல போலீஸ்காரர்கள் மூலமாக எதாவது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடாதுனு அவங்க மேலிடத்தில் பர்மிஷன் வாங்கிட்டாங்க என்றபடி அழைப்பை துண்டித்தார்.
ஓ காட் என்றவாறு காரை ஸ்டார்ட் பண்ணியவன் காற்றைவிட வேகமாக வந்து சேர அதற்குள் விஷயத்தை தெரிந்து கொண்ட சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர்.
காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மித்ரன், மச்சி என்க சமாளித்து தான் டா ஆகணும். என் தலையெழுத்து இப்படி தானே. இது ஒன்னும் புதிதில்லையே என்றவாறு இடது பக்க கையால் கார் கதவை திறந்து கீழே இறங்கியவன் அங்கிருப்பவர்களை பார்த்து தலையசைத்தபடி வீட்டிற்குள் போக, அய்யோஓஓஓ விக்கி என்று தனது வயதை பொருட்படுத்தாமல் ஓடி வந்த வசுந்தரா தனது பேரனை கட்டிக்கொண்டு கதறினார்.
சுந்தரமூர்த்தியோ இடிந்து போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தார்.
விக்ரமின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை ஆனால் கண்ணிலிருந்து மட்டும் அருவி கொட்டுவது நிற்கவில்லை.
பின்னர் ஊர்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மித்ரனே ஆக வேண்டியதை பார்க்கலானான்.
இரவு ஒன்பது மணி இருக்கும் போது மித்ரன் வீட்டினர் வந்து சேர்ந்தனர்.
சுந்தரி என்று தோழியை கட்டிக்கொண்டு வசு அழுக, வேலனோ தனது நண்பனின் கையை பிடித்துக்கொண்டார்.
மித்ரனின் அப்பா சுரேந்தரோ தனது ஆருயிர் நண்பனின் மகனான விக்ரமை அணைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் சிந்தியவர், ஏன் டா இப்படி எல்லாரும் பாதியிலே விட்டுட்டு போறிங்களென அங்கே ஆளுயர புகை படத்தில் தனது மனைவி கீதாவுடன் மாலை போட்டிருக்கும் பிரகாஷை பார்த்து கதறினார்.
மறுநாள் பொழுதும் வந்தது.
தொழில் ரீதியாகவும் தூரத்திலிருக்கும் சொந்தங்களும் வந்து கொண்டிருந்த வண்ணமே இருந்தனர்.
அப்போது மித்து தம்பியென ஊர் தலைவர் கூப்பிட, சொல்லுங்கள் மாமா என்கவும், வழக்கப்படி சடங்கு ஆரம்பிக்கனும் பா. பாடி இல்லை என்பதற்காக செய்ய வேண்டிய சடங்கை செய்யாமல் விடுவது குடும்பத்துக்கு நல்லது இல்லை என்கவும், புரிகிறது மாமா என்றவன் அம்மா யென்று உமாவை கூப்பிட்டான்.
சொல்லு பா என்று வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, மாடியில் இருக்கும் அகல்மதியின் ரூமிற்கு போனவர் கண்ணில் நீரோடு அவள் பயன்படுத்திய சில ஆடைகளையும் மற்ற பொருட்களையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்து வந்தார்.
இதையெல்லாம் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் மனநிலையோ வெறுமையாக இருந்ததென்பதே உண்மை.
பின்னர் இறந்தவர்களுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதையெல்லாம் அந்த துணிமூட்டைக்கு செய்துவிட்டு சுடலைக்கு எடுத்து போய் தீயிலிட்டனர்.
துக்க வீட்டிற்கு வந்து விட்டு திரும்பி போகும் போது சொல்லிவிட்டு போகக்கூடாது என்பதால் உமா- சுரேந்திரன் தம்பதியினர் சென்னைக்கு கிளம்பிவிட்டனர்.
வேலையாட்களோ அரண்மனை போன்ற வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ததும் சுந்தரி பாட்டியோ அகல்மதியின் புடவை ஒன்றை மணையில் வைத்து அதற்கு பக்கத்தில் நல்ல விளக்கை ஏற்றி வைத்தார்.
பதினாறாம் நாள் காரியம் முடியும் வரை நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று வேலனும் சுந்தரியும் தங்களது மகன் மருமகளிடம் சொல்லிவிட்டு தங்கி விட்டனர்.
மறுநாள் மிருதுளா வேலையில் சேர வேண்டும் என்பதால் தான் உமாவும் சுரேந்திரனும் உடனடியாக புறப்பட வேண்டியதானது.
வசு இப்படி பச்சை தண்ணி கூட குடிக்காமல் கிடந்தால் போனவள் வந்துடுவாளா? இல்லை நடந்தது இல்லைனு மாறிடுமா? சொல்லு?.
நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தால் சின்னவனை யார் தேற்றுவா?.தாயில்லாத பிள்ளை டி என்கும் போது சுந்தரிக்கும் அழுகை வந்தது.
அந்த வார்த்தை வசுவின் இதயத்தில் சுருக்கென தைக்கவும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தவர் பேரனை தேட, விக்ரமோ சோபாவில் உட்கார்ந்து கொண்டு சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் அவனது அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
வேகமாக தனது பேரன் பக்கத்தில் போய் உட்கார்ந்தவர் ஐயா நீ புது பிசினஸை ஆரம்பிக்கணும்னு சொன்னியே அது என்ன ஆச்சு?.
நம்மை பற்றி நினைக்காதவளை நாம் மட்டும் ஏன் நினைக்கனும் என்றாலும் மகள் வயிற்று பேத்தியை நினைத்து தொண்டை அடைத்தது.
தனது பாட்டியின் வார்த்தையை கேட்டு திரும்பி பார்த்தவன் நான் நல்லா இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படாதீங்க.
அவளை பற்றி நினைக்க இனி பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு என்று இருக்கிறது நீங்க எல்லாரும் தான் அந்த எண்ணம் உங்களுக்கு இருந்தா இதோட அவ பேச்ச விட்டுடுங்க என்றவாறு எழுந்து போய்விட்டான்.
மச்சி...என் யோசனை சரியா தவறா னு தெரியலை. ஆனால் எனக்கு இதான் தோணுது என்றவாறு மித்ரன்- விக்ரமை பார்த்து பரத் சொல்ல, டேய் டாக்டர் மயிறான் முதலில் விஷயத்தை சொல்லி தொலை டா என்று மித்ரன் முறைத்தான்.
ம்ம்...
நாம் ஏன் டெல்லிக்கு போக கூடாது?.
மதி தங்கியிருந்த இடத்தில் விசாரித்தால் ஏதாவது நமக்கு குளு கிடைக்கும் டா. மதி பற்றி நம்ப எல்லாருக்கும் நல்லா தெரியும். அவளால் அஞ்சு பேர் தற்கொலைக்கு முயன்றாலும் முயல்வார்கள் தவிர, இவள் இப்படி பண்ணிருக்கா என்றால் எதையோ மறைக்க முயற்சி பண்ண போல தோணலையா டா?.
உமா ஆன்ட்டி அவளோட ரிப்போர்ட் அனுப்பினார்கள். தவறா எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஏன் இப்படி என்ற அந்த கேள்வி மண்டைய குடையுது?.
நாம் உடனே டெல்லிக்கு போகலாம் என்கவும், செல்லமே.... வாழ்க்கையில் இன்று தான் டா பங்கு உருப்படியான ஐடியா கொடுத்திருக்க என்றவாறு பரத்தை அணைத்துக்கொண்டு மித்ரன் சொல்ல, பைத்தியக்கார பன்னி..
எட்டி மிதித்தேன் சங்கு நொருங்கிடும் என்றவன், உன் பாச வெள்ளத்தை கொஞ்சம் ஓரமாக மூட்டை கட்டி வை. இந்த நாய் எதுவும் சொல்லாமல் இருக்கிறானே அதை பாருடா என்றான்.
ம்ம் என்ற மித்ரன், டேய் இப்படி எதுவும் சொல்லாமல் இருக்கியே என்ன டா என்க, எனக்கு தூக்கம் வருது நான் போய் படுக்குறேனென்று பால்கனியில் நின்று கொண்டு இருளான வானத்தை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமோ ரூமிற்கு சென்று விட, இவன் என்னடா 9 மணிக்கே அதிசயமாக தூங்க போறானேன்று பரத் கேட்க, நீ தான் போலி டாக்டர் இருக்கியே கண்டு பிடித்து சொல்லு டா?.