• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
நீலாங்கரை:

இந்த வீட்டில் பெட் காபி கூட குடுக்கமாட்றாங்க என்று புலம்பிக்கொண்டே கீழே வந்த மிருதுளா, தனது தாத்தா பாட்டி இருவரின் முகத்திலிருக்கும் சோகமும், ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதும் தெரிய, எங்கே இந்த வக்கீல் மேடத்தை காணும்?
அப்படி என்ன டிஸ்கஷன் போகுது என்றவாறு இருவருக்கும் நடுவில் உட்கார்ந்தாள்.

பேத்தியின் கேள்வியில் கலைந்தவர்கள் அந்த மதி பொண்ணு ஜெயில்லையே தற்கொலை பண்ணிக் கிட்டு அம்மு. பாவம் விக்கி என்கவும், என்னாஆஆஆ என்று அதிர்ந்தவள், அகல்மதி அக்கா ஜெயில்ல இருக்காங்களா என்கவும் மூத்த தம்பதிகள் இருவரும் ஆமாமென தலையசைத்தனர்.

கொஞ்சம் புரியும் போல சொல்லுங்கள் பாட்டி என்க...ஆறு பேரை கொலை பண்ணிய கேஸில் போன மாதம் தான் கைது பண்ணிருக்காங்க. இந்த விஷயம் டெல்லியில் நடந்திருக்கிறது.

ஆறு பேரில் ஒருத்தன் தமிழ்நாட்டின் மந்திரி பையன். கேஸை இங்கு மாத்தியாச்சு. நேற்று அவளுக்கு தண்டனை வழங்க வேண்டிய நாள். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ரேகா மூலயமாக விஷயம் தெரிந்து உன் அம்மாவும் வந்துட்டாள் டா என்றவர் பின்னர் நடந்ததை எல்லாம் சொல்ல, கேட்டவளுக்கும் அதிர்ச்சியோடு விக்ரமை நினைத்து கவலையாகவும் இருந்தது.

இப்போ அவங்க எங்கே பாட்டி?.

மித்து கூப்பிட்டு போயிருக்கான். இதிலிருந்து எப்படி மீண்டு வருவானோ தெரியலையேனு தம்பதிகள் இருவரும் விக்ரமிற்காக கவலைப்பட்டனர்.

இன்று என்று பார்த்து கடிகாரம் மிகவும் பொறுமையாக போவது போல் இருக்கவும் எப்போ விக்ரமை பார்ப்போம் என்று மிருதுளாவின் மனம் தவித்துக் கொண்டிருக்கிற ஒரு கட்டத்தில் எதுக்கு எனக்கு இப்படி இருக்கு என்று தலையை பிடித்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவளின் பார்வையோ வாசல் பக்கமே இருந்தது.

கடைசியாக விக்ரமைப் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. இந்த இடைப்பட்ட வருடங்களில் அவ்வப்போது எதோ ஒரு சூழலிலும் செயல்களிலும் விக்ரமின் நினைவுகள் வரும் போதெல்லாம் "கடுவன் பூனை" என்று சொல்ல அவளது உதடுகள் மறக்காது.

இதுவரை தனது அண்ணனின் ஆருயிர் நண்பன் என்பதை தாண்டி வேறெதுவும் நினைத்ததில்லை. ஆனால் நேற்றிலிருந்து அவளது மனதிற்குள் விக்ரமின் நினைவுகள் இம்சிக்க தொடங்கவும் அது என்னதென ஆராயும் மனநிலைக்கும் போகவில்லை.

வழக்கமாக விடுமுறை என்றால் காலை பத்து மணிக்கு மேல் எழுபவள் இன்று ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கீழே வந்துவிட்டாள்.

இப்படியெல்லாம் தனது நினைவிற்குள் மூழ்கி காரணத்தை அலசி ஆராயும் போது அவளது போனிற்கு கால் வரவும் அதில் நிகழ்விற்கு வந்தவள் கையிலிருந்த போனில் பெயரை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவள் சொல்லுங்கள் மேடம் என்க..

ஏய் மித்து எப்படி இருக்க டி?.

"வாழ்த்துகள் செல்லம்"

செல்லாது செல்லாது என்ற மிருதுளா உங்கள் ஆள் வந்துச்சுனு இந்த போன் கால் இல்லையா என்கவும், ஏய்.... குட்டி சாத்தான். நீ தானே டி டிரைனிங்கில் இருக்கும் போது சரியா பேச முடியாதுனு நாலு வார்த்தை பேசியே ரெண்டு வருஷத்தை ஓட்டின என்று ரேகா திட்ட, ஆஹான்.

உங்க ஆளுக்கு மட்டும் போன் பேச முடிந்ததா சொல்லுங்களென்றாள்.

அடியேய் நீயும் அவரும் ஒன்றானு ரேகா பல்லை படிக்கவும், சரி சரி... பொழைச்சிட்டு போங்கள். அத்தை மாமா நல்லா இருக்காங்களா? என்கவும், உன் சொத்தை- நோமா அங்கு தான் வராங்க.

கிளம்பி டென் மினிட்ஸ் ஆகுது. அப்புறம் ரஞ்சித் அண்ணாக்கு பாப்பா பொறந்திருக்காள் டி என்கவும் அப்படியா என்று சந்தோஷப்பட்டவள் பின்னர் தனது பாட்டியிடம் போனை கொடுக்க, சுந்தரியும் வேலனும் தனது மகள் வயிற்று பேத்தியிடம் பேசிவிட்டு போனை வைத்தனர்.

விக்கியை பற்றி நேரடியாக விசாரிக்க முடியாது என்பதால், என்ன பாட்டி அம்மாவும் அண்ணாவும் இன்னும் வரலை? என்றவாறு வாசலுக்கு வந்தவள் தனது போனிலிருந்து அண்ணனுக்கு கால் பண்ணினாள்.

அந்த பக்கம் அட்டெண்ட் பண்ணிய மித்ரன் சொல்லு குட்டிமா என்க... என்னாச்சு ணா? என்க...

இங்கு புரொசுஜர் முடிய எப்படியும் ஈவ்னிங் ஆகிடும் போல டா தாத்தா பாட்டிகிட்ட சொல்லிடு என்கவும் சரி ணா. அவங்க எப்படி இருக்காங்களென தயங்கியபடி கேட்டாள்.

ம்ம்..

இருக்கான் டா.

இதுவரை ஒரு வார்த்தை கூட பேசல என்றவன் சரி டா அம்மா கூப்பிடுறாங்க நான் வைக்குறேனென்று அழைப்பு கட்டானது.

மாலையும் மறைய தொடங்கும் நேரத்தில் காரின் ஹாரன் சத்தம் கேட்டதும் இயல்பாக இருப்பது போல அம்மா வந்தாச்சு பாட்டி என்றவாறு வெளியே போகவும் இரண்டு கார்களும் உள்ளே வந்து நின்றது.

ஏய் சின்ன குட்டி என்றபடியே வெளியே வந்த பாட்டி அவங்களை தொடதே தள்ளி போடி என்றவர், மூன்று பேரும் வெளியே இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு வாங்களென்றார்.

விக்ரமோ பொம்மை போல இறங்கி நண்பனோடு போவதை பார்த்த மிருதுளாவிற்கு சொல்லொன்னா வேதனையாக இருக்கவும் அவளது கண்ணிலிருந்து இரண்டு துளிகள் கன்னத்தில் வழிந்தோட அதில் சுதாரித்தவள் வேறு பக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டவளோ வேகமாக கிச்சனிற்கு போக, என்ன வேண்டும் குட்டிமானு மாலா கேட்க, அம்மா வந்தாச்சுங்க கா.

நான் டீ போடுறேன் என்கவும் அப்படியா, சரி டா. நான் போய் உமாக்கு துணி எடுத்து கொடுக்குறேனென்று அங்கிருந்து போனார்.

நேரமும் கடந்து சென்றது..

கண்ணா இதை குடி என்று டீ கப்பை விக்ரமிடம் நீட்ட வேண்டாமென்று தலையசைத்தான்.

காலையிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்கலை பா. நீ தெம்பா இருந்தா தான் வசுவையும் அண்ணாவையும் சமாளிக்க முடியும் கண்ணா.

காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை ராஜா. எத்தனையோ இடிகளை தாங்கி இன்று நிமிர்ந்து நிற்கிற மனசை விட்டுடாத கண்ணா என்றபடி அவனது கன்னத்தை தடவி சொல்லிய சுந்தரியின் கண்ணிலிருந்து கண்ணீர் வர மறக்கவில்லை.

ஏன் பாட்டி எனக்கு மட்டும் இப்படி நடக்கின்றது?.

நினைவு தெரிந்த நாளிலிருந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லையே பிறகு என் தலையெழுத்து எதுக்கு இப்படி?.

எதற்காக இவள் கொலை பண்ணினானும் தெரியலை. ஏன் தற்கொலை பண்ணிக் கொண்டாளென்றும் தெரியவில்லை. இவளுக்காக நான் ஒருத்தன் இருப்பதே நினைவு இல்லையா?.

ஒரு நிமிடம் கூட என்னை பற்றி யோசிக்காமல் இப்படி பண்ணிட்டாளே...

கண்ணா...

வேண்டாம் டா.

அவள் மனசுக்குள் என்ன இருந்ததென நமக்கு தெரியாதே...இதிலிருந்து கடந்து வா என்றவர் ஒருவழியாக அவனை தேற்றி டீ குடிக்க வைத்தவர் அடுத்தது என்னவென்று பேசும் போது, விக்ரம் கூட நானும் போறேன்னு மித்ரன் சொல்ல அதுவும் சரியென்கும் போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

யாரு வந்துருக்கானு உமா கேட்கும் போது தான் தனது அத்தை மாமா வரும் விஷயம் மிருதுளாவுக்கு ஞாபகம் வரவும் அச்சோ...

மாமா தான் மா என்கவும், அப்படியானு அதிர்ந்த உமாவோ வேகமாக எழுந்து வாசலுக்கு போவதற்குள் அவருடைய அண்ணன் சந்திரனும் அண்ணி சந்திரிகாவும் உள்ளே வர, வாங்க ணா. வா சந்திரிகா என்க..

நல்லாருக்கியா கண்ணம்மானு தனது தங்கையின் தலையை தடவினார்.

நல்லாருக்கேன் ணா என்றவாறு தனது தோழியும் அத்தைமகளுமாகிய சந்திரிகாவின் கையை பிடித்து கொண்டு உள்ளே வர பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்தனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
குட்டி என்கவும் தனது தாய் மாமா காலில் விழ, நல்லாரு கண்ணு என்றவாறு தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தங்கை மகளின் முன்பு நீட்ட மிருதுளாவும் சிரித்துக் கொண்டே வாங்கியவள் அங்கிருந்த சந்திரிகாவின் பக்கத்தில் இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

எனக்கு பொறந்த வீட்டுலயும் சரி புகுந்த வீட்டிலும் சரி யாரு கொடுமையும் இல்லை எல்லாத்துக்கும் சேர்த்து என் அண்ணன் மகள் உருவத்துல ஒருத்தி இருக்கிறாழ் என்று சந்திரிகா சிரிக்கவும் பின்னே என்று மிருதுளாவும் சிரித்தாள்.

மாலாவோ எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வந்து கொடுக்க, விக்கி என்று விக்ரமின் கையை சந்திரன் பிடிக்கவும் அவனோ அமைதியாக இருந்தான்.

கடந்து வா பா. உன்னால் முடியும் என்றவர் பின்னர் தனது மகன் ரஞ்சனுக்கு குழந்தை பிறந்தை சொல்லியவர் அடுத்த வாரம் அவரும் சந்திரிகாவும் பேரப்பிள்ளையை பார்க்க வெளிநாடு போவதையும் சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியே போயிருந்த வேலனும் வந்துவிட பின்னர் அவரிடமும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

தனது லக்கேஜை கொண்டு போய் காரில் வைத்து விட்டு உள்ளே வந்த மித்ரன் நாங்க கிளம்புறோமென்க, சரிங்க கண்ணுகளா ...

பார்த்து போங்கள்..

சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டுமென்று பேரனின் கன்னத்தை தடவியவாறு வேலன் சொல்ல சரிங்க தாத்தா. நான் பார்த்துக்குறேன்.

அம்மா, குட்டிமா எந்திரிச்சதும் சொல்லுங்கள் என்றவன் மச்சி என்று விக்ரமின் தோளில் கையை போட, மூவரையும் பார்த்து தலையசைத்த விக்ரம், மித்ரனோடு வெளியே வந்தவன் நான் கார் ஓட்டுகிறேன் என்கவும், இருக்கட்டும் டா.ரொம்ப நாளாவது டா டிரைவிங் பண்ணி. நம்பி உட்காரு மச்சி நான் ஓட்டுறேன் என்றவனோ காரை ஸ்டார்ட் பண்ண, ம்ம் என்று விக்ரமும் முன்னாடி உட்கார்ந்தான்.

இருள் விலகாத அந்த அதிகாலையிலே புறப்பட்டவர்கள் இடையே நிறுத்தி டீ ஜூஸ் என்று குடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.

எப்போதும் தன்னோடு பேசிக்கொண்டே, மெல்லிசை பாடல்களை ஒலிக்க விட்டு அதோடு சேர்ந்து பாடிக்கொண்டே வரும் நண்பன் கடந்த இரண்டு நாட்களாக பேரமைதியாக இருப்பதை பார்த்த மித்ரனுக்கு ஏண்டி மதி இப்படி பண்ணுன என்று கோபம் வந்தாலும் காரணம் தெரியாமல் அவளை தப்பாகவும் நினைக்க முடியவில்லை.

என்ன பிரச்சனை என்று சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும்?.

உன்னை வெளியே எடுத்துவிடலாமென்று அவ்வளவு நம்பிக்கை இருந்ததே மதி பிறகு ஏன் டி இப்படி பண்ணின?.

மற்றதை விடு உனக்காக ஒருத்தன் இருக்கிறான் அவனை கூட நீ நினைக்கலையாமா என தனது தங்கை போல நினைக்கும் மதியிடம் மனதிற்குள்ளே நியாயம் விசாரித்தான்.

சென்னையில் இருந்து புறப்பட்டவர்கள் ஒரு வழியாக மீஞ்சூரின் எல்லைக்கு வந்து சேரும் போது மாலை சூரியனும் மறைய தொடங்கியது.

மீஞ்சூர்:

எஸ். எம் எஸ்டேட்... என்ற போர்டு இருக்கும் பாதையின் இடது பக்கமாக திரும்பி போக இரண்டு பக்கமும் ஏலக்காய் பாக்கு மரங்கள் செழித்து நின்று கொண்டிருந்தது.

5 வருடங்களுக்கு பிறகு அந்த இடத்தை பார்த்த மித்திரனும் அந்த இயற்கையை ரசித்துக் கொண்டே பாம்பு போல் ஓடும் அந்த ரோட்டில் காரை ஓட்டிக்கொண்டு போனான்.

எஸ்டேட்டில் இருந்து அரை மணி நேரம் உள்ளே போய் இடது பக்கம் திரும்பினாலே தெருவின் எல்லை ஆரம்பம்..அங்கே முதலாவதாக வெள்ளை கலர் மார்பிள்ஸில் இருக்கும் பளிங்கு மாளிகையை பார்போர் வியாக்காமல் இருக்க மாட்டார்கள்.

அங்கிருந்த இரும்பு கேட் அருகில் வரும் போது ஹாரன் சத்தத்தை ஒலிக்க விடவும் வேலை ஆளும் கதவை திறந்து விட காரும் உள்ளே ஓடிப் போய் நின்றது.

தனது பேரன் வந்து விட்டான் என்று தெரிந்ததும் சுந்தரமூர்த்தியும் வசுந்தராவும் தங்களது வயதை மறந்து வேகமாக வாசலுக்கு வர அங்கே மித்திரனும் விக்ரமும் காரிலிருந்து இறங்குவதை தெரிந்தது.

மித்து கண்ணா என்கவும்... ஹாய் டார்லிங் ஹாய் சகல ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?.

அடேய் என்றாலும் சுந்தரமூர்த்தி தாத்தாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

விக்ரம் எதுவும் பேசாமல் நேராக வீட்டிற்குள் போகவும் சரி அகல்மதியை நினைத்து பேரன் வருத்தமாக இருக்கிறான் என்று தாத்தா பாட்டி இருவரும் நினைத்துக் கொண்டனர்.

இருவரின் காலில் விழுந்த மித்ரன் இரண்டு பேரின் தோளுடன் அணைத்துக் கொண்டு உடம்பெல்லாம் நல்லா இருக்கா என்கவும் நல்லா இருக்கிறோம்.

நீ எப்படி இருக்க?

அஞ்சு வருஷம் ஆகுது உன்னை பார்த்து அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துருச்சு கண்ணா என்று வசுந்தரா கண்கலங்க, ஏய்...

இப்போது தான் வந்திருக்கிறான் அவனை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகாமல் எதுக்கு இப்படி வாசலிலே ஒப்பாரி வைக்கிற என்று சுந்தர மூர்த்தி தனது மனைவியை சத்தம் போட என்ன சகல, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தாக்க மாமா நான் பக்கத்துல இருக்கும்போது என் டார்லிங்கை இப்படி சத்தம் போடுவ?.

கன் எடுத்து எங்க சுடுவேனு எனக்கே தெரியாது எங்கவும் போடா போடா பொழப்பெடுத்தவனே...

நாலு வயசுல உனக்கு உச்சா எப்படி போகணும்னு சொல்லி கொடுத்தது நான் தாண்டா என்கவும் சகலை...இப்படியா மானத்தை வாங்குவது என்று எட்டி அவர் வாயை பொத்த போக, அந்த பயம் இருக்கட்டும் என்றார்.

அப்பொழுது ஏதோ கண்ணாடி உடையும் சத்தம் கேட்கவும் என்னாச்சு என்ற மூவரும் உள்ளே போகும்போது ஹாலில் பெரிதாக மாட்டி இருந்த அகமதியின் புகைப்படம் கீழே விழுந்து கிடக்கவும் விக்ரமோ வேகமாக படியில் ஏறி மேலே போவது தெரிய, அய்யோ என்று வசு பதர, ஏதோ சரியில்லை என்று சுந்தரமூர்த்தி தாத்தா நினைத்துக் கொண்டார்.

சகல நீ வசுவை பாரு என்றவன் நாலே பாய்ச்சலில் ஓடிப்போய் படியில் ஏறியவன் டேய் என்று நண்பனை பிடித்து திருப்ப விக்ரமின் வலது கை முழுவதும் ரத்தமாக இருக்க, அறிவுகெட்டவனே என்ன டா பண்ணி தொலைஞ்ச?.

ஏன் இப்படி ரத்தம் வருதென தனது பாக்கெட்டில் இருக்கும் கர்சிப்பை எடுத்து நண்பனின் உள்ளங்கையை சுற்றி கட்டு போட்டவன் வாடா என்று கீழே இழுத்துக் கொண்டு வர பேரனின் ஆடையில் இருக்கும் ரத்தத்தை பார்த்த வசு, கண்ணா என்னடா ஆச்சு என்று பதற ஒன்னும் இல்ல நீங்க பார்த்துக்குங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்று வேகமாக வெளியே போனவன் கார் கதவைத் திறந்து உள்ளே தள்ளியவன் புயல் வேகத்தில் காரை கிளப்பி கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தான்.

எதுக்கு விக்ரம் இவ்வளவு கோபம் என்றவாறு அவனது கையில் தையல் போடும் டாக்டரை பார்த்து மித்ரன் முறைத்தான்.

எதுக்குடா இப்படி என்ன முறைச்சிட்டு இருக்க என்று அங்கே டாக்டராக இருக்கும் அவர்களின் இன்னொரு நண்பன் கேட்கவும்...

பரதேசி பயலே போன் பண்ணா நீ எல்லாம் எடுத்து தொலைய மாட்டியா என்கவும் டேய் கான்பரன்ஸ் மீட்டிங்ல பெங்களூர்ல இருந்தேன்டா. அதான் அட்டென்ட் பண்ண முடியல.

ம்கும் என்னமோ சொல்லி தொலை அதை நம்பி தானே ஆகணும் என்று மித்ரன் பல்லை கடிக்க அது கிடக்கட்டும் நீ எப்போ டா வந்த?.ஏன் டா சொல்லலை என்கவும்,முதல்ல உன் ஃபோனை பார்த்து தொலையனும் இந்த கேள்வி மயிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றான்.

சரி சரி ரொம்ப புகழாதே மச்சி...

என்னடா ஆச்சு? .அங்கு இருந்தாலும் எனக்கு சிந்தனை எல்லாம் இங்கு தான் இருந்தது என்கவும் நண்பனை வெறுமையாக பார்த்த விக்ரம் எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு என்று அங்கிருந்து எழுந்து போகவும் என்னடா சொல்ற என்று நண்பன் அதிர, பின்னர் சுருக்கமாக விஷயத்தை சொல்லியவன் சரி மச்சி நீ ப்ரி ஆயிட்டு வீட்டுக்கு வாடா.நான் இங்கதான் இருக்க போறேன் என்கவும் சரிடா என்றான்.

ஏன் டா கொஞ்சமாவது அறிவு இருக்கா?

இதோட போனதே, அவ்வளவு கனமான கண்ணாடியை எப்படி டா உடைத்த என்றவாறு மித்ரன் ஆற்றாமையில் கேட்டுக்கொண்டே கார் ஓட்ட, இப்படி தான் ஓங்கி ஒன்று வைத்தேனென்றவாறு கார் கண்ணாடியில் டெமோ காட்ட விக்ரம் முயலவும், அடேய் என்றபடி சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவனோ தனது தலையிலே தட்டிக் கொண்டான்.

மச்சி...

விஷயம் தெரிந்தால் ரெண்டு பேரும் என்ன ஆவாங்கனு கொஞ்சம் யோசித்தியா டா என்கும் போது மித்ரனின் நம்பருக்கு கால் வரும் சத்தம் கேட்கவும், போனை எடுத்து பார்த்தவன் அட்டெண்ட் பண்ணி சொல்லு டார்லிங் என்க, அங்கு வசுவின் அழுகுரல் கேட்டது.

ஏ டார்லிங் எதுக்கு இப்ப கண்ண கசக்குற?.

சின்ன காயம் தான் இதோ வீட்டிற்கு தான் வந்துட்டு இருக்கோம் என்கவும் மதி மதி என்றவர் இப்போது தான் நியூஸ் ல சொன்னாங்க கண்ணாயென கதறினார்.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top