Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
மறுநாள் பொழுதும் வந்தது.சொந்த பந்தங்கள் எல்லாரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விக்ரம் எதுக்கு எல்லாரும் வந்திருக்காங்க என்றான்.
ம்ம்...எல்லாம் வேண்டுதலை தான்...ஆமா உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?.
குட்டிமா நிச்சயத்துக்கு அவங்க எல்லாம் போக மாட்டாங்களா எல்லாருக்கும் தானே சொந்தக்காரர்கள் என்று பரத் கேட்க ஆமாம் டா. ஆனால் நடக்காது நிச்சயதார்த்தத்துக்கு எதுக்கடா இத்தனை பேர் வராங்க என்றான்.
அது நமக்கு மட்டும் தான் தெரியும் இவங்களுக்கு தெரியாதே ராசா என்று நண்பனின் வாயை அடைத்தவன் இவனைக் கொண்டு போய் சேர்க்கிறதுக்குள் எனக்கு பாதி உசுரு போய்டுமே என்று புலம்பி கொண்டிருந்தான்.
அவன் புலம்பலை பார்த்து சுந்தரமூர்த்தி தாத்தாவும் சத்தமாக சிரித்தார்
நீலாங்கரை:
சுரேந்தர் - உமா தம்பதியினரின் இல்லம் இன்று ஒரு தேவாலயம் போலக் காட்சியளித்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த பச்சை மாவிலைத் தோரணங்களும், காற்றில் மிதந்து வந்த நாதஸ்வர இசையும் அந்த இடத்தையே மங்கலமாக மாற்றியிருந்து.
தன் மகள் ஒரு மாவட்ட ஆட்சியராகப் பெருமை சேர்த்தது ஒருபுறம் என்றால், அவளுக்குப் பிடித்தமானவனையே (அவளுக்கே தெரியாமல்) மணமகனாகத் தேர்ந்தெடுத்த திருப்தி சுரேந்தரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்த சுரேந்தர், வாசலுக்கு வரும் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி வரவேற்றார். "வாங்க... வாங்க... எங்க வீட்டு மகளோட பெரிய விசேஷம், எல்லாரும் இருந்து ஆசிர்வதிக்கணும்" என்று நெகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
உமாவோ பட்டுப்புடவையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். விருந்தினர்களுக்குப் பன்னீர் தெளிப்பதும், அவர்களுக்குச் சந்தனம் கொடுப்பதும் என அவர் காட்டிய உற்சாகம், ஒரு தாயின் கனவு நனவாகும் தருணத்தைப் பிரதிபலித்தது.
ஒரு வழியாக மீஞ்சூர் ல இருந்து எல்லாரும் புறப்பட்டு சென்னையில் இருக்கும் மிருதுளாவின் வீட்டிற்கு வந்து சேர மாலை ஆனது. அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்ததை பார்க்கவே அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வர, பக்கத்தில் வந்த பரத்தின் கையை பிடித்து அழுத்தவும் டேய் இது கை..இரும்பு கிடையாது. உன் வீரத்தை அங்க போய் காட்டு என்று பல்லை கடித்தான்.
அப்பொழுது மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்கள் என்று குரல் கேட்கவும் எவன்டா அவன் பின்னாடியே வர்றது என்று விக்ரம் கோவமாக திரும்பிப் பார்க்க கையில் ஆர்த்தி தட்டோடு வந்த உமா விக்கி என்று கூப்பிடவும் அவர் சத்தத்தில் திரும்ப அவன் தலையில் மூன்று சுற்று சுற்றி பொட்டு வைத்தார்.
என்னடா நடக்குது இங்கே என்று அவன் அதிர வாங்க மாப்பிள்ளை என்று சுரேந்தர் அவனை பார்த்து கை கூப்ப...மாமா என்று விக்ரம் அதிர, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்.
என்னடா மாப்பிள்ளை உன் நிச்சயத்தை நீயே நிறுத்திக்கிறியா என்று பரத் கேட்க திரும்பி நண்பனை ஒருமுறை முறைத்தவன் ரூமுக்கு வாடா உனக்கு இருக்கு என்று பல்லை கடித்தான் .
போடா என்றவன் டைம் ஆயிடுச்சு 6:00 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது அதுக்குள்ள வரணும் போடா என்று அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ரூமுக்கு போனவன் என்ன மச்சி நிறுத்தனும்னு வந்து இப்படி 32 பல்லையும் காட்டிக்கொண்டு நிக்கிறியே...
அடப்பாவிகளா...
ஏன்டா எனக்கு தான் நிச்சயதார்த்தம் நான் தான் மாப்பிள்ளை என்று சொல்லவே இல்ல...என் மனசு என்ன பாடுபட்டுதுனு தெரியுமாடா என்று சொல்லவும், அது எங்களுக்கு எப்படி தெரியும்?...நீ சொன்னாதானே தெரியும் என்று நக்கலாக கேட்டுக் கொண்டே மித்ரன் அங்கு வர நீயுமாடா இதுல கூட்டணி என்றான்.
ஏன் டா... நாம அப்படியா பழகினோம்?.
உன் மனசில் குட்டிமா இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல தோணலை இல்லையா? என்று மித்ரன் கேட்க, பங்கு என்ன சென்டிமென்ட் நாடகமாக்கும்...
அவனை கிளம்ப சொல்லுடா... இல்லை ரெண்டு வீரப்பனும் கிளம்பி வந்து பக்கம் பக்கமா பேசுங்கள் டா... சத்தியமாக அதை தாங்க எனக்கு தெம்பு இல்லை ராசா என்னும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...
நான் சொல்லலை....கதை திற டி என்றவாறு பரத் ரெஸ்ட் ரூமிற்குள் ஓடிப்போக, மித்ரன் போய் கதவை திறக்க, உள்ளே வந்த இரண்டு தாத்தாக்கள் ஏன் டா அறிவு கெட்டவனுங்களா... நல்ல நேரம் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது.
என்னமோ புள்ளதாச்சி ஆடி அசைந்து கிளம்புற போல இன்னும் இந்த எருமை மாடு நிக்குது... பந்தலில் எல்லாரும் மாப்பிள்ளையை காணும் னு கேள்வியா கேட்டு கொல்லுறாங்க...
இங்க என்ன னா சாவகாசமா கதை பேசுறீங்களென்று வேலன்- சுந்தரமூர்த்தி இருவரும் சராசரியாக திட்டியவர்கள், எங்கே இன்னொரு வளர்ந்த மாடு?...
நேரத்தோடு வந்து சேருங்கள் டா... இவனுங்க எல்லாம் என்னத்தை குடும்பம் பண்ண போறானுங்களோ என்றவாறு இருவரும் அங்கிருந்து வெளியே போக, யாத்தேஏஏ என்றவாறு காதை குடைந்தபடி வந்த பரத் ஒய் பிளட் சேம் பிளட் என்க... நண்பர்கள் மூவரும் சத்தமாக சிரித்து விட்டானுங்கள்.
சாரி டா மச்சியென்று விக்ரம் தனது நண்பனுங்களை அணைக்க, மரியாதையா காலில் விழுந்து மனிப்பு கேளு அப்போது யோசிக்கிறோம் என்று மித்ரன் சொல்ல, எதேஏஏ...அடேய் உங்களுக்கு இருக்கும் ஒரே மச்சான் டா... என்னை மரியாதையாக நடத்தினால் தான் உங்கள் தங்கச்சியை நல்லா பார்த்துப்பேன் என்கவும், த்தூ ....
காதலை சொல்ல துப்பு இல்லை... இதுல பகுமானம் வேற... முதலில் நார்நாராக என் தங்கச்சிக்கிட்ட கிழி வாங்காமல் குடும்பம் நடத்தும் வழியைப் பாரு டா என்ற பரத் சூட்கேஸை திறந்து இருவருக்கும் டிரஸ் எடுத்து வைத்தான்.
ரொம்ப மானத்தை வாங்குறானுங்களே என்று புலம்பிக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் போன விக்ரம் வேகமாக ஒரு குளியலை போட்டு வந்தவன் அங்கிருந்த டிரஸை போட்டு பார்க்க இதுவரை இல்லாத தேஜஸ் இப்போது அவன் முகத்தில் வந்திருந்தது.
மச்சி எப்படி இருக்குடா என்க... செருப்பை கழட்டி நாலு அடி வேண்டும் என்றாலும் அடிச்சிக்க, இப்படி வெட்கப்படாத டா... சத்தியமா இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியலை என்று மித்ரன் தன் தலையில் அடித்துக்கொள்ள... மச்சி உன் பங்கு ரொம்ப சிலுத்துக்குறான்.
நீயாவது சொல்லு என்கவும்,
என் வாயிலிருந்து நல்லா வந்துரும் வேண்டாம் டா என்கவும்..
பொறாமை பிடித்த பயலுங்க என்றவாறு ஒருமுறை கண்ணாடியில் தன்னை பார்த்தவன் வாங்கடா என்று மணமேடையை நோக்கிப் போனான்.
வெளியே இவ்வளவு கொண்டாட்டங்கள் நடந்தாலும், மாடியில் இருக்கும் தன் அறையில் மிருதுளா ஒரு சிறைக்கைதியைப் போலவே உணர்ந்தாள். அவள் மனம் விக்ரமின் நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்தது.
தோழிகள் அவளுக்குப் பட்டுப்புடவை கட்டி, நகைகளை அணிவித்துக் கொண்டிருந்தனர். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தபோது, அவளுக்கு அது தன்னுடைய முகமாகவே தெரியவில்லை.
"என் காதலை அவனிடம் சொல்லத் துணிவில்லாத கோழை ஆகிவிட்டேனே..." என்று அவள் உள்மனம் கதறியது.
ஒவ்வொரு முறை வெளியே கேட்கும் சிரிப்புச் சத்தமும் அவளுக்கு ஒரு முள்ளாய் தைத்தது. பெற்றோர் தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இந்த ஏற்பாடுகளைத் தட்டவும் முடியாமல், விக்ரமை மறக்கவும் முடியாமல் அவள் ஒரு நடைப்பிணமாக அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.
தோழிகள் அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்றபோது, அவள் கால்கள் தரையில் பாவாமல் தள்ளாடின. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. விக்ரமைத் தவிர வேறு எவரையும் மணமகனாகப் பார்க்கும் தைரியம் அவளுக்குக் கிடையாது.
மேடைக்குக் கீழே அவளது பெற்றோர் சுரேந்தரும் உமாவும் ஆனந்தக் கண்ணீருடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேடைக்கு அழைத்து வரப்பட்ட மிருதுளா, ஒரு இயந்திரத்தைப் போல மெதுவாக நடந்தாள். சுற்றிலும் இருந்த உறவினர்களின் வாழ்த்துச் சத்தமும், கேமராக்களின் மின்னொளியும் அவளுக்கு எரிச்சலூட்டின.
தன் வாழ்நாள் முழுவதையும் விக்ரமின் நினைவுகளோடு கழிக்கப் போகிறோம் என்று எண்ணியபோது, அவளது பட்டுப்புடவையின் பாரத்தை விட மனதின் பாரம் அதிகமாக இருந்தது.
மணமகன் ஏற்கனவே மேடையில் அமர்ந்து, பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை மிருதுளா கவனித்தாள். ஆனால், அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை.
அருகில் இருப்பவன் யார் என்று கூடப் பார்க்காமல், வெறும் தரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
புரோகிதர், "மணமகன் மற்றும் மணமகள் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம்" என்கவும் சுரேந்தர் தட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுத்தார்.
மாப்பிள்ளை மெதுவாக மிருதுளாவின் கையைப் பற்றினான். அந்தத் தொடுதல்... அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது.
அவள் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது. "யார் இது?" என்ற கேள்வியோடு மெல்லத் தன் இமைகளை உயர்த்தியவளோ அதிர்ந்து போக, அதே காதலோடு, அதே குறும்புச் சிரிப்போடு விக்ரம் அமர்ந்திருந்தான்.
மிருதுளாவால் எதையும் நம்ப முடியவில்லை. அவள் கண்கள் அகல விரிந்தன. மூச்சு சீரற்றுப் போனது.
"நீ... நீங்கள் எப்படி இங்கே?" என்று சத்தமில்லாமல் அவளது உதடுகள் மட்டும் அசைந்தன.
தம்பி நல்ல நேரம் போயிட்டு இருக்கு பொண்ணை அப்புறம் பார்க்கலாம் என்று ஐயர் சொல்லவும் மானத்தை வாங்காதடா என்று பக்கத்தில் இருந்த பரத் விக்ரமின் தோளைத் தட்டிச் சொல்ல, பின்னரே மிருதுளாவின் கையில் மோதிரத்தை போட்டு விட்டான்.
குட்டிமா என்று குமாரி நகைப்பெட்டியை நீட்ட அதிர்வில் இருந்தவளோ பொம்மை போல் வாங்கி விக்ரமின் விரல்களைப் பிடித்து நடுக்கத்தோடு போட்டு முடித்தாள்.
மிருதுளாவுக்கு தற்போது உலகமே ஸ்தம்பித்தது போல இருந்தது.
பெரியவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். "என்ன ரெண்டு பேரும் சிலையாட்டம் இருக்குறீங்க? உங்களுக்குத் தெரியாம நாங்களே பேசி முடிச்சிட்டோம். இது எங்க 'சர்ப்ரைஸ்'!" என்றனர்.
பின்னர் பெரியவர்கள் மேடைக்கு வந்து இருவரையும் ஆசீர்வதித்து செல்ல, போட்டோகிராபரும் இதை அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது. இரு வீட்டாருக்கும் இடையே தாம்பூலங்கள் மாற்றப்பட்டு, திருமண தேதி குறிக்கப்பட்டது. அந்த ஒரு வார காலத் தவிப்பு இப்போது ஒரு பெரும் நிம்மதியாக மாறியிருந்தது.
உறவினர்கள் அனைவரும் உணவருந்தச் சென்ற வேளையில்,
அவர்களைத் தனியாகப் பேசச் சொல்ல அனுப்பி வைத்தனர்.
மொட்டை மாடியில் தனியாக விக்ரம் நின்றிருந்தான்.
சிறிது நேரத்தில், மெல்லிய கொலுசுச் சத்தம் கேட்க, மிருதுளா அங்கே வந்தாள். வேகமாக திரும்பிப் பார்த்தான். நிலவின் ஒளியில், நிச்சயதார்த்தப் புடவையில் அவள் ஒரு தேவதை போலத் தெரிந்தாள்.
சிறிது நிமிடங்கள் இருவரிடமும் அமைதியே நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு மிருதுளாவின் விசும்பல் சத்தம் கேட்டது.
"அதைப் பார்த்தவன்... இப்போ எதுக்குடி அழற? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சுல்ல?" இல்லை என் கூட நிச்சயம் ஆன கவலையா என்றான்.
அதைக்கேட்டவளோ வேகமாக வந்து விக்ரமின் சட்டையைப் பிடித்து உலுக்கி அழத் தொடங்கினாள்...என்ன பேசுறிங்க மாமா?.
"இந்த ஒரு வாரம் நான் அனுபவிச்ச நரகத்தை என்னால மறக்கவே முடியல. உங்களை எனக்காகத்தான் பார்த்திருக்காங்கன்னு தெரியாதப்போ, நான் மனசுக்குள்ள உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்ல முடியாம எவ்ளோ துடிச்சேன் தெரியுமா?"
"ஒரு வாரமா நான் பட்ட நரகம்! உங்களை விட்டுட்டு வேற யாரோ ஒருத்தரோட வாழணுமேன்னு நினைச்சு ஒரு ஒரு நிமிஷமும் செத்துட்டு இருந்தேன்.
"நீங்க இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. உங்க மேல நான் வச்சிருக்கிற காதல் சாதாரணமானது இல்லைங்க மாமா. எப்போ வந்துச்சினு கேட்டால் எனக்கு தெரியாது? "
ஆனால் நான் உங்களை மட்டும் தான் மனதார நேசிக்கிறேன் என்று அவனது நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்.
ம்ம்...எல்லாம் வேண்டுதலை தான்...ஆமா உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?.
குட்டிமா நிச்சயத்துக்கு அவங்க எல்லாம் போக மாட்டாங்களா எல்லாருக்கும் தானே சொந்தக்காரர்கள் என்று பரத் கேட்க ஆமாம் டா. ஆனால் நடக்காது நிச்சயதார்த்தத்துக்கு எதுக்கடா இத்தனை பேர் வராங்க என்றான்.
அது நமக்கு மட்டும் தான் தெரியும் இவங்களுக்கு தெரியாதே ராசா என்று நண்பனின் வாயை அடைத்தவன் இவனைக் கொண்டு போய் சேர்க்கிறதுக்குள் எனக்கு பாதி உசுரு போய்டுமே என்று புலம்பி கொண்டிருந்தான்.
அவன் புலம்பலை பார்த்து சுந்தரமூர்த்தி தாத்தாவும் சத்தமாக சிரித்தார்
நீலாங்கரை:
சுரேந்தர் - உமா தம்பதியினரின் இல்லம் இன்று ஒரு தேவாலயம் போலக் காட்சியளித்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த பச்சை மாவிலைத் தோரணங்களும், காற்றில் மிதந்து வந்த நாதஸ்வர இசையும் அந்த இடத்தையே மங்கலமாக மாற்றியிருந்து.
தன் மகள் ஒரு மாவட்ட ஆட்சியராகப் பெருமை சேர்த்தது ஒருபுறம் என்றால், அவளுக்குப் பிடித்தமானவனையே (அவளுக்கே தெரியாமல்) மணமகனாகத் தேர்ந்தெடுத்த திருப்தி சுரேந்தரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்த சுரேந்தர், வாசலுக்கு வரும் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி வரவேற்றார். "வாங்க... வாங்க... எங்க வீட்டு மகளோட பெரிய விசேஷம், எல்லாரும் இருந்து ஆசிர்வதிக்கணும்" என்று நெகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
உமாவோ பட்டுப்புடவையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். விருந்தினர்களுக்குப் பன்னீர் தெளிப்பதும், அவர்களுக்குச் சந்தனம் கொடுப்பதும் என அவர் காட்டிய உற்சாகம், ஒரு தாயின் கனவு நனவாகும் தருணத்தைப் பிரதிபலித்தது.
ஒரு வழியாக மீஞ்சூர் ல இருந்து எல்லாரும் புறப்பட்டு சென்னையில் இருக்கும் மிருதுளாவின் வீட்டிற்கு வந்து சேர மாலை ஆனது. அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்ததை பார்க்கவே அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வர, பக்கத்தில் வந்த பரத்தின் கையை பிடித்து அழுத்தவும் டேய் இது கை..இரும்பு கிடையாது. உன் வீரத்தை அங்க போய் காட்டு என்று பல்லை கடித்தான்.
அப்பொழுது மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்கள் என்று குரல் கேட்கவும் எவன்டா அவன் பின்னாடியே வர்றது என்று விக்ரம் கோவமாக திரும்பிப் பார்க்க கையில் ஆர்த்தி தட்டோடு வந்த உமா விக்கி என்று கூப்பிடவும் அவர் சத்தத்தில் திரும்ப அவன் தலையில் மூன்று சுற்று சுற்றி பொட்டு வைத்தார்.
என்னடா நடக்குது இங்கே என்று அவன் அதிர வாங்க மாப்பிள்ளை என்று சுரேந்தர் அவனை பார்த்து கை கூப்ப...மாமா என்று விக்ரம் அதிர, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்.
என்னடா மாப்பிள்ளை உன் நிச்சயத்தை நீயே நிறுத்திக்கிறியா என்று பரத் கேட்க திரும்பி நண்பனை ஒருமுறை முறைத்தவன் ரூமுக்கு வாடா உனக்கு இருக்கு என்று பல்லை கடித்தான் .
போடா என்றவன் டைம் ஆயிடுச்சு 6:00 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது அதுக்குள்ள வரணும் போடா என்று அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ரூமுக்கு போனவன் என்ன மச்சி நிறுத்தனும்னு வந்து இப்படி 32 பல்லையும் காட்டிக்கொண்டு நிக்கிறியே...
அடப்பாவிகளா...
ஏன்டா எனக்கு தான் நிச்சயதார்த்தம் நான் தான் மாப்பிள்ளை என்று சொல்லவே இல்ல...என் மனசு என்ன பாடுபட்டுதுனு தெரியுமாடா என்று சொல்லவும், அது எங்களுக்கு எப்படி தெரியும்?...நீ சொன்னாதானே தெரியும் என்று நக்கலாக கேட்டுக் கொண்டே மித்ரன் அங்கு வர நீயுமாடா இதுல கூட்டணி என்றான்.
ஏன் டா... நாம அப்படியா பழகினோம்?.
உன் மனசில் குட்டிமா இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல தோணலை இல்லையா? என்று மித்ரன் கேட்க, பங்கு என்ன சென்டிமென்ட் நாடகமாக்கும்...
அவனை கிளம்ப சொல்லுடா... இல்லை ரெண்டு வீரப்பனும் கிளம்பி வந்து பக்கம் பக்கமா பேசுங்கள் டா... சத்தியமாக அதை தாங்க எனக்கு தெம்பு இல்லை ராசா என்னும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...
நான் சொல்லலை....கதை திற டி என்றவாறு பரத் ரெஸ்ட் ரூமிற்குள் ஓடிப்போக, மித்ரன் போய் கதவை திறக்க, உள்ளே வந்த இரண்டு தாத்தாக்கள் ஏன் டா அறிவு கெட்டவனுங்களா... நல்ல நேரம் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது.
என்னமோ புள்ளதாச்சி ஆடி அசைந்து கிளம்புற போல இன்னும் இந்த எருமை மாடு நிக்குது... பந்தலில் எல்லாரும் மாப்பிள்ளையை காணும் னு கேள்வியா கேட்டு கொல்லுறாங்க...
இங்க என்ன னா சாவகாசமா கதை பேசுறீங்களென்று வேலன்- சுந்தரமூர்த்தி இருவரும் சராசரியாக திட்டியவர்கள், எங்கே இன்னொரு வளர்ந்த மாடு?...
நேரத்தோடு வந்து சேருங்கள் டா... இவனுங்க எல்லாம் என்னத்தை குடும்பம் பண்ண போறானுங்களோ என்றவாறு இருவரும் அங்கிருந்து வெளியே போக, யாத்தேஏஏ என்றவாறு காதை குடைந்தபடி வந்த பரத் ஒய் பிளட் சேம் பிளட் என்க... நண்பர்கள் மூவரும் சத்தமாக சிரித்து விட்டானுங்கள்.
சாரி டா மச்சியென்று விக்ரம் தனது நண்பனுங்களை அணைக்க, மரியாதையா காலில் விழுந்து மனிப்பு கேளு அப்போது யோசிக்கிறோம் என்று மித்ரன் சொல்ல, எதேஏஏ...அடேய் உங்களுக்கு இருக்கும் ஒரே மச்சான் டா... என்னை மரியாதையாக நடத்தினால் தான் உங்கள் தங்கச்சியை நல்லா பார்த்துப்பேன் என்கவும், த்தூ ....
காதலை சொல்ல துப்பு இல்லை... இதுல பகுமானம் வேற... முதலில் நார்நாராக என் தங்கச்சிக்கிட்ட கிழி வாங்காமல் குடும்பம் நடத்தும் வழியைப் பாரு டா என்ற பரத் சூட்கேஸை திறந்து இருவருக்கும் டிரஸ் எடுத்து வைத்தான்.
ரொம்ப மானத்தை வாங்குறானுங்களே என்று புலம்பிக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் போன விக்ரம் வேகமாக ஒரு குளியலை போட்டு வந்தவன் அங்கிருந்த டிரஸை போட்டு பார்க்க இதுவரை இல்லாத தேஜஸ் இப்போது அவன் முகத்தில் வந்திருந்தது.
மச்சி எப்படி இருக்குடா என்க... செருப்பை கழட்டி நாலு அடி வேண்டும் என்றாலும் அடிச்சிக்க, இப்படி வெட்கப்படாத டா... சத்தியமா இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியலை என்று மித்ரன் தன் தலையில் அடித்துக்கொள்ள... மச்சி உன் பங்கு ரொம்ப சிலுத்துக்குறான்.
நீயாவது சொல்லு என்கவும்,
என் வாயிலிருந்து நல்லா வந்துரும் வேண்டாம் டா என்கவும்..
பொறாமை பிடித்த பயலுங்க என்றவாறு ஒருமுறை கண்ணாடியில் தன்னை பார்த்தவன் வாங்கடா என்று மணமேடையை நோக்கிப் போனான்.
வெளியே இவ்வளவு கொண்டாட்டங்கள் நடந்தாலும், மாடியில் இருக்கும் தன் அறையில் மிருதுளா ஒரு சிறைக்கைதியைப் போலவே உணர்ந்தாள். அவள் மனம் விக்ரமின் நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்தது.
தோழிகள் அவளுக்குப் பட்டுப்புடவை கட்டி, நகைகளை அணிவித்துக் கொண்டிருந்தனர். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தபோது, அவளுக்கு அது தன்னுடைய முகமாகவே தெரியவில்லை.
"என் காதலை அவனிடம் சொல்லத் துணிவில்லாத கோழை ஆகிவிட்டேனே..." என்று அவள் உள்மனம் கதறியது.
ஒவ்வொரு முறை வெளியே கேட்கும் சிரிப்புச் சத்தமும் அவளுக்கு ஒரு முள்ளாய் தைத்தது. பெற்றோர் தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இந்த ஏற்பாடுகளைத் தட்டவும் முடியாமல், விக்ரமை மறக்கவும் முடியாமல் அவள் ஒரு நடைப்பிணமாக அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.
தோழிகள் அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்றபோது, அவள் கால்கள் தரையில் பாவாமல் தள்ளாடின. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. விக்ரமைத் தவிர வேறு எவரையும் மணமகனாகப் பார்க்கும் தைரியம் அவளுக்குக் கிடையாது.
மேடைக்குக் கீழே அவளது பெற்றோர் சுரேந்தரும் உமாவும் ஆனந்தக் கண்ணீருடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேடைக்கு அழைத்து வரப்பட்ட மிருதுளா, ஒரு இயந்திரத்தைப் போல மெதுவாக நடந்தாள். சுற்றிலும் இருந்த உறவினர்களின் வாழ்த்துச் சத்தமும், கேமராக்களின் மின்னொளியும் அவளுக்கு எரிச்சலூட்டின.
தன் வாழ்நாள் முழுவதையும் விக்ரமின் நினைவுகளோடு கழிக்கப் போகிறோம் என்று எண்ணியபோது, அவளது பட்டுப்புடவையின் பாரத்தை விட மனதின் பாரம் அதிகமாக இருந்தது.
மணமகன் ஏற்கனவே மேடையில் அமர்ந்து, பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை மிருதுளா கவனித்தாள். ஆனால், அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை.
அருகில் இருப்பவன் யார் என்று கூடப் பார்க்காமல், வெறும் தரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
புரோகிதர், "மணமகன் மற்றும் மணமகள் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம்" என்கவும் சுரேந்தர் தட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுத்தார்.
மாப்பிள்ளை மெதுவாக மிருதுளாவின் கையைப் பற்றினான். அந்தத் தொடுதல்... அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது.
அவள் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது. "யார் இது?" என்ற கேள்வியோடு மெல்லத் தன் இமைகளை உயர்த்தியவளோ அதிர்ந்து போக, அதே காதலோடு, அதே குறும்புச் சிரிப்போடு விக்ரம் அமர்ந்திருந்தான்.
மிருதுளாவால் எதையும் நம்ப முடியவில்லை. அவள் கண்கள் அகல விரிந்தன. மூச்சு சீரற்றுப் போனது.
"நீ... நீங்கள் எப்படி இங்கே?" என்று சத்தமில்லாமல் அவளது உதடுகள் மட்டும் அசைந்தன.
தம்பி நல்ல நேரம் போயிட்டு இருக்கு பொண்ணை அப்புறம் பார்க்கலாம் என்று ஐயர் சொல்லவும் மானத்தை வாங்காதடா என்று பக்கத்தில் இருந்த பரத் விக்ரமின் தோளைத் தட்டிச் சொல்ல, பின்னரே மிருதுளாவின் கையில் மோதிரத்தை போட்டு விட்டான்.
குட்டிமா என்று குமாரி நகைப்பெட்டியை நீட்ட அதிர்வில் இருந்தவளோ பொம்மை போல் வாங்கி விக்ரமின் விரல்களைப் பிடித்து நடுக்கத்தோடு போட்டு முடித்தாள்.
மிருதுளாவுக்கு தற்போது உலகமே ஸ்தம்பித்தது போல இருந்தது.
பெரியவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். "என்ன ரெண்டு பேரும் சிலையாட்டம் இருக்குறீங்க? உங்களுக்குத் தெரியாம நாங்களே பேசி முடிச்சிட்டோம். இது எங்க 'சர்ப்ரைஸ்'!" என்றனர்.
பின்னர் பெரியவர்கள் மேடைக்கு வந்து இருவரையும் ஆசீர்வதித்து செல்ல, போட்டோகிராபரும் இதை அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது. இரு வீட்டாருக்கும் இடையே தாம்பூலங்கள் மாற்றப்பட்டு, திருமண தேதி குறிக்கப்பட்டது. அந்த ஒரு வார காலத் தவிப்பு இப்போது ஒரு பெரும் நிம்மதியாக மாறியிருந்தது.
உறவினர்கள் அனைவரும் உணவருந்தச் சென்ற வேளையில்,
அவர்களைத் தனியாகப் பேசச் சொல்ல அனுப்பி வைத்தனர்.
மொட்டை மாடியில் தனியாக விக்ரம் நின்றிருந்தான்.
சிறிது நேரத்தில், மெல்லிய கொலுசுச் சத்தம் கேட்க, மிருதுளா அங்கே வந்தாள். வேகமாக திரும்பிப் பார்த்தான். நிலவின் ஒளியில், நிச்சயதார்த்தப் புடவையில் அவள் ஒரு தேவதை போலத் தெரிந்தாள்.
சிறிது நிமிடங்கள் இருவரிடமும் அமைதியே நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு மிருதுளாவின் விசும்பல் சத்தம் கேட்டது.
"அதைப் பார்த்தவன்... இப்போ எதுக்குடி அழற? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சுல்ல?" இல்லை என் கூட நிச்சயம் ஆன கவலையா என்றான்.
அதைக்கேட்டவளோ வேகமாக வந்து விக்ரமின் சட்டையைப் பிடித்து உலுக்கி அழத் தொடங்கினாள்...என்ன பேசுறிங்க மாமா?.
"இந்த ஒரு வாரம் நான் அனுபவிச்ச நரகத்தை என்னால மறக்கவே முடியல. உங்களை எனக்காகத்தான் பார்த்திருக்காங்கன்னு தெரியாதப்போ, நான் மனசுக்குள்ள உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்ல முடியாம எவ்ளோ துடிச்சேன் தெரியுமா?"
"ஒரு வாரமா நான் பட்ட நரகம்! உங்களை விட்டுட்டு வேற யாரோ ஒருத்தரோட வாழணுமேன்னு நினைச்சு ஒரு ஒரு நிமிஷமும் செத்துட்டு இருந்தேன்.
"நீங்க இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. உங்க மேல நான் வச்சிருக்கிற காதல் சாதாரணமானது இல்லைங்க மாமா. எப்போ வந்துச்சினு கேட்டால் எனக்கு தெரியாது? "
ஆனால் நான் உங்களை மட்டும் தான் மனதார நேசிக்கிறேன் என்று அவனது நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்.