• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
14
பேய் நண்பன்

அன்று மாலை 6:00 மணி. சூரியன் மறைந்து நிலா வரும் நேரம். ஆனால் நிலாவைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தவரையில், ‘அன்று நிலா வராது’ என்று சொன்னார்கள். காரணம் அன்று அமாவாசையாம். அதுவும் சனி அமாவாசை என்று கூறினார்கள் அதோடு நில்லாமல் இன்னொரு விஷயமும் சொன்னார்கள்.

‘அந்தி சாயும் நேரம் அம்மாவாசை திதி ஆரம்பிக்குது. அதனால, அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாதடா’ என்று.

அதைக் கேட்ட நொடியிலிருந்தே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பய உணர்வு ஒட்டிக் கொண்டது. அந்த உணர்வை இன்னது என்று வரையறுக்க முடியவில்லை. இருதய பிரதேசம் திக் திக் என்று அடித்துக் கொள்வதைப் போல ஒரு உணர்வு. அந்த நேரம் அலைபேசி அழைப்பு மணி சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அங்கு எனது அலைபேசி தான் துடித்துக் கொண்டிருந்தது. அழைப்பை ஏற்றேன். அதைக் காதில் திணித்தேன்.

"ஹலோ!"

"எய்யா" மறுமுனையில் அம்மாவின் குரல்,

"என்னம்மா?"

"எங்கய்யா இருக்க?"

"வீட்ல தான்ம்மா. பிள்ளையார் கோவில்கிட்ட உட்கார்ந்து இருக்கேன்."

"அங்க என்ன செய்யுத?"

"ஒன்னும் இல்லம்மா. சும்மாதான் இருக்கேன். என்னம்மா சொல்லு?"

"நாங்க ஊருக்கு வர லேட் ஆகும் போலயா. நீ நம்ம கிணத்துக்கு போய், மாட்டுக்குத் தண்ணி வச்சி, பாலைக் கறந்துட்டு வந்துரு" என்று அம்மா சொல்ல எனக்குப் பக்கென்று இருந்தது. பேச்சு வரவில்லை நெஞ்சுக்கூடு முழுக்க பயம் சிம்மாசனம் இட்டது. பய உணர்வைக் கடந்து பேச வந்த நேரம் அழைப்பு தூண்டிக்கபட்டது.

அருகில் வந்த யாரோ எதையோ அம்மாவிடம் கேட்க, "சரிய்யா நீ போய் வேலைய பாரு" என்று சொல்லிவிட்டு, எனது மறுமொழி கேட்காமலே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

மணி 7 நெருங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்திற்கு செல்லும் தெற்கு திசையை நோக்க இருட்டு கருகும்மென்று இருந்தது. இரவு 8:45 மணிக்குப் பால் வண்டி வரும். அதற்குள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துப் பால் கறக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் அந்த நேரத்திருக்குள் வேலையை முடிக்க முடியாது. உடனே கிளம்பியாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழ, அந்தக் குரல் காதில் கேட்டது.

‘இன்னைக்கு சனி அம்மாவாசை. அங்குட்டு இங்குட்டு எங்கையும் போகாத.’

அதை நினைத்துப் பயந்தால் வேலை நடக்காது. மாடு பாவம் தண்ணீர் குடிக்காமல் கணைத்து கொண்டு கிடக்குமே என்ற எண்ணம் தோன்ற, வேகமாக வீட்டை நோக்கி நடந்தேன். சைக்கிளை எடுக்க அது பஞ்சர் ஆகி நின்றது. நேரம் கடந்து கொண்டிருந்தது. சினிமாவில் கேட்பது போலக் கடிகார முள் நகரும் சத்தம் கூட டக் டக் என்று காதில் கேட்டது.

கண்களை மூடினேன். குல தெய்வத்தை வணங்கிக் கிணத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தெருவைக் கடந்தேன். தெருவைக் கடந்து சில அடிகள் தூரம், தனியாக இருக்கும் பெரியப்பா வீட்டை அடைந்து நின்றேன். அது தான் கடைசி வெளிச்சம் அதற்கு மேல் முற்றிலும் இருட்டு. அலைபேசியை கையில் எடுத்தேன். அதன் விளக்கை மிளிர விட, அதனால் முடிந்த அளவுக்கு இருட்டை விரட்ட முயற்சி செய்து, முடியாது தோற்று என் காலுக்குள் மட்டும் விழுந்தது.

அந்த வெளிச்சம் கொடுத்த தைரியத்தில் நடக்க, இருட்டும், அதன் நிசப்தமும் நிறைந்து இருக்க, எனது காலடி ஓசை எனக்கே எதிரொலிக்கத் திக் திக் இதயம் மீண்டும் பக் பக் என்று அடிக்க ஆரம்பித்தது.

கால்கள் அடி எடுத்து வைக்க மறுத்தது. மீண்டும் ஒரு முறை கண்களை மூடி மனதை திடப்படுத்தி கொண்டு, ஓட ஆரம்பித்தேன். எனக்குத் தெரியும் இந்த ரோடு நேரானது 400 லிருந்து 500 மீட்டர் தூரம் கடந்துதான் ஒரு திருப்பம் வரும். அதனால், கண்களை மூடி விட்டு ஓடி விட்டால் பயம் தெரியாது. தூரம் கடப்பதும் தெரியாது என்ற குருட்டு தைரியத்தில், கண்களை மூடிக்கொண்டு குருடனை போல இருளை பற்றிய கவலை இல்லாமல், பின்னங்கால் இடையில் இடிக்க ஓடினேன்.

பத்துப் பனிரெண்டு எட்டுக்கள் ஓடி விட்டு, இத்தனை தூரம் நாம் கடந்து விட்டோம் என்று மனதில் எண்ணிக்கொண்டே, இன்னும் எத்தனை எட்டுக்கள் ஓட வேண்டும் என்பதையும் கணக்கிட்டுக் கொண்டே ஓடினேன். அந்தக் கணக்கீடுக்கு இடையில் புகுந்து கொண்டு பயம் காட்டியது இருட்டு. அந்தப் பயம் எனது வேகத்தைக் கொஞ்சம் குறைக்க கால் வேகம் குறைந்த நேரத்தில், எதன் மீதோ மிதிக்க நெலுக்கென்ற உணர்வைக் கொடுத்தது. கூடவே ‘புஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சீற்ற சத்தமும் எழ, என் சப்த நாடியும் அடங்கியதை போல் உணர்ந்தேன்.

நிச்சயம் நான் மித்தது ஒரு சர்ப்பத்தை தான். அதை உணர்ந்த நேரம் சனி அம்மாவாசை, இருள், இரண்டையும் மறந்து குதித்தேன். அலறினேன். பின் ஓடினேன். கண்கள் திறந்தேன். சுற்றிலும் இருட்டு. கண்களை மூடிக் கொண்டு ஓடியதால், கண்ணும் இன்னும் இருளுக்கு பழகவில்லை. விளைவு கண் திறந்தும் குருடனாக நின்றேன்.

‘எங்கிருக்கிறேன்? எந்தப் பக்கம் ஓடினேன்?’ எதையும் நான் அறியவில்லை. கால் ஓடிய திக்கில் ஓடி வந்துவிட்டேன்.
திசை தெரியவில்லை. அருகில் என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. சுற்றிலும் காடு காடு மட்டுமே. முழுக்க அம்மாவாசை இருட்டு. அதை நினைக்க மீண்டும் அந்தக் குரல் காதில். ‘அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாத.’

மீண்டும் ஒரு பயப் பேய் எனக்குள் வந்து திம்மென்று அமர்ந்து கொண்டது. சுற்றிலும் இருள். இருளைத் தவிர வேறு ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. கண்கள் நீரை சுரக்க ஆரம்பித்தது, நாக்கு வறண்டு போனதால் கத்த வாயைத் திறந்த போதும் வாய் வரவில்லை. நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. பயம் இன்னும் அதிகமாக என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன். அலைபேசியை எடுத்து வெளிச்சத்தை வர வைக்க நினைத்துத் தேடியபோது, அது காணாமல் போயிருந்தது. நான் ஓடிய வேகத்தில் அது எங்கேயோ விழுந்துவிட்டது.

கண்கள் கண்ணீரைத் தாரைத் தாரையாய்ச் சிதற இயற்கை மேலும் கோரம் காட்டியது. மனம் அம்மாவை நினைத்தது. இல்லை இல்லை திட்டியது. ‘இப்படி ஒரு சூழலில் சிக்க வைத்துவிட்டாளே என் தாய்’ என்று மனம் குமுறியது. அம்மாவாசை ஆபத்து என்று அவளும் அறிவாள் தானே. அறிந்தும் நம்மை எச்சரிக்கை செய்யாமல் விட்டு விட்டாளே மனம் குமிறியது.

அதுவரைக்கும் கணமாக இருந்து பயம் காட்டி கொண்டிருந்த இருளுக்கு, மேலும் ஒரு துணையாகக் காற்றை அனுப்பி வைத்தது போலும். மெதுவாக என்னைத் தழுவிய காற்று இப்போது, மேலும் வேகம் கொண்டு சுழல ஆரம்பித்தது.

சுழல் காற்று சூறாவளியாய் மாறிச் சூழ, அந்தச் சுழலில் சிக்கி கொண்டேன். சுழலுக்கு நடுவில் நின்று கண்களை மூடத் தலை சுற்ற ஆரம்பித்து, மூச்சும் முட்ட ஆரம்பித்தது. சூறைக் காற்று தரையிலிருந்து வான் நோக்கி உயரத் தொடங்கியது. கண்கள் மூடிய எனக்கு இப்போது, அந்தச் சூறை காற்றில் இருந்த ஒரு உருவம் நன்றாக கண்ணுக்குத் தெரிந்தது.

வான் அளவுக்கு உயர்ந்த கருப்பு உருவம். அதன் சடை முடி தலையிலிருந்து கால்வரைக்கும் தொங்கிக் கொண்டிருந்தது.
கோரப் பல், மிரட்டும் இரண்டு பெரிய விழிகள், அடர்ந்த புருவம், கிடா மீசை, கொண்ட அந்த உருவம், தனது வாயை அகல விரித்து என்னை விழுங்க வந்தது. அதன் வாயில் இருந்து உஷ்ண காற்று வர, அந்த வெப்பம் என் உடலை உருக வைப்பதை போல் உணர்ந்த நேரம், வெப்பம் என்னை எரிக்கும் நேரம், தன்னிலை மறந்து அப்படியே மயங்கிச் சரிந்தேன்.

சரியும் அந்நேரம், எனது மூச்சு காற்று மெதுவாக அடங்குவது போல உணர்ந்த நிமிடம் எங்கிருந்தோ வந்தது என் உயரத்தை ஒத்த இன்னொரு உருவம். சட்டெனப் பாய்ந்து என்னை அள்ளிக் கொண்டு, அந்தச் சுழலை விட்டு வெளிய வந்து விழுந்தது.

அந்த உருவத்தின் கைப்பிடி, தற்போது வரை இருந்த வெப்பத்தை நீக்கி, எனது உடலில் ஒரு குளிர்ச்சியை பரவச் செய்தது. அடுத்த சில நொடிகளில் எனது மூச்சு காற்று சீரானது. அதுவரைக்கும் இருந்த பய உணர்வு மெதுவாகக் கரைய ஆரம்பித்தது. குரல் கேட்டது.

"ஏலே... ஏலேய்!" என்ற குரல் இரண்டு மூன்று முறை ஒலித்தது. ஆனால், அது தூரத்தில் ஒலித்தது போல் கேட்க, மெதுவாக மூடிய கண்களைத் திறந்தேன்.

"இங்க எதுக்குல வந்த?” அந்தக் குரல் அவசரமாய் கேட்டது.

நான் ஏதோ பதில் சொல்ல வர, "சரி சரி. அதெல்லாம் பொறவு பேசுவோம். இப்போ எந்திரில. இங்க இருந்து கிளம்பு." அவசரபடுத்தி என்னை அழைத்து வந்தது.

அந்த அவசரத்தில் அதன் குரலில் ஒரு பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதே நேரம் எப்படியாவது இந்த இடத்திலிருந்து என்னைக் கடத்தி வெளியே அனுப்பி விடும் அவசரமும் தெரிந்தது. அதிகம் பேச விடாமல், அந்த உருவமும் பேசாமல், என்னை வெளிய இழுத்து வந்தது. இழுத்து வந்த சில நிமிடத்தில் என் வீடு இருக்கும் தெரு முனை அருகில் வந்து நிறுத்தியது.

அப்போது “ம்ம்ம்ம்ம்ம்...” என்ற பயங்கர சத்ததோடு ஒரு உருமு உருமி தனது கோர உருவத்தை முழுமையாகக் காட்டி, அந்தக் கரிய உருவம்மேல் எழும்பியது.

“சீக்கிரம் போல” என்று என்னை அவசரப்படுத்தித் தள்ளிய அந்த உருவம், இப்போது எனக்குக் காட்சிக்குக் கிடைத்தது. இப்போது என் கண்கள் விரிந்தது. அது பயத்திலா, இல்லை ஆச்சர்யத்திலா என்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

காரணம்,
என்னைக் காத்து அழைத்து வந்த அந்த உருவம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முனி அடித்து இறந்து போயிருந்த எனது நண்பனின் உருவம். அதை உணர்ந்து அவனைப் பற்றிக்கொள்ள என் கைகளை நீட்டியபோது, அவனது உருவம் காற்றில் கரைந்தது.
 
Joined
Mar 17, 2025
Messages
30
அன்று மாலை 6:00 மணி....

சூரியன் மறைந்து நிலா வரும் நேரம் ஆனால் நிலாவை காணவில்லை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த வரையில் அன்று நிலா வராது என்று சொன்னார்கள், காரணம் அன்று அம்மாவாசையாம்... அதுவும் சனி அம்மாவாசை என்று கூறினார்கள் அதோடு நில்லாமல் இனொரு விஷயமும் சொன்னார்கள்,

" அந்தி சாயும் நேரம் அம்மாவாசை திதி ஆரம்பிக்குது அதனால அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாத டா " ன்னு,

அதை கேட்ட நொடியிலிருந்தே உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பய உணர்வு ஒட்டி கொண்டது... அந்த உணர்வை இன்னது என்று வரையறுக்க முடியவில்லை, இருதய பிரதேசம் திக் திக் என்று அடித்து கொள்வதை போல ஒரு உணர்வு, அந்த நேரம் அலைபேசி அழைப்பு மணி சத்தம் கேட்க திடுக்கிட்டு திரும்பினேன், அங்கு எனது அலைபேசி தான் துடித்து கொண்டிருந்தது,

அழைப்பை ஏற்றேன், அதை காதில் திணித்தேன்....

" ஹலோ "

" எய்யா " மறுமுனையில் அம்மாவின் குரல்,

" என்ன ம்மா "

" எங்க ய்யா இருக்க? "

" வீட்ல தான் மா, பிள்ளையார் கோவில் கிட்ட உட்கார்ந்து இருக்கேன் "

" அங்க என்ன செய்யுத "

" ஒன்னும் இல்ல மா சும்மா தான் இருக்கேன். என்ன மா சொல்லு "

" நாங்க ஊருக்கு வர லேட் ஆகும் போல யா நீ நம்ம கிணத்துக்கு போய் மாட்டுக்கு தண்ணி வச்சி பாலை கறந்துட்டு வந்துரு... " என்று அம்மா சொல்ல எனக்கு பக்கென்று இருந்தது... பேச்சு வரவில்லை நெஞ்சுக்கூடு முழுக்க பயம் சிம்மாசனம் இட்டது, பய உணர்வை கடந்து பேச வந்த நேரம் அழைப்பு தூண்டிக்கபட்டது. அருகில் வந்த யாரோ எதையோ அம்மாவிடம் கேட்க,

" சரி யா நீ போய் வேலைய பாரு " என்று சொல்லிவிட்டு எனது மறுமொழி கேட்காமலே அழைப்பை துண்டித்து விட்டாள்.

மணி 7:00 யை நெருங்கி கொண்டிருந்தது.... தோட்டத்திற்கு செல்லும் தெற்கு திசையை நோக்க இருட்டு கருகும்மென்று இருந்தது.... இரவு 8:45 மணிக்கு பால் வண்டி வரும் அதற்குள் மாட்டுக்கு தண்ணீர் வைத்து பால் கறக்க வேண்டும், காலம் தாழ்த்தினால் அந்த நேரத்திருக்குள் வேலையை முடிக்க முடியாது உடனே கிளம்பியாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழ, அந்த குரல் காதில் கேட்டது....

" இன்னைக்கு சனி அம்மாவாசை அங்குட்டு இங்குட்டு எங்கையும் போகாத... "

அதை நினைத்து பயந்தால் வேலை நடக்காது மாடு பாவம் தண்ணீர் குடிக்காமல் கணைத்து கொண்டு கிடக்குமே என்ற எண்ணம் தோன்ற வேகமாக வீட்டை நோக்கி நடந்தேன், சைக்கிள்ளை எடுக்க அது பஞ்சர் ஆகி நின்றது.... நேரம் கடந்து கொண்டிருந்தது, சினிமாவில் கேட்பது போல கடிகார முள் நகரும் சத்தம் டக் டக் என்று காதில் கேட்டது.

கண்களை மூடினேன் குல தெய்வத்தை வணங்கி கிணத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்... தெருவை கடந்தேன், தெருவை கடந்து சில அடிகள் தூரம் தனியாக இருக்கும் பெரியப்பா வீட்டை அடைந்தேன், நின்றேன், அது தான் கடைசி வெளிச்சம் அதற்கு மேல் முற்றிலும் இருட்டு.
அலைபேசியை கையில் எடுத்தேன் அதன் விளக்கை மிளிர விட அதனால் முடிந்த அளவுக்கு இருட்டை விரட்ட முயற்சி செய்யுது முடியாது தோற்று என் காலுக்குள் மட்டும் விழுந்தது.. அந்த வெளிச்சம் கொடுத்த தைரியத்தில் நடக்க,

இருட்டும் அதன் நிசப்தமும் நிறைந்து இருக்க எனது கால் அடி ஓசை எனக்கே எதிரொலிக்க திக் திக் இதயம் மீண்டும் பக் பக் என்று அடிக்க ஆரம்பிக்க,

கால்கள் அடி எடுத்து வைக்க மறுத்தது, மீண்டும் ஒரு முறை கண்களை மூடி மனதை திட படுத்தி கொண்டு ஓட ஆரம்பித்தேன், எனக்கு தெரியும் இந்த ரோடு நேரானது 400 லிருந்து 500 மீட்டர் தூரம் கடந்து தான் ஒரு திருப்பம் வரும் அதனால கண்களை மூடி விட்டு ஓடி விட்டால் பயம் தெரியாது.
தூரம் கடப்பதும் தெரியாது என்ற குருட்டு தைரியத்தில் கண்களை மூடி கொண்டு குருடனை போல இருளை பற்றிய கவலை இல்லாமல் பின்னங்கால் இடையில் இடிக்க ஓடினேன்....

பத்து, பன்னிரண்டு எட்டுக்கள் ஓடி விட்டு இத்தனை தூரம் நாம் கடந்து விட்டோம் என்று மனதில் எண்ணிக்கொண்டே இன்னும் எத்தனை எட்டுக்கள் ஓட வேண்டும் என்பதையும் கணக்கிட்டு கொண்டே ஓடினேன், அந்த கணக்கீடுக்கு இடையில் புகுந்து கொண்டு பயம் காட்டியது இருட்டு.... அந்த பயம் எனது வேகத்தை கொஞ்சம் குறைக்க கால் வேகம் குறைந்த நேரத்தில் எதன் மீதோ மிதிக்க நெலுக்கென்ற உணர்வை கொடுத்தது, கூடவே புஸ்ஸ்ஸ்ஸ்.... என்று சீற்ற சத்தமும் எழ,
என் சப்த நாடியும் அடங்கியதை போல் உணர்ந்தேன்.

நிச்சயம் நான் மித்தது ஒரு சர்ப்பத்தை தான்.

அதை உணர்ந்த நேரம் சனி அம்மாவாசை , இருள் இரண்டையும் மறந்து,

குதித்தேன்,
அலறினேன்,
பின் ஓடினேன்,
கண்கள் திறந்தேன்......,
சுற்றிலும் இருட்டு, கண்களை மூடி கொண்டு ஓடியதால், கண்ணும் இன்னும் இருளுக்கு பழகவில்லை விளைவு கண் திறந்தும் குருடனாக நின்றேன்...
எங்கிருக்கிறேன்,

எந்த பக்கம் ஓடினேன் எதையும் நான் அறியவில்லை, கால் ஓடிய திக்கில் ஓடி வந்து விட்டேன்.
திசை தெரியவில்லை, அருகில் என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை, சுற்றிலும் காடு காடு முழுக்க அம்மாவாசை இருட்டு அதை நினைக்க மீண்டும் அந்த குரல் காதில்,

" அங்குட்டு இங்குட்டுன்னு எங்கையும் போகாத "

மீண்டும் ஒரு பய பேய் எனக்குள் வந்து திம்மென்று அமர்ந்து கொண்டது.... சுற்றிலும் இருள், இருளை தவிர வேறு ஒன்று இருப்பதாக தோன்றவில்லை, கண்கள் நீரை சுரக்க ஆரம்பித்தது, நாக்கு வறண்டு போனதால் கத்த வாயை திறந்த போதும் வாய் வரவில்லை, நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டது, பயம் இன்னும் அதிகமாக என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன், அலைபேசியை எடுத்து வெளிச்சத்தை வர வைக்க நினைத்து தேடிய போது அது காணாமல் போயிருந்தது, நான் ஓடிய வேகத்தில் அது எங்கேயோ விழுந்து விட்டது.


கண்கள் கண்ணீரை தாரை தாரையாய் சிதற இயற்கை மேலும் கோரம் காட்டியது...
மனம் அம்மாவை நினைத்தது இல்லை இல்லை திட்டியது. இப்படி ஒரு சூழலில் சிக்க வைத்து விட்டாளே, மனம் குமிறியது, அம்மாவாசை ஆபத்து என்று அவளும் அறிவாள் தானே, அறிந்தும் நம்மை எச்சரிக்கை செய்யாமல் விட்டு விட்டாளே மனம் குமிறியது...

அதுவரைக்கும் கணமாக இருந்து பயம் காட்டி கொண்டிருந்த இருளுக்கு மேலும் ஒரு துணையாக காற்றை அனுப்பி வைத்தது போலும் , மெதுவாக என்னை தழுவிய காற்று இப்போது மேலும் வேகம் கொண்டு சுழல ஆரம்பித்தது....

சூழல் காற்று சூறாவளியாய் மாறி சூழ அந்த சுழலில் சிக்கி கொண்டேன்.... சுழலுக்கு நடுவில் நின்று கண்களை மூட தலை சுற்ற ஆரம்பித்தது, மூச்சும் முட்ட ஆரம்பித்தது, சூறை காற்று தரையிலிருந்து வான் நோக்கி உயர தொடங்கியது, கண்கள் மூடிய எனக்கு இப்போது அந்த சூறை காற்றில் இருந்த ஒரு உருவம் நன்றாக கண்ணுக்கு தெரிந்தது....

வான் அளவுக்கு உயர்ந்த கருப்பு உருவம், சடை முடி, அது தலையிலிருந்து கால் வரைக்கும் தொங்கி கொண்டிருந்தது...
கோர பல், மிரட்டும் இரண்டு பெரிய விழிகள், அடர்ந்த புருவம், கிடா மீசை, கொண்ட அந்த உருவம் தனது வாயை அகல விரித்து என்னை விழுங்க வர, அதன் வாயிலிருந்து உஷ்ண காற்று வர அந்த வெப்பம் என் உடலை உருக வைப்பதை போல் உணர்ந்த நேரம் வெப்பம் என்னை எரிக்கும் நேரம் தன்னிலை மறந்து அப்படியே மயங்கி சரிந்தேன்....


சரியும் அந்நேரம் எனது மூச்சு காற்று மெதுவாக அடங்குவது போல உணர்ந்த நேரம் எங்கிருந்தோ வந்தது என் உயரத்தை ஒத்த இனொரு உருவம்...

சட்டென பாய்ந்து என்னை அள்ளி கொண்டு அந்த சுழலை விட்டு வெளிய வந்து விழுந்தது....

அந்த உருவத்தின் கை பிடி தற்போது வரை இருந்த வெப்பத்தை நீக்கி எனது உடலில் ஒரு குளிர்ச்சியை பரவ செய்தது.... அடுத்த சில நொடிகளில் எனது மூச்சு காற்று சீரானது, அதுவரைக்கும் இருந்த பய உணர்வு மெதுவாக கரைய ஆரம்பித்தது... குரல் கேட்டது,

" ஏலே "

" ஏலேய்.... "

குரல் இரண்டு மூன்று முறை ஒலித்தது ஆனால் அது தூரத்தில் ஒலித்தது போல் கேட்க, மெதுவாக மூடிய கண்களை திறந்தேன்....

" இங்க எதுக்குல வந்த " அந்த குரல் அவசரமாய் கேட்டது....

நான் ஏதோ பதில் சொல்ல வர,

" சரி சரி அதெல்லாம் பொறவு பேசுவோம் இப்போ எந்திரி ல இங்க இருந்து கிளம்பு " அவசரபடுத்தி என்னை அழைத்து வந்தது....

அந்த அவசரத்தில் அதன் குரலில் ஒரு பயம் அப்பட்டமாக தெரிந்தது, அதே நேரம் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து என்னை கடத்தி வெளியே அனுப்பி விடும் அவசரமும் தெரிந்தது...

அதிகம் பேச விடாமல் அந்த உருவமும் பேசாமல் என்னை வெளிய இழுத்து வந்தது.....
இழுத்து வந்த சில நிமிடத்தில் என் வீடு இருக்கும் தெரு முனை அருகில் வந்து நிறுத்தியது.

அப்போது ம்ம்ம்ம்ம்ம் என்ற பயங்கர சத்ததோடு ஒரு உருமு உருமி தனது கோர உருவத்தை முழுமையாக காட்டி அந்த கரிய உருவம் மேல் எழும்பியது....

சீக்கிரம் போ ல என்று என்னை அவசர படுத்தி தள்ளிய அந்த உருவம் இப்போது எனக்கு காட்சிக்கு கிடைத்தது...

இப்போது என் கண்கள் விரிந்தது.....
அது பயத்திலா இல்லை ஆச்சர்யத்திலா என்பது எனக்கு சொல்ல தெரியவில்லை....

காரணம்,
என்னை காத்து அழைத்து வந்த அந்த உருவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முனி அடித்து இறந்து போயிருந்த எனது நண்பனின் உருவம்......

அதை உணர்ந்து அவனை பற்றிக் கொள்ள என் கைகளை நீட்டிய போது அவனது உருவம் காற்றில் கரைந்தது......




மாரி மதி,

கயத்தாறு.
நல்ல நண்பன் தான்.

சூப்பர் சூப்பர்
 
Joined
Nov 16, 2024
Messages
14
காற்றில் கரைந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்து நான் அப்படியே முழிக்க, பலமான சத்ததோடு இடி ஒன்று இடித்து அடங்க, அப்படியே நான் மயங்கிச் சரிந்தேன்.

மீண்டும் விழித்து எழுந்து பார்க்கையில் எனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தேன். உடல் அனலை கக்கிக் கொண்டிருந்தது. பத்து பேர் அடித்தது போன்ற உணர்வு. தூக்கத்தில் ஏதோ முனங்குவது போல எனது குரல் கேட்டது.

அம்மா வந்தாள். நெற்றியை தொட்டாள். "எய்யா கொஞ்சம் அன்னபால் கஞ்சி குடிக்கியா?" என்று சூடாக வடித்தக் கஞ்சியை அம்மா கொடுத்தாள். கஞ்சியைப் பார்க்காதவன் பார்த்தது போலப் பாய்ந்து குடிப்பதை போல், ஒரு எண்ணம் தோன்ற குடித்தேன்.
குடித்த கணம் குபுக்கு என்று வயிற்றின் உள்ளே சென்ற கஞ்சி குடலையும் சேர்த்து வெளிய இழுத்து வந்தது போல் இருந்தது. கக்கி விட்டேன். அம்மா சுத்தம் செய்து படுக்க வைத்தாள். அரை மயக்கத்தில் இதெல்லாம் நடப்பது என் கண் முன்னால் விரிந்தது.

அப்பா இப்போது தான் வீட்டின் உள்ளே வருகிறார். "எப்படி இருக்கான்?"

"இன்னும் அப்படியே தான் இருக்கான். கொஞ்சம் கஞ்சி கொடுத்தேன். குடிச்சது எல்லாம் வெளிய தள்ளிட்டான். என் புள்ள கொடக்குன்னு கிடக்கான்.” அம்மா மூக்கை உறிஞ்சி அழுதாள். அறிந்தேன். ஆனால், பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

"சரி அழாத. நாளைக்கு ஒரு நாள் செவ்வாய்க்கிழமை நம்ம கோவில்ல கூப்டு போய்த் திருநீறு போடுவோம்."

"அவன் தான் என் பிள்ளைகிட்ட அண்டிருக்கான்." அம்மா ஏதோ சொன்னாள்.

"யாரு?"

"அதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி முனி அடிச்சு செத்து போனானே. அந்தச் சின்னராசு மவன் சிவா."

‘சிவாவா?’ அவன்தானே என்னைக் காத்தவன். நான் யோசிக்கும் போதே அம்மா சொன்னாள்.

"அவன்தான் என் புள்ள மேல அண்டி, அவனையும் கொல்ல பாக்குறான்" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மூக்கை சிந்தி, "அவன் தான் செத்து போய்ட்டான். என் புள்ளையவாவது நல்லா இருக்க விடலாம்ல. இப்படி என் புள்ளைய ஆட்டிப் படைக்கானே. அவனுக்கு மோட்சம் கிடைக்குமா?" அவளின் வேதனை சாபமாக வந்தது.

என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், அந்த நினைவுகள் மீண்டும் எனது மன கண்ணில் ஓடியது. அந்த உருவத்திடமிருந்து என்னைக் காக்க அவன் துடித்த துடிப்பு. அவன் என்னை இழுத்துக் கொண்டு வரும்போது இருந்த தவிப்பு, காட்சியாகக் கண் முன்னால் விரிந்தது.

நேரம் மெதுவாகக் கரைந்து இருக்க இப்போது நள்ளிரவு பன்னிரண்டு மணியை அடைந்து இருந்தது. பெரும் நிசப்தம் வெளியில் காற்று அடிக்கும் ஓசை கூடக் கேட்கவில்லை. சிறிது நேரம் தூங்கியிருந்த எனக்கு, இப்போது தூக்கம் கலைந்து போனது. உடல் உஷ்ணம் குறைந்து, வியர்வைத் துளிகள் வெளியேற ஆரம்பித்தது.

சில நிமிடங்களில் அது இன்னும் அதிகமானது. பேன் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும், என்னால் வெக்கையைச் சமாளிக்க முடியவில்லை. எழுந்து அமர்ந்தேன். ஏதோ ஒரு உள்ளுணர்வு, என்னை வீட்டைவிட்டு வெளிய செல்லும் படி உந்தி கொண்டிருக்க, சிவாவின் குரல் காற்றில் அலையாடி காதில் விழுந்தது.

"ஏலே வெளிய வா. நா வீட்டுக்கு வெளியதான் நிக்கேன்."

‘அது அவன் குரல்தான். ஆனால், அவன் ஏன் வெளியே அழைக்கிறான்?’ என்னிடத்தில் சிந்தனை வலுத்தது. ஆனால், சிவாவின் குரல் என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தது. மெதுவாகச் சுயம் மறந்தேன். எழுந்தேன். கட்டிலில் அமர்ந்தேன். கால்கள் தரையை உரசியது. இப்போது கால்கள் தரையில் நிற்க, மெதுவாகக் கால்கள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

உள்ளுணர்வு வேண்டாம் என்று தடுக்க, கால்கள் அதைக் கேட்கவில்லை. அதன் போக்கில் நடந்தது. அது யாருக்கோ கட்டுப்பட்டு இருந்த உணர்வு எழுந்தாலும் தடுக்க முடியவில்லை.

சிவாவின் குரல், "வா வா சீக்கிரம் வா” என அவசர படுத்தியது.

கதவைத் திறந்தேன். வீட்டு வாசலைக் கடந்தேன். தெருவில் இறங்கினேன். அருகில் கிடந்த அந்தக் கருப்பு நாய் என்னைப் பார்த்துப் பயங்கரமாகக் குரைத்தது. உள்ளுக்குள் பீதி பெருக்கெடுத்து, குருதி உறைவது போலத் தோன்ற, காலும் நடுங்கியது. நாய் இன்னும் வெறி கொண்டு கதறியது.

சில நிமிட இந்த நிகழ்வின் முடிவில், என் கண்கள் தீர்க்கமாக அந்த நாயைப் பார்க்க அது மிரண்டது. அந்த மிரட்சி எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது என்னைப் பார்த்து மிரளவில்லை. அதன் கண்கள் வான் நோக்கி இருந்தது. அதை உணர்ந்தபோது தான் தெரிந்தது, அந்தக் கரிய வான் நோக்கிய உருவம் எனது பின்னால் நின்றது. அதற்கு முன்னால் எனது நண்பன் சிவா, கண்ணீரைச் சிந்தி நின்றான்.

அதை உணர்ந்த நேரம் கண்கள் சுழன்றது. ஆனால், ஒன்றும் செய்ய இயலவில்லை. இருந்த இடத்தை விட்டு ஓடவும் முடியவில்லை. அந்தக் கரிய பெரிய உருவத்தின் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என்பதை நன்றாக உணர்ந்தேன்.

நண்பன் கதறினான். அழுதான். உபயோகம் இல்லை. அந்த உருவத்தின் முகத்தில் மாற்றம் இல்லை. கோரம் கூடியது. அவனைப் பார்த்து அது ஏதோ கட்டளை இட, அவன் ‘முடியாது’ என்று இடம் வலமாகத் தலையை ஆட்டினான். அந்தக் கோர உருவம் ஏதோ ஒரு புரியாத பாஷை பேச, நண்பனின் கண்கள் பயத்தில் விரிந்தது. என் நண்பன் என்னை அழைத்துக் கொண்டு நடக்கிறான்.

தெருவைக் கடந்து இருளில் என் கால்கள், மெதுவாக என் உடலும் அதனுள் புகுந்து கொள்ள, என் அனுமதி இல்லாமலே நடந்தேன்.
சில தூரம் கடந்தேன்.

மீண்டும் அந்தச் சுழல் உருவாகிய இடம். இப்போது எனது இரத்தம் உரைவது போல ஒரு உணர்வு. இதைத் தடுக்க வேண்டும். எப்படியாவது இங்கிருந்து ஓடி விட வேண்டும்.
மனம் முழுக்க பதக்... பதக்... எண்ணம் முழுக்க திக்... திக்... திக்...

மூளை வேகமாகச் செயல்படத் தொடங்க, உடல் அதற்கு நேர்மாறாக இருந்தது. உடல் முழுவதும் எனது கட்டுப்பாட்டை இழந்து இருந்தது. அந்த உருவம் எனது உடலை இயக்குவது நன்றாகத் தெரிந்தது. எனக்கு ஏதோ ஆகப் போகிறது என்பது நன்றாகப் புரிந்தது, எனது இச்சை இல்லாமல் எனது உடல் நடக்க ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு. காற்று அற்ற நிலை. மயான அமைதி. அந்த அமைதியில் கால்கள் சருகை மிதிக்கும் சத்தம் கூட நன்றாகக் கேட்டது.

பயம்... பயம். இப்படியொரு சூழலில் எனது உடல் சலனம் இல்லாமல் நடக்கிறது என்பதே, எனக்குப் பெருத்த ஆச்சர்யம். இதை நான் யோசிக்கும் போதே, அங்கிருந்த மொட்டைக் கிணற்றின் அருகில் வந்து நின்றேன். அதனுள் நொடி நேரம் தாமதம் செய்யாமல் குதித்தேன். ஏதோ ஒரு பாறையின் மீது விழுந்து தலை உடைந்து ரத்தம் வெளியேறியது. உடலை விட்டு என் உயிர் முழுமையாகப் பிரிந்தது.

அதுவரைக்கும் வேறு விதமாக இருந்த என் நண்பனின் முகம், இப்போது கோரமான சிரிப்பைச் சிந்தி, என் ரத்தம் வழிந்த உடலை வெறித்துப் பார்த்து நின்றான். கொலை கொண்ட சிரிப்போடு.

உலகம் எப்படியும் மாறும். இன்று நம்மைக் காத்தவர், நாளை நம்மை அழிக்க முனையலாம். எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை.

இப்போது நானும் ஆத்மாவாக நிற்கிறேன். யாரையோ காத்து. யாரையோ அழிக்க.



முற்றும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சார் 💐 💐 💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top