Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 116
- Thread Author
- #1
தீமையே
வெ(கொ)ல்லும்
படலம் - 4
கதிர் அதீத கோவத்தில் நின்று இருந்தவனை நோக்கி துண்டுடன் வந்த ரம்யா அவன் முகத்தில் உள்ள வியர்வையை துடைத்தாள்.
கதிர் கோவப்படுவான் என்று அவன் நண்பர்களுக்கு தெரியும்.
ஆனால் இவன் இந்த அளவுக்கு வெறி பிடித்தவனை போல நடந்து கொண்டவனை பார்த்து அனைவரும் குழம்பிபோக,'என்னாச்சு Dude ?' என்று கேட்டாள் ரம்யா.
கதிர், ரம்யா, உதயா மூவரும் தான் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்த நண்பர்கள்.
ரம்யாவும் உதயாவும் அந்த ஊரின் X MLA சம்பத்தின் பிள்ளைகள்.
ரம்யாவிற்கு கதிர் மீது அளவுகடந்த வெறி.
எப்படியாவது கதிரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தவம் இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.
ஆனால் இத்தனை பிரியம் அவன் மீது வைத்து இருந்தும்,அவள் ஆசையை அவனிடம் சொல்லாததற்கு காரணம் பெண்கள் மீது அவன் வைத்து இருக்கும் சில கண்ணோட்டம் தான்.
'என்னாச்சு கதிர்' என்று ரம்யா கேட்க,
'அவளை நான் பழி வாங்கியே திறனும். டேய்...உடனே நீங்க அவளோட அட்ரஸ். அவளோட அம்மா அப்பா.. கூட பிறந்தவுங்கன்னு எல்லா detialsஸும் விசாரித்து சொல்லுறிங்க ' என்ற கதிர் காலையில் செட்டியார் வீட்டில் நடந்த சம்பவங்களை அதீத கோபத்துடன் சொல்லி இருந்தான்.
'என்ன... உன் மேல ஒரு பொண்ணு கை வச்சாளா... அதுவும் நம்ம ஊருக்கு வந்தா!!?' என்ற ரம்யா உடனே தன் தந்தைக்கு போன் செய்து பார்க்க... இவள் அழைப்புக்கு அவர் பதில் தரவில்லை.
'என்னாச்சு ரம்யா... அப்பா போன் எடுக்கலையா?' என்று உதயா கேட்க,'அவர் எடுக்கலைனா என்ன... நம்ம அந்த பொண்ணை சும்மா விட கூடாது' என்றாள் ரம்யா.
'எனக்கு அவளை நினைக்கல கொலை வெறி ஏறுது... யாரு இடத்துக்கு வந்து யாரு சீன் போடுறது' என்று மீண்டும் கதிர் கோவத்தில் கொந்தளிக்க, அவனை சமாதானம் படுத்தும் விதமாக கதிரை கட்டி கட்டி பிடித்துக்கொண்டாள் ரம்யா.
'மச்சான்... நீ கவலைப்படாத. எண்ணி 24மணி நேரத்துல அவளோட மொத்த ஜாதகத்தையும் உன் கையில க்கொண்டு வந்து கொடுக்குறேன்' என்ற உதயா அந்த இடத்தில் இருந்து வெளியேற.'You don't worry பேபி' என்று அவனை நெஞ்சோடு கட்டிக்கொண்டாள் ரம்யா.










இதே தருணம் முருகன் வீட்டில் இருந்து CR காரில் முல்லை மாறன் வேலன் என்று மூவரும் புதிய பங்களாவிற்கு கிளம்பி இருக்க... முல்லையின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்துக்கொண்டு இருந்தது.
' ஆமா இப்போ நம்ம எங்க போறோம்' என்று சிறுவன் கந்தன் கேட்க,'பங்களாவுக்கு' என்றாள் ஈஷா.
'நீங்க மலேசியால தானே இருக்குறதா அப்பா சொன்னாரு. உங்களுக்கு இங்க பங்களா எல்லாம் இருக்கா' என்ற சிறுவன் சித்ராவை பார்க்க... அவளோ அவனை கண்டுகொள்ளாமல் மடி கணினியில் கவனத்தை செலுத்தி இருந்தாள்.
'அண்ணா... நம்ம ஏன் இவங்க கூட போகணும். எனக்கு இவங்கள பார்த்தாலே பிடிக்கல' என்ற முல்லை சித்ராவை பார்த்து முறைக்க.'நான் தான் உனக்கு அண்ணன் இல்ல தம்பின்னு சொன்னியே. இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்ற' என்று கேட்டான்.
'நேரம் பார்த்து காலை வராத. அம்மா அப்பாவை வேற இவங்க எங்க அனுப்ப போறாங்கன்னு தெரியல' என்று வழியெல்லாம் முல்லை முணங்கிக்கொண்டு இருக்க, கந்தனோ சித்ராவை கண் இமைக்காமல் பார்த்து இருந்தான்.
'டேய் நீ என்னடா... நான் இங்க ஒருத்தி லூசு போல புலம்பிகிட்டு இருக்கேன். என் பேச்சை கேக்காம முன்னாடி இருக்குற ஆளை எட்டி பார்த்துகிட்டு வர' என்று கோவமாக கேட்டாள் முல்லை.
'அக்கா... அவங்கள பார்த்தியா எவ்ளோ வேகமா type பன்றாங்க. சூப்பர் இல்ல க்கா' என்று சித்ராவை பற்றி கந்தன் முல்லையிடம் பெருமையாக பேச,'ஆமா... பெரிய வேகம்... யாரும் பண்ண முடியாததை இவங்க பண்ற மாதிரி இவன் வேற ரொம்ப பேசுறான்' என்று மேலும் புலம்பினாள் முல்லை.
பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூவரும் பேசுவதை காதில் வாங்கிய சித்ரா அவர்களை கண்டுகொள்ளாதப்படி தன் மடி கணினி மீது கவனத்தை செலுத்தி இருக்க,
'மேடம்... ஐயர் யாராவது பார்க்கட்டுமா' என்று கேட்டாள் ஈஷா.
சித்ரா வாங்கிய புதிய பங்களாற்க்கு பூஜை செய்ய தான் ஈஷா கேட்கிறாள் என்று அறிந்து இருந்த சித்ரா,'அதெல்லாம் வேணா' என்ற ஒற்றை வார்த்தையில் அவள் கேள்விக்கு முற்று புள்ளி வைத்தாள்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஈஷா இயக்கிய கார் பெரிய பங்களாவிற்க்கு வெளியே நின்றதும், வாசலில் நின்று இருந்த வாட்ச் மேன் பெரிய இரும்பு கேட்டை திறந்து விட, கார் உள்ளே சென்றது.
காரில் இருந்து சித்ரா முதல் ஆளாக இறங்கியதும்,'வணக்கம் மேடம்' என்று salute அடித்தவனை பார்த்து,
'Mr. செல்வம். இன்னும் கொஞ்ச நேரத்துல சில things எல்லாம் இங்க வந்து இறங்கும். அதெல்லாம் சரிப்பார்த்து உள்ள எடுத்துட்டு வந்து வைக்க சொல்லுங்க' என்றாள் சித்ரா.
'மேடம்...நீங்க தான் இந்த பங்களாவை புதுசா வாங்கி இருக்கீங்களா' என்று அந்த நபர் கேட்க,'ஏன் உங்களுக்கு அதுல எதாவது பிரச்சனையா'என்று சித்ரா கேட்க, அதே சமயம் மாறன் கந்தன் முல்லை என்று மூவரும் காரில் இருந்து இறங்கினார்கள்.
சித்ரா பார்க்க பணக்கார மிடுக்கிலும். முல்லை மாறன் கந்தன் என்று அவர்கள் மூவரும் நடுத்தர குடும்பத்தினரை போலவும் காட்சி அளிக்க,
அவர்களை பார்த்த வண்ணமாக,'இல்ல மேடம்... நீங்க இந்த பங்களாவை வாங்கி இருந்தா, சமையல் வேலை மத்த வேலைக்கு எல்லாம் நானே ஆள் ஏற்பாடு பண்ணலாமான்னு கேட்க நினைத்தேன்' என்றார் வாட்ச் மேன்.
'ம்... எல்லா வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணுங்க. ஆனா Cook மட்டும் வேண்டாம்' என்ற சித்ரா,'ஈஷா' என்று தன் PAவை அழைக்க,
'நீங்க மூணு பேரும் உள்ள போங்க' என்று சித்ராவின் எண்ணத்தை அறிந்தவளாக சொன்னாள் ஈஷா.
'ஐயோ.... இவ்ளோ பெரிய வீட்டுலையா நம்ம தங்கப்போறோம்' என்ற கந்தன் முதல் ஆளாக வீட்டுக்குள் ஓடி போக,
சித்ரா யாருக்காகவும் காத்து இருக்கலாம் கையில் கைபேசியுடன் நேரே பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.
'அண்ணா...எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல' என்று மீண்டும் முல்லை மாறனிடம் புலம்பினாள்
'உனக்கு எங்காவது அறிவு இருக்கா பாப்பா... அப்பாவுக்கு லட்ச கணக்குல பணம் செலவு பண்ணி தான் வைத்தியம் பார்க்கணும்னு டாக்டர் சொன்னாரு. ஆனா எந்த சாமி புண்ணியமோ இந்த மேடம் நம்ம அப்பா வைத்தியதுக்கு பொறுப்பு ஏத்து இருக்காங்க. அதனால ஒழுங்கா நம்ம இங்கேயே இருந்து அப்பாவுக்கு குணமானதும் நம்ம வீட்டுக்கு போகலாம்' என்ற மாறன் கந்தனை தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
யார் என்ன சொன்னாலும் முல்லைக்கு சித்ராவுடன் இருக்க பிடிக்காமல் போக, வேறு வழி இல்லாமல் அவளும் பங்களவினுள் நுழைந்தாள்.
ஈஷா அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையை திறந்து பார்த்தவள்.
'இங்க மொத்தமா 8ரூம் இருக்கு. யாருக்கு எந்த ரூம் வேணுமோ ஸ்டே பண்ணிக்கோங்க' என்றாள்.
'என்ன ஆளுக்கு ஒரு ரூமா' என்ற கந்தன் நேரே ஒரு அறைக்குள் நுழைய,
'இந்த பங்களா உங்க மேடமொடாதா.. ஆனா இந்த இடத்தோட சொந்தக்காரங்க யாரோ ஒரு அரசியல்வாதின்னு கேள்விப்பட்ட மாதிரி இருக்கே' என்று மாறன் கேட்க, அதே சமயம் அங்கே சித்ரா வந்தாள்.
'ம்...சரி தான்...இன்னைக்கு காலையில வரைக்கும் இந்த பங்களா ஒரு அரசியல்வாதியோடது தான். ஆனா இந்த நொடியில் இருந்து இது VCRக்கு சொந்தமானது' என்றவள் வேகமாக மாடியில் உள்ள அறைக்கு சென்று இருந்தாள்.
சித்ராவை முல்லை கோவத்துடன் பார்த்தப்படியே நின்று இருக்க...
'உங்களுக்கும் எந்த ரூம் பிடிச்சி இருக்கோ... நீங்க அங்கேயே ஸ்டே பண்ணிக்கொங்க'என்று ஈஷா சொல்ல... விருப்பமே இல்லாமல் முல்லை ஒரு அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தி இருந்தாள்.
முல்லையின் இந்த செயல் ஈஷாவை முகம் சுழிக்க வைக்க,
'ஆமா... நீங்களும் மலேசியா தானா' என்று ஈஷாவிடம் கேட்டான் மாறன்.
'ஆமா...' என்றவள் மேற்கொண்டு ஏதும் பேசாமல் சித்ராவை தேடி மாடிக்கு செல்ல... மாறனோ கந்தன் சென்ற அறைக்குள் நுழைந்தான்.
'அண்ணா.. நீங்க ஏன் இங்க வந்திங்க. எனக்கு தனி ரூம் வேணும்' என்று கந்தன் சொல்ல...'அதெல்லாம் தேவையில்ல.நீ என் கூடவே இரு' என்ற மாறன் தன் கைபேசி மூலம் பார்வதியை அழைத்து இங்கே வந்து சேர்ந்ததை தெரியப்படுத்தினான்.
இதே சமயம் சித்ராவின் அறைக்கதவை தட்டிக்கொண்டு ஈஷா உள்ளே நுழைய,சித்ரா அந்த அறையில் இருக்கும் பால்கனியில் நின்று வானத்தையே வெரித்து பார்த்து இருந்தாள்
படலம் - 4
கதிர் அதீத கோவத்தில் நின்று இருந்தவனை நோக்கி துண்டுடன் வந்த ரம்யா அவன் முகத்தில் உள்ள வியர்வையை துடைத்தாள்.
கதிர் கோவப்படுவான் என்று அவன் நண்பர்களுக்கு தெரியும்.
ஆனால் இவன் இந்த அளவுக்கு வெறி பிடித்தவனை போல நடந்து கொண்டவனை பார்த்து அனைவரும் குழம்பிபோக,'என்னாச்சு Dude ?' என்று கேட்டாள் ரம்யா.
கதிர், ரம்யா, உதயா மூவரும் தான் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்த நண்பர்கள்.
ரம்யாவும் உதயாவும் அந்த ஊரின் X MLA சம்பத்தின் பிள்ளைகள்.
ரம்யாவிற்கு கதிர் மீது அளவுகடந்த வெறி.
எப்படியாவது கதிரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தவம் இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.
ஆனால் இத்தனை பிரியம் அவன் மீது வைத்து இருந்தும்,அவள் ஆசையை அவனிடம் சொல்லாததற்கு காரணம் பெண்கள் மீது அவன் வைத்து இருக்கும் சில கண்ணோட்டம் தான்.
'என்னாச்சு கதிர்' என்று ரம்யா கேட்க,
'அவளை நான் பழி வாங்கியே திறனும். டேய்...உடனே நீங்க அவளோட அட்ரஸ். அவளோட அம்மா அப்பா.. கூட பிறந்தவுங்கன்னு எல்லா detialsஸும் விசாரித்து சொல்லுறிங்க ' என்ற கதிர் காலையில் செட்டியார் வீட்டில் நடந்த சம்பவங்களை அதீத கோபத்துடன் சொல்லி இருந்தான்.
'என்ன... உன் மேல ஒரு பொண்ணு கை வச்சாளா... அதுவும் நம்ம ஊருக்கு வந்தா!!?' என்ற ரம்யா உடனே தன் தந்தைக்கு போன் செய்து பார்க்க... இவள் அழைப்புக்கு அவர் பதில் தரவில்லை.
'என்னாச்சு ரம்யா... அப்பா போன் எடுக்கலையா?' என்று உதயா கேட்க,'அவர் எடுக்கலைனா என்ன... நம்ம அந்த பொண்ணை சும்மா விட கூடாது' என்றாள் ரம்யா.
'எனக்கு அவளை நினைக்கல கொலை வெறி ஏறுது... யாரு இடத்துக்கு வந்து யாரு சீன் போடுறது' என்று மீண்டும் கதிர் கோவத்தில் கொந்தளிக்க, அவனை சமாதானம் படுத்தும் விதமாக கதிரை கட்டி கட்டி பிடித்துக்கொண்டாள் ரம்யா.
'மச்சான்... நீ கவலைப்படாத. எண்ணி 24மணி நேரத்துல அவளோட மொத்த ஜாதகத்தையும் உன் கையில க்கொண்டு வந்து கொடுக்குறேன்' என்ற உதயா அந்த இடத்தில் இருந்து வெளியேற.'You don't worry பேபி' என்று அவனை நெஞ்சோடு கட்டிக்கொண்டாள் ரம்யா.
இதே தருணம் முருகன் வீட்டில் இருந்து CR காரில் முல்லை மாறன் வேலன் என்று மூவரும் புதிய பங்களாவிற்கு கிளம்பி இருக்க... முல்லையின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்துக்கொண்டு இருந்தது.
' ஆமா இப்போ நம்ம எங்க போறோம்' என்று சிறுவன் கந்தன் கேட்க,'பங்களாவுக்கு' என்றாள் ஈஷா.
'நீங்க மலேசியால தானே இருக்குறதா அப்பா சொன்னாரு. உங்களுக்கு இங்க பங்களா எல்லாம் இருக்கா' என்ற சிறுவன் சித்ராவை பார்க்க... அவளோ அவனை கண்டுகொள்ளாமல் மடி கணினியில் கவனத்தை செலுத்தி இருந்தாள்.
'அண்ணா... நம்ம ஏன் இவங்க கூட போகணும். எனக்கு இவங்கள பார்த்தாலே பிடிக்கல' என்ற முல்லை சித்ராவை பார்த்து முறைக்க.'நான் தான் உனக்கு அண்ணன் இல்ல தம்பின்னு சொன்னியே. இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்ற' என்று கேட்டான்.
'நேரம் பார்த்து காலை வராத. அம்மா அப்பாவை வேற இவங்க எங்க அனுப்ப போறாங்கன்னு தெரியல' என்று வழியெல்லாம் முல்லை முணங்கிக்கொண்டு இருக்க, கந்தனோ சித்ராவை கண் இமைக்காமல் பார்த்து இருந்தான்.
'டேய் நீ என்னடா... நான் இங்க ஒருத்தி லூசு போல புலம்பிகிட்டு இருக்கேன். என் பேச்சை கேக்காம முன்னாடி இருக்குற ஆளை எட்டி பார்த்துகிட்டு வர' என்று கோவமாக கேட்டாள் முல்லை.
'அக்கா... அவங்கள பார்த்தியா எவ்ளோ வேகமா type பன்றாங்க. சூப்பர் இல்ல க்கா' என்று சித்ராவை பற்றி கந்தன் முல்லையிடம் பெருமையாக பேச,'ஆமா... பெரிய வேகம்... யாரும் பண்ண முடியாததை இவங்க பண்ற மாதிரி இவன் வேற ரொம்ப பேசுறான்' என்று மேலும் புலம்பினாள் முல்லை.
பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூவரும் பேசுவதை காதில் வாங்கிய சித்ரா அவர்களை கண்டுகொள்ளாதப்படி தன் மடி கணினி மீது கவனத்தை செலுத்தி இருக்க,
'மேடம்... ஐயர் யாராவது பார்க்கட்டுமா' என்று கேட்டாள் ஈஷா.
சித்ரா வாங்கிய புதிய பங்களாற்க்கு பூஜை செய்ய தான் ஈஷா கேட்கிறாள் என்று அறிந்து இருந்த சித்ரா,'அதெல்லாம் வேணா' என்ற ஒற்றை வார்த்தையில் அவள் கேள்விக்கு முற்று புள்ளி வைத்தாள்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஈஷா இயக்கிய கார் பெரிய பங்களாவிற்க்கு வெளியே நின்றதும், வாசலில் நின்று இருந்த வாட்ச் மேன் பெரிய இரும்பு கேட்டை திறந்து விட, கார் உள்ளே சென்றது.
காரில் இருந்து சித்ரா முதல் ஆளாக இறங்கியதும்,'வணக்கம் மேடம்' என்று salute அடித்தவனை பார்த்து,
'Mr. செல்வம். இன்னும் கொஞ்ச நேரத்துல சில things எல்லாம் இங்க வந்து இறங்கும். அதெல்லாம் சரிப்பார்த்து உள்ள எடுத்துட்டு வந்து வைக்க சொல்லுங்க' என்றாள் சித்ரா.
'மேடம்...நீங்க தான் இந்த பங்களாவை புதுசா வாங்கி இருக்கீங்களா' என்று அந்த நபர் கேட்க,'ஏன் உங்களுக்கு அதுல எதாவது பிரச்சனையா'என்று சித்ரா கேட்க, அதே சமயம் மாறன் கந்தன் முல்லை என்று மூவரும் காரில் இருந்து இறங்கினார்கள்.
சித்ரா பார்க்க பணக்கார மிடுக்கிலும். முல்லை மாறன் கந்தன் என்று அவர்கள் மூவரும் நடுத்தர குடும்பத்தினரை போலவும் காட்சி அளிக்க,
அவர்களை பார்த்த வண்ணமாக,'இல்ல மேடம்... நீங்க இந்த பங்களாவை வாங்கி இருந்தா, சமையல் வேலை மத்த வேலைக்கு எல்லாம் நானே ஆள் ஏற்பாடு பண்ணலாமான்னு கேட்க நினைத்தேன்' என்றார் வாட்ச் மேன்.
'ம்... எல்லா வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணுங்க. ஆனா Cook மட்டும் வேண்டாம்' என்ற சித்ரா,'ஈஷா' என்று தன் PAவை அழைக்க,
'நீங்க மூணு பேரும் உள்ள போங்க' என்று சித்ராவின் எண்ணத்தை அறிந்தவளாக சொன்னாள் ஈஷா.
'ஐயோ.... இவ்ளோ பெரிய வீட்டுலையா நம்ம தங்கப்போறோம்' என்ற கந்தன் முதல் ஆளாக வீட்டுக்குள் ஓடி போக,
சித்ரா யாருக்காகவும் காத்து இருக்கலாம் கையில் கைபேசியுடன் நேரே பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.
'அண்ணா...எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல' என்று மீண்டும் முல்லை மாறனிடம் புலம்பினாள்
'உனக்கு எங்காவது அறிவு இருக்கா பாப்பா... அப்பாவுக்கு லட்ச கணக்குல பணம் செலவு பண்ணி தான் வைத்தியம் பார்க்கணும்னு டாக்டர் சொன்னாரு. ஆனா எந்த சாமி புண்ணியமோ இந்த மேடம் நம்ம அப்பா வைத்தியதுக்கு பொறுப்பு ஏத்து இருக்காங்க. அதனால ஒழுங்கா நம்ம இங்கேயே இருந்து அப்பாவுக்கு குணமானதும் நம்ம வீட்டுக்கு போகலாம்' என்ற மாறன் கந்தனை தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
யார் என்ன சொன்னாலும் முல்லைக்கு சித்ராவுடன் இருக்க பிடிக்காமல் போக, வேறு வழி இல்லாமல் அவளும் பங்களவினுள் நுழைந்தாள்.
ஈஷா அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையை திறந்து பார்த்தவள்.
'இங்க மொத்தமா 8ரூம் இருக்கு. யாருக்கு எந்த ரூம் வேணுமோ ஸ்டே பண்ணிக்கோங்க' என்றாள்.
'என்ன ஆளுக்கு ஒரு ரூமா' என்ற கந்தன் நேரே ஒரு அறைக்குள் நுழைய,
'இந்த பங்களா உங்க மேடமொடாதா.. ஆனா இந்த இடத்தோட சொந்தக்காரங்க யாரோ ஒரு அரசியல்வாதின்னு கேள்விப்பட்ட மாதிரி இருக்கே' என்று மாறன் கேட்க, அதே சமயம் அங்கே சித்ரா வந்தாள்.
'ம்...சரி தான்...இன்னைக்கு காலையில வரைக்கும் இந்த பங்களா ஒரு அரசியல்வாதியோடது தான். ஆனா இந்த நொடியில் இருந்து இது VCRக்கு சொந்தமானது' என்றவள் வேகமாக மாடியில் உள்ள அறைக்கு சென்று இருந்தாள்.
சித்ராவை முல்லை கோவத்துடன் பார்த்தப்படியே நின்று இருக்க...
'உங்களுக்கும் எந்த ரூம் பிடிச்சி இருக்கோ... நீங்க அங்கேயே ஸ்டே பண்ணிக்கொங்க'என்று ஈஷா சொல்ல... விருப்பமே இல்லாமல் முல்லை ஒரு அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தி இருந்தாள்.
முல்லையின் இந்த செயல் ஈஷாவை முகம் சுழிக்க வைக்க,
'ஆமா... நீங்களும் மலேசியா தானா' என்று ஈஷாவிடம் கேட்டான் மாறன்.
'ஆமா...' என்றவள் மேற்கொண்டு ஏதும் பேசாமல் சித்ராவை தேடி மாடிக்கு செல்ல... மாறனோ கந்தன் சென்ற அறைக்குள் நுழைந்தான்.
'அண்ணா.. நீங்க ஏன் இங்க வந்திங்க. எனக்கு தனி ரூம் வேணும்' என்று கந்தன் சொல்ல...'அதெல்லாம் தேவையில்ல.நீ என் கூடவே இரு' என்ற மாறன் தன் கைபேசி மூலம் பார்வதியை அழைத்து இங்கே வந்து சேர்ந்ததை தெரியப்படுத்தினான்.
இதே சமயம் சித்ராவின் அறைக்கதவை தட்டிக்கொண்டு ஈஷா உள்ளே நுழைய,சித்ரா அந்த அறையில் இருக்கும் பால்கனியில் நின்று வானத்தையே வெரித்து பார்த்து இருந்தாள்