• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
134
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

✨படலம் - 10

கதிரின் நிலைமை வெங்கட்டை விடவே பாவமாக இருந்தது.

ஆம்!! இருக்க தானே செய்யும். வெங்கட்டுக்காவது நினைவு தெரிந்ததில் இருந்தே மீனா மீது அவனுக்கு காதல் இருக்கிறது.

அவன் பல முறை மறைமுகமாக மீனாவிடம் அவன் காதலை தெரிப்படுத்தியும் இருக்கின்றான்.

ஆனால் கதிருக்கு அப்படி இல்லை.
முல்லையை அவன் சந்தித்த நிகழ்வை மட்டுமே இத்தனை நாள் மனதில் எண்ணி பார்த்து மகிழ்ந்தவனுக்கு அவளின் புகைப்படம் ஒன்று தான் துணையாக இருந்தது.

முல்லை மீது கதிருக்கு இருப்பது காதலா இல்லை ஈர்ப்பா என்று அவன் அறியும் முன்னே கதிரின் குடும்பம் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு எடுத்து இருந்தார்கள்.

'என்ன கதிர்... எதாவது சொல்லனுமா' என்று சாரங்கம் கேட்க...'பெரியப்பா நான்...' என்று கதிர் ஏதோ சொல்ல வரும் முன்னே,'இந்த இடம் மட்டும் முடிந்தால் வெங்கட்டும் நீயும் கோடிஸ்வரன் வீட்டு மாப்பிளை' என்றான் பரந்தாமன்.

'சித்தப்பா...ஆனா நான் மீனாவை' என்று தன் மனதில் உள்ளதை வெங்கட் பேசும் முன்னே,'அதெல்லாம் சரி வராது வெங்கட்' என்றார் சரங்கம்.

தன் அப்பாவுக்கு தன் காதலை பற்றி தெரிந்து இருக்கிறது என்றதும் வெங்கட்டுக்கு மேலும் கவலையாக இருந்தது.

'மீனா என் தங்கச்சி பொண்ணு தான். உனக்கு அத்த மகள் தான். ஆனா மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ கோடிஸ்வரன் ஆக முடியாது' என்று சரங்கம் சொல்ல,'எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் அப்பா.. மனசுக்கு பிடிச்ச பொண்ணு கூட வாழ்ந்தா போதும்' என்றான் வெங்கட்.

கதிருக்கு நினைவு தெரிந்ததில் இருந்து வெங்கட் யாரையும் எதிர்த்து பேசாதவன், இந்த முறை தன் தந்தையிடம் அவன் காதலை சொன்னதை நினைத்து கதிருக்கு ஆச்சிரியமாக இருந்தது.

'அப்பா...நான் மீனாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு கல்யாணமே ஆகலைனா கூட பரவாயில்ல. ஆனா என்னால மீனாவை மறக்க முடியாது' என்ற வெங்கட் வேகமாக மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று இருந்தான்.

வெங்கட்டா இப்படி பேசியது என்று கதிர் ஆச்சிரியத்துடன் பார்த்து இருக்க..
'என்ன அண்ணா.. வெங்கட் என்ன சொல்லிட்டு போறான்' என்று கேட்டார் பரந்தாமன்.

வெங்கட் சென்ற பாதையை கோபத்துடன் பார்த்த சரங்கம்,'டேய் கதிர்...உனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட பணக்கார சம்மந்தம் வந்துகிட்டே இருக்கு. உங்க ரெண்டு பேரால தான் இந்த குடும்பத்துக்கு இன்னும் பல கோடிகள் வர போகுது,

'அதனால அந்த பைத்தியக்காரன் கிட்ட சொல்லி இந்த காதல் கடப்பாறையை எல்லாம் தூக்கி வீச சொல்லு... அத விட்டுட்டு மறுபடியும் என்கிட்ட காதல் மோதலுன்னு பேசிகிட்டு இருந்தா அவனை ஒன்னும் பண்ண மாட்டேன்,

அவன் யாரை காதலிக்கிறேன்னு சொல்லறானோ அவங்கள காலி பண்ணிடுவேன்' என்ற சாரங்கத்தின் வார்த்தையை கேட்டு கதிரின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனது.

வெங்கட்டை கண்டித்தால் கதிரின் முகத்தில் ஏன் திகில் தெரிய வேண்டும் என்று எண்ணிய பரந்தாமன்,'என்னடா அப்படி பாக்குற. அவனுக்கு மட்டும் இல்ல.. உனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன். வர திங்கள் கிழமை உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு பார்க்க போறோம்' என்றார் பரந்தாமன்.

தன் அப்பாவின் பேச்சில் மனமுடைந்த கதிர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று இருக்க...
'என்ன தம்பி... கதிர் ஏன் ஒரு மாதிரி இருக்கான்' என்று கேட்டான் சாரங்கம்.

'தெரியலயே... எதாவது காதல் விவாகரமா'என்று பரந்தாமன் சந்தேகத்துடன் கேட்க..
'பணக்கார வீட்டு சம்மந்தமா இருந்தா பேசி முடிக்க வேண்டியது தான்' என்றான் சரங்கம்

தன் அண்ணனின் வார்த்தையை கேட்டு,'அதெல்லாம் முடியாது அண்ணா... பணக்காரன் யாருக்கு வேணும். நமக்கு கோடிஸ்வர வீட்டு பெண் தான் மருமகளா வரணும்' என்ற பரந்தாமனை பார்த்து அர்த்தமாக சிரித்தான் சாரங்கம்.

அண்ணன் தம்பி இருவரும் தன் பிள்ளைகளை கல்யாணம் என்கிற சந்தையில் விற்க முடிவு எடுத்து இருக்க. இவர்கள் முடிவை எழுத அங்கே செத்து பிழைத்து மீண்டு வந்து இருக்கும் உண்மை இவர்களுக்கு தெரியாமல் போனது.

கதிர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் நேரே வெங்கட்டின் அறைக்கு சென்று இருக்க. அங்கே படுக்கையில் ஆழ்ந்த யோசனையில் படுத்து இருந்தான் வெங்கட்.

கதிர் நேரே சென்று வெங்கட் அருகே அமர்ந்தவன்.'என்ன நீ... ஏன் பெரியப்பாகிட்ட மரியாதை இல்லாம பேசுன' என்று கேட்டதும், அவனை ஏகத்துக்கும் முறைத்தான் வெங்கட்.

'முறைக்காத... சொல்லு.. ஏன் அப்படி பேசுன'
என்று கதிர் கேட்டதும்,'எனக்கு மீனா கூட கல்யாணம் நடக்கலைனா நான் செத்து போயிடுவேன்' என்றான் வெங்கட்.

பெரியப்பா மகனாக இருந்தாலும் வெங்கட் மீது கதிருக்கு அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாகவே இருந்து இருக்க..'டேய் பைத்தியம்... ஆனா உங்க கல்யாணம் நடந்தா இல்ல நடக்கணும்னு நினைச்சாலே உன் அப்பாவும் என் அப்பாவும் சேர்ந்து மீனாவை தான் கொலைபனிடுவாங்க' என்றான் கதிர்.

தன்னை பயமுறுத்த தான் கதிர் பொய் உறைக்கிறான் என்று எண்ணிய வெங்கட்டோ,'அதெல்லாம் அவங்க பண்ண மாட்டாங்க. நீ வேணும்னா பாரு. நான் மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா கண்டிப்பா இவங் எல்லோரும் எங்கள ஏத்துப்பாங்க' என்றான் வெங்கட்.

தன் உடன் பிறவா அண்ணனின் நம்பிக்கையை பார்த்து வெறுமையாக சிரித்த கதிரோ, 'உனக்கு தெரியாது வெங்கட். இவங்களுக்கு பணமா நம்மளான்னு வந்தா கண்டிப்பா பணத்துக்காக நம்மள கூட இழக்க துணிவாங்க' என்றவன் வெங்கட்டின் அறையில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறி இருந்தான்.
 
Joined
Feb 6, 2025
Messages
134
✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுநாள் காலை 6 மணி அளவில் VCR பங்களாவிற்க்கு வாட்ச் மேன் வேலைக்கு வந்து இருந்த செல்வம்,'கார்டன் ஏரியாவில் நின்று உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருக்கும் சித்ராவை பார்த்து,'Good Mrng மேடம்' என்றவன் தன் கையில் இருந்த சோற்று கற்றாழை செடியை அந்த தோட்டத்தில் புதைத்து வைத்தான்.

'Good mrng' என்ற சித்ரா தன் கை கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருந்தவள்,'செல்வம்' என்ற குரலில் திரும்பி பார்க்க, அங்கே கருப்பனும் சிறுமி தேனும் கேட் அருகே நின்று இருந்தார்கள்.

சிறுமியை பார்த்ததும் சித்ராவின் இதழ்கள் தானே மலர்ந்து இருக்க,'என்னோட காசு எங்கே!?' என்று கேட்டாள் சிறுமி.

குழந்தை....சில்லறை காசை தான் சொல்கிறாள் என்று அறிந்ந்துகொண்ட சித்ரா... ஏதும் தெரியாததை போல,'என்ன காசு!?' என்று கேட்டாள்.

சிறுமி கருப்பனின் கையில் இருந்து வேகமாக கீழே இறங்கி ஓடிவந்தவள்,'நான் நேத்து உங்களாண்ட பணம் கொடுத்தேனே, அந்த காசு எங்க!?' என்று சிறுமி கேட்க, தன் தோள்களை தூக்கி,'என்கிட்டய்யா கொடுத்த!?' என்று கேட்டாள் சித்ரா.

'ஆமா உங்ககிட்ட தான் கொடுத்தேன். நீங்க அந்த பணத்தை வச்சிக்கிட்டு எனக்கு என் அப்பா அம்மா கல்லறையை தந்துடுங்க. நான் பாவம் தானே. நான் சின்ன பொண்ணு தானே' என்று சிறுமி அழகாய் பேச,'சின்ன பொண்ணா!? யாரு?' என்று கேட்டாள் சித்ரா.

எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் சித்ராவின் முகத்தில் சிறுமியிடம் பேசும் பொழுது சிறு குறுநகை தெரிவதை பார்த்து செல்வம் ஆச்சிரியமாக பார்த்து இருக்க,'சின்ன குழந்தையோட தவிப்பு உங்களுக்கு எல்லாம் விளையாட்டா இருக்கா' என்று கேட்டான் கருப்பன்.

கருப்பனின் சத்தம் கேட்டு ஈஷா அங்கே வந்து சேர்ந்தவள்,'சார்... என்ன நீங்க... அப்போதுல இருந்து எங்க மேடம்கிட்ட வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க' என்று கேட்டதும், கருப்பன் சித்ராவை அருவருப்பாக பார்த்து இருந்தான்.

அவன் பார்வையின் அர்த்ததை புரிந்துகொண்ட சித்ரா அங்கே எந்த வித விளக்கத்தையும் தராதவள், மீண்டும் உடற்பயிற்சியை தொடர்ந்து இருந்தாள்.

'கருப்பா... அப்போ என் பணம்' என்று சிறுமி கேட்க,'பாப்பா... உன் காசு என்கிட்ட தான் இருக்கு. இரு நான் போய் எடுத்துட்டு வரேன்' என்ற ஈஷா பங்களாக்குள் நுழையும் நேரம்,

' ஐயோ கொலை...' என்று முல்லை அவள் அறையில் இருந்து அலறும் சத்தம் வாசல் வரை கேட்டது.

காலை ஆறு மணி அளவில் குயில்களின் இசையில் அந்த இடமே ரம்மியமான சூழ்நிலையில் இருந்து இருக்க, இப்போது கேட்ட முல்லையின் குரலில் கந்தன், மாறன் என்று அனைவரும் அவரவர் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்கள்.

அவர்கள் மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் பணி புரியும் பெண்களும் முல்லை இருக்கும் அறையின் அருகே ஓடி வர, முல்லை தலைவிரி கோலமாக வெளியே வந்தவள். 'கொல கொல..' என்று அலறினாள்.

'என்ன அக்கா.என்ன!? கொள கொளக்கா முந்திரிக்கா விளையாட போறியா' என்று கந்தன் தன் அக்காவை கிண்டல் செய்ய...'அண்ணா.. கொல அண்ணா...'என்ற முல்லையின் கை கால்கள் எல்லாம் நடுக்கம் எடுத்து இருந்தது.

'என்ன பாப்பா சொல்ற கொலையா' என்று மாறனும் புரியாமல் முல்லையின் பதற்றத்தை பார்த்து குழம்பி இருக்க... அதே சமயம் ஈஷாவும் சித்ராவும் உள்ளே நுழைந்தார்கள்.

'என்னாச்சு மாறா... என்ன பிரச்சனை!?' என்று ஈஷா இயல்பாக கேள்வி கேட்க... சித்ரா அந்த இடத்தில் இருக்கும் பணி பெண்களை பார்த்த ஒரே ஒரு பார்வையில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து மறைந்தே போனார்கள்.

தோட்டத்தில் சிறுமி தேனும் கருப்பனும் உள் இருந்து கேட்ட சத்தத்தில் என்ன பிரச்சனை என்று பார்ப்பதற்காக வெளியே காத்து இருக்க.' என்ன மாறா இங்க என்ன பிரச்சனை' என்று மீண்டும் கேட்டாள் ஈஷா.

'தெரியல மேடம். நீங்க கொடுத்த மாத்திரையை போட்டுக்கிட்டு நான் நல்லா தூங்கிட்டேன் மேடம். திடிர்னு பாப்பா அலறும் சத்தம் கேட்டு வெளியே வந்தா இங்க என்னமோ கொலை கொல்லைன்னு உளறிக்கிட்டு இருக்கா' என்றான் மாறன்.

'என்ன முல்ல... கெட்ட கனவு எதாவது கண்டியா' என்று ஈஷா மென்மையாக முல்லையின் கூந்தலை வருடி கொடுக்க.
'நேத்து காலேஜ்ல எதாவது காத்து கதிரு அடிச்சிடுதா' என்று கிண்டலாக கேட்டாள் சித்ரா.

'ஏய் நீ... நீ தான் கொலைகாரி. அண்ணா இவங்க... இவங்க தான் அண்ணா கொலை பண்ணாங்க' என்ற முல்லை தன் எதிரே வியர்வையை துடைத்தப்படி நின்று இருக்கும் சித்ராவை பார்த்து கத்தினாள்.

முல்லையின் வார்த்தையை கேட்டு மாறனின் முகத்தில் மரண பயம் தெரிந்து இருக்க...சித்ராவோ அங்கிருந்த சோபாவில் அமர்ந்து ஹாலில் இருக்கும் TV+ Home தியேட்டரை On செய்தாள்.

நேற்றைய தினம் தன் கண் எதிரே ஓரு கொலையை செய்த பெண்ணவள் இன்று எதுவும் நடக்காததை போல அமர்ந்து இருக்கும் தோரணையை பார்த்து முல்லைக்கு சொல்ல முடியாத அளவுக்கு கோவம் எழுந்தது.

ஆனால் முல்லை கத்துவதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாத சித்ராவோ டிவியில் தெரியும் செய்தி மீது கவனத்தை பதித்து இருந்தாள்.

'மாறா... உங்க சிஸ்டரை உள்ள அழைச்சிட்டு போங்க. எதாவது கனவு கண்டு பயந்து இருக்க போறாங்க' என்று ஈஷா சொல்ல..

'ஆமா பயம் தான்... ஆனா கனவு கண்டு நான் பயபுடல. அதோ அங்க உக்காந்து இருக்காங்களே உங்க மேடம்... அவங்க பண்ண கொலையை பார்த்து தான் நான் பயந்து போய் இருக்கேன்' என்ற முல்லையின் கண்கள் இரண்டும் தானாக கலங்க தொடங்கியது.

முல்லை ஒரு பக்கம் தன் பயத்தை கத்தி சொன்னவள்,'அண்ணா... வா அண்ணா போலீஸ் ஸ்டேஷன் போகலாம். நம்ம போலீஸ் ஸ்டேஷன் போய் இவங்க மேல கம்பளைண்ட் கொடுக்கலாம்' என்ற முல்லையை பார்த்து சித்ரா கிண்டலாக சிரித்தாள்.

அர்த்தமே இல்லாமல் சித்ரா மீது முல்லை கோவத்தில் இருந்தவளுக்கு இப்பொது இன்னும் அதீத கோவம் எழுந்து இருக்க,'அண்ணா... சொல்றேனே வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம்' என்று மாறனை முல்லை அழைத்தாள்.

தன் அக்காவின் செயலில் சிறுவன் கந்தன் கடுப்பானவன்,' அக்கா உனக்கு எப்பவும் இதான் வேலை. எப்போ பாரு கனவு கண்டு உளராத' என்றவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள் முல்லை.

'பாப்பா... என்ன நீ... ஏன் இப்போ கந்தனை அடிக்கிற' என்று மாறன் கேட்க...'அண்ணா.. நேத்து இவங்க ஒரு பொம்பளையை கொலை பண்ணாங்க அண்ணா.. அத... அத நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேனே அண்ணா' என்ற முல்லையின் வார்த்தையில் மாறனும் குழம்பி தான் போனான்.

'அக்கா... நேத்து நைட் நீ என்கூட தானே படுத்து இருந்த' என்று கந்தன் கேட்க...
'ஆமாடா... ஆனா நான் நேத்து நைட் போன் பண்ண கார்டன்க்கு போனேன். அப்போ இவங்க வந்ததும் நான் கார் டிக்கில உக்காந்தேன். அப்போ தான் இவங்க கொலை பண்ணதை பார்த்தேன்' என்று முல்லை சொல்ல...'என்ன போனா' என்று கேட்டான் மாறன்.

'ஆமா அண்ணா போன் தான்... நான் உன் போனை தான் எடுத்துட்டு போனேன். உன் போன்... உன் போன் கூட அவங்க கார் டிக்கில இருக்கும் பாருங்க' என்ற முல்லை வாசலை நோக்கி நடக்க... அதே சமயம்,'பாப்பா என் போன் இங்க தான் இருக்கு' என்று மாறன் அவன் சட்டை பையில் இருந்து அவனுடைய போனை எடுத்து காட்டினான்.

நேற்று இரவு முல்லை சித்ராவின் கார் டிக்கியில் தவர விட்ட போன் இப்பொது எப்படி மாறனிடம் இருக்கிறது என்று யோசித்த நிலையில்....'முக்கிய செய்தி... செய்திகள் வாசிப்பது கவிதாயினி' என்ற குரலில் முல்லையின் கவனம் தொலைக்காட்சி மீது படிந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top