Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
படலம் - 1
கருப்ப சாமி கோவிலில் உடுக்கை சத்தம் ஒலிக்க, தடப்புடலாக கறி விருந்து ஏற்பாடு நடத்துக்கொண்டு இருந்தது.
'எல்லாம் வல்ல இயற்கையே துணை.
என் பிள்ளைங்க பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சு அவங்க குலம் விருத்தி அடைய நீ தான் துணையா இருக்கனும் கருப்பா ' என மனமுருகி வேண்டும் சித்ராதேவி தான் இந்த குடும்பத்தின் மூத்தவர் என சொல்லலாம்.
சித்ராதேவியின் கணவர் தேவேந்திரன் தீராத நெஞ்சு வலியில் மரணிக்கும் பொழுது இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.
தேவேந்திரனின் மரணத்திற்கு பிறகு பதினைந்து வயதான அவரின் மூத்த மகன் விநாயகம் தான் அந்த குடும்பத்தை கட்டி காத்தார்.
இரண்டாவது மகன் ஆறுமுகம் குணத்தில் நல்லவனாக இருந்தாலும் எடுப்பார் கை பிள்ளையாக இருப்பவர்.
மூன்றாவது பெண் பிள்ளை சாமுண்டிஸ்வரிக்கு எப்போதும் கை பேசிய பிறகு தான் வாய் பேசும். ஆம் சண்டைக்காரி.
நான்காவது பெண் பரமேஸ்வரியும் அவளின் அக்காவுக்கு தப்பாமல் இருக்கும் பெண்மணி தான்.
சித்ராதேவியின் கணவன் தேவேந்திரனின் மறைவுக்கு பின்னே. அவர்களின் மூத்த பிள்ளை விநாயகம் தன் குடும்பத்தை காப்பாற்ற நாடு விட்டு நாடு சென்று பதினைந்து வருட காலம் செருப்பாய் உழைத்து இவர்களது குடும்பத்தை காப்பாற்றினார்.
தன் இரு தங்கைகளுக்கு ஒரே வீட்டில் மாப்பிளை பார்த்து அண்ணன் தம்பி இருவருக்கும் தன் தங்கைகளை திருமணம் செய்து வைத்தார் விநாயகம்.
அவர்களின் திருமண நிகழ்வுக்கு கூட விநாயகம் வராமல் இருக்க, தன் மூத்த பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியவில்லை என்ற கவலை சித்ரா தேவிக்கு இருக்க தான் செய்தது.
ஆனால் விநாயகத்தை பற்றி அங்கு வேறு யாரும் கவலைப்படவில்லை.
விநாயகம் பணம் சம்பாதித்து போடும் கருவியாக தான் அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தார்.
சுருக்கமாக சொன்னால் விநாயகத்தின் உழைப்பை வைத்து இவர்கள் சொகுசு வாழ்கை வாழ்ந்து இருந்தார்கள்.
சாமுண்டிஸ்வரி மற்றும் பரமேஸ்வரியின் கணவர்கள் இருவரும். விநாயகம் அனுப்பும் பணத்தைக்கொண்டு வட்டிக்கு விட்டு துணி கடை, பாத்திர கடை, ரியல் எஸ்டேட் என்று எல்லா தொழிள்களும் சித்ராதேவி என்ற பெயரில் ஆரம்பித்து இருந்தார்கள்.
விநாயகத்துக்கு 45 வயதை கடந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு திரும்பினார்.
அப்போது தான் அவருக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் எங்கே அவருக்கு திருமணம் முடிந்தால் நாளை வீட்டுக்கு வரும் மருமகள் கணக்கு வழக்கு கேட்க போகிறாள் என்று எண்ணி விநாயகத்தின் தங்கைகளே தன் அண்ணனின் திருமணத்திற்கு தடையாக இருந்தார்கள்.
'மாப்பிளைக்கு ரொம்ப வயசாகிடுது. மாப்பிளை பார்க்க கிழவன் போல இருக்காரு. வேணும்னா ஒரு குழந்தையோட இருக்குற பெண்ணை பேசி முடிக்கலாம்' என்று சிலர் பல கருத்துகளை தெரிவிக்க,
'எனக்கு கல்யாணமே வேண்டாம். நீங்க தம்பி ஆறுமுகத்துக்கு கல்யாணம் பண்ணி வையுங்க' என்றார் விநாயகம்.
வெளியே இருந்து யாராவது வந்தால் நம்மால் இந்த சுகப்போக வாழ்க்கையை வாழ முடியாது என்று அஞ்சிய சாமுண்டிஸ்வரியும் பரமேஸ்வரியும் சேர்ந்து அவர்களின் நாத்தனார் வள்ளியை ஆறுமுகத்துக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
காலம் வேகமாக கடந்து இருந்தது.
இன்று வரை தன் மூத்த பையனுக்கு திருமணம் முடியவில்லை என்ற கவலையில் சித்ராதேவி சோகமாக அமர்ந்து இருந்தார்.
'அம்மாச்சி அம்மாச்சி... நேரமாகுது. ஏன் இன்னும் பெரிய மாமா வரல!? அவர் வந்தா தான் எங்களுக்கு காது குத்தி மொட்ட போடுவாங்களா' என்று கேட்டுக்கொண்டே சாமுண்டிஸ்வரியின் 10வயதுடைய மகன் வெங்கட் ஓடி வந்தான்.
'ஆமா... அவரு பெரிய இவரு பாருங்க. அவருக்காக நான் ஏன் காத்து இருக்கனும். என்னால எல்லாம் யாருக்காவும் காத்து இருக்க முடியாது' என்ற முறைப்போடு பரமேஸ்வரியின் 7வயதுடைய மகன் கதிர்வேலன் வீராப்பாக நின்று இருந்தான்.
'டேய் கோவக்கார பையலே... உன் பெரிய மாமா இல்லைனா நீங்க யாரும் இல்லடா. அவனுக்காக நீ மட்டும் இல்ல, இந்த குடும்பமே காத்து தான் இருக்கனும்' என்று தன் பேரனுக்கு புத்தி சொன்னார் சித்ரா தேவி.
'யாருக்காகவும் நான் காத்து இருக்க மாட்டேன். எனக்கு மொட்டை அடிக்கிற விஷயமே பிடிக்கல, இதுல நான் கண்டவங்களுக்காக காத்து இருக்கணுமா' என கேட்டான் கதிர்வேலன்.
'பத்து வயசு கூட முழுசா ஆகல. வாயை பார்த்தியா இவனுக்கு' என்று சித்ரா தேவி கதிரின் தலையில் ஒரு குட்டு வைக்க,
'என்ன அம்மா இன்னும் ஏன் பெரிய அண்ணன் வரல' என்று கழுத்து நிறைய நகையோடு அங்கே வந்தாள் சாமுண்டிஸ்வரி.
'அண்ணனை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுது. பாவம் அவரு எப்படி இருக்காருன்னே தெரியல' என்ற ஆறுமுகத்தின் கையில் அவரது ஆறு வயது பெண் பிள்ளை மீனலோகேஷினி இருந்தாள்.
'என்ன பண்ண சொல்ற ஆறுமுகம், நீ தான் கையால் ஆகாத அண்ணன்.ஆனா விநாயகம் அப்படி இல்லையே' என்று அவரை பரமேஸ்வரியின் கணவன்
பரந்தமான் கேலி செய்தார்.
'அண்ணா... போதும் நிறுத்து. விநாயகம் மாமா இல்லைனா நீயும் இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியாது' என்று ஆறுமுகத்தின் மனைவி வள்ளி தன் அண்ணனையே எதிர்த்து பேசினாள்.
கருப்ப சாமி கோவிலில் உடுக்கை சத்தம் ஒலிக்க, தடப்புடலாக கறி விருந்து ஏற்பாடு நடத்துக்கொண்டு இருந்தது.
'எல்லாம் வல்ல இயற்கையே துணை.
என் பிள்ளைங்க பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சு அவங்க குலம் விருத்தி அடைய நீ தான் துணையா இருக்கனும் கருப்பா ' என மனமுருகி வேண்டும் சித்ராதேவி தான் இந்த குடும்பத்தின் மூத்தவர் என சொல்லலாம்.
சித்ராதேவியின் கணவர் தேவேந்திரன் தீராத நெஞ்சு வலியில் மரணிக்கும் பொழுது இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.
தேவேந்திரனின் மரணத்திற்கு பிறகு பதினைந்து வயதான அவரின் மூத்த மகன் விநாயகம் தான் அந்த குடும்பத்தை கட்டி காத்தார்.
இரண்டாவது மகன் ஆறுமுகம் குணத்தில் நல்லவனாக இருந்தாலும் எடுப்பார் கை பிள்ளையாக இருப்பவர்.
மூன்றாவது பெண் பிள்ளை சாமுண்டிஸ்வரிக்கு எப்போதும் கை பேசிய பிறகு தான் வாய் பேசும். ஆம் சண்டைக்காரி.
நான்காவது பெண் பரமேஸ்வரியும் அவளின் அக்காவுக்கு தப்பாமல் இருக்கும் பெண்மணி தான்.
சித்ராதேவியின் கணவன் தேவேந்திரனின் மறைவுக்கு பின்னே. அவர்களின் மூத்த பிள்ளை விநாயகம் தன் குடும்பத்தை காப்பாற்ற நாடு விட்டு நாடு சென்று பதினைந்து வருட காலம் செருப்பாய் உழைத்து இவர்களது குடும்பத்தை காப்பாற்றினார்.
தன் இரு தங்கைகளுக்கு ஒரே வீட்டில் மாப்பிளை பார்த்து அண்ணன் தம்பி இருவருக்கும் தன் தங்கைகளை திருமணம் செய்து வைத்தார் விநாயகம்.
அவர்களின் திருமண நிகழ்வுக்கு கூட விநாயகம் வராமல் இருக்க, தன் மூத்த பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியவில்லை என்ற கவலை சித்ரா தேவிக்கு இருக்க தான் செய்தது.
ஆனால் விநாயகத்தை பற்றி அங்கு வேறு யாரும் கவலைப்படவில்லை.
விநாயகம் பணம் சம்பாதித்து போடும் கருவியாக தான் அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தார்.
சுருக்கமாக சொன்னால் விநாயகத்தின் உழைப்பை வைத்து இவர்கள் சொகுசு வாழ்கை வாழ்ந்து இருந்தார்கள்.
சாமுண்டிஸ்வரி மற்றும் பரமேஸ்வரியின் கணவர்கள் இருவரும். விநாயகம் அனுப்பும் பணத்தைக்கொண்டு வட்டிக்கு விட்டு துணி கடை, பாத்திர கடை, ரியல் எஸ்டேட் என்று எல்லா தொழிள்களும் சித்ராதேவி என்ற பெயரில் ஆரம்பித்து இருந்தார்கள்.
விநாயகத்துக்கு 45 வயதை கடந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு திரும்பினார்.
அப்போது தான் அவருக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் எங்கே அவருக்கு திருமணம் முடிந்தால் நாளை வீட்டுக்கு வரும் மருமகள் கணக்கு வழக்கு கேட்க போகிறாள் என்று எண்ணி விநாயகத்தின் தங்கைகளே தன் அண்ணனின் திருமணத்திற்கு தடையாக இருந்தார்கள்.
'மாப்பிளைக்கு ரொம்ப வயசாகிடுது. மாப்பிளை பார்க்க கிழவன் போல இருக்காரு. வேணும்னா ஒரு குழந்தையோட இருக்குற பெண்ணை பேசி முடிக்கலாம்' என்று சிலர் பல கருத்துகளை தெரிவிக்க,
'எனக்கு கல்யாணமே வேண்டாம். நீங்க தம்பி ஆறுமுகத்துக்கு கல்யாணம் பண்ணி வையுங்க' என்றார் விநாயகம்.
வெளியே இருந்து யாராவது வந்தால் நம்மால் இந்த சுகப்போக வாழ்க்கையை வாழ முடியாது என்று அஞ்சிய சாமுண்டிஸ்வரியும் பரமேஸ்வரியும் சேர்ந்து அவர்களின் நாத்தனார் வள்ளியை ஆறுமுகத்துக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
காலம் வேகமாக கடந்து இருந்தது.
இன்று வரை தன் மூத்த பையனுக்கு திருமணம் முடியவில்லை என்ற கவலையில் சித்ராதேவி சோகமாக அமர்ந்து இருந்தார்.
'அம்மாச்சி அம்மாச்சி... நேரமாகுது. ஏன் இன்னும் பெரிய மாமா வரல!? அவர் வந்தா தான் எங்களுக்கு காது குத்தி மொட்ட போடுவாங்களா' என்று கேட்டுக்கொண்டே சாமுண்டிஸ்வரியின் 10வயதுடைய மகன் வெங்கட் ஓடி வந்தான்.
'ஆமா... அவரு பெரிய இவரு பாருங்க. அவருக்காக நான் ஏன் காத்து இருக்கனும். என்னால எல்லாம் யாருக்காவும் காத்து இருக்க முடியாது' என்ற முறைப்போடு பரமேஸ்வரியின் 7வயதுடைய மகன் கதிர்வேலன் வீராப்பாக நின்று இருந்தான்.
'டேய் கோவக்கார பையலே... உன் பெரிய மாமா இல்லைனா நீங்க யாரும் இல்லடா. அவனுக்காக நீ மட்டும் இல்ல, இந்த குடும்பமே காத்து தான் இருக்கனும்' என்று தன் பேரனுக்கு புத்தி சொன்னார் சித்ரா தேவி.
'யாருக்காகவும் நான் காத்து இருக்க மாட்டேன். எனக்கு மொட்டை அடிக்கிற விஷயமே பிடிக்கல, இதுல நான் கண்டவங்களுக்காக காத்து இருக்கணுமா' என கேட்டான் கதிர்வேலன்.
'பத்து வயசு கூட முழுசா ஆகல. வாயை பார்த்தியா இவனுக்கு' என்று சித்ரா தேவி கதிரின் தலையில் ஒரு குட்டு வைக்க,
'என்ன அம்மா இன்னும் ஏன் பெரிய அண்ணன் வரல' என்று கழுத்து நிறைய நகையோடு அங்கே வந்தாள் சாமுண்டிஸ்வரி.
'அண்ணனை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுது. பாவம் அவரு எப்படி இருக்காருன்னே தெரியல' என்ற ஆறுமுகத்தின் கையில் அவரது ஆறு வயது பெண் பிள்ளை மீனலோகேஷினி இருந்தாள்.
'என்ன பண்ண சொல்ற ஆறுமுகம், நீ தான் கையால் ஆகாத அண்ணன்.ஆனா விநாயகம் அப்படி இல்லையே' என்று அவரை பரமேஸ்வரியின் கணவன்
பரந்தமான் கேலி செய்தார்.
'அண்ணா... போதும் நிறுத்து. விநாயகம் மாமா இல்லைனா நீயும் இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியாது' என்று ஆறுமுகத்தின் மனைவி வள்ளி தன் அண்ணனையே எதிர்த்து பேசினாள்.