New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி- 8
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்க்காமல் மீனா விஷத்தை குடித்தவளை பார்த்து அனைவரும் அலண்டு போனார்கள்.
'ஐயோ! மீனா!' என்று முல்லை பதறிப்போய் மீனாவை மடியில் தாங்கினாள்.
மீனாவின் செயலில் கதிர்வேலனும் ஜீவானந்தமும் செய்வதரியாமல் சிலையென நின்றார்கள்.
'ஐயோ என் பொண்ணுக்கு என்னாச்சு!?' என கஸ்தூரி வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு துடித்து போனார்.
"டேய் என்னங்கடா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க... போங்க! போய் வண்டியை எடுங்க" என்று பாண்டியன் சொன்னதும், கதிர்வேலன் மீனாவை தூக்க போனார்.
'வாத்தி இருங்க' என ரோஜா கையில் பச்சிளம் இலைகளோடு ஓடி வந்தவள், உள்ளங்கையில் வைத்து கசக்கி அதை மீனாவை உட்கொள்ள வைத்தாள்.
இலையின் சாறு மீனாவின் தொண்டை குழியில் இறங்கியதும்,குடலை பிரட்டிக்கொண்டு மீனா வாந்தி எடுத்து மயங்கி சரிந்தாள்.
'பெரியவரே! நீங்க காரை எடுங்க, வாத்தி வாங்க மீனாவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம்' என்று ரோஜா சொல்ல,
'ஐயோ என் பொண்ணு' என்று அலறி அடித்துக்கொண்டு கஸ்தூரியும் இவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
மீனாவின் செயலில் முல்லைக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
தன் தங்கை கஸ்தூரியின் செயலில் பாண்டியனின் கோவம் தலைக்கேரியது.
'மாமா... நீங்க வேணும்னா மீனாவை ஜீவா மாமாவுக்கே கல்யாணம் பண்ணி தந்துடுங்க' என்று முல்லை அழுதுக்கொண்டே சொல்ல,
'ஆனால் மீனா கதிரை தானே நேசிக்கிறாள்!' என்றார் பாண்டியன்.
'ஆனா மாமா... கஸ்தூரி சித்திக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையே' என முல்லை சொன்னதும்,
'தாலி கட்ட போறவன் சம்மந்தமும், தாலியை வாங்கிக்க போற பொண்ணோட சம்மதமும் தான் எனக்கு முக்கியம்' என்று தன் முடிவை சொன்னார் பாண்டியன்.
தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நினைத்து முல்லைக்கு கண்கள் ஈரமானது.
தாயை இழந்த முல்லைக்கு தகப்பனின் அரவணைப்பும் இல்லை என்ற காரணத்த்தால் எப்போதும் பாண்டியனுக்கு முல்லை மீது கூடுதலான அக்கறை இருந்தது.
'அம்மாடி முல்ல... நீ கலங்காதே! யார் என்ன சொன்னாலும் நீ தான் இந்த வீட்டு மருமகள்' என பாண்டியன் தீர்க்கமாக சொல்ல,
'மாமா...மீனாவை அழைச்சிட்டு போன ஹாஸ்பிடலுக்கு நம்மளும் போவோமா!?' என முல்லை கேட்டாள்.
'வேண்டாம் முல்ல.
நம்ம இப்போ அங்கே போனால் கஸ்தூரி வாய்க்கு வந்த வசையை பாடிக்கிட்டு இருப்பாள், அதான் பசங்க மூணு பேரும் போய் இருக்காங்களே! அவங்க பார்த்துப்பாங்க' என்று பாண்டியன் சொல்ல, மீனாவிற்கு எந்த விபரீதமும் நேர்ந்திடக் கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டாள் முல்லை.
******************
மருத்துவமனையில் மீனாவுக்கு மருத்துவர் சிகிச்சை கொடுக்க,'என்ன சார் தற்கொலை முயற்சியா!? போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிங்களா!?'என்று கேட்டார் செவிலியர்.
தன் மகளின் பெயரில் போலீஸ் கேஸ் எல்லாம் வந்தால் அவள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணிய கஸ்தூரி,
'தற்கொலை முயற்சி எல்லாம் இல்லிங்க! குடும்ப சண்டை அவ்ளோ தான்' என்றார்.
'என்ன பிரச்சனையா இருந்தாலும் போலீஸ்க்கு தெரியப்படுத்தனும்' என்று செவிலியர் சொல்ல,
'என்ன இங்க பிரச்சனை?' என்ற கேள்வியோடு அங்கே சிவில் ட்ரெஸ்ஸில் காவலர் சுந்தரேசன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
சுந்தரேசத்தை பார்த்த ஜீவானந்தன்,'கதிரு! நீ எதுவும் பேசிக்காத, நான் பார்த்துக்குறேன்' என்றார்.
'ஏன்!? நான் பேசினா தான் என்னவாம்!?' என்ற கதிர்வேலன் சண்டைக்கோழியை போல அவனை முறைத்து பார்க்க,
சுந்தரோ இவர்கள் இடையே நின்று இருந்த ரோஜாவை ஒரு மார்க்கமாக பார்த்து இருந்தான்.
தன் தங்கையின் மீது காரணமே இல்லாமல் பார்வையை பதித்து இருந்த சுந்தரின் கண் முன்னே தன் விரல்களை சுண்டி, 'அங்க என்ன பார்வை!' என்று கேட்ட கதிர்வேலனின் முகம் இறுகியது.
தன் பார்வையை சட்டென்று ஜீவானந்தம் மற்றும் கதிர்வேலனிடம் திருப்பிய சுந்தரேசன்,'இங்க என்ன பிரச்சனைன்னு கேட்டேன்' என்றான்.
'சார்! இவங்க வீட்டு பொண்ணு விஷம் குடிச்சிட்டாங்க, அதான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ண சொன்னேன்' என்று செவிலியர் சொல்ல,
'ஓ!.... நல்லதா போச்சு! நானும் இந்த வாய்ப்புக்காக தான் காத்து இருந்தேன்' என்றான் ASI சுந்தரேசன்.
'நீங்க வாய்ப்புக்கு காத்து இருந்தாலும் சரி! வாழைப்பழத்துக்கு காத்து இருந்தாலும் சரி, போய் அந்த பக்கம் ஓரமா நின்னு காத்து இருங்க' என்ற கதிர்வேலனின் பேச்சில் ரோஜா சூழ்நிலை மறந்து சிரித்து இருந்தாள்.
தன்னை அவமானம் படுத்தும்படி பேசும் கதிர்வேலனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் காத்து இருந்த சுந்தரேசனுக்கு இந்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல்,'சிஸ்டர்! உள்ள patient கண்டிஷன் எப்படி இருக்கு' என்று மீனாவை பற்றி கேட்டான் சுந்தரேசன்.
'அவங்க! ' என்று சுந்தரேசன் கேட்ட கேள்விக்கு செவிலியர் பதில் சொல்லும் முன்னே,
'அனேகமா நான் அடிச்ச அடிக்கு, patient உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும்' என்று கதிர்வேலன் சொல்ல,தன் அண்ணனின் பதிலை கேட்டு புருவம் உயர்த்தினாள் ரோஜா.
தன் தங்கையின் மனதில் எழுந்த கேள்வியை அறிந்து இருந்த கதிர்வேலன்,'என்ன ம்மா! இவனை யாருன்னு உங்களுக்கு தெரியலையா! இவன் தான் சுந்தரேசன், நான் காலேஜ் புகுந்து அடித்தேனே வாத்தியார் ஸ்ரீனிவாசன், அவனோட அருமை அண்ணன்' என்றார் கதிர்வேலன்.
சுந்தரேசனை பற்றி தெரிந்ததும் ரோஜாவின் முகத்தில் அருவருப்பான பாவனை தோன்றியது,
இன்னும் ஒரு வாரத்தில் தன் தம்பிக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்று இருக்க காரணமே இந்த கதிர்வேலன் தான் என்று அறிந்து இருந்த சுந்தரேசனுக்கு எப்படியாவது அவன் அனுபவித்த அதே வழியை கதிர்வேலனுக்கு தர வேண்டும் என்று நினைத்தவனின் பார்வை மீண்டும் ரோஜாவின் மீது படிந்தது.
இவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி நின்று இருக்க,'அவங்க இப்போ நல்லா இருக்காங்க, நீங்க போய் பார்க்கலாம்' என்றப்படி மருத்துவர் மீனா இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார்.
தன் மகளுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்ற செய்தியை கேட்டு கஸ்தூரிக்கு நிம்மதி எழுந்தது.
'என்ன டாக்டர் sucide கேஸ் தானே! நீங்க ஏன் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணல' என்று சுந்தரேசன் கேக்க,
'sucide கேஸ்ன்னு யார் சொன்னாங்க!? அவங்களுக்கு food பாய்சன் ஆகியிருக்கு' என்றார் மருத்துவர்.
மருத்துவரின் பதிலில் சுந்தரேசனின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
'ஆமா! இந்த விஷயதுக்கே போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லுறியே! உன் தொம்பிக்கு எங்கேயோ படாத இடத்துல பட்டு,
விடக்கூடாத நரம்பு விட்டு போச்சாம்மே! அப்போ அந்த அசம்பவிதத்துக்கு எல்லாம் என்னனு நீ ரிப்போட் பண்ணி இருப்ப!?' என்று கதிர்வேலன் தனக்கே உரிய கிண்டலான பாவனையில் கேட்டதும், சுந்தரேசனின் முகத்தில் கோவகனல் வெடித்தது.
'வாத்தி! இவருக்கிட்ட நமக்கு என்ன பேச்சு! வாங்க நம்ம போய் மீனாவை பார்க்கலாம்!' என்று ரோஜா தன் அண்ணன்களை அழைத்துக்கொண்டு மீனா இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைய,
'என் தம்பி வாழ்க்கையை அழித்த இந்த கதிர்வேலனோட தங்கச்சி வாழ்க்கையை நான் அழித்தே தீருவேன்'என்று தன் மனதில் மண் கோட்டை கட்டினான் ASI சுந்தரேசன்.
**********************
சிகிச்சை அறைக்குள் அனைவரும் நுழைந்த சமயம் மீனா சோர்வாக கட்டிலில் படுத்து இருக்க, உள்ளே வந்த வேகத்தில் தன் மகளின் இருப்பக்க கன்னத்திலும் ஆத்திரம் தீர அறைந்து இருந்தாள் கஸ்தூரி.
'இந்த அடியை கொடுக்க தான், கடவுளே மீனாவை காப்பாற்றி கொடுன்னு கஸ்தூரி அத்த அவ்வளவு நேரம் அழுதுச்சா!' என்று கதிர்வேலன் இயல்பாக கேட்க,'வாத்தி கொஞ்சம் அமைதியா இருங்க! பாவம் மீனா' என்றாள் ரோஜா.
'பாவி மவளே ஏன் டி இப்படி பண்ண!' என்று கதறி அழுத தன் அன்னையின் குரலை மீறி மீனாவின் பார்வை கதிர்வேலனின் மீது படிந்தது.
'மீனா! நீ படிச்ச பொண்ணு தானே.
எந்த பிரச்சனை வந்தாலும் நின்னு போராடனும்ன்னு உனக்கு தெரியாதா!' என்று கண்டித்தார் ஜீவானந்தம்.
'காதலுக்காக நான் உயிரை விடக்கூட தயாராக இருக்கேன்னு என் அம்மாவுக்கு தெரியணும், அப்படி தெரிந்தால் தான் எனக்கு கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வைப்பாங்க' என்று மீனா மீண்டும் தன் காதலின் ஆழத்தை அவள் அன்னையின் முன்னே தெரியப்படுத்தினாள்.
' நீ பண்ண வேலையால், இந்நேரம் நாங்க தான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் குடும்பத்தோட உக்காந்து இருப்போம்' என்று ஜீவானந்தம் சொல்ல,
'நான் தான் டாக்டர்க்கிட்ட சொல்லி food பாய்சன்னு சொல்ல சொல்லிட்டேனே!' என்றாள் மீனா.
பகுதி- 8
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்க்காமல் மீனா விஷத்தை குடித்தவளை பார்த்து அனைவரும் அலண்டு போனார்கள்.
'ஐயோ! மீனா!' என்று முல்லை பதறிப்போய் மீனாவை மடியில் தாங்கினாள்.
மீனாவின் செயலில் கதிர்வேலனும் ஜீவானந்தமும் செய்வதரியாமல் சிலையென நின்றார்கள்.
'ஐயோ என் பொண்ணுக்கு என்னாச்சு!?' என கஸ்தூரி வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு துடித்து போனார்.
"டேய் என்னங்கடா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க... போங்க! போய் வண்டியை எடுங்க" என்று பாண்டியன் சொன்னதும், கதிர்வேலன் மீனாவை தூக்க போனார்.
'வாத்தி இருங்க' என ரோஜா கையில் பச்சிளம் இலைகளோடு ஓடி வந்தவள், உள்ளங்கையில் வைத்து கசக்கி அதை மீனாவை உட்கொள்ள வைத்தாள்.
இலையின் சாறு மீனாவின் தொண்டை குழியில் இறங்கியதும்,குடலை பிரட்டிக்கொண்டு மீனா வாந்தி எடுத்து மயங்கி சரிந்தாள்.
'பெரியவரே! நீங்க காரை எடுங்க, வாத்தி வாங்க மீனாவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம்' என்று ரோஜா சொல்ல,
'ஐயோ என் பொண்ணு' என்று அலறி அடித்துக்கொண்டு கஸ்தூரியும் இவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
மீனாவின் செயலில் முல்லைக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
தன் தங்கை கஸ்தூரியின் செயலில் பாண்டியனின் கோவம் தலைக்கேரியது.
'மாமா... நீங்க வேணும்னா மீனாவை ஜீவா மாமாவுக்கே கல்யாணம் பண்ணி தந்துடுங்க' என்று முல்லை அழுதுக்கொண்டே சொல்ல,
'ஆனால் மீனா கதிரை தானே நேசிக்கிறாள்!' என்றார் பாண்டியன்.
'ஆனா மாமா... கஸ்தூரி சித்திக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையே' என முல்லை சொன்னதும்,
'தாலி கட்ட போறவன் சம்மந்தமும், தாலியை வாங்கிக்க போற பொண்ணோட சம்மதமும் தான் எனக்கு முக்கியம்' என்று தன் முடிவை சொன்னார் பாண்டியன்.
தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நினைத்து முல்லைக்கு கண்கள் ஈரமானது.
தாயை இழந்த முல்லைக்கு தகப்பனின் அரவணைப்பும் இல்லை என்ற காரணத்த்தால் எப்போதும் பாண்டியனுக்கு முல்லை மீது கூடுதலான அக்கறை இருந்தது.
'அம்மாடி முல்ல... நீ கலங்காதே! யார் என்ன சொன்னாலும் நீ தான் இந்த வீட்டு மருமகள்' என பாண்டியன் தீர்க்கமாக சொல்ல,
'மாமா...மீனாவை அழைச்சிட்டு போன ஹாஸ்பிடலுக்கு நம்மளும் போவோமா!?' என முல்லை கேட்டாள்.
'வேண்டாம் முல்ல.
நம்ம இப்போ அங்கே போனால் கஸ்தூரி வாய்க்கு வந்த வசையை பாடிக்கிட்டு இருப்பாள், அதான் பசங்க மூணு பேரும் போய் இருக்காங்களே! அவங்க பார்த்துப்பாங்க' என்று பாண்டியன் சொல்ல, மீனாவிற்கு எந்த விபரீதமும் நேர்ந்திடக் கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டாள் முல்லை.
******************
மருத்துவமனையில் மீனாவுக்கு மருத்துவர் சிகிச்சை கொடுக்க,'என்ன சார் தற்கொலை முயற்சியா!? போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிங்களா!?'என்று கேட்டார் செவிலியர்.
தன் மகளின் பெயரில் போலீஸ் கேஸ் எல்லாம் வந்தால் அவள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணிய கஸ்தூரி,
'தற்கொலை முயற்சி எல்லாம் இல்லிங்க! குடும்ப சண்டை அவ்ளோ தான்' என்றார்.
'என்ன பிரச்சனையா இருந்தாலும் போலீஸ்க்கு தெரியப்படுத்தனும்' என்று செவிலியர் சொல்ல,
'என்ன இங்க பிரச்சனை?' என்ற கேள்வியோடு அங்கே சிவில் ட்ரெஸ்ஸில் காவலர் சுந்தரேசன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
சுந்தரேசத்தை பார்த்த ஜீவானந்தன்,'கதிரு! நீ எதுவும் பேசிக்காத, நான் பார்த்துக்குறேன்' என்றார்.
'ஏன்!? நான் பேசினா தான் என்னவாம்!?' என்ற கதிர்வேலன் சண்டைக்கோழியை போல அவனை முறைத்து பார்க்க,
சுந்தரோ இவர்கள் இடையே நின்று இருந்த ரோஜாவை ஒரு மார்க்கமாக பார்த்து இருந்தான்.
தன் தங்கையின் மீது காரணமே இல்லாமல் பார்வையை பதித்து இருந்த சுந்தரின் கண் முன்னே தன் விரல்களை சுண்டி, 'அங்க என்ன பார்வை!' என்று கேட்ட கதிர்வேலனின் முகம் இறுகியது.
தன் பார்வையை சட்டென்று ஜீவானந்தம் மற்றும் கதிர்வேலனிடம் திருப்பிய சுந்தரேசன்,'இங்க என்ன பிரச்சனைன்னு கேட்டேன்' என்றான்.
'சார்! இவங்க வீட்டு பொண்ணு விஷம் குடிச்சிட்டாங்க, அதான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ண சொன்னேன்' என்று செவிலியர் சொல்ல,
'ஓ!.... நல்லதா போச்சு! நானும் இந்த வாய்ப்புக்காக தான் காத்து இருந்தேன்' என்றான் ASI சுந்தரேசன்.
'நீங்க வாய்ப்புக்கு காத்து இருந்தாலும் சரி! வாழைப்பழத்துக்கு காத்து இருந்தாலும் சரி, போய் அந்த பக்கம் ஓரமா நின்னு காத்து இருங்க' என்ற கதிர்வேலனின் பேச்சில் ரோஜா சூழ்நிலை மறந்து சிரித்து இருந்தாள்.
தன்னை அவமானம் படுத்தும்படி பேசும் கதிர்வேலனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் காத்து இருந்த சுந்தரேசனுக்கு இந்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல்,'சிஸ்டர்! உள்ள patient கண்டிஷன் எப்படி இருக்கு' என்று மீனாவை பற்றி கேட்டான் சுந்தரேசன்.
'அவங்க! ' என்று சுந்தரேசன் கேட்ட கேள்விக்கு செவிலியர் பதில் சொல்லும் முன்னே,
'அனேகமா நான் அடிச்ச அடிக்கு, patient உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும்' என்று கதிர்வேலன் சொல்ல,தன் அண்ணனின் பதிலை கேட்டு புருவம் உயர்த்தினாள் ரோஜா.
தன் தங்கையின் மனதில் எழுந்த கேள்வியை அறிந்து இருந்த கதிர்வேலன்,'என்ன ம்மா! இவனை யாருன்னு உங்களுக்கு தெரியலையா! இவன் தான் சுந்தரேசன், நான் காலேஜ் புகுந்து அடித்தேனே வாத்தியார் ஸ்ரீனிவாசன், அவனோட அருமை அண்ணன்' என்றார் கதிர்வேலன்.
சுந்தரேசனை பற்றி தெரிந்ததும் ரோஜாவின் முகத்தில் அருவருப்பான பாவனை தோன்றியது,
இன்னும் ஒரு வாரத்தில் தன் தம்பிக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்று இருக்க காரணமே இந்த கதிர்வேலன் தான் என்று அறிந்து இருந்த சுந்தரேசனுக்கு எப்படியாவது அவன் அனுபவித்த அதே வழியை கதிர்வேலனுக்கு தர வேண்டும் என்று நினைத்தவனின் பார்வை மீண்டும் ரோஜாவின் மீது படிந்தது.
இவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி நின்று இருக்க,'அவங்க இப்போ நல்லா இருக்காங்க, நீங்க போய் பார்க்கலாம்' என்றப்படி மருத்துவர் மீனா இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார்.
தன் மகளுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்ற செய்தியை கேட்டு கஸ்தூரிக்கு நிம்மதி எழுந்தது.
'என்ன டாக்டர் sucide கேஸ் தானே! நீங்க ஏன் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணல' என்று சுந்தரேசன் கேக்க,
'sucide கேஸ்ன்னு யார் சொன்னாங்க!? அவங்களுக்கு food பாய்சன் ஆகியிருக்கு' என்றார் மருத்துவர்.
மருத்துவரின் பதிலில் சுந்தரேசனின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
'ஆமா! இந்த விஷயதுக்கே போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லுறியே! உன் தொம்பிக்கு எங்கேயோ படாத இடத்துல பட்டு,
விடக்கூடாத நரம்பு விட்டு போச்சாம்மே! அப்போ அந்த அசம்பவிதத்துக்கு எல்லாம் என்னனு நீ ரிப்போட் பண்ணி இருப்ப!?' என்று கதிர்வேலன் தனக்கே உரிய கிண்டலான பாவனையில் கேட்டதும், சுந்தரேசனின் முகத்தில் கோவகனல் வெடித்தது.
'வாத்தி! இவருக்கிட்ட நமக்கு என்ன பேச்சு! வாங்க நம்ம போய் மீனாவை பார்க்கலாம்!' என்று ரோஜா தன் அண்ணன்களை அழைத்துக்கொண்டு மீனா இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைய,
'என் தம்பி வாழ்க்கையை அழித்த இந்த கதிர்வேலனோட தங்கச்சி வாழ்க்கையை நான் அழித்தே தீருவேன்'என்று தன் மனதில் மண் கோட்டை கட்டினான் ASI சுந்தரேசன்.
**********************
சிகிச்சை அறைக்குள் அனைவரும் நுழைந்த சமயம் மீனா சோர்வாக கட்டிலில் படுத்து இருக்க, உள்ளே வந்த வேகத்தில் தன் மகளின் இருப்பக்க கன்னத்திலும் ஆத்திரம் தீர அறைந்து இருந்தாள் கஸ்தூரி.
'இந்த அடியை கொடுக்க தான், கடவுளே மீனாவை காப்பாற்றி கொடுன்னு கஸ்தூரி அத்த அவ்வளவு நேரம் அழுதுச்சா!' என்று கதிர்வேலன் இயல்பாக கேட்க,'வாத்தி கொஞ்சம் அமைதியா இருங்க! பாவம் மீனா' என்றாள் ரோஜா.
'பாவி மவளே ஏன் டி இப்படி பண்ண!' என்று கதறி அழுத தன் அன்னையின் குரலை மீறி மீனாவின் பார்வை கதிர்வேலனின் மீது படிந்தது.
'மீனா! நீ படிச்ச பொண்ணு தானே.
எந்த பிரச்சனை வந்தாலும் நின்னு போராடனும்ன்னு உனக்கு தெரியாதா!' என்று கண்டித்தார் ஜீவானந்தம்.
'காதலுக்காக நான் உயிரை விடக்கூட தயாராக இருக்கேன்னு என் அம்மாவுக்கு தெரியணும், அப்படி தெரிந்தால் தான் எனக்கு கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வைப்பாங்க' என்று மீனா மீண்டும் தன் காதலின் ஆழத்தை அவள் அன்னையின் முன்னே தெரியப்படுத்தினாள்.
' நீ பண்ண வேலையால், இந்நேரம் நாங்க தான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் குடும்பத்தோட உக்காந்து இருப்போம்' என்று ஜீவானந்தம் சொல்ல,
'நான் தான் டாக்டர்க்கிட்ட சொல்லி food பாய்சன்னு சொல்ல சொல்லிட்டேனே!' என்றாள் மீனா.