New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி- 7
கதிர்வேலனுடன் முல்லையும் ரோஜாவும் பாண்டியனின் வீட்டுக்குள் நுழைய, கேசவனின் தலையில் ரத்தம் கசிந்தது.
'டேய்... ஏன் என் தம்பி மண்டையை உடைச்ச' என்ற பார்வதி பதறிப்போய் கேசவனின் தலையில் தன் புடவையை கிழித்து கட்டு போட்டு விட்டார்.
'என் அண்ணன் மேல இவன் கை வச்சதுக்கு இவன் கையை தான் நான் உடைத்து இருக்கனும்' என்ற கதிர்வேலனின் பின்னே நின்று இருந்த முல்லையை பார்த்து முருகன் கோவமாக நெருங்கியவர் சட்டென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
முருகன் அறைந்த வேகத்தில் முல்லை கீழே விழுந்தவளை ஜீவானந்தம் பதறிப்போய் தூக்கியவாறு,'பொம்பள பிள்ளையை கையை நீட்டி அடிக்கிறீங்களே! உங்களுக்கு அறிவு இருக்கா?' என்றப்படி முல்லையை தன்னோடு அணைத்தப்படி பிடித்துக்கொண்டார்.
முல்லையின் ஒரு பக்க கன்னம் வீக்கமாக இருக்க, அவள் தேம்பி அழும் காட்சியை பார்த்து கதிர்வேலனுக்கு கோவம் எழுந்தது.
'ஏய் முல்லை... நான் அவ்வளவு கண்டித்தும் இந்த சண்டி பையன்கூட வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கியே!உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்' என்ற முருகன் மீண்டும் முல்லையை அடிக்க கை ஓங்கியதும், கதிர்வேலன் முருகனின் கையை பிடித்து வேகமாக தள்ளி விட்ட வேகத்தில் முருகன் இரண்டடி தள்ளிப்போய் விழப் போனவரை பார்வதி தாங்கி பிடித்துக்கொண்டார்.
'டேய்... என் மாமா மேலையே கை வைக்கிறியா!' என மீண்டும் கேசவன் கதிர்வேலனை அடிக்க வந்ததும்,இந்த முறை ஜீவானந்தம் கேசவன் மார்பில் எத்தி ஒரு மிதி மிதிக்க அவனோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
'அட பாவிங்களா! வீடு புகுந்து எங்க பொண்ணை தூக்கிட்டு போனது இல்லாமல்! இப்போ நியாயம் கேக்க வந்த என் தம்பியையும் என் புருஷனையும் இப்படி மாறி மாறி அடிக்கிறிங்களே! நீங்க நல்லா இருப்பிங்களா' என்று பார்வதி தன் அலப்பறையை ஆரம்பித்தார்.
'இங்க பாருங்க அத்த... நடு வீட்டுல நின்னுகிட்டு இப்படி சாபம் எல்லாம் விடாதீங்க, யாரும் முல்லையை தூக்கிட்டு வரல, முல்லைக்கு நீங்க கட்டாய கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணதால தான் அவ எங்ககூட கிளம்பி வந்து இருக்காள்' என்று ரோஜா சொன்னதும்,
'என்ன ரோஜா சொல்லுற! முல்லைக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்களா!' என்ற ஜீவானந்தம் தன் அருகே கண்ணீருடன் நின்று இருந்த முல்லையின் கரங்களை ஆறுதலாக பற்றிகொண்டார்.
ஜீவானந்ததுடன் முல்லையை பார்த்த முருகனுக்கு இயல்புக்கு மாறாக கோவம் அதிகரித்தது.
முருகன் பொறுமையாக எடுத்து சொல்லியும் முல்லை அவர் பேச்சை மீறி இன்று பாண்டியனின் வீட்டிற்கு வந்ததை விரும்பாத முருகன் எப்படியாவது முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
'முல்ல... இப்போ என்ன!? உனக்கு கேசவனை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லையா!? சரி வா நான் உனக்கு வேற மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி தரேன்' என்ற முருகன் தன் மகளின் கையை பிடிக்க வந்ததும், முருகனின் கையை தட்டி விட்டார் கதிர்வேலன்.
'டேய் கதிரு... என் மகளை நான் அழைச்சிட்டு போக போறேன்! இதுல நீ ஏன் டா இடையில வர' என்ற முருகனை பார்த்து,
'உங்க இடையில வடையில கொடையில எல்லாம் வர எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை,
முல்லை உங்க பொண்ணு தான், ஆனா இனிமே அவ இந்த வீட்டு மருமக' என்ற கதிர்வேலனின் பேச்சைக் கேட்டு பாண்டியன் ஜீவானந்தத்தை பார்த்தார்.
'டேய் தம்பி என்னடா சொல்லுற!' என்ற ஜீவானந்ததின் கேள்விக்கு,
'ஆமா... இனிமே முல்லை முருகன் மாமா வீட்டுக்கு போறதா இருந்தா அது பாண்டியன் வீட்டு மருமகளா தான் போகணும்' என்று தீர்க்கமாக சொன்னார் கதிர்வேலன்.
'டேய்... நீ வீடு புகுந்து இவங்க வீட்டு பொண்ணை தூக்கியதா உன் மேல இவங்க கம்பளைண்ட் பண்ணி இருக்காங்க, அதனால தான் நாங்க இங்க உங்கள விசாரிக்க வந்தோம், ஆனா நீங்க என்ன மருமக மருமகன்னு உங்க குடும்ப விஷயத்தை பேசிக்கிட்டு இருக்கீங்க' என்று காவலத்துறை அதிகாரி கதிர்வேலனை பார்த்து கோபத்துடன் கேட்டார்.
'சார்... இவன் எனக்கு மருமகன் எல்லாம் இல்லை சார்! நான் சொன்னது போல இவன் என் மகளை கடத்திகிட்டு தான் வந்து இருக்கான்'என்று முருகன் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
'சார்... இவரு பொய் சொல்லுறாரு சார், நீங்க வேணா முல்லைகிட்டயே கேளுங்க, அவளே உண்மையயை சொல்லுவா' என்று ரோஜா சொல்ல,
'இந்தாமா! உன் அப்பா சொன்ன மாதிரி உன்னை இவன் கடத்திட்டு வந்தானா' என்ற காவல்துறையினர் கதிர்வேலனை சுட்டிக்காட்டி கேட்டார்.
காவலரின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே முல்லை தன் அப்பாவை பார்த்ததும், முருகனோ கண்களால் முல்லையை மிரட்டிக்கொண்டு இருந்தார்.
'சொல்லுமா... இவன் தான் உன்னை வீடு புகுந்து தூக்கிட்டு வந்தானா' என்று மீண்டும் காவலர் கேட்க,
'க்கும்... அதான் கடைசி வரைக்கும் இந்த ரவா லட்டை எவனுமே என்னை தூக்கவே விடலையே' என சஞ்சலப்பட்ட கதிர்வேலனின் காலை ஓங்கி மித்தித்தாள் ரோஜா.
காவலரின் கேள்விக்கு பதில் தராமல் நின்று இருந்த முல்லையை பார்த்து,
'முல்ல... என்னமா! கதிர் தான் உன் விருப்பம் இல்லாமல் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தானா' என்று பாண்டியன் கேட்க,
'ஹையோ இல்லிங்க பெரிய மாமா,
மாமா சார் என்னை தூக்கிட்டு வரல' என்றவள் தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்து சற்று பயந்து தான் போனாள்.
'மாமா சார் என்னை தூக்கிட்டு வரல, என் விருப்பமே இல்லாமல் கேசவன் கூட எங்க அப்பா எனக்கு நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணாரு, அதனால தான் நானே இவங்க கூட இங்க கிளம்பி வந்துட்டேன்' என்ற முல்லையின் பார்வை இந்த முறை பாண்டியன் மீது பதிந்து இருந்தது.
'அப்புறம் என்ன சார்... அதான் என் மருமகளே உண்மையை சொல்லிட்டாளே, இனி உங்களுக்கு இங்க என்ன வேலை. நீங்க கிளம்புங்க' என்று காவலாளியிடம் பாண்டியன் சொன்னதும்,
'சார் சார்... எங்க வீட்டு பொண்ணை எங்க கூட அனுப்பி வைக்க சொல்லுங்க சார்' என்று பார்வதி காவலாலியுடம் கெஞ்சிகேட்டு கொண்டார்.
'அதான் அவங்க வீட்டு பொண்ணை அவங்க கூப்பிடுறாங்களே! அனுப்பி வையுங்க' என்று காவலர் பாண்டியணை பார்த்து சொல்ல,
'அதெல்லாம் அனுப்ப முடியாது சார், அடுத்த முகூர்த்தத்துல முல்லைக்கு இதே வீட்டுல கல்யாணம் நடக்க போகுது,வேணும்னா கல்யாணம் முடிந்த பின்னாடி மறுவீட்டுக்கு அவங்க பொண்ணை மாப்பிளைக்கிட்ட வந்து மரியாதையா முறையா பேசி அழைச்சிட்டு போக சொல்லுங்க' என்ற கதிர்வேலன் ஒரு பக்க சட்டை காலரை தூக்கிவிட்டப்படி தெளிவாக பேசி முடித்தார்.
'டேய்... யாரு பொண்ணுக்கு யாரு கல்யாணம் பண்ணி வைக்கிறது,
நான் ஒருத்தன் உயிரோட இருக்குற வரைக்கும் முல்லை கழுத்துல யாரும் தாலி கட்ட முடியாது' என்று கேசவன் வில்லத்தனமான வசனத்தை பேசிக்கொண்டு இருக்க,
'செத்து போ... அப்போ செத்து போடா பிக்காளி பையலே!' என்று கதிர்வேலன் கேசவனை பார்த்து சொன்னதும், ரோஜா சட்டென்று சிரித்துவிட்டாள்.
'டேய் கதிரு வேணா... என்னை பத்தி உனக்கு தெரியாது, நீ நினைக்கிற மாதிரி நான் சாதாரண ஆளு இல்லை, நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவேன் டா' என்று கேசவன் கைகளை மடக்கி நாக்கை கடித்து கதிர்வேலனை அடிக்க கை ஓங்கியவனின் முகத்தின் எதிரே தன் அதரங்களை குவித்து uff என்று கதிர்வேலன் ஊதிய வேகத்தில் கேசவன் கண்கள் அசந்தவனின் உச்சி தலையயை பார்த்து நங் என்று குட்டு வைத்தார் கதிர்வேலன்.
'டேய் டேய்...என் தம்பியை அடிக்காத டா' என்று பார்வதி அலறியதும்,'அப்போ இந்த ஜந்துவை இங்க இருந்து உருட்டிகிட்டு போங்க' என்றார் கதிர்வேலன்.
முல்லையை கதிர்வேலன் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை என்று முல்லையே சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்,'சார்... உங்க பொண்ணு விருப்பதோடு தான் இவங்க கூட வந்து இருக்காங்க, இனிமே இதுல நாங்க ஏதும் பண்ண முடியாது' என்ற கவலாளிகள் பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
காவலரை அணுகினால் மட்டுமே முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல முடியும் என்று எண்ணிய முருகனுக்கு முல்லையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
முருகனின் சொந்தக்கார்கள் நான்கு ஐந்து பேர் அவர்களுக்குள் எதையோ பேசியப்படி இருக்க,'யோவ்...உங்கள எல்லாம் நான் எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தேன்!வாங்கயா! வந்து என் மகளை என்னோட அனுப்பி வைக்க சொல்லுங்க' என்று முருகன் தன் உறவினர்களை இவருக்காக பரிந்து பேச அழைத்து இருந்தார்.
'பாண்டியா... நீயும் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தானே! அதுவும் இல்லாம உன் வீட்டுலயும் வயசு பொண்ணு இருக்குது பா, இதெல்லாம் யோசிச்சு பார்த்து முருகன் மகளை அவரோடு அனுப்பி வையுங்க பாண்டியா' என்றார் முருகனின் உறவுக்காரர் ஒருவர்.
'நீங்க சொல்லுறது வாஸ்துவம் தான், ஆனா என் தங்கச்சி மகளுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை இவரு ஏற்பாடு பண்ணப் போய் தானே அவ தாய்மாமன் என்ற முறையில என்னை நாடி வந்து இருக்கா! நான் எப்படி அவளை மறுபடியும் இவங்க கூட அந்த நகரத்துக்கு அனுப்பி வைக்க முடியும்' என்று கேட்டார் பாண்டியன்.
'முருகா... பாண்டியன் சொல்லுறதும் நியாயம் தானே முருகா, உன் பொண்ணுக்கு ஏன் நீ விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணி வைக்க துடிக்கிற' என்று பெரியவர்களில் ஒருவர் கேட்டதும்,
'யோவ்... அவ என் மக, அவ தலையை துண்டா சீவக் கூட எனக்கு உரிமை இருக்கு' என்ற முருகனின் பேச்சைகேட்டு முல்லை மேலும் கண்கள் கலங்கினாள்.
'ஹலோ மிஸ்டர் மீசை... உங்க தலை முடியை சீவ மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு, உங்க மகளாகவே இருந்தாலும் முல்லை விருப்பம் இல்லாமல் நீங்க அவ தலை முடியில இருந்து ஒன்றை கூட பிடுங்க முடியாது' என்ற கதிர்வேலனை பார்த்து முருகன் கோவப்பார்வை வீசினார்.
'ப்ச் வாத்தி...நீங்க அமைதியா இருங்க,அப்பா... முருகன் மாமா இவ்ளோ பேசிய பின்னாடியும் இவர்கூட நம்ம முல்லையை அனுப்பி வைக்க வேண்டாம், பேசாம வாத்தி சொன்னது போலவே முல்லைக்கும பெரியவருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுங்க' என்று ரோஜா சொன்னதும்,
ஜீவானந்தம் காதலாக முல்லையை பார்க்க, முல்லை அந்த ஒரு பார்வையில் மகிழ்ச்சி அடைய, தன் காதல் நிறைவேற வில்லையென்றாலும் தன் அண்ணனின் காதல் கைக்கூட வேண்டும் என்று எண்ணினார் கதிர்வேலன்.
'ஏய்... யாரு பொண்ணுக்கு யார் கல்யாணம் பண்ணி வைக்கிறது' என்ற முருகனின் கோவமான கர்ஜனையில் ஒரு நொடி முல்லை அலண்டு போய் தன் தந்தையை பார்த்தவளை ஜீவானந்தம் தைரியம் சொல்லும் விதமாக அவள் கையை இறுக பற்றிகொண்டார்.
பகுதி- 7
கதிர்வேலனுடன் முல்லையும் ரோஜாவும் பாண்டியனின் வீட்டுக்குள் நுழைய, கேசவனின் தலையில் ரத்தம் கசிந்தது.
'டேய்... ஏன் என் தம்பி மண்டையை உடைச்ச' என்ற பார்வதி பதறிப்போய் கேசவனின் தலையில் தன் புடவையை கிழித்து கட்டு போட்டு விட்டார்.
'என் அண்ணன் மேல இவன் கை வச்சதுக்கு இவன் கையை தான் நான் உடைத்து இருக்கனும்' என்ற கதிர்வேலனின் பின்னே நின்று இருந்த முல்லையை பார்த்து முருகன் கோவமாக நெருங்கியவர் சட்டென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
முருகன் அறைந்த வேகத்தில் முல்லை கீழே விழுந்தவளை ஜீவானந்தம் பதறிப்போய் தூக்கியவாறு,'பொம்பள பிள்ளையை கையை நீட்டி அடிக்கிறீங்களே! உங்களுக்கு அறிவு இருக்கா?' என்றப்படி முல்லையை தன்னோடு அணைத்தப்படி பிடித்துக்கொண்டார்.
முல்லையின் ஒரு பக்க கன்னம் வீக்கமாக இருக்க, அவள் தேம்பி அழும் காட்சியை பார்த்து கதிர்வேலனுக்கு கோவம் எழுந்தது.
'ஏய் முல்லை... நான் அவ்வளவு கண்டித்தும் இந்த சண்டி பையன்கூட வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கியே!உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்' என்ற முருகன் மீண்டும் முல்லையை அடிக்க கை ஓங்கியதும், கதிர்வேலன் முருகனின் கையை பிடித்து வேகமாக தள்ளி விட்ட வேகத்தில் முருகன் இரண்டடி தள்ளிப்போய் விழப் போனவரை பார்வதி தாங்கி பிடித்துக்கொண்டார்.
'டேய்... என் மாமா மேலையே கை வைக்கிறியா!' என மீண்டும் கேசவன் கதிர்வேலனை அடிக்க வந்ததும்,இந்த முறை ஜீவானந்தம் கேசவன் மார்பில் எத்தி ஒரு மிதி மிதிக்க அவனோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
'அட பாவிங்களா! வீடு புகுந்து எங்க பொண்ணை தூக்கிட்டு போனது இல்லாமல்! இப்போ நியாயம் கேக்க வந்த என் தம்பியையும் என் புருஷனையும் இப்படி மாறி மாறி அடிக்கிறிங்களே! நீங்க நல்லா இருப்பிங்களா' என்று பார்வதி தன் அலப்பறையை ஆரம்பித்தார்.
'இங்க பாருங்க அத்த... நடு வீட்டுல நின்னுகிட்டு இப்படி சாபம் எல்லாம் விடாதீங்க, யாரும் முல்லையை தூக்கிட்டு வரல, முல்லைக்கு நீங்க கட்டாய கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணதால தான் அவ எங்ககூட கிளம்பி வந்து இருக்காள்' என்று ரோஜா சொன்னதும்,
'என்ன ரோஜா சொல்லுற! முல்லைக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்களா!' என்ற ஜீவானந்தம் தன் அருகே கண்ணீருடன் நின்று இருந்த முல்லையின் கரங்களை ஆறுதலாக பற்றிகொண்டார்.
ஜீவானந்ததுடன் முல்லையை பார்த்த முருகனுக்கு இயல்புக்கு மாறாக கோவம் அதிகரித்தது.
முருகன் பொறுமையாக எடுத்து சொல்லியும் முல்லை அவர் பேச்சை மீறி இன்று பாண்டியனின் வீட்டிற்கு வந்ததை விரும்பாத முருகன் எப்படியாவது முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
'முல்ல... இப்போ என்ன!? உனக்கு கேசவனை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லையா!? சரி வா நான் உனக்கு வேற மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி தரேன்' என்ற முருகன் தன் மகளின் கையை பிடிக்க வந்ததும், முருகனின் கையை தட்டி விட்டார் கதிர்வேலன்.
'டேய் கதிரு... என் மகளை நான் அழைச்சிட்டு போக போறேன்! இதுல நீ ஏன் டா இடையில வர' என்ற முருகனை பார்த்து,
'உங்க இடையில வடையில கொடையில எல்லாம் வர எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை,
முல்லை உங்க பொண்ணு தான், ஆனா இனிமே அவ இந்த வீட்டு மருமக' என்ற கதிர்வேலனின் பேச்சைக் கேட்டு பாண்டியன் ஜீவானந்தத்தை பார்த்தார்.
'டேய் தம்பி என்னடா சொல்லுற!' என்ற ஜீவானந்ததின் கேள்விக்கு,
'ஆமா... இனிமே முல்லை முருகன் மாமா வீட்டுக்கு போறதா இருந்தா அது பாண்டியன் வீட்டு மருமகளா தான் போகணும்' என்று தீர்க்கமாக சொன்னார் கதிர்வேலன்.
'டேய்... நீ வீடு புகுந்து இவங்க வீட்டு பொண்ணை தூக்கியதா உன் மேல இவங்க கம்பளைண்ட் பண்ணி இருக்காங்க, அதனால தான் நாங்க இங்க உங்கள விசாரிக்க வந்தோம், ஆனா நீங்க என்ன மருமக மருமகன்னு உங்க குடும்ப விஷயத்தை பேசிக்கிட்டு இருக்கீங்க' என்று காவலத்துறை அதிகாரி கதிர்வேலனை பார்த்து கோபத்துடன் கேட்டார்.
'சார்... இவன் எனக்கு மருமகன் எல்லாம் இல்லை சார்! நான் சொன்னது போல இவன் என் மகளை கடத்திகிட்டு தான் வந்து இருக்கான்'என்று முருகன் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
'சார்... இவரு பொய் சொல்லுறாரு சார், நீங்க வேணா முல்லைகிட்டயே கேளுங்க, அவளே உண்மையயை சொல்லுவா' என்று ரோஜா சொல்ல,
'இந்தாமா! உன் அப்பா சொன்ன மாதிரி உன்னை இவன் கடத்திட்டு வந்தானா' என்ற காவல்துறையினர் கதிர்வேலனை சுட்டிக்காட்டி கேட்டார்.
காவலரின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே முல்லை தன் அப்பாவை பார்த்ததும், முருகனோ கண்களால் முல்லையை மிரட்டிக்கொண்டு இருந்தார்.
'சொல்லுமா... இவன் தான் உன்னை வீடு புகுந்து தூக்கிட்டு வந்தானா' என்று மீண்டும் காவலர் கேட்க,
'க்கும்... அதான் கடைசி வரைக்கும் இந்த ரவா லட்டை எவனுமே என்னை தூக்கவே விடலையே' என சஞ்சலப்பட்ட கதிர்வேலனின் காலை ஓங்கி மித்தித்தாள் ரோஜா.
காவலரின் கேள்விக்கு பதில் தராமல் நின்று இருந்த முல்லையை பார்த்து,
'முல்ல... என்னமா! கதிர் தான் உன் விருப்பம் இல்லாமல் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தானா' என்று பாண்டியன் கேட்க,
'ஹையோ இல்லிங்க பெரிய மாமா,
மாமா சார் என்னை தூக்கிட்டு வரல' என்றவள் தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்து சற்று பயந்து தான் போனாள்.
'மாமா சார் என்னை தூக்கிட்டு வரல, என் விருப்பமே இல்லாமல் கேசவன் கூட எங்க அப்பா எனக்கு நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணாரு, அதனால தான் நானே இவங்க கூட இங்க கிளம்பி வந்துட்டேன்' என்ற முல்லையின் பார்வை இந்த முறை பாண்டியன் மீது பதிந்து இருந்தது.
'அப்புறம் என்ன சார்... அதான் என் மருமகளே உண்மையை சொல்லிட்டாளே, இனி உங்களுக்கு இங்க என்ன வேலை. நீங்க கிளம்புங்க' என்று காவலாளியிடம் பாண்டியன் சொன்னதும்,
'சார் சார்... எங்க வீட்டு பொண்ணை எங்க கூட அனுப்பி வைக்க சொல்லுங்க சார்' என்று பார்வதி காவலாலியுடம் கெஞ்சிகேட்டு கொண்டார்.
'அதான் அவங்க வீட்டு பொண்ணை அவங்க கூப்பிடுறாங்களே! அனுப்பி வையுங்க' என்று காவலர் பாண்டியணை பார்த்து சொல்ல,
'அதெல்லாம் அனுப்ப முடியாது சார், அடுத்த முகூர்த்தத்துல முல்லைக்கு இதே வீட்டுல கல்யாணம் நடக்க போகுது,வேணும்னா கல்யாணம் முடிந்த பின்னாடி மறுவீட்டுக்கு அவங்க பொண்ணை மாப்பிளைக்கிட்ட வந்து மரியாதையா முறையா பேசி அழைச்சிட்டு போக சொல்லுங்க' என்ற கதிர்வேலன் ஒரு பக்க சட்டை காலரை தூக்கிவிட்டப்படி தெளிவாக பேசி முடித்தார்.
'டேய்... யாரு பொண்ணுக்கு யாரு கல்யாணம் பண்ணி வைக்கிறது,
நான் ஒருத்தன் உயிரோட இருக்குற வரைக்கும் முல்லை கழுத்துல யாரும் தாலி கட்ட முடியாது' என்று கேசவன் வில்லத்தனமான வசனத்தை பேசிக்கொண்டு இருக்க,
'செத்து போ... அப்போ செத்து போடா பிக்காளி பையலே!' என்று கதிர்வேலன் கேசவனை பார்த்து சொன்னதும், ரோஜா சட்டென்று சிரித்துவிட்டாள்.
'டேய் கதிரு வேணா... என்னை பத்தி உனக்கு தெரியாது, நீ நினைக்கிற மாதிரி நான் சாதாரண ஆளு இல்லை, நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவேன் டா' என்று கேசவன் கைகளை மடக்கி நாக்கை கடித்து கதிர்வேலனை அடிக்க கை ஓங்கியவனின் முகத்தின் எதிரே தன் அதரங்களை குவித்து uff என்று கதிர்வேலன் ஊதிய வேகத்தில் கேசவன் கண்கள் அசந்தவனின் உச்சி தலையயை பார்த்து நங் என்று குட்டு வைத்தார் கதிர்வேலன்.
'டேய் டேய்...என் தம்பியை அடிக்காத டா' என்று பார்வதி அலறியதும்,'அப்போ இந்த ஜந்துவை இங்க இருந்து உருட்டிகிட்டு போங்க' என்றார் கதிர்வேலன்.
முல்லையை கதிர்வேலன் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை என்று முல்லையே சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்,'சார்... உங்க பொண்ணு விருப்பதோடு தான் இவங்க கூட வந்து இருக்காங்க, இனிமே இதுல நாங்க ஏதும் பண்ண முடியாது' என்ற கவலாளிகள் பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
காவலரை அணுகினால் மட்டுமே முல்லையை தன்னுடன் அழைத்து செல்ல முடியும் என்று எண்ணிய முருகனுக்கு முல்லையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
முருகனின் சொந்தக்கார்கள் நான்கு ஐந்து பேர் அவர்களுக்குள் எதையோ பேசியப்படி இருக்க,'யோவ்...உங்கள எல்லாம் நான் எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தேன்!வாங்கயா! வந்து என் மகளை என்னோட அனுப்பி வைக்க சொல்லுங்க' என்று முருகன் தன் உறவினர்களை இவருக்காக பரிந்து பேச அழைத்து இருந்தார்.
'பாண்டியா... நீயும் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தானே! அதுவும் இல்லாம உன் வீட்டுலயும் வயசு பொண்ணு இருக்குது பா, இதெல்லாம் யோசிச்சு பார்த்து முருகன் மகளை அவரோடு அனுப்பி வையுங்க பாண்டியா' என்றார் முருகனின் உறவுக்காரர் ஒருவர்.
'நீங்க சொல்லுறது வாஸ்துவம் தான், ஆனா என் தங்கச்சி மகளுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை இவரு ஏற்பாடு பண்ணப் போய் தானே அவ தாய்மாமன் என்ற முறையில என்னை நாடி வந்து இருக்கா! நான் எப்படி அவளை மறுபடியும் இவங்க கூட அந்த நகரத்துக்கு அனுப்பி வைக்க முடியும்' என்று கேட்டார் பாண்டியன்.
'முருகா... பாண்டியன் சொல்லுறதும் நியாயம் தானே முருகா, உன் பொண்ணுக்கு ஏன் நீ விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணி வைக்க துடிக்கிற' என்று பெரியவர்களில் ஒருவர் கேட்டதும்,
'யோவ்... அவ என் மக, அவ தலையை துண்டா சீவக் கூட எனக்கு உரிமை இருக்கு' என்ற முருகனின் பேச்சைகேட்டு முல்லை மேலும் கண்கள் கலங்கினாள்.
'ஹலோ மிஸ்டர் மீசை... உங்க தலை முடியை சீவ மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு, உங்க மகளாகவே இருந்தாலும் முல்லை விருப்பம் இல்லாமல் நீங்க அவ தலை முடியில இருந்து ஒன்றை கூட பிடுங்க முடியாது' என்ற கதிர்வேலனை பார்த்து முருகன் கோவப்பார்வை வீசினார்.
'ப்ச் வாத்தி...நீங்க அமைதியா இருங்க,அப்பா... முருகன் மாமா இவ்ளோ பேசிய பின்னாடியும் இவர்கூட நம்ம முல்லையை அனுப்பி வைக்க வேண்டாம், பேசாம வாத்தி சொன்னது போலவே முல்லைக்கும பெரியவருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுங்க' என்று ரோஜா சொன்னதும்,
ஜீவானந்தம் காதலாக முல்லையை பார்க்க, முல்லை அந்த ஒரு பார்வையில் மகிழ்ச்சி அடைய, தன் காதல் நிறைவேற வில்லையென்றாலும் தன் அண்ணனின் காதல் கைக்கூட வேண்டும் என்று எண்ணினார் கதிர்வேலன்.
'ஏய்... யாரு பொண்ணுக்கு யார் கல்யாணம் பண்ணி வைக்கிறது' என்ற முருகனின் கோவமான கர்ஜனையில் ஒரு நொடி முல்லை அலண்டு போய் தன் தந்தையை பார்த்தவளை ஜீவானந்தம் தைரியம் சொல்லும் விதமாக அவள் கையை இறுக பற்றிகொண்டார்.