Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
❤காதல் ஓவியம் ❤..
❤”வெயிட்” என்று சொன்னபடி கதிர் அங்கிருந்த கோவிலில் இருந்து எடுத்து வந்த தாலிக்கயிற்றை, முல்லையின் கழுத்தில் கட்ட, ஓவியகீதாவும், மணியும் கதிரை பதற்றத்துடன் பார்த்தனர். ❤
“ஏய்! ஏன் இப்படி பண்ண?” முல்லையோவியம் அதிர்ந்து கேட்க,
“ம்... ஏன்னா ஐ லவ் யூடி மை பொண்டாட்டி” என்றான்.
“டேய் கதிர்! என்ன காரியம் பண்ணிருக்க?”
மணி கேட்பதை கண்டுகொள்ளாது, “ஏய் அறிவிருக்கா உனக்கு. இதெல்லாம் விளையாட்டா இருக்கா? என்ன காரியம் பண்ணிருக்க... யாரை கேட்டு நீ இதெல்லாம் பண்ற நீ? உன்னை.” ❤என்று சொல்லி முல்லை கையை ஓங்க, கதிர் அவள் கையை தடுத்து நிறுத்தினான் ❤
“ஏய் திருடி. புருஷன கையை நீட்டி எல்லாம் அடிக்கக்கூடாது. நீதான சொன்ன உனக்கு வாழ்க்கை கொடுக்கணும், வாழைக்காய் பஜ்ஜி போடணும்னு. எனக்கு வாழைக்காய் பஜ்ஜி எல்லாம் போட தெரியாது ஆனால், என் வாழ்க்கையை உன் கூட வாழனும்ன்னு முடிவு பண்ணிட்டேன். வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான்.
“ஏய்! லூசா நீ. இதெல்லாம் என்ன விளையாட்டு காரியமா? நான் யாருன்னு தெரியுமா உனக்கு?”
“நீ யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. நீதான சொன்ன என்ன தாலி கட்டச் சொல்லி. அதனாலதான் கட்டினேன்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் கதிர்.
“டேய்! மவனே என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க? இதெல்லாம் சரியில்லைடா” என்றார் கீதா.
“நான் செய்தா எல்லாம் சரிதான்” என்றான்.
“ஏய்! என் குடும்பத்திற்கு தெரிஞ்சா, உன்னை மாறுகை மாறுகால் வாங்கிடுவாங்க இடியட்” என்றாள் ஓவியா.
யார் எதை வாங்கினாலும் சரி. இந்த மாமன் உனக்காக காத்துகிட்டு இருக்கேன். வாடி செல்லம் போகலாம்” ❤ என்று கதிர் காதல் வசனம் பேசிக்கொண்டு இருந்தான்.
முல்லையின் அண்ணன் நவீன், கதிரின் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வாயில் பல்லு குச்சியுடன் வந்தவன், “என்ன பாப்பா? என்ன இங்க பிரச்சனை?” என்று கேட்டான்.
முல்லை கதிர் கட்டிய தாலிக் கயிற்றை எடுத்து சுடிதாருக்குள் போட்டுக்கொண்டு❤ “ஒன்னும் இல்ல அண்ணா. ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள் வேகமாக.
“யாரு இவங்க?” என்றான் புரியாது.
“மச்சான். நான் தான் உன்...”
“இந்த பையனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே அம்மு. இப்பப் புரியுது. இந்த சைக்கிள் இவனோடது தான். அத கேக்க தான் வந்து இருக்கான்.” என்று நவீன் சொல்ல,
“ஏய்! இது என்னோட சைக்கிள் குடு. எங்க மணியை காணோம்?” என்று மணி கேட்டான்.
“என்ன?” நவீன் அதிர்ந்து பார்க்க,
“அட சைக்கிள்ல மணி இருந்துச்சே எங்க காணோம். குடு என் சைக்கிளை?”
“இந்தா உன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடு. எப்பயும் நாங்க திருடின பொருளை அவங்க கண்டுபிடித்தால், நாங்க அவர்கள் கையிலேயே அதைத் திருப்பிக் கொடுத்துடுவோம்.”
“ஆமா கொள்கை விளக்கம் போல.” என்றார் கீதா.
“ஏய் கிழவி! வாயை மூடு. நீ வா ஏஞ்சல் நம்ம போகலாம்.”
“ஏய் எங்க போக சொல்ற? நீ எதுக்கு என் தங்கச்சியை கூப்பிடுற?”
“அது அது ஒன்னும் இல்ல அண்ணா. இவன் ஒரு லூசு. நீ கண்டுக்காத” என்றாள் முல்லை.
“என்னது இவனா? இப்ப தானே சொன்னேன், கட்டின புருஷன அவன் இவன் எல்லாம் சொல்லக்கூடாதுன்னு” என்று மிரட்ட,
“என்ன கட்டின புருஷனா? யாரு யார கட்டிக்கிட்டது?
“அது ஒன்னும் இல்ல அண்ணா. நான் தான் சொன்னேனே இவன் ஒரு லூசு” என்றவள் பொறுமையாக கதிரை பார்த்து, “நீ செஞ்ச வேலையால் என்னென்ன பிரச்சனை வரப் போகுதுன்னு பார்” என்று சத்தமில்லாது திட்டினாள்.
“டேய் மணி! முதல்ல இவனை சைக்கிளில் ஏற்றி அழைச்சுட்டு போடா.”
“இல்ல இல்ல நான் வரமாட்டேன். என்னுடைய ஏஞ்சல் இல்லாம என்னால எங்கயும் வரமுடியாது” என்றான் கதிர்.
“டேய்! அறிவு கெட்டவனே. ஏன்டா இப்படி உயிரை எடுக்குற? அவங்க அண்ணன் வேற நல்ல பயில்வான் பக்கிரிசாமி மாதிரி இருக்கான். அவன் ஓங்கி ஒரு உதை விட்டா நம்மால் நாஸ்த்தா கூட சாப்பிட முடியாது. வாடா போகலாம்.”
“இல்ல இல்ல. நான் என் தேவதை இல்லாமல் எங்கேயும் வரமாட்டேன்.”
“டேய் மவனே! வான்னு சொல்றேன்ல”
இரண்டு நாட்கள் கடந்த நிலையில். கதிர், முல்லையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற கவலையில் வீட்டில் கவலையாக அமர்ந்து இருந்தான்.
“டேய்! என்னடா ஏன்டா சோகமா இருக்க?”
“ஏய் கிழவி! எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாளாச்சு. என் பொண்டாட்டிய காணோம் என்ற கவலை ஏதாவது உனக்கு இருக்கா. நீ என்னடானா உட்கார்ந்துகிட்டு சரக்கு அடிச்சுகிட்டு இருக்க?” என்று சித்தியைத் திட்டினான்.
“கல்யாண வயதை தாண்டியும் இன்னும் நான் உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறேனே. எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்ற கவலை. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா?”
“இதோடா. காடு வா வாங்குது. வீடு போ போங்குது. உனக்கு இப்போ கல்யாணம் தேவையா? ஏன் கல்யாணம் பண்ணி இன்னொருத்தனுடைய வாழ்க்கையை நீ அழிக்க போறியா?” என்று மணி வந்தான்.
“ஏன்டா சொல்ல மாட்டீங்க. உங்களையெல்லாம் கண்ணும் கருத்துமா வளர்த்தேன் இல்ல. சொல்லுவிங்கடா சொல்லிவிங்க.”
“நீ வளக்கலன்னா நாங்க வளர்ந்து இருக்க மாட்டோமா. யார் வளர்த்தாலும் வளக்காட்டியும் நாங்க வளர்ந்து தான் இருப்போம். நீ வளவலன்னு பேசாம உன் வியாக்கியானத்தை நிறுத்திட்டு கிளம்பு.”
“எங்கடா கதிர் கிளம்ப சொல்ற?”
“ம்... வா ஆளுக்கு ஒரு மூலையில் போய் இந்த வீட்டு மருமகள், என் தேவதையே தேடுவோம”
“மச்சான் அங்க பாருடா உன் தேவதை. ஆளு என்னடா சிஐடி சகுந்தலா மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு நிற்குறா. ஆனா கண்ணு தெரியாத மாதிரி கையில குச்சு வச்சிக்கிட்டு இருக்கா” ❤என்று மணி சொல்ல,
கதிர், முல்லையை பார்த்தவுடன் ஓடிப் போய் அவளிடம் பேசப் போக, இவனை பார்த்ததும் கண்ணு தெரியாத பெண்ணை போல நடித்து கொண்டு இருந்த முல்லை, இவனை கண்டுகொள்ளாமல் தன் நடிப்பைத் தொடர்ந்தாள்.
“ஏய் செல்லக்குட்டி. எங்க போன நீ? உன் புருஷன் நான், லூசு மாதிரி உன்ன நினைத்து இங்க ஏங்கிட்டு இருக்கேன்.”
“என்ன புருஷனா. நீ தாலி கட்டினதால் எல்லாம் நான் உனக்கு மனைவியாக மாட்டேன்.”
“நீ என்ன பேசுற? உன்னை தொட்டு தாலி கட்டினவன் நான். என்கிட்ட இப்படிப் பேசலாமா?”
“ஏய் லூசா நீ. என் தங்கச்சியோட சம்மதம் இல்லாமல் நீ தாலி கட்டிட்டா அவ உனக்கு பொண்டாட்டியா ஆய்டுவாளா?” என்றாள் ஷாமிலி.
“ஏய்! மச்சினிச்சி வாய மூடிட்டு சும்மா இரு. நான் இவளுக்கு தாலி கட்டிட்டேன். இவ இனிமேல் என் பொண்டாட்டி. வா ஏஞ்சல் நாம் நம்ம வீட்டுக்கு போகலாம். இரண்டு நாள் உன்ன பிரிஞ்சி என்னால நிம்மதியா இருக்கவே முடியல தெரியுமா?” என்றான் கதிர்.
“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா. நான் ஒரு முக்கியமான விஷயமா வந்திருக்கேன். இந்த இடத்தில் வந்து புருஷன் அரசன்னு ஃபிலிம் காட்டிகிட்டு இருக்காத. முதல்ல கிளம்பி போ. இல்ல பிரச்சனையாயிடும்” என்று எச்சரித்தாள் முல்லை.
“அப்படி என்னடி பிரச்சனை ஆயிடும். நாங்க எல்லாம் பிரச்னையை பாக்கட்டில் போட்டுக்கிட்டு வாழுறவுங்க. நாங்க பாக்காத பிரச்சினையா? என் மவன் தான் கூப்பிடுறான் இல்ல. வருவியா... சும்மா வாயில வத்தல் சுட்டுக்கிட்டு இருக்க” என்றார் கீதா.
“ஏய்! பத்து ரூபாய் நூடுல்ஸ் மண்டை. ஒழுங்கா உன் மவனை கூட்டிகிட்டு அப்பால போயிடு. இல்ல சீன் ஆகிடும்.”
“நானெல்லாம் சீன்கே சில்பான்ஸ் கொடுக்குறவ. உன் உதாறு எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. ஆயிரம் இருந்தாலும் நான் உன் ஆன்ட்டி.”
“என்ன ஆன்ட்டியா. நல்லா ஆப்பாக்கார அலமேலு மாதிரி இருந்துகிட்டு, இவங்கள திருட சொல்லி ஊரை சுத்துற நீ எனக்கு ஆன்ட்டியா?”
“ஏய் வேணாம்.”
“இப்ப என்ன குடுத்தாங்க வேண்டாம்ன்னு சொல்ற நூடுல்ஸ் மண்டை.”
“ஐயோ உங்க மாமியார் மருமகள் சண்டையை நிறுத்துங்க. ஏய் செல்லக்குட்டி என்னதான் என் சித்தி பழைய பெருசாச்சாளி போல இருந்தாலும், எங்கள் குடும்பக் குத்து விளக்கு அவங்க. அதனால் வா நம்ம ரெண்டு பேரும் அவுங்க ஆசீர்வாதம் வாங்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என்றான் கதிர்.
“ஏய் முல்லை! அதோ வந்துட்டான் பாரு அவன் தான்” என்று ஒருத்தனை நோக்கி கைநீட்டினாள் ஷாமிலி.
“என்ன பிசினஸ் போல இருக்கு...” என்றான் மணி.
“ஏய் வா போகலாம்னு சொல்றேன் இல்ல. இனி நீ இந்த வேலையெலாம் செய்ய வேண்டாம். இன்னும் பத்து வீடு எக்ஸ்ட்ராவா திருடியாவது நான் உனக்கு பீசா பர்கர் வாங்கித் தரேன்” என்று அவளை விடாது தொல்லை செய்தான் கதிர்.
“ஏய் லூசு! அந்த பக்கம் போன்னு சொல்றேன்ல”என்று சொன்னபடி முல்லை, கதிரிடம் பேசிக்கொண்டிருக்க, அங்கிருந்து ஓடி வந்த ஒருவன், முல்லையை கத்தியால் குத்த வந்தான்.
முல்லை அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அந்த நபரிடம் சண்டை போட்டதை பார்த்துவிட்டுப் ஓவியக்கீதா பின்னங் கால் பிடரியில் படும்படி ஓடி விட, முல்லை கதிரின் கையை பிடித்து இழுத்து ஒரு சந்துகுள் அழைத்து போனாள்.
“ஏய் உனக்கு எதுவும் அடிப்படல இல்ல.” என்று கதிரிடம் கேட்டாள்.
“ஏய்! யார் நீ? உன்னை எதுக்காக இவங்க குத்த வராங்க?”
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். ஒழுங்கு மரியாதையா வீடு போய் சேரு.”
“இல்ல இல்ல நீ வராம நான் போகமாட்டேன்.”