• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
🔱யின் ❤காதல் ஓவியம்
❤ஓவியம் 10

“ஏய் என்னடா இவ? இப்படிப் பேசிட்டு இருக்கா?” என்றான் கதிர்.
“அதானே மச்சான். இவுங்க என்ன நம்மை வேலைக்கு எல்லாம் போக சொல்ராங்க. ரொம்பத் தப்பு” என்றான் மணிமாறன்.
“அதானேடா” என்றான் கதிர்.
“டேய் மவனே! நம்ம ரத்தத்துலயே உழைத்து சாப்பிடணும் என்ற எண்ணம் இல்லடா. அப்புறம் எப்படிடா வேலைக்கு போறது?” என்றார் கீதா.
“மச்சான் இப்ப என்னடா பண்றது?” எனக் கேட்டான் கதிர்.
“எனக்கும் ஒன்னும் புரியல. பேசாம நீ வேலைக்கு போயி...” அவன் முடிக்கும் முன், “டேய் நம்ம கொள்கை என்ன ஆகறது?” என்று எகிறினார் கீதா.
“கிழவி வாய மூடு. அவளை போலீஸ் யூனிஃபார்மில் பார்த்த உடனே உனக்கு அள்ளு விடுது. இப்போ அவ போய்ட்ட உடனே டயலாக் பேசுறியா?”
“அது உண்மைதான் மவனே. போலீஸ் யூனிஃபார்மை பார்த்தாலே நமக்கு காண்டு ஆகுது.”
“சரி அத விடு மச்சான். எனக்கு ஒரு டவுட்?” என்றான் மணிமாறன்.
“என்னடா?”
“அந்த போலீஸ்காரர் பொண்ணு தான் உன் மாமா பொண்ணு முல்லைன்னு தெரிஞ்சா, நீ அவங்க கழுத்துல தாலி கட்டின?”
“இப்ப உனக்கு எதுக்கு அந்த டவுட்டு?”
“சரி அத கூட விடு மச்சான். என்னமோ கண்டிஷன் போட்டியே அது என்ன கண்டிஷன்?”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. சரி நைட் எல்லாம் தூக்கம் இல்ல நான் போய் படுக்கிறன்.”
“ஏய் என்ன மச்சான் உன் பொண்டாட்டி சாப்பிடாமல் பட்டினியா போய் இருக்கா. நீ என்னடா நான் போய் தூங்குறேன் என்று சொல்லற?”
“அவ சும்மா சொல்லுறாடா. வேலை செய்யற இடத்துல ஏதாவது சாப்பிட்டு இருப்பா.”
“டேய் மவனே அப்புறம் அந்த முக்கியமான விஷயத்தை மறந்துடாதே.” என்று நியாபகப்படுத்தினார்.
“என்ன?” என்றான் அவன்.
“அதான் உன் மாமியார் வராளே.”
“அதுக்கு தான் நான் போய் இப்ப படுத்தால் தான் எனக்கு என்ன பண்ணுவது என்று யோசனை வரும். சரி நான் போய் தூங்குறேன்🌹 என்று சொன்னபடி கதிர் தன் அறையில் கண்ணுறங்க.
முல்லை வேலைக்கு சென்றாலும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அன்றைய இரவு கதிரின் வீட்டுக்கு போலீஸ் காரில் வந்து கொண்டு இருக்கும் சமயம் 🌹
“ஏய் என்னடி காலையிலிருந்து பச்சைத் தண்ணி பல்லுல படாம இருக்கிற. வா நம்ம ஹோட்டல் போகலாம்.” என்று அழைத்தால் ஷாமிலி.
“அக்கா நான் என்ன பொய் சொல்றேன்னு நினைச்சியா? மாமா திருடன் ஆவதற்க்கு காரணம் நான் தான். கொஞ்சம் கொஞ்சமா அவர அந்த தொழிலில் இருந்து நான் வெளியே அழைச்சிட்டு வரணும்னா, கண்டிப்பா நான் இந்த மாதிரி எல்லாம் செய்து தான் ஆகணும்.” என்றாள் திடமாக.
“அதுக்குனு இப்படியா? நீ பசி தாங்க மாட்டடி.”
“இருக்கட்டும் அக்கா. என்னால வாழ்க்கையை இழந்தவர் என் மாமா. இனிமேலும் அவரு அசிங்க பட கூடாது. சரி நாளைக்கு காலையில பார்ப்போம்”🌹 என்று சொன்னபடி முல்லை மாடிக்குச் சென்றாள்.
“அம்மாடி ஓவியா. முதல்ல போய் அந்த யூனிபார்மை கழட்டி வைச்சிட்டு வாம்மா.” என்று கீதா பவ்யமாய் சொல்ல,
“ம்... இருங்க இதோ வரேன்”🌹என்று சொன்னவள் தன் காவலாளி உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து, “இப்போ ஓகேவா” என்றாள்.
“சூப்பர்மா. இந்தா பிரியாணி சாப்பிட்டு” என்று கொடுத்தார்.
“பிரியாணியா? உங்க புள்ள வேலைக்கு போய் வாங்கிட்டு வந்தாரா?”
“அட நீ வேறமா. அவன் நீ போனதிலிருந்து தூங்கிகிட்டு தான் இருக்கான்” என்றான் மணிமாறன்.
“பகல் எல்லாமா தூங்குவாங்க?”
“ஆமாமா எங்களுக்கு வேலை நைட்ல தானே. அதனாலே நாங்க பகலில் தான் தூங்குவோம். இன்னும் அவன் ஒரு மணி நேரம் கழிச்சு எந்திரிச்ச பின் தான் நாங்க எங்க தொழிலுக்கு போகனும்.”
“’வேணாம்டா மணி. இன்னிக்கு முதல் முதல் என் மருமக வந்து இருக்கு இல்ல. அதனால ஒரு வாரத்துக்கு தொழில் தள்ளிப் போட்டுடுவோம். சரி சரி ஓவியா இந்தா பிரியாணி சாப்பிடு” என்றார் கீதா.
“இல்ல அத்தை. எனக்கு வேண்டாம்.”
“ஏன்மா? நாட்டு கோழி பிரியாணி நல்லா இருக்கும். வந்து சாப்பிடு.”
“இல்ல வேணாம். நான் தான் சொன்னேனே அவர் சம்பாதிச்சு கொடுக்கட்டும் நான் சாப்பிடுறேன். அதுவரை நான் சாப்பிடாமலே இருந்துக்கறேன்” என்றாள் முல்லையோவியா.
“விளையாடாத ஓவியா. நீ சின்னதுல இருந்தே பசி தாங்க மாட்ட. சாப்பிடுமா.”
“இல்ல எனக்கு வேணாம் அத்தை. மாமா சாப்பிட்டாரா?” எனக் கேட்டாள்.
“மதியானம் எந்திரிச்சான். உங்க அத்தை என்னத்தயோ கிண்டி வைத்து இருந்தது அத சாப்பிட்டுட்டு படுத்தவன் தான் இன்னும் நைட்டுக்கு சாப்பிடல நீ வந்ததுக்கு அப்புறம் சாப்பிடுவேன் என்று சொல்லி இருக்கான்.”
“சரி மாமா எந்திரிச்சா அவர் சாப்பிடட்டும். நான் போய்ப் படுத்துக்குறேன். நாளைக்கு சீக்கிரம் போகணும் பெரிய இடத்தில் இருந்து ஆளுங்க வராங்க” என்று சொன்ன முல்லை தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்திருந்த கதிரின் அருகில் அமர்ந்தாள்.
அவளின் கோவமான முகத்தில் அங்கங்கே சிறு வியர்வை துளிகள் பூத்து இருப்பதை தன் முந்தனையால் துடைத்தவள் அவன் தலையைக் கோதியபடி 🌹”மாமா.” என்றழைத்தாள்.
“ம்...” என்றவனிடம், “பசிக்கலையா? மணி என்னாச்சு? எந்திரிச்சு சாப்பிட வேண்டியது தானே?” எனக் கேட்டாள்.
“ஏய் நீயா? வாடி மணி என்ன ஆகுது? இவ்வளவு நேரமா வேலை பார்ப்ப? என்னை பாத்தியா நான் நெனச்சா தான் வேலைக்கு போவேன். முடியலையா வீட்ல இருந்துடுவேன். ஸெல்ப் எம்ப்ளாய்மெண்ட். நீ பேசாம உன் வேலையை விட்டுட்டு என் கூடயே இரு.”
“அது சரி. உன் கூடவே நான் இருக்கிறேன். ஆனால் நீ செய்யும் வேலையில் கிடைக்கும் பணத்தில் எல்லாம் என்னால சாப்பிட்டு உயிர் வாழ முடியாது.” கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னாள்.
“ஏய்...” என்று அவன் கத்த,
“கத்தாத மாமா. சரி சரி நீ போய் சாப்பிடு” என்றாள்.
“நான் உனக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன். வா போய் சாப்பிடலாம்.”
“இல்ல நான் சாப்பிட மாட்டேன். நீ சம்பாதிச்சு கொடு நான் சாப்பிடுறேன்.”
“அடி வாங்க போற முல்லை. நான் நேத்தே சொல்லிட்டேன் உன் விஷயத்தில் நானும், என் விஷயத்தில் நீயும் தலையிடக் கூடாதுன்னு. புரியுதா? வா போய் சாப்பிடலாம்” என்றான் கதிர்.
“இல்ல மாமா. உண்மையா தான் சொல்றேன். நான் அந்த சாப்பாட்டை சாப்பிட்டால் எனக்கு கண்டிப்பா தூக்கமே வராது. நீ போய் சாப்பிடு.”
“சரி நீ எக்கேடோ போ. நான் போய் சாப்பிடுறேன்”🌹என்று சொன்னபடி கதிர் வெளியே போனவன் தன் சாப்பாட்டை சாப்பிட அமரந்தான்.🌹
“மச்சான் இன்னிக்கு உனக்கு தான்டா சான்சே. இங்க பாரு லெக் பீஸ் வந்திருக்கு சாப்பிடு மச்சான்” என்றான் மணிமாறன்.
“ம்... குடுடா”🌹என்று சொன்னவன் தன் வாய் அருகில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போனாலும் முல்லையின் வாடிய முகம் மட்டுமே அவன் நினைவில் இருக்க🌹”இல்லடா எனக்கு வயிறு சரியில்ல. இப்ப எனக்கு சாப்பாடு வேணாம்” என்று கதிர் சொன்னான்.
“என்ன மச்சான், அப்போ உனக்கு வேண்டாமா? நான் எடுத்துக்கவா?”
“டேய் யாருடா இவன். அது என் மகனுடைய லெக் பீஸ். வாரிசு படி நான் தான் அதுக்கு உரிமை குடு” என்று கேட்டார் ஓவியகீதா.
“அடக்கடவுளே ஒரு கோழி பிரியாணிக்கு கூட, இது வாரிசு கதை எல்லாம் பேசுது பாரு. இந்தா இதை நீயே சாப்பிடு” என்று அவர் கையில் திணித்தான்.
“டேய் மவனே! உனக்கு தான் பிரியாணி பிடிக்குமே. ஏன் சாப்பிடல?”
“ம்... நீங்களே கொட்டிக்கோங்க”🌹என்று சொன்னபடி கதிர் முல்லை அறைக்குள் சென்றவன்.🌹”ஏய் முல்லை ஏன் இப்படி பண்ற. வா சாப்பிடலாம்.” என்றான்.
“மாமா எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு பசிக்கல.”
“ஏய் பசிக்கலன்னு பொய் சொல்லாத. நீ காலையில இருந்து அப்ப எதுவும் சாப்பிடலையா?”
“காலையிலிருந்து இல்ல. நேத்து நைட்ல இருந்து நான் எதுவுமே சாப்பிடலன்னு உனக்கு தெரியாதா? தெரியாத மாதிரி இருக்கியா?” என்றாள் முல்லை.
“ஏன்டி என் உயிரை வாங்குற.”
“நான் தான் சொல்லிட்டு போனேனே. நீ சம்பாரிச்சு எடுத்துட்டு வர காசுல தான் நான் சாப்பிடுவேன். அதுவரை பட்டினியா இருப்பேன்னு.
“முல்லை சொல்றதை கேளு. வந்து சாப்பிடு.” என்றான் கதிர்.
“என்னால முடியாது மாமா. மாமா எனக்கு... எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு.” என்றாள் தலையைப் பிடித்தபடி.
“ஏய் என்னடி? இரு இரு தண்ணி... இந்தா தண்ணி குடி” என்று எடுத்து வந்து கொடுத்தான்.
“எனக்கு வேணாம். இந்த வீட்ல நான் எதுவும் சாப்பிடமாட்டேன்.” அந்நிலையிலும் அடமாக நின்றாள்.
“அடித்து பல்லை உடைச்சிடுவேன். குடிடி” என்று அதட்ட,
“மாமா நீ என்னைக் கொன்னாலும் சரி. நான் சாப்பிட மாட்டேன்”🌹என்று சொன்னபடி முல்லை கதிரின் மடியிலேயே மயங்கி விட்டாள்.🌹
“ஐயோ சித்தி இங்க பாரு. ஏய் கிழவி இங்க வந்து பாரு இவளை” என்று கத்தினான்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“என்னடா இது நிம்மதியா ஒரு லெக் பீஸ் சாப்பிட விட மாட்டீங்களா? டேய் மவனே என்னடா ஆச்சு?” என்றார் ஓவியகீதா.
“மச்சான் சாப்பிடாம இருக்காங்க போல. அதான் மயங்கி விழுந்ந்துட்டாங்க. இரு முகத்தில் தண்ணீர் தெளிச்சி விடு” என்று மணிமாறன் சொல்ல,
“கிழவி கையில இருக்கற தண்ணியை குடு.” என்று கேட்டான்.
“மவனே இதை தெளித்தா உன் ஓவியா மோட்சத்துக்கு போய்டுவா பரவாயில்லையா?”
“என்ன கிழவி உளறுற? அது தண்ணி தானே?”
“இல்ல மவனே. கொஞ்சம் அசதி அதான் வசதியா கிளாஸ்ல சரக்கை ஊத்தி பிரியாணி கூட துணைக்கு வச்சிருக்கேன். நல்லா இருக்குடா. அதான்...” என்று இழுத்தார் கீதா.
“அடச்சீ... டேய் மணி தண்ணி குடுடா.”🌹என்று கதிர் கேக்க, மணிமாறன் முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
மயக்கத்தில் இருந்து எழுந்த முல்லையை பார்த்த கதிர், ஏய் இப்ப என்னடி உனக்கு? நான் வேலைக்கு போய் உனக்கு சம்பாதிச்சு கொடுக்கணும் அவ்வளவு தானே. சரி நாளைக்கு நான் வேலைக்கு போறேன் இப்ப வா வந்து ஏதாவது சாப்பிடு” என்றான்.
“என்னால முடியாது மாமா. இந்த வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தாள்.
“இப்ப என்னடி என்னை பண்ண சொல்ற?”
“வேணும்னா என் மணிபர்சில் காசு இருக்கு. நீ போய் ஹோட்டலில் ஏதாவது வாங்கிட்டு வந்து கொடு. நான் சாப்பிடுறேன்.”
“இம்சைடி நீ. டேய் மாறா அவளுடைய பாக்கெட்டில் இருந்து காசு எடுத்துyடு போயி ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வாடா” என்றான் கதிர்.
“சாரி மச்சான். யாருக்கும் தெரியாமல் திருடி தான் எனக்கு பழக்கம். அவங்களையே காச எடுத்து குடுக்க சொல்லு.”
“ஒ தொழில் தர்மமா?"🌹என்று சொன்னபடி முல்லை காசை எடுத்துக் கொடுத்து, “மணி மாமா எனக்கு கொத்து பரோட்டா தான் வேணும்.” என்றாள்.
“ஆமாடா மேடம்கு கொத்து பரோட்டா கூட ரெண்டு முட்டைய அதிகமாவும் பேப்பரை தூக்கலாவும் போட்டு கொடுக்க சொல்லு. அது தான் இவளுக்கு பிடிக்கும்.”
“மாமா உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா.?”
“ஆமாம்மா. உன் மாமனும் அப்படி தான் சாப்பிடுவான். சாப்பிடும் போதெல்லாம் உன்னை தான் நினைப்பான்”🌹என்று கீதா சொல்ல. மணிமாறன் இரவு உணவை வாங்கிக் கொண்டு வந்தான்.🌹
“மாமா ஆ... காட்டு.”
“இல்ல எனக்கு வேணாம். நீ சாப்பிடு.”
“ஏன்.? சாப்பிட்டா என்ன?”
“நீ எப்படி திருடன் காசுல சாப்பிட மாட்டியோ. நானும் உன் போலீஸ் காசுல சாப்பிட மாட்டேன்டி.”
“அப்போ நீ என்ன சாப்பிடுவ?”
“ம் சித்தி மதியம் சாதத்துல தண்ணி ஊத்தி வச்சிது. நான் அத சாப்பிடுறேன். நீ சாப்பிடு.” என்றான் கதிர்.
“மாமா எனக்கு இந்த பரோட்டாவை ஊட்டி விடுறியா.?”
“போடி. எனக்கு வேற வேலை இல்ல போ போய் சாப்பிடு. நான் இதோ வரேன்” என்றதும் முல்லை முகம் சோகமானது.
மணி பொறுமையாக, “ஏய் மச்சான் பாவம்டா அவங்க. அங்க பாரு கவலையா இருக்காங்க.” என்றான்.
“டேய் உண்மையாவே அவ பாவம் தான். அவ காதலுக்கும் அன்புக்கும் நான் தகுதியானவன் இல்ல.”
“அதுக்குன்னு...” எனக் கேட்டான் மணிமாறன்.
“டேய் அவ காதல் உண்மையானது. அவ்வளவு தான். மத்தப்படி. சரி விடு காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.”🌹என்று சொன்னபடி கதிரும் முல்லையும் இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர்.
மறுநாள் காலை கதிர் படுத்துக் கொண்டிருந்தவன் அருகில் சென்ற முல்லை, “மாமா வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு என்ன இப்படி படுத்துகிட்டு இருக்க? எழுந்திருச்சிக் கிளம்பு” என்றாள்.
“அத பற்றி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன யோசிக்கிற?”
“ம் வேலை முக்கியமா இல்ல நீ முக்கியமான்னு யோசிக்கிறன்” என்றதில் முல்லை கண் கலங்க, “ஏய் அழாதேடி” என்றான் கதிர்.
“என்னை தொடாத. இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் நம்ப மாட்டேன். நீ வேலைக்கு போயி எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வா. இல்லனா நான் சாப்பிட மாட்டேன்.”
“சரி சரி இரு வேலைக்கு போறேன். ம்... நீ கிளம்பலையா?”
“நானும் தான் மாமா கிளம்ப போறேன்.”
“ம்... முல்லை.” என்று கதிர் அழைத்ததும், “ம்... என்றாள் அவள்.
“ஏய் ஓவியா உன்னை தான்டி.”
“என்ன மாமா.என்னையா கூப்பிட்ட?”
“பின்ன உன் ஆயாவையா கூப்பிட்டாங்க. வா இங்க.”
“நீ இப்படி என்னை கூப்பிடும் போது நம்ம சின்ன வயசு நியாபகம் வருது.”
“ம்... சரி இப்படி கிட்ட வா.” என்று கட்டிப் பிடித்தான்.
“என்ன மாமா திடிர்னு கட்டி எல்லாம் பிடிக்கிற.
“அது முதல் முறை வேலைக்கு போறேன் இல்ல அதான். சரி நீ கிளம்பு.”
“மாமா ஓரு முத்தா குடேன்.”
“முத்தாவா? அப்படினா?”
“கிஸ் மாமா. அதான் முத்தம்” என்றாள் முல்லை.
“அது எப்படி தரது. எனக்குக் குடுத்து பழக்கம் இல்ல.” என்றான் கதிர்.
“நான் வேணும்னா குடுக்கவா?”
“உனக்கு பழக்கம் இருந்தால் குடு.” என்றான்.
“இருக்கு மாமா. நிறையாவே இருக்கு. ஏன்னா நான் தினமும் நைட் என் ட்ரீம்ல, உனக்கு கிஸ் பண்ண நான் மிஸ் பண்ணது இல்ல மாமா”🌹என்று சொன்னபடி முல்லை கதிரன் கன்னத்தில் முத்தமிட்டவள்🌹”வேலைக்கு பார்த்து போ நைட் பார்க்கலாம்”🌹என்று சொல்லி ஆளுக்கு ஒரு பக்கம் கிளம்ப, அன்றைய இரவு கையில் காசுடனும் அனைவருக்கும் சப்பாத்தி சால்னாவுடன் வந்த கதிர்.🌹
“முல்லை இந்தா சாப்பாடு. சாப்பிடு.”
“தேங்க்ஸ் மாமா. என்ன வேலைக்கு போன?”
“ஏய் நீ வேலைக்கு போக சொன்ன நான் போயிட்டேன். என்ன ஏது வேலை எல்லாம் நீ கேக்க கூடாது.”
“ரியலி தேங்க்ஸ் மாமா.”
“கிழவி இந்தா சப்பாத்தியும் குவட்டரும்” என்று கொடுத்தான்.
“எனக்கு வேணாம்டா” என்றார் கீதா.
“ஏன்? உனக்கு புடிச்ச பிராண்ட் தான் கிழவி.”
“இல்ல நீ எப்ப வேலைக்கு போனியோ, அந்த காசுல நான் சாப்பிட மாட்டேன்.” என்றார்.
“முல்லை உள்ள போயிட்டு ஒரு தட்டு எடுத்திட்டு வா போ” என்றான்.
“என்ன மச்சான் வேலைக்கா போன?” என்று மணிமாறன் கேட்டான்.
“மணி நான் இவனை டிவோர்ஸ் பண்ண போறேன். நல்ல வக்கீலா பாரு” என்று சொன்னார் கீதா.
“ஏய் கிழவி அறிவில்ல உனக்கு. நான் போய் வேலைக்கு போவேனா இது திருடிய காசுதான் கிழவி.”
“என்ன மவனே சொல்ற. திருடுனியா? ஆனா நீ தொழிலுக்கு பகலில் போக மாட்டியே? எப்படி இது?”
“திருட்டு காசு தான் கிழவி. இன்னைக்கு காலையில ஓவியா கழுத்துல இருக்கற செயின அடிச்சுட்டேன்”🌹 என்று கதிர் பேசியதே சமையலறையில் இருந்து முல்லை கேட்டுக் கொண்டிருந்தாள்.
தனக்குள் சிரித்தபடி🌹”அடப்பாவி மாமா. நீ வெளியே திருட கூடாது என்று சொன்னால். சொந்த பொண்டாட்டி கழுத்திலேயே கை வச்சு இருக்க. ம்... ஆனா நான் சாப்பிடல என்ற கவலை உனக்கு இருக்க போய் தானே பொய் சொல்ற. உன்னை ஒரே முறையா திருத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமா தான் திருத்த முடியும். காவலாளிகிட்டேயே திருடின கள்வன் என் கணவன்”🌹என்று நினைத்துக்கொண்டே தனக்குள் சிரித்தாள்.🌹
“டேய் மவனே. நான் கூட நீ தப்பு பன்றியோ நினைச்சேன்?”
“புரியல தப்பா? என்ன தப்பு?”
“அதான்டா திருட்டு தொழிலை விட்டு வேலைக்கு போயி தப்பு பண்ணிடுவியோன்னு நினைச்சேன். இந்த புனிதமான தொழிலை நம்ம விடக் கூடாதுடா.”
‘கிழவி என் மாமன் திருந்தினாலும், நீ திருந்த விட மாட்டுற இல்ல. இரு சீக்கிரம் உனக்கு லாடம் கட்டுறேன். ம்... எப்படி இருந்தாலும் என் மாமாவின் மனதில் அன்றும் இன்றும் என்றும் நான் மட்டும் தான் இருக்கிறேன்’🌹என்று நினைத்தபடி முல்லை சந்தோஷமாக வந்து எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இரவு உணவை முடித்தவள், இன்றும் தன் தலைவனின் இதயத்தை தன் தலைக்கு தலையணையாக்கி கண்ணுறங்கினாள்.
மறுநாள் காலை ஷாமிலி பதற்றமாக கைபேசி மூலம் முல்லையை அழைக்க🌹”ஹலோ! என்ன அக்கா சொல்ற? உண்மையாவா?” என்றாள் முல்லை.
“ஆமாடி. எதுக்கும் நீ ஜாக்கிரதையாய் இரு.” என்று எச்சரிக்கை செய்தாள் ஷாமிலி.
“சரி சரி கதிர் மாமாக்கு விஷயம் தெரிய வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்”🌹என்று சொன்னபடி முல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வழியில் அவளுடைய ஜீப் பஞ்சராகி நின்றது.🌹
“டிரைவர் அண்ணா என்ன ஆச்சு?”
“பஞ்சர் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் மா.”
“என்ன அண்ணா? அது எப்படி ஆகும்?”
“அம்மா என்ன மன்னிச்சிடுங்க. அந்த ஆட்கள் இந்த நடுகாட்டில் வந்து நீங்க வரும் வண்டிய நிப்பாட்ட சொன்னாங்க” என்றான் டிரைவர்.
“யாரு நிப்பாட்ட சொன்னாங்க?” என்றாள் அழுத்தமான குரலில்.
“அது அது அந்த காளையன் ஆட்கள் தான். என்னை மன்னிச்சிடுங்க ம்மா”🌹என்று சொன்னபடி டிரைவர் அங்கிருந்து வேகமாக ஓட. தூரத்தில் இருந்து வந்த ஒரு கட்டை முல்லையின் காலில் பட்டது. முல்லை அதே இடத்தில் கீழே விழ, அவள் கண் எதிரில் வந்து நின்றது எக்ஸ் எம்எல்ஏ. காளையன்.
“என்னடி, போலீஸ் யூனிபார்ம் போட்டா பெரிய ஆளுண்ணு நினைப்பா? இன்னைக்கு உன்ன நான் என்ன பண்றேன் பாரு”🌹என்று சொன்னபடி அருகிலிருந்த கட்டையை எடுத்து மீண்டும் முல்லையின் தலையில் அடிக்க போக, அந்தக் சமயத்தில் அங்கு வந்த கதிர் அந்த கட்டையை தடுத்து பிடித்தான்.
“மாமா மாமா நீ போ நான் பாத்துக்குறேன்.” என்றாள் முல்லை.
“ஏய் யார் பொண்டாட்டி மேல யார் கை வைக்கிறது?”🌹என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சமயத்தில், இன்னொருவன் கதிரின் பின் தலையிலும், முல்லையின் காலிலும் மீண்டும் அடித்தனர்.
அந்த சமயம் ஒரு காரில் வந்து இறங்கியவர்களை பார்த்த முல்லை, “மாமா. அங்க அங்க அம்மா வராங்க. நீ போ நீ போயிடு.” என்றாள் பதற்றமாக.
“ஏய் உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டு என்னால் எப்படி போக முடியும்?”
“நீ போ மாமா. உன் தலையில் ரத்தம் வருது.”🌹என்று சொன்னபடி முல்லை பதற, கதிர் முல்லையின் அருகிலேயே மயங்கியபடி கீழே சரிய, இவர்களை நோக்கி முல்லையின் அம்மா இந்துவும், இந்துவின் சொந்தக்காரன் அகிலும் மற்றும் முல்லையின் அப்பா
சந்திரனும் வந்தனர். 🌹

🤜இனி என்ன நடக்கப் போகிறது
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top