- Thread Author
- #1
நீ என்பதே இனி நான்தானே!
ஊட்டி
அங்கும் இங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வானுயர்ந்த கட்டிடம். கட்டிடம் அல்ல பணத்தினை வாரியிரைத்து செதுக்கியிருக்கும் அரண்மனை என்று சொல்லலாம். அங்கிருக்கும் பணியாட்கள் அரக்க பறக்க வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கு பணிபுரியும் ஒருவன் இங்கு நடக்கும் ஒன்றையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ஓரிடத்தில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தான்.
யாரிவன்?
ஹா ஹா ஹா.. இவன் தாங்க நம்ம கதாநாயகன் வேந்தன்.
இங்கிருந்து பார்த்தால் அவளின் அறை தெரியும்.
யாரந்த அவள்?
நம் நாயகி. பெயர் காயத்ரி.
அவளும் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த பார்வையில் என்ன கண்டானோ, ஒரு விரக்திப் புன்னகையோடு, தன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. எப்படி இருக்கும்? அவள் விரும்புவது வேந்தனை. ஆனால், இன்னும் சில நாட்களில் தன் அத்தை மகனான மாறன் என்பவனோடு திருமணம் நிச்சயிக்க போகிறார்கள் அவளின் பெற்றோர்கள்.
சக்ரவர்த்தி மற்றும் மங்கையர்க்கரசியின் புதல்வி தான் காயத்ரி. இவளுக்கு ஒரு தம்பி இருக்கின்றான்.
அவன் அசோக், கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏனென்றால் அவனுக்குத் தான் தெரியுமே. தன் அக்காவின் காதல்.
அவனுக்குமே வேந்தனை மிகவும் பிடிக்கும். அவனின் மேனரிசம், ஆளுமைத்திறன், அவனின் கம்பீரம், சிறு கண்ணசைவு கூட பிடிக்கும்.
காயத்ரியும், வேந்தனும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் அசோக் பார்த்து விட்டான். அதன் பிறகு அவர்களது ஒவ்வொரு செயலையும் கவனித்த போது அவன் கண்டு கொண்டான்.
அவனும் தன் அக்காவின் காதலுக்கு ஆதரவுதான்.
வேந்தனும், காயத்ரியும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பார்த்த முதல் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் பிடித்துபோய்விட்டது.
சீனியர்கள் ராகிங் செய்ய அப்பொழுதுதான் அங்கே வந்து கொண்டிருந்தாள் காயத்ரி. அவளை திடீரென ராகிங் செய்து கொண்டிருந்த குரூப்பில் இருந்து ஒரு இளைஞன் அழைக்க. இவள் சற்று பயந்து கொண்டே அங்கு சென்றாள்.
அங்கே வேந்தனும் நின்று கொண்டிருந்தான். வேந்தனுக்கு அவளின் மிரளும் விழிகளை பார்த்து ஒரு வித இனம்புறியா உணர்வு.
அந்த இளைஞர்கள் வேந்தனை கைகாட்டி, “அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு போ” என சொல்ல, அவளுக்கு ஒரே படபடப்பு.
வேந்தனும் அவளின் படபடப்பை ரசித்தவன், “டேய், மச்சி விடுங்கடா பாவம் அந்த பொண்ண. நீ போம்மா”, என்று அனுப்பி வைக்க. அவளுக்கு ஒரு நிம்மதி உணர்வு.
அப்பொழுது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த உடனேயே மிகவும் பிடித்து விட்டது.
“டேய்” என்று நண்பர்கள் குதூகலிக்க,
“சும்மா இருங்கடா. ஏன்டா?“ என்றான்.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் மற்றவர் அறியாது பார்ப்பது, பேசுவது என்று தொடங்கி தற்போது அவளை திருமணம் செய்து கூட்டிச் செல்லவே வந்து விட்டான்.
வேந்தனின் குடும்பம் மதுரையில் தான் இருக்கின்றார்கள். அவனின் அம்மா வான்மதி, தாத்தா வெங்கடாச்சலம், பாட்டி ருக்மணி. இவர்களும் வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் இல்லை.
“என்ன, காயத்ரி அளவுக்கு மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் ஊரில் இவர்கள் தான் நல்ல வசதி படைத்தவர்கள்.
இவனது சிறு வயதில் நடந்த ஒரு கார் விபத்தில் இவனது குடும்பம் சிக்கி அந்த விபத்தில் தந்தை ராஜன் மற்றும் அவனின் அக்கா வானதி இருவரும் மரணம் அடைந்து விட்டனர்.
அதிலிருந்து அவனின் அம்மாவும் கொஞ்சம் சுய நினைவில்லாமல் இருக்கின்றார். 20 வருடங்கள் கடந்த போதும் இன்னும் அவருக்கு உடல்நிலை தேறவில்லை.
ராஜனும் வான்மதியும் காதல் மணம் புரிந்துகொண்டார்கள். அப்பொழுது ராஜன் வீட்டில் சம்மதம் தெரிவித்தார்கள் ஆனால் மதியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மதியின் பெரியப்பா மகன் தன் தங்கையுடன் வீட்டிற்க்கு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் தன் தந்தை மற்றும் சித்தப்பாவின் வார்த்தையை மீறி அவனாலும் ஏதும் செய்ய இயலவில்லை.
அதன் பிறகு மதி மற்றும் ராஜின் வாழ்க்கை நன்றாக சென்றது இரண்டு குழந்தைகள் என நன்றாகவே வாழ்ந்தனர்.
மாமியார் மாமனாரின் அன்பு, எல்லாமே மிகுந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை தான். ஆனால், விதி விட்டுவைக்கவில்லையே. தன் மகன் மற்றும் பேத்தியின் இறப்பு அதிர்ச்சி என்றால். மருமகள் நிலையை நினைத்து பேரதிர்ச்சி அவர்களுக்கு.
வாரிசு என சொல்ல பேரனாவது இருக்கிறானே என்று மனதை தேற்றிக் கொண்ட முதியவர்கள். அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
அவனும் நன்றாக படித்து சிறு வயதிலேயே தாத்தாவின் அரிசி மில்கள், கரும்பு ஆலைகள், மற்றும் தோட்டம் துறவு, விவசாயத்திலும் ஆர்வமாக இருந்தான்.
அப்பொழுது படிப்பு முக்கியம் என அவனை படிப்பின் பக்கம் திசை திருப்பினார் தாத்தா வெங்கடாசலம்.
அவன் படிப்பிலும் படுகெட்டி. படித்து மேற்படிப்பை சென்னையில் படிக்க வந்த போது தான் காயத்ரியை சந்தித்தது. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது எல்லாமே.
தற்போது அவளுக்கு திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க. மற்றவர்களுக்கு மாப்பிள்ளை யாரென தெரியாது.
ஆனால் காயத்ரி குடும்பத்திற்கும் அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்திற்கும் தெரியும்.
காயத்ரிக்காகத்தான் வேந்தன் இங்கே ஒரு இரண்டு மாதமாக கார் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். எப்படியாவது தங்கள் காதலை அவள் பெற்றோரிடம் தெரிவிக்க போராடிக் கொண்டிருக்க. அங்கு அவளுக்கோ திருமண நிச்சயம் வரை சென்று விட்டது.
அவளும் தன் தாயிடம் எப்படியாவது தங்களின் காதலை சொல்லலாம் என்று தான் இருக்கின்றாள். ஆனால் முடியவில்லை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது.
பெரிய பிரச்சினையாகி விடுமோ என்று பயம் வேறு.
'தன் காதலை எப்படி வீட்டில் சொல்வது?' என தவித்துக்கொண்டிருக்க. அவனோ தனக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்லாதவன் போல சுற்றிக் கொண்டிருந்தான்.
இவளுக்கோ ஆத்திரம். அவன் தனியாக மாட்டட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
நிச்சயத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன.
அங்கே வேலை செய்பவர்களுக்கு இவர்கள் வீட்டிற்க்கு பக்கத்திலேயே வீடு கட்டி கொடுத்திருந்தனர்.
மறுநாள் அதிகாலை நேரமாக எழுந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒருவரும் தென்படவில்லை.
கடும் குளிரைக்கூட பொருட்படுத்தாமல், பூப்பறிக்கின்ற வேலையை காரணமாக்கி பூக்கூடையை எடுத்துக் கொண்டுத் தோட்டத்திற்கு சென்றாள்.
காயத்ரி அவனது அறைக்கே சென்று விட்டாள். அவன் அங்கே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க. நேராக அவன் முன் சென்று இடுப்பில் கைவைத்து நின்றாள்.
அவனுக்குத்தான் தெரியுமே அவள் வருவாள் என்று.
“ஏய்.. என்னடி? நீ பாட்டுக்கு வந்து நிக்குற? யாராச்சும் பாத்தா என்ன பண்றது?“ என்றான்.
“ஏன்டா? உனக்கு கொஞ்சமாச்சும் என் மேல அக்கறை இருக்கா? இன்னும் 3 நாள்ல நிச்சயம் பண்ண வந்துடுவாங்கன்னு நானே பயந்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா இவ்ளோ சாதாரணமா இருக்க? அவ்வளவுதான் நீ என் மேல வச்சிருக்க லவ்வா?”
“ஹேய், செல்லக்குட்டி, எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகுற, அதெல்லாம் மாமா பாத்துக்குறேன். நீ முதல்ல என்னை கவனி” என்றான்.
“போடா, உனக்கு எப்ப பார்த்தாலும் விளையாட்டுத்தான். நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பதில் சொல்லிட்டு இருக்க” என்றாள் காயத்ரி.
“என்ன அவசரம்? அதான் இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல. அப்புறம் என்ன பயப்படாம இரு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என்னவோ எனக்கேதும் சரியா படல வேந்தா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அவள் வேந்தனின் தோளில் தலை சாய்க்க, அவனோ அவள் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்தான்.
“நான் இருக்கேன்டி. தைரியமா இரு. சரியா? சரி வந்ததே வந்துட்டே, அப்படியே அய்யாவ கொஞ்சம் கவனிக்கிறது” என்றான்.
“ம்ம்ம், அவ்வளவு விவரம் துரை. போடா.. ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போற வழியப்பாரு. அதுக்கப்புறம் உங்களை எப்படி கவனிக்குறதுன்னு நான் காட்டறேன். இப்போ நான் கிளம்பறேன்” என்றவள் கிளம்ப எத்தனிக்க, அவள் கையை பிடித்து இழுத்தான் வேந்தன்.
அவன் இழுத்த இழுப்புக்கு அவன் மார்பின் மீது விழுந்தாள் மங்கையவள்.
“என்னடி? வந்த, பேசின, நீ பாட்டுக்கு கிளம்பர? இவ்வளவு பேசரவள சும்மா அனுப்பக்கூடாதுன்னு என் மனசு சொல்லுது. என்ன தரலாம் உனக்கு? ம்ம்ம் நீயே சொல்லு? என்ன பண்ணலாம்??“ என்றான்..
“வேந்தா, இது சரியில்லை. யாராவது பார்த்துட்டா வம்பு. விடு நான் போகனும்” என்றாள் சின்னக்குரலில். அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை. அவனுக்கு எங்கனம் கேட்கும்.
அவள் உதட்டசைவை பார்த்தவனுக்கு என்னென்னவோ தோன்றியதே. அவள் சத்தமாக பேசியிருந்தால் கூட வேந்தனுக்கு கேட்டிருக்காது.
“இந்த தண்டனையை அதிகமாக பேசற இதழுக்கா? இல்லை படபடன்னு அடிக்கிற இமைக்கா? சொல்லுடி?“ என்றான்.
“ஏய்,என்னடா? இப்படியெல்லாம் பேசற? வேந்தா நீ ரொம்ப மோசம், என்னை விடு. யாராவது பார்த்தா அவ்வளவு தான்” என்றவள் விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள்.
அவனோ ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன். தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான். அந்த பக்கம் என்ன சொன்னார்களோ, இவன் முகத்தில் ஒரு கீற்றுப்புன்னகை. அந்தப்புன்னகை அவள் நிச்சய நாளன்று வரையுமே நீடித்தது.
இருவரும் அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.
ஒருவர் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோடு, மற்றொருவர் பயத்தோடு.
தன்னம்பிக்கையோடு வேந்தன். பயத்தோடு காயத்ரி.
மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது.
வேந்தன் அன்று காலை எழுந்து கிளம்பி மாப்பிள்ளைத் தோரணையில் டிப்டாப்பாக இருந்தான்.
காயத்ரியோ கடனே என, ஏனோதானோவென்று கிளம்பினாள். ஆர்ப்பாட்டம் இல்லாத, அதிகம் கண்ணை உருத்தாத அலங்காரம். அதிலேயே அவள் தேவதை போல ஜொலித்தாள். முகத்தில் மட்டும் புன்னகை மருந்துக்கு கூட இல்லை.
மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர் என்று செய்தி அறிந்ததும் இவளுக்கோ கலவரம். பெற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என.
தன்னை காதலித்தவன் மேல் நம்பிக்கை இருந்தாலும்,வரப்போகும் விபரீதத்தை நினைத்து அச்சம் சூழ்ந்தது.
இருவரும் யார் மனதையும் புண்படுத்தாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் விதி அவர்கள் தலையெழுத்தை மாற்றி விட்டது போல.
நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் கடவுள் எதற்கு? விதி எதற்கு?
சரி, வாங்க நம்ம கதைக்குள்ள போலாம்.
ஊட்டி
அங்கும் இங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வானுயர்ந்த கட்டிடம். கட்டிடம் அல்ல பணத்தினை வாரியிரைத்து செதுக்கியிருக்கும் அரண்மனை என்று சொல்லலாம். அங்கிருக்கும் பணியாட்கள் அரக்க பறக்க வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கு பணிபுரியும் ஒருவன் இங்கு நடக்கும் ஒன்றையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ஓரிடத்தில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தான்.
யாரிவன்?
ஹா ஹா ஹா.. இவன் தாங்க நம்ம கதாநாயகன் வேந்தன்.
இங்கிருந்து பார்த்தால் அவளின் அறை தெரியும்.
யாரந்த அவள்?
நம் நாயகி. பெயர் காயத்ரி.
அவளும் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த பார்வையில் என்ன கண்டானோ, ஒரு விரக்திப் புன்னகையோடு, தன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.
அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. எப்படி இருக்கும்? அவள் விரும்புவது வேந்தனை. ஆனால், இன்னும் சில நாட்களில் தன் அத்தை மகனான மாறன் என்பவனோடு திருமணம் நிச்சயிக்க போகிறார்கள் அவளின் பெற்றோர்கள்.
சக்ரவர்த்தி மற்றும் மங்கையர்க்கரசியின் புதல்வி தான் காயத்ரி. இவளுக்கு ஒரு தம்பி இருக்கின்றான்.
அவன் அசோக், கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏனென்றால் அவனுக்குத் தான் தெரியுமே. தன் அக்காவின் காதல்.
அவனுக்குமே வேந்தனை மிகவும் பிடிக்கும். அவனின் மேனரிசம், ஆளுமைத்திறன், அவனின் கம்பீரம், சிறு கண்ணசைவு கூட பிடிக்கும்.
காயத்ரியும், வேந்தனும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் அசோக் பார்த்து விட்டான். அதன் பிறகு அவர்களது ஒவ்வொரு செயலையும் கவனித்த போது அவன் கண்டு கொண்டான்.
அவனும் தன் அக்காவின் காதலுக்கு ஆதரவுதான்.
வேந்தனும், காயத்ரியும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பார்த்த முதல் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் பிடித்துபோய்விட்டது.
சீனியர்கள் ராகிங் செய்ய அப்பொழுதுதான் அங்கே வந்து கொண்டிருந்தாள் காயத்ரி. அவளை திடீரென ராகிங் செய்து கொண்டிருந்த குரூப்பில் இருந்து ஒரு இளைஞன் அழைக்க. இவள் சற்று பயந்து கொண்டே அங்கு சென்றாள்.
அங்கே வேந்தனும் நின்று கொண்டிருந்தான். வேந்தனுக்கு அவளின் மிரளும் விழிகளை பார்த்து ஒரு வித இனம்புறியா உணர்வு.
அந்த இளைஞர்கள் வேந்தனை கைகாட்டி, “அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு போ” என சொல்ல, அவளுக்கு ஒரே படபடப்பு.
வேந்தனும் அவளின் படபடப்பை ரசித்தவன், “டேய், மச்சி விடுங்கடா பாவம் அந்த பொண்ண. நீ போம்மா”, என்று அனுப்பி வைக்க. அவளுக்கு ஒரு நிம்மதி உணர்வு.
அப்பொழுது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த உடனேயே மிகவும் பிடித்து விட்டது.
“டேய்” என்று நண்பர்கள் குதூகலிக்க,
“சும்மா இருங்கடா. ஏன்டா?“ என்றான்.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் மற்றவர் அறியாது பார்ப்பது, பேசுவது என்று தொடங்கி தற்போது அவளை திருமணம் செய்து கூட்டிச் செல்லவே வந்து விட்டான்.
வேந்தனின் குடும்பம் மதுரையில் தான் இருக்கின்றார்கள். அவனின் அம்மா வான்மதி, தாத்தா வெங்கடாச்சலம், பாட்டி ருக்மணி. இவர்களும் வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் இல்லை.
“என்ன, காயத்ரி அளவுக்கு மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் ஊரில் இவர்கள் தான் நல்ல வசதி படைத்தவர்கள்.
இவனது சிறு வயதில் நடந்த ஒரு கார் விபத்தில் இவனது குடும்பம் சிக்கி அந்த விபத்தில் தந்தை ராஜன் மற்றும் அவனின் அக்கா வானதி இருவரும் மரணம் அடைந்து விட்டனர்.
அதிலிருந்து அவனின் அம்மாவும் கொஞ்சம் சுய நினைவில்லாமல் இருக்கின்றார். 20 வருடங்கள் கடந்த போதும் இன்னும் அவருக்கு உடல்நிலை தேறவில்லை.
ராஜனும் வான்மதியும் காதல் மணம் புரிந்துகொண்டார்கள். அப்பொழுது ராஜன் வீட்டில் சம்மதம் தெரிவித்தார்கள் ஆனால் மதியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மதியின் பெரியப்பா மகன் தன் தங்கையுடன் வீட்டிற்க்கு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் தன் தந்தை மற்றும் சித்தப்பாவின் வார்த்தையை மீறி அவனாலும் ஏதும் செய்ய இயலவில்லை.
அதன் பிறகு மதி மற்றும் ராஜின் வாழ்க்கை நன்றாக சென்றது இரண்டு குழந்தைகள் என நன்றாகவே வாழ்ந்தனர்.
மாமியார் மாமனாரின் அன்பு, எல்லாமே மிகுந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை தான். ஆனால், விதி விட்டுவைக்கவில்லையே. தன் மகன் மற்றும் பேத்தியின் இறப்பு அதிர்ச்சி என்றால். மருமகள் நிலையை நினைத்து பேரதிர்ச்சி அவர்களுக்கு.
வாரிசு என சொல்ல பேரனாவது இருக்கிறானே என்று மனதை தேற்றிக் கொண்ட முதியவர்கள். அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
அவனும் நன்றாக படித்து சிறு வயதிலேயே தாத்தாவின் அரிசி மில்கள், கரும்பு ஆலைகள், மற்றும் தோட்டம் துறவு, விவசாயத்திலும் ஆர்வமாக இருந்தான்.
அப்பொழுது படிப்பு முக்கியம் என அவனை படிப்பின் பக்கம் திசை திருப்பினார் தாத்தா வெங்கடாசலம்.
அவன் படிப்பிலும் படுகெட்டி. படித்து மேற்படிப்பை சென்னையில் படிக்க வந்த போது தான் காயத்ரியை சந்தித்தது. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது எல்லாமே.
தற்போது அவளுக்கு திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க. மற்றவர்களுக்கு மாப்பிள்ளை யாரென தெரியாது.
ஆனால் காயத்ரி குடும்பத்திற்கும் அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை குடும்பத்திற்கும் தெரியும்.
காயத்ரிக்காகத்தான் வேந்தன் இங்கே ஒரு இரண்டு மாதமாக கார் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். எப்படியாவது தங்கள் காதலை அவள் பெற்றோரிடம் தெரிவிக்க போராடிக் கொண்டிருக்க. அங்கு அவளுக்கோ திருமண நிச்சயம் வரை சென்று விட்டது.
அவளும் தன் தாயிடம் எப்படியாவது தங்களின் காதலை சொல்லலாம் என்று தான் இருக்கின்றாள். ஆனால் முடியவில்லை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது.
பெரிய பிரச்சினையாகி விடுமோ என்று பயம் வேறு.
'தன் காதலை எப்படி வீட்டில் சொல்வது?' என தவித்துக்கொண்டிருக்க. அவனோ தனக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்லாதவன் போல சுற்றிக் கொண்டிருந்தான்.
இவளுக்கோ ஆத்திரம். அவன் தனியாக மாட்டட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
நிச்சயத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன.
அங்கே வேலை செய்பவர்களுக்கு இவர்கள் வீட்டிற்க்கு பக்கத்திலேயே வீடு கட்டி கொடுத்திருந்தனர்.
மறுநாள் அதிகாலை நேரமாக எழுந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒருவரும் தென்படவில்லை.
கடும் குளிரைக்கூட பொருட்படுத்தாமல், பூப்பறிக்கின்ற வேலையை காரணமாக்கி பூக்கூடையை எடுத்துக் கொண்டுத் தோட்டத்திற்கு சென்றாள்.
காயத்ரி அவனது அறைக்கே சென்று விட்டாள். அவன் அங்கே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க. நேராக அவன் முன் சென்று இடுப்பில் கைவைத்து நின்றாள்.
அவனுக்குத்தான் தெரியுமே அவள் வருவாள் என்று.
“ஏய்.. என்னடி? நீ பாட்டுக்கு வந்து நிக்குற? யாராச்சும் பாத்தா என்ன பண்றது?“ என்றான்.
“ஏன்டா? உனக்கு கொஞ்சமாச்சும் என் மேல அக்கறை இருக்கா? இன்னும் 3 நாள்ல நிச்சயம் பண்ண வந்துடுவாங்கன்னு நானே பயந்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா இவ்ளோ சாதாரணமா இருக்க? அவ்வளவுதான் நீ என் மேல வச்சிருக்க லவ்வா?”
“ஹேய், செல்லக்குட்டி, எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகுற, அதெல்லாம் மாமா பாத்துக்குறேன். நீ முதல்ல என்னை கவனி” என்றான்.
“போடா, உனக்கு எப்ப பார்த்தாலும் விளையாட்டுத்தான். நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பதில் சொல்லிட்டு இருக்க” என்றாள் காயத்ரி.
“என்ன அவசரம்? அதான் இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல. அப்புறம் என்ன பயப்படாம இரு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என்னவோ எனக்கேதும் சரியா படல வேந்தா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அவள் வேந்தனின் தோளில் தலை சாய்க்க, அவனோ அவள் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்தான்.
“நான் இருக்கேன்டி. தைரியமா இரு. சரியா? சரி வந்ததே வந்துட்டே, அப்படியே அய்யாவ கொஞ்சம் கவனிக்கிறது” என்றான்.
“ம்ம்ம், அவ்வளவு விவரம் துரை. போடா.. ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போற வழியப்பாரு. அதுக்கப்புறம் உங்களை எப்படி கவனிக்குறதுன்னு நான் காட்டறேன். இப்போ நான் கிளம்பறேன்” என்றவள் கிளம்ப எத்தனிக்க, அவள் கையை பிடித்து இழுத்தான் வேந்தன்.
அவன் இழுத்த இழுப்புக்கு அவன் மார்பின் மீது விழுந்தாள் மங்கையவள்.
“என்னடி? வந்த, பேசின, நீ பாட்டுக்கு கிளம்பர? இவ்வளவு பேசரவள சும்மா அனுப்பக்கூடாதுன்னு என் மனசு சொல்லுது. என்ன தரலாம் உனக்கு? ம்ம்ம் நீயே சொல்லு? என்ன பண்ணலாம்??“ என்றான்..
“வேந்தா, இது சரியில்லை. யாராவது பார்த்துட்டா வம்பு. விடு நான் போகனும்” என்றாள் சின்னக்குரலில். அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை. அவனுக்கு எங்கனம் கேட்கும்.
அவள் உதட்டசைவை பார்த்தவனுக்கு என்னென்னவோ தோன்றியதே. அவள் சத்தமாக பேசியிருந்தால் கூட வேந்தனுக்கு கேட்டிருக்காது.
“இந்த தண்டனையை அதிகமாக பேசற இதழுக்கா? இல்லை படபடன்னு அடிக்கிற இமைக்கா? சொல்லுடி?“ என்றான்.
“ஏய்,என்னடா? இப்படியெல்லாம் பேசற? வேந்தா நீ ரொம்ப மோசம், என்னை விடு. யாராவது பார்த்தா அவ்வளவு தான்” என்றவள் விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள்.
அவனோ ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன். தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான். அந்த பக்கம் என்ன சொன்னார்களோ, இவன் முகத்தில் ஒரு கீற்றுப்புன்னகை. அந்தப்புன்னகை அவள் நிச்சய நாளன்று வரையுமே நீடித்தது.
இருவரும் அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.
ஒருவர் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோடு, மற்றொருவர் பயத்தோடு.
தன்னம்பிக்கையோடு வேந்தன். பயத்தோடு காயத்ரி.
மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது.
வேந்தன் அன்று காலை எழுந்து கிளம்பி மாப்பிள்ளைத் தோரணையில் டிப்டாப்பாக இருந்தான்.
காயத்ரியோ கடனே என, ஏனோதானோவென்று கிளம்பினாள். ஆர்ப்பாட்டம் இல்லாத, அதிகம் கண்ணை உருத்தாத அலங்காரம். அதிலேயே அவள் தேவதை போல ஜொலித்தாள். முகத்தில் மட்டும் புன்னகை மருந்துக்கு கூட இல்லை.
மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர் என்று செய்தி அறிந்ததும் இவளுக்கோ கலவரம். பெற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என.
தன்னை காதலித்தவன் மேல் நம்பிக்கை இருந்தாலும்,வரப்போகும் விபரீதத்தை நினைத்து அச்சம் சூழ்ந்தது.
இருவரும் யார் மனதையும் புண்படுத்தாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் விதி அவர்கள் தலையெழுத்தை மாற்றி விட்டது போல.
நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் கடவுள் எதற்கு? விதி எதற்கு?
சரி, வாங்க நம்ம கதைக்குள்ள போலாம்.