Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 23.
விக்ரம் இல்லம்,
'என்ன இந்த இதழரசன் ரொம்ப மிகவும் அமைதியாக இருக்கிறான்.ஏதோ தவறாக உள்ளது விரைவிலே கண்டறிய வேண்டும்.'என்று தன் மனதில் நினைத்துபடி தனது இடது கையின் ஆள்காட்டி விரல் பெருவிரலை நெற்றியில் விரித்து, அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பெயர்தான் விக்ரம்.செய்கிற வேலை அக்கிரமம்!அந்நியாயம்! இவனும் இவனின் தந்தை மற்றும் ராஜேந்திரன் மூவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே சாலை விபத்துக்களை ஆட்களை வைத்து செய்து, அதில் மரணித்த நபர்களின் உடலில் இருந்து சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை திருடி 'ரெட்'மார்க்கெட் என்ற பெயரில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.
அதுமட்டுமா?ஆதரவு இல்லாத பெண்களை தக்க சமயம் பார்த்து கடத்தி வெளிநாட்டிற்கு விற்று விடுகின்றனர்.இது ஒரு பெரிய நெட்வொர்க்.
சமயம் பார்த்து குழந்தைகளை கடத்தி சென்று சாலை விபத்தாகவோ அல்லது ஆள் வைத்து கொண்றோ அவர்களின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
அது மட்டுமா குழந்தைகள் மற்றும் பெண்கள்,பெண்களின் உடல் உறுப்புகளுக்குதான் வெளிநாட்டில் அதீத டிமாண்ட்.
மேலும் போதை பொருள்களை உற்பத்தி செய்து வெளிநாட்டிலும்,ரகசியமாக உள்நாட்டிலும் விற்பனை செய்து வருகின்றர்.
அனைத்தையும் இவர்கள் மறைமுகமாகதான் செய்து வருகின்றார்கள்.எங்கும் இவர்கள் பெயர் அடிபடாமல் சாமார்த்தியமாக செயல்பட்டு வருகின்றனர்.
விக்ரம் வெளிநாட்டில் இருந்தவரை அவனுக்கு இதுதான் முக்கிய தொழிலாக இருந்தது.தன் தந்தை மற்றும் அங்க்கில் ராஜேந்திரன் சட்ட விரோதமாக கப்பலில் அனுப்பப்படும் உடல் உறுப்புகளை மறைமுகமாக வெளிநாட்டில் டீல் பேசி விற்று வந்துகொண்டிருந்தான்.
இவர்கள் மூவருமே வெறும் கண் துடைப்புக்கா கார்மென்ட்ஸ், இரும்பு தொழிற்சாலை,வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதழரசன் மட்டும் அன்று விக்ரமின் தம்பிகளை போதைப் பொருள் வைத்திருந்தற்காக கைய்து செய்து சிறையில் அடைத்தது, விஸ்வநாதன் வந்து பேசி விடாமல் இருந்ததற்காக மட்டும்தான் விக்ரம் வெளிநாட்டில் இருந்து வந்ததே.
இங்கு வந்தவன் மீண்டும் வெளிட்டிற்கு போகவில்லை.இங்கிருந்தே அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் குடும்பத்துடன் சென்னையிலே தங்கி விட்டான்.
இவர்களுக்கு என்று சொந்தமாக நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன.
விக்ரமனின் கெட்ட நேரம் இதழரசியை பார்த்து காதல் வயப்பட்டது.ஆனால் நிச்சயமாக காதல் என்று சொல்லி விட முடியாது.அது மோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.அதுவும் இதழரசனின் காதலி என்று தெரிந்து கொண்டே அவளை திருமணம் செய்ய நினைப்பது.
கடந்த இரண்டு வருடங்களாக இதழரசனும் விக்ரமும் மறைமுகமாக மோதி வருகின்றனர்.
இதழரசன் கண் துடைப்புக்காக காவல் நிலையத்தில் ஏஎஸ்பியாக இருந்து வெளிப்படையாக விஸ்வநாதன் ,விக்ரம், ராஜேந்திரனை எதிர்த்தபடி அதே நேரத்தில் அண்டர் கவர் ஆப்ரேஷனில் ரகசியமாக பல ஆதாரங்களை தற்பொழுது திரட்ட வேண்டும் அதே சமயத்தில் இதழருவியையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் பெண் வேடத்தில் ஊமை பெண்ணாக ராஜேந்திரன் இல்லத்தில் நுழைந்ததே.
விக்ரம் இல்லம்,
'என்ன இந்த இதழரசன் ரொம்ப மிகவும் அமைதியாக இருக்கிறான்.ஏதோ தவறாக உள்ளது விரைவிலே கண்டறிய வேண்டும்.'என்று தன் மனதில் நினைத்துபடி தனது இடது கையின் ஆள்காட்டி விரல் பெருவிரலை நெற்றியில் விரித்து, அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பெயர்தான் விக்ரம்.செய்கிற வேலை அக்கிரமம்!அந்நியாயம்! இவனும் இவனின் தந்தை மற்றும் ராஜேந்திரன் மூவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே சாலை விபத்துக்களை ஆட்களை வைத்து செய்து, அதில் மரணித்த நபர்களின் உடலில் இருந்து சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை திருடி 'ரெட்'மார்க்கெட் என்ற பெயரில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.
அதுமட்டுமா?ஆதரவு இல்லாத பெண்களை தக்க சமயம் பார்த்து கடத்தி வெளிநாட்டிற்கு விற்று விடுகின்றனர்.இது ஒரு பெரிய நெட்வொர்க்.
சமயம் பார்த்து குழந்தைகளை கடத்தி சென்று சாலை விபத்தாகவோ அல்லது ஆள் வைத்து கொண்றோ அவர்களின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
அது மட்டுமா குழந்தைகள் மற்றும் பெண்கள்,பெண்களின் உடல் உறுப்புகளுக்குதான் வெளிநாட்டில் அதீத டிமாண்ட்.
மேலும் போதை பொருள்களை உற்பத்தி செய்து வெளிநாட்டிலும்,ரகசியமாக உள்நாட்டிலும் விற்பனை செய்து வருகின்றர்.
அனைத்தையும் இவர்கள் மறைமுகமாகதான் செய்து வருகின்றார்கள்.எங்கும் இவர்கள் பெயர் அடிபடாமல் சாமார்த்தியமாக செயல்பட்டு வருகின்றனர்.
விக்ரம் வெளிநாட்டில் இருந்தவரை அவனுக்கு இதுதான் முக்கிய தொழிலாக இருந்தது.தன் தந்தை மற்றும் அங்க்கில் ராஜேந்திரன் சட்ட விரோதமாக கப்பலில் அனுப்பப்படும் உடல் உறுப்புகளை மறைமுகமாக வெளிநாட்டில் டீல் பேசி விற்று வந்துகொண்டிருந்தான்.
இவர்கள் மூவருமே வெறும் கண் துடைப்புக்கா கார்மென்ட்ஸ், இரும்பு தொழிற்சாலை,வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதழரசன் மட்டும் அன்று விக்ரமின் தம்பிகளை போதைப் பொருள் வைத்திருந்தற்காக கைய்து செய்து சிறையில் அடைத்தது, விஸ்வநாதன் வந்து பேசி விடாமல் இருந்ததற்காக மட்டும்தான் விக்ரம் வெளிநாட்டில் இருந்து வந்ததே.
இங்கு வந்தவன் மீண்டும் வெளிட்டிற்கு போகவில்லை.இங்கிருந்தே அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் குடும்பத்துடன் சென்னையிலே தங்கி விட்டான்.
இவர்களுக்கு என்று சொந்தமாக நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன.
விக்ரமனின் கெட்ட நேரம் இதழரசியை பார்த்து காதல் வயப்பட்டது.ஆனால் நிச்சயமாக காதல் என்று சொல்லி விட முடியாது.அது மோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.அதுவும் இதழரசனின் காதலி என்று தெரிந்து கொண்டே அவளை திருமணம் செய்ய நினைப்பது.
கடந்த இரண்டு வருடங்களாக இதழரசனும் விக்ரமும் மறைமுகமாக மோதி வருகின்றனர்.
இதழரசன் கண் துடைப்புக்காக காவல் நிலையத்தில் ஏஎஸ்பியாக இருந்து வெளிப்படையாக விஸ்வநாதன் ,விக்ரம், ராஜேந்திரனை எதிர்த்தபடி அதே நேரத்தில் அண்டர் கவர் ஆப்ரேஷனில் ரகசியமாக பல ஆதாரங்களை தற்பொழுது திரட்ட வேண்டும் அதே சமயத்தில் இதழருவியையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் பெண் வேடத்தில் ஊமை பெண்ணாக ராஜேந்திரன் இல்லத்தில் நுழைந்ததே.