Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 20.
அரசி வேண்டுமென்றேதான் தண்ணீர் கொட்டியிருந்தாள்.இன்றைக்கு சாதனாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற ரீதியில்.
சாதனா மின்விசிறியின் சுவிட்சை ஆன் செய்துவிட்டு திரும்பி ஒரு எட்டு வைக்கும் பொழுது சர்ரென்று கால் சறுக்கி அவள் "ஆ..."என்று கீழே விழப்போகும் சமயத்தில் இதழருவி அவளை தாங்கிப் பிடித்து நீள்விருக்கையில் அமரவைத்தாள்.
"ஏய் நீ எதுக்கு என்ன தாங்கி பிடிச்ச?"என்று வீடே அதிரும்படி கத்தியிருந்தாள் சாதனா.
"இல்ல நீ கீழ விழுந்துருக்கூடாதுன்னு.."என்று இதழருவி கூறி முடிப்பதற்குள்
"நான் கீழ விழுகாம இருக்க நீ என்ன தாங்கி பிடிச்சதற்கு பதிலாக நான் கீழே விழுந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்."என்று வார்த்தைகள் இதழருவியை குத்திக் கிழித்தபடி சாதனா நீள்விருக்கையில் இருந்து படாரென்று எழுந்து வேகமாக நடந்த பொழுது,
கால் இடரி சுவற்றில் கீழே விழுந்தவளுக்கு நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீறிடத் தொடங்கியது.
அதேநேரத்தில் நாச்சியாரும் நடுக் கூடத்திற்கு வந்திருந்தார்.சாதனாவின் நெற்றியின் ஓரத்தில் காயம் ஆகி இரத்தம் பீறிட்டு வருவதை பார்த்ததும் சற்றி பதறிதான் போனார் அவர்.
"உனக்கு அறிவே இல்ல சாதனா.பார்வை இல்லாதவங்க கூட கவனமா குச்சி வச்சு நடப்பாங்க.ஆனா நீ இருக்கியே மேலயே பார்த்து நடந்துட்டு.கொஞ்சம் கீழயும் பார்த்து நட இனிமேல்.
இப்ப பார்த்து உங்க அப்பா வேற வீட்டுல இல்ல.எப்படி நான் உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவேன்."என்று அவர் சாதனா விடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அரசி நாச்சியார் முன்பு வந்து தனக்கு கார் ஒட்டுத் தெரியும் என்பதை சைகையில் சொல்லவும்
"அரசி உனக்கு உண்மையாவே கார் ஓட்டத் தெரியுமா!"என்று ஆச்சரியமாக கேட்டபடி சாதானவின் நெற்றியின் ஒரத்தில் காயத்தில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை காட்டன் துணியை அதன் மேல் வைத்து சாதனாவை அழுத்தி பிடிக்கும்படி சொல்லிவிட்டு,
அரசியின் புறம் திரும்பியவர் "இதழருவி கார்.."என்று நாச்சியார் சொல்லி வருவதற்கு முன்பே "என்னால எல்லாம் அவளோட காருல வரமுடியாது."என்று அந்நிலையிலும் எரிச்சலாக கத்தியிருந்தாள் சாதனா.
ஏற்கனவே சாதனா அவளை வார்த்தையால் குத்தி கிழித்தற்கே இதழருவி வருத்தப்பட்டு கொண்டிருப்பவளுக்கு தற்போது இந்த பேச்சும் சேர்ந்துவிட மேலும் மனம் உடைந்தாள்.
கடினப்பட்டு தன் கண்ணீரை அடக்கியபடி வலியுடன் அவள் சாதனாவை பார்க்கவும்,
சாதனாவோ இதழருவி தன்னை பார்த்த மறுநொடி அவளை பார்க்க பிடிக்காமல் முகத்தை வேற புறமாக திருப்பிக் கொண்டாள்.
அரசிக்கு இதழருவியின் வாடிப்போன முகத்தை பார்க்க பார்க்க சாதனா வின் மேல் பயங்கர கோபம்தான் வந்தது அரசிக்கு.
"அரசி.. சாதனாவோட கார் கீ அவளோட ரூம்ல இருக்கும்.போய் எடுத்துட்டு வந்து கார ஸ்டார்ட் பண்ணு."என்று நாச்சியார் பதட்டமாக சொல்லவும் அவருக்காக சாதனாவின் அறைக்கு சென்று
கார் சாவியை எடுத்தபடி வேக நடையுடன் வீட்டின் வாயிலை கடந்து போர்டிகோவில் நின்றிருந்த சாதனாவின் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்ததும்,
நாச்சியார் சாதனாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து பின் இருக்கையில் அமரவைத்து தானும் அமர,அதே நேரத்தில் இதழருவியும் ஒடி வந்து மகிழுந்தின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கதவை சாற்றியிருந்தாள்.
இதழருவி ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை யாரும் அவளிடம் சொல்லவில்லை.தன் பழைய நினைவுகள் இல்லாததால் அவளுக்கும் தான் ஒரு மருத்துவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"இதழருவி உனக்கு எதுக்கும்மா வீணா அலைச்சல்?நாங்க போயிட்டு வந்தர்றோம்.நீ வீட்ல இரும்மா."என்று நாச்சியார் மென்மையாக சொல்லவும்
"அம்மா என்னதான் சாதனா என்ன வெறுத்தாலும் சரி என்ன ஒதுக்கி வெச்சாலும் சரி என்னால அவள விட்டுக்கொடுக்க முடியாதும்மா.
என்னதான் இருந்தாலும் அவ என் தங்கச்சி.நானும் கூட வரேன்மா.இதற்கு மேல எதுவும் பேசவேண்டாம்."என்று தன் மெல்லிய குரலில் கூறவும்
நாச்சியார் தான் பெற்றெடுக்காத மூத்த மகளை மெச்சுதலாக பார்த்தார்.இதழருவியின் இந்த பாச பினைப்பு பேச்சு சுத்தமாக சாதனாவிற்கு பிடிக்கவில்லைபோலும்.கோணலாக இதழ் வளைத்து சிரித்தவள்,
"அம்மா எனக்கு அடிபட்டு இரத்தம் வந்துட்டிருக்கு.இப்பகூட என்மேல உனக்கு அக்கறை இல்லாமா உன் பெரிய பொண் மேல அக்கறைய காமிச்சிட்டு இருக்க."என்று வலியில் பற்களை கடித்தபடி கத்தியிருந்தாள் சாதனா.
இவள் இப்படி கத்திய மறுநொடி அரசி வாகனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.அரைமணிநேரத்தில் தனது தம்பி சாகித்தியனின் மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
இரண்டு வருடம் கழித்து தன் தம்பியின் மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருக்கிறான் அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன்.
இதுவே தற்பொழுது தான் பெண் வேடத்தில் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வேற மருத்துவமனைக்குதான் சென்றிருப்பான்.
நாச்சியார் சாதனாவை அழைத்துக்கொண்டு முன்னே செல்லவும் அரசியும் இதழருவியும் பின்னே சென்றனர்.
மருத்துவமனைக்குள் வரும் ஒருவித மருந்து வாசனை இதழருவி நுகர்ந்ததுமே அவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு தோன்றி மறைந்தது.
நாச்சியார் சாதாவை மருத்தவர் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட அரசியும் இதழருவியும் காரிடாரில் வரிசையாக போடப்பட்டிருக்கும்
நாற்காலியில் இருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர்.
அரசி வேண்டுமென்றேதான் தண்ணீர் கொட்டியிருந்தாள்.இன்றைக்கு சாதனாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற ரீதியில்.
சாதனா மின்விசிறியின் சுவிட்சை ஆன் செய்துவிட்டு திரும்பி ஒரு எட்டு வைக்கும் பொழுது சர்ரென்று கால் சறுக்கி அவள் "ஆ..."என்று கீழே விழப்போகும் சமயத்தில் இதழருவி அவளை தாங்கிப் பிடித்து நீள்விருக்கையில் அமரவைத்தாள்.
"ஏய் நீ எதுக்கு என்ன தாங்கி பிடிச்ச?"என்று வீடே அதிரும்படி கத்தியிருந்தாள் சாதனா.
"இல்ல நீ கீழ விழுந்துருக்கூடாதுன்னு.."என்று இதழருவி கூறி முடிப்பதற்குள்
"நான் கீழ விழுகாம இருக்க நீ என்ன தாங்கி பிடிச்சதற்கு பதிலாக நான் கீழே விழுந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்."என்று வார்த்தைகள் இதழருவியை குத்திக் கிழித்தபடி சாதனா நீள்விருக்கையில் இருந்து படாரென்று எழுந்து வேகமாக நடந்த பொழுது,
கால் இடரி சுவற்றில் கீழே விழுந்தவளுக்கு நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீறிடத் தொடங்கியது.
அதேநேரத்தில் நாச்சியாரும் நடுக் கூடத்திற்கு வந்திருந்தார்.சாதனாவின் நெற்றியின் ஓரத்தில் காயம் ஆகி இரத்தம் பீறிட்டு வருவதை பார்த்ததும் சற்றி பதறிதான் போனார் அவர்.
"உனக்கு அறிவே இல்ல சாதனா.பார்வை இல்லாதவங்க கூட கவனமா குச்சி வச்சு நடப்பாங்க.ஆனா நீ இருக்கியே மேலயே பார்த்து நடந்துட்டு.கொஞ்சம் கீழயும் பார்த்து நட இனிமேல்.
இப்ப பார்த்து உங்க அப்பா வேற வீட்டுல இல்ல.எப்படி நான் உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவேன்."என்று அவர் சாதனா விடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அரசி நாச்சியார் முன்பு வந்து தனக்கு கார் ஒட்டுத் தெரியும் என்பதை சைகையில் சொல்லவும்
"அரசி உனக்கு உண்மையாவே கார் ஓட்டத் தெரியுமா!"என்று ஆச்சரியமாக கேட்டபடி சாதானவின் நெற்றியின் ஒரத்தில் காயத்தில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை காட்டன் துணியை அதன் மேல் வைத்து சாதனாவை அழுத்தி பிடிக்கும்படி சொல்லிவிட்டு,
அரசியின் புறம் திரும்பியவர் "இதழருவி கார்.."என்று நாச்சியார் சொல்லி வருவதற்கு முன்பே "என்னால எல்லாம் அவளோட காருல வரமுடியாது."என்று அந்நிலையிலும் எரிச்சலாக கத்தியிருந்தாள் சாதனா.
ஏற்கனவே சாதனா அவளை வார்த்தையால் குத்தி கிழித்தற்கே இதழருவி வருத்தப்பட்டு கொண்டிருப்பவளுக்கு தற்போது இந்த பேச்சும் சேர்ந்துவிட மேலும் மனம் உடைந்தாள்.
கடினப்பட்டு தன் கண்ணீரை அடக்கியபடி வலியுடன் அவள் சாதனாவை பார்க்கவும்,
சாதனாவோ இதழருவி தன்னை பார்த்த மறுநொடி அவளை பார்க்க பிடிக்காமல் முகத்தை வேற புறமாக திருப்பிக் கொண்டாள்.
அரசிக்கு இதழருவியின் வாடிப்போன முகத்தை பார்க்க பார்க்க சாதனா வின் மேல் பயங்கர கோபம்தான் வந்தது அரசிக்கு.
"அரசி.. சாதனாவோட கார் கீ அவளோட ரூம்ல இருக்கும்.போய் எடுத்துட்டு வந்து கார ஸ்டார்ட் பண்ணு."என்று நாச்சியார் பதட்டமாக சொல்லவும் அவருக்காக சாதனாவின் அறைக்கு சென்று
கார் சாவியை எடுத்தபடி வேக நடையுடன் வீட்டின் வாயிலை கடந்து போர்டிகோவில் நின்றிருந்த சாதனாவின் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்ததும்,
நாச்சியார் சாதனாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து பின் இருக்கையில் அமரவைத்து தானும் அமர,அதே நேரத்தில் இதழருவியும் ஒடி வந்து மகிழுந்தின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கதவை சாற்றியிருந்தாள்.
இதழருவி ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை யாரும் அவளிடம் சொல்லவில்லை.தன் பழைய நினைவுகள் இல்லாததால் அவளுக்கும் தான் ஒரு மருத்துவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"இதழருவி உனக்கு எதுக்கும்மா வீணா அலைச்சல்?நாங்க போயிட்டு வந்தர்றோம்.நீ வீட்ல இரும்மா."என்று நாச்சியார் மென்மையாக சொல்லவும்
"அம்மா என்னதான் சாதனா என்ன வெறுத்தாலும் சரி என்ன ஒதுக்கி வெச்சாலும் சரி என்னால அவள விட்டுக்கொடுக்க முடியாதும்மா.
என்னதான் இருந்தாலும் அவ என் தங்கச்சி.நானும் கூட வரேன்மா.இதற்கு மேல எதுவும் பேசவேண்டாம்."என்று தன் மெல்லிய குரலில் கூறவும்
நாச்சியார் தான் பெற்றெடுக்காத மூத்த மகளை மெச்சுதலாக பார்த்தார்.இதழருவியின் இந்த பாச பினைப்பு பேச்சு சுத்தமாக சாதனாவிற்கு பிடிக்கவில்லைபோலும்.கோணலாக இதழ் வளைத்து சிரித்தவள்,
"அம்மா எனக்கு அடிபட்டு இரத்தம் வந்துட்டிருக்கு.இப்பகூட என்மேல உனக்கு அக்கறை இல்லாமா உன் பெரிய பொண் மேல அக்கறைய காமிச்சிட்டு இருக்க."என்று வலியில் பற்களை கடித்தபடி கத்தியிருந்தாள் சாதனா.
இவள் இப்படி கத்திய மறுநொடி அரசி வாகனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.அரைமணிநேரத்தில் தனது தம்பி சாகித்தியனின் மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
இரண்டு வருடம் கழித்து தன் தம்பியின் மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருக்கிறான் அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன்.
இதுவே தற்பொழுது தான் பெண் வேடத்தில் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வேற மருத்துவமனைக்குதான் சென்றிருப்பான்.
நாச்சியார் சாதனாவை அழைத்துக்கொண்டு முன்னே செல்லவும் அரசியும் இதழருவியும் பின்னே சென்றனர்.
மருத்துவமனைக்குள் வரும் ஒருவித மருந்து வாசனை இதழருவி நுகர்ந்ததுமே அவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு தோன்றி மறைந்தது.
நாச்சியார் சாதாவை மருத்தவர் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட அரசியும் இதழருவியும் காரிடாரில் வரிசையாக போடப்பட்டிருக்கும்
நாற்காலியில் இருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர்.