Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 12.
"நீ.. நீங்க.. யாரு?"என்று பயத்தில் குலறலாக வந்தது கடைக்காரனின் வார்த்தைகள்.நெற்றியில் உதித்த வேர்வை முத்துக்களை துடைக்ககூட மனம் வரவில்லை அவனுக்கு.
'நல்ல மாட்டிட்டனே!'என்று மனதில் நினைத்தவன் வெளிறிப்போன முகத்துடன் தன் கையில் மாட்டப் பட்டிருந்த விலங்கை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நிமிர்ந்து கார்த்திகேயனை பார்க்க,
அந்நேரத்தில்,"குட் கார்த்தி."தன் கனீர் குரலில் கூறியபடி டோப்பா முடியையும் தாடையில் ஒட்டியிருந்த டோப்பா குறுந்தாடையை நீக்கியபடி கடைக்குள் வந்தான் இதழரசன்.
சுற்றியுள்ள கடைக்காரர்கள், பொதுமக்களின் பார்வைகள் இந்தக் கடையில் நின்றிருந்த இவர்களை மொய்க்க ஆரம்பித்தது.
"கார்த்தி..இவன கூட்டிட்டு போ.ஜீப் சந்தைக்கு எதிரலதான் இருக்கு.நான்என்னோட பைக்ல வந்துர்ரேன்."என்றான் அதிகாரத் தோனியில்.
கார்த்திகேயன் அந்தக்கடைக்காரனை இழுத்து சென்று பிறகு,
"இந்த சந்தையில காய்கறி விற்கரங்க பேருல இந்தமாதிரி போதைப்பொருள் விற்பனை யாராவது செய்ரதா தெரிஞ்சா உடனடியாக போலிஷ்க்கு சொல்லுங்க.
காவல்துறை மட்டும் உங்களுக்கு நண்பன் கிடையாது.நீங்களும் காவல்துறைக்கு நண்பன்தான்.நான் சொல்ரது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்."என்று அழுத்தமான வார்த்தைகளை வீசிவிட்டு தன் பைக்கை நோக்கி நிமிர்ந்த நடையுடன் நடைபோட்டிருந்தான் இதழரசன்.
கதிரவன் ஒளி தேய ஆரம்பித்திருந்த மாலை நேரம் அது.
குழைந்தகள் விளையாடும் பார்க்கிற்கு வந்திருந்தாள் இதழருவி.அங்கு போடப்பட்ட பென்ச்சில் அமைதியாக அமர்ந்து பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மனச்சோர்வு ஏற்படும் போது இந்தப் பார்க்கிற்கு வருவது வழக்கம்.
'ச்சே..எந்தக் கவலையும் இல்லாம குழந்தையாவே இருந்திருக்கலாம்.'என்று மனதில் நினைத்தபடி கைப்பையில் இருந்த தனது கைபேசியை வெளியே எடுத்தாள்.
'காலையில ஏதோ புலனில் செய்தி வந்துதா செய்தி இசை சத்தம் வந்துதே.'என்று மனதில் நினைத்தபடி தொடுதிரையில் வலதுபுறம் ஒதுங்கி இருந்த புலன் செயலியை திறந்து உள்ளே சென்றாள்.
இதழரசனிடம் 'குட் மார்னிங்.'என்ற செய்தி காலையில் வந்திருப்பதை பார்த்தவள் பதிலுக்கு தானும் குட் ஈவினிங் என்று செய்தியை புலனில் தட்டிவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.
இதழரசன் தான் அவன் எதிரில் நின்று இருந்தான்.
"சார்.. நீங்க?"என்றபடி மேலே எழ முயற்சிப்பவளை கீழே அமரும்படி சைகை காட்டி விட்டு அவளுக்கு எதிர் பென்ச்சில் அமர்ந்தவன்
"இங்க பாருங்க எனக்கு இந்த சினிமாவுல வர மாதிரி எல்லாம் லவ் ப்ரோபஸ் பண்ண தெரியாது.
நான் உங்கள காதலிக்கிரேன்.உங்கள பார்த்த செகன்ட்டே எனக்கு பிடிச்சிடுச்சு.உங்களுடைய விருப்பத்த சொல்லுங்கன்னு இப்பவே சொல்லனும்னு அவசியம் இல்லை.டைம் எடுத்துக்கோங்க.நல்ல செய்தியா சொல்லுங்க."என்று நிறுத்தி நிதானமாக கூறியவன் அவ்வளவுதான் என்பதுபோல் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.
'என்ன சொல்லிட்டு போரான் லூசு.அறிவுகெட்டவன்.இவனுக்கு போய் நான் செய்தி அனுப்புனேன்பாரு என்ன செருப்பால அடிக்கனும்.'என்று மனதில் இதழரசனை திட்டியபடி அவனின் எண்னை ப்ளாக்கில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள் இதழருவி.
"இதழருவி..நில்லுடி."என்று தன் தோழி கத்திய கத்தலில்தான் தன் நடையை மட்டுப்படுத்தி நின்றாள் இதழருவி.
"இவ்வளவு நேரமா அதோ அந்த பென்ச்சலதான் உட்கார்ந்திருந்தேன்.அதற்குள்ள ஒரு எருமை மாடு வந்து என்னோட மூட் கெடுத்து விட்டுட்டு போயிருச்சு."என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
"அது சரி.நீ என்ன திடீர்னு இங்க வந்திருக்க?"தன் தோழி ஸ்வேதாவிடம் கேட்டிருந்தாள்.
"அதோ அந்த ஊஞ்சல்ல ஆடிட்டு இருக்காளே அவதா எங்க அக்கா பொண்ணு மது.அவ பார்க்ல போய் விளையாடனும் சொன்னதால இங்க கூட்டிட்டு வந்தேன்."என்றாள் புன்னகை முகத்துடன் ஸ்வேதா.
"சரி டி டைம் ஆகுது. நான் வீட்டுக்கு கிளம்புறேன்."என்று தன் தோழியிடம் விடைபெற்று இதழருவி முன்னோக்கி என்ற செல்ல,அவளின் முதுகையே வெறித்து பார்த்திருந்தாள் ஸ்வேதா.
'அதெப்படி இவளுக்கு மட்டும் எங்கிருந்து வறான்களோ?ஆனா அவன உனக்கு கிடைக்க நான் விடமாட்டேன்.நானும் பார்த்துட்டுதான இருந்தேன் எல்லாத்தையும்.
அவன் உன்கிட்ட காதலை சொன்னதுமே உன்னோட முகத்துல மைக்ரோ செகண்ட்ல மின்னல் மின்னுறமாற சந்தோஷம் வந்து மறஞ்சத அவன் பார்த்தானோ இல்லையோ நான் பார்த்தேன்.'என்று மனதில் பொறுமையபடி பற்களை நரநரவென்று கடித்தாள்.
அதென்னமோ தெரியவில்லை.இந்த ஸ்வேதாவிற்கு தன்னோடு நெருங்கிய தோழியாக இருந்தாலும் அவளுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்.
சதா எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சினை என்று அவளிடம் போய் நிற்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ரகம் அவள்.
அவளின் எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கியவள் இதழருவி.
அதனாலயே அவள் மீது அதிக பொறாமை கொள்ள ஆரம்பித்தாள்.அந்த பொறாமை பகையாக மாறியது.ஆனால் சண்டை வளர்க்காது அதற்கு மாறாக உடன் இருந்து குழி பறிக்கும் விளையாட்டை ஆடத் தொடங்கினாள்.
அவள் சந்தோஷமாக ஒரு நேரம் இருந்துவிட்டால் போதும் இவளுக்கு வயிறு தகதகவென்று எரிய ஆரம்பிக்கும்.
இதுவரை உள்ளுக்குள் பொறாமை பகையும் உதட்டளவில் நட்புறவை நீடித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
இதழரசனுக்கு தன் காதலை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில்
விசில் அடித்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
"நீ.. நீங்க.. யாரு?"என்று பயத்தில் குலறலாக வந்தது கடைக்காரனின் வார்த்தைகள்.நெற்றியில் உதித்த வேர்வை முத்துக்களை துடைக்ககூட மனம் வரவில்லை அவனுக்கு.
'நல்ல மாட்டிட்டனே!'என்று மனதில் நினைத்தவன் வெளிறிப்போன முகத்துடன் தன் கையில் மாட்டப் பட்டிருந்த விலங்கை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நிமிர்ந்து கார்த்திகேயனை பார்க்க,
அந்நேரத்தில்,"குட் கார்த்தி."தன் கனீர் குரலில் கூறியபடி டோப்பா முடியையும் தாடையில் ஒட்டியிருந்த டோப்பா குறுந்தாடையை நீக்கியபடி கடைக்குள் வந்தான் இதழரசன்.
சுற்றியுள்ள கடைக்காரர்கள், பொதுமக்களின் பார்வைகள் இந்தக் கடையில் நின்றிருந்த இவர்களை மொய்க்க ஆரம்பித்தது.
"கார்த்தி..இவன கூட்டிட்டு போ.ஜீப் சந்தைக்கு எதிரலதான் இருக்கு.நான்என்னோட பைக்ல வந்துர்ரேன்."என்றான் அதிகாரத் தோனியில்.
கார்த்திகேயன் அந்தக்கடைக்காரனை இழுத்து சென்று பிறகு,
"இந்த சந்தையில காய்கறி விற்கரங்க பேருல இந்தமாதிரி போதைப்பொருள் விற்பனை யாராவது செய்ரதா தெரிஞ்சா உடனடியாக போலிஷ்க்கு சொல்லுங்க.
காவல்துறை மட்டும் உங்களுக்கு நண்பன் கிடையாது.நீங்களும் காவல்துறைக்கு நண்பன்தான்.நான் சொல்ரது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்."என்று அழுத்தமான வார்த்தைகளை வீசிவிட்டு தன் பைக்கை நோக்கி நிமிர்ந்த நடையுடன் நடைபோட்டிருந்தான் இதழரசன்.
கதிரவன் ஒளி தேய ஆரம்பித்திருந்த மாலை நேரம் அது.
குழைந்தகள் விளையாடும் பார்க்கிற்கு வந்திருந்தாள் இதழருவி.அங்கு போடப்பட்ட பென்ச்சில் அமைதியாக அமர்ந்து பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மனச்சோர்வு ஏற்படும் போது இந்தப் பார்க்கிற்கு வருவது வழக்கம்.
'ச்சே..எந்தக் கவலையும் இல்லாம குழந்தையாவே இருந்திருக்கலாம்.'என்று மனதில் நினைத்தபடி கைப்பையில் இருந்த தனது கைபேசியை வெளியே எடுத்தாள்.
'காலையில ஏதோ புலனில் செய்தி வந்துதா செய்தி இசை சத்தம் வந்துதே.'என்று மனதில் நினைத்தபடி தொடுதிரையில் வலதுபுறம் ஒதுங்கி இருந்த புலன் செயலியை திறந்து உள்ளே சென்றாள்.
இதழரசனிடம் 'குட் மார்னிங்.'என்ற செய்தி காலையில் வந்திருப்பதை பார்த்தவள் பதிலுக்கு தானும் குட் ஈவினிங் என்று செய்தியை புலனில் தட்டிவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.
இதழரசன் தான் அவன் எதிரில் நின்று இருந்தான்.
"சார்.. நீங்க?"என்றபடி மேலே எழ முயற்சிப்பவளை கீழே அமரும்படி சைகை காட்டி விட்டு அவளுக்கு எதிர் பென்ச்சில் அமர்ந்தவன்
"இங்க பாருங்க எனக்கு இந்த சினிமாவுல வர மாதிரி எல்லாம் லவ் ப்ரோபஸ் பண்ண தெரியாது.
நான் உங்கள காதலிக்கிரேன்.உங்கள பார்த்த செகன்ட்டே எனக்கு பிடிச்சிடுச்சு.உங்களுடைய விருப்பத்த சொல்லுங்கன்னு இப்பவே சொல்லனும்னு அவசியம் இல்லை.டைம் எடுத்துக்கோங்க.நல்ல செய்தியா சொல்லுங்க."என்று நிறுத்தி நிதானமாக கூறியவன் அவ்வளவுதான் என்பதுபோல் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.
'என்ன சொல்லிட்டு போரான் லூசு.அறிவுகெட்டவன்.இவனுக்கு போய் நான் செய்தி அனுப்புனேன்பாரு என்ன செருப்பால அடிக்கனும்.'என்று மனதில் இதழரசனை திட்டியபடி அவனின் எண்னை ப்ளாக்கில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள் இதழருவி.
"இதழருவி..நில்லுடி."என்று தன் தோழி கத்திய கத்தலில்தான் தன் நடையை மட்டுப்படுத்தி நின்றாள் இதழருவி.
"இவ்வளவு நேரமா அதோ அந்த பென்ச்சலதான் உட்கார்ந்திருந்தேன்.அதற்குள்ள ஒரு எருமை மாடு வந்து என்னோட மூட் கெடுத்து விட்டுட்டு போயிருச்சு."என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
"அது சரி.நீ என்ன திடீர்னு இங்க வந்திருக்க?"தன் தோழி ஸ்வேதாவிடம் கேட்டிருந்தாள்.
"அதோ அந்த ஊஞ்சல்ல ஆடிட்டு இருக்காளே அவதா எங்க அக்கா பொண்ணு மது.அவ பார்க்ல போய் விளையாடனும் சொன்னதால இங்க கூட்டிட்டு வந்தேன்."என்றாள் புன்னகை முகத்துடன் ஸ்வேதா.
"சரி டி டைம் ஆகுது. நான் வீட்டுக்கு கிளம்புறேன்."என்று தன் தோழியிடம் விடைபெற்று இதழருவி முன்னோக்கி என்ற செல்ல,அவளின் முதுகையே வெறித்து பார்த்திருந்தாள் ஸ்வேதா.
'அதெப்படி இவளுக்கு மட்டும் எங்கிருந்து வறான்களோ?ஆனா அவன உனக்கு கிடைக்க நான் விடமாட்டேன்.நானும் பார்த்துட்டுதான இருந்தேன் எல்லாத்தையும்.
அவன் உன்கிட்ட காதலை சொன்னதுமே உன்னோட முகத்துல மைக்ரோ செகண்ட்ல மின்னல் மின்னுறமாற சந்தோஷம் வந்து மறஞ்சத அவன் பார்த்தானோ இல்லையோ நான் பார்த்தேன்.'என்று மனதில் பொறுமையபடி பற்களை நரநரவென்று கடித்தாள்.
அதென்னமோ தெரியவில்லை.இந்த ஸ்வேதாவிற்கு தன்னோடு நெருங்கிய தோழியாக இருந்தாலும் அவளுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்.
சதா எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சினை என்று அவளிடம் போய் நிற்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ரகம் அவள்.
அவளின் எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கியவள் இதழருவி.
அதனாலயே அவள் மீது அதிக பொறாமை கொள்ள ஆரம்பித்தாள்.அந்த பொறாமை பகையாக மாறியது.ஆனால் சண்டை வளர்க்காது அதற்கு மாறாக உடன் இருந்து குழி பறிக்கும் விளையாட்டை ஆடத் தொடங்கினாள்.
அவள் சந்தோஷமாக ஒரு நேரம் இருந்துவிட்டால் போதும் இவளுக்கு வயிறு தகதகவென்று எரிய ஆரம்பிக்கும்.
இதுவரை உள்ளுக்குள் பொறாமை பகையும் உதட்டளவில் நட்புறவை நீடித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
இதழரசனுக்கு தன் காதலை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில்
விசில் அடித்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.