Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 11.
தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு வந்து கதவை சாற்றியிருந்தாள் இதழருவி.
அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கீழே அமர்ந்தவள் சுவற்றில் தன் முதுகை சாய்த்தாள்.
தன் கால்களை நன்றாக நீட்டி கொண்டாள். 'இந்த வீட்டில் தனக்கு ஆதரவாக தன் தாய் மட்டும் இல்லையென்றால் என் நிலைமை..'என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளாள்.
'கடவுளோ!நாளைக்கு சாதனா எம்.பி.ஏ பண்ண யூ எஸ் போகிறாள்.அவள் அங்கு படிப்பு முடிச்சிட்டு திரும்பி வரவரைக்கும் நீங்கதான் அவளுக்கு துணையா பாதுகாப்பா இருக்கனும்.'என்று கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு அமைதியாக இமைகளை மூட கண்ணீர் நிற்காமல் கன்னத்தில் வழிந்த கொண்டே இருந்தது.
அப்பொழுது அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது கைபேசி.புது எண்ணாக இருந்ததை பார்த்தவள் 'யாராக இருக்கும்?'என்று மனதில் நினைத்தவள் புருவங்களை சுருக்கி அந்த அழைப்பை ஏற்று "ஹலோ."என்றாள்.
"நான் இதழரசன் பேசறேன்."என்று அப்பக்கம் கூறியதும் இவளுக்கு பதட்டம் ஆனது.
"சார்.. எதுக்கு இந்த டைம் கூப்பிட்டு இருக்கிங்க?"என்று அவளின் பதட்டமான குரலை கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
"நிதானமா இருங்க.கேஷ் விசயமா இல்ல.சும்மா உங்களோட பேசனும்னு தோணுச்சு.அதுதான் உங்களுக்கு போன் பண்ணேன்."
"இங்க பாருங்க கேஷ் விசயமா இருந்தா பேசுங்க.நான் பதில் சொல்றேன்.ஆனா அதை தவிர்த்து வேற எதுவும் என்கிட்ட பேச வேண்டாமே ப்ளீஸ்."சிறிது தயக்கத்துடன் தான் கூற வந்ததை அவன் மனது நோகாதபடி சொல்லி முடித்திருந்தாள்.
"சாரி."என்று சிறு குரலில் கூறிவிட்டு அப்பக்கம் பட்டென்று அழைப்பை கட் செய்துவிட இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
மீண்டும் அவனுக்கு அவள் அழைப்பு விடுக்க,அப்பக்கம் அழைப்பு சென்று நின்றதே தவிர அவன் எடுத்த பாடில்லை.
அவனின் என்னை தன் கைபேசியில் சேமித்து புலனில் "ஹாய்.. நான் ரொம்ப அப்செட் ல இருந்தேன்.நான் சொன்னது உங்கள ஹர்ட் பண்ணி இருந்தால் ரொம்ப சாரி.குட் நைட்."என்று செய்தி அனுப்பிவிட்டு கைபேசியை ஓரமாக வைத்தவள் தலை காணியை கீழே போட்டதும் வெறும் தரையிலே படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
மலை முகடுகளில் மறைந்திருந்த கதிரவன் மெது மெதுவாக வானில் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தான்.
"நாச்சியா நீ மட்டும் ஏர்போர்ட்க்கு எங்க கூட வா.நாம சாதனாவ வழியனுப்பி வெச்சுட்டு வரலாம்."என்றார் தன் கணீர் குரலில் ராஜேந்திரன்.
'அம்மா நான் வராட்டி என்ன? நீங்க அவளுக்காக இல்லைன்னாலும் எனக்காக ஏர்போர்ட் போய் சாதனாவ சந்தோஷமா வழியனுப்பி வெச்சுட்டு வரனும்.'என்று நேற்றிரவு சாப்பிடும் பொழுது தன் பெரிய மகள் சொன்னது நினைவு வர அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்தார் நாச்சியார்.
"ரொம்ப தேங்க்ஸ்மா."என்று மகிழ்ச்சியாக தன் தாயை கட்டி அணைத்து விடுவித்தாள் சாதனா.
"டிரைவர் வண்டியை எடுப்பா."என்று ராஜேந்திரன் கட்டளையிட,அந்த வாகனம் வீட்டின் வாசலை கடந்து சாலையில் இறங்கி ஏர்போர்ட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
பால்கனி வராண்டாவில் நின்று வெளியேறிய அந்த வாகனத்தை சிறிது ஏக்கத்துடன் பார்த்தவள் பின் கசந்த புன்னகையுடன் மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவளின் கைபேசியில் இருந்து டொங்..டொங் என்று சத்தம் வந்தது.
'புலன் செய்தி சத்தம்.'என்று மனதில் நினைத்தவள் போர்டிகோவை தளர்ந்த நடையில் அடைந்து இருந்தாள்.
வெறுமையான மனநிலையில் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து செலுத்த ஆரம்பித்தாள்.
அவளின் வாகனம் மருத்துவமனையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.இன்று ஏனோ மருத்துமனைக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டிருந்தாள்.
கனத்த மனதுடன் மருத்துவமனைக்குள் சென்றிருந்தாள்.தனது கேபினை அடைந்ததும் தன் இருக்கையில் அமர்ந்து தன் விழிகளை மூடி தன் மனதை ஒரு நிலைப்
படுத்திய பின்பு தனது வேலையை தொடங்கினாள்.
தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு வந்து கதவை சாற்றியிருந்தாள் இதழருவி.
அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கீழே அமர்ந்தவள் சுவற்றில் தன் முதுகை சாய்த்தாள்.
தன் கால்களை நன்றாக நீட்டி கொண்டாள். 'இந்த வீட்டில் தனக்கு ஆதரவாக தன் தாய் மட்டும் இல்லையென்றால் என் நிலைமை..'என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளாள்.
'கடவுளோ!நாளைக்கு சாதனா எம்.பி.ஏ பண்ண யூ எஸ் போகிறாள்.அவள் அங்கு படிப்பு முடிச்சிட்டு திரும்பி வரவரைக்கும் நீங்கதான் அவளுக்கு துணையா பாதுகாப்பா இருக்கனும்.'என்று கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு அமைதியாக இமைகளை மூட கண்ணீர் நிற்காமல் கன்னத்தில் வழிந்த கொண்டே இருந்தது.
அப்பொழுது அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது கைபேசி.புது எண்ணாக இருந்ததை பார்த்தவள் 'யாராக இருக்கும்?'என்று மனதில் நினைத்தவள் புருவங்களை சுருக்கி அந்த அழைப்பை ஏற்று "ஹலோ."என்றாள்.
"நான் இதழரசன் பேசறேன்."என்று அப்பக்கம் கூறியதும் இவளுக்கு பதட்டம் ஆனது.
"சார்.. எதுக்கு இந்த டைம் கூப்பிட்டு இருக்கிங்க?"என்று அவளின் பதட்டமான குரலை கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
"நிதானமா இருங்க.கேஷ் விசயமா இல்ல.சும்மா உங்களோட பேசனும்னு தோணுச்சு.அதுதான் உங்களுக்கு போன் பண்ணேன்."
"இங்க பாருங்க கேஷ் விசயமா இருந்தா பேசுங்க.நான் பதில் சொல்றேன்.ஆனா அதை தவிர்த்து வேற எதுவும் என்கிட்ட பேச வேண்டாமே ப்ளீஸ்."சிறிது தயக்கத்துடன் தான் கூற வந்ததை அவன் மனது நோகாதபடி சொல்லி முடித்திருந்தாள்.
"சாரி."என்று சிறு குரலில் கூறிவிட்டு அப்பக்கம் பட்டென்று அழைப்பை கட் செய்துவிட இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
மீண்டும் அவனுக்கு அவள் அழைப்பு விடுக்க,அப்பக்கம் அழைப்பு சென்று நின்றதே தவிர அவன் எடுத்த பாடில்லை.
அவனின் என்னை தன் கைபேசியில் சேமித்து புலனில் "ஹாய்.. நான் ரொம்ப அப்செட் ல இருந்தேன்.நான் சொன்னது உங்கள ஹர்ட் பண்ணி இருந்தால் ரொம்ப சாரி.குட் நைட்."என்று செய்தி அனுப்பிவிட்டு கைபேசியை ஓரமாக வைத்தவள் தலை காணியை கீழே போட்டதும் வெறும் தரையிலே படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
மலை முகடுகளில் மறைந்திருந்த கதிரவன் மெது மெதுவாக வானில் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தான்.
"நாச்சியா நீ மட்டும் ஏர்போர்ட்க்கு எங்க கூட வா.நாம சாதனாவ வழியனுப்பி வெச்சுட்டு வரலாம்."என்றார் தன் கணீர் குரலில் ராஜேந்திரன்.
'அம்மா நான் வராட்டி என்ன? நீங்க அவளுக்காக இல்லைன்னாலும் எனக்காக ஏர்போர்ட் போய் சாதனாவ சந்தோஷமா வழியனுப்பி வெச்சுட்டு வரனும்.'என்று நேற்றிரவு சாப்பிடும் பொழுது தன் பெரிய மகள் சொன்னது நினைவு வர அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்தார் நாச்சியார்.
"ரொம்ப தேங்க்ஸ்மா."என்று மகிழ்ச்சியாக தன் தாயை கட்டி அணைத்து விடுவித்தாள் சாதனா.
"டிரைவர் வண்டியை எடுப்பா."என்று ராஜேந்திரன் கட்டளையிட,அந்த வாகனம் வீட்டின் வாசலை கடந்து சாலையில் இறங்கி ஏர்போர்ட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
பால்கனி வராண்டாவில் நின்று வெளியேறிய அந்த வாகனத்தை சிறிது ஏக்கத்துடன் பார்த்தவள் பின் கசந்த புன்னகையுடன் மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவளின் கைபேசியில் இருந்து டொங்..டொங் என்று சத்தம் வந்தது.
'புலன் செய்தி சத்தம்.'என்று மனதில் நினைத்தவள் போர்டிகோவை தளர்ந்த நடையில் அடைந்து இருந்தாள்.
வெறுமையான மனநிலையில் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து செலுத்த ஆரம்பித்தாள்.
அவளின் வாகனம் மருத்துவமனையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.இன்று ஏனோ மருத்துமனைக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டிருந்தாள்.
கனத்த மனதுடன் மருத்துவமனைக்குள் சென்றிருந்தாள்.தனது கேபினை அடைந்ததும் தன் இருக்கையில் அமர்ந்து தன் விழிகளை மூடி தன் மனதை ஒரு நிலைப்
படுத்திய பின்பு தனது வேலையை தொடங்கினாள்.