Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 46
- Thread Author
- #1
அத்தியாயம்10.
'என்ன சொன்னாலும் நம்பறாளே.அதுவும் என் பேர வைச்சிட்டு.ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கே.ஹோம்லியா இருக்கா.'என்று மனதில் நினைத்தபடி
அவள் நீட்டிய ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்காது கண் சிமிட்டாது அவளின் முகத்தையே பார்த்திருந்தான் இதழரசன்.
"சார்.."என்று இதழருவி அவனின் முகத்தின் முன்பு தன் வலதுகரத்தை வலது இடது புறமாக ஆட்டிக்கொண்டிருக்கவும்தான் அவன் சுயநினைவு பெற்றவனாக "ஹாங்.. என்ன சொன்னிங்க?"புருவம் சுருக்கி கேட்க,
"நான் ரொம்ப நேரமா ப்ரிஸ்க்ரிப்ஷன நீட்டிட்டே இருக்கேன்.ஆனா நீங்க வாங்கவே இல்ல."என்று தன் முகத்தை சுருக்கி அப்பாவியாக அவள் சொல்லவும்
'எனக்கு மனைவியா வரப்போரவ ரொம்ப தைரியமா இருக்கனும்னு ரொம்ப கனவு கண்டேனே.. அதெல்லாம் இப்படி தவடி பொடி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கலயே!'என்று மனதில் கவலையாக நினைத்தவன் அவளிடமிருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை தன் கைக்கு இடம் மாற்றியிருந்தான்.
"நான் கிளம்புறேன்."சிறு குரலில் அவளிடம் சொல்லிவிட்டு அவன் அவ்வறையிலிருந்து வெளியேறவும்தான் தன் இருக்கையில் நிம்மதியாக அமர்ந்தாள் இதழருவி.
விஸ்வநாதன் இல்லம்,
"என்னப்பா சொல்ரிங்க? நீங்க அவ்வளவு தூரம் சொல்லியும் அவன் கேட்கலின்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்."ஆக்ரோசமாக அவ்வீட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விக்ரம்.
"விடு விக்கரம் அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சுடுச்சு.நாம நம்ம வக்கீல் கெட்ட பேசி உன் தம்பிகள வெளியே எடுக்கலாம்."தன் பெரிய மகனுக்கு ஆறுதல் அளித்துவிட்டு தங்கள் குடும்ப வக்கீலிக்கு அழைப்பு விடுத்தார் விஸ்வநாதன்.
"அப்பா பேசிட்டிங்களா?
வக்கீல் என்ன சொல்ராரு?"ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தான் விக்ரம்.
"வக்கீல் அவன் கிட்ட இருக்கர எவிடன்ச அழிச்சுடுங்க.மித்தத நான் பார்த்துக்கிரேன்னு நம்பிக்கையா சொல்ராரு."என்று நெற்றியை தேய்த்தபடி அவர் கவலையாக சொல்ல
"அப்பா இப்ப எதுக்கு ரொம்ப கவலையா இருக்கிங்க?"வருத்தம் இழையோடிய குரலில் கேட்டான்.
"பின்ன என்னடா அவனோட போனல இருக்கர வீடியோவ நாம எப்படி அழிக்க முடியும்?"
"நீங்க சொல்ரது சரிதான்.ஆனா,அவனோட போன நாம அழிக்க முடியும்."என்று நம்பிக்கையாக கூறினான் அவரின் தவப்புதல்வன்.
"அவன்கிட்ட இருந்து போன எடுக்கரது அவ்வளவு சுலபம் கிடையாது.அதுவும் இல்லாம இந்நேரம் அந்த வீடியோவ வேற பென்டிரைவ்ல கூட ஏத்தி பாதுகாப்பா வெச்சிருக்கலாம்."நெற்றியை சுருக்கி தனது யூகத்தை கூறினார்.
"அந்த காவல் நிலையத்தில வேலை செய்யுர நம்மாலு கிட்ட போன் பண்ணி விஷயத்த சொல்லுங்க.அங்க போதைப்பொருள் இருந்த இரண்டு சின்ன பாக்கெட்டயும் எதாவது எவிடன்ஸ் இருந்தா அதை அழிக்க சொல்லிடுங்க.
அந்த இதழரசனோட போன எடுத்து அழிக்கர வேலையை நான் பார்த்துக்கிறேன்."சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியவன் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன் தன் வலது செவியில் வைத்தபடி மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான்.
"இந்த வைகாசி பொறந்தாவே அப்பப்போ மழை பேய ஆரம்பிச்சுடது சார்."என்று சலித்தபடி கார்த்திகேயன் கூறவும்
"மழைய என்ஜாய் பண்ணனும் கார்த்திகேயன்."மழையை ரசித்தபடி இதழரசன் சொல்ல
"எதுக்கு சார் சளி,காய்ச்சல், இருமல் வருவதற்கா?"என்று குறும்புடன் அவன் கேட்டிருக்க
"நல்லா பேசர கார்த்தி.சரி நீ நைட் இங்கிருந்து பார்த்துக்கோ.கவனமா இரு.ஏதாவது ப்ராப்ளமா இருந்தா எனக்கு ஃகால் பண்ணு."என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்து சாலையில் செலுத்த ஆரம்பித்தான் இதழரசன்.
கதிரவன் ஓய்வை தேடி கடல் அண்னையின் மடியில் சாய ஆரம்பித்த நேரம் அது.
நெடுஞ்சாலையில் இதழரசன் தனது வாகனத்தை சற்று வேகம் குறைவாக செலுத்திக்கொண்டிருந்தான்.
மாலை நேரம் என்பதால் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது.
ஒரு கட்டத்தில் வாகங்களின் நெரிசல் அதிகமானது.இதழரசன் வாகன நெரிசலில் சிக்க வேண்டியதாக போயிற்று.அவனின் வாகனத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் திருமணமான பெண் தன் மூன்று குழந்தையுடன் கணவனின் பின்பு அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் வாகன நெரிசல் குறையத் தொடங்கியிருந்தது.
தற்பொழுது இதழரசன் தனது வாகனத்தை நன்றாக செலுத்த ஆரம்பித்திருந்தான்.
திடிரென்று தனது வாகனத்தை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.
'தான் சற்று நேரத்திற்கு முன் இந்த பொண்ணு பார்த்தனே.இப்ப எதுக்கு இந்த பொண்ணு அழுதுட்டிருக்கு?'என்று மனதில் நினைத்தபடி முன்பக்க காரின் கதவை திறந்து கொண்டு இறங்கியவன்
"என்னம்மா ஆச்சு?"என்று தன் கணீர் குரலில் கேட்டிருக்க
"சார் என் குழந்தையா கடத்திட்டு போயிட்டாங்க.என்னோட கணவர் அவங்கள கடத்.."என்று அவள் முடிப்பதற்குள்
"எந்த பக்கமா போனாங்க? எவ்வளவு நேரம் ஆகிருக்கும்?"என்று வெகு அவசரமாக கேட்டான்.
"சார்.. நீங்க வரதுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடிதான் என்னோட குழந்தய கடத்திட்டு இந்த பக்கமா போனாங்க."கண்களில் கண்ணீரோடு அவள் அந்த திசையை தன் ஆள்காட்டி விரல் மூலம் சுட்டி காட்டியிருக்க
"நீங்க கவலப்படாம இருங்க."என்று சத்தமாக கூறியபடி அப்பெண் காட்டிய திசையில் ஓடி மறைந்தான்.
"சார் என் குழந்தைய விடுங்க ப்ளீஸ்."என்று குழந்தைய அனைத்துக்கொண்டு நடுத்தர வயது நிரம்பிய ஆண்மகன் அவ்விரு ரவுடிகளிடம் போராடிக்கொண்டிருந்தான்.
"ஒழுங்கா குழந்தைய கொடு.இல்ல உன்ன கொன்னுட்டு இந்த குழந்தயை நாங்க தூக்கிட்டு போவோம்."என்று அவ்விருவரில் ஒருவன் எச்சரிக்கை விடுத்தான்.
"நீங்க என்ன சொன்னா
லும் பரவால்ல.நான் என் குழந்தைய தரமாட்டேன்."அவனின் குரலில் அத்தனை உறுதி.
'என்ன சொன்னாலும் நம்பறாளே.அதுவும் என் பேர வைச்சிட்டு.ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கே.ஹோம்லியா இருக்கா.'என்று மனதில் நினைத்தபடி
அவள் நீட்டிய ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்காது கண் சிமிட்டாது அவளின் முகத்தையே பார்த்திருந்தான் இதழரசன்.
"சார்.."என்று இதழருவி அவனின் முகத்தின் முன்பு தன் வலதுகரத்தை வலது இடது புறமாக ஆட்டிக்கொண்டிருக்கவும்தான் அவன் சுயநினைவு பெற்றவனாக "ஹாங்.. என்ன சொன்னிங்க?"புருவம் சுருக்கி கேட்க,
"நான் ரொம்ப நேரமா ப்ரிஸ்க்ரிப்ஷன நீட்டிட்டே இருக்கேன்.ஆனா நீங்க வாங்கவே இல்ல."என்று தன் முகத்தை சுருக்கி அப்பாவியாக அவள் சொல்லவும்
'எனக்கு மனைவியா வரப்போரவ ரொம்ப தைரியமா இருக்கனும்னு ரொம்ப கனவு கண்டேனே.. அதெல்லாம் இப்படி தவடி பொடி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கலயே!'என்று மனதில் கவலையாக நினைத்தவன் அவளிடமிருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை தன் கைக்கு இடம் மாற்றியிருந்தான்.
"நான் கிளம்புறேன்."சிறு குரலில் அவளிடம் சொல்லிவிட்டு அவன் அவ்வறையிலிருந்து வெளியேறவும்தான் தன் இருக்கையில் நிம்மதியாக அமர்ந்தாள் இதழருவி.
விஸ்வநாதன் இல்லம்,
"என்னப்பா சொல்ரிங்க? நீங்க அவ்வளவு தூரம் சொல்லியும் அவன் கேட்கலின்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்."ஆக்ரோசமாக அவ்வீட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விக்ரம்.
"விடு விக்கரம் அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சுடுச்சு.நாம நம்ம வக்கீல் கெட்ட பேசி உன் தம்பிகள வெளியே எடுக்கலாம்."தன் பெரிய மகனுக்கு ஆறுதல் அளித்துவிட்டு தங்கள் குடும்ப வக்கீலிக்கு அழைப்பு விடுத்தார் விஸ்வநாதன்.
"அப்பா பேசிட்டிங்களா?
வக்கீல் என்ன சொல்ராரு?"ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தான் விக்ரம்.
"வக்கீல் அவன் கிட்ட இருக்கர எவிடன்ச அழிச்சுடுங்க.மித்தத நான் பார்த்துக்கிரேன்னு நம்பிக்கையா சொல்ராரு."என்று நெற்றியை தேய்த்தபடி அவர் கவலையாக சொல்ல
"அப்பா இப்ப எதுக்கு ரொம்ப கவலையா இருக்கிங்க?"வருத்தம் இழையோடிய குரலில் கேட்டான்.
"பின்ன என்னடா அவனோட போனல இருக்கர வீடியோவ நாம எப்படி அழிக்க முடியும்?"
"நீங்க சொல்ரது சரிதான்.ஆனா,அவனோட போன நாம அழிக்க முடியும்."என்று நம்பிக்கையாக கூறினான் அவரின் தவப்புதல்வன்.
"அவன்கிட்ட இருந்து போன எடுக்கரது அவ்வளவு சுலபம் கிடையாது.அதுவும் இல்லாம இந்நேரம் அந்த வீடியோவ வேற பென்டிரைவ்ல கூட ஏத்தி பாதுகாப்பா வெச்சிருக்கலாம்."நெற்றியை சுருக்கி தனது யூகத்தை கூறினார்.
"அந்த காவல் நிலையத்தில வேலை செய்யுர நம்மாலு கிட்ட போன் பண்ணி விஷயத்த சொல்லுங்க.அங்க போதைப்பொருள் இருந்த இரண்டு சின்ன பாக்கெட்டயும் எதாவது எவிடன்ஸ் இருந்தா அதை அழிக்க சொல்லிடுங்க.
அந்த இதழரசனோட போன எடுத்து அழிக்கர வேலையை நான் பார்த்துக்கிறேன்."சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியவன் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன் தன் வலது செவியில் வைத்தபடி மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான்.
"இந்த வைகாசி பொறந்தாவே அப்பப்போ மழை பேய ஆரம்பிச்சுடது சார்."என்று சலித்தபடி கார்த்திகேயன் கூறவும்
"மழைய என்ஜாய் பண்ணனும் கார்த்திகேயன்."மழையை ரசித்தபடி இதழரசன் சொல்ல
"எதுக்கு சார் சளி,காய்ச்சல், இருமல் வருவதற்கா?"என்று குறும்புடன் அவன் கேட்டிருக்க
"நல்லா பேசர கார்த்தி.சரி நீ நைட் இங்கிருந்து பார்த்துக்கோ.கவனமா இரு.ஏதாவது ப்ராப்ளமா இருந்தா எனக்கு ஃகால் பண்ணு."என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்து சாலையில் செலுத்த ஆரம்பித்தான் இதழரசன்.
கதிரவன் ஓய்வை தேடி கடல் அண்னையின் மடியில் சாய ஆரம்பித்த நேரம் அது.
நெடுஞ்சாலையில் இதழரசன் தனது வாகனத்தை சற்று வேகம் குறைவாக செலுத்திக்கொண்டிருந்தான்.
மாலை நேரம் என்பதால் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது.
ஒரு கட்டத்தில் வாகங்களின் நெரிசல் அதிகமானது.இதழரசன் வாகன நெரிசலில் சிக்க வேண்டியதாக போயிற்று.அவனின் வாகனத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் திருமணமான பெண் தன் மூன்று குழந்தையுடன் கணவனின் பின்பு அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் வாகன நெரிசல் குறையத் தொடங்கியிருந்தது.
தற்பொழுது இதழரசன் தனது வாகனத்தை நன்றாக செலுத்த ஆரம்பித்திருந்தான்.
திடிரென்று தனது வாகனத்தை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.
'தான் சற்று நேரத்திற்கு முன் இந்த பொண்ணு பார்த்தனே.இப்ப எதுக்கு இந்த பொண்ணு அழுதுட்டிருக்கு?'என்று மனதில் நினைத்தபடி முன்பக்க காரின் கதவை திறந்து கொண்டு இறங்கியவன்
"என்னம்மா ஆச்சு?"என்று தன் கணீர் குரலில் கேட்டிருக்க
"சார் என் குழந்தையா கடத்திட்டு போயிட்டாங்க.என்னோட கணவர் அவங்கள கடத்.."என்று அவள் முடிப்பதற்குள்
"எந்த பக்கமா போனாங்க? எவ்வளவு நேரம் ஆகிருக்கும்?"என்று வெகு அவசரமாக கேட்டான்.
"சார்.. நீங்க வரதுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடிதான் என்னோட குழந்தய கடத்திட்டு இந்த பக்கமா போனாங்க."கண்களில் கண்ணீரோடு அவள் அந்த திசையை தன் ஆள்காட்டி விரல் மூலம் சுட்டி காட்டியிருக்க
"நீங்க கவலப்படாம இருங்க."என்று சத்தமாக கூறியபடி அப்பெண் காட்டிய திசையில் ஓடி மறைந்தான்.
"சார் என் குழந்தைய விடுங்க ப்ளீஸ்."என்று குழந்தைய அனைத்துக்கொண்டு நடுத்தர வயது நிரம்பிய ஆண்மகன் அவ்விரு ரவுடிகளிடம் போராடிக்கொண்டிருந்தான்.
"ஒழுங்கா குழந்தைய கொடு.இல்ல உன்ன கொன்னுட்டு இந்த குழந்தயை நாங்க தூக்கிட்டு போவோம்."என்று அவ்விருவரில் ஒருவன் எச்சரிக்கை விடுத்தான்.
"நீங்க என்ன சொன்னா
லும் பரவால்ல.நான் என் குழந்தைய தரமாட்டேன்."அவனின் குரலில் அத்தனை உறுதி.